sakthipriya
SM Exclusive
அன்புசெல்வியின் கண்கள் கலங்கி இருந்தததை பார்த்தவுடன் “சாரி… அன்பு” என்றாள் சௌமியா,
“இட்ஸ் ஒகே மேடம்” என்று அன்புசெல்வி சொன்னதும் மேலும் அதை நினைவுப்படுத்த விரும்பாமல் “அன்பு… நாம் வாங்கிட்டு போகிற கிப்ட்ஸ் எல்லாம் போதுமா?” என்றாள் சௌமியா.
“போதும் மேடம்” என்று அன்பு செல்வி சொல்ல “சரிங்க அன்பு. நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்றாள்.
“அண்ணா… நாம ஹோமுக்கு போயிட்டு வந்ததும், எவ்வளவு நாளுன்னாலும் சரி அவங்கள் பிரண்டு கூடவே இருந்து பார்த்துக்கிற பொறுப்பை அன்புக்கே தரலாமுன்னு இருக்கேன். என்ன நான் சொல்றது சரியா?” என்று அபிப்ராயம் கேட்டாள்.
“நீ சொன்னா சரியாகத்தான் இருக்கும்” என்று ஆதிரையன் சொன்னதும் அவள் அன்புசெல்வியிடம் “அன்பு... உங்களுக்கும் ஒகேதானா?” என்றாள்.
“மேடம். இதைப்பத்தி நானே கேட்கலாமுன்னு இருந்தேன். ரொம்ப நன்றி மேடம்” என்று சொல்லி புன்னகைதாள்.
“எல்லாம் ஓகேதான் ஆனா அடிக்கடி மேடமுன்னு சொல்லாதீங்க” என்றதும் சரிங்க என்று அன்பு செல்வி சம்மதிக்க “இப்படி கூட கூப்பிடுங்க” என்றாள்.
கருணை மலர்கள் இல்லத்தை கார் அடைந்துவிட ஹாரன் அடித்தான் ஆதிரையன்.
காவாளி கேட்டைத் திறக்க கார் உள்ளே சென்று நின்றது.
காரை உள்ளே சென்று ஆதிரையன் நிறுத்த சௌமியா காரை விட்டு வெளியே வந்து நின்றபொழுது பின் சீட் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அன்புசெல்வி யாரையோ அழைத்துக் கொண்டு இருந்தாள்.
“அன்பு… நீ வந்திட்டியா? உங்களுக்கு ஏதோ ஆக்சிடென்ட்ன்னு மதர் சொன்னாங்க. இந்து எப்படி இருக்காள்?”‘என்று கேட்டபடி அவள் தோழிகள் ரஞ்சனியும், மேரியும் வர அவர்களுடன் சில சின்ன பெண்களும் வந்தாள்.
“எனக்கு ஒன்றும் ஆகலைப்பா. நம்ம இந்துவுக்குதான் கொஞ்சம் அடிபட்டிருக்கு, அதைப் பத்தி நான் அப்புறமாக சொல்றேன். இவங்கள நம்ம ஹோமுக்கு கிப்ட், சாக்லேட் தர வந்திருக்காங்க அதனால் நீ ஹோமுல இருக்கறவங்களை பிரேயர் ஹால்ல அசம்பிள் செய்” என்றாள்
“சரிக்கா நான் அப்படியே செய்கிறேன்” என்று ரஞ்சனி சென்றுவிட்டாள்.
“ஏய்… வள்ளி… ஏய்… பிள்ளைகளா… இங்க வாங்க இந்த கிப்ட்டை எல்லாம் எடுத்துட்டு போயி ஹால்ல வைங்க” என்று கட்டளையிட்டாள் அன்புசெல்வி.
“சரிக்கா” என்று அவர்கள் கிப்ட்களை எடுத்துச் செல்ல “மேரி… நீ ஹாலுக்கு போயிடு. நான் இவங்களை மதர்கிட்ட கூட்டிட்டு போயிட்டு அப்படியே நான் அங்கிருந்து வந்திடறேன்” என்றாள்.
சரி என்று “வாங்க புள்ளைகளா நாம போகலாம்” என்று அழைத்துக் கொண்டு சென்றாள் மேரி.
“சௌமியா மேடம்… வாங்க போகலாம். சார் நீங்களும்தான்” என்று அவள் அழைக்க அவள் பின்னே சென்றனர்.
மதரின் அறைக்குள் செல்ல “வாங்க சார்… வாம்மா சௌமியா… நானே உங்களை அழைக்க வரலாமுன்னு கிளம்பிட்டுதான் இருந்தேன். நீங்களே வந்துட்டிங்க” என்றார் மதர்.
“மதர் உங்களை தேடி நாங்கதான் வரனும்” என்றாள் சௌமியா.
“மதர்… இவங்க நம்ம ஹோமுல இருக்கறவங்களுக்கு கிப்ட் கொண்டு வந்திருக்காங்க. ரஞ்சனியையும், மேரியையும் எல்லாரையும் ஹால்ல அசம்பிள் பன்னச் சொல்லியிருக்கேன். கிப்ட்களை ஹாலுக்கே கொண்டு போக சொல்லிட்டேன். ஹாலுக்கு வரமுடியாதவங்களுக்கு அப்புறமாக அவங்க இடத்திலேயே கொண்டு போயி தந்திடலாம் மதர்.” என்றாள் அன்புசெல்வி.
“சரிம்மா… அப்படியே செய்யலாம். நீங்க வேற திரும்பி ஊருக்கு போகனும். எல்லாரும் அசம்பிள் ஆயிருப்பாங்க. வாங்க ஹாலுக்கு போகலாம்” என்றார் மதர்.
மதர் முன்னே செல்ல அவர்களுடன் சௌமியா, ஆதிரையன் உடன் செல்ல அன்பு செல்வியும் பின்னே வந்துக் கொண்டிருந்தாள்.
பிரேயர் ஹாலை அவர்கள் அடைந்த பொழுது இருபது வயதுக்குட்பட்ட பல்வேறு வயதில் பெண் குழந்தைகள், சிறுவர்கள், வயதான முதியவர்கள், பாட்டிகள் எல்லோருமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கே இருந்தனர்.
மதரைப் பார்த்து அவர்கள் எழுந்து நிற்க அவர்கள் நடுவே சௌமியா, ஆதிரையன் உடன் செல்ல அன்பு செல்வியும் சென்று மையப்பகுதியை அடைந்தார்கள்.
சௌமியா, ஆதிரையன் இருவரையும் முன்னே நிறுத்தினார்.
“இன்னிக்கு செல்வி.சௌமியா அவர்களுக்கு பிறந்தநாள் அதனால நமக்கு எல்லாம் கிப்ட் தர அவரும், அவர் அண்ணன் திரு.ஆதிரையன் சாரும் வந்திருக்காங்க. அவங்க நல்லா இருக்கனுமுன்னு ஆண்டவனை பிரார்த்தனை செய்யலாம்” என்றார் மதர்.
மதர் சொன்னவுடன் அனைவரும் சில நிமிடங்கள் கண்மூடியப்டி அவர்கள் கைகளை கூப்பி கும்பிட்டனர்.
“கண்களை திறங்க” என்றதும் அனைவரும் கண்களை திறந்தவுடன் மதர் “சௌமியா… ஆரம்பிச்சு வைம்மா” என்றார் மதர்.
அவள் கொடுக்க ஆரம்பிக்க மற்றவர்களும் வந்து உதவி செய்ய அனைவருக்கும் எல்லாம் சில நிமிடங்களில் சேர்ந்தது.
Last edited: