"இப்போ சந்தோசமா பவானி .....சூர்யா உன் வீட்டுக்காரரிடம் பேசி விடுவான் ....அவராகவே ரகு விஷயத்தில் முடிவு எடுப்பதாக அவருக்கு தோன்றும் .....சரி நான் கிளம்பறேன் ....உடம்பை பார்த்துக்கோ ...மதுராவிற்கு நாங்க இருக்கோம் .....அவளை பற்றிய கவலை உனக்கு வேண்டாம் "என்றார் சிவகாமி .
"சரிங்கத்தை ."என்று புன்னகை புரிந்தார் பவானி ஆனால் அது அவரின் கண்களை எட்டவில்லை என்பதை கண்டு கொண்டது மதுராவின் கண்கள் .
சிவகாமி கிளம்பும் போது சூர்யாவிற்கு கண் காட்ட அவரோடு அவனும் வெளியே சென்றான் .அங்கு காரிடோரில் ஏற்கனவே விவாதம் நடந்து கொண்டு இருந்தது .இவர்கள் வருவதை கண்டதும் விஜய் ,ஆல்வின் ,பாலாஜி பேச்சு தடை பட்டது .
"உங்க ரெண்டு பேரையும் பொறுப்பான பசங்க என்று நினைத்தேன் ....ஆனா சின்ன பிள்ளை தனமா ஹாஸ்பிடலில் அடித்து கொண்டு இருக்கீங்க ......ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்று பெரியவங்க சொல்வாங்க .....அந்த ராட்சசனை அவன் பேய் கூட்டத்தை வைத்து கொண்டு இப்படியா செய்து வைப்பீங்க ....ரெண்டு பேரும் மதுராவை காதலிக்கறீங்க .....சரி ....ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து அவளை மணக்க முடியாது .....யாரை கணவனாக ஏற்பது என்பது அவள் விருப்பம் .....ஏதாவது அவளை போர்ஸ் செய்தீங்க என்று கேள்வி பட்டேன் தோலை உரிச்சுடுவேன் .....எனக்கு மதுரா முக்கியம்.....அவளை காப்பாத்துங்க ...ஆனா எந்த தகிடு தத்தம் வேண்டாம் ....முடிவூ அவள் தான் எடுக்கணும் .....அவ குழப்பத்தில் இருக்கா .....கொஞ்சம் அவளை பிரீயா விடுங்க .....அவள் யாரை தேர்ந்து எடுக்கிறாளோ அவனோடு திருமணம் முடிப்பது என் வேலை ....என்ன புரிஞ்சுதா ....?"என்றார் சிவகாமி .
"சரி பாட்டி ....."என்றனர் சூர்யாவும் ,விஜய்யும் தலை தொங்கி போனவர்களாய் .
"கருணா ...என்ன பிரச்சனை ...நாங்க வரும் போது உன் முகமே சரி இல்லை ....."என்றார் சிவகாமி .
"பிரச்சனை தான் பாட்டி ....மதுரா கிட்டே பார்ம் ஹவுஸ்சில் அந்த சுமன் தவறாக நடக்க முயன்றான் என்று கை காலை உடைத்து சுந்தர்பன் காட்டுக்கு பேக் செய்தேன் ...அங்கு பேசும் மொழி இவனுக்கு தெரியாது ....சரியான மெடிக்கல் கேர் இல்லாமல் நோய் பிடித்தே அணு அணுவாய் துடித்து சாவான் என்று ,யாரும் உதவ மாட்டார்கள் என்று ஏற்பாடு செய்தேன் .....அங்கு போவதற்குள் ஆந்திரா -ஒரிசா பார்டர்ரில் போன ஆளின் குரல் வலையை கடித்து துப்பி தப்பித்து இருக்கிறான் ....ரெண்டு நாட்களுக்கு முன் ....எங்கே இருக்கான் ...என்ன ஏது என்று விவரம் தெரியலை ....அடிபட்ட பாம்பு ...கொத்தாமல் விடாது ."என்றான் விஜய் கோபத்துடன் .
"அப்படியே கௌதம புத்தர் ....கருணை காட்டறார் ....அங்கேயே போட்டு தள்ளுவதை விட்டு விட்டு ,தலையை சுற்றி ஏன் மூக்கை தொடரே ....பைத்தியாமாடா உனக்கு ?"என்றான் சூர்யா கோபத்துடன் .
"ஏன் ரித்திகா இறந்த உடன் ரெண்டு பேரை போட்டு தள்ளின நீ இவனை ஏன் விட்டு வைத்தே ??/மாசிலாமணி சாருக்காக தானே .....எனக்கும் அவர் அப்பா மாதிரி ...தொழில் கற்று கொடுத்த குரு ....என் கையால் கொல்லவில்லையே தவிர அவன் நரகத்தை அனுபவித்து சாகும் படி தான் ஏற்பாடு செய்தேன் ...இங்கு எங்காவது செத்து வைத்தான் என்றால் மாசிலாமணி சாருக்கு தான் மன வேதனை ....அதான் கண் காணமால் மகன் சென்று விட்டான் என்று நினைக்கட்டும் என்று இப்படி செய்தேன் .....இவனுங்க கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள் ....."என்றான் விஜய் .
"இப்போ எங்கே இருக்கான் ..."என்றான் சூர்யா .
"சரிங்கத்தை ."என்று புன்னகை புரிந்தார் பவானி ஆனால் அது அவரின் கண்களை எட்டவில்லை என்பதை கண்டு கொண்டது மதுராவின் கண்கள் .
சிவகாமி கிளம்பும் போது சூர்யாவிற்கு கண் காட்ட அவரோடு அவனும் வெளியே சென்றான் .அங்கு காரிடோரில் ஏற்கனவே விவாதம் நடந்து கொண்டு இருந்தது .இவர்கள் வருவதை கண்டதும் விஜய் ,ஆல்வின் ,பாலாஜி பேச்சு தடை பட்டது .
"உங்க ரெண்டு பேரையும் பொறுப்பான பசங்க என்று நினைத்தேன் ....ஆனா சின்ன பிள்ளை தனமா ஹாஸ்பிடலில் அடித்து கொண்டு இருக்கீங்க ......ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்று பெரியவங்க சொல்வாங்க .....அந்த ராட்சசனை அவன் பேய் கூட்டத்தை வைத்து கொண்டு இப்படியா செய்து வைப்பீங்க ....ரெண்டு பேரும் மதுராவை காதலிக்கறீங்க .....சரி ....ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து அவளை மணக்க முடியாது .....யாரை கணவனாக ஏற்பது என்பது அவள் விருப்பம் .....ஏதாவது அவளை போர்ஸ் செய்தீங்க என்று கேள்வி பட்டேன் தோலை உரிச்சுடுவேன் .....எனக்கு மதுரா முக்கியம்.....அவளை காப்பாத்துங்க ...ஆனா எந்த தகிடு தத்தம் வேண்டாம் ....முடிவூ அவள் தான் எடுக்கணும் .....அவ குழப்பத்தில் இருக்கா .....கொஞ்சம் அவளை பிரீயா விடுங்க .....அவள் யாரை தேர்ந்து எடுக்கிறாளோ அவனோடு திருமணம் முடிப்பது என் வேலை ....என்ன புரிஞ்சுதா ....?"என்றார் சிவகாமி .
"சரி பாட்டி ....."என்றனர் சூர்யாவும் ,விஜய்யும் தலை தொங்கி போனவர்களாய் .
"கருணா ...என்ன பிரச்சனை ...நாங்க வரும் போது உன் முகமே சரி இல்லை ....."என்றார் சிவகாமி .
"பிரச்சனை தான் பாட்டி ....மதுரா கிட்டே பார்ம் ஹவுஸ்சில் அந்த சுமன் தவறாக நடக்க முயன்றான் என்று கை காலை உடைத்து சுந்தர்பன் காட்டுக்கு பேக் செய்தேன் ...அங்கு பேசும் மொழி இவனுக்கு தெரியாது ....சரியான மெடிக்கல் கேர் இல்லாமல் நோய் பிடித்தே அணு அணுவாய் துடித்து சாவான் என்று ,யாரும் உதவ மாட்டார்கள் என்று ஏற்பாடு செய்தேன் .....அங்கு போவதற்குள் ஆந்திரா -ஒரிசா பார்டர்ரில் போன ஆளின் குரல் வலையை கடித்து துப்பி தப்பித்து இருக்கிறான் ....ரெண்டு நாட்களுக்கு முன் ....எங்கே இருக்கான் ...என்ன ஏது என்று விவரம் தெரியலை ....அடிபட்ட பாம்பு ...கொத்தாமல் விடாது ."என்றான் விஜய் கோபத்துடன் .
"அப்படியே கௌதம புத்தர் ....கருணை காட்டறார் ....அங்கேயே போட்டு தள்ளுவதை விட்டு விட்டு ,தலையை சுற்றி ஏன் மூக்கை தொடரே ....பைத்தியாமாடா உனக்கு ?"என்றான் சூர்யா கோபத்துடன் .
"ஏன் ரித்திகா இறந்த உடன் ரெண்டு பேரை போட்டு தள்ளின நீ இவனை ஏன் விட்டு வைத்தே ??/மாசிலாமணி சாருக்காக தானே .....எனக்கும் அவர் அப்பா மாதிரி ...தொழில் கற்று கொடுத்த குரு ....என் கையால் கொல்லவில்லையே தவிர அவன் நரகத்தை அனுபவித்து சாகும் படி தான் ஏற்பாடு செய்தேன் ...இங்கு எங்காவது செத்து வைத்தான் என்றால் மாசிலாமணி சாருக்கு தான் மன வேதனை ....அதான் கண் காணமால் மகன் சென்று விட்டான் என்று நினைக்கட்டும் என்று இப்படி செய்தேன் .....இவனுங்க கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள் ....."என்றான் விஜய் .
"இப்போ எங்கே இருக்கான் ..."என்றான் சூர்யா .