• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 31(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"இப்போ சந்தோசமா பவானி .....சூர்யா உன் வீட்டுக்காரரிடம் பேசி விடுவான் ....அவராகவே ரகு விஷயத்தில் முடிவு எடுப்பதாக அவருக்கு தோன்றும் .....சரி நான் கிளம்பறேன் ....உடம்பை பார்த்துக்கோ ...மதுராவிற்கு நாங்க இருக்கோம் .....அவளை பற்றிய கவலை உனக்கு வேண்டாம் "என்றார் சிவகாமி .

"சரிங்கத்தை ."என்று புன்னகை புரிந்தார் பவானி ஆனால் அது அவரின் கண்களை எட்டவில்லை என்பதை கண்டு கொண்டது மதுராவின் கண்கள் .

சிவகாமி கிளம்பும் போது சூர்யாவிற்கு கண் காட்ட அவரோடு அவனும் வெளியே சென்றான் .அங்கு காரிடோரில் ஏற்கனவே விவாதம் நடந்து கொண்டு இருந்தது .இவர்கள் வருவதை கண்டதும் விஜய் ,ஆல்வின் ,பாலாஜி பேச்சு தடை பட்டது .

"உங்க ரெண்டு பேரையும் பொறுப்பான பசங்க என்று நினைத்தேன் ....ஆனா சின்ன பிள்ளை தனமா ஹாஸ்பிடலில் அடித்து கொண்டு இருக்கீங்க ......ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்று பெரியவங்க சொல்வாங்க .....அந்த ராட்சசனை அவன் பேய் கூட்டத்தை வைத்து கொண்டு இப்படியா செய்து வைப்பீங்க ....ரெண்டு பேரும் மதுராவை காதலிக்கறீங்க .....சரி ....ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து அவளை மணக்க முடியாது .....யாரை கணவனாக ஏற்பது என்பது அவள் விருப்பம் .....ஏதாவது அவளை போர்ஸ் செய்தீங்க என்று கேள்வி பட்டேன் தோலை உரிச்சுடுவேன் .....எனக்கு மதுரா முக்கியம்.....அவளை காப்பாத்துங்க ...ஆனா எந்த தகிடு தத்தம் வேண்டாம் ....முடிவூ அவள் தான் எடுக்கணும் .....அவ குழப்பத்தில் இருக்கா .....கொஞ்சம் அவளை பிரீயா விடுங்க .....அவள் யாரை தேர்ந்து எடுக்கிறாளோ அவனோடு திருமணம் முடிப்பது என் வேலை ....என்ன புரிஞ்சுதா ....?"என்றார் சிவகாமி .

"சரி பாட்டி ....."என்றனர் சூர்யாவும் ,விஜய்யும் தலை தொங்கி போனவர்களாய் .

"கருணா ...என்ன பிரச்சனை ...நாங்க வரும் போது உன் முகமே சரி இல்லை ....."என்றார் சிவகாமி .

"பிரச்சனை தான் பாட்டி ....மதுரா கிட்டே பார்ம் ஹவுஸ்சில் அந்த சுமன் தவறாக நடக்க முயன்றான் என்று கை காலை உடைத்து சுந்தர்பன் காட்டுக்கு பேக் செய்தேன் ...அங்கு பேசும் மொழி இவனுக்கு தெரியாது ....சரியான மெடிக்கல் கேர் இல்லாமல் நோய் பிடித்தே அணு அணுவாய் துடித்து சாவான் என்று ,யாரும் உதவ மாட்டார்கள் என்று ஏற்பாடு செய்தேன் .....அங்கு போவதற்குள் ஆந்திரா -ஒரிசா பார்டர்ரில் போன ஆளின் குரல் வலையை கடித்து துப்பி தப்பித்து இருக்கிறான் ....ரெண்டு நாட்களுக்கு முன் ....எங்கே இருக்கான் ...என்ன ஏது என்று விவரம் தெரியலை ....அடிபட்ட பாம்பு ...கொத்தாமல் விடாது ."என்றான் விஜய் கோபத்துடன் .

"அப்படியே கௌதம புத்தர் ....கருணை காட்டறார் ....அங்கேயே போட்டு தள்ளுவதை விட்டு விட்டு ,தலையை சுற்றி ஏன் மூக்கை தொடரே ....பைத்தியாமாடா உனக்கு ?"என்றான் சூர்யா கோபத்துடன் .

"ஏன் ரித்திகா இறந்த உடன் ரெண்டு பேரை போட்டு தள்ளின நீ இவனை ஏன் விட்டு வைத்தே ??/மாசிலாமணி சாருக்காக தானே .....எனக்கும் அவர் அப்பா மாதிரி ...தொழில் கற்று கொடுத்த குரு ....என் கையால் கொல்லவில்லையே தவிர அவன் நரகத்தை அனுபவித்து சாகும் படி தான் ஏற்பாடு செய்தேன் ...இங்கு எங்காவது செத்து வைத்தான் என்றால் மாசிலாமணி சாருக்கு தான் மன வேதனை ....அதான் கண் காணமால் மகன் சென்று விட்டான் என்று நினைக்கட்டும் என்று இப்படி செய்தேன் .....இவனுங்க கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள் ....."என்றான் விஜய் .

"இப்போ எங்கே இருக்கான் ..."என்றான் சூர்யா .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"ட்ரெஸ் (TRACE) செய்ய முடியலை ...எங்கேயோ தலை மறைவாகி இருக்கான் ...அவன் இருக்கும் நிலையில் தனியே அவனால் செயல் பட முடியாது தான் ....யாரோ உதவிட்டு இருக்காங்க ..."என்றான் விஜய் .

"சரி இனி நான் பார்த்துக்கறேன் ....நீ தலை இடாதே ...மதுராவின் காவல் என் பொறுப்பு ..."என்றான் சூர்யா .

"இந்த பிரசங்கத்தை வேறு யாரிடமாவது சொல்லு .....என் கடைசி மூச்சு உள்ள வரை மதுராவை காப்பது என் கடமை .....யார் வந்தாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது ....மதுராவிற்கான என் காவல் தொடரும் ."என்றான் விஜய் ரௌத்திரமாக .
111.jpeg

"ரெண்டு பேரும் உங்க சண்டையை நிறுத்துங்க .....ரெண்டு பேருமே உங்களால் முடிந்த அளவூ காவல் ,பாதுகாப்பு மதுராவிற்கு கொடுங்க ....ஒன்றுக்கு ரெண்டு பாதுகாப்பு வளையம் இருப்பது நல்லது தான் ....இதுக்கு கூட அடிச்சுக்காதீங்க .....உங்க கவனம் இப்போ மதுராவின் பாதுகாப்பின் மேல் தான் இருக்கணும் ....இன்னொரு விஷயம் .....அவன் கையில் கிடைச்சா பாவம் ,புண்ணியம் பார்க்க வேண்டாம் .....அவனோடு யார் இருந்தாலும் அவர்களையும் விட்டு வைக்க வேண்டாம் ....."என்றார் சிவகாமி எஃகு போன்ற குரலில்
"சரி பாட்டி .....ஆனா அந்த ஆள் ....அவரும் சுமனோடு சேர்ந்து தான் இந்த கடத்தல் ,பாலியல் தொழில் ,ஹியூமன் ட்ராபிக் செய்வதாக தெரிகிறது .....எல்லாமே இவரின் பினாமி இடங்கள் ....இன்னும் இவருக்கு கருணை காட்ட வேண்டுமா ?"என்றான் விஜய் .

"சீனா டீல் முடியட்டும் .....விஜய் ....பிறகு முடிவூ எடுக்கலாம் ...."என்றார் சிவகாமி .

"பாட்டி !அந்த டீல் ஜெயிச்சா இவருக்கு பில்லியன் கணக்கான பணம் வந்து விடும் ....இவரை கையில் பிடிக்கவே முடியாது ...இப்போவே நிறைய கடன் வாங்கி தான் இந்த டீல் ஜெயிக்க போராடிட்டு இருக்கார் ...ஐ திங்க் இவரிடம் கொடுக்க பட்டு இருந்த பல பெரிய புள்ளிகளின் கருப்பு பணத்தை இதன் மூலம் வெள்ளையாக்க முயல்கிறார் .....இதில் ஜெயிச்சா அவரை அசைக்கவே முடியாமல் போகும் ...இப்போ தான் இவரிடம் பணம் கொடுத்து இருக்கிறவங்க வருமானம் வராமல் கோபத்தில் இருப்பதாக கேள்வி ...இது தான் சரியான சமயம் ...இப்போ அடிச்சால் நிச்சயம் எழவே மாட்டார் ....."என்றான் சூர்யா .

"அவர் ஜெயிக்க மாட்டார் சூர்யா ....அவரால் இதில் ஜெயிக்கவே முடியாது ....கரெக்ட் செக் மேட் வைத்து இருக்கேன் .....இதில் அவர் தோற்றால் அவரின் மேல் நாம் கை வைக்கவே வேண்டி இருக்காது ....மத்த எல்லாவற்றையும் யாரின் பினாமியாக இருக்கிறாரோ அவர்களே பார்த்துப்பாங்க ....நாம கை வைக்கவே வேண்டி வராது ...."என்றான் விஜய் கண்கள் மின்ன .
29379257006_fd87f450fe.jpg

"சரி கிளம்பறேன் .....ஏதாவது தேவை என்றால் கேட்க தயங்க வேண்டாம் ....உங்க சண்டையில் மதுராவை கோட்டை விட்டு விட போகிறீர்கள் ...கவனம் ....."என்ற சிவகாமி கிளம்ப ,அந்த ஹாஸ்பிடலின் தோட்டத்தில் ராஜியுடன் பேசி கொண்டு இருந்த ருத்ரா சிவகாமி சைகை காட்டியதும் ராஜியுடன் வந்து அவருடன் சேர்ந்து கொண்டான் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இவர்கள் பேசியது மட்டும் ராஜீ கேட்டு இருந்தால் மீண்டும் முருங்கை மரம் ஏறி இருப்பாள் ....அதான் பாட்டி முன்னெச்சரிக்கையாக ருத்ராவை ராஜியுடன் கோர்த்து விட்டு ,இவர் மட்டும் சூர்யா விஜயிடம் பேச வந்து இருந்தார் .

தன்னை சுற்றி நடப்பதை பற்றி கவலை படாமல் ,தன் தந்தை சங்கரனை பற்றி யோசித்து கொண்டு இருந்தாள் மதுரா .அடுத்த ரெண்டு மணி நேரத்தில் தலைமை டீன் "அம்மா போய் வா மா "என்று மதுரவையும் அவளின் இரு பாடிகார்ட் இருவரையும் பேக் செய்து விட்டு நிம்மதியாக தன் சேரில் அமர்ந்தார் .

அன்று மாலை எல்லா நியூஸ் சேனல்களிலும் பிளாஷ் நியூஸ் ஓடியது ."பிரபல மருத்துவமனையில் இளம் தொழில் அதிபர்கள் இருவர் தொழிற் பகை காரணமாக மோதல் ."என்று . மதுராவிற்காக அடித்து கொண்டது வெளியே வராமல் தொழிற் பகை என்று வந்தது .

இந்த நியூஸ் பார்த்த காஜா சுமனுக்கு அழைத்தார் ....


ஹ்ம்ம்ம் நானும் பார்த்தேன் ......நம்ம வேலை சுலபம் .....சூர்யாவை போட்டு தாளிட்டு பழியை விஜய் மீது போட்டுடலாம் ...யாருக்கும் நம்ம மேல் சந்தேகம் வராது ....அவன் தான் சிவகாமிக்கு ஹெல்ப் செய்யறவன் .....சோனாவை acp கிட்டே மாட்டி விட்டு இருக்கான் ...நம்ம இடங்களில் ரைட் செய்து பெண்களை மீட்டதும் சூர்யா தான் ....அவன் உயிரோடு இருக்க கூடாது ."என்றான் சுமன் .

"கொஞ்ச நாளுக்கு எந்த விவகாரமும் வேண்டாம் ......"என்றார் கஜா

"கண்டவனுக்கு பயந்து எல்லாம் இதை விட முடியாது .....ஏற்கனவே ஒரு ஷிப்மென்ட் மிஸ் ஆகிடுச்சு .....இந்த தடவை பீகார் ,சட்டிஸ்கர் போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் இருந்து பெண்களை பிடிக்க சொல்லி இருக்கேன் ...இந்த தடவை புதுசா காசு கொடுத்தா திருமணம் என்ற பெயரில் பெண்களை கூட்டி போனால் கூட ஏன் என்று கேட்க அங்கு எல்லாம் நாதி கிடையாது .......ஒரு மொத்த கிராமமே இப்படி தான் பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்கறாங்க நியூஸ் வந்தது . நாம் தான் இதன் பின்னால் இருக்கிறோம் என்று யாருக்குமே தெரியாது ....அங்கு லோக்கல் ஆளை பிடித்து வைத்து இருக்கேன் ....சில பல லட்சம் கொடுத்து விட்டால் அவனே நாம் சொல்லும் இடத்திற்கு பெண்களை அனுப்பி விடுவான் ....எல்லாம் ரெடி .....அடுத்த ஷிப்மென்ட் 200-300 "என்றான் சுமன்

"பீகார் ,சட்டிஸ்கர் ?"என்றார் கஜா

"அங்கே தான் யாருக்கும் விஷயம் தெரியாது ....ஒருத்தனுக்கு 20 மனைவி இருந்தாலும் யாரும் ஏன் என்று கேட்பது இல்லை .....இன்னமும் 18-20 குழந்தைகள் ஒரு பெண் பெறுவது அங்கு எல்லாம் சர்வ சாதாரணம் .....அதில் கூட நமக்கு லாபம் தான் ...இது வரை அப்படி பிறந்த 20 குழந்தைகளை குழந்தைகள் இல்லாத வெளி நாட்டு தம்பதிக்கு விற்று இருக்கிறேன் ......செம பணம் .....இன்னமும் நிறைய குழந்தைகள் வேண்டும் என்று ஆர்டர் வருகிறது ....பொன் முட்டை இடும் வாத்து அறுக்க சொல்கிறாயா ?"என்றான் சுமன் .

"கொஞ்ச நாளைக்கு தான் சுமன் .....போலீஸ் டிபார்ட்மென்ட் கவனம் நம் மேல் தான் இருக்கு .தேவை இல்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் ...."என்றார் கஜா.

அதில் தான் த்ரில்லே இருக்கு .....இத்தனை வருடமாய் செய்து வருகிறேன் ....எவனும் என்னை கண்டு பிடித்தது இல்லை ....இனிமேலும் கண்டு பிடிக்க போவது இல்லை .....நீங்க தேவை படும் போது செய்யும் பண உதவியோடு நிறுத்திக்கோங்கோ ....நீங்க கொடுக்கும் பணம் 10 மடங்காக திரும்பி வந்து விடும் .....அதை தாண்டி இதில் உங்கள் அட்வைஸ் நான் கேட்கவில்லை .....சூர்யாவை போட்டு தள்ளும் பிளான் செய்து விட்டு சொல்றேன் ....ஆட்களை அனுப்பி வையுங்க ....சோத பசங்க வேண்டாம் .....புரிந்ததா ...."என்றான் சுமன் .

"எங்கே இருக்கே ?"என்றார் கஜா .images (9).jpg

"அது உங்களுக்கு தேவை இல்லாதது .....என் ஆள் வருவான் .....பணம் கொடுத்து அனுப்புங்க ...."என்றான் சுமன் .

"ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு இந்த மாதம் வட்டி வரவில்லை சுமன் .....என்னிடம் பணம் கொடுத்து வைத்து இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் ?"என்றார் கஜா .

"உன் புத்தியை காட்டாதே கஜா ......பெண்களை விற்று இருந்தால் இந்நேரம் பணம் வந்து இருக்கும் ...அதான் இந்த முறை முடியாமல் போச்சே .....எத்தனையோ தடவை வாங்கிய பணத்திற்கு பல மடங்கு திருப்பி கொடுத்து இருக்கேன் .....அதற்கு எல்லாம் கணக்கு கேட்கவா .....வாங்கி உள்ளே விட்டுக்க முடியுது இல்லை .....என்னை பகைச்சுக்காதே கஜா .......நான் ரொம்ப மோசம் ஆனவன் .....தொழிற் பார்ட்னர் என்றால் வரவில் மட்டும் அல்ல ,இது போன்ற லாஸ் கூட சமமாய் தான் ஏற்று கொள்ள வேண்டும் .....என்னை சீண்டி பார்க்காதே .....கொல்லவும் தயங்க மாட்டேன் ."என்றான் சுமன் .
864.png

முகம் வெளுத்து போனவராய் அழைப்பை துண்டித்தார் கஜா .

PENANCE WILL CONTINUE...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top