விஜய்க்கும் அப்போ தான் தான் செய்து இருந்த காரியத்தின் விபரீதம் புரிய ஆரம்பித்தது .அவர்கள் கோயில் உற்சவத்தின் போது ,101 கன்னி பெண்களுக்கு திருமணம் நடக்கும் போது இப்படி மாலையும் கழுத்துமாய் நின்றால் வேறு என்ன நினைப்பார்கள் என்று உள்ளுக்குள் தலையில் அடித்து கொண்டவன் ,நடந்ததை விளக்கும் விதமாக ,"பாட்டி .....நான் இவளை தான் மணக்க போகிறேன் .....ஆனா இப்போ இல்லை பாட்டி ...சும்மா விளையாட்டுக்கு தான் இவ கழுத்தில் மாலை போட்டேன் ....."என்றான் விஜய் .
"(ஆமே தனா மேடைப்பை ஹாரமு வேயதம் கோசம் அமேன்னு மீ பார்யாக பிலுஸ்டுண்டி ) நீ மாலை மட்டும் போட்டு இருந்தால் அவளை ஏன் உன் மனைவி என்று அழைக்க போகிறோம் ....(--மீறு மங்கலசுத்ராணி கட்டி அமேனு மீ பார்யாக செய்ச்சாரு )நீ அவள் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி இருப்பதால் தான் அவளை உன் மனைவி என்று அழைக்கிறோம் . ---(மீறு இதரும் இப்படடிக்கே விவாஹம் சேசுகுன்னாரு)---நீங்க ரெண்டு பேரும் இப்போ தான் திருமணம் செய்து கொண்டீர்கள் ."என்ற ஸ்ரீ பாட்டி மதுரா கழுத்தில் இருந்த மாலையை விட்டு வெளியே தொங்கி கொண்டு இருந்த ராமராஜு பரம்பரை திருமாங்கல்யத்தை எடுத்து முழுதாய் வெளியே விட ,அதை கண்டு விஜய் ,மதுரா ஸ்தம்பித்து போய் நின்றனர் .
விஜய் விளையாட்டாய் அம்மன் கழுத்தில் இருந்த மாலையை எடுக்க ,அதில் மாட்டி கொண்டு ராமராஜுவின் குடும்ப திருமாங்கல்யமும் வந்து இருக்கிறது அதை விஜய்யும் கவனித்திருக்கவில்லை .கவனிக்காமல் விஜய் மாலையை மதுராவின் கழுத்தில் போட்டு உண்மையிலே அந்த அம்மன் முன் திருமணம் செய்து இருந்தான் .
இந்த திருமாங்கல்யம் ட்ரெயின் அச்சிடேன்ட் போது மீண்டும் ராமராஜு கையில் கிடைக்க ,மதுரா மீண்டும் கதிரி போன போது சிகப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைத்து மதுராவிடம் அவர் கொடுத்தது இதை தான் .
திருமணம் ---மதுரா அவன் மனைவி ....தான் அவள் கணவன் ............அந்த எண்ணம் வானத்தில் பறக்க வைத்தாலும் பெற்றோருக்கு தெரியாமல் நடந்த அந்த திருமணத்தை மனம் ஏற்க தயங்க என்ன செய்வது என்று இருவருக்குமே புரியாத நிலை .விளையாட்டு இப்படி ஒரு முடிவினை கொண்டு வரும் என்று அவர்கள் என்ன கனவா கண்டார்கள் .கலங்கி நின்ற மதுராவை அணைத்து கொண்டடார் ஸ்ரீ .
"இங்கே பாரு மா ...திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள் ....யாருக்கு ,யார் கூட எப்படி ,எந்த விதத்தில் திருமணம் நடப்பது என்று அவன் ஏற்கனவே அவன் முடிவூ செய்து வைத்து இருப்பது .....அதை மாற்ற மனிதனால் முடியாது ......இங்கு உங்கள் திருமணம் நடக்கவேண்டும் என்பது அவன் விருப்பம் .....இந்த திருமாங்கல்யம் பத்தி நானும் கேள்வி பட்டு இருக்கேன் ...நான் சிறுமியாய் இருந்த போது இதற்கு முன் செய்ய பட்ட திருமாங்கல்யமும் இதே போல சேர வேண்டிய பெண்ணை சேர்ந்ததை நானே பார்த்து இருக்கிறேன் ....இப்போ இத்தனை வருடம் கழித்து மீண்டும் அது நடந்து இருக்கிறது .....இது தெய்வ செயல் ......"என்றார் ஸ்ரீ .
"நாங்க வந்து உங்க ரெண்டு பேர் குடும்பத்திடமும் பேசறோம் ......நாங்க இருக்கோம் .....எதற்கும் கவலை படாதீங்க ....ஒரு மூன்று நாள் இங்கே தங்கி இருங்க ....எங்க வீட்டு பெண் .....திருமணம் நடந்த உடனே கிளம்ப கூடாது ......தாய் ,தந்தை வீட்டில் தங்கி இருந்துட்டு மூன்றாம் நாள் தான் சீர் வரிசையோடு கிளம்பணும் .....மூன்றாம் நாள் உங்க கூடவே நாங்களும் வரோம் ....."என்றார் ராமராஜு .
எவ்வளவூ மறுத்து கூறியும் அவர்கள் விடவில்லை ....விஜய்க்கும் ,மதுராவிற்கும் நடந்து முடிந்ததை ஜீரணிக்க டைம் தேவை பட்டது .இதில் விஜய் மேல் தவறு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை .அவன் மாலையோடு மாங்கல்யம் இருந்ததை கவனித்து இருந்தால் நிச்சயம் அதை மதுரா கழுத்தில் போட்டே இருக்க மாட்டான் தான் ...ஆனால் விதி .........
அவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதை தவிர இருவருக்கும் வேறு வழி இருக்கவில்லை .அவர்கள் சாஸ்திரம் ,சம்ப்ரதாயம் படி இன்னும் செய்ய வேண்டிய பூஜை ,திருமண சடங்குகள் எல்லாம் இருவரும் செய்தனர் .தன் வீட்டு பெண்ணின் திருமணம் போலே ஓடியாடி வேலை செய்தார் ராமராஜு .புரியாத பாஷை ,தெரியாத சடங்குகள் தான் என்றாலும் திருமணம் என்பது எங்கேயும் ஒன்று தானே .காதலித்தவர்கள் வேறு ,மனம் ஒன்றி தான் எல்லா சடங்குகளையும் செய்தார்கள் .
அங்கு இருந்த அறைக்குள் மதுராவை அழைத்து சென்றவர்கள் ஆந்திரா மக்கள் முறைப்படி திருமணத்தின் போது கட்டும் சிகப்பு பார்டர் வைத்த ,வெள்ளை நிற புடவையை கொடுத்து ,கட்டி அழைத்து வந்தனர் .
ஏற்கனவே வேட்டி சட்டையில் கம்பீரமாய் இருந்த விஜய் ,மணமேடையில் அமர்ந்து இருக்க ,ஐயர் கூறிய மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான்
மதுராவை மூங்கில் கூடையில் அமர வைத்து ,ராமராஜு அவர் உறவினர்கள் மதுராவை கன்யாதானம் செய்ய கையில் இளநீர் கொடுத்து தூக்கி வந்தனர் .ஏற்கனவே திருமாங்கல்யம் சூட்ட பட்டு இருந்தாலும் ,இவை எல்லாம் விட்டு போய் இருந்த படியால் ,இந்த சடங்குகள் செய்ய பட்டன .
"தர்மேக அர்த்தக காமேஷ மோக்க்ஷேக நடி காரமி "என்ற ஸ்லோகத்தை விஜய் மூன்று முறை சொல்ல ,மதுராவின் தந்தை ஸ்தானத்தில் இருந்த ராமராஜுவுக்கு மூன்று முறை உங்கள் மகளின் சுகம் ,துக்கம் யாவிலும் துணை இருப்பேன் என்று வாக்குறுதி கொடுப்பதாய் அந்த மந்திரம் சொன்னது .
அடுத்து பணிகிரஹம் என்ற சடங்கில் மதுராவின் கை பிடித்து ,"கடவுள் உன்னை என் இல்லறத்திற்கு கொடுத்து இருக்கிறார் .நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாது இருப்போமாக "என்ற உறுதிமொழி கொடுத்தான் .
இருவருக்கு நடுவில் வெள்ளை திரை ஒன்றில் ஸ்வஸ்திகா ராமராஜு வரைந்து வைக்க ,விஜய் மதுராவின் நடுவே அந்த துணி திரையாக பிடிக்க பட ,புரோகிதர் இருவரிடமும் வெற்றிலையில் வெல்லம் ,ஜீரகம் கலந்த ஜீரகபெல்லம் என்று அழைக்க பட்ட அந்த மங்கள பொருளை கொடுத்து இருவரையும் மற்றவர் தலை உச்சியில் வைக்க சொன்னார் .
நம் உடம்பின் படி அது ஆதி சக்ர ஸ்தானம் .ஜீரகம் ,வெல்லம் ,வெற்றிலை கலந்த கலவை அங்கு வைக்க படும் போது கெமிக்கல் ரியாக்ஷன் நடந்து ஆணும் ,பெண்ணும் இவனுக்கு இவள் ,இவளுக்கு இவன் என்ற பந்த பிணைப்பு ஏற்படுகிறதாம் .இவை தூண்டப்படும் போது தான் "லவ் அட் 1ஸ்ட் சைட் "/love at 1st sight -முதல் பார்வையில் காதல் வயப்படுவது நடப்பதாக ஸ்ரீ பாட்டி விளக்கினார் .
தலையில் ஜீரகபெல்லம் வைக்க பட்டதும் திரை விலக்கப்பட ,விஜய் ,மதுரா ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ,ஒரு புது வித சிலிர்ப்பு இருவருக்குள்ளும் ஓடியது .இங்கு உருவாகும் இந்த பந்தமானது என்றுமே உடைக்கமுடியாதது ,என்றுமே பிரியாதது என்று விளக்கினார் நரசிம்ம ரெட்டி .காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் சடங்கு ,சம்பிரதாயங்களை உருவாக்கவில்லை என்று அந்த கணம் புரிந்தது இருவருக்கும் புரிந்தது .
மங்கள சூத்திர தாரணம் ஏற்கனவே முடிந்து இருந்ததால் ,விஜய் ,மதுரா மாலை மாற்றி கொள்ள அங்கு தம்பதி சமேதராய் இருந்த இல்லறவாசிகள் இவர்களின் மேல் அட்சதை போட்டு "ஒருவரை ஒருவர் நீங்காமல் நூறு ஆண்டு எல்லா செல்வமும் ,வளமும் பெற்று வாழ்க "என்று வாழ்த்தினார்கள் .
"(ஆமே தனா மேடைப்பை ஹாரமு வேயதம் கோசம் அமேன்னு மீ பார்யாக பிலுஸ்டுண்டி ) நீ மாலை மட்டும் போட்டு இருந்தால் அவளை ஏன் உன் மனைவி என்று அழைக்க போகிறோம் ....(--மீறு மங்கலசுத்ராணி கட்டி அமேனு மீ பார்யாக செய்ச்சாரு )நீ அவள் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டி இருப்பதால் தான் அவளை உன் மனைவி என்று அழைக்கிறோம் . ---(மீறு இதரும் இப்படடிக்கே விவாஹம் சேசுகுன்னாரு)---நீங்க ரெண்டு பேரும் இப்போ தான் திருமணம் செய்து கொண்டீர்கள் ."என்ற ஸ்ரீ பாட்டி மதுரா கழுத்தில் இருந்த மாலையை விட்டு வெளியே தொங்கி கொண்டு இருந்த ராமராஜு பரம்பரை திருமாங்கல்யத்தை எடுத்து முழுதாய் வெளியே விட ,அதை கண்டு விஜய் ,மதுரா ஸ்தம்பித்து போய் நின்றனர் .
விஜய் விளையாட்டாய் அம்மன் கழுத்தில் இருந்த மாலையை எடுக்க ,அதில் மாட்டி கொண்டு ராமராஜுவின் குடும்ப திருமாங்கல்யமும் வந்து இருக்கிறது அதை விஜய்யும் கவனித்திருக்கவில்லை .கவனிக்காமல் விஜய் மாலையை மதுராவின் கழுத்தில் போட்டு உண்மையிலே அந்த அம்மன் முன் திருமணம் செய்து இருந்தான் .
இந்த திருமாங்கல்யம் ட்ரெயின் அச்சிடேன்ட் போது மீண்டும் ராமராஜு கையில் கிடைக்க ,மதுரா மீண்டும் கதிரி போன போது சிகப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைத்து மதுராவிடம் அவர் கொடுத்தது இதை தான் .
திருமணம் ---மதுரா அவன் மனைவி ....தான் அவள் கணவன் ............அந்த எண்ணம் வானத்தில் பறக்க வைத்தாலும் பெற்றோருக்கு தெரியாமல் நடந்த அந்த திருமணத்தை மனம் ஏற்க தயங்க என்ன செய்வது என்று இருவருக்குமே புரியாத நிலை .விளையாட்டு இப்படி ஒரு முடிவினை கொண்டு வரும் என்று அவர்கள் என்ன கனவா கண்டார்கள் .கலங்கி நின்ற மதுராவை அணைத்து கொண்டடார் ஸ்ரீ .
"இங்கே பாரு மா ...திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள் ....யாருக்கு ,யார் கூட எப்படி ,எந்த விதத்தில் திருமணம் நடப்பது என்று அவன் ஏற்கனவே அவன் முடிவூ செய்து வைத்து இருப்பது .....அதை மாற்ற மனிதனால் முடியாது ......இங்கு உங்கள் திருமணம் நடக்கவேண்டும் என்பது அவன் விருப்பம் .....இந்த திருமாங்கல்யம் பத்தி நானும் கேள்வி பட்டு இருக்கேன் ...நான் சிறுமியாய் இருந்த போது இதற்கு முன் செய்ய பட்ட திருமாங்கல்யமும் இதே போல சேர வேண்டிய பெண்ணை சேர்ந்ததை நானே பார்த்து இருக்கிறேன் ....இப்போ இத்தனை வருடம் கழித்து மீண்டும் அது நடந்து இருக்கிறது .....இது தெய்வ செயல் ......"என்றார் ஸ்ரீ .
"நாங்க வந்து உங்க ரெண்டு பேர் குடும்பத்திடமும் பேசறோம் ......நாங்க இருக்கோம் .....எதற்கும் கவலை படாதீங்க ....ஒரு மூன்று நாள் இங்கே தங்கி இருங்க ....எங்க வீட்டு பெண் .....திருமணம் நடந்த உடனே கிளம்ப கூடாது ......தாய் ,தந்தை வீட்டில் தங்கி இருந்துட்டு மூன்றாம் நாள் தான் சீர் வரிசையோடு கிளம்பணும் .....மூன்றாம் நாள் உங்க கூடவே நாங்களும் வரோம் ....."என்றார் ராமராஜு .
எவ்வளவூ மறுத்து கூறியும் அவர்கள் விடவில்லை ....விஜய்க்கும் ,மதுராவிற்கும் நடந்து முடிந்ததை ஜீரணிக்க டைம் தேவை பட்டது .இதில் விஜய் மேல் தவறு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை .அவன் மாலையோடு மாங்கல்யம் இருந்ததை கவனித்து இருந்தால் நிச்சயம் அதை மதுரா கழுத்தில் போட்டே இருக்க மாட்டான் தான் ...ஆனால் விதி .........
அவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதை தவிர இருவருக்கும் வேறு வழி இருக்கவில்லை .அவர்கள் சாஸ்திரம் ,சம்ப்ரதாயம் படி இன்னும் செய்ய வேண்டிய பூஜை ,திருமண சடங்குகள் எல்லாம் இருவரும் செய்தனர் .தன் வீட்டு பெண்ணின் திருமணம் போலே ஓடியாடி வேலை செய்தார் ராமராஜு .புரியாத பாஷை ,தெரியாத சடங்குகள் தான் என்றாலும் திருமணம் என்பது எங்கேயும் ஒன்று தானே .காதலித்தவர்கள் வேறு ,மனம் ஒன்றி தான் எல்லா சடங்குகளையும் செய்தார்கள் .
அங்கு இருந்த அறைக்குள் மதுராவை அழைத்து சென்றவர்கள் ஆந்திரா மக்கள் முறைப்படி திருமணத்தின் போது கட்டும் சிகப்பு பார்டர் வைத்த ,வெள்ளை நிற புடவையை கொடுத்து ,கட்டி அழைத்து வந்தனர் .
ஏற்கனவே வேட்டி சட்டையில் கம்பீரமாய் இருந்த விஜய் ,மணமேடையில் அமர்ந்து இருக்க ,ஐயர் கூறிய மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான்
மதுராவை மூங்கில் கூடையில் அமர வைத்து ,ராமராஜு அவர் உறவினர்கள் மதுராவை கன்யாதானம் செய்ய கையில் இளநீர் கொடுத்து தூக்கி வந்தனர் .ஏற்கனவே திருமாங்கல்யம் சூட்ட பட்டு இருந்தாலும் ,இவை எல்லாம் விட்டு போய் இருந்த படியால் ,இந்த சடங்குகள் செய்ய பட்டன .
"தர்மேக அர்த்தக காமேஷ மோக்க்ஷேக நடி காரமி "என்ற ஸ்லோகத்தை விஜய் மூன்று முறை சொல்ல ,மதுராவின் தந்தை ஸ்தானத்தில் இருந்த ராமராஜுவுக்கு மூன்று முறை உங்கள் மகளின் சுகம் ,துக்கம் யாவிலும் துணை இருப்பேன் என்று வாக்குறுதி கொடுப்பதாய் அந்த மந்திரம் சொன்னது .
அடுத்து பணிகிரஹம் என்ற சடங்கில் மதுராவின் கை பிடித்து ,"கடவுள் உன்னை என் இல்லறத்திற்கு கொடுத்து இருக்கிறார் .நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாது இருப்போமாக "என்ற உறுதிமொழி கொடுத்தான் .
இருவருக்கு நடுவில் வெள்ளை திரை ஒன்றில் ஸ்வஸ்திகா ராமராஜு வரைந்து வைக்க ,விஜய் மதுராவின் நடுவே அந்த துணி திரையாக பிடிக்க பட ,புரோகிதர் இருவரிடமும் வெற்றிலையில் வெல்லம் ,ஜீரகம் கலந்த ஜீரகபெல்லம் என்று அழைக்க பட்ட அந்த மங்கள பொருளை கொடுத்து இருவரையும் மற்றவர் தலை உச்சியில் வைக்க சொன்னார் .
நம் உடம்பின் படி அது ஆதி சக்ர ஸ்தானம் .ஜீரகம் ,வெல்லம் ,வெற்றிலை கலந்த கலவை அங்கு வைக்க படும் போது கெமிக்கல் ரியாக்ஷன் நடந்து ஆணும் ,பெண்ணும் இவனுக்கு இவள் ,இவளுக்கு இவன் என்ற பந்த பிணைப்பு ஏற்படுகிறதாம் .இவை தூண்டப்படும் போது தான் "லவ் அட் 1ஸ்ட் சைட் "/love at 1st sight -முதல் பார்வையில் காதல் வயப்படுவது நடப்பதாக ஸ்ரீ பாட்டி விளக்கினார் .
தலையில் ஜீரகபெல்லம் வைக்க பட்டதும் திரை விலக்கப்பட ,விஜய் ,மதுரா ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ,ஒரு புது வித சிலிர்ப்பு இருவருக்குள்ளும் ஓடியது .இங்கு உருவாகும் இந்த பந்தமானது என்றுமே உடைக்கமுடியாதது ,என்றுமே பிரியாதது என்று விளக்கினார் நரசிம்ம ரெட்டி .காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் சடங்கு ,சம்பிரதாயங்களை உருவாக்கவில்லை என்று அந்த கணம் புரிந்தது இருவருக்கும் புரிந்தது .
மங்கள சூத்திர தாரணம் ஏற்கனவே முடிந்து இருந்ததால் ,விஜய் ,மதுரா மாலை மாற்றி கொள்ள அங்கு தம்பதி சமேதராய் இருந்த இல்லறவாசிகள் இவர்களின் மேல் அட்சதை போட்டு "ஒருவரை ஒருவர் நீங்காமல் நூறு ஆண்டு எல்லா செல்வமும் ,வளமும் பெற்று வாழ்க "என்று வாழ்த்தினார்கள் .