sakthipriya
SM Exclusive
அன்புசெல்வியோ நேரே ஐ.சி.யூ வார்டுக்கு சென்றதும் “வாங்க அன்பு… மேடம் சொன்னாங்க. நீங்க இங்க அமர்ந்து உங்க டூட்டிய பாக்கலாம். நான் உங்களுக்கு ஹெல்ப்பா இங்கதான் இருப்பேன். உங்களுக்கு எதுன்னாலும் சரிகான்னு கூப்பபிடுங்க. நான் உடனே வர்றேன்” என்று அவள் இடத்தை காட்டிவிட்டு சென்றாள்.
“தாங்க்ஸ் சரிகா” என்றவள் நேரே தன் தோழியின் படுக்கைக்கு அருகில் நின்று கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைப் போல் இருக்கும் இந்துமதியை வருடி விட்டு அவள் கைகளில் முத்தமிட்டாள்.
அன்பு செல்வி பின் ஐ.சி.யூ வார்டில் இருக்கும் அனைவரையும் பார்த்து விட்டு வந்து இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
ஜெயகாந்தன் வழக்கம் போல் விசிட்டுக்கு வந்தான். அன்புசெல்வி உடன் சென்று அருகில் நின்றாள்.
“சௌமியா உங்கள இங்க அப்பாயின்ட் பன்னிட்டதா சொன்னா. குட்… கேரி ஆன்” என்றவன் இந்துவை பரிசோதித்து விட்டு ரிப்போர்ட்டை பார்த்து விட்டு சென்றான்.
அன்பு செல்வி தன் தோழியின் மீது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கவனமாகவே கவனிக்க ஆரம்பித்தாள்.
சரிகா அவளிடம் வந்து “அன்பு நீங்க போயி சாப்பிட்டு வாங்க” என்றதும் சரி என்று சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்தாள்.
“அன்பு கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் சாப்பிட்டு வர்றேன்” என்று சரிகா கேட்க சரி என்று தலையசைத்தாள்.
சில நிமிடங்களில் சௌமியா தன் இறுதி விசிட்டிற்காக வந்தாள்.
அன்பு செல்வியை பார்த்த அவள் “அன்பு… சரிகா எங்க?” என்றாள்.
“மேடம்… அவங்க இப்பதான் சாப்பிட போனாங்க” என்று பதில் சொன்னாள்.
“சரி அன்பு… ஜெயகாந்தன் சார் வந்துட்டு போயிட்டரா?”
“ம் இப்பதான் பார்த்துட்டு போனாரு மேடம்” என்றாள் அன்புசெல்வி.
“அன்பு… எங்க மெடிக்கல் டீரிட்மென்ட்ட விட உங்க அன்புக்குதான் அவங்கள் விழிக்க வைக்கிற பவர் அதிகமாக இருக்கும். சோ நாளைக்கு ஈவினிங் அவங்க கண் விழிச்சிடலாமுன்னு நான் நம்பறேன்” என்றாள் சௌமியா.
“உங்க வாக்கு பலிக்கட்டும் மேடம்” என்று சொன்னாள் அன்புசெல்வி. சரிகா உள்ளே வந்தாள்.
“வா சரிகா… இன்னிக்கு உன் டூட்டியா? “என்றாள் சௌமியா.
“ஆமா மேடம்” என்று அவள் சொல்ல “சரிகா எதுன்னாலும் நீ எனக்கும், ஜெயகாந்தன் சாருக்கும் உடனே இன்பார்ம் செய். இன்னிக்கு நைட்டுக்கு முரளி சார்தான் அவருக்கும் தகவல் கொடு” என்றதும் சரி என்றாள்.
“சரி அன்பு நான் நாளைக்கு காலையில வர்றேன். சரிகா உங்களுக்கு ஹெல்ப்பா இருப்பாங்க. குட் நைட் அன்பு. குட் நைட் சரிகா” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
சௌமியா சென்றபின் தன் தோழியின் அருகில் சென்று அவள் காதுகளில் “ஏய்! இந்து எந்திரிச்சுக்கோடி. உன் அன்பு அக்காவ பாருடி. அன்பு அக்கா! அன்பு அக்கா! என்று சொல்லுவியே. எந்திரிச்சுக்கோடி. எனக்கு நம்பிக்கை இருக்கு நாளைக்கு எழுந்திரிச்சுடுவ” என்று சொல்லிவிட்டு தலை வருடிவிட்டு கைகளை வருடிவிட்டு வந்தாள்.
“அன்பு… பாருங்க… அவங்க கால் விரல்கள் அசையுது” என்றாள் சரிகா.
“எங்க சரிகா?” என்று கால் விரல்களைப் பார்த்தாள்.
இந்துவின் இடது கால் விரல்கள் துடித்தன.
“தாங்க் காட்” என்று அதையே சில நிமிடங்கள் பார்த்தவள் மழையை பார்த்த நிலம் போல் பூரித்து நின்றாள்.
“தாங்க்ஸ் சரிகா” என்றவள் நேரே தன் தோழியின் படுக்கைக்கு அருகில் நின்று கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைப் போல் இருக்கும் இந்துமதியை வருடி விட்டு அவள் கைகளில் முத்தமிட்டாள்.
அன்பு செல்வி பின் ஐ.சி.யூ வார்டில் இருக்கும் அனைவரையும் பார்த்து விட்டு வந்து இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
ஜெயகாந்தன் வழக்கம் போல் விசிட்டுக்கு வந்தான். அன்புசெல்வி உடன் சென்று அருகில் நின்றாள்.
“சௌமியா உங்கள இங்க அப்பாயின்ட் பன்னிட்டதா சொன்னா. குட்… கேரி ஆன்” என்றவன் இந்துவை பரிசோதித்து விட்டு ரிப்போர்ட்டை பார்த்து விட்டு சென்றான்.
அன்பு செல்வி தன் தோழியின் மீது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கவனமாகவே கவனிக்க ஆரம்பித்தாள்.
சரிகா அவளிடம் வந்து “அன்பு நீங்க போயி சாப்பிட்டு வாங்க” என்றதும் சரி என்று சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்தாள்.
“அன்பு கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் சாப்பிட்டு வர்றேன்” என்று சரிகா கேட்க சரி என்று தலையசைத்தாள்.
சில நிமிடங்களில் சௌமியா தன் இறுதி விசிட்டிற்காக வந்தாள்.
அன்பு செல்வியை பார்த்த அவள் “அன்பு… சரிகா எங்க?” என்றாள்.
“மேடம்… அவங்க இப்பதான் சாப்பிட போனாங்க” என்று பதில் சொன்னாள்.
“சரி அன்பு… ஜெயகாந்தன் சார் வந்துட்டு போயிட்டரா?”
“ம் இப்பதான் பார்த்துட்டு போனாரு மேடம்” என்றாள் அன்புசெல்வி.
“அன்பு… எங்க மெடிக்கல் டீரிட்மென்ட்ட விட உங்க அன்புக்குதான் அவங்கள் விழிக்க வைக்கிற பவர் அதிகமாக இருக்கும். சோ நாளைக்கு ஈவினிங் அவங்க கண் விழிச்சிடலாமுன்னு நான் நம்பறேன்” என்றாள் சௌமியா.
“உங்க வாக்கு பலிக்கட்டும் மேடம்” என்று சொன்னாள் அன்புசெல்வி. சரிகா உள்ளே வந்தாள்.
“வா சரிகா… இன்னிக்கு உன் டூட்டியா? “என்றாள் சௌமியா.
“ஆமா மேடம்” என்று அவள் சொல்ல “சரிகா எதுன்னாலும் நீ எனக்கும், ஜெயகாந்தன் சாருக்கும் உடனே இன்பார்ம் செய். இன்னிக்கு நைட்டுக்கு முரளி சார்தான் அவருக்கும் தகவல் கொடு” என்றதும் சரி என்றாள்.
“சரி அன்பு நான் நாளைக்கு காலையில வர்றேன். சரிகா உங்களுக்கு ஹெல்ப்பா இருப்பாங்க. குட் நைட் அன்பு. குட் நைட் சரிகா” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
சௌமியா சென்றபின் தன் தோழியின் அருகில் சென்று அவள் காதுகளில் “ஏய்! இந்து எந்திரிச்சுக்கோடி. உன் அன்பு அக்காவ பாருடி. அன்பு அக்கா! அன்பு அக்கா! என்று சொல்லுவியே. எந்திரிச்சுக்கோடி. எனக்கு நம்பிக்கை இருக்கு நாளைக்கு எழுந்திரிச்சுடுவ” என்று சொல்லிவிட்டு தலை வருடிவிட்டு கைகளை வருடிவிட்டு வந்தாள்.
“அன்பு… பாருங்க… அவங்க கால் விரல்கள் அசையுது” என்றாள் சரிகா.
“எங்க சரிகா?” என்று கால் விரல்களைப் பார்த்தாள்.
இந்துவின் இடது கால் விரல்கள் துடித்தன.
“தாங்க் காட்” என்று அதையே சில நிமிடங்கள் பார்த்தவள் மழையை பார்த்த நிலம் போல் பூரித்து நின்றாள்.