• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 32(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மயங்கி சரிந்தார் பவானி .எது நடக்க கூடாது என்று அஷ்ட லக்ஷிமியையும் வேண்ட வந்தாரோ அங்கேயே மகள் காணாமல் போக சில ,பல நாட்களாய் தொடர்ந்து இருந்த மனஅழுத்தம் ,துக்கம் ,துயரம் என்று அவரை மயக்கி சாய்த்தது .

உத்தமும் சூர்யாவிற்கு தகவலை சொல்ல அடுத்த சில நொடிகளில் ஆளுக்கு ஒரு திசையில் ஓடினார்கள் மதுராவை தேட ....அதுவும் காலம் கடந்து .

விஜய் உடனே ராஜேஸ்வரிக்கு தகவல் சொல்ல ,அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தவள் அவளும் கிளம்பி வருதாகவும் ,கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுத்து விடுவதாகவும் பதில் அளித்தாள் .

கோயிலுக்குள் மற்றொரு முறை ஆல்வினும் உத்தமும் தேட ,அவர்களின் கண்ணில் பதுங்கி பதுங்கி இவர்களை நோட்டம் இட்டு கொண்டு இருந்த பீகார் ரவுடி மாட்டினான் .அவன் மீது சந்தேகம் வர ஆல்வினும் ,உத்தமும் அவனை விசாரிக்க முன்னுக்கு பின் ஹிந்தியில் உளறி கொட்டி வகையாய் சிக்கினான் அவன் .மாட்டிய அவனை நொய்ய புடைத்து எடுத்தனர் ஆல்வினும் ,உத்தமும் .அடி தாங்க முடியாதவனாய் ,மதுராவை கடத்த தன் சகாக்களோடு வந்ததாகவும் ,வெகு நேரமாய் மதுராவை தான் அந்த இடத்தில தான் தேடி கொண்டு இருப்பதாகவும் ,அவளை கண்ட உடன் தன் கூட்டாளிகளுக்கு தகவல் கொடுப்பதாக இருந்ததாகவும் ,மதுரா வருவதற்காக அவன் காத்து இருப்பதாகவும் உண்மையை ஒத்து கொண்டான் .

மப்பிட்டியில் வந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நிரஞ்சனின் உதவியால் அங்கு வேன் அருகே இருந்த மற்ற ஆட்கள் கைது செய்ய பட்டு ராஜேஸ்வரியிடம் அழைத்து சென்றனர் .மற்றவர்களை கூட்டி கொண்டு பாலாஜி பவானிக்கு வைத்தியம் பார்க்க கிளம்பி விட ,ஆல்வின் ,உத்தம் ,ரகு ,கார்த்திக் மட்டும் சில போலீஸ்காரர்களோடு கோயில் அருகே ,பின் புறம் இருந்த கடைகளில் விசாரித்து கொண்டு இருந்தனர் .விஜய்யும் ,ஆல்வினும் நேராக ராஜேஸ்வரி அலுவலகத்திற்கு சென்றனர் .

அடுத்த இருபது வினாடிகளில் ,பெண்களுக்கு ஏதாவது என்றால் பத்ரகாளியாக மாறும் ராஜியின் டிரீட்மென்டில் பாதி உயிர் ஆகி இருந்தனர் அந்த ஐவரும் .
maxresdefault (4).jpg

சூர்யாவும் ,விஜய்யும் வந்து சேர ,"இந்தாங்க லத்தி ..உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் ....உயிர் போன கூட கவலை படாதீங்க ..ஏற்கனவே பிஹாரில் இவங்க பேரில் பிடிவாரண்ட் ,சூட் அட் சைட் ஆர்டர் இருக்கு ....சமூகத்தின் விஷ செடிங்க இவங்க ....எதை பத்தியும் கவலை படாதீங்க ."என்றவள் இருவரிடமும் லத்தியை கொடுத்து விட்டு விசாரணை அறையில் இருந்து வெளியேறி விட்டாள் .

கேட்கவும் வேண்டுமோ .....லத்தி எடுத்து விளாசி தள்ளி விட்டார்கள் விஜய்யும் சூர்யாவும் .அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தவர்களை தெளிய வைத்து அடித்து பின்னி துவைத்து எடுத்தார்கள் இருவரும் .ரத்த ஆறு ஓடியது என்று பேச்சுக்கு சொல்வார்களே ,அந்த அறையில் உண்மையான ரத்த ஆற்றினை இருவரும் ஓட வைத்தார்கள் .அந்த ஐவரும் அலறிய அலறலில் அந்த கட்டடம் முழுக்க எதிர் ஒலித்தது .

"வேண்டாம் பையா ....போதும் ...உண்மையை சொல்லிடறேன் ...விட்டுடுங்க .."என்று விஜய்யின் காலில் விழுந்தான் கோயிலில் சிக்கியவன் .

மதுராவை கடத்த சொல்லி தங்களுக்கு பணம் கொடுத்தது,தாங்கள் போதை மருந்து வாங்கும் மிஸ்ரா என்பவன் என்றும் ,மதுராவை மயங்க வைத்து ஓசூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே தங்களுக்கு கொடுக்க பட்ட தகவல் என்றும் சொல்லி கதறினான் அவன் .

ராஜேஸ்வரி அறைக்கு திரும்பியவர்கள் ,"இவங்க இல்லை ராஜீ .....இவங்க மதுராவை கடத்த தான் வந்து இருக்காங்க ...ஆனா மதுராவை இவங்க கடத்துவதற்கு முன்னே வேறு யாரோ கடத்தி இருகாங்க ....இவனுங்க புதுசா சுமன் இறக்கி இருக்கும் பீகார் கூலி படை என்று நினைக்கிறன் ."என்றான் விஜய் .

"நானும் அதே தான் நினைக்கிறன் அண்ணா ....இவங்க கடத்தலை ....மதுராவின் போன் ட்ரெஸ் செய்ததில் கடைசியாக போன் மீனம்பாக்கம் பக்கத்தில் இருந்து இருக்கு ....கால் செய்து பார்த்தேன் ....ரெண்டு ,மூன்று ரிங் போன பிறகு மொபைல் சுவிட்ச் ஆப் என்று வருது .ட்ரெஸ் செய்ய முடியலை .சென்னை விட்டு வெளியே செல்லும் எல்லா செக் போஸ்ட் அலெர்ட் செய்துடறேன் .....அந்த மிஷ்ராவை பிடிக்க ஆட்களை அனுப்பிட்டேன் ."என்றாள் ராஜேஸ்வரி .

"நான் சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர் கிருஷ்ணாசேகரிடம் பேசி விடறேன் ....அப்போ தான் உங்க துறைக்கு பிரஷர் வரும் ....இல்லை என்றால் பத்தோடு பதினொன்றாக இந்த கிட்நாப் போய் விடும் ...."என்ற சூர்யா மத்திய மினிஸ்டரிடம் பேச ,அவர் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் பேசி ,அவர் கமிஷனர் இடம் பேச ,எல்லாவித ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்று ராஜிக்கு தகவல் வந்தது .மதுராவை கண்டு பிடிக்க எதை வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம் என்ற மறைமுக சம்மதம் .

பவானி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய பட்டு டிரீட்மென்ட் நடக்க சங்கரன் அங்கு வரவழைக்க பட்டு விவரம் சொல்ல பட்டது .காணாமல் போன மகளுக்காக பார்ப்பாரா ,மகள் காணாமல் போன பயத்தில் மயங்கி பேச்சு மூச்சு இல்லாமல் படுத்து விட்ட மனைவிக்காக பார்ப்பதா என்று புரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார் .

ராஜேஸ்வரி ஓசூர் போலீஸ் தலைமை அதிகாரியிடம் பேச வந்த தகவல்கள் சற்று மிரட்டலாகவே வந்தது .அந்த மிஸ்ரா என்பவன் பல தீவிரவாதிகள் குழுவுடன் தொடர்பில் இருப்பவன் ,ஆள்கடத்தல் ,ஆயுத கடத்தல் எல்லாம் சர்வ சாதாரணம் .பணம் கொடுத்தால் எதை வேண்டும் என்றாலும் செய்ய தயங்க மாட்டான் .உளவூ துறையின் கண்காணிப்பில் இருப்பவன் ....அன்று அவனையும் அவன் கும்பலையும் பிடிக்கும் ஆபரேஷன் நடந்து கொண்டு இருப்பதாகவும் ,என்கவுண்டர் நிச்சயம் என்று அறிவித்தான் ராஜேஸ்வரியின் நண்பன்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
டெட் எண்டு என்பார்களே அந்த நிலைமை தான் அவர்கள் விசாரிப்புக்கு .அடுத்து என்ன என்று புரியாமல் விஜய் ,சூர்யா ராஜேஸ்வரி குழப்பத்தில் ஆழ்ந்து விட்டனர் .ஏதாவது clue கிடைத்தலாவது எந்த திசையில் போவது,யாரை பிடித்து விசாரிப்பது என்று தெரியும் .கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவர்களுக்கு .

ஆனால் எதிர் பாராத இடத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான தகவல் வந்தது .தொலைத்ததை தொலைத்த இடத்தில் தேடினால் தானே கிடைக்கும் ....மதுரா தொலைந்த கோயில் பகுதியில் தங்கள் விசாரணையை இன்னும் தொடர்ந்து கொண்டு இருந்தனர் கார்த்திக் ,ரகு ,ஆல்வின் ,உத்தம் .அங்கு இருந்த ஒருவரையும் விடவில்லை .கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் ,வியாபாரிகள் ,ஆட்டோ ஓட்டுனர்கள் ,ஹோட்டல் ,டீ கடை வைத்து இருப்பவர்கள் என்று ஒருத்தர் பாக்கி இல்லாமல் விசாரித்து கொண்டு இருந்தனர் .பட்ட பகலில் 100 பேராவது இருக்கும் இடத்தில் இருந்து யாருமே அறியாமல் ஒரு பெண்ணை கடத்துவது என்பது இயலாத காரியம் மட்டும் அல்ல முடியாத காரியம் .

தவிர கடத்த வந்த பீகார் குழுவும் மாட்டி இருக்க ,மதுரா எப்படி காணாமல் போனாள் ,தற்காப்பு கலையில் வல்லவள் ஆன ஒருத்தியை யாரின் கவனிப்பையும் கவராமல் கடத்த முடியாது என்று அவர்கள் நம்பியதற்கு கை மேல் பலன் இருந்தது .

கோயிலின் பின் புறம் சிறு கடைகளை வைத்து இருந்தவர்கள் இவர்கள் மொபைல்லில் இருந்த போட்டோவை காட்டி விசாரித்து கொண்டு இருந்த போது ,அங்கு விளையாடி கொண்டு இருந்த அந்த வியாபாரிகளின் குழந்தைகள் இவர்கள் விசாரிப்பை கண்டு அருகே வந்தனர் .

"ஏய் ராசு ...இங்கே வாடா ..உன் ஹீரோயினியா பத்தி தாண்டா கேட்குறாங்க ..."என்று எவனையோ கூப்பிட்டது ஒரு பொடிசு .

அவர்கள் குரல் கேட்டு டீ விற்று கொண்டு இருந்த 12 வயசு ராசு அவர்களை நோக்கி வந்தான் .

"என்னா அண்ணாத்தை ?என்ன மேட்டரு ?"என்றான் அந்த சிறுவன் .

மொபைலில் அன்று எடுக்க பட்ட மதுராவின் படத்தை காட்டி ,"தம்பி !இந்த அக்காவை இங்கே எங்கேயாவது பார்த்தியா ?"என்றான் கார்த்திக் .

"என்ன அண்ணாத்தை இப்படி கேட்டுபுட்டே ...அது புது பட ஹீரோயினி தானே ...இங்கே தானே புது பட ஷூட்டிங் நடந்தது."என்றான் ராசு .

"என்னது பட ஷூட்டிங்கா ?"என்றான் கார்த்திக் அதிர்ந்தவனாய் .
maxresdefault (2).jpg

"பின்னே உன் கையிலே என்ன புருடவா உட்டுக்கிறேன் ?...செம்ம அழகு சார் ....அப்படியே தூளாகி வச்ச காமாச்சி அம்மன் விளக்கா என்னமா ஜொலிச்சாங்க ...கண்ணுலே நிக்குது ....அப்படியே சோகமா வந்து நின்னு இந்த கடலையே ஊத்து பார்த்துட்டு நின்னாங்க ....கண்ணு கலங்கிடுச்சு அவங்களுக்கு ...அப்போ தான் சார் ஹீரோ என்ட்ரி அசால்ட்டா கொடுத்தார் பாருங்க .......என்ன ஹெயிட் ,வெயிட் ,என்னா கலர் .....சுண்டுனா ரத்தம் வரும் ....ஹீரோயினை பார்த்து ஒரு ரியாக்ஷன் விட்டார் பார் மெர்சல் ஆயிட்டேன் .....ஹீரோ வருவார்னு ஹீரோயினி எதிர்பார்க்கவில்லை ....என்னமா ஒரு லுக் விட்டுச்சு தெரியுமா ????கண்ணு கலங்கி போச்சு .....என்னா பீலிங்கு ... கூடவே இன்னொரு கில்பான்ஸ் ...அது பாம்பாய் அல்வா கணக்கா டக்கரா இருந்துச்சு .....டயலாக் வுட்டாங்க பாருங்க ...."என்றவன் அவர்கள் பேசிய வாய்ஸ் ,"நீ நீ நீ மதுரா தானே ...நீ இன்னும் சாகலையா ......இன்னும் உயிரோடவா இருக்கே ......"என்று ஹீரோ பேசிக்குனாரு ,கூட இருந்த ஹல்வா ,"நீ செத்துட்டேன்னு நினைச்சுட்டு இருக்கோம் .....இன்னும் நீ சாகலையா ...எப்படி நீ இன்னும் உயிரோடு இருக்கே ....?"ன்னு டயலாக் சொல்லிச்சு .....என் ஹீரோயினி என்னமா பீல் பண்ணுச்சு தெரியுமா ....அப்பலகா ....மயங்கிடுச்சு .....ஹீரோ பாஞ்சு ஓடி வந்து சும்மா மதுர வீரன் பொம்மிய தூக்கறா போல் தூக்கிட்டு காரில் ஏத்திட்டு போனார் ....என்ன சீன் தெரியுமா அண்ணாத்தை ..லவ்வோ லவ்ஸ் .....100 நாள் மாஸ் ....."என்றான் அவன் .
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
அனிதா டியர்
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இவன் சொன்னதை வைத்து பார்த்தால் மதுரா அவளாக கோயில் விட்டு வெளியே வந்து இருக்கிறாள் ...வெகு நேரம் கடலை பார்த்தவாறு கண்கள் கலங்க நின்று இருக்கிறாள் .அப்பொழுது அவளை தெரிந்த இருவர் ஒரு ஆணும் ,பெண்ணும் அவளை அடையாளம் கண்டு வந்து பேசி இருக்கிறார்கள் ....இன்னும் சாகாமல் இருக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார்கள் ....வேறு என்ன பேசினார்களோ ,ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவள் மீண்டும் மயங்கி இருக்கிறாள் .அவளை அவர்கள் இருவரும் தூக்கி சென்று இருக்கிறார்கள் காரில் .

"தம்பி அந்த கார் சின்ன காரா ,பெரிய காரா ????என்ன கலர் ?"என்றான் ஆல்வின்

"அதான் அண்ணத்தை அக்டரு சிவகார்த்திகேயன் சார் கூட சூரி அண்ணா கூட போய் ஹீரோயினி கீர்த்தி சுரேஷ் கடையில் ஒரு காரை ஆட்டைய போடுவாங்கலே ...அது சார் ....வெள்ளை காலொரு ...சும்மா பிச்சிக்குன்னு போச்சு .எப்போ சார் படம் ரிலீஸ் ஆகும் ...என்னை கூட படம் புடுச்சங்கா ..நானும் படத்துல வாரேன்னு கேட்டதும் நம்ம பசங்க பேஜார் ஆகிட்டாங்க ."என்ற ராசுவிற்கு ஏதோ ஒரு பதில் சொல்லி கையில் 100 ரூபாயை திணித்து விட்டு தகவலை விஜய்க்கு தெரிவித்தார்கள் .

தகவல் வந்ததும் ராஜேஸ்வரி டிராபிக் போலீஸ் உதவியுடன் கார் சென்ற திசையை cctv கேமரா மூலம் பார்க்க அந்த கார் மீனம்பாக்கம் பக்கம் போவதாக காட்டியது .

அங்கு இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தர பட சுற்றி இருந்த இடங்களில் patrol அனுப்ப பட்டது .

மூன்று மணி நேரம் எந்த தகவலும் வராமல் பைத்தியம் பிடிக்காத குறையாய் தவித்து போய் விட்டனர் விஜய்யும் சூர்யாவும் .பவானிக்கு மயக்கம் தெளிந்து ,மகளை சுமன் கடத்தவில்லை என்பதால் நிம்மதி அடைந்தாலும் ,மதுராவிற்கு தெரிந்த வேறு யார் அவளை கொண்டு சென்றது என்று புரியாமல் தவித்து கொண்டு இருந்தனர் அனைவரும் .

எல்லா பக்கமும் அடை பட்டு விட ,என்ன செய்வது ,யாரை விசாரிப்பது என்று புரியாமல் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நின்றது அவர்கள் விசாரணை .

விஜய் மட்டும் மதுராவின் மொபைல் நம்பருக்கு ட்ரை செய்வதை நிறுத்தவே இல்லை ....குறைந்தது இருநூறு முறையாவது விடாமல் அழைத்து இருப்பான் .ஒவ்வொரு முறை "மொபைல் சுவிட்ச் ஆப் "என்றே வந்தது .ஆனாலும் அவன் மனம் தளரவில்லை .அவள் மொபைல்லை அழைப்பதையும் நிறுத்தவில்லை .

ராஜேஸ்வரி அலுவலகத்தில் அதற்கு மேல் வேலை இல்லை என்று விஜய்யும் ,சூர்யாவும் "பிரிந்தாவனத்திற்கு "திரும்பி இருந்தனர் .பவானியும் அழைத்து வரப்பட்டு இருந்தார் .அனைவருமே அந்த வீட்டில் குழுமி இருந்தனர் .

போலீஸ் கொண்டு ராஜேஸ்வரி ஒரு புறம் தேட ,விஜய் ,சூர்யா தங்கள் ஆட்களை வைத்து வேறு தேடி கொண்டு இருந்தனர் .ஒரு நொடி கூட அமைதியாய் இராமல் பம்பரமாய் சுழன்ற அவர்கள் இருவரையும் திறந்த வாய் மூடாமல் பார்த்து கொண்டு இருந்தார் .

சூர்யாவை விட விஜய்யின் கோபம் ,கண்களின் சிகப்பு ,முகத்தின் இறுக்கம் ,அவன் தன்னை தானே முயன்று கட்டுப்படுத்தி இருந்த முறை என்று பார்ப்பவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியது .ஆல்வின்னையும் ,உத்தமையும் குதறி எடுக்காத குறை .சூர்யா கூட இவன் வெறியை கண்டு ஒரு நொடி திகைத்து பின் வாங்கினான் .

யார் எல்லாம் மதுராவை கடத்தி இருப்பார்கள் என்ற லிஸ்ட் தயாரிக்க பட்டு அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டு இருந்தான் .அவனை கட்டுப்படுத்தும் ஒரே ஆள் தான் மதுரா என்பது அங்கு இருந்தவர்களுக்கு புரிந்து விட ,அவள் தான் எங்கு இருக்கிறாள் என்பது தெரியவில்லையே .

விஜய் மட்டும் மதுராவின் மொபைல் நம்பருக்கு ட்ரை செய்வதை நிறுத்தவே இல்லை ....குறைந்தது இருநூறு முறையாவது விடாமல் அழைத்து இருப்பான் .ஒவ்வொரு முறை "மொபைல் சுவிட்ச் ஆப் "என்றே வந்தது .ஆனாலும் அவன் மனம் தளரவில்லை .அவள் மொபைல்லை அழைப்பதையும் நிறுத்தவில்லை .அவன் விடா முயற்சியின் பலனாய் மாலை மூன்று மணிக்கு அவள் மொபைல் ஆன் ஆகி ரிங் போக ,விஜய் சூர்யாவிற்கு ஜாடை காட்டினான் .ரிங் போக ஸ்பீக்கர்இல் போடப்பட்டது .
images (27).jpg

"சொல்லு விஜய் ...எதற்கு இத்தனை கால் செய்துட்டே இருக்கே ? "என்றது எதிர்முனை ----மதுரா தான் பேசினாள் .

அவள் குரலை கேட்ட விஜய்யின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .அவனையும் அறியாமல் கண்களை மூடி திறந்தவன் ,அவளுக்கு எதுவும் இல்லை என்பதால் மனபாரம் நீங்கியவங்க கால் மடங்கி தரையில் சரிந்து அமர்ந்தான் .

அதற்குள் ஓடிவந்த பவானி ,"ராணிமா ....எங்கேடா இருக்கே ....எந்த பாவிமா உன்னை கடத்தினது ...உன்னை ரொம்ப துன்பப்படுத்தறாங்களா ...அய்யா சாமி என் மகளை விட்டுடுங்க ...உங்க காலில் வேண்டும் என்றாலும் விழுகிறேன் ."என்று அழுது கதறினார் .

எதிர் முனை என்ன சொல்ல வருகிறது என்று புரியாமல் இவர் பாட்டுக்கு புலம்பலில் இறங்க ,"அம்மா !....நிறுத்துங்க "என்று கத்தினாள் மதுரா .

"என்னை யாரும் கடத்தலை அம்மா ...ஐ ஆம் ஆல்ரைட் .....நான் என் friends கூட தான் இருக்கேன் ....நீங்க பயப்படும் அளவூ எதுவும் இல்லை ."என்றாள் மதுரா சாவகாசமாக .

அதை கேட்ட அவர்களின் ரியாக்ஷன் எத்தகையது என்று கூறுவது கடினமே ...அவளுக்கு ஒன்றும் இல்லை என்று மகிழவதா இல்லை இவளை உண்டு இல்லை என்று ஆக்குவதா ?

"எங்கே இருகேடீ friends கூட இருக்கியா ....உன்னை காணோம் என்று பைத்தியம் மாதிரி தெரு தெருவாய் உன்னை தேடி அலைஞ்சுட்டு இருக்கேன் ....?"நீ கூல்லா friends கூட இருக்கேன்னு சொல்றே .....மவளே உன்னை என் கையால் கொன்றால் தாண்டீ எனக்கு நிம்மதி ....தினம் தினம் என்னை கொள்வதே உனக்கு வேலையா போச்சு இல்லை ....போறவ சொல்லிட்டு போறதுக்கு என்ன .......இங்கே செத்துட்டேன்டீ நீ காணோம் என்று கேள்வி பட்ட மறுகணம் ....." என்று உச்சஸ்தாயில் கத்தினான் விஜய் .
images (9).jpg

இவன் கோபத்திற்கு எந்த ரியாக்ஷன் மதுராவிடம் இருந்து வரவில்லை .அதற்கு மாறாக யாரோ ஒருவன் அலறும் சப்தம் கேட்டது ."ஏய் எருமை ...அடிக்காதேடி ....ஹேய் உண்மையில் வலிக்குது ....சாரி மா ...ரியலி சாரி .....நான் வேண்டும்னா அவங்க எல்லோர் காலில் விழுறேன் ...அடிக்காதேடீ ..என் செல்லம் இல்லை ...என் டார்லிங் இல்ல ...ப்ளீஸ் ப்ளீஸ் ."என்ற ஒருவனின் கொஞ்சல் ,கெஞ்சல் இங்கு இருந்தவர்களின் பிபி எகிற காரணமாக இருந்தது .

"'ஹே சாரி சாரி ...எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க ....இந்த பிசாசை ரொம்ப நாள் கழிச்சி பார்த்தோம் ...பேசிட்டே இருந்த பிசாசு மயங்கி விழுந்துட்டா ....என்ன பண்றதுனே தெரியலை ...அதான் first எயிட் செய்துட்டு டாக்டர் கிட்டே காட்ட கூட்டி வந்தோம் ....இவ செய்த கூத்தில் உங்களுக்கு எல்லாம் இன்போர்ம் செய்யணும் என்பதே மறந்து போச்சு ...சாரி ...இப்போ தான் மேடம் கண் விழிச்சாங்க .....சாரி மன்னிச்சுடுங்க ...ப்ளீஸ் ."என்றான் அவன் .

"இப்போ கேட்டுச்சா .....இந்த பக்கிங்க ரெண்டும் நான் மயங்கி ககிடக்கும் போது கடத்திட்டு வந்து இருக்குங்க ....வீட்டுக்கு சொல்லணும் என்ற அறிவூ கூட இல்லாத மடசாம்பிராணிங்க......."என்றாள் மதுரா .

"இப்போ எங்கே இருக்கே .....சொல்லு வந்து கூட்டிட்டு போறோம் .."என்றான் விஜய் அடக்கி வைக்க பட்ட பொறுமையுடன் .

"டெல்லியில் "என்றாள் மதுரா கூல்லாக .

PENANCE WILL CONTINUE.....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Yaarupa antha new entry.. nice epi sis madhu delhi yil irukala... Paavam motha kudumbam um thavichutu irukku .


ivalai silenta friends thookitu poitangala madhu voda phonea attend panni irukalam lamadhu family theduvanganu antha Mr.charmku theriyalaiya
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top