மயங்கி சரிந்தார் பவானி .எது நடக்க கூடாது என்று அஷ்ட லக்ஷிமியையும் வேண்ட வந்தாரோ அங்கேயே மகள் காணாமல் போக சில ,பல நாட்களாய் தொடர்ந்து இருந்த மனஅழுத்தம் ,துக்கம் ,துயரம் என்று அவரை மயக்கி சாய்த்தது .
உத்தமும் சூர்யாவிற்கு தகவலை சொல்ல அடுத்த சில நொடிகளில் ஆளுக்கு ஒரு திசையில் ஓடினார்கள் மதுராவை தேட ....அதுவும் காலம் கடந்து .
விஜய் உடனே ராஜேஸ்வரிக்கு தகவல் சொல்ல ,அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தவள் அவளும் கிளம்பி வருதாகவும் ,கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுத்து விடுவதாகவும் பதில் அளித்தாள் .
கோயிலுக்குள் மற்றொரு முறை ஆல்வினும் உத்தமும் தேட ,அவர்களின் கண்ணில் பதுங்கி பதுங்கி இவர்களை நோட்டம் இட்டு கொண்டு இருந்த பீகார் ரவுடி மாட்டினான் .அவன் மீது சந்தேகம் வர ஆல்வினும் ,உத்தமும் அவனை விசாரிக்க முன்னுக்கு பின் ஹிந்தியில் உளறி கொட்டி வகையாய் சிக்கினான் அவன் .மாட்டிய அவனை நொய்ய புடைத்து எடுத்தனர் ஆல்வினும் ,உத்தமும் .அடி தாங்க முடியாதவனாய் ,மதுராவை கடத்த தன் சகாக்களோடு வந்ததாகவும் ,வெகு நேரமாய் மதுராவை தான் அந்த இடத்தில தான் தேடி கொண்டு இருப்பதாகவும் ,அவளை கண்ட உடன் தன் கூட்டாளிகளுக்கு தகவல் கொடுப்பதாக இருந்ததாகவும் ,மதுரா வருவதற்காக அவன் காத்து இருப்பதாகவும் உண்மையை ஒத்து கொண்டான் .
மப்பிட்டியில் வந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நிரஞ்சனின் உதவியால் அங்கு வேன் அருகே இருந்த மற்ற ஆட்கள் கைது செய்ய பட்டு ராஜேஸ்வரியிடம் அழைத்து சென்றனர் .மற்றவர்களை கூட்டி கொண்டு பாலாஜி பவானிக்கு வைத்தியம் பார்க்க கிளம்பி விட ,ஆல்வின் ,உத்தம் ,ரகு ,கார்த்திக் மட்டும் சில போலீஸ்காரர்களோடு கோயில் அருகே ,பின் புறம் இருந்த கடைகளில் விசாரித்து கொண்டு இருந்தனர் .விஜய்யும் ,ஆல்வினும் நேராக ராஜேஸ்வரி அலுவலகத்திற்கு சென்றனர் .
அடுத்த இருபது வினாடிகளில் ,பெண்களுக்கு ஏதாவது என்றால் பத்ரகாளியாக மாறும் ராஜியின் டிரீட்மென்டில் பாதி உயிர் ஆகி இருந்தனர் அந்த ஐவரும் .
சூர்யாவும் ,விஜய்யும் வந்து சேர ,"இந்தாங்க லத்தி ..உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் ....உயிர் போன கூட கவலை படாதீங்க ..ஏற்கனவே பிஹாரில் இவங்க பேரில் பிடிவாரண்ட் ,சூட் அட் சைட் ஆர்டர் இருக்கு ....சமூகத்தின் விஷ செடிங்க இவங்க ....எதை பத்தியும் கவலை படாதீங்க ."என்றவள் இருவரிடமும் லத்தியை கொடுத்து விட்டு விசாரணை அறையில் இருந்து வெளியேறி விட்டாள் .
கேட்கவும் வேண்டுமோ .....லத்தி எடுத்து விளாசி தள்ளி விட்டார்கள் விஜய்யும் சூர்யாவும் .அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தவர்களை தெளிய வைத்து அடித்து பின்னி துவைத்து எடுத்தார்கள் இருவரும் .ரத்த ஆறு ஓடியது என்று பேச்சுக்கு சொல்வார்களே ,அந்த அறையில் உண்மையான ரத்த ஆற்றினை இருவரும் ஓட வைத்தார்கள் .அந்த ஐவரும் அலறிய அலறலில் அந்த கட்டடம் முழுக்க எதிர் ஒலித்தது .
"வேண்டாம் பையா ....போதும் ...உண்மையை சொல்லிடறேன் ...விட்டுடுங்க .."என்று விஜய்யின் காலில் விழுந்தான் கோயிலில் சிக்கியவன் .
மதுராவை கடத்த சொல்லி தங்களுக்கு பணம் கொடுத்தது,தாங்கள் போதை மருந்து வாங்கும் மிஸ்ரா என்பவன் என்றும் ,மதுராவை மயங்க வைத்து ஓசூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே தங்களுக்கு கொடுக்க பட்ட தகவல் என்றும் சொல்லி கதறினான் அவன் .
ராஜேஸ்வரி அறைக்கு திரும்பியவர்கள் ,"இவங்க இல்லை ராஜீ .....இவங்க மதுராவை கடத்த தான் வந்து இருக்காங்க ...ஆனா மதுராவை இவங்க கடத்துவதற்கு முன்னே வேறு யாரோ கடத்தி இருகாங்க ....இவனுங்க புதுசா சுமன் இறக்கி இருக்கும் பீகார் கூலி படை என்று நினைக்கிறன் ."என்றான் விஜய் .
"நானும் அதே தான் நினைக்கிறன் அண்ணா ....இவங்க கடத்தலை ....மதுராவின் போன் ட்ரெஸ் செய்ததில் கடைசியாக போன் மீனம்பாக்கம் பக்கத்தில் இருந்து இருக்கு ....கால் செய்து பார்த்தேன் ....ரெண்டு ,மூன்று ரிங் போன பிறகு மொபைல் சுவிட்ச் ஆப் என்று வருது .ட்ரெஸ் செய்ய முடியலை .சென்னை விட்டு வெளியே செல்லும் எல்லா செக் போஸ்ட் அலெர்ட் செய்துடறேன் .....அந்த மிஷ்ராவை பிடிக்க ஆட்களை அனுப்பிட்டேன் ."என்றாள் ராஜேஸ்வரி .
"நான் சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர் கிருஷ்ணாசேகரிடம் பேசி விடறேன் ....அப்போ தான் உங்க துறைக்கு பிரஷர் வரும் ....இல்லை என்றால் பத்தோடு பதினொன்றாக இந்த கிட்நாப் போய் விடும் ...."என்ற சூர்யா மத்திய மினிஸ்டரிடம் பேச ,அவர் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் பேசி ,அவர் கமிஷனர் இடம் பேச ,எல்லாவித ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்று ராஜிக்கு தகவல் வந்தது .மதுராவை கண்டு பிடிக்க எதை வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம் என்ற மறைமுக சம்மதம் .
பவானி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய பட்டு டிரீட்மென்ட் நடக்க சங்கரன் அங்கு வரவழைக்க பட்டு விவரம் சொல்ல பட்டது .காணாமல் போன மகளுக்காக பார்ப்பாரா ,மகள் காணாமல் போன பயத்தில் மயங்கி பேச்சு மூச்சு இல்லாமல் படுத்து விட்ட மனைவிக்காக பார்ப்பதா என்று புரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார் .
ராஜேஸ்வரி ஓசூர் போலீஸ் தலைமை அதிகாரியிடம் பேச வந்த தகவல்கள் சற்று மிரட்டலாகவே வந்தது .அந்த மிஸ்ரா என்பவன் பல தீவிரவாதிகள் குழுவுடன் தொடர்பில் இருப்பவன் ,ஆள்கடத்தல் ,ஆயுத கடத்தல் எல்லாம் சர்வ சாதாரணம் .பணம் கொடுத்தால் எதை வேண்டும் என்றாலும் செய்ய தயங்க மாட்டான் .உளவூ துறையின் கண்காணிப்பில் இருப்பவன் ....அன்று அவனையும் அவன் கும்பலையும் பிடிக்கும் ஆபரேஷன் நடந்து கொண்டு இருப்பதாகவும் ,என்கவுண்டர் நிச்சயம் என்று அறிவித்தான் ராஜேஸ்வரியின் நண்பன்
உத்தமும் சூர்யாவிற்கு தகவலை சொல்ல அடுத்த சில நொடிகளில் ஆளுக்கு ஒரு திசையில் ஓடினார்கள் மதுராவை தேட ....அதுவும் காலம் கடந்து .
விஜய் உடனே ராஜேஸ்வரிக்கு தகவல் சொல்ல ,அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தவள் அவளும் கிளம்பி வருதாகவும் ,கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுத்து விடுவதாகவும் பதில் அளித்தாள் .
கோயிலுக்குள் மற்றொரு முறை ஆல்வினும் உத்தமும் தேட ,அவர்களின் கண்ணில் பதுங்கி பதுங்கி இவர்களை நோட்டம் இட்டு கொண்டு இருந்த பீகார் ரவுடி மாட்டினான் .அவன் மீது சந்தேகம் வர ஆல்வினும் ,உத்தமும் அவனை விசாரிக்க முன்னுக்கு பின் ஹிந்தியில் உளறி கொட்டி வகையாய் சிக்கினான் அவன் .மாட்டிய அவனை நொய்ய புடைத்து எடுத்தனர் ஆல்வினும் ,உத்தமும் .அடி தாங்க முடியாதவனாய் ,மதுராவை கடத்த தன் சகாக்களோடு வந்ததாகவும் ,வெகு நேரமாய் மதுராவை தான் அந்த இடத்தில தான் தேடி கொண்டு இருப்பதாகவும் ,அவளை கண்ட உடன் தன் கூட்டாளிகளுக்கு தகவல் கொடுப்பதாக இருந்ததாகவும் ,மதுரா வருவதற்காக அவன் காத்து இருப்பதாகவும் உண்மையை ஒத்து கொண்டான் .
மப்பிட்டியில் வந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நிரஞ்சனின் உதவியால் அங்கு வேன் அருகே இருந்த மற்ற ஆட்கள் கைது செய்ய பட்டு ராஜேஸ்வரியிடம் அழைத்து சென்றனர் .மற்றவர்களை கூட்டி கொண்டு பாலாஜி பவானிக்கு வைத்தியம் பார்க்க கிளம்பி விட ,ஆல்வின் ,உத்தம் ,ரகு ,கார்த்திக் மட்டும் சில போலீஸ்காரர்களோடு கோயில் அருகே ,பின் புறம் இருந்த கடைகளில் விசாரித்து கொண்டு இருந்தனர் .விஜய்யும் ,ஆல்வினும் நேராக ராஜேஸ்வரி அலுவலகத்திற்கு சென்றனர் .
அடுத்த இருபது வினாடிகளில் ,பெண்களுக்கு ஏதாவது என்றால் பத்ரகாளியாக மாறும் ராஜியின் டிரீட்மென்டில் பாதி உயிர் ஆகி இருந்தனர் அந்த ஐவரும் .
சூர்யாவும் ,விஜய்யும் வந்து சேர ,"இந்தாங்க லத்தி ..உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் ....உயிர் போன கூட கவலை படாதீங்க ..ஏற்கனவே பிஹாரில் இவங்க பேரில் பிடிவாரண்ட் ,சூட் அட் சைட் ஆர்டர் இருக்கு ....சமூகத்தின் விஷ செடிங்க இவங்க ....எதை பத்தியும் கவலை படாதீங்க ."என்றவள் இருவரிடமும் லத்தியை கொடுத்து விட்டு விசாரணை அறையில் இருந்து வெளியேறி விட்டாள் .
கேட்கவும் வேண்டுமோ .....லத்தி எடுத்து விளாசி தள்ளி விட்டார்கள் விஜய்யும் சூர்யாவும் .அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தவர்களை தெளிய வைத்து அடித்து பின்னி துவைத்து எடுத்தார்கள் இருவரும் .ரத்த ஆறு ஓடியது என்று பேச்சுக்கு சொல்வார்களே ,அந்த அறையில் உண்மையான ரத்த ஆற்றினை இருவரும் ஓட வைத்தார்கள் .அந்த ஐவரும் அலறிய அலறலில் அந்த கட்டடம் முழுக்க எதிர் ஒலித்தது .
"வேண்டாம் பையா ....போதும் ...உண்மையை சொல்லிடறேன் ...விட்டுடுங்க .."என்று விஜய்யின் காலில் விழுந்தான் கோயிலில் சிக்கியவன் .
மதுராவை கடத்த சொல்லி தங்களுக்கு பணம் கொடுத்தது,தாங்கள் போதை மருந்து வாங்கும் மிஸ்ரா என்பவன் என்றும் ,மதுராவை மயங்க வைத்து ஓசூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே தங்களுக்கு கொடுக்க பட்ட தகவல் என்றும் சொல்லி கதறினான் அவன் .
ராஜேஸ்வரி அறைக்கு திரும்பியவர்கள் ,"இவங்க இல்லை ராஜீ .....இவங்க மதுராவை கடத்த தான் வந்து இருக்காங்க ...ஆனா மதுராவை இவங்க கடத்துவதற்கு முன்னே வேறு யாரோ கடத்தி இருகாங்க ....இவனுங்க புதுசா சுமன் இறக்கி இருக்கும் பீகார் கூலி படை என்று நினைக்கிறன் ."என்றான் விஜய் .
"நானும் அதே தான் நினைக்கிறன் அண்ணா ....இவங்க கடத்தலை ....மதுராவின் போன் ட்ரெஸ் செய்ததில் கடைசியாக போன் மீனம்பாக்கம் பக்கத்தில் இருந்து இருக்கு ....கால் செய்து பார்த்தேன் ....ரெண்டு ,மூன்று ரிங் போன பிறகு மொபைல் சுவிட்ச் ஆப் என்று வருது .ட்ரெஸ் செய்ய முடியலை .சென்னை விட்டு வெளியே செல்லும் எல்லா செக் போஸ்ட் அலெர்ட் செய்துடறேன் .....அந்த மிஷ்ராவை பிடிக்க ஆட்களை அனுப்பிட்டேன் ."என்றாள் ராஜேஸ்வரி .
"நான் சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர் கிருஷ்ணாசேகரிடம் பேசி விடறேன் ....அப்போ தான் உங்க துறைக்கு பிரஷர் வரும் ....இல்லை என்றால் பத்தோடு பதினொன்றாக இந்த கிட்நாப் போய் விடும் ...."என்ற சூர்யா மத்திய மினிஸ்டரிடம் பேச ,அவர் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் பேசி ,அவர் கமிஷனர் இடம் பேச ,எல்லாவித ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்று ராஜிக்கு தகவல் வந்தது .மதுராவை கண்டு பிடிக்க எதை வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம் என்ற மறைமுக சம்மதம் .
பவானி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய பட்டு டிரீட்மென்ட் நடக்க சங்கரன் அங்கு வரவழைக்க பட்டு விவரம் சொல்ல பட்டது .காணாமல் போன மகளுக்காக பார்ப்பாரா ,மகள் காணாமல் போன பயத்தில் மயங்கி பேச்சு மூச்சு இல்லாமல் படுத்து விட்ட மனைவிக்காக பார்ப்பதா என்று புரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார் .
ராஜேஸ்வரி ஓசூர் போலீஸ் தலைமை அதிகாரியிடம் பேச வந்த தகவல்கள் சற்று மிரட்டலாகவே வந்தது .அந்த மிஸ்ரா என்பவன் பல தீவிரவாதிகள் குழுவுடன் தொடர்பில் இருப்பவன் ,ஆள்கடத்தல் ,ஆயுத கடத்தல் எல்லாம் சர்வ சாதாரணம் .பணம் கொடுத்தால் எதை வேண்டும் என்றாலும் செய்ய தயங்க மாட்டான் .உளவூ துறையின் கண்காணிப்பில் இருப்பவன் ....அன்று அவனையும் அவன் கும்பலையும் பிடிக்கும் ஆபரேஷன் நடந்து கொண்டு இருப்பதாகவும் ,என்கவுண்டர் நிச்சயம் என்று அறிவித்தான் ராஜேஸ்வரியின் நண்பன்