அத்தியாயம் – 15
எல்லோருமே கிளம்பும் வரையில் அமைதியாக தன்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் வளர்மதி.. அவளுக்கு துணையாக எல்லா வேலைகளையும் செய்து முடிக்க மீட்டிங் முடிந்ததும் மண்டபத்தின் பணத்தை முழுவதுமாகக் கொடுத்துவிட்டு சிவராமனின் நோக்கி வந்தாள்.. அவளின் பார்வையோ மகிழனின் மீதே இருந்தது..
சிவந்த நிறமும், அலையலையாக காற்றில் கலைந்த கேசமும், அடர்ந்த புருவமும், பார்ப்பவரின் மனதை படிக்கும் கண்களும், கூர்மையான நாசியும், அளவான மீசையும், அழுத்தமான உதடுகளும், ஆறடி உயரமும் திரண்டு தோள்களையும் பார்த்தபடியே நடந்து வந்தவளின் திருட்டு பார்வையை உணர்ந்தவனின் உதட்டில் ரகசிய புன்னகை மலர்ந்தது..
‘என்ன பார்வை பார்க்கிற பாரு.. சரியான திருட்டு கழுதா.. மனசில இருக்கிறதைச் சொல்லி தொலையேன்..’ என்று சொல்லிவிட, ‘ஏன் நீ சொன்னால் என்ன ஆகிரும்..’ என்று பதில் கவுன்டர் கொடுத்தது அவனின் மனம்.. அவனின் பார்வை தன்னை கண்டுபிடித்ததை உணர்ந்தவள் உதட்டைக் கடித்தாள்.. அவனின் பார்வை அவளின் உதட்டில் படிந்ததும் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
அவளின் மனமோ, ‘என்னோட மனசில விழுந்த காதல் விதைகள் பயிராகவிட்டது.. என்னோட மனசில உன்னோட நினைவு தங்கிருச்சுடா.. உன்னோட பேரு கூட தெரியாது.. உன்ன விரும்புவதை என்னால சொல்ல முடிந்த அளவுக்கு நான் பானுமா மேல பாசம் வேச்சிடேனே.. இப்போ நான் என்னடா பண்ண போறேன்..’ என்று நினைத்தபடியே தலைகுனிந்து கொண்டவள் சிவராமனின் அருகில் சென்றாள்..
அவளின் பார்வையின் பொருள் புரிந்த பாரதியோ, ‘இந்த அக்காவுக்கு என்ன ஆச்சு.. இவங்க மனசில என்னதான் இருக்கு..?’ என்ற கேள்வி எழுந்துவிட பாரதி அமைதியாக பின்தொடர்ந்தாள்.. சிவராமனின் அருகில் சென்ற வளர்மதி தன்னுடைய பார்வையை மாற்றிக் கொண்டபடி “தாத்தா எல்லா வேலையும் முடிந்தது.. நாம் கிளம்பலாமா..?” என்று கேட்டாள்.. அவளின் குரலில் இருந்த கரகரப்பு உணர்ந்த மகிழனின் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தான்..
அவளோ அவனின் முகத்தைப் பார்க்காமல் நிற்க, பேரனின் முகம் பார்த்த சிவராமன், “நீ கிளம்புமா.. நாங்க ஆலைக்கு கிளம்பறோம்..” என்று சொல்ல அவளும் சரியென தலையசைத்துவிட்டு மகிழனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்த கண்ணீர்துளி சொல்லிவிட்டது.. அவளின் நெஞ்சத்தில் துளிர்விட்ட நேசத்தின் ஆழம் என்னவென்று..!
அந்த கண்ணீர்த்துளி சொல்லிவிட்ட காதலை உணர்ந்தவன் அவளின் விழியோடு உறவாட அவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் மெல்ல தலைகுனிந்தாள் துளிர்நிலா.. அவளின் விழியில் இருந்த காதலை உணர்ந்த மகிழனின் மனமோ, ‘இந்த ஒரு நிமிஷம் போதும் துளிரு.. உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுகொடுக்கம்வே மாட்டேன்.. என்னோட பாட்டியின் சம்மதத்தோட உன்னோட கரம்பிடிக்கிறேன்..’ என்று மனதில் நினைத்தவன் ஒரு நொடி விழிமூடி திறந்தான்..
அவனின் நெஞ்சத்தில் அவளின் பார்வை பல மாயம் செய்ய அவளை நிமிர்ந்து பார்த்தான்.. அவளின் விழியில் இருந்த தேடலை உணர்ந்தவன் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் ஒருநொடி கண்மூடித் திறக்க அவனின் பார்வையின் பொருள் புரிந்த துளிர்நிலா வாசலை நோக்கி முன்னே செல்ல அவளைப் பின் தொடர்ந்தாள் பாரதி.. இருவரின் நெஞ்சத்திலும் இருக்கும் நேசம் துளிர்விட்டது.. பார்வையில் உறவாடி அவளின் நெஞ்சத்தில் நேசத்தை துளிர்விட வைத்த மகிழனின் கையில் முடிவைக் கொடுத்துவிட்டு வாசலை நோக்கி நடந்தாள் அவனின் துளிர்நிலா..!
அவள் காரில் ஏறியதும் பாரதியைப் பார்த்து, “நீயும் ஏறு.. நான் உன்னை உன்னோட வீட்டில விட்டுட்டு போறேன்..” என்று சொல்லவும் பாரதியும் எதுவும் பேசாமல் காரில் ஏறியமர்ந்தாள்.. அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்த வளர்மதி, “பாரதி நீ குழப்பிக்காமல் இரு.. நடப்பது எதுவானாலும் நல்லதாகவே நடக்கட்டும்..” என்று சொல்லிவிட்டு காரை எடுத்தாள்..
பாரதியோ வளரின் முகத்தை யோசனையோடு பார்த்துவிட்டு, “அக்கா நீ அவரோட அத்தமகளா..?” என்று கேட்டதும் இல்லையென தலையசைக்க அவளை புரியாத பார்வை பார்த்தாள் பாரதி.. “அவரு நம்ம ஆலைக்கு மேனேஜர் வேலைக்கு வந்திருக்காரு.. பக்கத்தில இருக்கிற பாரியூர்தான் அவரோட ஊரு.. கிராமத்தில பிறந்து வளர்ந்ததால என்னை அத்தமக என்று ஒல்லி வம்பிழுக்கிறாரு..” என்று சொல்லியவள் காரை சீரான வேகத்தில் செலுத்தினாள்..
அவள் தனது முகத்தையே கவனிப்பது பார்த்து, “என்ன பாரதி..?” என்று கேட்டதும், “உங்களோட விருப்பப்படி நீங்க அந்த அண்ணாவைத் திருமணம் பண்ண உங்களோட வீட்டில ஒத்துக்குவாங்களா..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் சாலையில் இருந்து பார்வையைத் திருப்பி பாரதியின் முகம் பார்த்தவள், “எல்லாமே பானுமா எடுக்கிற முடிவில்தான் இருக்கு பாரதி..” என்று தன்னுடைய மனதை மறைத்து பொய் கூறியவள், மீண்டும் சாலையில் கவனத்தைத் திருப்பினாள்..
“அந்த மாமா பேரு உங்களுக்கு நிஜத்திலேயே தெரியாதா..? பானுமா மனசில என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..?” என்ற கேள்வியுடன் வளரின் முகம் பார்த்தாள் பாரதி.. அவளின் கேள்விக்கு மெளனமாக இல்லையேன தலையசைத்த வளர்மதி, “இவரோட பேரும் தெரியாது..” என்று கூறியவள், “பானுமா மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்று சொல்ல பாரதி வளரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.. “ஆனா அது நடக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்று கூறியவள் குரலில் இருந்த உறுதியைக் கண்கூட கண்டாள் பாரதி..
அவளின் மனமோ, ‘பானுமா இந்த அக்காவை அவங்க பேரனுக்கு கட்டி வைக்கணுன்னு நினைக்கிறாங்கன்னு எடுத்துக்கிட்டாலும், இவங்களோட ஆசைகளை இவங்க விட்டுகொடுக்க முடியுமா..? இது ஒன்றும் வழித்துணை இல்லையே.. இது இந்த அக்காவோட வாழ்க்கைத் துணை..’ என்று நினைத்தவள் மனதில் பாரம் ஏறியது.. அதற்குள் பாரதியின் வீடு வந்துவிட காரை நிறுத்திய வளர்மதி பாரதியின் முகம் பார்க்க அவளோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்..
அவளின் தோளைத் தட்டியவள், “என்னோட வாழ்க்கையோட முடிவு பானுமாவின் கையில இருக்கு.. நீ அதுக்காக யோசித்து நேரத்த வீண் பண்ணாதா..” என்று சொல்ல காரைவிட்டு கீழே இறங்கிய பாரதி வளரின் முகத்தைப் பார்த்தாள்.. “நல்ல படி பாரதி..” என்று சொல்லிவிட்டு காரை எடுத்தாள்.. அவள் காரை ஓட்டிக்கொண்டு செல்வதைப் பார்த்தபடியே நின்றாள் பாரதி..!
வளர்மதி வெளியே சென்றதும் பேரனின் பக்கம் திரும்பிய சிவராமன், “என்ன மகிழா.. என்னோட வளர்ப்பு பொண்ணு எப்படி இருக்கறா..?” என்று கேட்டதும் அவன் கொஞ்சமும் தயங்காமல், “வளரு இந்த அளவுக்கு திறமையான பெண் என்று எனக்கு இதுவரை தெரியாது தாத்தா..” என்று சொன்னவனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தார் சிவராமன்..
ஒரு துளி கண்ணீரில் காதலை வெளிப்படுத்திவிட்டு சென்ற துளிர்நிலவின் பின்னோடு சென்றது மகிழனின் மனம்.. அவளை நினைத்தும் மனதில் இருக்கும் நேசத்தின் நறுமணத்தை சுவாசித்தவன் விழிமூடி நின்று யோசித்தான்.. சிவராமன் அவனை நிமிர்ந்து பார்க்க, “எனக்கு வளரு வேண்டும் தாத்தா..” என்றவன் சொல்ல, “அவ திறமையான பொண்ணுன்னு அவள கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீயா..?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டார் சிவராமன்..
அவரின் முகத்தைப் பார்த்த மகிழனோ, “அவளோட திறமைக்காக நான் அவள கல்யாணம் பண்ணிக்க நினைக்கல.. அவளை எனக்கு பிடிச்சிருக்கு.. அவ இவ்வளவு பெரிய கம்பெனியின் நிர்வாகி என்று தெரிந்த பிறகு அவளை நான் விரும்பல.. அவ என்னோட துளிர்நிலா என்ற உண்மை தெரியாமல் இருக்கும் போதே அவளை மனசார விரும்பினேன்..” என்று உறுதியாகக் கூறினான்..
“அதுக்கு உன்னோட பாட்டி ஒத்துக்கணும் இல்ல..” என்று கேட்டதும், “அவங்கள பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்.. அவங்களை நான் பார்த்துகறேன்..” என்று சொல்லியவன், “தாத்தா என்னோட அப்பா என்ன தப்பு பண்ணினாரு.. விரும்பிய பொண்ணை திருமணம் பண்ணினாரு.. அதுக்கு பாட்டி அவங்களை ஒதுக்கி வைப்பது நியாயமா..?” என்று கேட்டான்..
அவனின் முகத்தைப் பார்த்தவர், “பாட்டி ஏன் கோபமாக இருக்கான்னு உனக்கு தெரியுமா..?” என்று கேட்டார்.. அவன் இல்லையென தலையசைக்க, “உன்னோட திருமணத்தை நீ அவளோட தலைமையில நடத்து அப்போ தெரியும்..” என்று சொல்ல அவனும் யோசனையில் ஆழ்ந்தான்.. அவனின் மனதில் எந்த மாற்றமும் இல்லையே..!
அவனின் யோசனையைப் பார்த்தவர், “வளருக்கு திறமையை மட்டும் தான் நான் கற்றுக்கொடுத்தேன்.. அவளை வளர்த்தது எல்லாமே உன்னோட பாட்டிதான்..” என்று சொல்ல மகிழனோ, “அவள் எனக்கு வேண்டும் தாத்தா.. அவளை கல்யாணம் பண்ணாம நான் ஊருக்கு போவதாக இல்ல..” என்று சொல்லிவிட்டு காரை நோக்கி சென்றான்.. அவனை பின்தொடர்ந்தார் சிவராமன்..
அன்று மாலை வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்த பொன்னுத்தாய், “வளரு நில்லுடி..” என்று சொல்ல நின்று அம்மாவின் முகத்தைப் பார்த்தாள் வளர்மதி.. மகளின் முகத்தைப் பார்த்தவர், “பானுமா வீட்டில இருக்கும் அந்த பையனிடம் அளவாக பழகு..” என்று கூறினார்.. வளர்மதியோ, “எதுக்கும்மா இப்படி சொல்றீங்க..” என்றுகேட்டு புரியாத பார்வை பார்த்தாள்..
அவளின் புரியாதயைக் கண்ட பொன்னுதாயோ, “நீ அந்த வீட்ல வளர்ந்தாலும் நாளைக்கு ஏதாவது தவறு நடந்த பாதிக்க போறது நீதான் வளரு.. அவன் சாதாரண ஆள் இல்ல.. இது தெரியாம பழகிட்டு அப்புறம் வருத்தபடதே..” என்று கூறியதும் அவர் சொன்னதை மனதில் பதியவைத்தவள், “ சரிம்மா..” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று உடையை மாற்றினாள்.. அவளைப் பொறுத்தவரையில் அவளின் காதல் அவளின் மனதோடு மட்டுமே இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டாள்..
உனது விழியில் இருந்து வந்த
கண்ணீர்த்துளி சொன்னதடி..
என் மீதான உன் நேசத்தை..
உனது மனதில் நான் விதைத்த
காதல்விதைகள் இன்று சோலையாக
மாறிவிட என்மனமோ அறிந்தடி
உன் அழமான காதலை
உனது கண்ணீர் துளியின் வழியாக..
எல்லோருமே கிளம்பும் வரையில் அமைதியாக தன்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள் வளர்மதி.. அவளுக்கு துணையாக எல்லா வேலைகளையும் செய்து முடிக்க மீட்டிங் முடிந்ததும் மண்டபத்தின் பணத்தை முழுவதுமாகக் கொடுத்துவிட்டு சிவராமனின் நோக்கி வந்தாள்.. அவளின் பார்வையோ மகிழனின் மீதே இருந்தது..
சிவந்த நிறமும், அலையலையாக காற்றில் கலைந்த கேசமும், அடர்ந்த புருவமும், பார்ப்பவரின் மனதை படிக்கும் கண்களும், கூர்மையான நாசியும், அளவான மீசையும், அழுத்தமான உதடுகளும், ஆறடி உயரமும் திரண்டு தோள்களையும் பார்த்தபடியே நடந்து வந்தவளின் திருட்டு பார்வையை உணர்ந்தவனின் உதட்டில் ரகசிய புன்னகை மலர்ந்தது..
‘என்ன பார்வை பார்க்கிற பாரு.. சரியான திருட்டு கழுதா.. மனசில இருக்கிறதைச் சொல்லி தொலையேன்..’ என்று சொல்லிவிட, ‘ஏன் நீ சொன்னால் என்ன ஆகிரும்..’ என்று பதில் கவுன்டர் கொடுத்தது அவனின் மனம்.. அவனின் பார்வை தன்னை கண்டுபிடித்ததை உணர்ந்தவள் உதட்டைக் கடித்தாள்.. அவனின் பார்வை அவளின் உதட்டில் படிந்ததும் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..
அவளின் மனமோ, ‘என்னோட மனசில விழுந்த காதல் விதைகள் பயிராகவிட்டது.. என்னோட மனசில உன்னோட நினைவு தங்கிருச்சுடா.. உன்னோட பேரு கூட தெரியாது.. உன்ன விரும்புவதை என்னால சொல்ல முடிந்த அளவுக்கு நான் பானுமா மேல பாசம் வேச்சிடேனே.. இப்போ நான் என்னடா பண்ண போறேன்..’ என்று நினைத்தபடியே தலைகுனிந்து கொண்டவள் சிவராமனின் அருகில் சென்றாள்..
அவளின் பார்வையின் பொருள் புரிந்த பாரதியோ, ‘இந்த அக்காவுக்கு என்ன ஆச்சு.. இவங்க மனசில என்னதான் இருக்கு..?’ என்ற கேள்வி எழுந்துவிட பாரதி அமைதியாக பின்தொடர்ந்தாள்.. சிவராமனின் அருகில் சென்ற வளர்மதி தன்னுடைய பார்வையை மாற்றிக் கொண்டபடி “தாத்தா எல்லா வேலையும் முடிந்தது.. நாம் கிளம்பலாமா..?” என்று கேட்டாள்.. அவளின் குரலில் இருந்த கரகரப்பு உணர்ந்த மகிழனின் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தான்..
அவளோ அவனின் முகத்தைப் பார்க்காமல் நிற்க, பேரனின் முகம் பார்த்த சிவராமன், “நீ கிளம்புமா.. நாங்க ஆலைக்கு கிளம்பறோம்..” என்று சொல்ல அவளும் சரியென தலையசைத்துவிட்டு மகிழனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்த கண்ணீர்துளி சொல்லிவிட்டது.. அவளின் நெஞ்சத்தில் துளிர்விட்ட நேசத்தின் ஆழம் என்னவென்று..!
அந்த கண்ணீர்த்துளி சொல்லிவிட்ட காதலை உணர்ந்தவன் அவளின் விழியோடு உறவாட அவனின் பார்வையின் வீரியம் தாங்காமல் மெல்ல தலைகுனிந்தாள் துளிர்நிலா.. அவளின் விழியில் இருந்த காதலை உணர்ந்த மகிழனின் மனமோ, ‘இந்த ஒரு நிமிஷம் போதும் துளிரு.. உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுகொடுக்கம்வே மாட்டேன்.. என்னோட பாட்டியின் சம்மதத்தோட உன்னோட கரம்பிடிக்கிறேன்..’ என்று மனதில் நினைத்தவன் ஒரு நொடி விழிமூடி திறந்தான்..
அவனின் நெஞ்சத்தில் அவளின் பார்வை பல மாயம் செய்ய அவளை நிமிர்ந்து பார்த்தான்.. அவளின் விழியில் இருந்த தேடலை உணர்ந்தவன் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் ஒருநொடி கண்மூடித் திறக்க அவனின் பார்வையின் பொருள் புரிந்த துளிர்நிலா வாசலை நோக்கி முன்னே செல்ல அவளைப் பின் தொடர்ந்தாள் பாரதி.. இருவரின் நெஞ்சத்திலும் இருக்கும் நேசம் துளிர்விட்டது.. பார்வையில் உறவாடி அவளின் நெஞ்சத்தில் நேசத்தை துளிர்விட வைத்த மகிழனின் கையில் முடிவைக் கொடுத்துவிட்டு வாசலை நோக்கி நடந்தாள் அவனின் துளிர்நிலா..!
அவள் காரில் ஏறியதும் பாரதியைப் பார்த்து, “நீயும் ஏறு.. நான் உன்னை உன்னோட வீட்டில விட்டுட்டு போறேன்..” என்று சொல்லவும் பாரதியும் எதுவும் பேசாமல் காரில் ஏறியமர்ந்தாள்.. அவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்த வளர்மதி, “பாரதி நீ குழப்பிக்காமல் இரு.. நடப்பது எதுவானாலும் நல்லதாகவே நடக்கட்டும்..” என்று சொல்லிவிட்டு காரை எடுத்தாள்..
பாரதியோ வளரின் முகத்தை யோசனையோடு பார்த்துவிட்டு, “அக்கா நீ அவரோட அத்தமகளா..?” என்று கேட்டதும் இல்லையென தலையசைக்க அவளை புரியாத பார்வை பார்த்தாள் பாரதி.. “அவரு நம்ம ஆலைக்கு மேனேஜர் வேலைக்கு வந்திருக்காரு.. பக்கத்தில இருக்கிற பாரியூர்தான் அவரோட ஊரு.. கிராமத்தில பிறந்து வளர்ந்ததால என்னை அத்தமக என்று ஒல்லி வம்பிழுக்கிறாரு..” என்று சொல்லியவள் காரை சீரான வேகத்தில் செலுத்தினாள்..
அவள் தனது முகத்தையே கவனிப்பது பார்த்து, “என்ன பாரதி..?” என்று கேட்டதும், “உங்களோட விருப்பப்படி நீங்க அந்த அண்ணாவைத் திருமணம் பண்ண உங்களோட வீட்டில ஒத்துக்குவாங்களா..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் சாலையில் இருந்து பார்வையைத் திருப்பி பாரதியின் முகம் பார்த்தவள், “எல்லாமே பானுமா எடுக்கிற முடிவில்தான் இருக்கு பாரதி..” என்று தன்னுடைய மனதை மறைத்து பொய் கூறியவள், மீண்டும் சாலையில் கவனத்தைத் திருப்பினாள்..
“அந்த மாமா பேரு உங்களுக்கு நிஜத்திலேயே தெரியாதா..? பானுமா மனசில என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..?” என்ற கேள்வியுடன் வளரின் முகம் பார்த்தாள் பாரதி.. அவளின் கேள்விக்கு மெளனமாக இல்லையேன தலையசைத்த வளர்மதி, “இவரோட பேரும் தெரியாது..” என்று கூறியவள், “பானுமா மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்று சொல்ல பாரதி வளரின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.. “ஆனா அது நடக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..” என்று கூறியவள் குரலில் இருந்த உறுதியைக் கண்கூட கண்டாள் பாரதி..
அவளின் மனமோ, ‘பானுமா இந்த அக்காவை அவங்க பேரனுக்கு கட்டி வைக்கணுன்னு நினைக்கிறாங்கன்னு எடுத்துக்கிட்டாலும், இவங்களோட ஆசைகளை இவங்க விட்டுகொடுக்க முடியுமா..? இது ஒன்றும் வழித்துணை இல்லையே.. இது இந்த அக்காவோட வாழ்க்கைத் துணை..’ என்று நினைத்தவள் மனதில் பாரம் ஏறியது.. அதற்குள் பாரதியின் வீடு வந்துவிட காரை நிறுத்திய வளர்மதி பாரதியின் முகம் பார்க்க அவளோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்..
அவளின் தோளைத் தட்டியவள், “என்னோட வாழ்க்கையோட முடிவு பானுமாவின் கையில இருக்கு.. நீ அதுக்காக யோசித்து நேரத்த வீண் பண்ணாதா..” என்று சொல்ல காரைவிட்டு கீழே இறங்கிய பாரதி வளரின் முகத்தைப் பார்த்தாள்.. “நல்ல படி பாரதி..” என்று சொல்லிவிட்டு காரை எடுத்தாள்.. அவள் காரை ஓட்டிக்கொண்டு செல்வதைப் பார்த்தபடியே நின்றாள் பாரதி..!
வளர்மதி வெளியே சென்றதும் பேரனின் பக்கம் திரும்பிய சிவராமன், “என்ன மகிழா.. என்னோட வளர்ப்பு பொண்ணு எப்படி இருக்கறா..?” என்று கேட்டதும் அவன் கொஞ்சமும் தயங்காமல், “வளரு இந்த அளவுக்கு திறமையான பெண் என்று எனக்கு இதுவரை தெரியாது தாத்தா..” என்று சொன்னவனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தார் சிவராமன்..
ஒரு துளி கண்ணீரில் காதலை வெளிப்படுத்திவிட்டு சென்ற துளிர்நிலவின் பின்னோடு சென்றது மகிழனின் மனம்.. அவளை நினைத்தும் மனதில் இருக்கும் நேசத்தின் நறுமணத்தை சுவாசித்தவன் விழிமூடி நின்று யோசித்தான்.. சிவராமன் அவனை நிமிர்ந்து பார்க்க, “எனக்கு வளரு வேண்டும் தாத்தா..” என்றவன் சொல்ல, “அவ திறமையான பொண்ணுன்னு அவள கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீயா..?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டார் சிவராமன்..
அவரின் முகத்தைப் பார்த்த மகிழனோ, “அவளோட திறமைக்காக நான் அவள கல்யாணம் பண்ணிக்க நினைக்கல.. அவளை எனக்கு பிடிச்சிருக்கு.. அவ இவ்வளவு பெரிய கம்பெனியின் நிர்வாகி என்று தெரிந்த பிறகு அவளை நான் விரும்பல.. அவ என்னோட துளிர்நிலா என்ற உண்மை தெரியாமல் இருக்கும் போதே அவளை மனசார விரும்பினேன்..” என்று உறுதியாகக் கூறினான்..
“அதுக்கு உன்னோட பாட்டி ஒத்துக்கணும் இல்ல..” என்று கேட்டதும், “அவங்கள பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்.. அவங்களை நான் பார்த்துகறேன்..” என்று சொல்லியவன், “தாத்தா என்னோட அப்பா என்ன தப்பு பண்ணினாரு.. விரும்பிய பொண்ணை திருமணம் பண்ணினாரு.. அதுக்கு பாட்டி அவங்களை ஒதுக்கி வைப்பது நியாயமா..?” என்று கேட்டான்..
அவனின் முகத்தைப் பார்த்தவர், “பாட்டி ஏன் கோபமாக இருக்கான்னு உனக்கு தெரியுமா..?” என்று கேட்டார்.. அவன் இல்லையென தலையசைக்க, “உன்னோட திருமணத்தை நீ அவளோட தலைமையில நடத்து அப்போ தெரியும்..” என்று சொல்ல அவனும் யோசனையில் ஆழ்ந்தான்.. அவனின் மனதில் எந்த மாற்றமும் இல்லையே..!
அவனின் யோசனையைப் பார்த்தவர், “வளருக்கு திறமையை மட்டும் தான் நான் கற்றுக்கொடுத்தேன்.. அவளை வளர்த்தது எல்லாமே உன்னோட பாட்டிதான்..” என்று சொல்ல மகிழனோ, “அவள் எனக்கு வேண்டும் தாத்தா.. அவளை கல்யாணம் பண்ணாம நான் ஊருக்கு போவதாக இல்ல..” என்று சொல்லிவிட்டு காரை நோக்கி சென்றான்.. அவனை பின்தொடர்ந்தார் சிவராமன்..
அன்று மாலை வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்த பொன்னுத்தாய், “வளரு நில்லுடி..” என்று சொல்ல நின்று அம்மாவின் முகத்தைப் பார்த்தாள் வளர்மதி.. மகளின் முகத்தைப் பார்த்தவர், “பானுமா வீட்டில இருக்கும் அந்த பையனிடம் அளவாக பழகு..” என்று கூறினார்.. வளர்மதியோ, “எதுக்கும்மா இப்படி சொல்றீங்க..” என்றுகேட்டு புரியாத பார்வை பார்த்தாள்..
அவளின் புரியாதயைக் கண்ட பொன்னுதாயோ, “நீ அந்த வீட்ல வளர்ந்தாலும் நாளைக்கு ஏதாவது தவறு நடந்த பாதிக்க போறது நீதான் வளரு.. அவன் சாதாரண ஆள் இல்ல.. இது தெரியாம பழகிட்டு அப்புறம் வருத்தபடதே..” என்று கூறியதும் அவர் சொன்னதை மனதில் பதியவைத்தவள், “ சரிம்மா..” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று உடையை மாற்றினாள்.. அவளைப் பொறுத்தவரையில் அவளின் காதல் அவளின் மனதோடு மட்டுமே இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டாள்..