• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thedi vantha devathiye_05 part 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore

View attachment 576'

அத்தியாயம்-5
அன்புசெல்வியோ நேரே ஐ.சி.யூ வார்டுக்கு சென்றதும் “வாங்க அன்பு… மேடம் சொன்னாங்க. நீங்க இங்க அமர்ந்து உங்க டூட்டிய பாக்கலாம். நான் உங்களுக்கு ஹெல்ப்பா இங்கதான் இருப்பேன். உங்களுக்கு எதுன்னாலும் சரிகான்னு கூப்பபிடுங்க. நான் உடனே வர்றேன்” என்று அவள் இடத்தை காட்டிவிட்டு சென்றாள்.

“தாங்க்ஸ் சரிகா” என்றவள் நேரே தன் தோழியின் படுக்கைக்கு அருகில் நின்று கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைப் போல் இருக்கும் இந்துமதியை வருடி விட்டு அவள் கைகளில் முத்தமிட்டாள்.

அன்பு செல்வி பின் ஐ.சி.யூ வார்டில் இருக்கும் அனைவரையும் பார்த்து விட்டு வந்து இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

ஜெயகாந்தன் வழக்கம் போல் விசிட்டுக்கு வந்தான். அன்புசெல்வி உடன் சென்று அருகில் நின்றாள்.

“சௌமியா உங்கள இங்க அப்பாயின்ட் பன்னிட்டதா சொன்னா. குட்… கேரி ஆன்” என்றவன் இந்துவை பரிசோதித்து விட்டு ரிப்போர்ட்டை பார்த்து விட்டு சென்றான்.

அன்பு செல்வி தன் தோழியின் மீது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கவனமாகவே கவனிக்க ஆரம்பித்தாள்.

சரிகா அவளிடம் வந்து “அன்பு நீங்க போயி சாப்பிட்டு வாங்க” என்றதும் சரி என்று சாப்பிட்டு விட்டு வந்து அமர்ந்தாள்.

“அன்பு கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் சாப்பிட்டு வர்றேன்” என்று சரிகா கேட்க சரி என்று தலையசைத்தாள்.

சில நிமிடங்களில் சௌமியா தன் இறுதி விசிட்டிற்காக வந்தாள்.
அன்பு செல்வியை பார்த்த அவள் “அன்பு… சரிகா எங்க?” என்றாள்.

“மேடம்… அவங்க இப்பதான் சாப்பிட போனாங்க” என்று பதில் சொன்னாள்.

“சரி அன்பு… ஜெயகாந்தன் சார் வந்துட்டு போயிட்டரா?”

“ம் இப்பதான் பார்த்துட்டு போனாரு மேடம்” என்றாள் அன்புசெல்வி.

“அன்பு… எங்க மெடிக்கல் டீரிட்மென்ட்ட விட உங்க அன்புக்குதான் அவங்கள் விழிக்க வைக்கிற பவர் அதிகமாக இருக்கும். சோ நாளைக்கு ஈவினிங் அவங்க கண் விழிச்சிடலாமுன்னு நான் நம்பறேன்” என்றாள் சௌமியா.

“உங்க வாக்கு பலிக்கட்டும் மேடம்” என்று சொன்னாள் அன்புசெல்வி. சரிகா உள்ளே வந்தாள்.
“வா சரிகா… இன்னிக்கு உன் டூட்டியா? “என்றாள் சௌமியா.

“ஆமா மேடம்” என்று அவள் சொல்ல “சரிகா எதுன்னாலும் நீ எனக்கும், ஜெயகாந்தன் சாருக்கும் உடனே இன்பார்ம் செய். இன்னிக்கு நைட்டுக்கு முரளி சார்தான் அவருக்கும் தகவல் கொடு” என்றதும் சரி என்றாள்.

“சரி அன்பு நான் நாளைக்கு காலையில வர்றேன். சரிகா உங்களுக்கு ஹெல்ப்பா இருப்பாங்க. குட் நைட் அன்பு. குட் நைட் சரிகா” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சௌமியா சென்றபின் தன் தோழியின் அருகில் சென்று அவள் காதுகளில் “ஏய்! இந்து எந்திரிச்சுக்கோடி. உன் அன்பு அக்காவ பாருடி. அன்பு அக்கா! அன்பு அக்கா! என்று சொல்லுவியே. எந்திரிச்சுக்கோடி. எனக்கு நம்பிக்கை இருக்கு நாளைக்கு எழுந்திரிச்சுடுவ” என்று சொல்லிவிட்டு தலை வருடிவிட்டு கைகளை வருடிவிட்டு வந்தாள்.

“அன்பு… பாருங்க… அவங்க கால் விரல்கள் அசையுது” என்றாள் சரிகா.

“எங்க சரிகா?” என்று கால் விரல்களைப் பார்த்தாள்.

இந்துவின் இடது கால் விரல்கள் துடித்தன.

“தாங்க் காட்” என்று அதையே சில நிமிடங்கள் பார்த்தவள் மழையை பார்த்த நிலம் போல் பூரித்து நின்றாள்.
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
இரவு பத்து மணியளவில் டாக்டர் முரளி பார்க்க வந்தார்.

“சார் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அவங்களின் இடது கால் விரல்கள் சில நொடிகள் துடித்தது. உங்களின் கூப்பிடலாமுன்னு நினைக்கிறதுக்குள்ளே நின்னுருச்சு சார்” என்றாள் சரிகா.

“இது நல்ல சிம்ப்டம்தான். “ என்ற அவர் அவள் கண்களை திறந்து பார்த்துவிட்டு “கேர்புல்லாக வாட்ச் பன்னுங்க. எதுன்னாலும் என்னை உடனே கூப்பிடுங்க” என்று சொல்லி விட்டு சென்றார்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு சௌமியா வந்து நின்றாள்.

“குட்மார்னிங் மேடம்” என்று அன்புசெல்வியுடன் சரிகா சொல்ல பதிலுக்கு அவளும் “குட்மார்னிங்” என்றாள்.

“மேடம்… ஒரு குட் நியுஸ், நேத்து நைட் இந்துவோட இடது கால் விரல்கள் துடிச்சது. தெரியுமா?” என்றாள் அன்புசெல்வி.

“குட்! இது குட் சிம்ப்டம். இனி அவங்களுக்கு சீக்கிரமே சரி ஆயிடும்” என்றாள் சௌமியா.

காலை டூட்டிக்கு விமலா வர “சரி அன்பு நீங்க போகலாம்” என்று சௌமியா சொல்ல “மேடம் நான்… நான்… நான்….” என்று இழுத்தாள்.

“அன்பு… நீங்க கிளம்புங்க. உங்களுக்கு ரெஸ்ட் தேவை.” என்றதும் சரி மேடம் என்று அவள் கிளம்பும்முன் தோழியை பார்த்து அவள் தலை வருடி விட்டு திரும்பினாள்.

“அன்பு… அன்பு… அவங்க கண் இமைகள் துடிக்குது பாருங்க. சீக்கிரம் பாருங்க” என்று அலறினாள் சௌமியா. அன்பு செல்வி சட்டென்று திரும்பி பார்த்தாள்.

இந்துமதியின் கண் இமைகள் துடித்தது. அவள் கை விரல்கள் அசைந்தன.

அவள் சட்டென்று கண் திறந்து பார்த்துவிட்டு சட்டென்று மூடிக் கொண்டாள்.

“மேடம்… மேடம்… இந்து… இந்து…” என்று அன்பு சந்தோசத்தில் பேச இயலாமல் திக்கி திக்கி திண்றினாள்.

“அன்பு கூல்...கூல்…” என்றவள் “நான் பார்த்தேன். நான் சொன்னேனில்ல. நீங்கள் இந்த சந்தோசத்தோட போயி ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. “என்றாள் சௌமியா.

“மேடம் அவள் கண்ணு முழிச்சி எழுந்து விட்டால்?” என்று அவள் வருத்தத்துடன் கேட்டாள்.

“அடுத்த நிமிடமே உங்களை எழுப்புகிறேன்” என்றதும் சரி என்று சென்றாள்.

ஜெயகாந்தன் தன் விசிட்டை முடித்துவிட்டு வந்து அமர்ந்தான். சௌமியா உள்ளே வந்தாள்.

“வா சௌமியா” என்று வரவேற்க “உங்களுக்கு விஷயம் தெரியுமா? இன்னிக்கு காலையில் இந்துவோட கண் இமைகள் துடிச்சது. கை,கால் விரல்கள் துடிச்சது. ஒருமுறை கண்களை திறந்து மூடுனாங்க. நானே பார்த்தேன்”என்றாள் சௌமியா.

“இசிட்…! இட்ஸ் பிளசர் நியூஸ். குட் இம்புருவென்ட்” என்றான் ஜெயகாந்தன்.

“இதுக்கு எல்லாம் என்ன காரணமுன்னு நினைக்கிறீங்க? அன்புசெல்வியோட அன்புதான் காரணம். அன்புக்கு தான் எத்தனை சக்தி பாருங்க…. நீங்கள் கண்டிப்பா பாருங்க. இன்னிக்கோ இல்லை நாளைக்கோ இந்து எழுந்துடுவாங்க பாருங்க.” என்றாள் சௌமியா.

“ஆமாம் சௌமியா ரிப்போர்ட்ஸ் பார்த்தேன். இம்புருவ்மென்ட்ஸ் இருந்தது.” என்றவன் மனதில் மத்தவங்களின் அன்பை எல்லாம் புரிஞ்சுக்கற சௌமியா ஆனால் என்னோட காதலை நீ எப்பதான் புரிஞ்சுக்கப் போறியோ?” என்று நினைத்தான்.

“சௌமியா, காதலுக்கும் அதேமாதிரி சக்தி உண்டு” என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தான்.

“ம்… நான் அதை ஏத்துக்கிறேன்” என்றதும் தன் காதலை சொல்லி விடலாமான்னு நினைக்கும்வேளையில் “ஆனால் நான் அப்படி ஒரு காதலை என் வாழ்க்கையில் பார்க்கலை. எனக்கு தெரிஞ்சு அண்ணாவும் சரி, அப்பாவும் சரி காதலால் ஏமாந்துதான் இருக்காங்க. காதல் தோல்வியால் சூசைட் அட்டெம்ப்ட் பன்னவங்கள், தற்கொலை பன்னிகிட்டவங்கள், ஒன் சைட் லவ்வால பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் என்று சொல்லிகிட்டே போகலாம்” என்றாள்.

“சௌமியா அதையும் மீறி எத்தனையோ பேர் ஜெயித்து சக்சஸ்புல்லாக வாழறாங்க. காதலிக்காக இல்லை காதலனுக்காக சாதிச்சவங்கள் பல பேர் இருக்காங்க. வீட்டில் உதவாக்கரைன்னு சொன்ன பலபேர் காதலியால் ஜெயிச்சிருக்காங்க. ஏன் பலபேர் வாழ்க்கை கூட அப்டர் லவ் மேரரேஜ் ஸ்டார்ட் ஆயிருக்கு. “

“நான் இல்லைன்னு சொல்லலை. விஜய் டிவில கலக்குற ரோபோ சங்கர், மா.க.ப. ஆனந்த் எல்லாம் மேடையில் அதைச் சொல்லி அழுதிருக்காங்க. நான் அப்படி ஒரு காதலை என் கண் முன்னால் பார்க்கலைஅதனால் இந்த விஷயத்துல என் பதில் நெகட்டிவ். நான் காதலுக்கு எதிரியில்லை. அது எனக்கு வேண்டாம் அவ்வளவுதான்”

“டாக்டர்… அந்த 10ம் நம்பர் ரூம் பேசண்ட் வலியால் துடிக்கிறாங்க” என்று நர்ஸ் சொல்ல “இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு அவன் அகன்றான்.

சௌமியாவுக்கும் வெளி நோயாளிகள் வர அவளும் அதில் முழ்கி விட்டாள்.

மாலை வேளையில் அன்பு செல்வி வந்து “குட் ஈவினிங் மேடம்” என்றாள்.

“வாங்க அன்பு... இப்பதான் ஐ.சி.யூ. வார்டுக்கு விசிட் போகலாமுன்னு நினைச்சேன். நீங்களே வர்றீங்க” என்று சொல்ல சரி என்று சொல்ல அன்பு சரி என்று ஆமோதித்தாள்.

அன்பு செல்வியும், சௌமியாவும் பேசிக் கொண்டே ஐ.சி.யூ வார்டுக்கு சென்றனர்.

“குட் ஈவினிங் சௌமியா” என்று குரல் கேட்க திரும்பி பார்த்தாள்.

அவள் அண்ணன் ஆதிரையனும், இளந்திரையனும் பின்னே வந்துக் கொண்டு இருந்தனர்.

“அண்ணா…!” என்றழைத்தபடி அருகில் சென்று நின்றவளிடம் “ஒண்ணுமில்லைமா. நான் வழியில இளாவை பார்த்தேன். அவன் இந்துவை பார்க்க போறதாக சொன்னான். சரி நம்மளும் ஒருதரம் பாத்துட்டு வரலாமுன்னு வந்துட்டேன்” என்றான் அண்ணன்.
 




Last edited:

mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
தாங்க்ஸ் சரிகா” என்றவள் நேரே தன் தோழியின் படுக்கைக்கு அருகில் நின்று கண் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைப் போல் இருக்கும் இந்துமதியை வருடி விட்டு அவள் கைகளில் முத்தமிட்டாள்.
NICE FRIENDSHIP
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
சௌமியா சென்றபின் தன் தோழியின் அருகில் சென்று அவள் காதுகளில் “ஏய்! இந்து எந்திரிச்சுக்கோடி. உன் அன்பு அக்காவ பாருடி. அன்பு அக்கா! அன்பு அக்கா! என்று சொல்லுவியே. எந்திரிச்சுக்கோடி. எனக்கு நம்பிக்கை இருக்கு நாளைக்கு எழுந்திரிச்சுடுவ” என்று சொல்லிவிட்டு தலை வருடிவிட்டு கைகளை வருடிவிட்டு வந்தாள்
NICE
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
“இதுக்கு எல்லாம் என்ன காரணமுன்னு நினைக்கிறீங்க? அன்புசெல்வியோட அன்புதான் காரணம். அன்புக்கு தான் எத்தனை சக்தி பாருங்க…. நீங்க கண்டிப்பா பாருங்க. இன்னிக்கோ, நாளைக்கோ இந்து எழுந்துடுவாங்க பாருங்க.” என்றாள் சௌமியா.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
so jai sowmiya one sidea love panrana :rolleyes::rolleyes:interesting.........indu eppo kanthirappa waiting...... nice epi sis:):)
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
so jai sowmiya one sidea love panrana :rolleyes::rolleyes:interesting.........indu eppo kanthirappa waiting...... nice epi sis:):)
செளமிக்கு காதல் பிடிக்காது சோ காதல சொன்னா பயனில்லை இந்து சீக்கிரம் கண் விழிப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top