மைக் முன் சென்ற கஜா ,"என் கவனத்திற்கு வந்த விஷயம் ....அதனை பத்தி முடிவூ எடுக்கவே இந்த மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கேன் ...."என்று ஆரம்பித்தவர் அங்கு இருந்த யாருக்கும் வணக்கத்தையோ ,வருகைக்கு நன்றியோ சொல்லி ஆரம்பிக்கவே இல்லை .அதாவது அங்கு குழுமி உள்ள 3000க்கும் குறையாத தொழிலாளர்கள் அவர்க்கு வேலைகாரர்கள் அவ்வளவூ தான் .....அவர்களுக்கு எதற்கு மரியாதை,வணக்கம் எல்லாம் ??????
"இங்கு சில காலம் மேனேஜிங் டைரக்டர்ராக பணி புரிந்த விஜய கருணாகரன் ,ஜெய்ப்பூர் இளவரச குடும்பத்தை சேர்ந்த சூர்யா பிரதாப் ரத்தன் சிங்க் அவர்களின் மேல் உள்ள பகையில் ,தொழில் பொறாமையில் சூர்யா சார்ருக்கு சொந்தமான கண்டைனர் ஒன்றை கொளுத்தி இருக்கிறார் ........செய்ததை இன்று காலையில் கருணாகரனே என்னிடம் ஒத்து கொண்டார் ........கருணாகரனின் இந்த வெறி செயலுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை ......இது கருணாகரனின் தனி பட்ட தொழில் பகை ......ரெண்டு நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் தொழில் பகை காரணமாக ஹாஸ்பிடல் என்று கூட பாராமல் அடித்து கொண்ட செய்தி உங்களுக்கு நினைவூ இருக்கும் .......நான் கஷ்ட பட்டு வளர்த்த தொழில் இது போன்ற ஈன செயல்களால் அழிவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது .....சூர்யா சார் கருணாகரன் மீது வழக்கு பதிவூ செய்தால் அதை என் குடும்பத்திலோ ,இங்கு தொழில் முறையிலோ யாரும் எதிர்க்க மாட்டோம் ......எங்களால் முடிந்த உதவி சூர்யா சார்ருக்கு செய்ய தயாராக உள்ளோம் .......தவிர கருணாகரன் இந்த தொழிலில் இருந்து பொய் கணக்கு காட்டி நெறைய வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் ,பணம் கையாடல் கிட்ட தட்ட 10 கோடி அளவுக்கு பண மோசடி செய்து இருக்கிறார்.இவரிடம் தொழிலாளர்கள் போனஸ் என்று கொடுத்த பணம் அது .....இது வரை இங்கு உள்ள தொழிலாளர்களுக்கு அந்த பணம் கொடுக்க படவே இல்லை ."என்று பேசி கொண்டே போக கீழ் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டு இருந்த விஜய் வந்த சிரிப்பை கட்டுப்படுத்த திணறி கொண்டு இருந்தான் .
"நான் சொன்னேனா இல்லையா அப்பா ........கஜா ஸ்கெட்ச் செமையா இருக்கும் என்று ......பாருங்க என்னமா performance கொடுக்கிறார் ......சிவாஜி தோத்தார் .........சினிமாவிற்கு புதிய வில்லன் கேரக்டர் ரா இவரை போடலாம் .......கதை ,வசனம் என்று எல்லா இடத்திலும் சும்மா பூந்து விளையாடுறார் இல்லையா அப்பா ?"என்றான் சேதுவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம்
பதிலுக்கு அவனை முறைத்தார் சேது ,"என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு கருணா உனக்கு .....அந்த ஆளு பாட்டுக்கும் தன் இஷ்டத்திற்கு உன் மேல் இல்லாத பழி எல்லாம் போட்டுட்டு இருக்கான் .........நீயும் அந்த ஆளை பாராட்டிட்டு இருக்கே ......பொறுமைக்கும் ஒரு அளவூ உண்டு கருணா ......"என்றார் .
"இருங்க பா ......அதற்குள் எரிமலை ஆனால் எப்படி .......மூச்சு வாங்கிட்டு இன்னமும் ஏதோ என்னை பத்தி புகழ்ந்து சொல்றார் பாருங்க உங்க மாமா ......எல்லாம் மொத்தமாய் கேட்டு முடிச்சுட்டு அப்புறமாய் ரியாக்ஷன் காட்டுங்க ...."என்றான் விஜய் புன்னகையுடன் .
"இது எல்லாவற்றையும் கூட பொறுத்து கொள்ளலாம் ......ஆனால் கருணா செய்த மிகவும் அருவருக்க தக்க இன்னொரு செயல் ஒன்று தான் ,இந்த தொழிலில் இனி கருணா இருக்கவே கூடாது என்று என்று என்னை முடிவூ எடுக்க வைத்தது .....இங்கே வா மா பூ ....."என்ற உடன் சோனா அருகில் அமர்ந்து இருந்த அந்த பெண் ---அவள் தோழி எழுந்து வந்தாள் .
அப்படியே பயந்து பயந்து வருவது போல் ஒரு நடை .....குடும்ப குத்துவிளக்கு போல் வணக்கம் வைத்தல் ,குனிந்த தலை நிமிராத அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு கொண்டவள் என்று பார்ப்பவர்கள் நம்பணும் என்று ஏகத்துக்கும் பதவிசு அவள் காட்ட ,அதை நம்பும் கேனையன் /கேணைச்சி அங்கு யாரும் இல்லை என்று பாவம் அவளுக்கு மட்டும் அல்ல அவளை கூட்டி வந்த அந்த அதி மேதாவிகளுக்கும் புரியவில்லை .
"இவ என் பேத்தியின் தோழி பூ ....... இந்த தொழிசாலையில் தான் வேலை பார்க்கிறாள் .......இவ குடும்பம் மிகவும் ஏழை குடும்பம் ......இவள் சம்பாத்தியதை நம்பி தான் இவள் அப்பா ,அம்மா ,அண்ணா ,தங்கை ,அக்கா என்று பத்து பேர் இருக்காங்க .......குடும்ப வறுமை போக இவள் வேலைக்கு வந்தால் .............இந்த வேலை நிலைத்து இருக்க வேண்டும் என்றால் ......தன்னோடு இருக்க வேண்டும் என்று கருணாகரன் இவளுக்கு பாலியல் தொந்தரவூ கொடுத்து இருக்கிறான் ....இந்த பிள்ளை அதை வெளியே சொல்லவும் முடியாமல் ,கருணாவின் மிருகத்தனத்திற்கு அடிபணியவும் முடியாமல் .....என்னிடம் வந்து கதறி அழுதாள் ......அதனால் கருணாகரனை பதிவியில் இருந்து தூக்கறேன் ................."என்றவர் ஆஆஆஆ என்று அலறியவாறு கீழ் விழுந்தார் .
சேது தான் கஜேந்திரனை அத்தனை பேர் முன்னிலையிலும் அடித்து இருந்தார் .சாது மிரண்டால் காடு தாங்காது என்பது இது தான் .