யாரோ எழுதிய கவிதை ,யாரோ இசை அமைத்து பாடியது தான் .அது அவன் சொந்த படைப்பு இல்லை தான் என்றாலும் மேடையில் அவன் பாடிய விதம் ,கேட்பவரின் மனதை போட்டு பிசைந்து எடுத்தது .அந்த பாடலின் மொழி வேறு தான் என்றாலும் ,இசைக்கு, காதலுக்கு மொழி தேவை இல்லை தானே .....அந்த பாடலை கேட்டவருக்கு விஜய்யின் காதல் அதன் ஆழம் புரியாமல் இருக்காது தான் .மற்றவருக்கே அதன் பாதிப்பு இருக்கும் போது யாருக்காக அவன் பாடினானோ,யாருக்காக அவன் உருகி கொண்டு இருக்கிறானோ அவளுக்கு புரியாமல் போகுமா என்ன ????
விஜய்யின் காதல் தோட்டத்தில் அமர்ந்து யோசித்த போதே விளங்கி விட்டது தான் .அவனும் அவன் சொல்லால் ,செயலால் காதலை உணர்த்தி விட்டான் தான் .ஒரு வீட்டின் அறை முழுக்க நினைவு சின்னங்களை எழுப்பி அல்லவா வைத்து இருக்கிறான். ஆனால் எப்படி அவன் கைகள் கட்டப்பட்டு இருக்கிறதோ அதே போல் மதுராவின் கரங்களும் கட்டப்பட்டு இருந்தது .அவள் முடிவுக்கு யாரும் குறுக்கே வர போவதில்லை தான் .அப்படியே குறுக்கே வந்தாலும் அதை சமாளிக்கும் திடமும் அவளுக்கு உண்டு தான் .ஆனால் விஜய்க்கும் அவளுக்கும் நடுவே இருக்கும் அகழி மிக பெரியது ஆயிற்றே .....practical ப்ரோப்லேம் நிறைய உண்டு என்பதால் தான் அவள் மௌனம் காப்பது .
கண்ணீர் வழிய படுத்து இருந்தவள் கைகளில் பட்டது அந்த நோட்பேட் .அதனை எடுத்து புரட்டியவள் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள் .பக்கம் பக்கமாக அவள் படங்கள் பென்சில் ஸ்கெட்ச் மூலம் வரைய பட்டு இருந்தது .சிலவற்றில் விஜய்யும் உடன் இருந்தான் .இருவரையும் வரைந்து இருந்தான் .அத்தனை தத்ரூபம் அதில் .சிலவற்றுக்கு வண்ணம் பூச பட்டு இருந்தது .இதே போல் 20 குறையாத பெரிய நோட்பேட்களை அந்த அறையில் பார்த்ததாக நினைவுக்கு வர தலையை பிடித்து கொண்டாள் மதுரா .
முப்பது பக்கம் திருப்பிய பின் ,விஜய் கை எழுத்தில் அவர்களின் கடந்தகாலம் முன்னே விரிந்தது .
"ஒரு குடும்பத்திற்கு மூத்த மகன் என்பது பெரும் சுமை .அதுவும் அப்பா பாராலிஸிஸ் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் போது இதை எல்லாம் எப்படி சமாளித்தார் என்று சுத்தமாக புரியவில்லை .நேத்து வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்து விட்டேன் .ராஜா வீட்டு கண்ணுகுட்டியாக அப்பாவும் ,அம்மாவும் என்னை தாங்கி விட்டனர்.ஆனால் இன்றோ இவர்களையும் ,தம்பி ,தங்கையையும் தாங்கும் பொறுப்பு என்னுடையது .யாரின் வயிறும் வாட கூடாது ,அப்பாவுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் ,எங்கள் மூவரின் படிப்பும் கெட கூடாது .தம்பி நான் வேலைக்கு போகிறேன் என்று வந்து நிற்கிறான் .அவனை சமாளிப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது .வேலை சமயத்தில் இப்படி ஆனதால் இழப்பீடு பெரும் தொகையாகவே வந்து இருக்கு .அதை பேங்க்கில் போட்டு மாத வருமானம் வரும் படி செய்து விட்டேன் .சொந்தமாய் குடி இருந்த வீட்டை காலி செய்து விட்டு ,சிறிய வீட்டுக்கு குடி போய் விட்டோம் .சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டோம் .அது மெயின் ஏரியா என்பதால் வாடகையும் கணிசமாக வருகிறது .ஊரில் இருந்த விவசாய நிலத்தையும் ஆண்டு காண்ட்ராக்ட்டுக்கு குத்தகை விட்டு இருக்கிறேன் .
அம்மாவும் சிக்கனமாக தான் செலவு செய்கிறார் .தம்பி ,தங்கை பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்கின்றனர் .அப்பாவுக்கும் உயர்தர சிகிச்சை அளித்தால் மீண்டும் பேசவும் ,எழுந்து நடமாடவும் முடியுமாம் .அதனால் வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்து ஆல்வினின் அப்பா செய்யும்
செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலில் அவர்க்கு உதவி கொண்டு இருந்தேன் .விற்கும் இடத்திற்கு ஏற்ப கமிஷன் தாராளமாகவே வருகிறது .சில பள்ளி பசங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன் ..ஆனாலும் சில சமயம் மூச்சு முட்டி போகிறது .எல்லோருக்கும் சுமைதாங்கி கல்லாக இருப்பதால் அவர்கள் பிரச்சனைகளை ,தேவைகளை என் மேல் இறக்கி வைக்கிறார்கள் .ஆனால் நான் யாரிடம் இளைப்பாறுவேன் ????
(பாவம் விஜய் நீ...........அந்த சமயத்துல நான் என்ன செய்தேன் ....கார்திக்க்கை உண்டு இல்லை என்று செய்து கொண்டு இருந்தேன் .........ஸ்கூலில் வால் என்று பேர் எடுத்தேன் ......பவானியின் BP ஏத்தி கொண்டு இருந்தேன் )
உறங்க கிடைப்பதே வெறும் நான்கு மணி நேரம் தான் .பசி ,தூக்கம் இது எல்லாம் பார்க்கவே முடியாது .ஆனாலும் ஏதோ ஒரு சோர்வு .இப்படி தந்தையை ,குடும்பத்தை காப்பாற்ற ஓடி கொண்டு இருந்த போது தான் மாசிலாமணி சார் பழக்கம் ஆனார் .குன்னூர் அருகே அவருக்கு ஏதோ ஒரு பங்களா வாங்க வேண்டி இருந்தது .ஆல்வின் அப்பாவால் அதை செய்ய முடியவில்லை .என்னை தான் அனுப்பினார் .வேண்டா வெறுப்பாக தான் சென்றேன் .ஆனால் அந்த பயணம் தான் என் வாழ்க்கைக்கு உயிர் அளித்தது .அவர் எதிர்பார்த்ததை முடித்து கொடுத்தேன் .அவருக்கு என்னை மிகவும் பிடித்து போனது .என்னை பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.மூன்றே நாளில் மற்றொரு தந்தையாக மாறி போனார் அந்த கோடீஸ்வரர் .
விஜய்யின் காதல் தோட்டத்தில் அமர்ந்து யோசித்த போதே விளங்கி விட்டது தான் .அவனும் அவன் சொல்லால் ,செயலால் காதலை உணர்த்தி விட்டான் தான் .ஒரு வீட்டின் அறை முழுக்க நினைவு சின்னங்களை எழுப்பி அல்லவா வைத்து இருக்கிறான். ஆனால் எப்படி அவன் கைகள் கட்டப்பட்டு இருக்கிறதோ அதே போல் மதுராவின் கரங்களும் கட்டப்பட்டு இருந்தது .அவள் முடிவுக்கு யாரும் குறுக்கே வர போவதில்லை தான் .அப்படியே குறுக்கே வந்தாலும் அதை சமாளிக்கும் திடமும் அவளுக்கு உண்டு தான் .ஆனால் விஜய்க்கும் அவளுக்கும் நடுவே இருக்கும் அகழி மிக பெரியது ஆயிற்றே .....practical ப்ரோப்லேம் நிறைய உண்டு என்பதால் தான் அவள் மௌனம் காப்பது .
கண்ணீர் வழிய படுத்து இருந்தவள் கைகளில் பட்டது அந்த நோட்பேட் .அதனை எடுத்து புரட்டியவள் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள் .பக்கம் பக்கமாக அவள் படங்கள் பென்சில் ஸ்கெட்ச் மூலம் வரைய பட்டு இருந்தது .சிலவற்றில் விஜய்யும் உடன் இருந்தான் .இருவரையும் வரைந்து இருந்தான் .அத்தனை தத்ரூபம் அதில் .சிலவற்றுக்கு வண்ணம் பூச பட்டு இருந்தது .இதே போல் 20 குறையாத பெரிய நோட்பேட்களை அந்த அறையில் பார்த்ததாக நினைவுக்கு வர தலையை பிடித்து கொண்டாள் மதுரா .
முப்பது பக்கம் திருப்பிய பின் ,விஜய் கை எழுத்தில் அவர்களின் கடந்தகாலம் முன்னே விரிந்தது .
"ஒரு குடும்பத்திற்கு மூத்த மகன் என்பது பெரும் சுமை .அதுவும் அப்பா பாராலிஸிஸ் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் போது இதை எல்லாம் எப்படி சமாளித்தார் என்று சுத்தமாக புரியவில்லை .நேத்து வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்து விட்டேன் .ராஜா வீட்டு கண்ணுகுட்டியாக அப்பாவும் ,அம்மாவும் என்னை தாங்கி விட்டனர்.ஆனால் இன்றோ இவர்களையும் ,தம்பி ,தங்கையையும் தாங்கும் பொறுப்பு என்னுடையது .யாரின் வயிறும் வாட கூடாது ,அப்பாவுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் ,எங்கள் மூவரின் படிப்பும் கெட கூடாது .தம்பி நான் வேலைக்கு போகிறேன் என்று வந்து நிற்கிறான் .அவனை சமாளிப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது .வேலை சமயத்தில் இப்படி ஆனதால் இழப்பீடு பெரும் தொகையாகவே வந்து இருக்கு .அதை பேங்க்கில் போட்டு மாத வருமானம் வரும் படி செய்து விட்டேன் .சொந்தமாய் குடி இருந்த வீட்டை காலி செய்து விட்டு ,சிறிய வீட்டுக்கு குடி போய் விட்டோம் .சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டோம் .அது மெயின் ஏரியா என்பதால் வாடகையும் கணிசமாக வருகிறது .ஊரில் இருந்த விவசாய நிலத்தையும் ஆண்டு காண்ட்ராக்ட்டுக்கு குத்தகை விட்டு இருக்கிறேன் .
அம்மாவும் சிக்கனமாக தான் செலவு செய்கிறார் .தம்பி ,தங்கை பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்கின்றனர் .அப்பாவுக்கும் உயர்தர சிகிச்சை அளித்தால் மீண்டும் பேசவும் ,எழுந்து நடமாடவும் முடியுமாம் .அதனால் வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்து ஆல்வினின் அப்பா செய்யும்
செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலில் அவர்க்கு உதவி கொண்டு இருந்தேன் .விற்கும் இடத்திற்கு ஏற்ப கமிஷன் தாராளமாகவே வருகிறது .சில பள்ளி பசங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன் ..ஆனாலும் சில சமயம் மூச்சு முட்டி போகிறது .எல்லோருக்கும் சுமைதாங்கி கல்லாக இருப்பதால் அவர்கள் பிரச்சனைகளை ,தேவைகளை என் மேல் இறக்கி வைக்கிறார்கள் .ஆனால் நான் யாரிடம் இளைப்பாறுவேன் ????
(பாவம் விஜய் நீ...........அந்த சமயத்துல நான் என்ன செய்தேன் ....கார்திக்க்கை உண்டு இல்லை என்று செய்து கொண்டு இருந்தேன் .........ஸ்கூலில் வால் என்று பேர் எடுத்தேன் ......பவானியின் BP ஏத்தி கொண்டு இருந்தேன் )
உறங்க கிடைப்பதே வெறும் நான்கு மணி நேரம் தான் .பசி ,தூக்கம் இது எல்லாம் பார்க்கவே முடியாது .ஆனாலும் ஏதோ ஒரு சோர்வு .இப்படி தந்தையை ,குடும்பத்தை காப்பாற்ற ஓடி கொண்டு இருந்த போது தான் மாசிலாமணி சார் பழக்கம் ஆனார் .குன்னூர் அருகே அவருக்கு ஏதோ ஒரு பங்களா வாங்க வேண்டி இருந்தது .ஆல்வின் அப்பாவால் அதை செய்ய முடியவில்லை .என்னை தான் அனுப்பினார் .வேண்டா வெறுப்பாக தான் சென்றேன் .ஆனால் அந்த பயணம் தான் என் வாழ்க்கைக்கு உயிர் அளித்தது .அவர் எதிர்பார்த்ததை முடித்து கொடுத்தேன் .அவருக்கு என்னை மிகவும் பிடித்து போனது .என்னை பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.மூன்றே நாளில் மற்றொரு தந்தையாக மாறி போனார் அந்த கோடீஸ்வரர் .