• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 39 --PRE FINAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
விஜய்க்கும் அப்போ தான் தான் செய்து இருந்த காரியத்தின் விபரீதம் புரிய ஆரம்பித்தது .அவர்கள் கோயில் உற்சவத்தின் போது ,101 கன்னி பெண்களுக்கு திருமணம் நடக்கும் போது இப்படி மாலையும் கழுத்துமாய் நின்றால் வேறு என்ன நினைப்பார்கள் என்று உள்ளுக்குள் தலையில் அடித்து கொண்டவன் ,நடந்ததை விளக்கும் விதமாக ,"பாட்டி .....நான் இவளை தான் மணக்க போகிறேன் .....ஆனா இப்போ இல்லை பாட்டி ...சும்மா விளையாட்டுக்கு தான் இவ கழுத்தில் மாலை போட்டேன் ....."என்றான் விஜய் .

"(ஆமே தனா மேடைப்பை ஹாரமு வேயதம் கோசம் அமேன்னு மீ பார்யாக பிலுஸ்டுண்டி ) நீ மாலை மட்டும் போட்டு இருந்தால் அவளை ஏன் உன் மனைவி என்று அழைக்க போகிறோம் ....(--மீறு மங்கலசுத்ராணி கட்டி அமேனு மீ பார்யாக செய்ச்சாரு )நீ அவள் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி இருப்பதால் தான் அவளை உன் மனைவி என்று அழைக்கிறோம் . ---(மீறு இதரும் இப்படடிக்கே விவாஹம் சேசுகுன்னாரு)---நீங்க ரெண்டு பேரும் இப்போ தான் திருமணம் செய்து கொண்டீர்கள் ."என்ற ஸ்ரீ பாட்டி மதுரா கழுத்தில் இருந்த மாலையை விட்டு வெளியே தொங்கி கொண்டு இருந்த ராமராஜு பரம்பரை திருமாங்கல்யத்தை எடுத்து முழுதாய் வெளியே விட ,அதை கண்டு விஜய் ,மதுரா ஸ்தம்பித்து போய் நின்றனர் .

eabc87c1b751569bb00838c678c7f3eb--south-india-blue-stones.jpg

விஜய் விளையாட்டாய் அம்மன் கழுத்தில் இருந்த மாலையை எடுக்க ,அதில் மாட்டி கொண்டு ராமராஜுவின் குடும்ப திருமாங்கல்யமும் வந்து இருக்கிறது அதை விஜய்யும் கவனித்திருக்கவில்லை .கவனிக்காமல் விஜய் மாலையை மதுராவின் கழுத்தில் போட்டு உண்மையிலே அந்த அம்மன் முன் திருமணம் செய்து இருந்தான் .

இந்த திருமாங்கல்யம் ட்ரெயின் அச்சிடேன்ட் போது மீண்டும் ராமராஜு கையில் கிடைக்க ,மதுரா மீண்டும் கதிரி போன போது சிகப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைத்து மதுராவிடம் அவர் கொடுத்தது இதை தான் .

திருமணம் ---மதுரா அவன் மனைவி ....தான் அவள் கணவன் ............அந்த எண்ணம் வானத்தில் பறக்க வைத்தாலும் பெற்றோருக்கு தெரியாமல் நடந்த அந்த திருமணத்தை மனம் ஏற்க தயங்க என்ன செய்வது என்று இருவருக்குமே புரியாத நிலை .விளையாட்டு இப்படி ஒரு முடிவினை கொண்டு வரும் என்று அவர்கள் என்ன கனவா கண்டார்கள் .கலங்கி நின்ற மதுராவை அணைத்து கொண்டடார் ஸ்ரீ .

"இங்கே பாரு மா ...திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள் ....யாருக்கு ,யார் கூட எப்படி ,எந்த விதத்தில் திருமணம் நடப்பது என்று அவன் ஏற்கனவே அவன் முடிவூ செய்து வைத்து இருப்பது .....அதை மாற்ற மனிதனால் முடியாது ......இங்கு உங்கள் திருமணம் நடக்கவேண்டும் என்பது அவன் விருப்பம் .....இந்த திருமாங்கல்யம் பத்தி நானும் கேள்வி பட்டு இருக்கேன் ...நான் சிறுமியாய் இருந்த போது இதற்கு முன் செய்ய பட்ட திருமாங்கல்யமும் இதே போல சேர வேண்டிய பெண்ணை சேர்ந்ததை நானே பார்த்து இருக்கிறேன் ....இப்போ இத்தனை வருடம் கழித்து மீண்டும் அது நடந்து இருக்கிறது .....இது தெய்வ செயல் ......"என்றார் ஸ்ரீ .

"நாங்க வந்து உங்க ரெண்டு பேர் குடும்பத்திடமும் பேசறோம் ......நாங்க இருக்கோம் .....எதற்கும் கவலை படாதீங்க ....ஒரு மூன்று நாள் இங்கே தங்கி இருங்க ....எங்க வீட்டு பெண் .....திருமணம் நடந்த உடனே கிளம்ப கூடாது ......தாய் ,தந்தை வீட்டில் தங்கி இருந்துட்டு மூன்றாம் நாள் தான் சீர் வரிசையோடு கிளம்பணும் .....மூன்றாம் நாள் உங்க கூடவே நாங்களும் வரோம் ....."என்றார் ராமராஜு .

எவ்வளவூ மறுத்து கூறியும் அவர்கள் விடவில்லை ....விஜய்க்கும் ,மதுராவிற்கும் நடந்து முடிந்ததை ஜீரணிக்க டைம் தேவை பட்டது .இதில் விஜய் மேல் தவறு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை .அவன் மாலையோடு மாங்கல்யம் இருந்ததை கவனித்து இருந்தால் நிச்சயம் அதை மதுரா கழுத்தில் போட்டே இருக்க மாட்டான் தான் ...ஆனால் விதி .........

அவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதை தவிர இருவருக்கும் வேறு வழி இருக்கவில்லை .அவர்கள் சாஸ்திரம் ,சம்ப்ரதாயம் படி இன்னும் செய்ய வேண்டிய பூஜை ,திருமண சடங்குகள் எல்லாம் இருவரும் செய்தனர் .தன் வீட்டு பெண்ணின் திருமணம் போலே ஓடியாடி வேலை செய்தார் ராமராஜு .புரியாத பாஷை ,தெரியாத சடங்குகள் தான் என்றாலும் திருமணம் என்பது எங்கேயும் ஒன்று தானே .காதலித்தவர்கள் வேறு ,மனம் ஒன்றி தான் எல்லா சடங்குகளையும் செய்தார்கள் .

அங்கு இருந்த அறைக்குள் மதுராவை அழைத்து சென்றவர்கள் ஆந்திரா மக்கள் முறைப்படி திருமணத்தின் போது கட்டும் சிகப்பு பார்டர் வைத்த ,வெள்ளை நிற புடவையை கொடுத்து ,கட்டி அழைத்து வந்தனர் .
ஏற்கனவே வேட்டி சட்டையில் கம்பீரமாய் இருந்த விஜய் ,மணமேடையில் அமர்ந்து இருக்க ,ஐயர் கூறிய மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான்

telugu-bride_pellikooturu-gampa2_sumuhurtham-photography.jpg
மதுராவை மூங்கில் கூடையில் அமர வைத்து ,ராமராஜு அவர் உறவினர்கள் மதுராவை கன்யாதானம் செய்ய கையில் இளநீர் கொடுத்து தூக்கி வந்தனர் .ஏற்கனவே திருமாங்கல்யம் சூட்ட பட்டு இருந்தாலும் ,இவை எல்லாம் விட்டு போய் இருந்த படியால் ,இந்த சடங்குகள் செய்ய பட்டன .

"தர்மேக அர்த்தக காமேஷ மோக்க்ஷேக நடி காரமி "என்ற ஸ்லோகத்தை விஜய் மூன்று முறை சொல்ல ,மதுராவின் தந்தை ஸ்தானத்தில் இருந்த ராமராஜுவுக்கு மூன்று முறை உங்கள் மகளின் சுகம் ,துக்கம் யாவிலும் துணை இருப்பேன் என்று வாக்குறுதி கொடுப்பதாய் அந்த மந்திரம் சொன்னது .
20050531163320_050530.jpg

அடுத்து பணிகிரஹம் என்ற சடங்கில் மதுராவின் கை பிடித்து ,"கடவுள் உன்னை என் இல்லறத்திற்கு கொடுத்து இருக்கிறார் .நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாது இருப்போமாக "என்ற உறுதிமொழி கொடுத்தான் .


இருவருக்கு நடுவில் வெள்ளை திரை ஒன்றில் ஸ்வஸ்திகா ராமராஜு வரைந்து வைக்க ,விஜய் மதுராவின் நடுவே அந்த துணி திரையாக பிடிக்க பட ,புரோகிதர் இருவரிடமும் வெற்றிலையில் வெல்லம் ,ஜீரகம் கலந்த ஜீரகபெல்லம் என்று அழைக்க பட்ட அந்த மங்கள பொருளை கொடுத்து இருவரையும் மற்றவர் தலை உச்சியில் வைக்க சொன்னார் .
Jilakarra-Bellam-and-Maadhuparkam-telugu-wedding-rituals-6.jpg

நம் உடம்பின் படி அது ஆதி சக்ர ஸ்தானம் .ஜீரகம் ,வெல்லம் ,வெற்றிலை கலந்த கலவை அங்கு வைக்க படும் போது கெமிக்கல் ரியாக்ஷன் நடந்து ஆணும் ,பெண்ணும் இவனுக்கு இவள் ,இவளுக்கு இவன் என்ற பந்த பிணைப்பு ஏற்படுகிறதாம் .இவை தூண்டப்படும் போது தான் "லவ் அட் 1ஸ்ட் சைட் "/love at 1st sight -முதல் பார்வையில் காதல் வயப்படுவது நடப்பதாக ஸ்ரீ பாட்டி விளக்கினார் .

தலையில் ஜீரகபெல்லம் வைக்க பட்டதும் திரை விலக்கப்பட ,விஜய் ,மதுரா ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ,ஒரு புது வித சிலிர்ப்பு இருவருக்குள்ளும் ஓடியது .இங்கு உருவாகும் இந்த பந்தமானது என்றுமே உடைக்கமுடியாதது ,என்றுமே பிரியாதது என்று விளக்கினார் நரசிம்ம ரெட்டி .காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் சடங்கு ,சம்பிரதாயங்களை உருவாக்கவில்லை என்று அந்த கணம் புரிந்தது இருவருக்கும் புரிந்தது .

மங்கள சூத்திர தாரணம் ஏற்கனவே முடிந்து இருந்ததால் ,விஜய் ,மதுரா மாலை மாற்றி கொள்ள அங்கு தம்பதி சமேதராய் இருந்த இல்லறவாசிகள் இவர்களின் மேல் அட்சதை போட்டு "ஒருவரை ஒருவர் நீங்காமல் நூறு ஆண்டு எல்லா செல்வமும் ,வளமும் பெற்று வாழ்க "என்று வாழ்த்தினார்கள் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அடுத்து சப்தபதி என்ற சடங்கில் தம்பதி சமேதராய் விஜய் ,மதுரா அக்னியை ஏழுமுறை வலம் வந்து அன்பு ,பாசம் ,நட்பு ,அக்கறை ,புரிந்துணர்வூ ,கொண்டு வழிகாட்டியாய் ஒருவருக்கு ஒருவர் இருப்போம் என்று உறுதி எடுத்தனர்

அடுத்து அம்மி மிதித்து ,மெட்டி இட்டு ,அருந்ததி பார்த்து மதுராவை விஜய்யிடம் பெற்றோர்ராய் இருந்து ஒப்படைத்தனர் ராமராஜு தம்பதியர் .அடுத்து கிரஹப்பிரவேசம் என்ற சடங்கில் ராமராஜு பண்ணை வீட்டுக்கு மதுரா அடியெடுத்து வைக்க ,விஜய் பெற்றோராய் இருந்து அவர்களை வரவேற்றனர் மேக்னா பெற்றோர் .

சத்தியநாராயணா பூஜை செய்விக்க பட்டு ,மணமக்களுக்கு விருந்து பரிமாற பட்டது . பெரியவர்கள் கூறிய படி அனைத்தையும் மணமக்கள் மனம் ஒன்றி செய்தார்கள் தான் என்றாலும் ஆனால் ஒரு நிறைவூ இருந்ததா என்றால் இல்லை என்பதே பதில் .இரு குடும்பமும் இல்லாமல் மூன்றாம் நபர்கள் முன் ,ஆல்வின் ,பாலாஜி மட்டும் இருக்க நடந்த முறை மனதை போட்டு அறுத்து கொண்டு தான் இருந்தது .விஜய் தந்தை நலம் இல்லாதவர் .அவரால் இங்கே வர முடியாது .மதுராவின் பெற்றோர் அண்ணன் அமெரிக்கா டூர் போய் இருந்தார்கள் .நான்கு நாளில் திரும்பி விடுவார்கள் என்னும் போது வீணாக போன் செய்து அவர்களை கலவர மதுரா தயாராய் இல்லை .

என்ன என்று போன் செய்து அழைப்பது ..'ஹலோ மம்மி ...ஒண்ணும் இல்லை டூர் வந்த இடத்தில் எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு ...கொஞ்சம் வரியா ?"என்றா சொல்ல முடியும் ?அதுவும் இது எல்லாம் போனில் தெரிவிக்கும் விஷயமா என்ன .ராமராஜு வேறு இருந்துவிட்டு தான் போகணும் என்று ஒற்றை காலில் நிற்கிறார் .

ஊருக்கே விருந்து கொடுக்க பட்டு இவர்களுக்கு என்றே ஒதுக்க பட்டு இருந்த பார்ம் ஹவுஸ் சில் இரவூ பால் ,பழம் ,நலங்கு வைக்க பட்டு மதுரா விஜய் இருந்த அறைக்குள் அலங்காரம் செய்ய பட்டு அனுப்ப பட்டாள் .அந்த வீடு சென்னையில் சுபாவோடு மதுரா தங்கி இருக்கும் அதே மாதிரியான டிட்டோ வீடு ....சென்னை வீட்டை டிசைன் செய்தது விஜய் தானே. அதுவும் அவன் திருமணம் ஆகி அவன் மனைவியோடு இருந்த இந்த மூன்று நாட்களின் நினைவூ சின்னமாய் .சென்னை வீடானா "பிருந்தாவனம் "மதுராவிற்கு அவ்வளவூ பிடிக்க காரணம் முன்னே அவன் கூட வாழ்ந்த அதே வீட்டை ஆழ்மனம் உணர்ந்ததால் தானே ....

உள்ளே சர்வாலங்காரதோடு ,அவன் கட்டிய திருமாங்கல்யம் நெஞ்சில் ஒய்யாரமாய் தவழ ,தேவதை போல் உள்ளே நுழைந்தவளை கண்டு விஜய் பேச்சு இழந்து சிலையாக நின்றான் .அவன் மூச்சை நிறுத்தி இருந்தாள் அவன் காதல் மனைவி . கண்கள் கலங்கி விட்டது அவனுக்கு ...இந்த உன்னத பெண் அவன் மனைவியா .கை அகல விரித்து அவன் காண்பிக்க கண நேரமும் தாமதிக்காமல் அவன் கரங்களில் ,அவன் மார்பில் சரண் புகுந்தாள் அவனின் சரிபாதி .

எவ்வளவூ நேரம் மௌனமாய் அப்படியே நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது .காடு மேடு எல்லாம் சுற்றி அலைந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்ட மனநிறைவூ இருவருக்குள்ளும் .அவளை கை பிடித்து அங்கு இருந்த மல்லிகை பந்தலின் அடிக்கு அழைத்து சென்ற விஜய் ,நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவளை தன் மடியில் அமர வைத்து கொண்டான் .

"என் மேல் கோபமா ......சத்தியமா மாலையில் மாங்கல்யம் இருப்பது எனக்கு தெரியலை மது ....தெரிந்து இருந்தால் ....என்னை நம்பறே தானே ...."என்றான் விஜய் .

"உன் தலைவிதி இது தான் என்றால் மீ வாட் டு டூ மாமு ......நீ எஸ்கேப் ஆக ஒரு சான்ஸ் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ...பட் பாரு யானை மாதிரி உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டு கொண்டே .....ஸெல்ப் ஆப்பு ......என்னிடம் இருந்து நீ எப்படி தப்ப முடியும் ....என்னிடமிருந்து நீ பிரிய முடியாது மாமு .....எத்தனை உறுதி மொழி மனசாட்சி ,கடவுள் ,அக்னி ,மக்கள் முன் எடுத்து இருக்கிறோம் ....அதற்குள் உன்னை விட முடியுமா ?நீயே என்னை பிரிந்தாலும் உன்னை ,உன்னை நான் பிரிய மாட்டேன் மாமு ."."என்றவளின் கன்னத்தை கிள்ளினான் விஜய் .

"போக்கிரி ......உனக்கு உண்மையில் வருத்தமாய் இல்லையாடீ ...இல்லை எனக்காக என்று காமெடி செய்துட்டு இருக்கியாடா ?"என்றான் .

"கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம், பயம் எல்லாம் இருக்கு பாவா ......நம்ம குடும்பம் இல்லாமல் .....இதை எப்படி சொல்லி புரிய வைப்பது .............சங்கு எனக்கு சங்கு ஊத்திடுமோன்னு பயமா இருக்கு ....ஹிட்லர் ....கடவுளே ...சும்மாவே வயத்தில் நெருப்பை கட்டிட்டு இருக்கேன் என்று பொறிவாங்க .....இப்போ இது ........."என்று கண்கள் கலங்க அவன் தோள் மேல் தலை வைத்து மௌனமாய் அழுதவளை தட்டி கொடுத்தான் விஜய் .

"ஆமா அது என்ன என்னவோ பாவான்னு சொன்னே ..."என்றான் விஜய் அவள் கவனத்தை திசை திருப்ப .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"உன்ர பாவா சொல்படி நட ...என்று ஸ்ரீ பாட்டி சொன்னாங்க ....மே பீ நம்ம ஊரில் மாமா ,அத்தான் என்று கணவனை கூப்பிடுவோம் இல்லையா அது மாதிரின்னு நினைக்கறேன் ...கூப்பிட நல்லா இருந்தது அதான் ...."என்றாள் மதுரா .

"மது .....உன் கிட்டே ஒன்று சொல்லவா ....தப்பா நினைச்சுக்காதே ....."என்றான் விஜய் .

"என்ன மாமு .....பெட்டிஷன் எல்லாம் பலமா இருக்கு ...."என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி தலை சாய்த்து அவள் கேட்ட விதமே அவன் நெஞ்சை அள்ளியது .

"ஒண்ணும் இல்லை ..நம்மை பெத்தவங்க கிட்டேயே சொல்லி அவங்க ஆசீர்வாதத்துடன் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறன் ...திருமணம் தான் அவங்க இல்லாமல் நடந்து விட்டது ...வாழ்க்கை அவங்க வாழ்த்தோடு ஆரம்பிக்கணும் என்று ....."என்று இழுத்தவனின் கன்னத்தை பிடித்த மதுரா அவன் இதழில் தன் இதழை பொறுத்தி ரொம்ப நேரம் எடுத்தாள் .

"என்னடீ பட்டு ....."என்றான் விஜய் கண்கள் சொருகிவனாய் .

"மாமு ...நானே இதை தான் உன்னிடம் எப்படி சொல்வது என்று தவித்து கொண்டு இருந்தேன்.......நீயே சொல்லிட்டியா ...அதான் ......"என்றவளின் இதழை சிறை செய்வது அவன் முறையானது .

"சீ போ மாமு நீ ரொம்ப மோசம் ....."என்று சிணுங்கினாள் மதுரா ...

"இதுக்கே மோசம் என்றால் ...."என்றவன் அவள் காதில் ஏதோ சொல்ல சென்கொழுந்தாகி போனவள் ,"போடா நீ பேட் பாய் .....உன் கூட டூ ...."என்றவள் எழுந்து ஓட அவளை துரத்தி கொண்டு ஓடினான் விஜய் .

"என்ன பாஸ் பிடிங்க ...பிடிங்க .....அச்சச்சோ பாவம் ...பிடிக்க முடியலையா ......"இதே வார்த்தைகளை சொல்லி கொண்டு தான் வளைகாப்பு வீட்டில் மதுரா ஓடியது .அப்போ விஜய் எந்த அளவிற்கு துடித்து இருப்பான் .

ஓடி முடித்து ,ஸ்வீட் நத்திங்ஸ் பேசி ,இருவரும் ஒன்றாய் தான் தூங்கினார்கள் .ஆனால் அங்கே காதல் ,அன்பு மட்டுமே இருந்தது .திருமணத்தின் அடுத்த அடி எடுத்து வைக்க ,பெற்றோர் மேல் இருந்த மரியாதையால் தயங்கிய இரு உள்ளம் காதலால் நிறைந்து இருந்தது .

மூன்று நாட்கள் நொடிகளாய் கடந்து போக, அவர்களுக்கு தேவையான தனிமை கொடுத்து எல்லோரும் விலகி இருந்தனர் .சாப்பாடு ராமராஜு வீட்டில் இருந்து மூன்று வேலையும் வந்து விட ,தோப்பு ,துரவூ சுத்தி பார்ப்பது ,பம்ப் செட்டில் குளிப்பது ,ஸ்வீட் நத்திங்ஸ் பேசி கொண்டு இருப்பது என்று மூன்று நாளும் சொர்க்கத்தில் இருந்தனர் .ஒரு முறை விஜய் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி விட ,மதுர நெக்குருகி நின்றாள் .

"விஜய் சமையல் கரண்டியோடு மதுரா வளைகாப்பு வீட்டில் நினைத்து பார்க்க ,அவள் நினைவுக்கு வந்தது இப்படி விஜய் நின்ற கோலமே .

1553495723594.png
அவர்கள் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது .அவர்கள் உடைகளை பாக் செய்து கொண்டு இருந்தவளை பின் இருந்து அணைத்து அவள் வாசம் இழுத்தவன் ,"செமயா இருகேடீ பொண்டாட்டி ......எப்படிடீ மேக் அப்பே இல்லாமல் இப்படி மஞ்சளில் குளித்த தேவதை மாதிரி மின்னரே ?"என்றான் அவளை ஆராய்ந்த படி .


"ஹ்ம்ம் ...உஜாலாக்கு மாறிட்டேன் அதான் இப்படி மின்றேன் ....டேய் திருடா ...உன் திருட்டுத்தனம் தெரியும் ....நகர்ந்து போ ."என்றாள் மதுரா.

"ஹெல்ப் செய்யறேன் டியர் ......"என்றான் அவன் செய்யும் ஹெல்ப் எங்கேயோ போய் கொண்டு இருக்க ,அவனை தள்ளி விட்டவள் ,"கிளம்புடா மாமா .....பெரியவங்க காத்து இருப்பாங்க ...."என்றாள் மதுரா .

"ஹேய் பஜ்ஜி இல்லை ...என் பப்பு இல்லை ....ஒரே ஒரு உம்மா கொடுடீ ...சும்மா எல்லாம் வேண்டாம் ...கடனா தான் செல்லம் ...கந்து வட்டி போட்டு நிச்சயம் ஒன்றுக்கு ஆயிரமா திருப்பி கொடுத்துடறேன் சுவீட்டி ...."என்றவன் அவனுக்கு தேவையானதை பெற்ற பிறகே அவளை விட்டான் .

அதற்குள் ஆல்வின் ,பாலாஜி வந்து விட ,இவர்களை பார்த்ததும் கிளம்பி சென்று விட்ட அவள் தோழன் பிரபு நினைப்பு வந்து விட்டது மதுராவிற்கு . இவள் முகம் வாடி விட ,பொறாமையால் வாயை விட்டான் விஜய் .தன்னை பற்றி நினைக்காமல் அவனை பற்றி தன் மனைவி நினைக்கிறாளே என்ற பொறாமையில் ,"உனக்கு நான் முக்கியமா இல்லை அவனா ....."என்று

இது மேடம் முருங்கை மரம் ஏறி கொண்டு இறங்காமல் இவனை தலையால் தண்ணீர் குடிக்க வைக்க ,அவளை சமாதானம் செய்கிறேன் என்று ஒரு இதய வடிவ செயின் வாங்கி வந்து ட்ரைனில் அவளிடம் கொடுத்து ,"ஐ லவ் யு "என்று சொல்ல சென்றது .

அவன் நேரம் சுமன் வைத்த பாம் வெடிக்க ,ராமராஜு குடும்பத்தை காப்பாற்ற என்று சென்றவள் ,வெடித்து சிதறிய ட்ரெயின் ஓடு எரிந்து விட்டதாக நினைத்து கதறி ,யாரோ ஒரு பெண் கருகிய நிலையில் இருக்க ,அவள் தான் மதுரா என்று நினைத்து ஹாஸ்பிடல் கொண்டு செல்ல ,அந்த பெண் இறந்து போனதும் இவன் ஒரு வருடம் பைத்தியம் போல் மனைவியை நினைத்து துடித்ததும்.
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"அந்த ட்ரெயின் வெடித்தது உண்மை தான் .ஆனால் ட்ரெயின் வெடிக்கும் முன் , ராமு அப்பா மனைவியை காப்பாற்ற போன நான் அவர்களை நெருங்கும் முன், கால் தவறி கீழே இருந்த ஓட்டை வழியாக ஆற்றில் விழுந்து விட்டேன் .மேலே இருந்து வந்து விழுந்த கூரை என் தலையில் விழுந்ததில் எனக்கு நினைவூ தப்பி போச்சு ....ஆற்றங்கரையோரம் மயங்கி கிடந்தேன் என்று யாரோ என்னை ஹாஸ்பிடல் சேர்த்தார்கள் .மயக்கம் தெளியவே எனக்கு மூன்று வாரம் ஆச்சு .....நான் இறந்து விட்டேன் என்று என் வீட்டில் அந்த பெண்ணை அடையாளம் காட்டி அவளை தூக்கி சென்றதாலும் ,யாரும் என்னை தேடி வராததாலும் ,அங்கு இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .மூன்று வாரம் கழித்து மயக்கம் தெளிந்த பின்பு தான் நான் யார் ,எங்கே இருக்கிறேன் என்று எல்லாமே நினைவுக்கு வந்தது .வீட்டுக்கு போன் செய்து,"நான் மதுரா "என்று சொன்னால் ,"இந்த கார்த்திக் லூசு ,"ஆமாங்க எங்க மதுரா எங்களை விட்டு போய்ட்டா ....எல்லா காரியமும் செய்துட்டோம் .....உங்க அழைப்புக்கு நன்றிங்க "என்று உளறி வைத்தான் .சரி நேராவே போய்டலாம் என்று கிளம்பி வந்துட்டேன் ."என்றாள் மதுரா .

"அந்த விபத்தில் தான் இவளுக்கு ஆந்திரா டூர்ரில் நடந்தது எல்லாம் மறந்து போய் இருக்கா ....கூட போன சூர்யா மட்டும் தான் எங்களுக்கு தெரியும் .மத்த யாரிடமும் பழக்கம் இல்லை ...விஜய் தம்பி பத்தி எல்லாம் அப்போ தெரியாது .....இவங்களும் மதுரா இறந்து போய்ட்டா என்று நினைத்து இந்த பக்கம் யாரும் வருவதில்லை .நாங்களும் வேற வீடு மாத்தி போய்ட்டோம் ..சொல்ல வேண்டிய இவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை ....நடுஇரவில் எழுந்து அமர்ந்து "இப்போ யாரு என்னை ஏஞ்செல் "என்று கூப்பிட்டது என்று கேட்பா ...இல்லை என்றால் அலறுவாள் ...சில சமயம் ,"என்னை விட்டு போடாதீங்க பாவா "என்று தூக்கத்தில் அழுவா ...."என்றார் பவானி .

"டாக்டர் கிட்டே கூட்டி போனோம் ...அம்னீஷியாவா இருக்கலாம் ....."என்று சொல்லிட்டார் ...எதை மறந்தோம் என்று புரியாமல் என் மக ரொம்ப தவிச்சு போய்ட்டா ....விஜய் தம்பி பேசிய ஏதவாது நினைவுக்கு வரும் போல் இருக்கு ...தலையை பிடித்து கொண்டு மயங்கி மயங்கி விழுவா ....நோஸ் ப்ளீட் ஆகும் ....எதையுமே நினைத்து வருந்த கூடாது என்று தான் அவளுக்கு கார்த்திக் உடன் திருமண பேச்சை எடுத்தோம் .அது நின்னு போன சமயத்தில் தான் சோனா வந்து இவளை வேலைக்கு அழைத்து போனது .நானும் ஒரு மன மாறுதல் கிடைக்கட்டுமே என்று அனுப்பி வைத்தேன் .ஆனால் இது எல்லாம் நடந்து இருக்கும் என்று நாங்க எதிர்பார்க்கலை ..."என்றார் சங்கரன் .

"அம்மாடி சோனா ...அதான் விம் எல்லாம் போட்டு விளக்கோ விளக்குன்னு விளக்கிட்டாங்க இல்லை ...நடையை கட்டு நீ ...."என்றார் சிவகாமி .

"அவர்கள் பேசியதை கேட்டு அதிர்ந்து ,மதுரா விஜய் முதல் மனைவி என்பதை அறிந்து துடித்து கொண்டு இருந்தாள் சோனா .

" ....விஜய் முதல் மனைவி உயிரோடு இருக்கா தங்கம் ....முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ரெண்டாவது கட்டினாலும் செல்லுபடியாகாது .....மதுரா கிட்டே விஜய் டைவோர்ஸ் வாங்கவே இல்லை கண்ணு ...அவனின் சட்டபூர்வ மனைவி மதுரை தான் ....அதற்கு சாட்சியாய் மத்திய மந்திரி இருக்கிறார் ,வீடியோ ஆதாரம் இருக்கு .ஒட்டுமொத்த ஊரும் இருக்கு ....சோ இப்போ என்ன செய்யறே வழி அந்த பக்கம் இருக்கு ...அப்படியே நடையை கட்டு ."என்றான் சூர்யா வெகு நக்கலாக .

"நான் கோர்ட்டுக்கு போவேன் .....என்னை ஏமாத்தி இந்த நாய் திருமணம் ..........."என்றவள் கன்னத்தை பிடித்து கொண்டாள் .

"யாரை பார்த்துடீ இந்த வார்த்தை சொல்றே ...என் புருஷனை இப்படி பேச உனக்கு என்ன தைரியம் ....இவர் உன் புருஷனா ...இதோ பாரு டைவோர்ஸ் பத்திரம் ...இதோ அந்த விவகாரத்தை உறுதி செய்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இங்கேயே தான் இருக்கிறார் ....இது உன் கையெழுத்து தான் என்று உறுதி செய்தாகி விட்டது .....ஒரு மாதத்திற்கு மேலாக நீ இவர் மனைவி இல்லை ...வெயிட் வெயிட் அவர் தான் உனக்கு முதலில் தாலியே கட்டவே இல்லையே கண்ணு .....அப்படி கட்டியதாக ஊர் கூறியதையும் ஒரு மணி நேரத்தில் அவிழ்த்து குப்பை தொட்டியில் போட்டவ தானடீ நீ ....இனி ஒரு நிமிஷம் இங்கே நின்றே ...அந்த சுமனை கொன்றது போல் உன்னையும் கொல்ல தயங்க மாட்டேன் ..."என்றாள் மதுரா பத்ரகாளியாய் .

"என்னது சுமனை கொன்னுட்டியா ....?"என்றாள் சோனா திகைத்து போனவளாய் .

"ஆமா அவன் செத்து ரெண்டு நாள் ஆக போகுது ..அவனைஇ மட்டும் இல்லை அவனோடு சேர்த்து 25 பேரையும் ஜலசமாதி செய்து விட்டோம் .....கெட் அவுட் ...."என்று பெண் சிங்கமாய் மதுரா கர்ஜிக்க ,சூர்யா கண் கட்ட ஆல்வின் ,பாலாஜி ,உத்தம் சோனா ,சொர்ணா ,கஜாவை ராஜ மாறியதையோடு மண்டபத்தின் வெளியே கழுத்தை பிடித்து தள்ளி விட்டனர் .

"யப்பா ஹீரோ ....இப்பாவது வந்து முகூர்த்தம் முடிவதற்குள் மதுரா கழுத்தில் தாலி கட்டரியா பா ......மத்த எல்லோருக்கும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் முடிஞ்சாச்சு ......உங்க திருமணம் மட்டும் தான் பாக்கி .......இல்லை சோனா தான் வேண்டுமா ...."என்றான் சூர்யா
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"சூர்யா ..........சாரி ....நீ இங்கே .....இத்தனை உன் உறவுகள் கூடி இருக்கும் போது ...."என்று தன்னை அணைத்து கண்ணீர் விட்ட விஜய் தட்டி கொடுத்த சூர்யா ,"என் உறவூ என் reception னுக்கு தான் வந்தாங்க ......அது இன்று மாலை ரொம்ப கிராண்ட் டா நடக்கும் .....என்ன முழிக்கறே ...குழப்பவாதியான உன்னையே ஒறுத்து விழுந்து விழுந்து லவ்ஸ் விடும் போது நான் லவர் பாய் கண்ணா ..என்னை ஒருத்தி லவ் செய்ய மாட்டாளா ....நீ திருமணம் ஆகியும் பிரமச்சாரி ....நான் திருமணம் ஆகாமலே பபுள்ளை குட்டி பெத்தவன் ...விக்ரம் பாட்டை கரெக்ட் டா follow செய்தது நான் தான் ....."புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா '....என்ன பார்க்கிறே ..."என்றவன் அங்கு நின்று இருந்த சுபத்ராவை தூக்கி கொண்டு ,மேக்னா தோளில் கை போட்டு ,"இவ தான் என் மனைவி ...எனக்கும் இவளுக்கும் மதுரா வீட்டில் எல்லோருக்கும் நிச்சயம் ஆவதற்கு முன் வடபழனி கோயிலில் எங்களுக்கு மதுரா முன்னாடி தான் திருமணம் நடந்தது .அன்று மதுரா வீட்டில் நீ கிளம்பி போன பின் நடந்த நிச்சயம் உனக்கும் ,மதுராவிற்கும் தான் நடந்தது ."என்றான் சூர்யா .

"அப்போ அந்த இன்விடேஷன் ....நேத்து நீங்க ரெண்டு பெரும் recpetion நின்றது ..."என்றான் விஜய் .

"டேய் அப்பா ஞானசூனியம் ....100 ரூபாய் கொடுத்தா பிரிண்ட் போட்டு கொடுப்பாங்கடா .....உண்மையில் கொஞ்சம் பேருக்கு தான் உன் மேரேஜ் அழைப்பு கொடுத்தோம் ...கொடுக்கும் போதே சோனா அண்ட் கோ விற்கு தெரிய கூடாது என்ற வாக்குறுதி பெற்று கொண்டு ...இங்கே இந்த முகூர்த்தத்தில் நடக்க போவது உன் திருமணம் தாண்டா .....உன் வாயில் இருந்தே மதுரா உன் மனைவி என்பதை வரவழைக்க தான் அதுவும் சோனா முன்னாடி நீயே சொல்லணும் என்று தான் அவளை உள்ளேயே விட்டோம் ...அவ கை கொண்டு அவ கண்ணையே குத்திட்டோம் ....டைம் ஆகுது பாரு ....ரெடி ஆகி கிளம்பி வா ...வாங்க ....வாங்க ....."என்று சூர்யா அனைவரையும் அழைத்து கொண்டு போக ,வெளியே சென்ற மதுரா திரும்பி அவனை ஒரு எரிமலை பார்வையை பார்த்து விட்டு போக ,"உருட்டுக்கட்டை அடிக்கு தயாராய் இரு மாப்பிள்ளை ...."என்று பயம் கிளப்பி விட்டு போனான் சூர்யா .

முகுர்த்த நேரத்தில் இரு குடும்பமும் ,நல்லவர்களின் முன்னிலையில் ,முப்பது முக்கோடி தேவர்கள் ,பஞ்ச பூதங்கள் சாட்சியாய் அனைத்து தெய்வங்கள் சாட்சியாய் மீண்டும் மதுராவின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினான் விஜய் ---மதுராவின் மாமு .

2cf29cb57a1e35570b9387aff32117cf.jpg

40675595411_615d33afa8_b.jpg


ஹெலோ ...ஹெலோ எங்கே போறீங்க .....இன்னும் முடியலை ...இருங்கோ .இந்த பாட்டு மாதிரி கற்பனை செய்தா அதற்கு சங்கம் பொறுப்பல்ல.

அன்று இரவூ தன் பங்களாவில் ,தன் அறையில் மேக்னாவை எதிர் பார்த்து காத்து இருந்தான் .புன்னகையுடன் ,முகம் சிவந்து உள்ளே வந்தாள் மேக்னா .
ram-charan-and-kajal-agarwal-photos-7.jpg
""ரொம்ப தேங்க்ஸ் டீ .....உன்னால் தான் இன்று மதுரா வாழ்க்கை அவளுக்கு கிடைச்சி இருக்கு ...எந்த பெண்ணும் செய்ய துணியாத காரியம் நீ செய்தது ...உன் புருசனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இந்த அளவு நாடகம் போட ஹெல்ப் செய்ததற்கு ....விஜய் அவள் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் வரை எனக்கு பக்கு பக்குனு இருந்தது ...நடுவே எழுந்து ஓடிட போறான் என்று வாசல் கதவை எல்லாம் ஆல்வின் ,பாலாஜி ,உத்தம் கிளோஸ் பன்னிட்டாங்க னா பார்த்துக்கோ ...அந்த அளவுக்கு எங்களை படுத்தி எடுத்தான் ."என்றவன் பேச்சை ரசித்து கொண்டு இருந்தாள் அவன் மீரா .


"மனைவியின் ரசிப்பை கண்டவன் ,கண்கள் கலங்க ,"சாரிடீ ...என்னை இந்த அளவிற்கு அதுவும் என்னை நினைத்து நீயே தாலி கட்டி ,நான் உடன் இல்லாமல் நம்ம குட்டிஸ் பிறந்து ரொம்ப கஷ்ட பட்டுட்டே இல்லை ....அதுவும் உன் அனுமதி இல்லாமல் அன்று....உன்னை தொட்டு ...."என்று ஆயிரமாவது முறையாய் கலங்கிய கணவனை அணைத்து கொண்டாள் மேக்னா .

"பாவா .....என் புருஷன் என்னை தொட்டார் .....அன்றைக்கு உங்களை விளக்க முடிந்து இருக்காதா என்ன ....ஆனால் நான் விளக்கவில்லை ....அதனால் தான் க்ரிஷ் ,சுபத்ரா கிடைச்சாங்க ......என்னை தொடும் போதே நீங்க என்னை தான் தொடறீங்க என்று தெரிந்து இருந்தது ....என் பெயரை தான் சொல்லிட்டு இருந்தீங்க பாவா ..... .....எனக்கு நீங்க கிடைச்சிடீங்க ...வேறு என்ன வேண்டும் ....."என்றவளை இழுத்து அணைத்தான் சூர்யா .


"குழந்தைங்க தூங்கிட்டாங்களா ....."

"ஒஹ்ஹஹ் "

"உங்க அப்பா ,அம்மா ...கூட இருக்காங்களா ...."

"ஒஹ்ஹஹ் "

"கதவை மூடிட்டியா ....?"

"ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ ."

"கிட்டே வாயேன் ...."என்றவன் அவள் கையை பிடித்து அவளை தன்னுடையவள் ஆக்க முயல ,அவன் போன் ஒலித்தது .

"எவன் டா பூஜை வேலை கரடி ..."என்று புலம்பியவாறு போன் எடுத்தவன் ஸ்பீக்கர்ரில் போட ,அந்த பக்கம் இருந்து விஜய் அலறினான் .

"மாமா காப்பாத்துடா ....என்னை புரட்டி போட்டு ,கொத்து பரோட்டா போட்டுட்டு இருக்காடா உன் தோழி ...அடி தாங்க முடியலை ......"என்று விஜய் அலற ,"டேய் .....உதவிக்கு ஆளை கூப்பிட்டு மட்டும் விட்டுடுவேனா ...மவனே ....நான் தான் உயிரோடு இருப்பது தெரியும் இல்லை ....அதுவும் 5 வருசமா ....அந்த சோனா பிசாசை விட்டுட்டு வரமுடியலையாக்கும் .....ஆஃபீஸ்ச்சில் தினமும் கடிச்சா வைக்கிறே ......அவ சங்கை சுத்தம் இல்லாமலா அறுத்துட்டு போய்ட்டு இருப்பதை விட்டு இப்படி தலையை சுத்தி மூக்கை தொட வைப்பே ....டைவோர்ஸ் பேப்பர் நீட்டினா சைன் போடணும் ...தங்கச்சி வந்தா ஆட்டுக்குட்டி வந்தா என்று ஓடுவே ......நில்லு டா ...ஓடாதே ......."என்று பின்னால் மதுரா கர்ஜிக்கும் குரல் கேட்டது .

"மாப்பிளை ...சாரி .....இது நீயா இழுத்து கொண்டது ....உனக்கு வேண்டும் தான் .....5 வருசமா பொத்திட்டு இருந்துட்டு ......டைவோர்ஸ் பேப்பர் நீட்டினாலும் சைன் போடாம ,கிச் மட்டும் அடிச்சிட்டு போவே நீயி ....எல்லோரையும் பைத்தியம் ஆக்கிட்டு இருந்தே இல்லை mr தியாக செம்மல் என்ஜோய் ."என்றான் சூர்யா

"நீ வாடி செல்லம் ....அதுங்க எப்படியாவது போகட்டும் ..நாம ரொம்ப கேப் விட்டுட்டோம் ...நிறைய ஒர்க் இருக்கு ..."என்றவன் மனைவியை நெருங்க அங்கு ஒருஅழகான இல்லறம் ஆரம்பமானது .


THAVAM WILL END NEXT UD
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top