• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2

பெயர் வைத்த எனக்கே தெரியாமல்

மனதிற்குள் துளிர்விட தொடங்கியதடி

உனது நினைவுகள் என் மனதிலே

இந்த நேசம் அறியாமலே

நீயும் பிறந்துவிட்டாயடி பெண்ணே

எனது நேசம் அறியாயோ துளிர்நிலவே..

சுகுமாறனும், ஜெயசக்தியும் கிளம்பிச் சென்ற பிறகு மகனோடு பின் வாசலில் அமர்ந்த ஜெயலட்சுமி தன்னுடைய மகனின் பின்னோடு சுற்றிக் கொண்டிருந்தாள்.. அவன் கேட்டதும், கேட்காது எல்லாத்தையும் அவள் செய்து கொடுப்பதைப் பார்த்த சிவசங்கரனுக்கு சிரிப்புதான் வந்தது..

“அம்மா பாட்டி எனக்கு அடிக்கடி பால்சோறு செஞ்சி ஊட்டி விடுவாங்க..” என்று சாப்பாடு ஊட்டும் பொழுது பாட்டியை பற்றி பேசுவான் மகிழன்.. கொஞ்ச நேரத்திலேயே, “தாத்தா நைட் எல்லாம் கத சொல்லுவாரு..” என்று அவனே வந்து சொல்வான்.. இப்படி அவனுக்கு அன்னையோடு பேச ஆயிரம் கதை இருந்தது..

“அம்மா என்னை நல்ல பார்த்துப்பாங்க.. அப்பா அங்கே இருக்கும் ஆலைக்கு போயிருவாரு..” என்று மகிழன் சொல்ல சொல்ல சிவசங்கரனின் மனம் கடந்த காலத்துக்கு சென்று வரும்.. அவரை போலவே லட்சுமியின் மனமும் கடந்த காலம் போய் வரும்..

அவளைக் கண்ணெடுக்காமல் பார்க்கும் கணவரின் அருகில் சென்ற லட்சுமி, “என்னங்க இப்படி பார்க்கிறீங்க..?” என்று கேட்க அவளின் கணவனோ தன்னுடைய மனதில் இருந்த எண்ணங்களை பசுமையான நினைவுகளையும் நினைத்து சிரித்தார்..

அவரின் திருமணம் காதல் திருமணம் என்பதால் இன்றும் அவரின் முகத்தில் புன்னகை வாடாது இருக்கிறது.. அதற்கு முழுக்க காரணம் லட்சுமியின் மலர்ந்த முகம்தான்.. “இல்ல லட்சுமி அம்மாட்ட காலேஜ் போறேன்னு சொல்லிட்டு உன்னைப் பார்க்க சேவூர் வருவேன்..” என்றவர் சொல்லும் பொழுதே லட்சுமியின் முகம் மலர்ந்துவிட்டது..

“அதுவும் நீ ஸ்கூலுக்கு போவது கட்டடிப்பது பத்தாது என்று ராசாத்தியையும் அழச்சிட்டு வருவீயே.. அது எல்லாம் நினைச்சா இன்னைக்கு கூட சிரிப்பு வருது..” என்று கணவர் சொல்லியதைக் கேட்டு லட்சுமியின் மனமும் ஒரு நொடி கடந்த காலத்திற்கு சென்றது..

காலையில் ஸ்கூலுக்கு போக சொன்ன தோழியர் இருவரும் ஊர்வலம் போது இன்றும் அவளின் மனதில் பசுமையாக இருந்தது.. அதுவும் அவர்கள் செய்யும் சேட்டை இருக்கிறதே.. மாந்தோட்டதில் மங்க பறிப்பதும் ஆற்றில் இறங்கி மீன் பிடிப்பதும் அதை சுட்டு தின்றுவிட்டு ஒன்றும் அறியாத பிள்ளை போல மாலையில் வீட்டிற்கு போவதும் என்று அவளின் நினைவுகள் அழகாக விரிந்தது..

காலையில் பள்ளிக்கூடம் செல்ல வீட்டில் இருந்து கிளம்பிய லட்சுமி ராசாத்தியின் வீடு வரும் வரை தனியாக நடந்து வந்தாள்.. ராசாத்தியின் வீடு வந்ததும், “அடியே ராசாத்தி கிளம்பிட்டியா..?” என்று குரல் கொடுக்க கொடுத்தாள்...

அவள் வேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்து அவளோடு வேகமாக நடந்தாள்.. அவளின் முகம் தெளிவாக இல்லை என்று உணர்ந்த லட்சுமி, “என்னடி ஆச்சு..” என்று கேட்டதும் காலை லட்சுமியிடம் காட்டியவள், “ஆத்தா நல்ல சூடு வெச்சிடுச்சு..” என்று சொல்ல அவளின் வலது பாசம் வெந்து தோலுரிந்து இருக்க லட்சுமிக்கு கண்கள் கலங்கியது..

“என்னடி அம்மா இப்படியா பண்ணுவாங்க..” என்றவள் வருத்தத்தோடு சொல்லியவள் அவளை மெல்ல அழைத்துச் செல்ல, “நான் பண்ற சேட்டைக்கு அவங்க என்னடி பண்ணுவாங்க.. நேத்து மங்க திருடுன தோட்டத்து காவல் ஆளு வந்து உண்மைய சொல்லிப்புட்டான்.. அப்புறம் கேட்டுக்க எங்கம்மா ஆடுனாங்களே ஒரு ஆட்டம் அத பார்க்க நீ இல்லடி..” என்று வாய்விட்டு மனம்விட்டு சிரித்தாள் ராசாத்தி..

“அடியே அவங்க ரொம்ப பாவம்டி.. நீ பண்றதுக்கும் அவங்க பண்றதுக்கு சரியாத்தான் இருக்கு..” என்று கூறியவள் அன்று பள்ளிக்கூடம் போகாமல் ஆற்றங்கரையில் அமர்ந்து பல்லாகுளி ஆடிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.. இதுதான் அவர்களுக்கு தினமும் வேலை..

லட்சுமிக்கு என்று இருப்பது ராசாத்தி ஒருத்திதான்.. அப்பா, அம்மா யாரும் இல்லை.. அவளின் அம்மாவைப் பெற்ற பாட்டிதான் அவளை இன்றும் வளர்த்து வருகிறார்.. ராசாத்தி தான் லட்சுமிக்கு எல்லாம்.. அவளின் முகத்தில் சிரிப்பு வந்தால் இவளும் சிரிப்பாள்.. அவளுக்கு அழுகை வந்தால் இவளும் அழுதுவிடுவாள்.. ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தொடர்ந்தது அவர்களின் நட்பு..

அப்படித்தான் ஒருநாள் ஊரைவிட்டு வெளியே இருக்கும் பாரியூர் கோவிலுக்கு போகும் பொழுதுதான் சிவசங்கரனுக்கும், லட்சுமிக்கும் காதல் மலர்ந்தது.. சிவசங்கரனுக்கு படிப்பு அவ்வளவு ஏறவில்லை.. இருந்தாலும் சமாளித்து கல்லூரில் கால் வைக்க அவரின் வயதோடு சேர்ந்த இளமையும் அவரை காதலில் விழ வைத்தது..

லட்சுமியின் அழகும் அமைதியும் அவரை கவர்ந்துவிட ஊரையே சுற்றுவதுதான் இவர்களின் வேலை.. அதுவும் அவளுக்கு துணையாக வரும் ராசாத்தி கடைசிவரை துணை இருக்க மாலையில் இருவரும் இணைந்து வீடு போக சிவசங்கரன் பாரியூர் போவார்..

அப்பொழுது ஒருநாள் ராசாத்தி லட்சுமிடம், “அடியே ஜெயா இந்த பொண்ணுங்களோட நட்பு எல்லாம் அப்பன் வீட்டில் இருக்கிற வரைதான்.. அதுவே அடுத்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போயிட்ட நம்ம தலைவிதி நம்மக் கட்டிக்கிட்டவன் கையிலதான் இருக்கும்.. நிம்மதியே இல்லாத பொழப்பு..” என்று புலம்ப அவளைப் பார்த்து சிரித்தார் லட்சுமி..

அவள் சிரிப்பதைப் பார்த்த ராசாத்தி, “நான் சொல்றது எல்லாம் உனக்கு சிரிப்பாக இருக்காக்கும்.. இருக்கும்டி உனக்கு ஏத்தம் அதிகமாக இருக்கும் நீ சங்கரனோட காதலி இல்ல..” என்று கேட்டு வம்பு வளர்த்தாள் ராசாத்தி..

அவளின் வம்பிற்கு எல்லாம் பதில் சொல்லாமல் நடந்தவளைப் பார்த்த ராசாத்தி, “அடியே என்னோட மனசில சின்ன ஆசடி..” என்று சொல்ல, “என்னடி ஆச..?” என்று கேட்டாள் லட்சுமி.. “எனக்கு பொண்ணோ இல்ல பையனோ பிறந்த நீ என்னோட வீட்டில் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா நம்ம நட்பு கடைசி வர நீடிக்கும் இல்ல..”என்று ஏக்கத்தோடு கேட்டாள்..

அவளின் குரலில் இருந்த ஏக்கம் கண்ட லட்சுமி, “அப்படி மட்டும் நடக்கணும் என்று எனக்கு மட்டும் ஆச இல்லையா என்ன..? உனக்கு பொண்ணு பிறந்த கண்டிப்பா அவளை என்னோட மருமகளா எடுத்துக்கிறேன்..” என்று சொல்ல, “நிஜமாடி சொன்ன சொல்லு மாறக்கூடாது..” என்று தோழியை மிரட்டியது எல்லாம் இன்று நடந்தது போலவே இருந்தது லட்சுமிக்கு..

கடைசியாக அவளுக்கு திருமணம் ஆவதற்கு முன்னாடியே ராசாத்தியை சந்தித்த லட்சுமி, “ராசாத்தி நான் அவரை கல்யாணம் பண்ணிகலான்னு முடிவில இருக்கேன்..” என்று சொல்ல ராசாத்தி தோழியின் முகத்தை பார்த்துவிட்டு, “உனக்கு எது விருப்பமோ அதே செய்டி..” என்று சொல்லிவிட்டு சென்றவள் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு போய்விட்டாள்..

ராசாத்தி வாக்கப்பட்டு போய்விட சங்கரனை காதல் திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.. அது சங்கரனின் அம்மாவிற்கு பிடிக்காமல் காடுகரை தோட்டம் எல்லாத்தையும் பிடித்து அவனுக்கு கொடுத்துவிட்டு பானுமா அத்தாணிக்கு சென்றுவிட்டார்.. காதல் இருக்கும் இடத்தில் எல்லாம் கொஞ்சம் காயமும் இருக்கும்..

மகிழனைப் பார்க்கும் பொழுது எல்லாம் சங்கரனுக்கு அந்த நினைவுகளும் அம்மாவின் பாசமும் மனதை வலிக்க செய்தாலும் லட்சுமியின் புன்னகை அந்த வலியை எல்லாம் மறக்க வைத்துவிடும்..

நொடிபொழுதில் லட்சுமியின் நினைவுகள் கடந்த காலம் சென்று திரும்பினாலும் கணவரின் அருகில் அமர்ந்தவள், “ராசாத்தி எங்க எப்படி இருக்களோ தெரியலங்க.. அவளுக்கும் இந்நேரம் ஒரு பையனோ பொண்ணோ பிறந்திருக்கும் இப்போ எங்கே இருக்களோ..” என்று தன்னுடைய தோழியை பார்க்க முடியவில்லையே என்ற வருத்ததுடன் கூறினார்..

மனதில் துளிர்விடும் சில உறவுகள் மட்டும் காலம் கடந்தாலும் மறக்க முடியாது.. அதே போலவே இவள் ராசாத்தியின் மீது வைத்த பாசமும் இன்று வரை வளர்கிறது.. அவள் சொன்னதைக் கேட்டு மனைவியை அணைத்து கொண்டார்.. அழகிய மௌனம் அவர்களை ஆச்சி செய்தது..

சங்கரனுக்கும், லட்சுமிக்கும் மகிழன் என்றாலே தனி பாசம் தான்.. மாலை நேரத்தில் வானம் கார்மேகத்தால் மொத்தமாக மூடிவிட பின் வாசலில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து மகனின் முகத்தை வருடியபடியே மகிழனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தாள் ஜெயலட்சுமி..

“அம்மா பாட்டி வீட்டில் அத்தை ஒருத்தங்க இருக்காங்க.. அவங்க வயிற்றில் குட்டி பாப்பா இருக்கம்மா..” என்று சொல்ல அவனின் முகத்தைப் பார்த்தவள், “ம்ம் அந்த பாப்பாக்கு நாம என்ன பண்ணலாம்..?” என்று வேண்டுமென்றே அவள் யோசனை செய்ய அதைப் பார்த்த மகிழன் விழுந்து விழுந்து சிரித்தான்..

“ஐயோ அம்மா அந்த பாப்பா இன்னும் பொறக்கவே இல்ல.. நீங்க அம்மாவிடம் சொல்லி அந்த பாப்பாவை நல்ல பார்த்துக்க சொல்லுங்க..” என்றவன் அக்கறையோடு சொல்ல, “சரி மகிழா ஜெயாம்மாவிடம் சொல்லிரலாம்..” என்று சொல்ல அவரின் மடியில் தலைவைத்து தூங்க ஆரம்பித்தான் மகிழன்.. அவனின் தலையை வருடியபடியே வேடிக்கை பார்க்க சத்தம் இல்லாமல் மழை பெய்தது..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தன்னுடைய மகளை மடியில் போட்டு தட்டிகொடுத்தபடியே வீட்டின் உள்ளே அமர்ந்திருந்த பொன்னுத்தாய் மனம் முழுவதும் மகளிடமே இருந்தது.. அந்த சின்ன தளிரின் முகம் பார்த்தவளுக்கு கிட்டதட்ட எட்டு வருடங்களாக வாங்கிய வசவு எல்லாம் நினைவு வந்தது.. அவளுக்கு பிள்ளை இல்லை என்று அவளை வசவுபடாத ஆளே இல்லை.. அதை எல்லாம் நினைத்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கியது..

“பொன்னுத்தாயி..” என்று அழைத்த வண்ணம் வீட்டின் உள்ளே நுழைந்த கணவன் மாரிமுத்தை கண்டதும், “மாமா இப்போதான் வேலையெல்லாம் முடிஞ்சிதா..?” என்று கேட்டாள்.. அவளின் பாசமான வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்தவன் அவளின் அருகில் வந்து அமர்ந்து அவளின் கையில் இருந்த தன்னுடைய குழந்தையை வாங்கினான்..

அவனை கண்டதும் தன்னுடைய கையையும், காலையும் ஆட்டிய தன்னுடைய மகளைப் பார்த்தவனுக்கு ஏனோ கண்கள் கலங்க, “இந்த ஒத்த புள்ளைக்கு எத்தன பேரோட வாயில எல்லாம் வசவு வங்கிட்ட இல்ல தாயி.. என்னதான் இருந்தாலும் என்னோட மக உன்னவிட அழகு..” என்று கூறியவன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்..

கொஞ்சநேரம் அங்கே அமைதி நிலவ, “ஐயா சொன்னாரு, ‘டேய் உனக்கு பொட்டபுள்ள பொறந்துருக்குடா முத்துன்னு..’ இங்கே வந்து பார்த்தல தெரியுது இது பவளம் என்று..” என்று மகளை மடியில் போட்டு அவளோடு பேச ஆரம்பித்த கணவனின் முகம் பார்த்தவள் எழுந்து சென்று அவனுக்கு சாப்பாடு போட்டு வந்தாள்..

அவன் சாப்பிட்டு முடிந்ததும், “மாமா பாப்பாவை ஐயாவும் அம்மாவும் வளக்கறேன்னு..” என்று அவள் இழுக்கும் பொழுதே, “எனக்கு எல்லாம் தெரியும்டி.. அவள் எங்க போற அவங்க கையில இருக்க போறா.. நீயும் அங்கேதான் வேலை செய்யற.. சாயந்திரம் ஆனதும் புள்ளைய தூக்கிட்டு நீ வீட்டுக்கு வரபோற..” என்று கூறியவன் மனைவியின் முகம் பார்த்தான்..

அவளின் முகத்தில் தயக்கம் வெளிப்படையாக தெரிய, “இதில் என்னடி தயக்கம்.. வயசானவங்க ஆசீர்வாதம் என்னோட மகளுக்கு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் விடுடி..” என்று அவள் சொன்னதை பெருசு பண்ணாமல் அவளுக்கே அறிவுரை சொன்னான் அவளின் கணவன்.. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு எண்ணத்தோடு கூறினார் மாரிமுத்து.. அவரின் முகம் பார்த்த பொன்னுத்தாயின் மனதிலும் ஒரு இதம் பரவியது..

சென்னை வந்த சுகுமாறன் தன்னுடைய வேலைகளை கவனித்தார்.. ஆனால் ஜெயசக்திக்கு அந்த இடம் ஒத்துகொள்ளாமல் முதலில் இரண்டு மூன்று முறை உடல்நிலை சரியில்லாமல் போனது.. சுகுமாறன் வேலைக்கு போகாமல் அவளை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள நாட்கள் மெல்ல நகர்ந்தது.. ஜெயா உடல்நிலை தேறியதும் நாட்கள் சீரான வேகத்தில் சென்றது..

ஒருநாள் மத்தியானம் கணவன் வீடு திரும்பும் பொழுது ஜெயா கவலையோடு இருக்க அவரின் அருகில் அமர்ந்தவர், “என்ன சக்தி..” என்று கேட்டதும் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் குழப்பம் சூழ்ந்திருந்தது..

அவளின் குழப்பத்தைப் பார்த்த சுகுமாறன், “எதுக்கு இப்படி குழப்பத்தோடு இருக்கிற..?” என்று அவளை ஆதரவோடு அணைத்துக் கொள்ள, “அத்தையிடம் நம்ம பொய் சொல்லிடோமே.. அது அவங்களோட மனசை கஷ்டபடுத்தாதா..?” என்று கேட்டாள்..

அவளின் கேள்வியில் மெல்ல புன்னகைத்தவன், “இதுக்கு எல்லாம் உனக்கு பதில் கொடுக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது சக்தி.. இருந்தாலும் எல்லாம் நல்லதுக்கு என்று புரிஞ்சிக்கடா..” என்று சொல்ல, “அத்தை போன் பண்ணி என்னோட பேரனிடம் பேசணும் என்று சொன்னால் நான் என்ன பண்ண..?” என்று வேகமாக கேட்டாள்..

“ம்ம் கேட்ட பேரனை படிக்க வெளிநாடு அனுப்பிட்டோன்னு சொல்லு.. மற்றதை நான் பார்த்துக்கறேன்..” என்று சொல்ல அவளும் சரியென தலையசைக்க அவளின் நெற்றியில் முத்தமிட்டு விலகிச் சென்றான் சுகுமாறன்.. அவன் சொன்னதைக் கேட்ட சக்தியோ, ‘ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்களா..?’ என்று தன்னுடைய மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்..

ஆனால் அவள் சொல்லவிருக்கும் பொய்கள் எல்லாம் தான் நாளை எல்லோருக்கும் நன்மையைக் கொடுக்க போகிறது என்று அறியாமலே பொய் சொல்ல ஆரம்பித்தாள் ஜெயசக்தி.. நாட்கள் மெல்ல நகர குழந்தைக்கு பெயர் சூட்டும் நாளும் அழகாக விடிந்தது..

பானுமாவிற்கு தலைகள் புரியாமல் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு அங்கிருந்த எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.. அவரின் ஆர்ப்பாட்டம் கண்ட சிவராமனுக்கு சிரிப்புதான் வந்தது.. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மறைத்தார்..

தன்னுடைய மருமகளுக்கு அழைத்த பானுமா, “ஜெயா நம்ம பொன்னுத்தாய்க்கு பொண்ணு பிறந்திருக்கு.. நீ அங்கே எப்படி இருக்கிற..?” என்று கேட்டார்.. அவரின் கேள்வியில் இருந்த பாசமும், அன்பும் அவளின் மனதை நெகிழ வைக்க, “நான் நல்ல இருக்கேன் அத்தை.. பொன்னுத்தாய் நல்ல இருக்காளா..?” என்று கேட்டாள்..

“அவளுக்கு என்ன அவள் நல்ல இருக்கம்மா.. குழந்தைக்கு துளிர்நிலா என்றே பெயர் வைக்க போறேன்..” என்று சொல்ல மருமகள் மறுப்பு எதுவும் கூறவில்லை.. அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “மகிழன் எப்படிம்மா இருக்கான்..” என்று ஏக்கத்தோடு கேட்டார்..

அவரின் குரலில் இருந்த ஏக்கம் உணர்ந்த ஜெயா, “நல்ல இருக்கிறான் அத்தை..” என்று சொல்லிவிட்டு, “அத்தை நான் மாசமாக இருக்கேன்..” என்று வெக்கத்தோடு அவள் சொல்ல, “ஐயோ என்னோட ராசாத்தி..” என்று பானுமாவின் குரல்கேட்டு சமையலறையில் இருந்து ஓடிவந்தாள் பொன்னுத்தாய்..

அவளைப் பார்த்த பானுமா, “என்ன பொன்னுத்தாயி என்ன ஆச்சு.. எதுக்கு இப்படி ஒடியற..?” என்று கேட்டதும், “இல்லமா..” என்று சொன்னவள் மீண்டும் சமையலறைக்குள் சென்றுவிட அவளை யோசனையோடு பார்த்த பானுமா மருமகளிடம் பேச ஆரம்பித்தார்..

அவரின் மனமோ, ‘ராசாத்தி என்று சொன்னதும் இவள் ஏன் ஓடி வந்தாள்... இவளுக்கும் அந்த பெயருக்கும் என்ன சம்மந்தம்..?’ என்று யோசித்தார்.. பொன்னுத்தாயின் மனதில் இருப்பது அவளுக்கு மட்டும் தானே தெரியும்..

“சரிம்மா உடம்பை நல்ல பார்த்துக்கோ.. ராஜாவை சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லு.. நீ அதிக நேரம் தனியாக இருக்காதே.. அது யாருக்கும் நல்லது இல்ல..” என்று அவளுக்கு ஆயிரம் அறிவுரை சொல்லி போனை வைத்தார் பானுமா.. அவர் போனை வைத்தும் ஜெயாவை சுகுமாறன் பார்க்க அவள் சிரித்தாள்..

“என்னடி சிரிப்பு எல்லாம் பலமாக இருக்கு.. அம்மா என்ன சொன்னங்க..” என்று கேட்டதும், “அத்தை எனக்கு ஆயிரம் அறிவுரை சொன்னங்க..” என்று சொல்லியவளை பார்த்தவர் அலுவலகம் கிளம்பிச் சென்றார்.. சென்னை வந்ததில் இருந்து ஜெயாவிற்கு பொழுது போவது எல்லாம் புத்தகத்தில் தான்..

அவளுக்கு என்று புத்தகத்தை வாங்கிக் குவித்தார் சுகுமாறன்.. மெல்ல மெல்ல அவளுக்கு சென்னை வாழ்க்கை ஒத்து போய்விட அவளுக்கும் அந்த வாழ்க்கை பழகிப்போனது..

அவளிடம் பேசிவிட்டு போனை வைத்தவர் சிவராமனை அழைத்து விவரம் சொல்ல அவரின் மனமும் மகிழ்ந்துவிட பெயர் சூட்டும் விழாவில் குழந்தைக்கு, “துளிர்நிலா..” என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்தனர்..

ஒவ்வொருவரின் மனதிலும் ஆயிரம் ஆசைகள் துளிர்விட அந்த துளிரெல்லாம் மரமாகுமோ இல்லை மாயமாகுமோ யார் அறிவார்.. மகிழனின் சிந்தனை எல்லாம் பள்ளியில் சேர்த்ததும் மாறிவிட அவன் கவனம் படிப்பில் செல்ல ஆரம்பித்தது.. இங்கே சக்தியின் வயிற்றில் மிதிலன் வளர அங்கே பானுமாவின் கைகளில் நிலாவும் வளர ஆரம்பித்தாள்..

அதுவும் பானுமாவிற்கு அந்த குழந்தையே உலகம் என்று ஆகிப்போனது.. காலையில் ஒன்பது மணி வரையில் குழந்தையோடு வேலைக்கு வரும் பொன்னுத்தாய் குழந்தையைக் கொடுக்கும் நேரத்தில் இருந்து மாலை ஏழுமணிவரை பானுமாவின் கையில் தான் இருப்பாள் நிலா.. இப்படியே பாசத்தோடு நாட்கள் நகர்ந்தது.. துளிரும் கொஞ்ச கொஞ்சமாக வளர அவளின் சேட்டையும் அவளோடு வளர்ந்தது..

துளிர்விடும் நேசம் தொடரும்....
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top