• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
mahilam6.jpg

அத்தியாயம் – 12

மகிழம்பூவின் மணம் அறிந்த பெண்ணே..

இந்த மகிழனின் மனம் அறியாயோ..

மலரின் மணம் புரிந்தவளுக்கு

இந்த மகிழனின் மனம் புரியாதோ..

சொல்லடி எனது துளிர்நிலவே..

மகிழனை பரிசோதித்த டாக்டர் செல்லும் வரையில் மகிழனின் முகம் பார்த்துக் கொண்டே இருந்த வளரின் பார்வை முழுவதும் மகிழனின் மீதே இருந்தது.. அவளின் மனம் முழுவதும் அவனின் மீதே இருக்க, ‘பனமரம் மேல எனக்கு எதுக்கு இம்புட்டு அக்கறை..’ என்று தன்னுடைய மனதிடமே கேள்விக் கேட்டாள் வளர்மதி.. இந்த கேள்வியை மகிழனிடம் கேட்டிருந்தால் அவன் சொல்லி இருப்பான்.. அவளின் அக்கறைக்கு என்ன காரணம் என்று..!

மகிழனின் முகத்தைப் பார்த்த சிவராமன், ‘இவனோடு நான் இருந்தும் இவனை சரியாக கவனிக்காம விட்டுவிட்டேனே.. இந்த வளரு வந்து உண்மையைச் சொல்லாட்டி இவனோட நிலை என்ன..?’ என்று நினைத்தவரின் மனம் வலித்தது.. பிறகும் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவராமனின் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது..

வளர்மதி மகிழனின் முகத்தையே பார்க்க அதை கவனிக்காத மகிழன் பானுமாவின் முகத்தையே யோசனையோடு பார்த்தான்.. ஒருவேளை வளரின் முகத்தைப் பார்த்திருந்தால் அவளின் மனதை அறிந்திருப்பானோ..? ‘தன்னை சுற்றி என்ன நடக்கிறது..?’ என்று அறியாத பானுமாவோ டாக்டரிடம் எல்லா விவரத்தையும் கவனமாகக் கேட்டறிந்தார்..

மகிழனின் முகத்தைப் பார்த்து நிம்மதியடைந்த சிவராமன் பானுமாவின் முகத்தைப் பார்த்தார்.. அவரின் அக்கறையைக் கவனித்தவர், ‘இது யாரோ என்னும் பொழுதே இவ்வளவு அக்கறையாக இருப்பவள்.. இவன் தன்னுடைய மூத்தபேரன் என்று அறிந்தால் இதே பாசத்தோடு இருப்பாளா..?’ என்று யோசித்தார்..

கணவனின் மனதினை அறியாத பானுமா வளரின் பக்கம் திரும்பி, “ஏய் வளரு கீழே போய் உன்னோட அம்மாட்ட மகிழனுக்கு கஞ்சி வைக்க சொல்லு..” என்று சொல்லவும் திடுக்கிட்டு நிமிர்ந்த வளரு, ‘பானுமா என்ன சொன்னார்..’ என்று தெரியாமலே சரியென்று தலையசைத்தவள் அடுத்தநொடியே அறையைவிட்டு வெளியே சென்றாள்..

அங்கே நடப்பதை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த மகிழன் வளர் அறையைவிட்டு செல்வதை அப்பொழுதுதான் கவனித்தான்.. அவளைப் பார்த்தவனின் மனம், ‘இந்த வளருக்கு அவளின் மனம் என்று புரியுமோ..?’ என்று வருத்ததோடு நினைத்தவனின் மனம் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நடந்ததை நினைத்துப் பார்த்தது..

அவள் தன மீது காட்டிய பாசம் கலந்த அக்கறையை உணர்ந்தவன், ‘உனக்கே உண்மை புரியும்டி..’ என்று நினைத்தவன் மனம் யோசனையில் ஆழ்ந்தது.. வளர்மதி அறையைவிட்டு வெளியே சென்றதும் கணவரின் பக்கம் திரும்பியவர், “என்னங்க நான் மகிழனை பார்த்துக்கிறேன்.. நீங்க ஆலைக்கு கெளம்புங்க..” என்று சொல்ல மகிழனின் முகத்தைப் பார்த்தார் சிவராமன்...

அவனின் முகம் யோசனையில் ஆழ்ந்திருக்க, ‘இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்..’ என்று மனதில் நினைத்தவர், “சரி மகிழா உடம்பைப் பார்த்துக்கோப்பா.. நான் ஆலைக்கு போறேன்..” என்று சொல்ல பானுமாவின் மீதிருந்த பார்வையைத் திருப்பியவன், “சரிங்க தாத்தா..” என்று சொல்ல அவரும் அறையைவிட்டு வெளியே சென்றார்..

அவரின் பின்னோடு அறையைவிட்டு வெளியே சென்ற பானுமா, “ஏய் வளரு சீக்கிரம் வாடி.. புள்ளைக்கு கஞ்சி கொடுத்துட்டு மாத்திரை கொடுக்கணும்..” என்று ஹாலுக்கு குரல் கொடுத்துவிட்டு மகிழனின் அறைக்குள் சென்றார்.. அவர்கள் சென்றதும் மகிழனின் அருகில் அமர்ந்த பானுமா, “மகிழா இப்போ எப்படிப்பா இருக்கு..?” என்று கேட்டார்.. அவன் பதில் பேசாமல் அமைதியாக அவனின் முகத்தையே பார்த்தான்..

‘என்னோட பாட்டி எதுக்கு அன்னைக்கு அப்படி கேட்டாங்க..?’ என்ற கேள்வியோடு பானுமாவின் முகத்தைப் பார்த்தான்.. அவனுக்கு அதற்கான விடை தேவையாக இருந்தது.. அந்த வீட்டு வந்த நாளில் இருந்தே பானுமா அவனிடம் இயல்பாக பேசியது கிடையாது.. அவர் விலகி செல்வது இவனின் மனதிற்கு தெரிந்தாலும் கூட இவன் அதை கண்டும் காணாதது போலவே இருந்தான்..

அவனின் மனமும் சிலநேரம் அவரின் அன்பை எதிர்பார்க்கும்.. தன்னுடைய மனதை அடக்கிக்கொண்டு அவரை கடந்து செல்வான்.. இப்பொழுது அவரே வந்து பேசவும் அவனின் மநம் சந்தோஷம் அடைந்தாலும் அன்று அவர் கேட்ட கேள்வி அவனின் மனதை வண்டாக குடைந்தது.. அதை எப்படி கேட்பது என்று புரியாமலே அமைதியாக அவரின் முகம் பார்த்தான் மகிழன்..

அவனின் அமைதி பானுமாவின் மனதினை பாதிக்க அவரின் முகம் மாறியது.. அவன் ஏதோ கேட்க நினைப்பதை அவனின் முகம் பார்த்து உணர்ந்த பானுமா மகிழனின் தலையை வருடிக் கொடுத்தபடியே, “என்ன மகிழா என்னிடம் ஏதாவது கேட்கணுமா..?” என்று கேட்டார்.. அவர் தன்னுடைய மனதில் இருப்பதை கேட்பார் என்று அறியாதவன் அவரின் முகத்தை திகைப்புடன் பார்த்தான்..

“பாட்டி நான் இங்கே வந்த அன்னைக்கு, ‘இங்கே பரிதாபத்தை எல்லாம் எதிர்பார்க்காதே.. இங்கே அது எல்லாம் ரொம்ப கம்மின்னு..’ சொன்னீங்க.. இப்போ எதுக்காக பாட்டி என்னிடம் பரிதாபம் காட்டிறீங்க..?” என்று மனதில் நினைத்தை ‘தேங்காய் உடைத்தது போல..’ கேட்டான்.. அவனின் முகத்தைப் பார்த்த பானுமா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்..

மகிழன் கேள்வியோடு பானுமாவின் முகம் பார்க்க, “அன்னைக்கு சொன்னதை இன்னுமா நெனச்சுட்டு இருக்கிற..?” என்று கேட்டதும், “எனக்கு தெரியனும் பாட்டி இப்போ மட்டும் எதுக்கு எனக்கு பரிதாபம் பாக்கிறீங்கன்னு எனக்கு தெரியணும்.. இப்போ இவ்வளவு அன்பாக இருக்கும் நீங்க அப்போ எதுக்கு என்னிடம் அப்படி சொன்னீங்க..?” என்று கேட்டான்..

அவனின் தெளிவான பேச்சு பானுமாவின் மனத்தைக் கவர, “இப்போ உலகம் பழைய மாதிரி இல்ல ராசா.. அப்போ எல்லாம் இருந்த உலகம் வேற.. இப்போ இருக்கிற உலகமே வேற.. பரிதாபம் பார்த்தாலே அவங்க பாவத்தை தான் சன்மானமாக கொடுக்கிறாங்கப்பா.. அதுதான் அப்படி சொல்லிட்டேன்..” என்று எங்கோ பார்த்தபடியே கூறினார்..

அவரின் முகத்தையே பார்த்த மகிழன் அவரின் கைகளுக்கு அழுத்தம் கொடுக்க அவனின் முகத்தைப் பார்த்து சிரித்த பானுமா, “உனக்கும் என்னோட பேரனோட வயசுதானப்பா ஆகுது.. அதுதான் மனசு கேட்காம உன்ன பார்க்க வந்தேன்..” என்று கூறியவர் அவனின் முகத்தை வருடிக் கொடுத்தார்.. அதில் இருந்த பாசத்தில் இளைப்பாறினான் மகிழன்..

அவன் இமைக்காமல் பானுமாவின் முகத்தைப் பார்க்க, “என்னோட வார்த்தை உன்னோட மனசை பாதிச்சிருந்த மன்னிச்சிரு ராசா.. என்னோட பேரன் வெளிநாட்டுல இருக்கான்.. அவனோட முகம் கூட நான் பார்த்து இல்ல.. சின்ன பேரனோட போட்டோ மட்டும் தபால வரும்..” என்றவரின் மனதில் இதுநாள் வரை இருந்த ஏக்கத்தை எல்லாம் அவனிடம் சொல்ல ஆரம்பித்தார்..

அவரின் மனதில் இருக்கும் ஏக்கத்தை அவரின் வார்த்தையில் அறிந்தவனின் மனம் வலித்தது.. ஒவ்வொரு பணக்கார வீட்டிலும் இதுதான் நிலை.. படிப்பு, வேலை என்று ஊரைவிட்டு வெளியே செல்லும் மகன், மகளையும், பேரன், பேத்தியையும் பார்க்காமலே காலம் முழுவதும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் முதியோர் நிலையை தன்னுடைய பாட்டியின் முகத்தில் பார்த்த மகிழனின் கண்கள் லேசாக கலங்கியது..

அவன் கண்கள் கலங்குவதைப் பார்த்த பானுமா, “என்ன ராசா கைகால் வலிக்குதுதா..?” என்று கேட்டார்.. அவரின் குரலில் பாசம் இருப்பதை உணர்ந்த மகிழன், ‘பாட்டியோட மனசில இவ்வளவு ஏக்கம் இருக்கா..? உங்க மனசு புரியாம எல்லோரும் உங்கள ஏமாத்திட்டு இருக்கோம் பாட்டி..’ என்று குற்ற உணர்வுடன் நினைத்தான்..

அவனின் முகத்தை வைத்தே மனதினை கணிக்க முடியாத பானுமா, “என்னப்பா..?” என்று கேட்டதும் ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன் கண்மூடிப்படுத்தான்.. அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவனின் அருகில் அமர்ந்திருந்த பானுமாவின் மனம், ‘இந்த புள்ளைய அன்னைக்கு நானும் அப்படி கேட்டிருக்கக்கூடாது.. அத மறக்காம அப்படி மனசில வெச்சிருக்கான்..’ என்று நினைத்தார்..

மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த சிவராமன் வளர்மதி எங்கே என்று பார்க்க அவளோ முன் வாசலுக்கு ஏதோ வேலையாக சென்றிருந்தாள்.. அதைக் கவனித்தவர் சமையலறைக்குள் எட்டிப்பார்க்க அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த பொன்னுத்தாயைப் பார்த்துவிட்டு மெல்ல சமையறை பக்கம் சென்றவர், “பொன்னுத்தாய்..” என்று அழைத்தார்.. சிவராமனின் குரல் கேட்டு திரும்பிய பொன்னுதாய், “ஐயா என்னங்க..” என்று பணிவாகக் கேட்டார்..

பொன்னுத்தாயின் முகம் பார்த்தவர் ஒருநிமிடம், ‘இவளிடம் உண்மையைச் சொல்லலாமா..?’ என்று யோசித்தார்.. அவரின் முகத்தை கேள்வியோடு பார்த்து நின்ற பொன்னுத்தாயைப் பார்த்தவர், ‘அப்பவே உண்மையைச் சொல்லாம இருந்த புள்ளை இது.. இப்போவா உண்மையை வெளியே சொல்ல போகுது..’ என்று நினைத்தவர் உண்மையை பொன்னுதாயிடம் சொன்னார்..

“பொன்னுத்தாய் என்னோட பேரனுக்கு முடியலம்மா.. பானுவால் அடிக்கடி மாடியேற முடியாது.. அதனால வளரை அப்போ அப்போ போய் பார்த்துட்டு வர சொல்லும்மா..” என்று மெதுவாக கூறினார்.. அவர் சொன்னதைக் கேட்ட பொன்னுத்தாய் பேய் அறைந்தது போல அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றார்..

அவரின் முகத்தைப் பார்த்த சிவராமன், “பொன்னுத்தாயி என்னம்மா ஆச்சு..?” என்று கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த பொன்னுத்தாயிக்கு பேச வாய் வரவில்லை..

‘ஐயா என்ன சொல்றாக.. மகிழன் இவுக பேரனா..?’ என்ற கேள்வியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தவரின் முகத்தில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்த சிவராமன், “சின்ன வயசில இங்க இருந்தவன் தான்ம்மா.. உன்னோட மகளுக்கு கூட பேரு வெச்சானே மறந்துட்டியா பொன்னுத்தாய்..” என்று கேட்டதும் பொன்னுத்தாயின் மனதில் மகிழனின் பிள்ளை முகம் வந்து சென்றது..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
‘சின்ன வயசில இந்த வீட்டில் வளர்ந்த பையன் தான் இந்த மகிழனா..? அப்போ அம்மா இந்த பேரனைத் தானே நெதமும் ஜெயாம்மா கிட்ட விசாரிக்கிறாங்க..’ என்று சிந்தனையில் மூழ்கியவர் முகம் கொஞ்சம் தெளிவடைந்தது.. மகிழன் அவருடைய பேரன் என்ற விஷயம் தெரிந்தது பொன்னுத்தாய் மனம் சந்தோஷம் அடைந்தது.. இருந்தாலும் அவரின் மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி எழ அதை அவரிடமே கேட்டுவிட்டார்..

“ஐயா சின்னதில தான் அம்மாவுக்கு தெரியாம பிள்ளையை இங்க அழச்சிட்டு வந்தீங்க.. இப்பவும் அம்மாவுக்கு தெரியாம இங்க அழைச்சிட்டு வந்து தங்க வெச்சிருக்கீங்க..” என்றவர் இழுக்கவும், “சொல்ல வந்ததை முழுசாக சொல்லும்மா..” என்றவர் கூறினார். அவரின் குரலில் தைரியம் பெற்ற பொன்னுத்தாய், “ஐயா இந்த உண்மையை அம்மாவிடம் சொல்லிருக்கலாமே..” என்று கேட்டதும் பொன்னுத்தாயை முறைத்தார் சிவராமன்..

அவர் தன்னை முறைப்பதைப் பார்த்தும், “ஐயா எதுக்குங்க முறைக்கிறீங்க..?” என்று சந்தேகமாக கேட்ட பொன்னுதாயைப் பார்த்தவர், “அந்த விளக்கம் எல்லாம் சொல்ல முடியாதும்மா.. அப்போ உன்னிடம் சொன்ன விஷயத்தை எப்படி பாதுக்காப்பாக வெச்சிருந்தியோ அதே போல இதையும் உன்னோட மனசில வெச்சுக்க பொன்னுத்தாய்..” என்றவர கூறியதும் அவரும் சரியென தலையசைத்தார்..

அவரின் முகத்தைப் பார்த்த சிவராமன், “இதெல்லாம் உன்னிடம் சொல்ல காரணம் நீ என்னோட மக மாதிரிம்மா.. வளரு என்னோட பேத்தி மாதிரி பார்க்கிறேன்.. அவன் அங்கிருந்து இங்க வந்திருப்பது எதுக்குன்னு உனக்கே போக போக தெரியும்..” என்று பொன்னுதாயைப் பார்த்து பரிவுடன் கூறியவரின் முகத்தைப் பார்த்த பொன்னுத்தாய் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்..

“நீ வளரை அடிக்கடி அனுப்பி அவனோட உடல்நிலை நல்ல இருக்கான்னு பார்த்துக்கோ..” என்று கண்டிப்புடன் கூறியவர் வெளியே செல்ல திரும்பியவர் ஏதோதோன்ற போன்னுதாயின் முகத்தைப் பார்த்து, “நான் உன்னிடம் சொன்னதை யாரிடமும் சொல்லாதம்மா.. பெரிய பிரச்சனையே ஆகிரும்.. உனக்கு தெரிந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாம பார்த்துக் கொள்வது உன்னோட பொறுப்பு..” என்று கூறியவர் வெளியே சென்றார்..

அவர் செல்லும் வரையில் மனதில் இல்லாத பதட்டம் ஒன்று பொன்னுதாயின் மனதில் எழுந்து அவரை கலங்கடித்தது... ‘இதுவரை மகிழன் யாரோ ஒருவன் என்று நினைச்சா.. இப்போ இந்த வீட்டோட மூத்த பேரானா மகிழன் தம்பி.. ஐயா வாட்டுக்கும் என்னோட தலையில இடியை இறக்கிட்டு போறாரே.. அம்மாவுக்கு இந்த உண்மை இன்னும் தெரியாதே..’ என்று மனதில் புலம்பியபடியே மகிழனுக்கு கஞ்சியை வைத்தார்..

அவர் கஞ்சி வைத்து முடித்ததும் வெளியே சென்று, “வளரு இங்கே வா..” என்று கூப்பிட்ட மறுநொடி தோட்டத்தில் இருந்து மூச்சிரைக்க ஓடி வந்த வளரு, “என்னங்கம்மா..” என்று கேட்டவண்ணம் பொன்னுத்தாயின் முன்னாடி வந்து நின்ற வளரின் வேகத்தைப் பார்த்த பொன்னுத்தாய்க்கு மனம் கருக்கென்றது.. இவ எதுக்கு இந்த ஓட்டமாக ஓடிவரா..?’ என்ற கேள்வி அவரின் மனதில் எழுந்தது..

“ஏய் எதுக்குடி இம்புட்டு வேகமா வர..?” என்று அதட்டலுடன் கேட்ட அம்மாவின் முகத்தைப் பார்த்த வளரு, “நானு இப்போ ஓடி வந்ததில என்ன ஆயிடுச்சு..” என்று இடையில் கையூன்றியபடி கேட்ட வளரைப் பார்த்த பொன்னுத்தாய், இவள நெனச்சாத்தான் மனசு பதறுது..’ என்று பயத்தோடு நினைத்தார்..

“உனக்கு எல்லா வெளக்கமும் சொல்லணுமோ..” என்று கேட்டவர் அவளின் கையில் கஞ்சியைக் கொடுத்து, “இதை கொண்டு போயி அம்மாகிட்ட கொடுத்துட்டு வாடி..” என்று சொல்ல, ‘இந்த அம்மா எதுக்கு இப்போ என்ன திட்டுதுன்னு தெரியல..’ என்று மனதில் நினைத்தவள் அதை வாங்கிக்கொண்டு மாடியேறினாள்.. மகிழனின் அறைக்குள் நுழைந்த வளரு, “இந்தாங்க பானுமா..” என்று கூறினாள்..

அவளிடம் கஞ்சியை வாங்கிய பானுமா மகிழனுக்கு ஊட்டிவிட அவனும் மறுக்காமல் சாப்பிட்டான்.. பானுமா அவனின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள அவனின் உடல்நிலை மெல்ல தேறியது.. இரண்டு நாளில் எழுந்து நடப்பவனைப் பார்த்த பானுமாவின் மனம் நிம்மதியடைந்தது.. ஒருவாரம் அமைதியாக சென்றது.. வளரோ தனது மனதில் பூத்த நேசத்தினை அறியாமலே அமைதியாக தோட்டம் காடுகரை என்று எப்பொழுதும் போலவே சுற்றி வந்தாள்..

அன்று காலைப்பொழுது விடிய தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்த மகிழனின் பார்வை எப்பொழுதும் போலவே தோட்டத்தின் பக்கம் சென்றது.. அங்கே வளரு எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.. அவனும் அங்கே வந்த நாளில் இருந்து அவள் தோட்டத்தில் தண்ணீர் விட்டால் மகிழம்பூ மரத்திற்கு மட்டும் தண்ணீரே விடாமல் நகருவதை அவனும் கவனித்தபடி இருந்தான்..

இன்றும் அதே போல நகர்வதைப் பார்த்தவன் ‘இவ ஏன் அந்த மரத்திற்கு மட்டும் தண்ணீயே விடாமல் இருக்கிறா..?’ என்ற எண்ணம் மனதில் எழுந்ததும் அவளை நோக்கி சென்றான் மகிழன்.. வளர்மதியோ ஏதோ சிந்தனையில் இருந்ததால் அவன் வருவதை அவள் கவனிக்கவே இல்லை..

அவனின் அருகில் சென்று நின்றவன், “என்னோட அத்த மகளுக்கு அப்படி என்ன யோசனை..?” என்று கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த வளரு, “ச்சி பனமரம் நீயா..? வரும்போதே கூப்பிட மாட்ட..? மனசு அப்படி பதரிருச்சு..” என்று பதட்டத்தோடு கூறியவளைப் பார்த்தவனின் உதட்டில் புன்னகை அரும்பியது..

“என்னோட அத்த மகளுக்கு இம்புட்டு பயம் இருக்கோ..?” என்று குறும்புடன் கண்சிமிட்டியா மகிழனை முறைத்தாள் வளர்மதி.. அவள் முறைப்பதை எல்லாம் கவனிக்காதது போல நின்ற மகிழன், “ஆமா அந்த மரம் மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு..” என்று மகிழம்பூவின் மரத்தினை கை காட்டினான் மகிழன்.. அவன் கைகாட்டிய திசையைப் பார்த்த வளரு, “அதுக்கு நான் தண்ணீ விடமாட்டேனே..” என்று குறும்புடன் பதில் சொன்னவள் பூக்களை பறிக்க ஆரம்பித்தாள்..

“அதுக்கு காரணத்தைச் சொல்லுடி என்னோட அத்த மகளே..” என்று அவளை வம்புக்கு இழுத்தான் மகிழன்.. அவளை வம்பிழுப்பது அவனுக்கு ரொம்பவே பிடிக்கும்.. அவனின் முகத்தைப் பார்த்த வளரு, “அதுவா பனமரம்..” என்று கேட்டவள் அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு, “இங்கிருக்கும் அத்தன செடியோட பூவையும் என்னோட தலையில வெச்சுக்குவேன்..” என்று சொன்னவள் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்..

அவளின் முகத்தைப் பார்த்த மகிழன், “சொல்லுடி..” என்று சொல்ல அவன் ஒருமையில் அழைப்பதை கவனிக்காதவள், “அந்த மரத்தில பூக்கிற பூவை மட்டும் என்னோட தலையில வெச்சுக்க முடியாதில்ல..அதான் அந்த மரத்துக்கு நான் தண்ணீயே விட மாட்டேன்..” என்றவள் கூறினாள்..

அவள் அப்படி சொல்லி முடித்ததும், “அடியே இது ரொம்ப அநியாயம்.. மரம் என்னடி பாவம் பண்ணுச்சு..?” என்றவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்த வளரு, “அது பண்ணிய பாவமே அதோட வாசனைதான்னு சொல்லுவேன்..” என்றவள் சொல்ல அவளைப் புரியாத பார்வை பார்த்தான்.. அவனின் பார்வையைப் புரிந்துக் கொண்ட வளர்மதி, “என்ன பனமரம் நான் சொன்னது உன்னோட களிமண்ணு மண்டைக்கு ஏறலையா..?” என்று கிண்டலாகக் கேட்டாள்..

மகிழன் அவளை முறைக்க கலகலவென்று சிரித்த வளரு, “பனமரம் மகிழம்பூ ரொம்ப வாசனையாக இருக்கும்.. ஆனால் அதை தலையில வைக்க முடியாது.. வாசனை இருந்து மட்டும் என்ன பண்ண..? அது எதுக்கும் பயன்படலையே.. முக்கியமா எனக்கு அதில எந்த பயனுமே இல்ல.. அப்புறம் எப்படி நானு அதுக்கு தண்ணீவிட முடியுன்னு நீயே சொல்லு பனமரம்..?” என்று இடதுபுருவம் உயர்த்திக் கேள்வி கேட்டாள்..

அவனோ அவள் சொல்வதையும், அவளின் பாவனைகளையும் கண்ணெடுக்காமல் ரசித்தவனைக் கவனிக்காதவள், “இந்த பூச்செடி எல்லாமே எனக்கு பூ கொடுக்குது.. ஆனா அந்த பூ மட்டும் எனக்கு மணத்தை மட்டுமே கொடுக்குது.. நான் பாவமில்லையா...” என்று பரிதாபமாகக் கேட்டாள்..

அவள் முக பாவனையைக் கவனித்தபடியே நின்றவன் யோசிப்பது போல பாவனை செய்துக்கொண்டே, “அப்போ உனக்கு மகிழம்பூ பிடிக்காதா..?” என்று வருத்தத்துடன் கேட்டதும் இல்லையென தலையசைத்தவள் அவனின் குரலில் இருந்த வருத்தம் உணர்ந்தவள் எதுவும் பேசாமல் பூக்களைப் பறித்தவளைப் பார்த்த மகிழன், ‘மகிழம் பூ பிடிக்கலயாமாம்.. அப்புறம் எப்படி என்னை மட்டும் உனக்கு பிடிச்சிது..?’ என்று நினைத்தவன்,

“உனக்கு மகிழம் பூவை புடிக்க வைக்கிறேன்..” என்று சொல்ல அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “அதையும் பாக்கிறேன்..” என்று கூறியதும் சிரித்துக் கொண்டே அவளை விட்டு விலகிச் சென்றான் மகிழன்.. அவன் என்ன சொல்லிவிட்டு சென்றான் என்று புரியாமலே அவன் சென்ற திசையைப் பார்த்து நின்றாள் வளர்மதி..
நேசம் துளிர்விடும்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top