• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 23

நீயறிந்த முகங்களில் போலியான

புன்னகை தவழ்கிறது பெண்ணே..

அவர்கள் தொலைத்த புன்னகையைக்

கண்டுபிடிக்க நானும் போலியான

முகமூடியை அணிந்தேன் பெண்ணே..

என்னுடைய முகமூடியைக் கிழித்ததடி

உனது நிஜமாக நேசம்..

இந்த உண்மை அறிவாயோ..?

காலையில் எழுந்து ஆலைக்கு கிளம்பிச் சென்ற மகிழனின் எதிரே வந்து கொண்டிருந்தார் பொன்னுத்தாய்.. அவர் எதிரே வரவும் மகிழனின் மனதில் அந்த எண்ணம் தோன்ற அவரின் எதிரே வந்து வழியைமறித்து நின்றான்.. தன் முன்னே யாரோ வந்து வழியை மறித்து நிற்கவும் நிமிர்ந்துப் பார்த்த பொன்னுத்தாய், “என்ன தம்பி..?” என்று கேட்டார்..

அப்பொழுது அந்த வழியாக வயலுக்கு சென்று கொண்டிருந்த பேச்சி இருவரையும் பார்த்ததும் அவர்களின் அருகில் சென்றாள்.. இருவரும் பேசுவதைக் கேட்டபடியே நின்றிருந்தாள்.. மகிழன் கேட்ட கேள்வி அவளையே அதிர வைத்தது.. அவரின் முகத்தைப் பார்த்த மகிழன், “அத்தை நான் என்ன அத்தை பண்ணினேன்..? துளிருக்கு என்னை விட்டுவிட்டு வேறொரு மாப்பிள்ளை பார்க்க உங்களுக்கு எப்படி அத்தை மனசு வந்தது..?” என்று பாவமாகக் கேட்டதும் பொன்னுத்தாயின் மனம் கலங்கியது..

அவனும் அவரையே பார்க்க, “உன்மேல் எனக்கு எந்த கோபமும் இல்லப்பா மகிழா.. என்ன அம்மாவை நினைச்சாத்தான் ரொம்ப பயமாக இருக்கிறது..” என்று கூறியதும் அதிர்ந்தான் மகிழன்.. அவன் அதிர்ச்சியுடனே “அத்தை நான்..” என்று மகிழன் இழுக்கும் பொழுது, “எனக்கு எல்லா உண்மையும் தெரியும்.. ஆனால் நான் வெளிகாட்டிக்க முடியாதே..” என்று வெள்ளையாக சிரித்தவரின் முகத்தைப் பார்த்த பேச்சி, ‘இவருதான் பானுமாவின் பேரன் மகிழனா..?’ என்று நினைத்தவளின் கண்களில் வந்து நின்றார் ராஜீவ்..

‘என்னோட சிந்தனையில் இருந்தது படித்த மாப்பிள்ளை தானே தவிர.. இவரு இல்லையே..’ என்று யோசித்தவளின் மன கண்ணில் வந்து நின்றாள் வளர்மதி.. ‘எனக்கு எந்த ஆசையும் இல்லப்பா.. வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து அவரு என்னை கல்யாணம் பண்ண போறாருன்னு நான் நினைக்கவே இல்லையே..’ என்று சொன்னது நினைவு வர அங்கே நடப்பதைக் கவனித்தாள்..

“நீங்க பணக்காரராக இல்லாமல் இருந்திருந்தால் என்னோட பெண்ணை தாரளமாக உனக்கு கொடுக்க நினைத்திருப்பேன் மகிழா.. ஆனால் இப்போ எல்லாமே மாறிவிட்டது.. நீதான் என்னோட மாப்பிள்ளையாக வரணும் என்ற விதி இருக்கு.. இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.. எனக்காக என்னோட பெண்ணை நல்ல வெச்சு பார்த்துக்கோங்க தம்பி..” என்று கண்கள் கலங்க கூறினார்.. பேச்சி மகிழனின் பதிலை எதிர்பார்த்தாள்..

அவர் சொன்னதைக் கேட்டதும், “உங்க மகளை உங்களைவிட பலமடங்கு நல்ல பார்த்துக்கிறேன் அத்தை.. யாருக்காகவும் எதுக்காகவும் நான் அவளை விட்டுக்கொடுக்க மாட்டேன்..” என்று சொல்லிவிட்டுத் திரும்பிய மகிழனைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் பேச்சி.. அவளைப் பார்த்தும், ‘இவள் எப்பொழுது இங்கே வந்தாள்..?’ என்று யோசித்தபடியே அவளின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தான்..

“என்ன பேச்சி..?” என்று கேட்டதும் அவனைக் கையெடுத்து கும்பிட்டவள், “நீங்கதான் உண்மையான பேரன் என்று எனக்கு இதுவரைக்கும் தெரியாது.. என்னோட வாழ்க்கை நல்ல இருக்கணும் என்று அவளுக்கு வந்த மாப்பிள்ளையை எனக்கு பெண்பார்க்க வைத்து என்னோட மனசை எனக்கு புரிவெச்சதுக்கு நன்றி அண்ணா..” என்று சொன்னவள் தன்னுடைய வழியைப் பார்த்து நடந்தாள்..

எல்லோரையும் சுயநலக்காரி, பொறாமை பிடித்தவள் என்று சொல்ல முடியாதே.. அவர்களின் மனதினை புரியாமல் அவரவர் செய்யும் தவறு அடுத்தவரின் வாழ்க்கையை ஊஞ்சலாட வைக்கிறது.. பேச்சி அவளின் மனதில் இருப்பது இன்னதென்று புரியாமல் வளரின் மீது பொறாமைப்பட்டாள்.. அவளின் மனமோ எனக்கு மகிழனை மாதிரி படித்த மாப்பிள்ளை வேண்டுமே என்று நினைத்தாளே தவிர மகிழனே வேண்டும் என்று அவள் நினைக்கவே இல்லை..

அவ செல்லும் திசையைப் பார்த்த பொன்னுத்தாய், ‘என்னோட ஜெயா எங்கே இருக்காளோ..?’ என்று நினைத்தபடியே வீட்டைநோக்கி நடந்தார்.. மகிழனும் ஆலையை நோக்கி நடந்தான்..

வீட்டில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று உண்மை அறியாத பொன்னுத்தாய் தன்னுடைய மகளுக்கு தான் சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று மகளுக்கு என்று நகை எடுத்தார்.. அவர் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கிவிட்டு வெளியே வந்தார்.. அவர் வெளியே வரும் நேரத்தில் வேறொரு கடையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர் சிவசங்கரனும், ஜெயலட்சுமியும்..!

“என்னங்க இந்த மகிழன் நம்மை திருமணத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான்..?” என்று கேட்டபடியே நடந்து கொண்டிருந்தார் லட்சுமி.. அவரின் கேள்வியில் சங்கரனின் முகம் மாற, “என்ன லட்சுமி பண்றது..? எல்லாம் நம்ம செய்த தவறுதானே.. இன்னைக்கு நம்ம மகனோட திருமணத்தைப் பார்க்க முடியாமல் போனது..” என்று கூறியவர் காரின் பார்கிங் நோக்கிச் செல்ல அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார் பொன்னுத்தாய்..

கணவருடன் பேசியபடியே எதர்ச்சியாக நிமிர்ந்து பார்த்த லட்சுமி தன்னைக்கடந்து சென்ற பொன்னுத்தாயைப் பார்த்ததும், ‘இவங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே..’ என்று சிந்தனை செய்துகொண்டே கணவருடன் இணைந்தபடியே நடந்தார்.. சங்கரன் பேசிய எதுவும் லட்சுமியின் காதுகளில் கேட்கவே இல்லை.. பொன்னுத்தாயின் முகம் மனதில் வந்து நிற்க லட்சுமியின் நடையும் நின்றது.. அவர் நின்ற இடத்தில் இருந்து திரும்பிப் பார்க்க பொன்னுத்தாய் ரோடு கிராஸ் பண்ணிக்கொண்டிருந்தார்..

தான் பேசியபடியே செல்ல லட்சுமி பதில் பேசாமல் வருவதை உணர்ந்தவர், “என்ன லட்சுமி..?” என்று கேட்டபடியே திரும்ப அவரின் பின்னோடு வந்து கொண்டிருந்த லட்சுமி ரோடு கிராஸ் பண்ணுவதைப் பார்த்து, “இவள் அங்கே எதுக்கு போனா..?” என்று கேட்டபடியே அவரும் ரோடு கிராஸ் செய்தார்.. லட்சுமியோ வேகமாகச் சென்று பொன்னுத்தாயின் கையைப் பிடிக்க திடீரென யாரோ தன்னுடைய கரம்பிடிக்க வெடுக்கென்று திரும்பிப் பார்த்த பொன்னுத்தாய், “ஜெயா..” என்று அழைத்தார்..

அவரின் அழைப்பைக் கேட்டதும் லட்சுமியின் கண்கள் இரண்டும் கலங்க, “ராசாத்தி நீ இன்னும் என்னை மறக்கவே இல்லையா..?” என்று கேட்டபடியே பொன்னுத்தாயைக் கட்டியணைத்துக் கொண்டார்.. வருடங்கள் பல கடந்தும், உருவங்களில் மாற்றம் வந்தும் நட்பு என்று மாறுவதே கிடையாது.. பெண்களின் நட்பு தற்காலிகமானது என்று நினைக்கும் நினைப்பை மாற்றியமைத்த தோழிகள் இதோ நம் கண்முன்னே..!

இருவரும் தங்களை மறந்து கடந்த காலத்தின் சந்தோஷமான பக்கங்களை மீண்டும் ஒருமுறை பார்த்து வந்தனர்.. அப்பொழுது அவர்களை நெருங்கிய சிவசங்கரன், “லட்சுமி..” என்று அழைக்க தோழியைப் பிரிந்து நிமிர்ந்தவர், “மாமா ராசாத்தி..” என்று சொல்ல பொன்னுத்தாயைப் பார்த்த சங்கரன், “என்ன ராசாத்தி அண்ணாவை அடையாளம் தெரியுதா..?” என்று சிரிப்புடன் கேட்டார்..

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட பொன்னுத்தாய், “நல்ல இருக்கேன் அண்ணா..” என்று சொல்ல, “சரி வாம்மா வீட்டுக்கு போய் பேசலாம்..” என்று சொல்ல பொன்னுத்தாய் தயக்கமாக தோழியின் முகத்தைப் பார்த்தார்.. அவரின் பார்வையின் பொருள் புரிந்த இருவருமே, “எங்க உருவத்தில் மட்டும் தாண்டி மாற்றம் வந்திருக்கு.. உள்ளம் இன்னும் அப்படியேதான் இருக்கு..” என்று சொல்லியபடியே தோழியின் கரம்பிடித்து நடந்த மனைவியைப் பின்தொடர்ந்தார் சிவசங்கரன்..

மூவரும் காரில் ஏறியதும், “எந்த விசயமாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம்..” என்று சொல்ல, “அது எல்லாம் முடியாதுங்க.. நாங்க பேசவேண்டிய கதை இன்னும் எவ்வளவு இருக்கு.. இருபத்தி ஏழு வருஷத்து கதையைப் பேச ஒரு மணிநேரம் போதுமா..?” என்று கேட்டவர் பொன்னுத்தாயுடன் பேச ஆரம்பித்தார்..

அன்று போலவே இன்றும் பலவருடன்களைக் கடந்து அவர்களின் நினைவுகள் கடந்தகாலம் சென்றுவந்தனர்.. இத்தனை வருடத்தில் ஒரு மற்றம் மட்டுமே இருவரின் இடையே நடந்திருந்தது.. என்ன அப்பொழுது எல்லாம் பொன்னுத்தாய் அதிகமாகப் பேசுவார்.. இப்பொழுது லட்சுமி அதிகமாகப் பேச அதை கேட்டுகொண்டே அமைதியாக வந்தார் பொன்னுத்தாய்..

‘என்னதான் அவளை நாம் நன்றாக வைத்துப் பார்த்துக் கொண்டாலும் கூட அவளின் மனதில் எத்தனை எண்ணங்கள் இருக்கிறது..’ என்ற ஒரு விஷயத்தை மட்டும் சங்கரன் முழுவதுமாக உணர்ந்து கொண்டார்.. அவர் காரை வீட்டின் முன்னே நிறுத்த காரைவிட்டு இறங்கிய லட்சுமி வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள்...

***************​

அன்றிலிருந்து ஒரு வாரம் எப்பொழுதும் போலவே சென்று மறைய மகிழன் எப்பொழுதும் போலவே ஆலைக்கு சென்று வந்தான்.. சிவராமனின் மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தாலும் அவரும் அதை வெளியே காட்டாமல் இருந்தார்..

தோட்டத்தில் நின்றிருந்த துளிரைப் பார்த்த மகிழன், ‘இவ ஏன் இங்க உட்காந்திருக்கா..?’ என்று யோசித்தபடியே அவன் கீழிறங்கி வர புன்னகை முகம் மாறாமல் ஒரு கல்லின் மீது அமர்ந்திருந்த துளிரின் பார்வை முழுவதும் அந்த பூவின் மீதே இருந்தது.. அவளைப் பார்த்துக்கொண்டே நின்ற மகிழன் மீண்டும் சென்று கிளம்ப ஆரம்பித்தான்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வீட்டில் நடந்த எந்த விஷயமும் அறியாத மகிழன் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வர அவனுக்கு போன் செய்தான் மிதிலன்.. கிட்டதட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு அழைத்த தம்பியின் அழைப்பைப் பார்த்தவனுக்கு மற்றது எல்லாம் மறந்து போக, “மிதில் நான் ஆலைக்கு போனதும் போன் பண்றேன்..” என்றவனை பேசவிடாமல் போனை வைத்தான்..

அவன் போனை வைத்தும், “நல்லவேளை பாட்டிக்கு எந்த சந்தேகமும் வரல..” என்று தனக்குள் புலம்பிய மிதிலன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான்.. அங்கே சென்றதும் அவனின் அருகில் வந்த ரஞ்சிதா, “என்னடா காலையிலேயே முகத்தை தூக்கி வெச்சுட்டு காலேஜ் வந்திருக்க,,?” என்று சிரித்துக்கொண்டே கேட்டதும், “ரஞ்சி சும்மா என்னை கோபத்தை கிளறாதே..” என்று கோபத்தில் கூறினான்..

அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “என்ன மிதில் ஆச்சு..” என்று சாதாரணமாக கேட்டதும், “எங்களோட பிரச்சனை எல்லாம் உனக்கு புரியாது ரஞ்சி.. அண்ணா ரொம்ப பாவம்.. பாட்டியும் தான்..” என்று வருத்ததுடன் சொன்ன மிதலன் அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்..

அவனின் அருகில் அமர்ந்த ரஞ்சிதா, “என்ன பிரச்சனை என்று நீ சொல்லு..” என்று சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்த மிதலன் அனைத்தையும் அவளிடம் சொல்லி முடிக்க அவன் சொன்னதை எல்லாம் அமைதியாகக்கேட்டு முடித்த ரஞ்சிதா, “உங்க அண்ணாவுக்கே அங்க என்ன நடக்குதுன்னு தெரியலையா..? சுத்தம்.. இப்போ அவரு யார் யார்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறாங்களோ..” என்று வாய்விட்டு புலம்பியவளுடன் கிளாசிற்கு சென்றான் மிதிலன்..

மாடியில் இருந்து கீழிறங்க ஆரம்பித்த மகிழனை தன்னுடைய அறையில் நின்றபடியே பார்த்த பானுமா, “மகிழா வெளியே துளிர்நிலா இருப்பா அவளை உள்ளே வர சொல்லிட்டு போப்பா..” என்று சொல்ல அவரின் குரல்கேட்டு திரும்பிய மகிழன், “சரிங்க பாட்டி நான் வர சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றான்..

அவன் சொன்ன பதிலில் இருந்தே பானுமா அமைதியாக நின்று மகிழன் செல்லும் திசையைப் பார்த்து, ‘அவளோட பேரு துளிர்நிலா என்று இவனுக்கு எப்படி தெரியும்..?’ என்று யோசித்தவர் கணவனின் முகத்தைத் திரும்பிப் பார்க்க, “என்ன பானு என்னிடம் ஏதாவது கேட்கணுமா..?” என்றுகேட்டு பானுமாவிடம் இருந்து நழுவப்பார்க்க, “எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்.. முதல்ல நீங்க கிளம்புங்க..” என்று வாசலை நோக்கி கைகாட்டினார்..

சிவராமன் எதுவும் பேசாமல் வெளியே செல்ல அங்கே துளிர்நிலா வருவதைப் பார்த்தவர் மகிழனின் முகத்தைப் பார்க்க அவனோ, “துளிரு உன்ன பாட்டி கூப்டாங்க..” என்று சொல்லிவிட்டு அவன் வேகமாகச் செல்ல அவனின் வேகத்தைக் கண்ட வளரு, ‘இவருக்கு என்ன ஆச்சு..?’ என்று தனக்குதானே கேள்வி கேட்டபடியே வீட்டின் உள்ளே நுழைந்தாள்..

அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.. அவனின் மனம் எல்லாம் தம்பியின் மீதே இருந்தது.. ‘எந்த காரணமும் இல்லாமல் அவன் கூப்பிட மாட்டானே..’ என்று யோசித்தபடியே ஆலைக்கு கிளம்பிச் சென்றான்.. அவள் வருவதைக் கவனித்த பானுமா, “வா வளரு...” என்று அழைத்துவிட்டு மீண்டும் மிதிலனுக்கு அழைத்தார்..

அவரின் அழைப்பைப் பார்த்த மிதிலனோ, ‘ஐயோ பாட்டி எதுக்கு கூப்பிறாங்க..’ என்ற குழப்பத்துடனே அவரின் அழைப்பை எடுத்தான்.. அவன் போனை எடுத்தும், “பாட்டி..” என்று இழுக்க, “மிதில் விளையாடாமல் பதில் சொல்லு.. மகிழன் அங்கதானே இருக்கான்..?” என்று கேட்டார்..

அவரின் மனநிலை அறியாத மிதிலன் கொஞ்சம் கூட யோசிக்காமல், “அண்ணாவின் ஆபீஸ் போனதும் உங்களுக்கு போனைக் கொடுக்கவா..?” என்று கேட்டதும், “நீ அங்கே போனதும் அவனோட பொண்டாட்டியே எனக்கு போட்டோ எடுத்து அனுப்பு மிதிலா..” என்று கோபமாகக் கூறினார்..

அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த மிதிலன், ‘அங்க என்ன நடக்குது என்று தெரியாமல் பாட்டிக்கிட்ட உளறிட்டேனோ..?’ என்றவன் புலம்பியபடியே, ‘இந்த அண்ணா என்ன பொய் சொல்லி வைத்தானோ தெரியலையே.. நான் இங்கே வந்ததில் இருந்து அண்ணாவுக்கு போன் பண்ணாமல் இருந்தது என்னோட தப்பு..’ என்று தன்னுடைய தவறை எண்ணி மனதை நொந்து கொண்டான்..

அவனின் மனநிலை இப்படி இருக்க அதை அறியாத ரஞ்சிதா, “ஹாய் மிதில்..” என்று அழைத்தபடியே அவனின் அருகில் வந்து அமர அவளின் குரல் கேட்டு நிமிர்ந்தவன்,, “ரஞ்சி என்ன சொல்லாமல் வர..” என்று அதிர்ந்தவனின் குரல் கேட்ட பானுமா, “யாருடா அந்த பொண்ணு..” என்று கேட்டதும் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முழித்தவனைப் பார்த்து சிரித்த ரஞ்சிதா அவனின் கையில் இருந்த போனை வாங்கினாள்..

“பாட்டி என்னோட பெயர் ரஞ்சிதா.. உங்க சின்ன பேரன் படிக்கிற அதே காலேஜில் தான் படிக்கிறேன்..” என்று தன்னைப்பற்றி கூறினாள்.. அவளின் எதார்த்தமான பேச்சு பானுமாவிற்கு பிடித்துவிட, “நான் நினைத்து சரியாக இருக்கு..” என்று சொல்லிவிட்டு, “ரொம்ப நல்ல பெயர்..” என்றவர் சொல்ல, “இந்த மிதில் பாட்டி பேசறாங்க..” என்று அவனிடம் போனை நீட்ட அவளை முறைத்தபடியே போனை வாங்கிய மிதிலைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள் ரஞ்சிதா..

அவளை முறைத்துக்கொண்டே, “பாட்டி..” என்றவன் இழுக்க, “டேய் என்ன யோசனை..? மகிழனுக்கு கல்யாணம் ஆனது அத்தாணியில் இருக்கிற எனக்கு தெரிஞ்சிருக்கு.. அதே ஊரில் இருக்கும் உனக்கு இன்னும் உண்மை தெரியாதோ..” என்று எகத்தாளமாகக் கேட்டதும் இப்பொழுது வேகமாக போனை வைத்தான் மிதிலன்.. அதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் ரஞ்சிதா..

அவன் போனை வந்ததும் நிமிர்ந்த பானுமா வளரைப் பார்த்து பயந்தே போனார்.. அவளோ கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு விட்டதைப் பார்த்து தீவிரமாக யோசிக்க, “அடியே உனக்கு என்னடி ஆச்சு..” என்று கேட்டதும், “இல்ல பானுமா உங்க பெரிய பேரன் கட்டியிருக்கும் பொண்ணு தான் இந்த ரஞ்சிதாவா.. இல்ல உங்களோட சின்ன பேரன் காதலிக்கும் பொண்ணு இந்த ரஞ்சிதாவா என்று யோசிட்டு இருந்தேன்..” என்று விட்டத்தைப் பார்த்தபடியே கூறினாள் வளர்மதி..

‘இங்க என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு எனக்கே புரியல.. என்னோட பெரிய மகனுக்கு பிறந்த பையன் மகிழன் என்ற உண்மை தெரிந்தாலும் இப்போ அவன் வெளிநாட்டில் இருக்கானா..? இல்ல என் பக்கத்தில் இருக்கானா.. என்று எனக்கே புரியல.. ஒரு பக்கம் என்னோட சின்னமகன் மகிழனுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்றான்.. அவன் வெளிநாட்டில் இருக்கான்னு சொல்றான்.. இன்னொரு பக்கம் ஒருத்தன் மகிழனுக்கு கல்யாணம் ஆகலன்னு சொல்றான்.. அவன் இங்கே என் பக்கத்தில் இருக்கான்னு சொல்றான்.. அவன் இங்கே இருக்கான்னு மனசு சொன்னாலும் அது என்னோட பேரன்தான் என்று உறுதி செய்ய எனக்கு ஒரு வழியும் தெரியல..’ என்று மனதிற்குள் ஆயிரம் சிந்தனை ஓட வளரின் முகத்தையே இமைக்காமல் பார்த்தார் பானுமா..

அவளும் அவரையே பார்க்க, “இல்லடி செல்லம் என்னோட பேரன் சீக்கிரமே இந்தியா வரேன்னு சொன்னான்.. அவன் வந்து உன்னோட கழுத்தில் தாலி கட்றேன்னு சொன்னான்..” என்று சொல்ல, “ஓ பேரன் வராரோ.. வந்த வர சொல்லு பானுமா.. வந்து என்னோட கல்யாணத்தை நல்ல கண்குளிர பார்த்துட்டு போகட்டும்..” என்று சொன்னவளின் முகத்தை வருடிக்கொடுத்தவர், “ஆமா வந்து உன்னோட திருமணத்தை பார்த்துட்டு போகட்டும்..” என்று சொன்னார்..

அவரின் மனதிலோ, ‘உன்னோட திருமணம் முடியும் வரை நான் எதையும் யோசிக்க மாட்டேன்.. அதே என்னோட குழப்பம் எல்லாம் உனக்கு வந்தால் எனக்கு உண்மை தெரியாமல் போயிருமா..?’ என்று யோசித்தவர் மனதில் அந்த திட்டம் உதயமானது.. பானுமா மகிழனுக்கு திருமணம் செய்து வைப்பாரா..? அவரின் மனதில் இருக்கும் திட்டம்தான் என்ன..?

நேசம் துளிர்விடும்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top