• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 17

அன்று இறுதித்தேர்வு என்று சீக்கிரம் கிளம்பிய சந்தோஷ் டைனிங் ஹாலிற்கு சாப்பிட வந்தான்.. அவன் சீக்கிரம் கிளம்பியதைக் கவனித்த அபிநந்தன், “கண்ணா எக்ஸாம் இன்றோடு முடிகிறது.. நீ அடுத்து என்ன செய்யலாம் என்று இருக்கிற..” என்றவர் சந்தோஷிடம் கேட்டார்..

“அடுத்து..” என்றவன் ஆரம்பிக்கும் பொழுது, “மித்ரா கிளம்பீட்டியா..” என்ற கேள்வியுடன் வீட்டின் உள்ளே நுழைந்த பிரியாவைக் கவனித்தவன் வேண்டுமென்றே, “அடுத்தது கல்யாணம் பண்ணிக்கணும்..” என்றவன் சிரித்துகொண்டே சொல்ல பிரியா அவனை முறைத்தாள்..

அவன் வாசலில் நிற்பதைக் கவனித்த பிருந்தா, “வா பிரியா..? ஏன் அங்கேயே நிற்கிற..” என்றவள் தன்னுடைய பார்வையை அத்தையின் பக்கம் திருப்பியவள், “இல்ல அத்தை எக்ஸாமிற்கு நேரம் ஆச்சு..” என்றவள் சந்தோஷை முறைத்தாள்..

“டேய் இருபத்தி ஒரு வயதில் திருமணமா இது உனக்கே ஓவராக இல்லையா..” என்றவர் அவனின் பார்வை சென்ற திசையைக் கவனித்தார்.. அங்கே பிரியா தனியாக நிற்பதைப் பார்த்தவர், “ஏண்டா அங்கே நிற்கிற இங்கே வந்து உட்காரு..” என்றவர் சோபாவைக் காட்டினார்..

சந்தோஷ் அவளை இமைக்காமல் பார்க்க, “இல்ல மாமா..” என்றவள் மறுக்க, “வா பிரியா..” என்று அழைக்க, ‘ரொம்ப நல்லவன் என்று காட்டிக்கிறான் பாரு ப்ராடு..’ என்றவள் மனதிற்குள் அவனை வருத்தெடுத்தாள்..

அவளின் முகம் பார்த்துவிட்டு மகனின் பக்கம் திரும்பிய அபிநந்தன், “டேய் நீ பிரியாவை லவ் பண்றீயா..” என்று கேட்டதும் அவனுக்கு புரையேற பிரியாவோ, ‘வேணும்.. நல்ல வேணும்..’ என்றவால் மனதிற்குள் திட்ட, “அப்பா என்ன கேட்டீங்க.. இவளை நான் லவ் பண்றீனா..” எஎன்றவன் வாய்விட்டு சிரிக்க அபிநந்தன் அவனைக் கேள்வியாக பார்த்தார்..

“இவளை எல்லாம் நான் லவ் பண்ணுவேனா..? நான் தீபிகா என்ற பெண்ணை விரும்புகிறேன்ப்பா.. எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தாள் அது அவளோடுதான்..” என்றவனின் கடைசி வரியை மட்டும் பிரியாவைப் பார்த்துக்கொண்டே கூறினான்..

அடுத்தநொடியே பிரியா கோபமாக வீட்டைவிட்டு வேகமாக வெளியே சென்றாள்.. அவனின் பதிள் அவளின் மனதில் வலியை ஏற்படுத்த, ‘எக்ஸாம் முடித்ததும் ஏற்காடு சென்றுவிட வேண்டும்..’ என்று நினைத்தவள் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துகொண்டு சென்றாள்..

அதை சமையலறையில் இருந்து கவனித்த பிருந்தா, “சந்தோஷ் நீ நிஜமாக சொல்கிறாயா..” என்றவர் மகனிடம் கேட்டார்.. “அம்மா நிஜமாகவே சொல்றேன் அம்மா.. என்னை நம்புங்க..” என்றவனை நம்பிய பிருந்தாவின் மனமோ, ‘பிரியா ஏன் கோபமாக போகிறாள்..?’ என்று யோசித்தவருக்கு தெரியாது நாளையே தன்னுடைய மகன் அவளை கல்யாணம் பண்ணிவிட்டு வந்து நிற்க போகிறான் என்று..!

“அப்போ அந்த பொண்ணோட அப்பா, அம்மா எல்லாம் யாருன்னு சொல்லுடா நம்ம போய் பொண்ணு கேட்டுவிட்டு வரலாம்..” என்றவர் சொல்ல, “அதுக்கென்னம்மா அட்ரஸ் எல்லாம் ரெடியாக இருக்கு.. இப்போ நீங்க ஓகே சொன்னாலும் எனக்கு ஓகே..” என்றவன் சிரித்துகொண்டே பிருந்தாவை வம்பிற்கு இழுக்க, “என்னோட மகன் என்னைவிடவேகமாக இருக்கிறான் பிந்து..” என்றவர் வாய்விட்டு சிரித்தார் அபிநந்தன்..

“அவன் அவ்வளவு வேகமாக இல்லாமல் இருந்தால்தான் அதிசயம் அப்பா..” என்றாள் சங்கமித்ரா எரிச்சலோடு.. அவள் எதற்காக எரிச்சலோடு இருக்கிறாள் என்று உணர்ந்த சந்தோஷ் அமைதியாக இருந்தான்..

அவளைப் பார்த்து புன்னகைத்த பிருந்தா, “நிஜம்தான் மித்ரா..” என்றவர் சொல்ல, “அண்ணா ஆல் தி பெஸ்ட்..” என்று சஞ்சீவ் சொல்ல, “தேங்க்ஸ்டா..” என்றான் சந்தோஷ் தம்பியின் தலையைக் கலைத்த வண்ணம்..

, “அண்ணா சீக்கிரம் கிளம்பு பிரியா ஸ்கூட்டியில் கிளம்பி போயிட்டாங்க..” என்ற மதுபாலா, “பெரியம்மா நான் போயிட்டு வருகிறேன்..” என்றவள் வேகமாக வெளியே சென்றாள்..

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப கல்லூரியில் எக்ஸாம் தொடங்கும் முன்னே பிரியாவிடம் பேச நினைத்த சந்தோஷ், “இவளுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது என்றே தெரியல.. இவளோட மௌனம் எந்தளவு என்னை பாதிக்கும் எனு கூட உணராமல் இருக்கிறாளே..” என்று புலம்பிய சந்தோஷ் அவளை தேடினான்..

ஆனால் அவளோ அவனின் முயற்சிக்கு எல்லாம் கிடம் கொடுக்காமல் அவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய பிரியா, ‘ உன்னை தவிக்க விடணும்.. நீ அவளையே கல்யாணம் பண்ணு.. நான் ஏன் என்று கூட கேட்க மாட்டேன்..’ என்று நினைத்தவள் தேர்வு நடக்கும் அறைக்குள் சென்றுவிட்டாள்..

கிட்டத்தட்ட எக்ஸாம் எழுதி முடித்த எல்லோரும் வெளியே வரும்பொழுது மித்ராவிற்காக மரத்தடியில் காத்திருந்த அசோக் மித்ராவைப் பார்த்தும், “மித்ரா..” என்றவன் அழைக்க, “என்ன அசோக்..” என்றவள் அவனின் அருகில் சென்றாள் மித்ரா..

“மித்ரா இன்னையோடு எக்ஸாம் ஓவர்.. இனிமேல் விளையாட்டாக இருக்க முடியாது.. ஆயிரம் கடமை இருக்கு..” என்றவனை அவள் புரியாத பார்வை பார்க்க, “எனக்காக நீ காத்திருப்பாயா மித்ரா..” என்றவன் கேட்டான்..

அவனின் விழியை நெருக்கு நேர் பார்த்தவள், “நீ வரும்வரை உன்னோட மித்ராவாக காத்திருப்பேன்.. லவ் மட்டும் வாழ்க்கை இல்ல.. நீ உன்னோட கடமை எல்லாம் முடிச்சிட்டு வா..” என்றவள் தொடர்ந்து, “அதுக்காக காலம் தாழ்த்தாதே அசோக்..” என்றவள் மூன்றே வரியில் என்னோட வாழ்க்கையே நீதான் என்று அவனுக்கு உணர்த்திவிட்டு விலகி நடந்தாள்..

அசோக்கிற்கு அவளின் காதல் புரிந்துவிட அவளை கரம்பிடிக்கும் நோக்கத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.. அதை தூரத்தில் இருந்து பார்த்த தீபிகா, “லவ் ஊத்திக்கிச்சு போல..” என்று வாய்விட்டு கூறியவள், “சந்தோஷ் வருகிறானா..” என்று பார்த்தாள்..

தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த சந்தோஷ் பிரியாவைத் தேட அவளோ ஸ்கூட்டியை எடுத்துகொண்டு வேகமாக செல்வதைக் கவனித்த சந்தோஷ், “ஏண்டி என்னோட உயிரை வாங்கற..” என்றவன் எரிச்சலோடு நடந்துவர எதிரே தீபிகா வருவதைக் கவனித்தான்..

அவனின் அருகில் சென்றவள், “சந்தோஷ் நான் உன்னிடம் கொஞ்சம் பேசணும்..” என்றாள்.. அவனோ, ‘என்ன..?’ என்று புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாக பார்த்தான்..

“சந்தோஷ் இன்னைக்கு காலேஜ் final எக்ஸாம் முடிந்தது.. இதற்கு பிறகு நம்ம பார்க்க முடியாது..” என்றவள் வருத்ததுடன் சொல்ல சந்தோஷ் அமைதியாக நின்று அவளையே பார்த்தான்..

அவனின் மௌனம் அவளிலுக்கு எரிச்சலைக் கிளப்பிவிட, “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்று கேட்டான் தீபிகா.. அவளிடம் இப்படியொரு கேள்விகாக காத்திருந்த சந்தோஷ், “இது என்ன கேள்வி நம்ம எப்போ வேண்டும் என்றாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் தீபிகா..” என்றவன் வேகமாக தன்னுடைய சம்மதத்தைக் கூறினான்..

அவன் சொன்னதைக் கேட்டு அகம் மகிழ்ந்து போன தீபிகா, “என்னோட அப்பாவுடன் நான் கோவிலுக்கு வரேன் சந்தோஷ்.. நீ அத்தை மாமாவுடன் கோவிலுக்கு வா..” என்று வேகமாக திட்டமிட்ட தீபிகாவைப் பார்த்து மர்மமாக புன்னகைத்தான்..

அன்று வீட்டிற்கு சென்ற சந்தோஷ் பிரியாவைப் பார்க்க அவளின் வீட்டிற்கு செல்ல, “வா சந்தோஷ்..” என்றவர் தொடர்ந்து, “என்ன நீயும் ஏற்காடு போறீயா..? மேல பிரியா பாட்டி, தாத்தாவைப் பார்க்க போகிறேன் என்று கிளம்பீட்டு இருக்கிற..” என்றவர் கூடுதலான தகவலையும் சொன்னார்..

“அத்தை என்ன சொல்றீங்க..” என்றவன் கேட்க, “நீயே அவளோட அறையில் போய் பாருப்பா..” என்றவர் சமையலைக் கவனிக்க செல்ல வேகமாக படியேறிய சந்தோஷ் பிரியாவின் அறைக்குள் நுழைந்தான்..

அவன் வேகமாக கதவைத் திறக்க, “வா சந்தோஷ்.. உன்னை எதிர்பார்த்துடே இருந்தேன்..” என்ற பிரியா, “எனக்கு ஏற்காட்டில் இருக்கும் எஸ்டேட் கணக்கு வழக்கு எல்லாம் நான் பார்த்துகிறேன்..” என்றவளை சந்தோஷ் கொலைவெறியுடன் பார்த்தாள்..

அதையெல்லாம் கவனிக்காத பிரியாவோ, “இந்த சந்தோஷ் உன்னோட மேரேஜ்க்கு நான் வாங்கிய கிப்ட்.. என்னால் மேரேஜ்க்கு வர முடியாது..” என்றவள் அவனின் கையில் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு எடுத்து வைக்க வேண்டியது எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்..

அதுவரை பொறுமையுடன் இருந்த சந்தோஷ், “என்னோட திருமணத்திற்கு மேடம் ஏன் வரமாட்டீங்க..?” என்றவன் நக்கலோடு கேட்க நிமிர்ந்து அவனின் முகம் பார்த்த பிரியா, “நான் வரமாட்டேன் சந்தோஷ்.. உன்னோட திருமணத்திற்கு வர எனக்கு இஷ்டம் இல்ல போதுமா..” என்றவள் மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்..

அவளைப் பார்த்தபடியே சிறிதுநேரம் நின்ற சந்தோஷ், “பாவம் ஒருபக்கம் பழி ஒருபக்கம்.. இந்த வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியாத வரையில் நீ என்னை புரிஞ்சிக்க மாட்டாய்..” என்ற சந்தோஷ் அவள் கொடுத்த கிப்ட்டை அங்கேயே வைத்துவிட்டு, “இது எனக்கு வேண்டாம்.. நீ வேற யாருக்காது பிரசண்ட் பண்ணு..” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்..

அவன் செல்லும் வரையில் ஜெடம் போல நின்றவள், ‘உன்னோட மனதில் இருப்பதை புகுந்து பார்க்க என்னால முடியாது சந்தோஷ்..’ என்றவள் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தாள்..

அவளிடம் பேசிவிட்டு அறைக்கு வந்த சந்தோஷ், ‘இதுநாள்வரை பொறுமையாக இருந்த மனமோ இன்று ஒரு நாள் மட்டும் பொறுமையாக இரு.. அவளுக்கு பதிலடி கொடுத்துவிட்டு இவளுக்கு என்னோட மனதைப் புரிய வைக்கிறேன்..’ என்றவன் மறுநாள் விடியலுக்கு காத்திருந்தான்..

மறுநாள் காலைபொழுது அழகாக விடிய வேகமாக கோவிலுக்கு கிளம்பினான் சந்தோஷ்.. பிரியாவும், மித்ராவும் கோவிலுக்கு கிளம்ப இருவரையும் பார்த்தவன், “மித்ரா எங்க கிளம்பீட்ட..?” என்று கேட்டதும், “கோவிலுக்கு அண்ணா..” என்றாள்..

அப்பொழுதுதான் அவளின் அருகில் நின்ற பிரியாவைப் பார்த்தான்.. ஊருக்கு போவதால் சேலைகட்டி கூந்தலில் மல்லிகையும், ரோஜாவும் வைத்து அழகுற நின்றவளைப் பார்த்தவன், ‘நீ இன்னைக்கு எப்படி ஊருக்கு போற என்று நானும் பார்க்கிறேன்..’ என்று நினைத்தவன், “எந்த கோவிலுக்கு போறீங்க மித்ரா..” என்று மட்டும் கேட்டான்..

“வடபழனி முருகன் கோவில்..” என்றவள் பதில் சொல்ல, “ஏன் நீ சொல்ல மாட்டாயா தேனு..” என்றவன் அவளை வம்பிற்கு இழுக்க அவனை முறைத்தவள், “வா மித்ரா..” என்று மித்ராவை இழுத்துக்கொண்டு சென்றாள்..

அவள் சென்றதும் தீபிகாவிற்கு போன் செய்த சந்தோஷ், “எந்த கோவிலில் இருக்கிற தீபி..” என்றவன் கேட்டதும், “வடபழனி முருகன் கோவிலில்தான் இருக்கிறேன் சந்தோஷ்.. நீ எப்போ வருவாய்..” என்றவள் அவனிடம் கேட்டதும், “நான் வந்துட்டே இருக்கிறேன்..” என்றவன் போனை வைத்துவிட்டு வேகமாக கிளம்பிச் சென்றான்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் சென்றதும் தீபிகாவிற்கு போன் செய்த சந்தோஷ், “எந்த கோவிலில் இருக்கிற தீபி..” என்றவன் கேட்டதும், “வடபழனி முருகன் கோவிலில்தான் இருக்கிறேன் சந்தோஷ்.. நீ எப்போ வருவாய்..” என்றவள் அவனிடம் கேட்டதும், “நான் வந்துட்டே இருக்கிறேன்..” என்றவன் போனை வைத்துவிட்டு வேகமாக கிளம்பிச் சென்றான்..

சந்தோஷ் நேராக கோவிலுக்கு செல்ல மித்ராவிற்கு அழைத்து, “மித்து நீ எங்க இருக்கிற..?” என்று கேட்டதும், “அண்ணா நான் கோவிலில் இருக்கேன்..” என்றதும் போனை வைத்துவிட்டான்.. அவன் எதற்காக அழைத்தான் என்று புரியாத மித்ராவோ, ‘இவனை என்ன பண்றது என்று தெரியல..’ என்று எரிச்சலோடு பல்லைக் கடித்தாள்..

தீபிகா சொன்னது போலவே கோவிலுக்கு வந்து காத்திருந்தாள்..

அவன் கோவிலின் உள்ளே நுழைய சந்தோஷ் வருவதைப் பார்த்த தீபிகா, “என்ன சந்தோஷ் தனியாக வர..?” என்றவளின் உள்ளிருந்த பாம்பு தன்னுடைய தலையைத் தூக்க, “அம்மாவும் அப்பாவும் வந்துட்டு இருக்காங்க தீபிகா.. நீ ஏன் இப்படி கேட்கிற..” என்றவன் புரியாமல் கேட்டான்..

“உங்க அம்மா, அப்பா வந்தால் தானே ரொம்ப நல்ல இருக்கும்..” என்று இருபொருள்பட கூறிய தீபிகாவிற்கு ஒரு விஷயம் தெரியாது.. அவள் தீபக் மகள் என்ற உண்மை சந்தோஷிற்கு தெரியும் என்பது பாவம் அவள் அறியாத விஷயம்.. அடுத்து சந்தோஷை தன்னுடைய வலையில் விழ வைத்தாக அவள் நினைத்தாள்..

ஆனால் சந்தோஷ் விரித்த வலையில் தான் அவள் மாட்டிகொண்டாள் என்ற உண்மையறியாத தீபிகா, “டேய் எங்க அப்பா யாருன்னு தெரியாமல் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்து நிற்கும் உன்னை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருது சந்தோஷ்..” என்று சிரித்தவளை அவன் புரியாத பார்வை பார்த்தவன்,

“நீ யாரு தீபிகா...? உன்னோட அப்பா யாரு..?” என்றவன் எதுவும் தெரியாது போலவே கேட்டதும், “நான் தீபக் மகள்.. உன்னோட மாமன் மகள் தீபிகா..” என்றவள் கர்வத்தோடு சொல்ல, “ஏய் நீ என்ன சொல்ற..” என்றவன் அதிர்ச்சியில் நின்றான் சந்தோஷ்..

அப்பொழுது தூணின் மறைவில் இருந்து வெளியே வந்த தீபக்கை பார்த்தவன் தீபிகாவின் பேச்சில் கவனம் செலுத்தினான்.. “என்னோட அப்பாவை இங்கே தனிமையில் உட்கார வெச்சிட்டு நீங்க எல்லோரும் ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க இல்ல.. நீங்க எல்லோரும் நிம்மதியாக இருக்க இந்த தீபிகா விடுவேனா..?” என்று திமிராக கேட்டாள்..

அவளின் ஒவ்வொரு கேள்விக்கும், ‘பொறுமையாக இரு மனமே..’ என்றவன் அமைதியாக நின்றிருந்தான்.. சந்தோஷிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக, “என்னடா அமைதியாக நிற்கிற..” என்றவள் ஒரு புருவம் உயர்த்திட, “என்னை ஏமாற்ற வந்தீயா தீபி..” என்று சந்தோஷ் கரகரப்பான குரலுடன் கேட்டான்..

“நீ சந்தோசமாக இருக்கக்கூடாது சந்தோஷ்.. உன்னோட பெயரில் இருக்கும் சந்தோசம் உனக்கு இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்கும் யாருக்கும் கிடைக்க கூடாது..” என்று வீம்புடன் கூறியவளின் முகத்தில் அவனை வென்றுவிட்ட கர்வம் கண்ட சந்தோஷ், ‘என்னை நீ இன்னும் புரிஞ்சிக்கவே இல்லடி..’ என்று நினைத்தான்..

தீபக்கோ, ‘இந்த மாதிரி ஒரு மகளை வளர்த்து வைத்திருக்கிறேனே..’ என்று தலையில் அடித்து கொள்ளாத குறையாக நின்றிருந்தார்..

“என்னோட கழுத்தில் தாலிகட்ட வந்த இல்ல.. நீ என்னோட கழுத்தில் தாலிகட்டு.. நான் அதை கழட்டி உன்னோட முகத்தில் வீசுகிறேன்.. அப்போதானே நீ செத்துப்போனதற்கு சமம்..” என்றவள் சொல்ல, ‘இவளை இழுத்து நாலு அறைவிட்டால் என்ன..?’ என்று தீபக்கிற்குத் தோன்றியது

“நீ இப்படியொரு எண்ணத்தோடு வந்த்திருப்பாய் என்று நான் நினைக்கவே இல்ல தீபிகா.. எப்பொழுதும் என்னையே சுற்றி வரும் என்னோட பிரியாவை விட்டுவிட்டு உன்னை காதலிச்சது தாண்டி நான் செய் பெரிய தவறு..” என்றவன் வருத்தத்தோடு கூறினான்..

“எனக்கு உரிமை இல்லாத பொருள் வேற யாருக்கும் கிடக்க கூடாது.. நீ சந்தோஷமாக இருக்கக்கூடாது என்றுதான் அவளுக்கு உன்மேல உரிமையே இல்லன்னு சொன்னேன்.. அவ உன்னைவிட்டு விலகி நின்னது எனக்கு ரொம்ப வசதியாக போச்சு..” என்றவள் சாதாரணமாக கூறினாள்..

“என்னை பழிவாங்கிட்ட இல்ல..” என்றவன் கரகரத்த குரலில் கேட்டதும், “உன்னிடம் பழகியதே உன்னைப் பழி வாங்கத்தான் சந்தோஷ்..” என்றவள் தொடர்ந்து, “உன்னை பார்த்து என்னோட அத்தை துடிக்கனும்.. உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னோட அத்தை எங்க வீட்டு வாசலுக்கு வரணும் சந்தோஷ்..” என்றவள் அவளின் திட்டத்தை சொல்ல சொல்ல சந்தோஷ் கோபம் அதிகரித்தது..

“எங்க சந்தோஷ் என்னோட அத்தையும் மாமாவும்..?” என்றவள் பாசத்தோடு கேட்க, “ஏய் நிறுத்துடி..” என்றவன் திமிருடன் சொல்ல திகைத்த தீபிகா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

“நீ எதுக்கு வந்திருக்கிற.. நீ என்ன செய்ய போற.. உன்னோட மோடிவ் என்ன எல்லாம் தெரியாமலா உன்னை பக்கத்திலே வெச்சிருந்தேன்.. நான் சந்தோஷ் தீபிகா.. என்னை ஏமாற்ற யாராலும் முடியாது..” என்று கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தீபிகா..

மித்ராவும், பிரியாவும் பேசியபடியே கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பிரகாரத்தையும் சுற்றிவிட்டு வர அப்பொழுது பிரியாவைப் பார்த்த சந்தோஷ் வேகமாக சென்று அவளைத் தரதரவென்று இழுத்து வந்தான்..

தீடீரென யாரோ கையைப்பிடித்து இழுக்கவும், “யாருடா நீ..” என்றவள் சந்தோஷ் முகம் பார்த்தும், “அத்து..” என்றவள் அதிர்வோடு அழைக்க, “அண்ணா எதுக்கு அவளை இழுத்துட்டு போற..” என்றவள் அவனை பின் தொடர்ந்தாள்..

அவளை இழுத்துச் சென்று தீபிகாவின் முன்னாடி நிறுத்திய சந்தோஷ், “நீ எனக்கு வேண்டாம் தீபிகா..” என்றவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்தவன் கண்ணிமைக்கும் நொடியில் பிரியாவின் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சு போட்டான்..

“டேய் அண்ணா நீ என்ன காரியம் பண்ணிருக்கிற..” என்ற மித்ரா அலற தீபிகாவோ அதிர்ச்சியோடு இருவரையும் பார்த்தாள்.. பிரியாவால் இதை நம்பவே முடியவில்லை.. சந்தோஷ் இப்படியோரு காரியத்தைச் செய்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.. எல்லாமே நொடிபொழுதில் நிகழ்ந்தது..

பிரியா கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்துவிட்டு அதிர்வோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அவனோ தீபிகாவைப் பார்த்து, “நீ தீபக் மகள் என்றால் நான் பிருந்தாவோட மகன்டி.. என்னை உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது..” என்றவன் பிரியாவின் கைகளைப் பிடித்தான் சந்தோஷ்..

“நீ உரிமை இல்லன்னு சொன்ன இவள் தான் எனக்கு உரியவள்.. என்னோட குடும்பத்தை பிரிக்க நீ திட்டம் போடுவாய் என்ற என்னோட கணக்கு சரியாக இருக்குடி.. என்னோட குடும்பத்தை பிரிக்கணும் என்று நினைக்காதே அதுக்கு நான் விடவே மாட்டேன்..” என்றவன் தீபக்கைப் பார்த்தான்..

“எங்கம்மா உங்களுக்கு தம்பி என்ற உரிமை கொடுக்கவே இல்ல.. அதனால் உங்களுக்கு என்மேல் எந்த உரிமையும் இல்ல.. இன்னொரு முறை என்னிடம் விளையாட நினைக்காதீங்க.. அப்புறம் என்னோட சுயரூபம் உங்களுக்கு தெரியபடுத்த வேண்டி வரும்..” என்ற அண்ணனைப் பார்த்த மித்ராவின் கண்கள் கலங்கியது..

அவனை புரிந்து கொள்ளாமல் கோபத்தோடு இருந்தவள், “அண்ணா..” என்று அவனின் கையைப் பிடிக்க தீபிகாவோ அதிர்ச்சியோடு நின்றிருக்க, “உங்க மகளிடம் சொல்லி வைங்க.. என்னோட விழியாட நினைத்தால் அவள்தான் ஏமாந்து நிற்கணும்.. அவளோட விளையாட்டை இத்தோட நிறுத்திக்க சொல்லுங்க.. இந்த சந்தோஷை யாராலும் ஏமாற்ற முடியாது..” என்று அவளுக்கு ஏமாற்றத்தை பரிசாக கொடுத்தான்..

கடைசியாக தீபிகாவின் முகம் பார்த்தவன், “நான் இங்க கல்யாணம் பண்ணிக்க வந்தது உன்னை இல்லடி.. நீ யாருக்கு உரிமை இல்லன்னு சொன்னியோ அவளோட கழுத்தில் தாலிகட்ட தான் வந்தேன்..” என்று சொல்ல பிரியா நிமிர்ந்து சந்தோஷைப் பார்த்தாள்..

‘இவன் வீம்பிற்கு கல்யாணம் பண்ண நான்தான் கிடைச்சேனா..?’ என்று மனதிற்குள் நினைத்தவள் அவனை கொலைவெறியுடன் பார்க்க மித்ராவோ புரிதலோடு பார்த்தாள்..

அதையெல்லாம் கவனிக்காத சந்தோஷ் ஒரு கையில் பிரியாவையும், இன்னொரு கையில் மித்ராவையும் அழைத்துக்கொண்டு செல்வதைப் பார்த்து தீபிகாவின் கோபம் எகிறியது..

அவளின் திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கிய சந்தோஷின் மனதை பிரியா சரியாக புரியாமல் அவனின் மீது கோபத்தோடு இருந்தாள்.. அவன் முதலில் இருந்து பேசியதைக் கவனித்திருந்தால் சந்தோஷை அவள் பிரிந்து சென்றிருக்க மாட்டாளோ..???
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவள் சென்றதும் தீபிகாவிற்கு போன் செய்த சந்தோஷ், “எந்த கோவிலில் இருக்கிற தீபி..” என்றவன் கேட்டதும், “வடபழனி முருகன் கோவிலில்தான் இருக்கிறேன் சந்தோஷ்.. நீ எப்போ வருவாய்..” என்றவள் அவனிடம் கேட்டதும், “நான் வந்துட்டே இருக்கிறேன்..” என்றவன் போனை வைத்துவிட்டு வேகமாக கிளம்பிச் சென்றான்..

சந்தோஷ் நேராக கோவிலுக்கு செல்ல மித்ராவிற்கு அழைத்து, “மித்து நீ எங்க இருக்கிற..?” என்று கேட்டதும், “அண்ணா நான் கோவிலில் இருக்கேன்..” என்றதும் போனை வைத்துவிட்டான்.. அவன் எதற்காக அழைத்தான் என்று புரியாத மித்ராவோ, ‘இவனை என்ன பண்றது என்று தெரியல..’ என்று எரிச்சலோடு பல்லைக் கடித்தாள்..

தீபிகா சொன்னது போலவே கோவிலுக்கு வந்து காத்திருந்தாள்..

அவன் கோவிலின் உள்ளே நுழைய சந்தோஷ் வருவதைப் பார்த்த தீபிகா, “என்ன சந்தோஷ் தனியாக வர..?” என்றவளின் உள்ளிருந்த பாம்பு தன்னுடைய தலையைத் தூக்க, “அம்மாவும் அப்பாவும் வந்துட்டு இருக்காங்க தீபிகா.. நீ ஏன் இப்படி கேட்கிற..” என்றவன் புரியாமல் கேட்டான்..

“உங்க அம்மா, அப்பா வந்தால் தானே ரொம்ப நல்ல இருக்கும்..” என்று இருபொருள்பட கூறிய தீபிகாவிற்கு ஒரு விஷயம் தெரியாது.. அவள் தீபக் மகள் என்ற உண்மை சந்தோஷிற்கு தெரியும் என்பது பாவம் அவள் அறியாத விஷயம்.. அடுத்து சந்தோஷை தன்னுடைய வலையில் விழ வைத்தாக அவள் நினைத்தாள்..

ஆனால் சந்தோஷ் விரித்த வலையில் தான் அவள் மாட்டிகொண்டாள் என்ற உண்மையறியாத தீபிகா, “டேய் எங்க அப்பா யாருன்னு தெரியாமல் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்து நிற்கும் உன்னை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருது சந்தோஷ்..” என்று சிரித்தவளை அவன் புரியாத பார்வை பார்த்தவன்,

“நீ யாரு தீபிகா...? உன்னோட அப்பா யாரு..?” என்றவன் எதுவும் தெரியாது போலவே கேட்டதும், “நான் தீபக் மகள்.. உன்னோட மாமன் மகள் தீபிகா..” என்றவள் கர்வத்தோடு சொல்ல, “ஏய் நீ என்ன சொல்ற..” என்றவன் அதிர்ச்சியில் நின்றான் சந்தோஷ்..

அப்பொழுது தூணின் மறைவில் இருந்து வெளியே வந்த தீபக்கை பார்த்தவன் தீபிகாவின் பேச்சில் கவனம் செலுத்தினான்.. “என்னோட அப்பாவை இங்கே தனிமையில் உட்கார வெச்சிட்டு நீங்க எல்லோரும் ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க இல்ல.. நீங்க எல்லோரும் நிம்மதியாக இருக்க இந்த தீபிகா விடுவேனா..?” என்று திமிராக கேட்டாள்..

அவளின் ஒவ்வொரு கேள்விக்கும், ‘பொறுமையாக இரு மனமே..’ என்றவன் அமைதியாக நின்றிருந்தான்.. சந்தோஷிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக, “என்னடா அமைதியாக நிற்கிற..” என்றவள் ஒரு புருவம் உயர்த்திட, “என்னை ஏமாற்ற வந்தீயா தீபி..” என்று சந்தோஷ் கரகரப்பான குரலுடன் கேட்டான்..

“நீ சந்தோசமாக இருக்கக்கூடாது சந்தோஷ்.. உன்னோட பெயரில் இருக்கும் சந்தோசம் உனக்கு இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்கும் யாருக்கும் கிடைக்க கூடாது..” என்று வீம்புடன் கூறியவளின் முகத்தில் அவனை வென்றுவிட்ட கர்வம் கண்ட சந்தோஷ், ‘என்னை நீ இன்னும் புரிஞ்சிக்கவே இல்லடி..’ என்று நினைத்தான்..

தீபக்கோ, ‘இந்த மாதிரி ஒரு மகளை வளர்த்து வைத்திருக்கிறேனே..’ என்று தலையில் அடித்து கொள்ளாத குறையாக நின்றிருந்தார்..

“என்னோட கழுத்தில் தாலிகட்ட வந்த இல்ல.. நீ என்னோட கழுத்தில் தாலிகட்டு.. நான் அதை கழட்டி உன்னோட முகத்தில் வீசுகிறேன்.. அப்போதானே நீ செத்துப்போனதற்கு சமம்..” என்றவள் சொல்ல, ‘இவளை இழுத்து நாலு அறைவிட்டால் என்ன..?’ என்று தீபக்கிற்குத் தோன்றியது

“நீ இப்படியொரு எண்ணத்தோடு வந்த்திருப்பாய் என்று நான் நினைக்கவே இல்ல தீபிகா.. எப்பொழுதும் என்னையே சுற்றி வரும் என்னோட பிரியாவை விட்டுவிட்டு உன்னை காதலிச்சது தாண்டி நான் செய் பெரிய தவறு..” என்றவன் வருத்தத்தோடு கூறினான்..

“எனக்கு உரிமை இல்லாத பொருள் வேற யாருக்கும் கிடக்க கூடாது.. நீ சந்தோஷமாக இருக்கக்கூடாது என்றுதான் அவளுக்கு உன்மேல உரிமையே இல்லன்னு சொன்னேன்.. அவ உன்னைவிட்டு விலகி நின்னது எனக்கு ரொம்ப வசதியாக போச்சு..” என்றவள் சாதாரணமாக கூறினாள்..

“என்னை பழிவாங்கிட்ட இல்ல..” என்றவன் கரகரத்த குரலில் கேட்டதும், “உன்னிடம் பழகியதே உன்னைப் பழி வாங்கத்தான் சந்தோஷ்..” என்றவள் தொடர்ந்து, “உன்னை பார்த்து என்னோட அத்தை துடிக்கனும்.. உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னோட அத்தை எங்க வீட்டு வாசலுக்கு வரணும் சந்தோஷ்..” என்றவள் அவளின் திட்டத்தை சொல்ல சொல்ல சந்தோஷ் கோபம் அதிகரித்தது..

“எங்க சந்தோஷ் என்னோட அத்தையும் மாமாவும்..?” என்றவள் பாசத்தோடு கேட்க, “ஏய் நிறுத்துடி..” என்றவன் திமிருடன் சொல்ல திகைத்த தீபிகா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

“நீ எதுக்கு வந்திருக்கிற.. நீ என்ன செய்ய போற.. உன்னோட மோடிவ் என்ன எல்லாம் தெரியாமலா உன்னை பக்கத்திலே வெச்சிருந்தேன்.. நான் சந்தோஷ் தீபிகா.. என்னை ஏமாற்ற யாராலும் முடியாது..” என்று கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தீபிகா..

மித்ராவும், பிரியாவும் பேசியபடியே கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பிரகாரத்தையும் சுற்றிவிட்டு வர அப்பொழுது பிரியாவைப் பார்த்த சந்தோஷ் வேகமாக சென்று அவளைத் தரதரவென்று இழுத்து வந்தான்..

தீடீரென யாரோ கையைப்பிடித்து இழுக்கவும், “யாருடா நீ..” என்றவள் சந்தோஷ் முகம் பார்த்தும், “அத்து..” என்றவள் அதிர்வோடு அழைக்க, “அண்ணா எதுக்கு அவளை இழுத்துட்டு போற..” என்றவள் அவனை பின் தொடர்ந்தாள்..

அவளை இழுத்துச் சென்று தீபிகாவின் முன்னாடி நிறுத்திய சந்தோஷ், “நீ எனக்கு வேண்டாம் தீபிகா..” என்றவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து தாலியை எடுத்தவன் கண்ணிமைக்கும் நொடியில் பிரியாவின் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சு போட்டான்..

“டேய் அண்ணா நீ என்ன காரியம் பண்ணிருக்கிற..” என்ற மித்ரா அலற தீபிகாவோ அதிர்ச்சியோடு இருவரையும் பார்த்தாள்.. பிரியாவால் இதை நம்பவே முடியவில்லை.. சந்தோஷ் இப்படியோரு காரியத்தைச் செய்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.. எல்லாமே நொடிபொழுதில் நிகழ்ந்தது..

பிரியா கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்துவிட்டு அதிர்வோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அவனோ தீபிகாவைப் பார்த்து, “நீ தீபக் மகள் என்றால் நான் பிருந்தாவோட மகன்டி.. என்னை உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது..” என்றவன் பிரியாவின் கைகளைப் பிடித்தான் சந்தோஷ்..

“நீ உரிமை இல்லன்னு சொன்ன இவள் தான் எனக்கு உரியவள்.. என்னோட குடும்பத்தை பிரிக்க நீ திட்டம் போடுவாய் என்ற என்னோட கணக்கு சரியாக இருக்குடி.. என்னோட குடும்பத்தை பிரிக்கணும் என்று நினைக்காதே அதுக்கு நான் விடவே மாட்டேன்..” என்றவன் தீபக்கைப் பார்த்தான்..

“எங்கம்மா உங்களுக்கு தம்பி என்ற உரிமை கொடுக்கவே இல்ல.. அதனால் உங்களுக்கு என்மேல் எந்த உரிமையும் இல்ல.. இன்னொரு முறை என்னிடம் விளையாட நினைக்காதீங்க.. அப்புறம் என்னோட சுயரூபம் உங்களுக்கு தெரியபடுத்த வேண்டி வரும்..” என்ற அண்ணனைப் பார்த்த மித்ராவின் கண்கள் கலங்கியது..

அவனை புரிந்து கொள்ளாமல் கோபத்தோடு இருந்தவள், “அண்ணா..” என்று அவனின் கையைப் பிடிக்க தீபிகாவோ அதிர்ச்சியோடு நின்றிருக்க, “உங்க மகளிடம் சொல்லி வைங்க.. என்னோட விழியாட நினைத்தால் அவள்தான் ஏமாந்து நிற்கணும்.. அவளோட விளையாட்டை இத்தோட நிறுத்திக்க சொல்லுங்க.. இந்த சந்தோஷை யாராலும் ஏமாற்ற முடியாது..” என்று அவளுக்கு ஏமாற்றத்தை பரிசாக கொடுத்தான்..

கடைசியாக தீபிகாவின் முகம் பார்த்தவன், “நான் இங்க கல்யாணம் பண்ணிக்க வந்தது உன்னை இல்லடி.. நீ யாருக்கு உரிமை இல்லன்னு சொன்னியோ அவளோட கழுத்தில் தாலிகட்ட தான் வந்தேன்..” என்று சொல்ல பிரியா நிமிர்ந்து சந்தோஷைப் பார்த்தாள்..

‘இவன் வீம்பிற்கு கல்யாணம் பண்ண நான்தான் கிடைச்சேனா..?’ என்று மனதிற்குள் நினைத்தவள் அவனை கொலைவெறியுடன் பார்க்க மித்ராவோ புரிதலோடு பார்த்தாள்..

அதையெல்லாம் கவனிக்காத சந்தோஷ் ஒரு கையில் பிரியாவையும், இன்னொரு கையில் பிரியாவையும் அழைத்துக்கொண்டு செல்வதைப் பார்த்து தீபிகாவின் கோபம் எகிறியது..

அவளின் திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கிய சந்தோஷின் மனதை பிரியா சரியாக புரியாமல் அவனின் மீது கோபத்தோடு இருந்தாள்.. அவன் முதலில் இருந்து பேசியதைக் கவனித்திருந்தால் சந்தோஷை அவள் பிரிந்து சென்றிருக்க மாட்டாளோ..???
கடைசி பாராவுக்கு முந்தின
பாராவில் "ஒரு கையில்
பிரியாவையும் இன்னொரு
கையில் பிரியாவையும்
அழைத்துக்கொண்டு
செல்வதைப் பார்த்து"-ன்னு
வருதே?
தப்பாயிருக்கே, சந்தியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சபாஷ், சந்தோஷ்
நான் நினைச்ச மாதிரியே
பிரியதர்ஷினியை கல்யாணம் செஞ்சுட்டானே?
சூப்பர், சந்தியா டியர்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கடைசி பாராவுக்கு முந்தின
பாராவில் "ஒரு கையில்
பிரியாவையும் இன்னொரு
கையில் பிரியாவையும்
அழைத்துக்கொண்டு
செல்வதைப் பார்த்து"-ன்னு
வருதே?
தப்பாயிருக்கே, சந்தியா டியர்?
சரிபண்ணிடேன் பானுமா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top