sakthipriya
SM Exclusive
அத்தியாயம்-6
மாலதி திரும்பி வந்ததும் அவள் “சிஸ்டர்… இங்க பீஸ் எப்படி வாங்குவாங்க? கம்மியாகவா அல்லது அதிகமாகவா?” என்றாள்.
“சௌமியா மேடம் காசுக்காக இந்த ஹாஸ்பிடலை ரன் பன்னலை. ஏழைகளுக்கும் நல்ல வைத்தியம் கிடைக்கதான் இதை நடத்துறாங்க. நீங்க பில்லை பற்றி கவலைப் பட வேண்டாம்.” என்று சொல்ல சமாதானமானாள் இந்துமதி.
மதியவேளையில் அன்புசெல்வி சீக்கீரமாகவே வந்துவிட்டாள்.
“அக்கா குட் ஆப்டர்நுன்” என்ற தன் தோழியைப் பார்த்து “குட் ஆப்டர்நுன் இந்து” என்று சொல்லியவண்ணம் வந்து அமர்ந்தாள்.
“என்ன இந்து… அக்கா இல்லாமல் போரடிச்சிடுச்சா?” என்று அன்பு செல்வி தோழியைப் பார்த்து கேட்டாள்.
“அப்படி எல்லாம் இல்லை அக்கா. நான் மாலதி அக்கா கூட பேசிட்டு இங்கே இருக்கறதை பார்த்துட்டு உன்னை பற்றி நினைச்சிட்டு இருந்தேன். டைம் போனதே தெரியல். சரி நீ சாப்பிட்டியா அக்கா?” என்றாள்.
“ம்… நான் சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியா?” என்று கேட்டவள் நாக்கை கடித்துக் கொண்டு “உனக்குதான் டிரிப்ஸ் ஏறுதுல்ல” என்றாள்.
ஐ.சி.யூ வார்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
கருணை மலர்கள் இல்ல தலைவி மதர் நிர்மலா மேரியும் உடன் அவர்கள் தோழி ரஞ்சனியும் கதவைத் திறந்துக் கொண்டு வந்தார்கள்.
“வாங்க மதர்… வா ரஞ்சனி…” என்று அன்புசெல்வி கூப்பிட்டபடி வந்தவள் அருகில் வந்த மதர் “காட் பிளஸ் யூ மை சைல்ட்” என்று வாழ்த்தினார்.
மாலதியும் அவர்கள் அருகில் வந்து நிற்க காட் பிளஸ் யூ மை சைல்ட்” என்று அவளையும் வாழ்த்தினார்.
இந்துமதியின் அருகில் மதர் வர அவள் எழுந்து அமர முயல “நோ… நோ… எந்திரிக்காதே.
படும்மா இந்து.” என்று அவள் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டார்கள்.
“இந்து இப்ப எப்படிம்மா இருக்குது? பரவாயில்லையா?” என்று மதர் கேட்டார்.
“எனக்கு என்ன மதர் ஆண்டவன் கிருபையாலும்.உங்களின் ஆசீர்வாதத்தாலும் நான் நல்லா இருக்கேன் மதர்” என்றாள் இந்துமதி.
“சரிம்மா உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்” என்று மதர் சொல்ல “தாங்க்ஸ் மதர்” என்றாள்.
“இந்து… நம்ம ஹோமில் இருக்கற எல்லோரும் வரதாக சொன்னாங்க. மதர்தான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் குணமாகட்டும். ஒருநாள் எல்லாரும் போயி பாக்கலாமுன்னு சொல்லிட்டாங்க.” என்றாள் ரஞ்சனி.
“ஆமாம்மா எல்லாரும் உன்னை பார்க்கனுமுன்னாங்க. நீ வேற ஐ.சி.யூவுல் இருக்கியா அதான் இன்னிக்கு வேண்டாமுன்னு சொல்லிட்டேன்” என்றார் மதர்.
சௌமியா ஐ.சி.யூ வார்டுக்குள் உள்ளே வந்தவள் “இப்பதான் ஹாஸ்பிடலுக்கு வந்தேன். நீங்க வந்திருக்கறதாக சொன்னாங்க. என்னை ஆசீர்வாதம் பன்னுங்க மதர்” என்றாள்.
“காட் பிளஸ் யூ மை சைல்ட்” என்று அவர் கைகளை வைத்து வாழ்த்த “தாங்க்ஸ் மதர்: என்றாள் சௌமியா.
“அப்புறம் மதர் உங்க இந்துவை பூரணமாக சரி பன்னிட்டுதான் உங்க ஹோமுக்கு அனுப்புவேன்” என்றாள்.
“நன்றிம்மா” என்று மதர் சொல்ல “மதர் இதுக்கெல்லாம் நீங்க எனக்கு நன்றி சொல்லக் கூடாது இது என் கடமை. சரிங்க மதர், நான் ரவுண்ட்ஸ் போகனும். நான் இப்ப கிளம்பறேன்” என்று சொல்லி சென்றாள் சௌமியா.
“சரிம்மா. ஆண்டவன் உனக்கு துணையிருக்கட்டும்” என்று வாழ்த்த சௌமியா கிளம்பி சென்றார்.
“ஆண்டவன் உங்க நல்ல மனசுக்கு நல்ல இடத்துலதான் சேர்த்திருக்கிறார்” என்று சொல்ல “ஆமா சௌமியாவுக்கு தங்கமான மனசு” என்றாள் அன்புசெல்வி.
சிறிதுநேரம் மதரும், ரஞ்சனியும் பேசியபின் அவர்கள் “சரிம்மா, நாங்க கிளம்பறோம்.” என்று கிளம்ப “சரிங்க மதர்” என்றாள் இந்துமதி.
“இந்து… நானும் கிளம்பறேன்டி” என்று ரஞ்சனி சொல்ல “சரிடி, ஹோமுல இருக்கற எல்லோரையும் நான் கேட்டதாக சொல்லு” என்றாள்.
“சரிம்மா அன்பு… நாங்க போயிட்டு வர்றோம்” என்று மதர் சொல்ல “சரிங்க மதர்” என்ற அன்புசெல்வி உடனே இந்துமதி பக்கம் திரும்பினாள்.
“இந்து…. நான் மதர் கூட போயிட்டு வர்றேன்” என்று அன்புசெல்வி சொல்ல “சரிக்கா” என்றாள் இந்துமதி.
மதர் கூட சென்று விட்டு திரும்பிய அன்புசெல்வி “மதர் ரொம்ப நல்லவங்க இல்லை” என்று சொல்ல “ஆமாக்கா” என்றாள் இந்துமதி.
“சரிக்கா, நீ எப்ப இங்கே வந்து வேலையில சேர்ந்தே?” என்றாள் இந்துமதி.
“ஏய்…! நான் இங்கே வேலையில சேரலடி. நீ இங்கே இருக்கறவரைக்கும் நர்சாக இருங்கன்னு சௌமியா மேடம் கேட்டாங்கடி. அவங்களும் நம்மகிட்ட ஒரு பைசா வாங்காமல் வைத்தியம் செய்யறாங்க. உன்னையும் பார்த்துக்கிற வேலையும் அதிகம் இல்லையே அதான் நானும் அதுக்கு சரின்னு சொல்லி செய்யறேன்” என்றாள்
Last edited: