sakthipriya
SM Exclusive
அத்தியாயம்-3
“அன்பு.., நீங்களும், மதரும் வாங்க. உள்ளே போயி பார்க்கலாம்” என்ற சௌமியாவின் குரல் கேட்டு அவளைப் பார்த்தாள்.
சௌமியா கதவைத் திறந்து செல்ல பின்னாலேயே அன்பு செல்வியும் மதரும் உள்ளே சென்றனர்.
இந்துமதி ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க அவளின் முகத்தைப் பார்த்த அன்புசெல்வி தன் கரங்களால் தோழியின் தலையையும், கன்னங்களையும் வருடிவிட்டு நின்றாள். மதர் பிரார்த்தனை செய்துவிட்டு ஆசீர்வாதம் செய்தார்.
சில நிமிடங்களில் வெளிவந்த பின்னர் “மதர் அவங்களை நல்லா குணமாக்கி பழைய இந்துமதியாக உங்கள் ஹோமுக்கு சீக்கிரமே அனுப்பிடறேன்” என்றாள் சௌமியா.
“சரிம்மா” என்று அவர்கள் தலையசைக்க “ஆமாம் மதர். நானும் அவள் கூடவே இருந்து அவளைப் பார்த்து கொள்கிறேன்” என்றாள் அன்புசெல்வி.
“அன்பு.., உன்னோட துணி, பொருட்கள் அப்புறம் இந்துவுக்கு தேவையான பொருட்களை எல்லாம் நான் கொடுத்து அனுப்புகிறேன்” என்றார் மதர்.
“அதுக்கு அவசியமில்லை மதர். நானே இன்னிக்கு வரதாக இருந்தேன். நானும் அண்ணாவும் அன்போட ஹோமுக்கு வர்றோம். அவங்களுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் அன்பு எடுத்துக்கட்டும்” என்றாள் சௌமியா.
“சரிம்மா… அப்ப நான் கிளம்புகிறேன்” என்று மதர் கிளம்பிச் சென்றார்கள்.
“மேடம்… நீங்க ஹோமுக்கு போகும்பொழுது சொல்லுங்க. நான் உங்களோட ஜாயின் பன்னிக்கிறேன்” என்றாள். அன்புசெல்வி.
“நாம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே அங்கே போகப் போகிறோம். இப்ப நான் வீட்டுக்கு போயி டிரஸ் மாத்திட்டு வர்றேன் உடனே நாம் கிளம்பறோம்” என்றாள் சௌமியா.
சௌமியாவின் புது பர்த்டே டிரஸ் முழுவதும் ரத்தக் கறை இருந்ததை அன்புசெல்வி கவனித்தாள்
“சாரி மேடம். உங்க பர்த்டே டிரஸ் வீணாகப் போயிடுச்சு” என்றாள் அன்புசெல்வி.
“அன்பு… இந்த பர்த்டே டிரஸ் என் அண்ணா எனக்கு எடுத்து கொடுத்தது அதனால் எனக்கு இம்பார்டன்ட்தான் ஆனால் அதைவிட முக்கியம் உங்க பிரண்டு உயிரு” என்றாள் சௌமியா.
“ஆமா. இதேமாதிரி இன்னொரு டிரஸ் வாங்கிக்கலாங்க அதைப் பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாங்க.” என்றான் ஆதிரையன்.
“உங்க ரெண்டு பேருக்கும் தங்கமான மனசுங்க” என்றாள் அன்புசெல்வி.
“சௌமியா… டாடி கால் பன்னினாரு. எங்கே வர்றீங்கன்னு கேட்டாரு?” என்று கேட்டபடி ஜெயகாந்தன் வந்தான்.
“நான் வீட்டுக்கு போயி டிரஸ் மாத்திட்டு உடனே வர்றேன். இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடறேன்னு சொல்லு” என்றாள் சௌமியா.
“சரி சௌமியா… நான் கிளம்பறேன். நீ மறக்காமல் வந்துடு. இந்த விருந்தே உனக்காகத்தான்” என்றபடி அவன் கிளம்பிச் சென்றான்.
“மேடம்… நீங்கள் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுங்க. நான் அதுவரைக்கும் இங்கேயே நான் வெயிட் பன்றேன். அதுவுமில்லாமல் இந்துவை இங்கே பார்த்துக்க என்னைத் தவிர யாருமில்லை” என்று அன்புசெல்வி சொன்னாள்.
“சரி அன்பு… நான் வீட்டுக்கு போயிட்டு டிரஸ் சேஞ்ச் பன்னிட்டு அவங்களின் வீட்டுக்கு போயிட்டு வந்திடறேன். நான் வந்ததும் ஹோமுக்கு நாம் போயிட்டு வருகிறோம்” என்றாள்.
சௌமியா அண்ணனுக்கு கால் செய்து “அண்ணா… நீ எங்கே இருக்கிறாய்? நீ எங்கே இருந்தாலும் ஹாஸ்பிடல் முன்னால் வந்திடு” என்று சொல்லிக் கொண்டேச் சென்றாள்.
அன்பு செல்வி மறுபடியும் சென்று கண்ணாடித் துவாரம் வழியே தன் தோழியைப் பார்த்துவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள். அவள் அணிந்திருந்த சிலுவையை கையில் எடுத்துப் பார்த்தவள் ஆண்டவனிடம் வேண்டியபடியே அமர்ந்திருந்தாள்.
********
மீனா எஸ்டேட்டில் மிகப்பெரிய அரண்மணை போன்ற வீட்டின் முன் கார் வந்து நின்றது. ஆதிரையன் காரைக் கண்ட வாட்ச்மேன் கேட் கதவைத் திறக்க கார் உள்ளே சென்று காரிடரில் நின்றது.
காரை விட்டு சௌமியா பச்சை வண்ண சுடிதாரில் இறங்க அவனைப் பின் தொடர்ந்து ஆதிரையனும் இறங்கினான்.
“வாம்மா சௌமியா… வாப்பா எல்லோரும் உள்ளே வாங்க” என்று அர்ச்சுனனும், ஜெயகாந்தனும் அவன் நண்பன் இளந்திரையனும் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
வீட்டிற்கு உள்ளே சென்ற சௌமியா “அங்கிள் என்னை ஆசீர்வாதம் பன்னுங்க” என்று காலில் விழ “நல்லா இரும்மா” என்று ஆசீர்வாதம் செய்தார் அர்ச்சுனன்.
அர்ச்சுனனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். கம்பீரமான முகத் தோற்றம் கொண்ட அவரின் கண்களில் கனிவு தெரிந்தது. நரைத்த முடி, கூர்மையான பார்வை, எடுப்பான நாசி, உழைத்த கரங்களும், தோள்களும் இன்னும் வலுவாக இருந்தன.
“வாம்மா… உனக்காகதான் வெயிட்டிங். சாப்பாடு எல்லாம் எப்பவோ ரெடி.” என்று டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றார் அர்ச்சுனன்.
Last edited: