vasumathi karunanidhi
மண்டலாதிபதி
இடம் : மாலி கிரகம்..
வசிஷ்டிரா ஆறு மாத பயிற்சிக்காக மாலி கிரகம் வந்து மாதங்கள் மூன்றைக் கடந்து நான்கைத் தொட்டிருந்தது..
காப்பு அணிந்த இரண்டாம் நாளே மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு அங்கு வந்துவிட்டாள் வசீ ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக..
மாலி கிரகத்திற்கு வந்தவள் துலாதரக் குடும்பம் பற்றி மேலும் சிலப் பல செய்திகள் கற்றுக்கொண்டவள் அங்கிருக்கும் தொழில்நுட்பத்தையும் ஓரளவிற்குக் கற்றுக்கொண்டாள் என்றே சொல்லவேண்டும்..
கூடவே புதிதாக மண் பாத்திரங்கள் செய்வது கூடை பின்னுவது சமையல் செய்வது என்று புதிய புதிய வேலைகளையும்..
பூமியில் இதுபோலெல்லாம் அவள் பார்த்ததில்லை என்பதால் ஆர்வமாக அதையும் கற்றுக்கொண்டாள்..
எல்லாம் விஷ்வேஷ்வர் கொடுத்த அட்வைஸின் அபெக்ட் தான்.. கற்றுக்கொள்ள வயதில்லை ஆர்வம் இருந்தால் மட்டுமே போதும் என்பதை காதில் வாங்கிக்கொண்டு தன்னால் முடிந்த புதிய புதிய விஷயங்களைக் கற்றுகொண்டாள் வசீ..
சிறு வயதில் மழலை வனம் செல்ல முடியவில்லையே என்ற ஆதங்கமும் கூடவே சேர்ந்து அவளை அனைத்தையும் கற்றுக்கொள்ளத் தூண்டியது..
வசியின் ஒவ்வொரு செயலும் அவளின் பெற்றோருக்கு பெருமையே..
துலாதரன் உச்சியில் ஆட்சி செய்யத் துவங்கியிருக்க அழகாக புலர்ந்தது அந்தக் காலைப் பொழுது..
வழக்கம் போல் வாசல் படியில் அமர்ந்தவண்ணம் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசிஷ்டரா..
“வசீ.. இன்னைக்கு பேச்சுத்துணைக்கு யாரும் கிடைக்கல போல..??”, கண்களில் சிரிப்பைத் தேக்கியபடி எதிர்வீட்டு வாசப்படியில் அமர்ந்தவண்ணம் கேட்ட மயூரனைக் கண்டு ஒரு நிமிடம் கண்ணை விரித்தவள் கொஞ்சமே கொஞ்சம் அவன் தன்னைக் கிண்டல் செய்ததில் முறைத்தபடியே, “எப்போ வந்த மயூரன்..??”, என்று கேட்டாள்..
“துலாதரன் வணக்கம் சொல்லும் முன்னே.. அதாவது நீ சயனத்தில் இருக்கும் பொழுது..”, அவளை வெறுப்பேற்றியபடியே பதில் வந்தது மயூரனிடமிருந்து..
மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க கையில் கிடைத்த ஒரு கல்லை அவனை நோக்கி எறிந்தாள் வசீ..
அதை அழகாக கேட்ச் பிடித்தவன், “வன்முறை ஆபாத்தானது.. சமாதானம்..”, என்றான் கண்களைச் சுருக்கி..
உதட்டைச் சுழித்து அவனைப் பார்த்து பழிப்புக் காட்டியவள், “நிருமலி எல்லோன்னும் அரண் எல்லோன்னும் வந்திருக்கிறார்களா..??”, என்றுக் கேட்டாள் ஆர்வமாக..
“எல்லாரும் வந்திருக்கோம் வசீ..”, என்ற மயூரன், “எங்கள் அனைவருக்கும் பீது வனத்தைக் காவல் காக்கும் பணி ஒரு நாள் முன்பொடு முடிந்துவிட்டது.. தெரியுமா உனக்கு..??”, கேள்வியாக..
“ஹ்ம்.. தெரியும் எல்லோன்.. நேற்று விபு அண்ணா சொன்னான்.. எனக்கு இந்த செய்தியைக் கேட்ட பிறகு தான் மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது.. என்னால் தானே உங்களுக்கு எல்லாம் இந்த நிலைமை..”, வருத்தமாக..
“இல்லை வசீ.. எங்கள் நிலைமைக்குக் காரணம் நாங்களே.. அன்று உன்னை நாங்கள் சரியாக கவனித்திருக்க வேண்டும்.. எங்கள் தவறு தான் அது..”, என்றவன் வசியின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, “பழயதை விட்டுத்தள்ளு வசிஷ்டரா.. நடந்ததை யாராலும் மாற்ற முடியாது.. இனி நடக்கப்போவது நல்லதாகவே அமையட்டும்..”, ஒரு விரிந்த புன்னகையுடன்..
“சரிதான் எல்லோன்.. இனி நடப்பவை அனைத்தும் நல்லதாகவே அமையட்டும்..”, என்றவள், “ஆமாம்.. கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. இந்த திடீர் பிரவேசம் ஏனோ..??”, என்று கேள்வி எழுப்பினாள்..
“நமது பொழிலில் பாதுகாப்பை அதிகரிக்கப் போகிறார்களாம்.. அதற்கான கூட்டம் இன்று இங்கே.. உன் தமையனும் வருவான்..”
“அப்படியா..??!!”
“ஏன் உனக்கு இன்னும் இந்த விஷயம் வந்துசேரவில்லையா..??”
இல்லை என்பதுபோல் தலையசைப்பு வசியிடமிருந்து..
“நேற்று இரவுதான் கூட்டத்தைப் பற்றி முடிவு செய்தார்கள் போல் வசீ.. பொழிலில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் என நேற்றே செய்தி சென்றடைந்துவிட்டது.. இங்கிருப்பவர்களுக்கு அனேகமாக இனிமேல் தான் உனக்கு அறிவிப்பு வரும் என்று நினைக்கிறேன்..”, என்றான் மயூரன்..
ஓவென்றவள், “எதற்காக இப்பொழுது திடீரென்று இந்த பலப்படுத்தும் ஏற்பாடு..?? ஏதாவது பிரச்சனையா..??”
“பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை வசீ.. ஆனால் இந்த திடீர் கூட்டம் எதற்கு என்று எனக்கும் சரியாகத் தெரியவில்லை.. இன்று இரவு வரை காத்திருந்தால் என்னவென்று சரியாகத் தெரிந்துகொள்ளலாம்..”, என்று சோம்பல் முறித்தபடி சொன்னவன், “உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா.. பீது வனத்தை நிரந்தரமாக மூடப்போகிறார்கள்..”
“எப்பொழுது..?? ஏன்..??”, கொஞ்சம் அவசரமாக விழுந்ததோ அவள் கேள்வி..
“அடுத்த மாதத்திற்குள் என்று செய்தி..”
“அப்போ அங்கிருக்கும் விண்வெளிக் கப்பல்கள்..??”
“மாலி கிரகத்திற்கு இடமாற்றப்படும்..”
“ஓ.. அப்போ அதுவரை பீது வனக் காவலுக்கு..??”
“யாரும் இருக்கமாட்டார்கள் வசீ.. அங்கு சொல்லப்போனால் காவலும் தேவையில்லை.. பூமிக்கு சென்றவர்களிடம் வரும் செய்திக்காகத்தான் அங்கு பாதுகாப்பு ஆட்குவிப்பு எல்லாம்.. இப்பொழுது நீ இங்கு வந்துவிட்டாய் அல்லவா.. பிறகு எதற்கு அங்கு இந்தப் பாதுகாப்பு எல்லாம்..??”
*****************************************************************************
இரவு நேர வாடைக்காற்று உடலைத் தழுவிச்செல்ல ஒருவர் பின் ஒருவராய் மாலி கிரகத்திற்கு வந்து சேர்ந்தனர் இரவு நடக்கும் கூட்டத்திற்கு..
திருவிழாக்கோலம் போலவே காட்சியளித்தது மாலி கிரகம் அன்று..
எல்லாம் பாதுகாப்புக் கூட்டத்திற்காக திரண்ட மக்கள் கூட்டம் தான்..
விபுவும் திருஷ்டியும் மாலையே வந்திருக்க அவர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தாள் வசீ..
அவளுக்கு அதெல்லாம் ரொம்பவும் புதிதாகத் தோன்றியது..
“திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் என்ன வேடிக்கை வசீ..??”,
அவள் குழந்தைப்போல் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு கேட்டான் விபு..
“இல்லண்ணா பூமியில் இதுபோல் எல்லாம் கூட்டம் கூடி நான் பார்த்ததில்லை.. எல்லாம் முடிவுகளும் வீடியோ கால் மூலம் தான் அங்கு..”, என்றவள் சடனாக,
“வீடியோ கால் என்றால் ஒரு கருவியில் மூலமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்வது..”, என்றாள்..
“கூட்டங்கள் ஏன் கூட்டுவதில்லை என்று இதுவரை யாரும் கேட்டதில்லையா..??”, இது திருஷ்டி..
“கேட்டால் பெரிதாக என்னம்மா சொல்லிவிடப்போகிறார்கள்..”, என்று சலித்துக்கொண்ட வசீ, “கூட்டம் கூட்டினால் நேர விரையமாம்..”, என்றாள் சலிப்பாக..
“சரி பரவாயில்லை விடு.. இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம் நீ எதிர்பார்த்ததைவிட பெரிய கூட்டத்தைப் பார்க்கப்போகிறாய்..”, என்றார் திருஷ்டி அவள் தலையைத் தடவியபடியே..
மயூரன் வந்து இவர்கள் மூவரையும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்..
அனைவரும் அவரவர் இருக்கையில் அமர யாரையோத் தேடி அலைந்தது வசியின் கண்கள்..
அதைக்கண்டுகொண்ட மயூரன், “யாரைத் தேடுகிறாய் வசிஷ்டரா..??”, என்றுக் கேட்டான்..
“விலாசி எல்லோன்னையும் மிளிர் அண்ணாவையும் தான் எல்லோன்.. அவங்க வரலையா கூட்டத்திற்கு..??”, தேடலை நிறுத்தாமலே..
“இல்லை வசீ வரவில்லை.. அவருக்கும் மிளிருக்கும் பரிதி வனத்தில் வேலை இருக்கிறதாம் இன்று.. கிரீசன் எல்லோன் மட்டும் வருவார்..”, என்றான் விபு..
“பரிதி வனத்தில் வேலையா இன்று இருவருக்கும்..??”, எச்சில் விழுங்கியபடியே தான் கேட்டது சரியா என்று தெரிந்துகொள்ளக் கேட்டாள் வசீ..
“ஆமாம் வசீ.. பரிதி வனத்தில் தான் இன்று அவர்களுக்கு வேலை..”, இது மயூரன்..
ஓவென்றவளுக்கு ஏனோ படபடவென்று வந்தது..
“ஏன் வசீ..?? ஏதாவது பிரச்சனையா..??”, ஒரு நமட்டு சிரிப்புடன் கேட்டான் விபு..
வேர்வைத் துளிகள் முத்துமுத்தாய் முகத்தில் படர்ந்திருக்க விபுவை முறைத்துவைத்தாள் வசிஷ்டரா..
அவளது தினறலையும் தடுமாற்றத்தையும் கண்டு, “எல்லாம் சரியாக நடக்கும் வசீ.. கவலைப்படாதே..”, என்றான் விபு அவளது கைகளைத் தட்டிக்கொடுத்தபடி..
(சரியாக நடக்கப்போகிறதா..?? என்ன நடக்கப்போகிறது..??)
*****************************************************
வசிஷ்டிரா ஆறு மாத பயிற்சிக்காக மாலி கிரகம் வந்து மாதங்கள் மூன்றைக் கடந்து நான்கைத் தொட்டிருந்தது..
காப்பு அணிந்த இரண்டாம் நாளே மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு அங்கு வந்துவிட்டாள் வசீ ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக..
மாலி கிரகத்திற்கு வந்தவள் துலாதரக் குடும்பம் பற்றி மேலும் சிலப் பல செய்திகள் கற்றுக்கொண்டவள் அங்கிருக்கும் தொழில்நுட்பத்தையும் ஓரளவிற்குக் கற்றுக்கொண்டாள் என்றே சொல்லவேண்டும்..
கூடவே புதிதாக மண் பாத்திரங்கள் செய்வது கூடை பின்னுவது சமையல் செய்வது என்று புதிய புதிய வேலைகளையும்..
பூமியில் இதுபோலெல்லாம் அவள் பார்த்ததில்லை என்பதால் ஆர்வமாக அதையும் கற்றுக்கொண்டாள்..
எல்லாம் விஷ்வேஷ்வர் கொடுத்த அட்வைஸின் அபெக்ட் தான்.. கற்றுக்கொள்ள வயதில்லை ஆர்வம் இருந்தால் மட்டுமே போதும் என்பதை காதில் வாங்கிக்கொண்டு தன்னால் முடிந்த புதிய புதிய விஷயங்களைக் கற்றுகொண்டாள் வசீ..
சிறு வயதில் மழலை வனம் செல்ல முடியவில்லையே என்ற ஆதங்கமும் கூடவே சேர்ந்து அவளை அனைத்தையும் கற்றுக்கொள்ளத் தூண்டியது..
வசியின் ஒவ்வொரு செயலும் அவளின் பெற்றோருக்கு பெருமையே..
துலாதரன் உச்சியில் ஆட்சி செய்யத் துவங்கியிருக்க அழகாக புலர்ந்தது அந்தக் காலைப் பொழுது..
வழக்கம் போல் வாசல் படியில் அமர்ந்தவண்ணம் போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசிஷ்டரா..
“வசீ.. இன்னைக்கு பேச்சுத்துணைக்கு யாரும் கிடைக்கல போல..??”, கண்களில் சிரிப்பைத் தேக்கியபடி எதிர்வீட்டு வாசப்படியில் அமர்ந்தவண்ணம் கேட்ட மயூரனைக் கண்டு ஒரு நிமிடம் கண்ணை விரித்தவள் கொஞ்சமே கொஞ்சம் அவன் தன்னைக் கிண்டல் செய்ததில் முறைத்தபடியே, “எப்போ வந்த மயூரன்..??”, என்று கேட்டாள்..
“துலாதரன் வணக்கம் சொல்லும் முன்னே.. அதாவது நீ சயனத்தில் இருக்கும் பொழுது..”, அவளை வெறுப்பேற்றியபடியே பதில் வந்தது மயூரனிடமிருந்து..
மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க கையில் கிடைத்த ஒரு கல்லை அவனை நோக்கி எறிந்தாள் வசீ..
அதை அழகாக கேட்ச் பிடித்தவன், “வன்முறை ஆபாத்தானது.. சமாதானம்..”, என்றான் கண்களைச் சுருக்கி..
உதட்டைச் சுழித்து அவனைப் பார்த்து பழிப்புக் காட்டியவள், “நிருமலி எல்லோன்னும் அரண் எல்லோன்னும் வந்திருக்கிறார்களா..??”, என்றுக் கேட்டாள் ஆர்வமாக..
“எல்லாரும் வந்திருக்கோம் வசீ..”, என்ற மயூரன், “எங்கள் அனைவருக்கும் பீது வனத்தைக் காவல் காக்கும் பணி ஒரு நாள் முன்பொடு முடிந்துவிட்டது.. தெரியுமா உனக்கு..??”, கேள்வியாக..
“ஹ்ம்.. தெரியும் எல்லோன்.. நேற்று விபு அண்ணா சொன்னான்.. எனக்கு இந்த செய்தியைக் கேட்ட பிறகு தான் மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது.. என்னால் தானே உங்களுக்கு எல்லாம் இந்த நிலைமை..”, வருத்தமாக..
“இல்லை வசீ.. எங்கள் நிலைமைக்குக் காரணம் நாங்களே.. அன்று உன்னை நாங்கள் சரியாக கவனித்திருக்க வேண்டும்.. எங்கள் தவறு தான் அது..”, என்றவன் வசியின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, “பழயதை விட்டுத்தள்ளு வசிஷ்டரா.. நடந்ததை யாராலும் மாற்ற முடியாது.. இனி நடக்கப்போவது நல்லதாகவே அமையட்டும்..”, ஒரு விரிந்த புன்னகையுடன்..
“சரிதான் எல்லோன்.. இனி நடப்பவை அனைத்தும் நல்லதாகவே அமையட்டும்..”, என்றவள், “ஆமாம்.. கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. இந்த திடீர் பிரவேசம் ஏனோ..??”, என்று கேள்வி எழுப்பினாள்..
“நமது பொழிலில் பாதுகாப்பை அதிகரிக்கப் போகிறார்களாம்.. அதற்கான கூட்டம் இன்று இங்கே.. உன் தமையனும் வருவான்..”
“அப்படியா..??!!”
“ஏன் உனக்கு இன்னும் இந்த விஷயம் வந்துசேரவில்லையா..??”
இல்லை என்பதுபோல் தலையசைப்பு வசியிடமிருந்து..
“நேற்று இரவுதான் கூட்டத்தைப் பற்றி முடிவு செய்தார்கள் போல் வசீ.. பொழிலில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் என நேற்றே செய்தி சென்றடைந்துவிட்டது.. இங்கிருப்பவர்களுக்கு அனேகமாக இனிமேல் தான் உனக்கு அறிவிப்பு வரும் என்று நினைக்கிறேன்..”, என்றான் மயூரன்..
ஓவென்றவள், “எதற்காக இப்பொழுது திடீரென்று இந்த பலப்படுத்தும் ஏற்பாடு..?? ஏதாவது பிரச்சனையா..??”
“பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை வசீ.. ஆனால் இந்த திடீர் கூட்டம் எதற்கு என்று எனக்கும் சரியாகத் தெரியவில்லை.. இன்று இரவு வரை காத்திருந்தால் என்னவென்று சரியாகத் தெரிந்துகொள்ளலாம்..”, என்று சோம்பல் முறித்தபடி சொன்னவன், “உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா.. பீது வனத்தை நிரந்தரமாக மூடப்போகிறார்கள்..”
“எப்பொழுது..?? ஏன்..??”, கொஞ்சம் அவசரமாக விழுந்ததோ அவள் கேள்வி..
“அடுத்த மாதத்திற்குள் என்று செய்தி..”
“அப்போ அங்கிருக்கும் விண்வெளிக் கப்பல்கள்..??”
“மாலி கிரகத்திற்கு இடமாற்றப்படும்..”
“ஓ.. அப்போ அதுவரை பீது வனக் காவலுக்கு..??”
“யாரும் இருக்கமாட்டார்கள் வசீ.. அங்கு சொல்லப்போனால் காவலும் தேவையில்லை.. பூமிக்கு சென்றவர்களிடம் வரும் செய்திக்காகத்தான் அங்கு பாதுகாப்பு ஆட்குவிப்பு எல்லாம்.. இப்பொழுது நீ இங்கு வந்துவிட்டாய் அல்லவா.. பிறகு எதற்கு அங்கு இந்தப் பாதுகாப்பு எல்லாம்..??”
*****************************************************************************
இரவு நேர வாடைக்காற்று உடலைத் தழுவிச்செல்ல ஒருவர் பின் ஒருவராய் மாலி கிரகத்திற்கு வந்து சேர்ந்தனர் இரவு நடக்கும் கூட்டத்திற்கு..
திருவிழாக்கோலம் போலவே காட்சியளித்தது மாலி கிரகம் அன்று..
எல்லாம் பாதுகாப்புக் கூட்டத்திற்காக திரண்ட மக்கள் கூட்டம் தான்..
விபுவும் திருஷ்டியும் மாலையே வந்திருக்க அவர்களுடன் சுற்றிக்கொண்டிருந்தாள் வசீ..
அவளுக்கு அதெல்லாம் ரொம்பவும் புதிதாகத் தோன்றியது..
“திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல் என்ன வேடிக்கை வசீ..??”,
அவள் குழந்தைப்போல் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு கேட்டான் விபு..
“இல்லண்ணா பூமியில் இதுபோல் எல்லாம் கூட்டம் கூடி நான் பார்த்ததில்லை.. எல்லாம் முடிவுகளும் வீடியோ கால் மூலம் தான் அங்கு..”, என்றவள் சடனாக,
“வீடியோ கால் என்றால் ஒரு கருவியில் மூலமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்வது..”, என்றாள்..
“கூட்டங்கள் ஏன் கூட்டுவதில்லை என்று இதுவரை யாரும் கேட்டதில்லையா..??”, இது திருஷ்டி..
“கேட்டால் பெரிதாக என்னம்மா சொல்லிவிடப்போகிறார்கள்..”, என்று சலித்துக்கொண்ட வசீ, “கூட்டம் கூட்டினால் நேர விரையமாம்..”, என்றாள் சலிப்பாக..
“சரி பரவாயில்லை விடு.. இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம் நீ எதிர்பார்த்ததைவிட பெரிய கூட்டத்தைப் பார்க்கப்போகிறாய்..”, என்றார் திருஷ்டி அவள் தலையைத் தடவியபடியே..
மயூரன் வந்து இவர்கள் மூவரையும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்..
அனைவரும் அவரவர் இருக்கையில் அமர யாரையோத் தேடி அலைந்தது வசியின் கண்கள்..
அதைக்கண்டுகொண்ட மயூரன், “யாரைத் தேடுகிறாய் வசிஷ்டரா..??”, என்றுக் கேட்டான்..
“விலாசி எல்லோன்னையும் மிளிர் அண்ணாவையும் தான் எல்லோன்.. அவங்க வரலையா கூட்டத்திற்கு..??”, தேடலை நிறுத்தாமலே..
“இல்லை வசீ வரவில்லை.. அவருக்கும் மிளிருக்கும் பரிதி வனத்தில் வேலை இருக்கிறதாம் இன்று.. கிரீசன் எல்லோன் மட்டும் வருவார்..”, என்றான் விபு..
“பரிதி வனத்தில் வேலையா இன்று இருவருக்கும்..??”, எச்சில் விழுங்கியபடியே தான் கேட்டது சரியா என்று தெரிந்துகொள்ளக் கேட்டாள் வசீ..
“ஆமாம் வசீ.. பரிதி வனத்தில் தான் இன்று அவர்களுக்கு வேலை..”, இது மயூரன்..
ஓவென்றவளுக்கு ஏனோ படபடவென்று வந்தது..
“ஏன் வசீ..?? ஏதாவது பிரச்சனையா..??”, ஒரு நமட்டு சிரிப்புடன் கேட்டான் விபு..
வேர்வைத் துளிகள் முத்துமுத்தாய் முகத்தில் படர்ந்திருக்க விபுவை முறைத்துவைத்தாள் வசிஷ்டரா..
அவளது தினறலையும் தடுமாற்றத்தையும் கண்டு, “எல்லாம் சரியாக நடக்கும் வசீ.. கவலைப்படாதே..”, என்றான் விபு அவளது கைகளைத் தட்டிக்கொடுத்தபடி..
(சரியாக நடக்கப்போகிறதா..?? என்ன நடக்கப்போகிறது..??)
*****************************************************