அத்தியாயம் – 24
மகிழன் ஆலைக்குச் சென்றதுமே மிதிலனுக்கு அழைத்தான்.. அண்ணனின் அழைப்பைப் பார்த்தும் கோபத்துடன் எடுத்தவன், “அண்ணா அங்கே என்ன நடக்குது.. பாட்டி என்னோவோ உன்னோட பொண்டாட்டியை போட்டோ எடுத்து அனுப்ப சொல்றாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல..” என்று கோபத்தில் பேச ஆரம்பித்தவன் புலம்பலில் வந்து நின்றான்..
அவன் சொன்னதும், “என்னடா சொல்ற பாட்டிக்கிட்ட என்ன சொல்லி வெச்சிருக்க..?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட மகிழனிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான் மிதிலன்.. அதையெல்லாம் கேட்டவனின் கோபம் அத்துமீற, “டேய் வெண்ணெய் திரண்டு வரும் பொழுது பானை உடைந்த கதையாக இப்படி உளறி வெச்சிருக்கியே உன்னை என்ன செய்யறது..” என்று கோபத்தில் திட்டிக்கொண்டே திரும்பியவனின் அறைக்குள் நுழைந்த சிவராமன்,
“அது அவன் செய்த வேலை இல்ல மகிழா.. உன்னோட அப்பா செய்த வேலை..” என்று சொல்ல, “மிதில் லைனில் இரு..” என்று சொல்லிவிட்டு, “என்ன தாத்தா சொல்றீங்க..” என்று சொல்ல வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க அமைதியாக அதைக்கேட்ட மகிழனின் முகம் மாறியது.. அவனின் முகமாற்றம் கவனித்தவர், “என்ன மகிழா..?” என்று கேட்டார்.. அவரை நிமிர்ந்துப் பார்த்த மகிழன், “என்ன நடந்தாலும் என்னோட முடிவில் ஒரு மாற்றமும் இல்ல.. எத்தனை பிரச்சனை வந்தாலும் துளிருடன் தான் எங்க வீட்டுக்கு நான் போவேன்..” என்று கூறினான்.. அவனின் குரலில் இருந்த உறுதியை உணர்ந்தவர் வேறெதுவும் பேசாமல் வெளியே சென்றார்..
இதையெல்லாம் லைனில் இருந்தபடியே கேட்ட மிதிலனுக்கு தலையே சுற்றியது.. ‘அண்ணா அடுத்து என்ன செய்ய போகிறானோ..?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்ததும், “மிதில் நீ படிக்கிற வழியைப் பாரு.. நான் அப்புறம் போன் பண்றேன்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்த மகிழன் அடுத்தநொடியே அங்கிருந்து கிளம்பினான் மகிழன்..
அவனுக்கு, ‘வளரின் முகத்தைப் பார்க்க வேண்டும்..’ என்று தோன்றியது.. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மகிழன் ஒரு காரணம் என்றால், நாளை பாதிக்கப்பட போவது என்று யோசிக்கும் போது வளரின் முகம்தான் அவனின் கண்முன்னே வந்து நின்றது.. பாட்டியைப் பற்றியை நினைக்கும் போது, ‘நாளை உண்மை தெரிந்தால் வளரின் மனம் எப்படி இருக்கும்..’ என்று யோசித்தவன் அவளை நேரில் பார்க்க கிளம்பினான்..
பானுமாவிடம் பேசிக்கொண்டே தோட்டத்திற்கு நடந்தவளின் எதிரே வந்த பேச்சி, “என்ன வளரு பானுமாவுடன் தோட்டத்துக்கு கிளம்பிட்டியா..?” என்று கேட்டதும், “ஆமாண்டி பேச்சி வீட்டில் பொழுது போகவே மாட்டேங்கிது..” என்று சொல்லிவிட்டு, “என்ன பேச்சி உன்னை மாப்பிள்ளை பார்க்க வந்தாங்களாம்.. மாப்பிள்ளை எப்பிடி இருக்காருன்னு நீ சொல்லவே இல்ல..” என்று அவளை வம்புக்கு இழுத்தாள்..
இருவரும் பேசுவதைப் பார்த்துக்கொண்டே தோட்டத்தை நோக்கி நடக்க பேச்சியோ, “நீ கூடத்தான் மாப்பிள்ளை எப்படி இருக்காருன்னு என்னிடம் சொல்லவே இல்ல..” என்று சொல்ல வளர்மதி வாய்பேசாமல் வந்தாள்.. அந்த அமைதியைப் பார்த்த பேச்சி மனதிற்குள் சிரிக்க அவளின் மனதினை அறிந்த வளரு வெக்கத்தில் தலை குனிந்தாள்.. அவளின் இந்த செயல் எல்லாமே பேச்சிக்கு புதுமையாக இருந்தது.. பதுமை போல இல்லாமல் வாய்பேசி வண்ணத்துப்பூச்சி போல ஊரையே சுற்றி வந்தவளின் வெக்கம் அவளுக்கு புதுதான்..
இருவரும் அமைதியாக வருவதைப் பார்த்த பானுமா, “ஏய் என்ன இருவரும் அமைதியாக வரீங்க.. உங்க செட்டு ஆளுங்க எல்லாம் எங்கேடி..?” என்று கேட்டதும், “அவங்களுக்கு எல்லாம் கண்ணாலம் ஆகிருச்சு பானுமா..” என்று கூறிய பேச்சி அவர்களுடன் இணைந்து நடக்க, “ஏதாவது பாட்டு பாடு வளரு..” சொல்லிக்கொண்டே தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களைப் பார்த்தபடி மாமரத்தின் கீழே இருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தார்..
இருவரும் வளரின் முகத்தை ஆர்வத்துடன் பார்க்க, “பானுமா எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா..?” என்று கேட்டவள் நிற்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.. அவளின் ஓட்டத்தைப் பார்த்த பானுமா, “வளரு மாறிட்டே வரா பேச்சி..” என்று சொல்ல அவளும் அவளின் பின்னோடு எழுந்து சென்றாள்.. இருவரின் முகத்தையும் பார்த்தவர் தன்னுடைய கணக்குபிள்ளையை அழைத்து அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை விலாவாரியாக பேச ஆரம்பித்தார்..
ஆலையில் இருந்து கிளம்பிய மகிழன் நேராக வீட்டிற்கு சென்றதும் அங்கே வளரு இல்லாமல் தோட்டத்தை நோக்கி சென்றான்.. அப்பொழுது சுற்றிலும் பார்வையை ஓடியபடியே நடந்தவனைப் பார்த்த பானுமா, “மகிழா இங்க ஒரு நிமிஷம் வாப்பா..” என்று குரல்கொடுக்க பானுமாவைப் பார்த்தவன், “இருங்க பாட்டி வருகிறேன்..” என்று சொல்லி அவரின் அருகில் சென்றான்..
அவனுக்கு ஒரு கயிற்று கட்டிலைக் காட்டிய பானுமா, “உட்காருப்பா..” என்று சொல்ல, “இல்லங்க பாட்டி நீங்க சொல்லுங்க..” என்று சொல்ல, “உங்க ஊரில் உனக்கென சொந்தபந்தம் எல்லாம் யாருன்னு சொல்லுப்பா.. அவங்களுக்கு எல்லாம் சேர்த்து பத்திரிகை அடிக்கணும்..” என்று சொல்லிவிட்டு மகிழனின் முகத்தைப் பார்த்தார் பானுமா.. அவனோ நொடியும் யோசிக்காமல், “எனக்கு என்று யாரும் இல்ல பாட்டி.. நீங்களே எல்லாவற்றையும் செய்ங்க..” என்று கூறினான்..
அவனின் முகத்தைப் பார்த்து சிரித்தவர், “சரிடா.. நீ போயி வளரை அழைச்சுட்டு வா..” என்று கூறியதும், “அவ எங்கே பாட்டி இருக்கிற.. தோட்டத்தைச் சுத்திப்பார்க்க போயிருக்கிற..” என்று சொல்ல வேகமாக தோட்டத்தின் உள்ளே நுழைந்தான் மகிழன்.. முன்னே சென்ற பேச்சியைப் பார்த்த மகிழன், ‘இவ எதுக்கு இங்க வந்தா..?’ என்று யோசித்தபடியே இருவரையும் பின்தொடந்தான் மகிழன்.. ‘இவள் மனசுல அப்படி என்னதான் இருக்கு..?’ என்று யோசித்துக்கொண்டே வளரைப் பின்தொடர்ந்து சென்றாள் பேச்சி..
தன்னைப் பின் தொடர்ந்து பேச்சி வருவதை அறியாத வளர்மதி யோசனையுடன் தோட்டத்தின் உள்ளே நடந்து சென்றாள்.. எங்கிருந்த மரத்திலோ அமர்ந்திருந்த குயில், ‘கூ.. கூ.. கூ..’ என்று கூவிக்கொண்டிருக்க அதன் இசையில் தன் மனதைத் தொலைத்தவள் தன்னை மறந்தவண்ணம் நடந்து சென்றாள்.. உச்சிவேளை பொழுதினிலே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க அந்த சூட்டை எல்லாம் உடல் உணரமுடியாத அளவுக்கு அவளுக்கு நிழலைக் கொடுத்துவிட்டு தலைநிமிர்ந்து நின்றது தென்னை மரங்கள்..
காற்றில் மெல்ல அசைந்த கிளைகள் எல்லாம் சலசலக்கும் சத்தம் அந்த இடத்தின் அமைதியை நிறைத்தது.. அவள் கால்போன போக்கில் செல்ல மனம் நடக்கும் பாதையில் கவனம் இல்லாமல் நடந்தாள்.. ஏனோ மகிழன் அவளைவிட்டு விலகிச்செல்ல செல்ல அவளின் மனம் அவளையும் அறியாமல் அவனைத் தேட ஆரம்பித்தது.. அதை உணர்ந்து மனதோடு மறைத்தவள் இப்பொழுது அவன் விலகுவதைப் பார்த்து, ‘நான் என்ன தப்பு செஞ்சேன்..’ என்று தனக்குதானே கேள்வி கேட்டுகொண்டாள்..
மதியான வேளையிலும் நன்றாக வீசிய இளந்தென்றல் அவளின் மனதினைத் தூண்டிவிட மனதில் இருக்கும் நினைவுகள் பாடல் வரிகளாக வெளியே வந்தது..
“நிலவே உன்னை அழைத்தேன்..
நினைவைச் சொல்ல துடித்தேன்..
விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்
ஏன் இந்த போராட்டமோ..??” என்று பாடியவளின் குரலில் மயங்கிய மனதை கடிவாளம் இட்டு நடந்தவனின் பார்வை அவள் மீது இருந்தது.. பாட்டில் இருக்கும் சுவராஸ்யத்தில் தன்னை மறந்தவள் கிணற்றை கவனிக்காமல் முன்னே நடந்தாள்..
மனம் முழுதும் நிறைந்து
நிற்கும் முழுமதியானவளே..
ஆயிரம் பிரச்சனை வந்தாலும்
உனது கரம்பிடிப்பேன் பெண்ணே..
எனது மனதில் இருக்கும்
துளிர்விடும் நேசம் அறிய
நீ வருவாயா நிலவே..
மகிழன் ஆலைக்குச் சென்றதுமே மிதிலனுக்கு அழைத்தான்.. அண்ணனின் அழைப்பைப் பார்த்தும் கோபத்துடன் எடுத்தவன், “அண்ணா அங்கே என்ன நடக்குது.. பாட்டி என்னோவோ உன்னோட பொண்டாட்டியை போட்டோ எடுத்து அனுப்ப சொல்றாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல..” என்று கோபத்தில் பேச ஆரம்பித்தவன் புலம்பலில் வந்து நின்றான்..
அவன் சொன்னதும், “என்னடா சொல்ற பாட்டிக்கிட்ட என்ன சொல்லி வெச்சிருக்க..?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட மகிழனிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான் மிதிலன்.. அதையெல்லாம் கேட்டவனின் கோபம் அத்துமீற, “டேய் வெண்ணெய் திரண்டு வரும் பொழுது பானை உடைந்த கதையாக இப்படி உளறி வெச்சிருக்கியே உன்னை என்ன செய்யறது..” என்று கோபத்தில் திட்டிக்கொண்டே திரும்பியவனின் அறைக்குள் நுழைந்த சிவராமன்,
“அது அவன் செய்த வேலை இல்ல மகிழா.. உன்னோட அப்பா செய்த வேலை..” என்று சொல்ல, “மிதில் லைனில் இரு..” என்று சொல்லிவிட்டு, “என்ன தாத்தா சொல்றீங்க..” என்று சொல்ல வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க அமைதியாக அதைக்கேட்ட மகிழனின் முகம் மாறியது.. அவனின் முகமாற்றம் கவனித்தவர், “என்ன மகிழா..?” என்று கேட்டார்.. அவரை நிமிர்ந்துப் பார்த்த மகிழன், “என்ன நடந்தாலும் என்னோட முடிவில் ஒரு மாற்றமும் இல்ல.. எத்தனை பிரச்சனை வந்தாலும் துளிருடன் தான் எங்க வீட்டுக்கு நான் போவேன்..” என்று கூறினான்.. அவனின் குரலில் இருந்த உறுதியை உணர்ந்தவர் வேறெதுவும் பேசாமல் வெளியே சென்றார்..
இதையெல்லாம் லைனில் இருந்தபடியே கேட்ட மிதிலனுக்கு தலையே சுற்றியது.. ‘அண்ணா அடுத்து என்ன செய்ய போகிறானோ..?’ என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்ததும், “மிதில் நீ படிக்கிற வழியைப் பாரு.. நான் அப்புறம் போன் பண்றேன்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்த மகிழன் அடுத்தநொடியே அங்கிருந்து கிளம்பினான் மகிழன்..
அவனுக்கு, ‘வளரின் முகத்தைப் பார்க்க வேண்டும்..’ என்று தோன்றியது.. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் மகிழன் ஒரு காரணம் என்றால், நாளை பாதிக்கப்பட போவது என்று யோசிக்கும் போது வளரின் முகம்தான் அவனின் கண்முன்னே வந்து நின்றது.. பாட்டியைப் பற்றியை நினைக்கும் போது, ‘நாளை உண்மை தெரிந்தால் வளரின் மனம் எப்படி இருக்கும்..’ என்று யோசித்தவன் அவளை நேரில் பார்க்க கிளம்பினான்..
பானுமாவிடம் பேசிக்கொண்டே தோட்டத்திற்கு நடந்தவளின் எதிரே வந்த பேச்சி, “என்ன வளரு பானுமாவுடன் தோட்டத்துக்கு கிளம்பிட்டியா..?” என்று கேட்டதும், “ஆமாண்டி பேச்சி வீட்டில் பொழுது போகவே மாட்டேங்கிது..” என்று சொல்லிவிட்டு, “என்ன பேச்சி உன்னை மாப்பிள்ளை பார்க்க வந்தாங்களாம்.. மாப்பிள்ளை எப்பிடி இருக்காருன்னு நீ சொல்லவே இல்ல..” என்று அவளை வம்புக்கு இழுத்தாள்..
இருவரும் பேசுவதைப் பார்த்துக்கொண்டே தோட்டத்தை நோக்கி நடக்க பேச்சியோ, “நீ கூடத்தான் மாப்பிள்ளை எப்படி இருக்காருன்னு என்னிடம் சொல்லவே இல்ல..” என்று சொல்ல வளர்மதி வாய்பேசாமல் வந்தாள்.. அந்த அமைதியைப் பார்த்த பேச்சி மனதிற்குள் சிரிக்க அவளின் மனதினை அறிந்த வளரு வெக்கத்தில் தலை குனிந்தாள்.. அவளின் இந்த செயல் எல்லாமே பேச்சிக்கு புதுமையாக இருந்தது.. பதுமை போல இல்லாமல் வாய்பேசி வண்ணத்துப்பூச்சி போல ஊரையே சுற்றி வந்தவளின் வெக்கம் அவளுக்கு புதுதான்..
இருவரும் அமைதியாக வருவதைப் பார்த்த பானுமா, “ஏய் என்ன இருவரும் அமைதியாக வரீங்க.. உங்க செட்டு ஆளுங்க எல்லாம் எங்கேடி..?” என்று கேட்டதும், “அவங்களுக்கு எல்லாம் கண்ணாலம் ஆகிருச்சு பானுமா..” என்று கூறிய பேச்சி அவர்களுடன் இணைந்து நடக்க, “ஏதாவது பாட்டு பாடு வளரு..” சொல்லிக்கொண்டே தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களைப் பார்த்தபடி மாமரத்தின் கீழே இருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தார்..
இருவரும் வளரின் முகத்தை ஆர்வத்துடன் பார்க்க, “பானுமா எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா..?” என்று கேட்டவள் நிற்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.. அவளின் ஓட்டத்தைப் பார்த்த பானுமா, “வளரு மாறிட்டே வரா பேச்சி..” என்று சொல்ல அவளும் அவளின் பின்னோடு எழுந்து சென்றாள்.. இருவரின் முகத்தையும் பார்த்தவர் தன்னுடைய கணக்குபிள்ளையை அழைத்து அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை விலாவாரியாக பேச ஆரம்பித்தார்..
ஆலையில் இருந்து கிளம்பிய மகிழன் நேராக வீட்டிற்கு சென்றதும் அங்கே வளரு இல்லாமல் தோட்டத்தை நோக்கி சென்றான்.. அப்பொழுது சுற்றிலும் பார்வையை ஓடியபடியே நடந்தவனைப் பார்த்த பானுமா, “மகிழா இங்க ஒரு நிமிஷம் வாப்பா..” என்று குரல்கொடுக்க பானுமாவைப் பார்த்தவன், “இருங்க பாட்டி வருகிறேன்..” என்று சொல்லி அவரின் அருகில் சென்றான்..
அவனுக்கு ஒரு கயிற்று கட்டிலைக் காட்டிய பானுமா, “உட்காருப்பா..” என்று சொல்ல, “இல்லங்க பாட்டி நீங்க சொல்லுங்க..” என்று சொல்ல, “உங்க ஊரில் உனக்கென சொந்தபந்தம் எல்லாம் யாருன்னு சொல்லுப்பா.. அவங்களுக்கு எல்லாம் சேர்த்து பத்திரிகை அடிக்கணும்..” என்று சொல்லிவிட்டு மகிழனின் முகத்தைப் பார்த்தார் பானுமா.. அவனோ நொடியும் யோசிக்காமல், “எனக்கு என்று யாரும் இல்ல பாட்டி.. நீங்களே எல்லாவற்றையும் செய்ங்க..” என்று கூறினான்..
அவனின் முகத்தைப் பார்த்து சிரித்தவர், “சரிடா.. நீ போயி வளரை அழைச்சுட்டு வா..” என்று கூறியதும், “அவ எங்கே பாட்டி இருக்கிற.. தோட்டத்தைச் சுத்திப்பார்க்க போயிருக்கிற..” என்று சொல்ல வேகமாக தோட்டத்தின் உள்ளே நுழைந்தான் மகிழன்.. முன்னே சென்ற பேச்சியைப் பார்த்த மகிழன், ‘இவ எதுக்கு இங்க வந்தா..?’ என்று யோசித்தபடியே இருவரையும் பின்தொடந்தான் மகிழன்.. ‘இவள் மனசுல அப்படி என்னதான் இருக்கு..?’ என்று யோசித்துக்கொண்டே வளரைப் பின்தொடர்ந்து சென்றாள் பேச்சி..
தன்னைப் பின் தொடர்ந்து பேச்சி வருவதை அறியாத வளர்மதி யோசனையுடன் தோட்டத்தின் உள்ளே நடந்து சென்றாள்.. எங்கிருந்த மரத்திலோ அமர்ந்திருந்த குயில், ‘கூ.. கூ.. கூ..’ என்று கூவிக்கொண்டிருக்க அதன் இசையில் தன் மனதைத் தொலைத்தவள் தன்னை மறந்தவண்ணம் நடந்து சென்றாள்.. உச்சிவேளை பொழுதினிலே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க அந்த சூட்டை எல்லாம் உடல் உணரமுடியாத அளவுக்கு அவளுக்கு நிழலைக் கொடுத்துவிட்டு தலைநிமிர்ந்து நின்றது தென்னை மரங்கள்..
காற்றில் மெல்ல அசைந்த கிளைகள் எல்லாம் சலசலக்கும் சத்தம் அந்த இடத்தின் அமைதியை நிறைத்தது.. அவள் கால்போன போக்கில் செல்ல மனம் நடக்கும் பாதையில் கவனம் இல்லாமல் நடந்தாள்.. ஏனோ மகிழன் அவளைவிட்டு விலகிச்செல்ல செல்ல அவளின் மனம் அவளையும் அறியாமல் அவனைத் தேட ஆரம்பித்தது.. அதை உணர்ந்து மனதோடு மறைத்தவள் இப்பொழுது அவன் விலகுவதைப் பார்த்து, ‘நான் என்ன தப்பு செஞ்சேன்..’ என்று தனக்குதானே கேள்வி கேட்டுகொண்டாள்..
மதியான வேளையிலும் நன்றாக வீசிய இளந்தென்றல் அவளின் மனதினைத் தூண்டிவிட மனதில் இருக்கும் நினைவுகள் பாடல் வரிகளாக வெளியே வந்தது..
“நிலவே உன்னை அழைத்தேன்..
நினைவைச் சொல்ல துடித்தேன்..
விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்
ஏன் இந்த போராட்டமோ..??” என்று பாடியவளின் குரலில் மயங்கிய மனதை கடிவாளம் இட்டு நடந்தவனின் பார்வை அவள் மீது இருந்தது.. பாட்டில் இருக்கும் சுவராஸ்யத்தில் தன்னை மறந்தவள் கிணற்றை கவனிக்காமல் முன்னே நடந்தாள்..