• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 15

உனது விழியில் இருந்து வந்த

கண்ணீர்த்துளி சொன்னதடி..

என் மீதான உன் நேசத்தை..

உனது மனதில் நான் விதைத்த

காதல்விதைகள் இன்று சோலையாக

மாறிவிட என்மனமோ அறிந்தடி

உன் அழமான காதலை

உனது கண்ணீர் துளியின் வழியாக..

எல்லோருமே கிளம்பும் வரையில் அமைதியாக தன்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் வளர்மதி.. அவளுக்கு துணையாக எல்லா வேலைகளையும் செய்து முடிக்க மீட்டிங் முடிந்ததும் மண்டபத்தின் பணத்தை முழுவதுமாகக் கொடுத்துவிட்டு சிவராமனின் நோக்கி வந்தாள்.. அவளின் பார்வையோ மகிழனின் மீதே இருந்தது..

சிவந்த நிறமும், அலையலையாக காற்றில் கலைந்த கேசமும், அடர்ந்த புருவமும், பார்ப்பவரின் மனதை படிக்கும் கண்களும், கூர்மையான நாசியும், அளவான மீசையும், அழுத்தமான உதடுகளும், ஆறடி உயரமும் திரண்டு தோள்களையும் பார்த்தபடியே நடந்து வந்தவளின் திருட்டு பார்வையை உணர்ந்தவனின் உதட்டில் ரகசிய புன்னகை மலர்ந்தது..

‘என்ன பார்வை பார்க்கிற பாரு.. சரியான திருட்டு கழுதா.. மனசில இருக்கிறதைச் சொல்லி தொலையேன்..’ என்று சொல்லிவிட, ‘ஏன் நீ சொன்னால் என்ன ஆகிரும்..’ என்று பதில் கவுன்டர் கொடுத்தது அவனின் மனம்.. அவனின் பார்வை தன்னை கண்டுபிடித்ததை உணர்ந்தவள் உதட்டைக் கடித்தாள்.. அவனின் பார்வை அவளின் உதட்டில் படிந்ததும் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..

அவளின் மனமோ, ‘என்னோட மனசில விழுந்த காதல் விதைகள் பயிராகவிட்டது.. என்னோட மனசில உன்னோட நினைவு தங்கிருச்சுடா.. உன்னோட பேரு கூட தெரியாது.. உன்ன விரும்புவதை என்னால சொல்ல முடிந்த அளவுக்கு நான் பானுமா மேல பாசம் வேச்சிடேனே.. இப்போ நான் என்னடா பண்ண போறேன்..’ என்று நினைத்தபடியே தலைகுனிந்து கொண்டவள் சிவராமனின் அருகில் சென்றாள்..

அவளின் பார்வையின் பொருள் புரிந்த பாரதியோ, ‘இந்த அக்காவுக்கு என்ன ஆச்சு.. இவங்க மனசில என்னதான் இருக்கு..?’ என்ற கேள்வி எழுந்துவிட பாரதி அமைதியாக பின்தொடர்ந்தாள்.. சிவராமனின் அருகில் சென்ற வளர்மதி தன்னுடைய பார்வையை மாற்றிக் கொண்டபடி “தாத்தா எல்லா வேலையும் முடிந்தது.. நாம் கிளம்பலாமா..?” என்று கேட்டாள்.. அவளின் குரலில் இருந்த கரகரப்பு உணர்ந்த மகிழனின் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தான்..

அவளோ அவனின் முகத்தைப் பார்க்காமல் நிற்க, பேரனின் முகம் பார்த்த சிவராமன், “நீ கிளம்புமா.. நாங்க ஆலைக்கு கிளம்பறோம்..” என்று சொல்ல அவளும் சரியென தலையசைத்துவிட்டு மகிழனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்த கண்ணீர்துளி சொல்லிவிட்டது.. அவளின் நெஞ்சத்தில் துளிர்விட்ட நேசத்தின் ஆழம் என்னவென்று..!

அந்த கண்ணீர்த்துளி சொல்லிவிட்ட காதலை உணர்ந்தவன் அவளின் விழியோடு உறவாட அவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் மெல்ல தலைகுனிந்தாள் துளிர்நிலா.. அவளின் விழியில் இருந்த காதலை உணர்ந்த மகிழனின் மனமோ, ‘இந்த ஒரு நிமிஷம் போதும் துளிரு.. உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுகொடுக்கம்வே மாட்டேன்.. என்னோட பாட்டியின் சம்மதத்தோட உன்னோட கரம்பிடிக்கிறேன்..’ என்று மனதில் நினைத்தவன் ஒரு நொடி விழிமூடி திறந்தான்..

அவனின் நெஞ்சத்தில் அவளின் பார்வை பல மாயம் செய்ய அவளை நிமிர்ந்து பார்த்தான்.. அவளின் விழியில் இருந்த தேடலை உணர்ந்தவன் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் ஒருநொடி கண்மூடித் திறக்க அவனின் பார்வையின் பொருள் புரிந்த துளிர்நிலா வாசலை நோக்கி முன்னே செல்ல அவளைப் பின் தொடர்ந்தாள் பாரதி.. இருவரின் நெஞ்சத்திலும் இருக்கும் நேசம் துளிர்விட்டது.. பார்வையில் உறவாடி அவளின் நெஞ்சத்தில் நேசத்தை துளிர்விட வைத்த மகிழனின் கையில் முடிவைக் கொடுத்துவிட்டு வாசலை நோக்கி நடந்தாள் அவனின் துளிர்நிலா..!

அவள் காரில் ஏறியதும் பாரதியைப் பார்த்து, “நீயும் ஏறு.. நான் உன்னை உன்னோட வீட்டில விட்டுட்டு போறேன்..” என்று சொல்லவும் பாரதியும் எதுவும் பேசாமல் காரில் ஏறியமர்ந்தாள்.. அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்த வளர்மதி, “பாரதி நீ குழப்பிக்காமல் இரு.. நடப்பது எதுவானாலும் நல்லதாகவே நடக்கட்டும்..” என்று சொல்லிவிட்டு காரை எடுத்தாள்..

பாரதியோ வளரின் முகத்தை யோசனையோடு பார்த்துவிட்டு, “அக்கா நீ அவரோட அத்தமகளா..?” என்று கேட்டதும் இல்லையென தலையசைக்க அவளை புரியாத பார்வை பார்த்தாள் பாரதி.. “அவரு நம்ம ஆலைக்கு மேனேஜர் வேலைக்கு வந்திருக்காரு.. பக்கத்தில இருக்கிற பாரியூர்தான் அவரோட ஊரு.. கிராமத்தில பிறந்து வளர்ந்ததால என்னை அத்தமக என்று ஒல்லி வம்பிழுக்கிறாரு..” என்று சொல்லியவள் காரை சீரான வேகத்தில் செலுத்தினாள்..

அவள் தனது முகத்தையே கவனிப்பது பார்த்து, “என்ன பாரதி..?” என்று கேட்டதும், “உங்களோட விருப்பப்படி நீங்க அந்த அண்ணாவைத் திருமணம் பண்ண உங்களோட வீட்டில ஒத்துக்குவாங்களா..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் சாலையில் இருந்து பார்வையைத் திருப்பி பாரதியின் முகம் பார்த்தவள், “எல்லாமே பானுமா எடுக்கிற முடிவில்தான் இருக்கு பாரதி..” என்று தன்னுடைய மனதை மறைத்து பொய் கூறியவள், மீண்டும் சாலையில் கவனத்தைத் திருப்பினாள்..

“அந்த மாமா பேரு உங்களுக்கு நிஜத்திலேயே தெரியாதா..? பானுமா மனசில என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..?” என்ற கேள்வியுடன் வளரின் முகம் பார்த்தாள் பாரதி.. அவளின் கேள்விக்கு மெளனமாக இல்லையேன தலையசைத்த வளர்மதி, “இவரோட பேரும் தெரியாது..” என்று கூறியவள், “பானுமா மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்று சொல்ல பாரதி வளரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.. “ஆனா அது நடக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்று கூறியவள் குரலில் இருந்த உறுதியைக் கண்கூட கண்டாள் பாரதி..

அவளின் மனமோ, ‘பானுமா இந்த அக்காவை அவங்க பேரனுக்கு கட்டி வைக்கணுன்னு நினைக்கிறாங்கன்னு எடுத்துக்கிட்டாலும், இவங்களோட ஆசைகளை இவங்க விட்டுகொடுக்க முடியுமா..? இது ஒன்றும் வழித்துணை இல்லையே.. இது இந்த அக்காவோட வாழ்க்கைத் துணை..’ என்று நினைத்தவள் மனதில் பாரம் ஏறியது.. அதற்குள் பாரதியின் வீடு வந்துவிட காரை நிறுத்திய வளர்மதி பாரதியின் முகம் பார்க்க அவளோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்..

அவளின் தோளைத் தட்டியவள், “என்னோட வாழ்க்கையோட முடிவு பானுமாவின் கையில இருக்கு.. நீ அதுக்காக யோசித்து நேரத்த வீண் பண்ணாதா..” என்று சொல்ல காரைவிட்டு கீழே இறங்கிய பாரதி வளரின் முகத்தைப் பார்த்தாள்.. “நல்ல படி பாரதி..” என்று சொல்லிவிட்டு காரை எடுத்தாள்.. அவள் காரை ஓட்டிக்கொண்டு செல்வதைப் பார்த்தபடியே நின்றாள் பாரதி..!

வளர்மதி வெளியே சென்றதும் பேரனின் பக்கம் திரும்பிய சிவராமன், “என்ன மகிழா.. என்னோட வளர்ப்பு பொண்ணு எப்படி இருக்கறா..?” என்று கேட்டதும் அவன் கொஞ்சமும் தயங்காமல், “வளரு இந்த அளவுக்கு திறமையான பெண் என்று எனக்கு இதுவரை தெரியாது தாத்தா..” என்று சொன்னவனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தார் சிவராமன்..

ஒரு துளி கண்ணீரில் காதலை வெளிப்படுத்திவிட்டு சென்ற துளிர்நிலவின் பின்னோடு சென்றது மகிழனின் மனம்.. அவளை நினைத்தும் மனதில் இருக்கும் நேசத்தின் நறுமணத்தை சுவாசித்தவன் விழிமூடி நின்று யோசித்தான்.. சிவராமன் அவனை நிமிர்ந்து பார்க்க, “எனக்கு வளரு வேண்டும் தாத்தா..” என்றவன் சொல்ல, “அவ திறமையான பொண்ணுன்னு அவள கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீயா..?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டார் சிவராமன்..

அவரின் முகத்தைப் பார்த்த மகிழனோ, “அவளோட திறமைக்காக நான் அவள கல்யாணம் பண்ணிக்க நினைக்கல.. அவளை எனக்கு பிடிச்சிருக்கு.. அவ இவ்வளவு பெரிய கம்பெனியின் நிர்வாகி என்று தெரிந்த பிறகு அவளை நான் விரும்பல.. அவ என்னோட துளிர்நிலா என்ற உண்மை தெரியாமல் இருக்கும் போதே அவளை மனசார விரும்பினேன்..” என்று உறுதியாகக் கூறினான்..

“அதுக்கு உன்னோட பாட்டி ஒத்துக்கணும் இல்ல..” என்று கேட்டதும், “அவங்கள பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்.. அவங்களை நான் பார்த்துகறேன்..” என்று சொல்லியவன், “தாத்தா என்னோட அப்பா என்ன தப்பு பண்ணினாரு.. விரும்பிய பொண்ணை திருமணம் பண்ணினாரு.. அதுக்கு பாட்டி அவங்களை ஒதுக்கி வைப்பது நியாயமா..?” என்று கேட்டான்..

அவனின் முகத்தைப் பார்த்தவர், “பாட்டி ஏன் கோபமாக இருக்கான்னு உனக்கு தெரியுமா..?” என்று கேட்டார்.. அவன் இல்லையென தலையசைக்க, “உன்னோட திருமணத்தை நீ அவளோட தலைமையில நடத்து அப்போ தெரியும்..” என்று சொல்ல அவனும் யோசனையில் ஆழ்ந்தான்.. அவனின் மனதில் எந்த மாற்றமும் இல்லையே..!

அவனின் யோசனையைப் பார்த்தவர், “வளருக்கு திறமையை மட்டும் தான் நான் கற்றுக்கொடுத்தேன்.. அவளை வளர்த்தது எல்லாமே உன்னோட பாட்டிதான்..” என்று சொல்ல மகிழனோ, “அவள் எனக்கு வேண்டும் தாத்தா.. அவளை கல்யாணம் பண்ணாம நான் ஊருக்கு போவதாக இல்ல..” என்று சொல்லிவிட்டு காரை நோக்கி சென்றான்.. அவனை பின்தொடர்ந்தார் சிவராமன்..

அன்று மாலை வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்த பொன்னுத்தாய், “வளரு நில்லுடி..” என்று சொல்ல நின்று அம்மாவின் முகத்தைப் பார்த்தாள் வளர்மதி.. மகளின் முகத்தைப் பார்த்தவர், “பானுமா வீட்டில இருக்கும் அந்த பையனிடம் அளவாக பழகு..” என்று கூறினார்.. வளர்மதியோ, “எதுக்கும்மா இப்படி சொல்றீங்க..” என்றுகேட்டு புரியாத பார்வை பார்த்தாள்..

அவளின் புரியாதயைக் கண்ட பொன்னுதாயோ, “நீ அந்த வீட்ல வளர்ந்தாலும் நாளைக்கு ஏதாவது தவறு நடந்த பாதிக்க போறது நீதான் வளரு.. அவன் சாதாரண ஆள் இல்ல.. இது தெரியாம பழகிட்டு அப்புறம் வருத்தபடதே..” என்று கூறியதும் அவர் சொன்னதை மனதில் பதியவைத்தவள், “ சரிம்மா..” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று உடையை மாற்றினாள்.. அவளைப் பொறுத்தவரையில் அவளின் காதல் அவளின் மனதோடு மட்டுமே இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் சாப்பிட்டுவிட்டு நேரத்திலேயே தூங்கிவிட வளரின் வயதை மனதில் வைத்துக் கொண்டரின் மனதிலோ, ‘இனியும் பொறுமையா இருக்கக்கூடாது..” என்று நினைத்தவர் கணவரின் வரவுக்காக காத்திருந்தார்.. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவருக்கு உணவு பரிமாறியபடி அவரின் அருகில் அமர்ந்தார்.. அவளின் முகமோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தது..

அவரின் முகத்தைப் பார்த்த மாரிமுத்து, “என்ன தாயி என்னிடம் ஏதாவது சொல்லணுமா..?” என்று கேட்டதும் தரையைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்திருந்த பொன்னுத்தாய் கணவனின் முகத்தை கேள்வியோடு பார்த்தார்.. அவளின் கணவனும் அவளை இமைக்காமல் பார்க்க, “மாமா.. நம்ம வளருக்கு..” என்று இழுத்த மனைவியைப் பார்த்து சிரித்தார் மாரிமுத்து.. அவரின் முகத்தைப் பார்த்த பொன்னுத்தாய், “என்ன மாமா சிரிக்கிறீங்க..” என்று கேட்டார்..

“பின்ன என்ன தாயி.. அவளுக்கு கல்யாணம் பண்ணும் வயசு வந்தது தெரிஞ்சும் நீ அமைதியாக இருக்கிறதை பார்த்துட்டு நானும் உன்னை மாதிரியே அமைதியாக இருப்பேனா..?” என்று கேட்டதும் பொன்னுத்தாயின் முகம் மாறிவிட, “மாமா நீங்க என்ன சொல்றீங்க.. நம்ம வளருக்கு மாப்பிள்ளை பார்த்திட்டீங்களா..?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்...

மனைவியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த மாரிமுத்து, “சேவூரில் இருந்து மாப்பிள்ளை வீட்டை வர சொல்லி இருக்கேன் பொன்னுத்தாயி.. புள்ளைய பார்க்க அடுத்த வாரம் வராக..” என்று சந்தோசமாக விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தார்.. அவர் அப்படி சொன்னதும் தூங்கும் மகளைத் திரும்பிப் பார்த்தாள் பொன்னுத்தாய்..

அவளோ குழந்தை போல இரண்டு கையையும் தலைக்கு அடியில் கொடுத்தது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ரொம்ப சந்தோஷமாக இருக்கு மாமா..” என்று கூறியவர், ‘ஜெயா உனக்கு ஒரு பையன் பிறந்த என்னோட பெண்ணை உன்னோட வீட்டுக்கு மருமகளா ஏத்துக்கணும்..’ என்று சொன்னது நினைவு வர அவரின் முகம் நொடியில் மாறிவிட மனைவியின் மனம் அறிந்து அவளின் கரம்பற்றி அழுத்தம் கொடுத்தார்..

அந்த அழுத்தம் அவளின் மனதிற்கு ஆறுதலாக மாறிவிட, பொன்னுதாயும் கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க, “காலம் கடந்து போகுது பொன்னுத்தாய்.. நீ நினைப்பதே நடக்காது.. காலத்துக்கு தகுந்தபடி நாமும் மாறிக்கனுமா..” என்று சொல்லவும் பொன்னுத்தாயின் கண்கள் இரண்டும் கலங்கியது.. மனைவியின் மனம் அறிந்த மாரிமுத்தும், “பொன்னுத்தாயி கண்ணு கலங்காதே.. காலம் என்ன விதைச்சு இருக்கோ அதுவே அறுவடையாக மாறும்..” என்று கூறியவர் சாப்பிட ஆரம்பித்தார்..

“இல்ல மாமா எத்தன வருசத்து ஏக்கம் தெரியுமா..? என்னோட ஜெயா இந்நேரம் எங்கே எப்படி இருக்காளோ தெரியல மாமா.. அவளுக்கு ஒரு மகன் பிறந்திருந்த இந்நேரம் என்னோட மகள அவனுக்கு கட்டி வச்சிருப்பேன்.. ஆனா எதுவுமே நடக்கல..” என்று வருத்ததுடன் கூறிய மனைவியைத் தேற்றிய மாரிமுத்தும் மனைவியின் முகத்தை கேள்வியோடு பார்த்தார்..

அவரின் பார்வை உணர்த்திய செய்தியில் தன்னுடைய மனதில் இருந்த ஆசையை மனதில் வைத்து புதைத்த பொன்னுத்தாய் தூங்க சென்றார்.. நாட்கள் மெல்ல நகர்ந்தது.. இரண்டு நாள் கழித்து எதற்கோ அவளை அழைத்தார் பானுமா.. அவளும் எப்பொழுதும் போலவே வீட்டிற்கு சென்றாள்..

“பானுமா எங்க இருக்கீங்க..?” என்று கேட்டதும் அறையில் இருந்து வெளியே வந்த பானுமா, “வாடி வளரு..” என்று கூறியதும் சிரித்த வளர்மதி பானுமாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் பார்த்து, “என்ன பானுமா முகத்தில ஒரு பெரிய பல்பு எரியுது..” என்று கிண்டலாகக் கேட்டவள், “ஒரு வேல ஊரிலிருந்து என்னோட மாமன் வருதோ..?” என்று தீவிரமாக யோசிப்பது போல விட்டத்தைப் பார்த்து நின்ற வளரை முறைத்தார் பானுமா..

அவரின் பார்வைக்கு எல்லாம் பயப்படாத வளரு, “பானுமா வீணா மனசில கோட்டை கட்டாதீங்க.. உங்க பேரன் ஊரிலிருந்து வரும் பொழுது ஒரு பொண்ண கண்ணாலம் முடிச்சிட்டுதான் இந்த மண்ணை மிதிப்பாக..” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, “அடியே என்னோட ஆசையில மண்ணு விழுன்னு நீ கனவு காணத.. என்னோட பெரிய பேரனை உனக்கு நான் கட்டிவெச்சு உன்னோட திமிர நான் குறைக்கல..” எனவர் இழுத்ததும் அவளும் ஆர்வமாக அவரின் முகத்தையே பார்த்தாள்..

அவளின் ஆர்வத்தைக் கண்ட பானுமா, “என்னோட பெரு மட்டும் மாத்தவே மாட்டேண்டி..” என்று சொல்லிவிட்டு அவளின் காதைப் பிடித்து திருகினார்.. அவளோ காதைக் கையில் பிடித்துக்கொண்டு, “பானுமா இந்த வளரின் வாக்கு என்னைக்கும் பொய்யாகா.. காது... ஐயோ காத்து வலிக்குது பானுமா..” என்று அவள் வழியில் அலறினாள்..

அவளின் குறும்பு கண்டு சிரித்தவர், “நம்ம ஆலைக்கு வேலைக்கு போகும்போது இத இங்க விட்டுட்டு போயிட்டான் அந்த மேனேஜர் பையன்.. இந்த இதைக்கொண்டு போய் அவன்கிட்ட கொடுத்துட்டு வந்துரு வளரு..” என்று சொல்ல சரியென தலையசைத்தவள் அவரின் கையில் இருந்த பைலை வாங்கிகொண்டு வாசலை நோக்கி ஓடினாள்.. அவளின் ஓட்டம் கண்டு சிரித்த பானுமா சமையலறையை நோக்கிச் சென்றார்..

அவன் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை மனதில் யோசித்த வண்ணம் நடந்து செல்ல பைலை தூக்கிக்கொண்டு ஓட்டமாக ஓடிவந்த வளரு அவனின் முன்னே வந்து மூச்சிரைக்க நின்றாள்.. அவளின் ஓட்டம் கண்ட மகிழனும் நின்று அவளின் முகம் பார்க்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உன்னோட பேரு என்ன பனமரம்..?” என்றி கேட்டதும் அவளின் முகத்தை இமைக்காமல் பார்த்தவனின் பார்வை அவளின் பின்னோடு வானளவு வளர்ந்து நின்ற மகிழம்பூ மரத்தை தொட்டது..

பிறகு குறும்புடன் அவளின் முகம் பார்த்த மகிழனோ, “என்னோட பேரின் முதல் எழுத்து ‘ம’ன்னு சொன்னதை நீ இன்னும் கண்டுபிடிக்கல.. இன்னைக்கு முழுவதும் உட்கார்ந்து யோசிச்சு வை.. நான் வரேன்..” என்று சொல்லிவிட்டு அவளின் கையில் இருந்த பைலை வாங்கிக்கொண்டு சென்றான் மகிழன்.. அவன் குழப்பிவிட அந்த மரத்தடியில் அமர்ந்த வளரும் மகிழம் பூவை ஒன்று ஒன்றாக எடுத்து யோசித்தபடியே அருகில் வைத்தாள்..

அவனின் பெயரை சரியாக கண்டுபிடித்து விடுவாளா..? மகிழனின் மனதினை அறிந்தவள் அவனின் பெயரை அறிவாளா..? இருவரின் காதலும் கை சேருமா..?

நேசம் துளிர்விடும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top