• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 24

மனம் முழுதும் நிறைந்து

நிற்கும் முழுமதியானவளே..

ஆயிரம் பிரச்சனை வந்தாலும்

உனது கரம்பிடிப்பேன் பெண்ணே..

எனது மனதில் இருக்கும்

துளிர்விடும் நேசம் அறிய

நீ வருவாயா நிலவே..

மகிழன் ஆலைக்குச் சென்றதுமே மிதிலனுக்கு அழைத்தான்.. அண்ணனின் அழைப்பைப் பார்த்தும் கோபத்துடன் எடுத்தவன், “அண்ணா அங்கே என்ன நடக்குது.. பாட்டி என்னோவோ உன்னோட பொண்டாட்டியை போட்டோ எடுத்து அனுப்ப சொல்றாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல..” என்று கோபத்தில் பேச ஆரம்பித்தவன் புலம்பலில் வந்து நின்றான்..

அவன் சொன்னதும், “என்னடா சொல்ற பாட்டிக்கிட்ட என்ன சொல்லி வெச்சிருக்க..?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட மகிழனிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான் மிதிலன்.. அதையெல்லாம் கேட்டவனின் கோபம் அத்துமீற, “டேய் வெண்ணெய் திரண்டு வரும் பொழுது பானை உடைந்த கதையாக இப்படி உளறி வெச்சிருக்கியே உன்னை என்ன செய்யறது..” என்று கோபத்தில் திட்டிக்கொண்டே திரும்பியவனின் அறைக்குள் நுழைந்த சிவராமன்,

“அது அவன் செய்த வேலை இல்ல மகிழா.. உன்னோட அப்பா செய்த வேலை..” என்று சொல்ல, “மிதில் லைனில் இரு..” என்று சொல்லிவிட்டு, “என்ன தாத்தா சொல்றீங்க..” என்று சொல்ல வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க அமைதியாக அதைக்கேட்ட மகிழனின் முகம் மாறியது.. அவனின் முகமாற்றம் கவனித்தவர், “என்ன மகிழா..?” என்று கேட்டார்.. அவரை நிமிர்ந்துப் பார்த்த மகிழன், “என்ன நடந்தாலும் என்னோட முடிவில் ஒரு மாற்றமும் இல்ல.. எத்தனை பிரச்சனை வந்தாலும் துளிருடன் தான் எங்க வீட்டுக்கு நான் போவேன்..” என்று கூறினான்.. அவனின் குரலில் இருந்த உறுதியை உணர்ந்தவர் வேறெதுவும் பேசாமல் வெளியே சென்றார்..

இதையெல்லாம் லைனில் இருந்தபடியே கேட்ட மிதிலனுக்கு தலையே சுற்றியது.. ‘அண்ணா அடுத்து என்ன செய்ய போகிறானோ..?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்ததும், “மிதில் நீ படிக்கிற வழியைப் பாரு.. நான் அப்புறம் போன் பண்றேன்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்த மகிழன் அடுத்தநொடியே அங்கிருந்து கிளம்பினான் மகிழன்..

அவனுக்கு, ‘வளரின் முகத்தைப் பார்க்க வேண்டும்..’ என்று தோன்றியது.. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மகிழன் ஒரு காரணம் என்றால், நாளை பாதிக்கப்பட போவது என்று யோசிக்கும் போது வளரின் முகம்தான் அவனின் கண்முன்னே வந்து நின்றது.. பாட்டியைப் பற்றியை நினைக்கும் போது, ‘நாளை உண்மை தெரிந்தால் வளரின் மனம் எப்படி இருக்கும்..’ என்று யோசித்தவன் அவளை நேரில் பார்க்க கிளம்பினான்..

பானுமாவிடம் பேசிக்கொண்டே தோட்டத்திற்கு நடந்தவளின் எதிரே வந்த பேச்சி, “என்ன வளரு பானுமாவுடன் தோட்டத்துக்கு கிளம்பிட்டியா..?” என்று கேட்டதும், “ஆமாண்டி பேச்சி வீட்டில் பொழுது போகவே மாட்டேங்கிது..” என்று சொல்லிவிட்டு, “என்ன பேச்சி உன்னை மாப்பிள்ளை பார்க்க வந்தாங்களாம்.. மாப்பிள்ளை எப்பிடி இருக்காருன்னு நீ சொல்லவே இல்ல..” என்று அவளை வம்புக்கு இழுத்தாள்..

இருவரும் பேசுவதைப் பார்த்துக்கொண்டே தோட்டத்தை நோக்கி நடக்க பேச்சியோ, “நீ கூடத்தான் மாப்பிள்ளை எப்படி இருக்காருன்னு என்னிடம் சொல்லவே இல்ல..” என்று சொல்ல வளர்மதி வாய்பேசாமல் வந்தாள்.. அந்த அமைதியைப் பார்த்த பேச்சி மனதிற்குள் சிரிக்க அவளின் மனதினை அறிந்த வளரு வெக்கத்தில் தலை குனிந்தாள்.. அவளின் இந்த செயல் எல்லாமே பேச்சிக்கு புதுமையாக இருந்தது.. பதுமை போல இல்லாமல் வாய்பேசி வண்ணத்துப்பூச்சி போல ஊரையே சுற்றி வந்தவளின் வெக்கம் அவளுக்கு புதுதான்..

இருவரும் அமைதியாக வருவதைப் பார்த்த பானுமா, “ஏய் என்ன இருவரும் அமைதியாக வரீங்க.. உங்க செட்டு ஆளுங்க எல்லாம் எங்கேடி..?” என்று கேட்டதும், “அவங்களுக்கு எல்லாம் கண்ணாலம் ஆகிருச்சு பானுமா..” என்று கூறிய பேச்சி அவர்களுடன் இணைந்து நடக்க, “ஏதாவது பாட்டு பாடு வளரு..” சொல்லிக்கொண்டே தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களைப் பார்த்தபடி மாமரத்தின் கீழே இருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தார்..

இருவரும் வளரின் முகத்தை ஆர்வத்துடன் பார்க்க, “பானுமா எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா..?” என்று கேட்டவள் நிற்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.. அவளின் ஓட்டத்தைப் பார்த்த பானுமா, “வளரு மாறிட்டே வரா பேச்சி..” என்று சொல்ல அவளும் அவளின் பின்னோடு எழுந்து சென்றாள்.. இருவரின் முகத்தையும் பார்த்தவர் தன்னுடைய கணக்குபிள்ளையை அழைத்து அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை விலாவாரியாக பேச ஆரம்பித்தார்..

ஆலையில் இருந்து கிளம்பிய மகிழன் நேராக வீட்டிற்கு சென்றதும் அங்கே வளரு இல்லாமல் தோட்டத்தை நோக்கி சென்றான்.. அப்பொழுது சுற்றிலும் பார்வையை ஓடியபடியே நடந்தவனைப் பார்த்த பானுமா, “மகிழா இங்க ஒரு நிமிஷம் வாப்பா..” என்று குரல்கொடுக்க பானுமாவைப் பார்த்தவன், “இருங்க பாட்டி வருகிறேன்..” என்று சொல்லி அவரின் அருகில் சென்றான்..

அவனுக்கு ஒரு கயிற்று கட்டிலைக் காட்டிய பானுமா, “உட்காருப்பா..” என்று சொல்ல, “இல்லங்க பாட்டி நீங்க சொல்லுங்க..” என்று சொல்ல, “உங்க ஊரில் உனக்கென சொந்தபந்தம் எல்லாம் யாருன்னு சொல்லுப்பா.. அவங்களுக்கு எல்லாம் சேர்த்து பத்திரிகை அடிக்கணும்..” என்று சொல்லிவிட்டு மகிழனின் முகத்தைப் பார்த்தார் பானுமா.. அவனோ நொடியும் யோசிக்காமல், “எனக்கு என்று யாரும் இல்ல பாட்டி.. நீங்களே எல்லாவற்றையும் செய்ங்க..” என்று கூறினான்..

அவனின் முகத்தைப் பார்த்து சிரித்தவர், “சரிடா.. நீ போயி வளரை அழைச்சுட்டு வா..” என்று கூறியதும், “அவ எங்கே பாட்டி இருக்கிற.. தோட்டத்தைச் சுத்திப்பார்க்க போயிருக்கிற..” என்று சொல்ல வேகமாக தோட்டத்தின் உள்ளே நுழைந்தான் மகிழன்.. முன்னே சென்ற பேச்சியைப் பார்த்த மகிழன், ‘இவ எதுக்கு இங்க வந்தா..?’ என்று யோசித்தபடியே இருவரையும் பின்தொடந்தான் மகிழன்.. ‘இவள் மனசுல அப்படி என்னதான் இருக்கு..?’ என்று யோசித்துக்கொண்டே வளரைப் பின்தொடர்ந்து சென்றாள் பேச்சி..

தன்னைப் பின் தொடர்ந்து பேச்சி வருவதை அறியாத வளர்மதி யோசனையுடன் தோட்டத்தின் உள்ளே நடந்து சென்றாள்.. எங்கிருந்த மரத்திலோ அமர்ந்திருந்த குயில், ‘கூ.. கூ.. கூ..’ என்று கூவிக்கொண்டிருக்க அதன் இசையில் தன் மனதைத் தொலைத்தவள் தன்னை மறந்தவண்ணம் நடந்து சென்றாள்.. உச்சிவேளை பொழுதினிலே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க அந்த சூட்டை எல்லாம் உடல் உணரமுடியாத அளவுக்கு அவளுக்கு நிழலைக் கொடுத்துவிட்டு தலைநிமிர்ந்து நின்றது தென்னை மரங்கள்..

காற்றில் மெல்ல அசைந்த கிளைகள் எல்லாம் சலசலக்கும் சத்தம் அந்த இடத்தின் அமைதியை நிறைத்தது.. அவள் கால்போன போக்கில் செல்ல மனம் நடக்கும் பாதையில் கவனம் இல்லாமல் நடந்தாள்.. ஏனோ மகிழன் அவளைவிட்டு விலகிச்செல்ல செல்ல அவளின் மனம் அவளையும் அறியாமல் அவனைத் தேட ஆரம்பித்தது.. அதை உணர்ந்து மனதோடு மறைத்தவள் இப்பொழுது அவன் விலகுவதைப் பார்த்து, ‘நான் என்ன தப்பு செஞ்சேன்..’ என்று தனக்குதானே கேள்வி கேட்டுகொண்டாள்..

மதியான வேளையிலும் நன்றாக வீசிய இளந்தென்றல் அவளின் மனதினைத் தூண்டிவிட மனதில் இருக்கும் நினைவுகள் பாடல் வரிகளாக வெளியே வந்தது..

“நிலவே உன்னை அழைத்தேன்..

நினைவைச் சொல்ல துடித்தேன்..

விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்

ஏன் இந்த போராட்டமோ..??” என்று பாடியவளின் குரலில் மயங்கிய மனதை கடிவாளம் இட்டு நடந்தவனின் பார்வை அவள் மீது இருந்தது.. பாட்டில் இருக்கும் சுவராஸ்யத்தில் தன்னை மறந்தவள் கிணற்றை கவனிக்காமல் முன்னே நடந்தாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவளின் பின்னோடு வந்த பேச்சி, “ஐயோ வளரு கிணறுடி.. அடியே நான் கத்துவது உன்னோட காதில் விழுகிறதா..?” என்று கத்தியபடியே அவளின் பின்னோடு ஓடினாள்.. திடீரென அவளின் கைகளைப்பிடித்து இழுத்தது ஒரு வலிய கரங்கள்.. அவளின் கைகளைப்பிடித்து அவன் இழுத்தும் அவளின் கவனம் கலையா தடுமாறி அவன் மீதே விழுந்தாள்..

கிணற்றின் அருகே இருந்த புல்லில் இருவரும் இணைந்து விழுந்ததும் தன்னுடைய கவனம் கலைந்து நிமிர்ந்தவளை இமைக்காமல் பார்த்த மகிழனின் பார்வையில் தன்னை முழுவதுமாக மறந்தவள் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.. அவளின் பார்வையில் என்ன உணர்ந்தானோ மகிழன், “வளர் என்ன இது..?” என்றவன் கோபத்துடன் கேட்டதும் தான், ‘அவன் மீது தான் விழுந்திருக்கிறோம்..’ என்று உணர்ந்தவள் வேகமாக அவனைவிட்டு விலகி எழுந்தாள்..

இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த பேச்சி, “இனிமேல் நாம் இங்கே இருப்பது நல்லது இல்ல..” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.. அவள் எழுந்து அவனின் முகத்தைக்கூட பார்க்காமல் அவனைவிட்டு விலகி நடக்க அவளின் கரத்தை எட்டிபிடித்த மகிழன், “வளரு நீ ஏன் இப்படி இருக்கிற..?” என்று கேட்டதும் அவள் பதில் பேசாமல் அமைதியாகவே நின்றாள்..

அவளின் அமைதி அவனுக்கு புதுசாக தெரிய அவளின் பின்னோடு நின்று அவளின் முகத்தைப் பார்க்க முடியாமல் போக அவளின் மனதினையும் அவனால் உணர முடியவில்லை.. அவனின் கேள்விக்குள் அவள் பதில் பேசாமல் நிற்பதைப்பார்த்து அவளின் முன்னே சென்று ஒரு விரலால் அவளின் முகத்தை நிமிர்ந்தினான்..

“எனக்கு என்ன பனமரம்.. நான் எப்பொழுதும் போலத்தான் இருக்கேன்.. நீதான் ஆளே மாறிட்ட..” என்று சொன்னவளின் முகத்தைப் பார்த்தும் அவனின் முகம் மாறியது.. “துளிரு என்னடா ஆச்சு..?” என்று கேட்டதும் தனது கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை வழியவிடாமல் அணையிட்டு தடுத்தவள், “இதையே நான் உன்னிடம் கேட்டா..?” என்று அவனைப் பார்த்தபடியே தலையை சரித்து கேட்டாள்..

“என்னிடம் என்ன மாற்றம் கண்ட..?” என்றவன் கேட்டதும், “முதல்ல நீ என்னிடம் பேசாமல் இருக்கவே மாட்ட.. ஆனால் இப்போ எல்லாம் நீ என்னிடம் பேசுவதே இல்ல.. அதுக்காக எல்லாம் என்னோட முகத்தைத் தூக்கி வெச்சுட்டு என்னால இருக்க முடியல.. ஆனாலும் மனசு கேட்காமல் தான் உன்னிடம் நானே வந்து பேசறேன்..” என்று கூறினாள்..

அவளின் மனதினை உணர்ந்தே இருந்த மகிழன், “இன்னும் ஒரு மாதத்தில் எனக்கும், உனக்கும் கல்யாணம்.. அதில் கொஞ்சம் வேலை அதிகமாக இருக்குடா... அதுக்காக நீ இப்படி முகத்தைத் தூக்கி வெச்சிட்டு இருந்தால் நான் எப்படி நிம்மதியாக இருப்பது..?” என்று கேட்டதும் அவளின் முகம் மலர்ந்தது.. அது மலர்ந்த மறுநொடியே மீண்டும் வாடியது..

“எதுக்கு இப்போ முகத்தைத் தூக்கி வெச்சிருக்க...? இப்போ என்ன பிரச்சனை..?” என்று கேட்டதும், “பனமரம் என்னோட அம்மாவை நான் பார்க்கணும் என்று சொன்ன உடனே என்னை இங்கே கூட்டிட்டு வருவியா..?” என்று கேட்டதும் சிரித்த மகிழன், “கண்டிப்பாக கூட்டிட்டு வருவேன்..” என்று சொல்ல அவளின் முகத்தில் புன்னகை அரும்பியது.. அதை பார்த்த மகிழன், “சரியான பைத்தியம்..” என்று சொல்ல, “உன்மேல..” என்று சொல்லி அவனைப் போலவே கண்சிமிட்டினாள்..

அவளின் குறும்பு முகத்தை பார்த்தும் மற்றது எல்லாம் மறந்து போக, “ஏய் உன்னை முதலில் கடத்திட்டு போகணும்..” என்று சொல்ல அவனைப்பிடித்து தள்ளிவிட்டவள், “கனவு கண்டுட்டே இரு..” என்று சொல்லிவிட்டு ஓடியவளைப் பார்த்து சிரித்தான் மகிழன்..

நாட்கள் வேகமாகச் சென்றது..

மகிழன் மனதில் பயம் என்ற ஒன்றே இல்லாமல் அவன் நடமாட அவனின் நடவடிக்கையில் இருந்து பானுமாவினால் எதுவுமே கண்டுபிடிக்க முடியாமல் போனது.. சிவராமன் மட்டும் பொன்னுத்தாய் கூட எந்த நினைவுகளையும் போட்டு குழப்பாமல் நடமாட எல்லோரும் இணைந்து பேசியபடியே பெரிய வீட்டு திருமண வேலைகளை கவனித்தனர்..

அத்தாணியை முழுவதும் கன்றுக்குட்டி போல உல்லாசமாக சுற்றி திரிந்த வளரை வீட்டோடு இருக்க வைக்க அவளும் பொழுதை நெட்டி தள்ளிக் கொண்டிருக்க வளரின் திருமணத்தை பெரிய அளவில் ஏற்பாடு செய்தார் பானுமா.. எல்லா வேலைகளும் சிறப்பாக நடப்பதைப் பார்த்தபடியே தன்னுடைய சின்ன மருமகள் ஜெயசக்திக்கு அழைத்த பானுமா, “ஜெயா எப்படிமா இருக்கிற..” என்று கேட்டார்..

“நான் நல்ல இருக்கிறேன் அத்தை..” என்று ஜெயா வேகமாகச் சொல்ல, “இங்கே வளருக்கு திருமண ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்.. இந்த முறை நீ நேரில் வந்து திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும்.. எங்கே மாறன்.. அவனிடம் போனைக் கொடு..” என்று சொல்ல தன்னுடைய கணவரிடம் செல்லை நீட்டிய சக்தி, “அத்தை உங்களிடம் பேசணும் என்று சொன்னாங்க..” என்று சொல்ல போனை வாங்கி பேசினார் மாறன்..

அவர் போனை வைத்தும், “நம்ம இருவரும் திருமணத்துக்கு போயிட்டு வருவோம் சக்தி..” என்று சொல்ல பலவருங்களுக்கு பிறகு ஊருக்கு போவோம் என்று சந்தோஷமாக சொல்லிய கணவனின் முகம் பார்த்தவள், “சரிங்க..” என்று சொல்ல அவர் போனை வைத்தும் மகிழன் அழைத்தான்..

அவனின் அழைப்பைப் பார்த்தும், “நீ சொன்ன மாதிரியே வளரை பாட்டியோட விருப்பத்துடன் திருமணம் செய்ய போற கண்ணா..” என்று சொல்ல ஆலையில் இருந்த வேலைகளை எல்லாம் முடித்தவன் சீட்டில் சாய்ந்தபடியே, “இல்லப்பா இன்னும் கல்யாணம் நடக்கல..” என்று சொல்லியவன், “பாட்டி என்ன திட்டத்தில் இருக்காங்கன்னு தெரியல..” என்று சொல்லி அங்கே நடந்த அனைத்தையும் சொல்ல மாறனுக்கே அவன் சொன்னதைக் கேட்டு கோபம் வந்தது..

“இந்த மிதிலனுக்கு எதில் விளையாடுவது என்று தெரியாது..” என்று சின்ன மகனைத் திட்ட ஆரம்பித்தார்.. அதற்குள் அவரிடம் இருந்து போனை வாங்கிய சக்தி, “எல்லாமே நல்லதுக்கு என்று நினைத்துகொள் மகிழா..” என்று சொல்ல, “நானும் அதே எண்ணத்தில்தான் அம்மா இருக்கேன்..” என்று கூறினான் மகிழன்.. அவன் சொன்னதைக் கேட்ட சக்தி, “அக்காவும், மாமாவும் திருமணத்துக்கு வருவாங்களா மகிழா..” என்று கேட்டார்..

“இல்லம்மா அப்பாவும், அம்மாவும் திருமணத்திற்கு வரமாட்டாங்க.. நான் வர வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்மா..” என்று சொல்ல, “ஏண்டா ஒத்தப்புள்ள நீ உன்னோட திருமணத்தை அவங்க பார்க்க முடியாதுன்னு சொன்ன என்னடா அர்த்தம்..?” என்று கேட்டார்.. அவரின் மனதினையும் புரிந்துக் கொண்ட மகிழன், “அதுக்கு என்ன அம்மா பண்ண முடியும்..?” என்று வருத்ததுடன் கேட்டான்..

அவனின் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவர், “நாங்க வருகிறோம் மகிழா..” என்று சொல்ல அவனின் வருத்தம் பாதியாக குறைய அவனின் முகத்தில் புன்னகை அரும்ப, “யாரு பாட்டி போன் பண்ணி வர சொல்லி சொன்னாங்களா..?” என்று கேட்டதும், “ஆமாண்டா இப்போதான் அத்தை போன் பண்ணினாங்க..” என்று சந்தோஷத்துடன் கூறினார் சக்தி.. இருவரும் பேசுவதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த சுகுமாரனுக்கு ஆபீஸ் கால் வரவும் அவர் எழுந்து சென்றார்..

இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைக்க திருமணத்திற்கு கிளம்பும் முன்னே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார் சுகுமாறன்.. அவரும், சக்தியும் மகிழனின் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னே சென்னையில் இருந்து கிளம்பினர்.. முதலில் மூன்றுநாள் மகிழனின் வீட்டில் இருந்துவிட்டு பிறகு அத்தாணி சென்றனர்..

அவர்களின் கார் பெரிய வீட்டின் முன்னே நுழைய எல்லோரும் வாசலுக்கு வந்தனர்.. காரில் இருந்து இறங்கிய மகனையும், மருமகளையும் பார்த்த பானுமாவின் கண்களில் கண்ணீர் வெள்ளம் மடைதிறந்தது.. அவர்களை வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார் சிவராமன்..

நேசம் துளிர்விடும்..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Nice epi sri banuma enna than seiyaporanga

Marriage entha thadai illama nadakuma ...

paavam jaya marriageku vara mudiayathu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top