• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 34(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
c0c295119618b6fcea370f4e934ce368.jpg

மைக் முன் சென்ற கஜா ,"என் கவனத்திற்கு வந்த விஷயம் ....அதனை பத்தி முடிவூ எடுக்கவே இந்த மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கேன் ...."என்று ஆரம்பித்தவர் அங்கு இருந்த யாருக்கும் வணக்கத்தையோ ,வருகைக்கு நன்றியோ சொல்லி ஆரம்பிக்கவே இல்லை .அதாவது அங்கு குழுமி உள்ள 3000க்கும் குறையாத தொழிலாளர்கள் அவர்க்கு வேலைகாரர்கள் அவ்வளவூ தான் .....அவர்களுக்கு எதற்கு மரியாதை,வணக்கம் எல்லாம் ??????


"இங்கு சில காலம் மேனேஜிங் டைரக்டர்ராக பணி புரிந்த விஜய கருணாகரன் ,ஜெய்ப்பூர் இளவரச குடும்பத்தை சேர்ந்த சூர்யா பிரதாப் ரத்தன் சிங்க் அவர்களின் மேல் உள்ள பகையில் ,தொழில் பொறாமையில் சூர்யா சார்ருக்கு சொந்தமான கண்டைனர் ஒன்றை கொளுத்தி இருக்கிறார் ........செய்ததை இன்று காலையில் கருணாகரனே என்னிடம் ஒத்து கொண்டார் ........கருணாகரனின் இந்த வெறி செயலுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை ......இது கருணாகரனின் தனி பட்ட தொழில் பகை ......ரெண்டு நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் தொழில் பகை காரணமாக ஹாஸ்பிடல் என்று கூட பாராமல் அடித்து கொண்ட செய்தி உங்களுக்கு நினைவூ இருக்கும் .......நான் கஷ்ட பட்டு வளர்த்த தொழில் இது போன்ற ஈன செயல்களால் அழிவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது .....சூர்யா சார் கருணாகரன் மீது வழக்கு பதிவூ செய்தால் அதை என் குடும்பத்திலோ ,இங்கு தொழில் முறையிலோ யாரும் எதிர்க்க மாட்டோம் ......எங்களால் முடிந்த உதவி சூர்யா சார்ருக்கு செய்ய தயாராக உள்ளோம் .......தவிர கருணாகரன் இந்த தொழிலில் இருந்து பொய் கணக்கு காட்டி நெறைய வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் ,பணம் கையாடல் கிட்ட தட்ட 10 கோடி அளவுக்கு பண மோசடி செய்து இருக்கிறார்.இவரிடம் தொழிலாளர்கள் போனஸ் என்று கொடுத்த பணம் அது .....இது வரை இங்கு உள்ள தொழிலாளர்களுக்கு அந்த பணம் கொடுக்க படவே இல்லை ."என்று பேசி கொண்டே போக கீழ் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டு இருந்த விஜய் வந்த சிரிப்பை கட்டுப்படுத்த திணறி கொண்டு இருந்தான் .


"நான் சொன்னேனா இல்லையா அப்பா ........கஜா ஸ்கெட்ச் செமையா இருக்கும் என்று ......பாருங்க என்னமா performance கொடுக்கிறார் ......சிவாஜி தோத்தார் .........சினிமாவிற்கு புதிய வில்லன் கேரக்டர் ரா இவரை போடலாம் .......கதை ,வசனம் என்று எல்லா இடத்திலும் சும்மா பூந்து விளையாடுறார் இல்லையா அப்பா ?"என்றான் சேதுவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம்


பதிலுக்கு அவனை முறைத்தார் சேது ,"என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு கருணா உனக்கு .....அந்த ஆளு பாட்டுக்கும் தன் இஷ்டத்திற்கு உன் மேல் இல்லாத பழி எல்லாம் போட்டுட்டு இருக்கான் .........நீயும் அந்த ஆளை பாராட்டிட்டு இருக்கே ......பொறுமைக்கும் ஒரு அளவூ உண்டு கருணா ......"என்றார் .

"இருங்க பா ......அதற்குள் எரிமலை ஆனால் எப்படி .......மூச்சு வாங்கிட்டு இன்னமும் ஏதோ என்னை பத்தி புகழ்ந்து சொல்றார் பாருங்க உங்க மாமா ......எல்லாம் மொத்தமாய் கேட்டு முடிச்சுட்டு அப்புறமாய் ரியாக்ஷன் காட்டுங்க ...."என்றான் விஜய் புன்னகையுடன் .


"இது எல்லாவற்றையும் கூட பொறுத்து கொள்ளலாம் ......ஆனால் கருணா செய்த மிகவும் அருவருக்க தக்க இன்னொரு செயல் ஒன்று தான் ,இந்த தொழிலில் இனி கருணா இருக்கவே கூடாது என்று என்று என்னை முடிவூ எடுக்க வைத்தது .....இங்கே வா மா பூ ....."என்ற உடன் சோனா அருகில் அமர்ந்து இருந்த அந்த பெண் ---அவள் தோழி எழுந்து வந்தாள் .


அப்படியே பயந்து பயந்து வருவது போல் ஒரு நடை .....குடும்ப குத்துவிளக்கு போல் வணக்கம் வைத்தல் ,குனிந்த தலை நிமிராத அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு கொண்டவள் என்று பார்ப்பவர்கள் நம்பணும் என்று ஏகத்துக்கும் பதவிசு அவள் காட்ட ,அதை நம்பும் கேனையன் /கேணைச்சி அங்கு யாரும் இல்லை என்று பாவம் அவளுக்கு மட்டும் அல்ல அவளை கூட்டி வந்த அந்த அதி மேதாவிகளுக்கும் புரியவில்லை .

2feb5ca95a5741af5442d31329455441.jpg

"இவ என் பேத்தியின் தோழி பூ ....... இந்த தொழிசாலையில் தான் வேலை பார்க்கிறாள் .......இவ குடும்பம் மிகவும் ஏழை குடும்பம் ......இவள் சம்பாத்தியதை நம்பி தான் இவள் அப்பா ,அம்மா ,அண்ணா ,தங்கை ,அக்கா என்று பத்து பேர் இருக்காங்க .......குடும்ப வறுமை போக இவள் வேலைக்கு வந்தால் .............இந்த வேலை நிலைத்து இருக்க வேண்டும் என்றால் ......தன்னோடு இருக்க வேண்டும் என்று கருணாகரன் இவளுக்கு பாலியல் தொந்தரவூ கொடுத்து இருக்கிறான் ....இந்த பிள்ளை அதை வெளியே சொல்லவும் முடியாமல் ,கருணாவின் மிருகத்தனத்திற்கு அடிபணியவும் முடியாமல் .....என்னிடம் வந்து கதறி அழுதாள் ......அதனால் கருணாகரனை பதிவியில் இருந்து தூக்கறேன் ................."என்றவர் ஆஆஆஆ என்று அலறியவாறு கீழ் விழுந்தார் .

சேது தான் கஜேந்திரனை அத்தனை பேர் முன்னிலையிலும் அடித்து இருந்தார் .சாது மிரண்டால் காடு தாங்காது என்பது இது தான் .

actor-ashish-vidyarthi-childhood-photos.jpg
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"மனுஷனாயா நீயி ........அந்த புள்ளையை பத்தி இப்படி அபாண்டமாய் பழி சொல்றரியே ......நீ எல்லாம் நல்லாவா இருப்பே ........உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது ........அவன் ஸ்ரீராமன் .......காதலிச்சவளை தவிர வேறு எவளையும் மனதால் கூட நினைக்காதவன் .......அவன் பொம்பளை பொறுக்கியா .......அவன் இழிவானவனா .......போய்யா வாயில் பச்சையா ஏதாவது வந்துட போகுது ........ஏன்யா .........நிறைமாத கர்ப்பிணியான சிவகாமி அத்தையை நடு தெருவில் விட்ட நீரு நல்லவர் ........இன்னொருத்தியின் புருசனுக்கு ஊத்தி கொடுத்து அந்த ஆள் செத்த உடன் ,இன்னொரு பெண்ணை அவள் பணம் ,சொத்திற்காக ஏமாற்றி மணந்த நீர் யோக்கியன் ........என்ற மகன் கருணா கெட்டவனா ........இன்னொரு வார்த்தை பேசினே உம்மை இதே இடத்தில வெட்டி போலி போட்டுட்டுடுவேன் ......."என்றார் சேது உக்ர நரசிம்ம மூர்த்தியாய் .


"டாட் ....வாட் இஸ் திஸ் .......இப்படியா சீப் பெஹவியர் செய்வீங்க ........கருணா கேரக்டர் சரி இல்லை .....கிரண்டப்பா அதை எல்லோரும் தெரிஞ்சுக்கட்டும் என்று சொல்றார் ......ஆஆஆ "என்று அவளும் சேது கையால் அடி வாங்கி ,அடியின் வீச்சு தாங்க முடியாதவளாய் கீழே விழுந்தாள் .


"வா டீ நான் பெத்த மகளே ........என்னடீ சொன்னே கருணா கேரக்டர் சரி இல்லையா ........அவன் தங்கை ரூபிணி கழுத்தில் கத்தி வைக்காத குறையாய் அவள் உயிரோடு விளையாடி கருணாவை கார்னெர் செய்து மணந்த நீ சொல்றியா அவனை பத்தி ..........சாக்கடை எல்லாம் கடவுளை பத்தி பேச கூடாதுடீ .......உன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தவா .....?.......கல் ஆனாலும் கணவன் ,புள் ஆனாலும் புருஷன் என்று கணவனை தெய்வமாய் ,கணவன் கட்டிய திருமாங்கல்யத்தை உயிராய் நினைக்கும் பெண்கள் வாழும் நாடு இது ......மூதேவி .......நீ என்ன செய்தே .......ஒரே மணி நேரத்தில் அந்த திருமாங்கல்யத்தை கழற்றி குப்பை கூடையில் போட்டு விட்டு அந்த சுமனோடு ஹனிமூன்னுக்கு போனே .....கட்டிய கணவன் கூட போவது தான் ஹனிமூன் ......கண்டவனோடு நினைத்த நேரத்தில் சுத்துவது ,ட்ரிங்க்ஸ் ,சிகரேட் ,மிட்னயிட் பார்ட்டி ,பப் ,குடி கும்மாளம் ,கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் உன்னை போன்ற ஈன பிறவிகளுக்கு எல்லாம் வேறு பெயர் இருக்கு ......இதுல நீ அவனை பத்தி கமெண்ட் அடிக்காரியா ....உனக்கு முதலில் அந்த தகுதியே இல்லை .......திருமணம் ஆகி நாலு வருஷத்தில் நீ தான் கருணாவை சுத்தி சுத்தி வருகிறே ....எப்படியாவது அவனை அடைய வேண்டும் என்று ........அவன் விரல் நகம் கூட உன் மேல் பட்டு இருக்கா சொல்லு ??????உரிமை உள்ள உன்னிடமே அவன் அப்படி நடந்தது இல்லை .......இதோ உன் தோழி .....சீதையின் மறு வடிவம் என்று ஷோ காட்டிட்டு நிற்கிறாளே ....இவளை தான் ஓடி ஓடி விரட்டினானா .......இங்கே இருக்கறவங்க என்ன லூசுன்னு நினைப்பா உங்களுக்கு .....இல்லை நீங்க சொல்வதை எல்லாம் நம்ப எங்களுக்கு என்ன புத்தி கெட்டு போய் இருக்கா ........உன்னை மாதிரியே சாக்கடையாக தானேடீ இருப்பா உன் தோழி .....கேடு கெட்ட ஜென்மங்கள் .......த்தூ இந்த பிழைப்புக்கு நாலு முழம் கயிற்றில் தொங்கிடலாம் ........"என்றவர் அந்த பூவிற்கும் ஒரு ஆயுத பூஜை நடத்தினார் .

"கஜா ......உமக்கு என்று பேர் இருக்கா என்ன ......பிரெஸ்டிஜ் இருக்கா என்ன ....இந்த தொழிலை நீர் வளத்தீரா ......காதில பூ சுத்திட்டு எவனாவது கேனையன் வருவான் அவனிடம் சொல்லு இந்த கதையை ........இந்த தொழிலை கடன் தொல்லை தாங்க முடியாமல் இழுத்து மூட போனது மறந்து போச்சா ......இன்று இந்திய அளவில் பேர் சொல்லும் அளவூ வளர்ந்து நிற்க காரணம் என் மகன் கருணாகரன் தான் .....அவன் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் திவாலாகி இருப்பே ............ ச்சை மனுஷ ஜென்மமாய் இருந்தால் இது எல்லாம் புரியும் .....உம்மை மாதிரி இதோ இவளை மாதிரி ஆளுங்க இருக்கும் இடத்தில இருப்பதே கேவலம் ......"என்றவர் மேடையில் மற்றவர் அதிர்ந்து நிற்கும் போதே வெளியேறி விட்டார் .

அவர் வெளியேறிய உடன் தொழில் சங்க தலைவர் எழுந்து நின்றார் .....


"வணக்கம் சார் ....நான் இந்த தொழில் சாலையின் தொழிற்சங்க தலைவர் .......நீங்க சொன்னது போலெ கருணா தம்பி போனஸ் கொடுக்காம எல்லாம் எல்லாம் எங்களை ஏமாத்தவில்லை ......இங்கு வேலை செய்யும் 5000 தொழிலாளர்களுக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து ,சம்பளம் ,போனஸ் எல்லாம் நேரடி வங்கி கணக்கில் சேர்த்து விடுகிறார் .....எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ,விபத்து காப்பீடு ,எங்க பிள்ளைகளுக்காக செல்வ மகள் /செல்வ மகன் திட்டம் என்று எல்லாமே செய்து கொடுத்து தான் இருக்கிறார் ......வெளியே மத்த தொழிற்சாலைகளில் கொடுப்பதை விட 5% அதிக சம்பளம் இங்கு கிடைக்கிறது .......சொந்த வீடு ,நிலம் வாங்க ,படிப்புக்கு ,திருமணத்திற்கு என்று எல்லாவற்றிக்கும் கடன் கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் ......கிட்டத்தட்ட நீங்க இந்த தொழிற்சாலை ஆரம்பித்தது முதல் இங்கே வேலை செய்கிறேன் .......நீங்க மூடும் அளவூ போன தொழில் இது .....இன்று இந்த அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு எங்க கருணா தம்பி தான் காரணம் .......தெரியாம தான் கேட்கிறேன் ....உங்களுக்கு என் பேராவது தெரியுமா .....ஆனா கருணா தம்பிக்கு இங்கு உள்ள எல்லோரை பற்றியும் நன்கு தெரியும் .....எங்க குடும்பத்தில் ஒருத்தர் தம்பி .......எங்க வயத்தில் அடிக்கும் கீழ்த்தரமான வேலை எல்லாம் உங்களை போன்றவர்களுக்கு வேண்டும் என்றால் வரும் .....கருணா தம்பி கை வெகு சுத்தம் ......."என்றார் அவர் கோபத்துடன் .


ஆடிட்டர் எழுந்து நின்று ,"சார் ....இந்த கம்பெனியின் ஆடிட்டர் நான் .......கருணா சார் பொறுப்பு ஏற்ற பிறகு அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய எந்த வரியும் காட்டாமல் பொய் கணக்கு காட்டியோ ,வருமானமே இல்லை என்று பொய் கணக்கோ இருந்தது இல்லை ......இந்த ஆடிட்டிங் அரசாங்கம் ஆடிட்டர் ஒருவரும் சரி பார்த்து ஒப்புதல் அளித்து உள்ளார் .......அப்படி போலி கணக்கு காட்டியதன் ப்ரூப் எங்கே சார் .......இப்படி பொய் கணக்கு காட்டுவதாக வரி ஏய்ப்பு செய்ய துணை போனாலே ஆடிட்டர் லைசென்ஸ் கான்செல் ஆகும் சார் ......நீங்க கருணா சார்ரை மட்டும் அல்ல ......எங்களையும் ,அரசாங்க அதிகாரிகளையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் திருடர்கள் என்று சொல்லாமல் உலகத்திற்கு சொல்கறீர்கள் .....இதற்கு உங்கள் மேல் நாங்கள் மானநஷ்ட வழக்கு பதிவூ செய்யலாம் சார் ......."என்றார்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இன்னொரு பெண்மணி எழுந்து ,"சார் !இங்கே மொத்தம் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் .....இதில் 1875 பேர் பெண்கள் ........50 பெண்கள் சேர்ந்து ஒரு குழு என்று 37 குழுக்கள் உள்ளது .....ஒவ்வொரு குழுவிற்கும் ராணி ஜான்சி ,வள்ளியம்மை ,குயிலி ,முத்துலட்சுமி ரெட்டி ,ராணி சென்னம்மா ,ஜஹல்காரியா பாய் ,உமாபாய் ,சாவித்திரி பாய் ,கேப்டன் லட்சுமி சேகல் ,மூல்மதி ,ஜானகி அதி நாகப்பன் .....இது எல்லாம் என்ன என்று பார்க்கறீங்களா .....இந்த 37 குழுக்களின் பெயர் ....ஒவ்வொரு குழுவிற்கு ஒரு கண்காணிப்பாளர் ......அந்த குரூப் லீடர்களை கண்காணிக்கும் பொறுப்பு என்னுடையது ......ஒவ்வொரு குழுவிற்கு தனி அடையாளம் ,id கார்டு உண்டு .......ரெஜிஸ்டெரஷன் உண்டு ......அவர்களின் ஆதார் உட்பட எல்லா டீடெயில்ஸ் இங்கே என் கையில் இருக்கும் palm டாப்பில் உள்ளது ........இந்த 37 குழு தலைமை கண்காணிப்பாளர்களை விசாரித்து விட்டேன் .......கருணா சார் மேல் பழி போடும் அந்த பெண் இந்த தொழிற்சாலையில் வேலை பார்பவளே இல்லை .......அப்படி வேலை செய்பவளாக இருந்தால் எந்த குழுவில் இருக்கிறாளோ அந்த குழுவின் id எங்கே .....????ஒரு வேளை ஹெட் ஆபீஸ்சில் வேலை செய்பவளாக இருக்கலாம் ...."என்றார் அவர் .


"சான்ஸ் இல்லை .......ஹெட் ஆபீஸ் மதுராட்சி இருந்தவரை அவள் கண்காணிப்பில் தான் 30
பெண்கள் வேலை பார்த்தோம் .....அங்கு வேலை செய்யும் எல்லா பெண்களும் எங்களுக்கு அத்துப்படி .....இப்போ பெண்களின் கண்காணிப்பாளர் நான் தான் .....இந்த பெண் தலைமை அலுவலகத்திலும் வேலை செய்பவள் இல்லை ......இது கருணா சார்ரை இந்த வேலையை விட்டு தூக்க யாரோ செய்யும் சதி .......கருணா சார் இங்கு உள்ள பெண்களுக்கு ஒரு அண்ணன் ,தம்பி ,மகன் ,பேரன்,பாதுகாவலனாக ,இன்னும் சொல்ல போனால் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் எங்களை பார்த்து கொள்கிறார் .......வேலையை காட்டி கட்டிலுக்கு வா என்று சொல்லும் மனித மிருகமாய் அல்ல ....."என்றாள் சுபா கோபத்தோடு .


அதற்கு மேல் சும்மா இருக்க அங்கு உள்ள பெண்கள் என்ன கையால் ஆகாதவர்களா என்ன ........விஜய் மேல் பாச வெறி பிடித்தவர்கள் ஆயிற்றே ......அவர்களின் ரோல் மாடல் மீது அத்தனை கேவலமாக பழி போட்டு ஒருத்தி தப்பி விட முடியுமா என்ன ......அந்த பூவை பின்னி எடுத்து விட்டார்கள் ......


நிலைமையை சமாளிக்க ,பூவின் உயிராவது மிஞ்ச விஜய் தலை இட வேண்டியதானது .

"சோபா அக்கா ,சின்னம்மாக்கா ,சுபா ........நிறுத்துங்க மா ......நிறுத்துங்கன்னு சொல்றேன் இல்லையா .....ப்ளீஸ் நிறுத்துங்க ........போதும் உயிர் போயிட போகுது ........போலீஸ் கிட்டே ஒப்படைச்சிடுலாம் .......போதும் அக்கா ......ப்ளீஸ் நிறுத்துங்க எனக்காக ......"என்று அவன் மைக் முன் சென்று கெஞ்ச பூ நாரகாமால் தப்பித்தது .


PENANCE WILL CONTINUE....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top