வணக்கம் @*********** சகோதரி,Hi ஆதிரா சிஸ்
<<<<<<<<<<<<<<முதலில், உங்களது கதைக்கு நல்ல ரீச் என நீங்கள் சொல்லி நாங்கள் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..>>>>>>>>>>>>>>>> நான் ரீச் எனச் சொல்லி இருப்பது என் எதிர்பார்ப்பின் அளவிற்கு அது சென்று சேர்ந்தது என்பதைத்தான்.
குறவர்களைப் பார்த்தால் முன்பு போல் அருவருப்பாக் தோன்றவில்லை. உங்கள் கதையை வாசித்த பின் சக மனிதனாய் பார்க்க முடிகிறது என்று ஒரே ஒருவர் சொன்னாலும் என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்ற நிலையில்தான் கதையை கொண்டு வந்ததே இங்கு. அது more than what I wanted has happened.
மத்தபடி நீங்க சொல்ற ரீச் எல்லாம் எனக்கு தெரியாதுமா. நான் அதை சட்டை செய்வது கூட கிடையாது.
(btw காதலாம் பைங்கிளி எப்பி வ்யூஸ் இங்க சைட்ல மட்டும்..1, 56, 889 views காமிக்குது. இப்ப நீங்க சொன்ன பிறகுதான் போய் பார்த்துட்டு வரேன். இதில் முதல் நாலு எப்பி என் சைட்ல பதிவான பின்பு இங்க ரீரன் ஆனது...ஆக என் சைட் வ்யூஸ் வேற தனியா இருக்கும்...
இது தவிர காலேஜ்ல க்ளாஸ் ரூம்ல ஒருத்தர் வாசிக்க மொத்த க்ளாஸும் கேட்டுன்னு வாசிச்ச கதை இது...ஒரு வியூயொன்றது பல ரீடர்ஸையும் குறிக்கும்...
அவங்க ரிவ்யூஃஸ் இங்கயே இருக்குது, அதில இதெல்லாம் சொல்லி இருக்காங்க.
அதோட வோட்டு வாங்கினதாலதான ஆறுதல் பரிசுன்னு இங்கயே அறிவிச்சுருக்காங்க....அதெல்லாம் கூட கவனிக்காம நான் சொன்ன பிறகுதான் ரீச் பத்தி தெரிஞ்சுக்கணும்னு இருந்தீங்க போல.)
<<<<<<<<அந்த ஓட்டு உங்களது கதைக்குத் தான் சரியாக போட்டாங்களா என்பதையும் கேட்டு கொள்ளுங்கள் அக்கா. ...>>>>>>>>>>>> அவங்கதான் ஓட்டே போடலைனு தெளிவா சொல்லி இருக்கனேமா.
வெள்ள நிவாரண பணிக்கு போனாங்க...சிக்னல் இல்லைனு.
கருத்து சொல்றதுக்கு முன்ன plz முழுசா வாசிங்கோ சகோ.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<ஓட்டுக்களை பொறுத்தே இந்த தீர்ப்பு என்பது முற்றிலும் தவறான ஒன்று..>>>>>>>>>>>>>>>>> இது உங்கள் வார்த்தை.
<<<<<<<<<<<<<<<<<<<<
இந்த முடிவுகள் முழுவதுமாக ஓட்டெடுப்பை சார்ந்தவை. அதனை கொண்டு மட்டுமே இந்த முடிவுகள்.
வேறு எந்த சார்புமற்றது, விருப்பு வெறுப்புமற்றது.>>>>>>>>>>>>>>.. இது ***************** மேம் வாத்தை.
நான் எதை உண்மை என எடுக்க வேண்டும்? நீங்கள் சொல்றதையா? அவங்க சொல்றதையா?
அதுதான் ரிசல்ட் எனக் கொடுக்கப்பட்டது. ஆக அதை நம்பி பேசி இருக்கிறேன்.
<<<<<<<<<<<<<<<<<<
நண்டுவை போல அழுத்தமான கதைக்களம் எதிர்பார்த்தோம் எனச் சொன்னார்களே தவிர நண்டுவை போன்றே வேண்டும் என இங்கே சொல்லவில்லையே...
காதலை மையமாய் வைத்து எத்தனையோ அழுத்தமான கதைக்களம் இருக்கிறது சகோ....>>>>>>>>>>>>>
அப்படி ஒரு கதையும் இங்கு வரவில்லை என்றுதான் முதல் பரிசு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் sis.
அப்படி இருக்க மற்ற பரிசுகள் வோட்டு என்பதன் அடிப்படையில்தானே கொடுக்கப் பட்டிருக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறேனே தவிர.... நானும் எதையும் உங்கள் கருத்துக்கு எதிராக சொல்லவில்லையே!
இதை முதலில் தெரிவித்திருக்கலாம் என்பதையும் தெரிவித்திருக்கிறேன். இதில் உங்களுடன் நான் எதில் முரண் படுகிறேன் எனப் புரியவில்லை.
<<<<<<<<<<<<<<<<<
இணைய புகழ் எழுத்தாளரான நீங்கள் இத்தகைய முதல் முயற்சிக்கு பாராட்டாமல் தோள்கொடுக்காமல் இருந்தால் வேறு யார் அக்கா செய்வார்கள்...>>>>>>>>>>>>>>>>>>>>
நான் புகழோட இருக்கேன்னு நான் சொல்லிதான் உங்களுக்கே தெரியுதுன்னு நீங்கதான் சிஸ் சொல்லி இருக்கீங்க... அப்றம் எதுக்குமா நாங்கல்லாம்?
<<<<<<<<<<<<<<<<<<<<<
ரொமான்ஸ் என்ற நான்கு சுவருக்குள் கதைகள் முடங்கி விட்டதாய் சஷி முரளி அவர்கள் சொன்னது பொது கருத்து தானே...அதை ஏன் நாம் எடுத்துக்கொண்டு சுற்ற வேண்டும்...>>>>>>>>>>>>>
அதுப் பொதுக்கருத்துதான் என்றாலும் இந்தக் கருத்தால் எல்லா கதைகளுமே நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப் பட்டிருப்பதால் என் ஒவ்வாமையை தெரிவித்தேன். அவ்வளவே!
<<<<<<<<<<<<<<<<<<
உங்களது மேற்கண்ட கருத்தினைப் படித்தேன்...மனதிற்கு மிகவும் நெருடிய சிலவற்றை பகிர்ந்து கொள்வது தவறில்லையே...>>>>>>>>>>>>
இந்த மனதுக்கு நெருடியவற்றை பேசுவது தவறில்லை என்பது ஆதிரா சிஃஸ்க்கு மட்டுமல்ல
அன்னா ஸ்வீட்டிக்கு கூட பொருந்தும் சகோ...
அதனால் தான் நானும் பதிந்தேன்.
நீங்கள் என்னை பாராட்டி தள்ளி இருப்பதில் இருந்தேஉங்களுக்கு என் மேல் எத்தகைய நட்பு உணர்வு இருக்கிறது எனப் புரிகிறது.
ஆக நான் சொல்ல வந்தது system fault பத்திதானே தவற ரிசல்ட்டையோ சக எழுத்தாளர்களை பத்தியோ இல்லை என்பது புரிவது கடினம்.
ஓட்டு சார்ந்து மட்டுமே முடிவு என ரிசல்ட்டில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.
அப்படியானால் விமர்சனம் எழும் என நீங்களுமே சொல்லி இருக்கிறீர்கள்.
அதே மனக் குறையைதான் நானும் பதிவிட்டிருக்கிறேன்.
என் மேல் உள்ள உங்கள் ஆத்மார்த்த நல்லுணர்வோடு என் பதிவை படிப்பதைக் காட்டிலும் அது எதற்காக பதியப் பட்டதோ அந்த பதிவுகளையும் திருத்தமாக வாசித்தீர்களானால் நன்றாக இருக்கும் sis.
good bye forever
உங்களுக்கு ரீச் எனவும் உங்களது கதைக்கு ரீச் எனவும் நான் சொன்னது எங்கள் தளத்தில் உங்கள் கதை பதியப்பட்டதால் வந்த மகிழ்ச்சியே தான் சகோ.. குதர்க்கமாய் பேச வேண்டும் எனத் தொடங்கினால் அனைத்திலும் வாதிடலாம்...
ஒவ்வொருவருக்கும் தங்களது கதையின் மூலம் கிடைக்கும் மிகப் பெரிய பரிசு அவர்களின் கதை படிக்கிற மக்களின் மனதில் விதைக்கும் தாக்கமே ஆகும்..அப்படி பார்த்தால் மற்றவர்களின் வரையில் நீங்கள் வெற்றியாளர் எனும் போது இந்த தர்க்கம் அதாவது, இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு வந்த நாவல்கள் நண்டு அளவிற்கு இல்லை என நீங்கள் சொல்லிருப்பது எவ்வகை சகோ..?
நாம் எதிர்பார்ப்பது நடக்காவிட்டால் வரும் கோபத்திற்கும் கூட ஒரு வரைமுறை இருக்கிறது...உங்களுக்கு ஏன் முதலிடம் கிடைக்கவில்லை என்ற கேள்வியை முன்வைத்திருந்தால் சபாஷ் போட்டிருக்கலாம் ஆனால் நீங்கள் முன்வைத்தது அவர்களின் கதை கரு நண்டுவை போன்றதா என்பது...
உங்களது ரீச்சையோ, பிரபலத்தையோ நீங்கள் சட்டை செய்வது கிடையாது என்பது உங்களது தன்னடக்கம் சகோ..ஆனால் ஒரு வாசகராய் எங்களுக்கு உங்கள் கதையை படியுங்கள் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் போது நீங்கள் எங்கள் வரையில் ரீச் ஆனவர்களே...
சரி சகோ, இதை மட்டும் எனக்குத் தெளிவுபடுத்துங்கள் உங்கள் கதைக்கு ஓட்டு விழாமலா 162 ஓட்டுகள் விழுந்தது... வெள்ள நிவாரண பணிக்கு போனவர்கள் தவிர அதிக வாசகர்கள் உங்களுக்கு இருந்திருக்கிறார்களே...
உங்களிடம் கருத்து சொல்வதற்கான வயசோ பக்குவமோ எனக்கு கிடையாது அக்கா...எனக்கு என்னத் தோன்றியதோ அதைதான் இங்கே சொன்னேன்...
ஓட்டெடுப்பை சார்ந்தது மட்டும் தான் இத்தேடல் இல்லையென்பதை முதலிலே அறிவித்ததாய் எனக்கு நினைவு இருக்கிறது சகோ..அதே போல எழுத்தாளர் மல்லிகா வண்ணன் கொடுத்த பதிவுக்கு சஷி முரளி அவர்கள் பதில் சொல்லிவிட்டதாய் எனக்கு நினைவு அதையும் கொஞ்சம் பாருங்கள் சகோ...
நண்டுவை போன்ற அழுத்தமான கதை தேடலில் எதிர்பார்த்தோம் எனச் சொல்லி பரிசுகள் கொடுக்காமல் விட்டிருந்தால் அனைவரும் அமைதியாய் சென்றிருப்பார்கள் அப்படி தானே..?
முதல் பரிசை கொடுக்குமளவிற்கு அழுத்தமான கதைக்களம் இங்கில்லை என்பதை மட்டும் தானே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
கதைகளுக்கு கொடுத்த வாசகர்களின் ஓட்டுகளையும், நடுவர்களின் தீர்ப்பையும் சரிபாதியாய் கொண்டே இப்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
இதை சஷி முரளி அவர்கள் இப்பதிவில் விளக்கிவிட்டதாய் நினைக்கிறேன்...
நீங்கள் புகழுடன் இருக்கிறீர்கள் என நீங்கள் சொல்லி அல்ல உங்கள் வாசகர்களில் சிலபேரின் ஆதங்கத்தைப் பார்த்தாலே தெரிகிறது சகோதரி..
அனைத்து கதைகளுமே எங்களால் நிராகரிக்கப்படவில்லை...அப்படி நாங்கள் நிராகரித்தால் தேடலை முன்னெடுத்த SM குழுவினருக்கு தான் குறை என்றாகிவிடாதா...மேலே நான் சொன்னது தான் எங்களை பொறுத்த வரையிலும் இங்கே பதிவிட பதிவிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து கதைகளுமே எங்களுக்கு அதாவது SM குழுமத்தினருக்கு முதன்மையானது தான்...
கதையெழுத தேடல் என்னும் போட்டியை தொடங்கிவிட்டு நாங்களே இதில் கலந்து கொண்ட கதைகள் சிறந்தது அல்ல என எப்படிச் சொல்ல முடியும்..?
அதேபோல மேலே ஒரு எழுத்தாளர் சொன்னது போல, நாங்கள் எழுத்தாளரை தேடவில்லை, எழுத்துக்களையும் கதைக்களங்களையும் மட்டுமே தேடினோம்...
மனதுக்கு நெருடிய கருத்தை நீங்கள் சொல்லலாம் சகோ..ஆனால் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை நண்டுடன் மதிப்பிட்டு அவர்களை குறைத்து எடைப் போட வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து...
தாங்களை நான் புகழ்ந்து தள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதாய் தெரியவில்லை...system default என நீங்கள் இப்பதிவில் போட்டிருப்பது எனக்கு புரியவில்லை..சரி புரியாததை எதற்கு இழுப்பானே...
நீங்கள் போட்டியின் முடிவுகளையோ, மற்ற எழுத்தாளர்களையோ பேசவில்லை என்பது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது சகோ...
ரிசல்ட் வெளியிட்டது எழுத்தாளர் *****************, தேடலை தொடங்கி நடத்தி முடித்திருப்பது சஷி முரளி அவர்கள்... நீங்கள் முடிவை வெளியிட்டவரின் பேச்சை முதன்மை படுத்தியிருக்கீர்கள் சரி, அப்போது எழுத்தாளர் சஷி முரளியின் இந்த விளக்கம் தேவையில்லையோ சகோ..?
திருத்தமாக உங்களது பதிவை வாசித்து பலமுறை சிந்தித்தப்பின் மட்டுமே உங்களுக்கு விளக்கம் கொடுத்தேன் சகோ...
உங்களின் மீது ஆத்மார்த்தமான நல்லுணர்வு கொள்ளுமளவிற்கு நாம் பேசிக் கொண்டதாய் எனக்கு நினைவு இல்லை...உங்களது ஒரு கதையைப் படித்த வாசகியாகவும், அதனால் கொண்ட அன்பாலும் மட்டுமே உங்களிடம் பேச முன்வந்தேன்...
முதலிலேயே ஏன் இந்த விதிமுறைகள் பற்றி பேசவில்லை என்ற பலரது கருத்துக்கு ஒன்றே ஒன்று தான் எனது பதில்..
குழந்தை எடுத்ததும் "அ" சரியாக எழுதிட வேண்டும் என நாம் நினைப்பது அதிகபட்ச ஆசை அல்லது எதிர்பார்ப்பு..கொஞ்சம் கொஞ்சமாய் தான் அதற்கு கை திருந்தும் அதே போல தான் எங்களுக்கும் தேடல் களம் என்பது முற்றிலும் புதிதான ஒன்று...முடித்துவிட்டோம்..இனி அதன் நிறை குறைகளை அலசி பின் அடுத்தக்கட்ட தேடல் போட்டி நடத்துவோம்...
ஓட்டெடுப்பை நகர்த்தி வைத்து நமக்கு நடுவர்களாய் இருக்க முன்வந்த பெரியவர்களை முன்னிருத்தி பாருங்கள்...
நீங்களும் நான் சொல்ல வந்தவைக்கு ஒரு க்கெனா போடாமல் படித்தால் மகிழ்ச்சி சகோ...
Welcome forever