அத்தியாயம் – 4௦
அன்றைய நாளில் இருந்தே மகிழனை விட்டு விலக ஆரம்பித்தாள் ஷீலா... அவளின் பார்வை முழுவதும் அவனின் மீது இருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் வேறாக இருந்தது.. இவள் மகிழனைக் கண்காணித்தபடியே இருக்க இவளைக் கண்காணித்துக் கொண்டே இருந்தாள் ராகவி.. மகிழனோ யாரைப்பற்றியா நினைவும் இன்றி தன்னுடைய வேலைகளில் மூழ்கியவனின் சிந்தனை எல்லாம் தொழிலின் மீதே இருக்க வளர்மதியை முற்றிலும் மறந்தான்.. . கிட்டத்தட்ட மூன்று மாதமாக செய்யாத வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்த மகிழனைப் பார்த்து ஷீலாவிற்கு கோபம் எகிறியது..
மகிழனின் கவனம் எல்லாம் வேலையில் இருப்பதைப் பார்த்த ஷீலா, “இவனோட ஒய்ப் ஒரு போன் பண்ணி கூட இவனைப்பற்றி விசாரிக்கவே இல்லையே..” என்றவள் யோசிக்க அப்பொழுது சரியாக அங்கே வந்த ராகவி, “அவனோட கனவுதான் அவளோட லைப் சோ அவனாக போன் பண்ற வரையில் நிலா அவனுக்கு போன் பண்ணவே மாட்டாள்..” என்றவள் சொல்லிவிட்டு தன்னுடைய வேளைகளில் கவனம் செலுத்திய ராகவியைக் கொலைவெறியுடன் பார்த்தாள் ஷீலா.. அவளின் பார்வை எல்லாம் கண்டும் காணாமல் தன்னுடைய வேலையை செய்தாள்.
அங்கே இவன் தன்னை வேளைகளில் மூழ்கடித்து கொள்ள இங்கே மகிழன் ஊருக்கு சென்ற நாளில் இருந்து வளர்மதிக்கு நாட்கள் சீரான வேகத்தில் செல்ல ஆரம்பித்தது.. வீட்டைச்சுற்றிலும் ஒரு நேரத்தில் லட்சுமி அல்லது பானுமா இல்லையென்றால் சிவராமன் அவரும் இல்லையெனில் சிவசங்கரன் என்று யாராவது அவளின் அருகில் இருந்து அவன் இல்லாத தனிமையை உணராத வண்ணம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வளர்மதியும் எப்பொழுதும் போலவே புன்னகையுடன் வலம் வர ஆரம்பித்தாள்..
காலையில் எழுந்ததுமே எப்பொழுதும் போல வாசல் தெளித்து கோலம் போட்டு குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழைய அவளின் எதிரே வந்த பானுமாவை பார்த்தவள், “என்ன பானுமா இன்னைக்காவது உன்னுடைய பேரன் போன் பண்ணினானா..?” என்று விளையாட்டு போலவே கேட்டாள்.. அவளின் கேள்வியில் நின்று அவளின் முகம் பார்த்த பானுமா, “ஏண்டி இன்னும் உன்னோட வாய் குறையவே இல்லையா..?” என்று இடையில் கையூன்றி மிரட்டுவது போலவே கேட்டார்..
வளர்மதியின் குரல்கேட்டு சமையலறையின் உள்ளிருந்து வெளியே வந்த லட்சுமி இருவரையும் பார்க்க அதையெல்லாம் கவனிக்காத வளர்மதியோ பானுமாவை வம்பிழுப்பதில் குறியாக இருந்தாள்.. “என்னுடன் சேர்ந்து பிறந்த வாய் அம்மா.. அது எல்லாம் குறையவே குறையாது..” என்று கூறிய வளர்மதியை முறைத்த பானுமா, “இருடி மகளே என்னோட பேரன் வரட்டும்..” என்றவர் சொல்லி முடிக்கும் முன்னே அவரின் பேச்சைக் கைநீட்டித் தடுத்தவள், “இப்போ வந்த உங்க பேரன் என்ன பண்ணிட்டு போனாரு..” என்று குறும்புடன் கண்சிமிட்டிக் குறும்புடன் கேட்டாள்..
அவளின் கேள்வியில் அசந்து போய் நின்ற லட்சுமியைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த சிவராமன், “என்னம்மா வளரு இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று பார்க்கிறீயா.. இவங்க இருவரும் எப்பவும் அப்படித்தான்..” என்று சொல்லிட்டு பின் வாசலை நோக்கி நடந்தார்.. அவர் வந்ததைக் கவனிக்காத பானுமா, “இல்லடி உனக்கு இன்னைக்கு என்னவோ நேரம் சரியில்ல..” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடக்க வாய்விட்டுச் சிரித்தாள் வளர்மதி..
அவளின் அருகில் வந்த லட்சுமி, “என்னடா அத்தைக்கிட்ட இப்படி பேசற.. அவங்க மனசு வருத்தபட்டும் இல்ல..” என்றவர் மெல்ல கேட்டதும் அவளின் புன்னகை மறைய, “அத்தை மாமா இங்கே இல்லாமல் இருப்பது என்னைவிட அவங்களுக்குத்தான் அதிக வருத்தம்.. என்னடா இவனுக்கு பொண்ணைக் கொடுத்தால் இவன் மீண்டும் வெளிநாடு போயிட்டான்.. என்னோட மகள் இங்கே தனியாக இருக்காளேன்னு நினைப்பாங்க..” என்று சொல்ல லட்சுமிக்கு ஒன்றுமே புரியவில்லை..
அவரின் புரியாத பார்வையைப் புரிந்துக்கொண்ட வளர்மதி, “அதன் அவங்களை இப்படி வம்பிழுத்தால் மற்றதை எல்லாம் மறந்திருவாங்க அத்தை.. என்னோட வருத்தத்தை நான் அவங்களை பாதிக்கக்கூடாது இல்ல..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள்.. அவளின் புரிதலை பார்த்த லட்சுமி திகைத்து நின்றார்.. இப்படி ஒவ்வொரு நேரமும் தன்னுடைய வருத்தத்தை தனக்குள் புதைத்துக்கொண்டு மற்றவருக்காக சிரிக்க ஆரம்பித்தாள் வளர்மதி..
அவளுக்கு பகல் பொழுது சீக்கிரமே சென்று மறைந்துவிடும்.. இரவு நேரத்தில் அவன் உடனில்லாத தனிமையை உணரும் பொழுது வளர்மதிக்கு அழுகை வந்துவிடும்.. இரவு முழுவதும் அழுதபடியே தூங்காமல் இருப்பாள்.. எங்கு சுற்றினாலும் கடைசியில் அவனின் நினைவில் வந்து நிற்கும் மனதை சமாதானம் செய்ய வழி தெரியாமல் அவனின் அழைப்பை எதிர்பார்த்து ஓவ்வொரு நாளும் காத்திருக்க ஆரம்பித்தாள்.. ஆனால் ஒருநாள் கூட இவளாக மகிழனுக்கு அழைத்ததே இல்லை..
நாட்கள் எந்தவிதமான மாற்றமும் இன்றி சீரான வேகத்தில் செல்ல கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் சென்று மறந்துவிட அன்று தான் ஓய்வாக தன்னுடைய வீட்டில் அமர்ந்து வேலையைக் கவனித்த மகிழன் லாப்டாப்பை மூடிவைத்துவிட்டு சோபாவில் சாய்ந்து கண்மூடினான்.. அவனின் மூடிய விழிகளில் வழியாக எழில் ஓவியமாக வந்து நின்ற துளிர்நிலா, “என்ன மாமா என்னை சுத்தமாக மறந்தே போயிட்டீங்களா..?” என்று சோகமாகக் கேட்டதும் திடீரென கண்விழித்துப் பார்த்தான்.. அங்கே அவனைத் தவிர மற்ற யாரும் இல்லை..
அது கனவு என்ற உண்மை புரிந்ததும் அவனின் ஏதோபோல ஆகிவிட எழுந்து சென்று தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்தவனின் நினைவு அவளின் மீதே இருந்தது.. அவளின் நினைவு எழுந்ததும், “என்னை ரொம்ப தேடியிருப்பாள் போல..” என்று தனக்குதானே சொல்லிக் கொண்டவன் தன்னுடைய போனில் இருந்து வளர்மதிக்கு அழைத்தான்.. அவனின் அழைப்பு சென்றதே தவிர யாருமே அவனின் அழைப்பை எடுக்கவில்லை..
மீண்டும் அவன் முயற்சிக்க அப்பொழுதும் யாரும் போன் எடுக்காமல் இருக்க, “என்ன யாரும் போனை எடுக்கவே மாட்டேன்றாங்க..” என்று சொன்னவனின் பார்வை கடிகாரத்தைப் பார்க்க அதில் மணி பகல் இரண்டு என்று காட்டியதும், ‘இந்நேரம் அங்கே நைட் பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கும்..’ என்றவன் போனை வைக்கலாம் என்று நினைக்கும் பொழுது அவனின் அழைப்பை எடுத்த வளர்மதி, “மாமா..” என்று அழைத்தாள்..
அவளின் அழைப்பில் அவனின் கவனம் கலைந்துவிட, “நிலா நீ இன்னும் தூங்கல..” என்று கேட்டதுமே மறுபக்கம் எந்தவிதமான சத்தமும் இல்லாமல் இருக்க, ‘அழுகிறாளா..?’ என்றவன் மனதில் நினைத்துக்கொண்டே, “நிலா..” என்று அழைத்தும், “மாமா நீ இல்லாமல் என்னவோ மாதிரி இருக்கு.. நான் நைட்ல தூங்கறதே இல்ல.. உனக்கு போன் பண்ணவும் மனசே வரல மாமா..” என்று மனதில் இருப்பதை எல்லாம் அவனிடம் கொட்டிவிட்டாள்.. அவளின் வருத்தம் அவனையும் தாக்கியது..
அவளை எப்படி சமாதானம் செய்வது என்று அறியாத மகிழன், “நிலா நீ ஏன் எனக்கு போன் பண்ணாமல் இருக்க..? உனக்கு எப்போ எல்லாம் என்னுடன் பேசணும் என்று தோணுதோ அப்போ எல்லாம் எனக்கு போன் பண்ணுடா.. என்னோட பேசக்கூடாதுன்னு நான் சொன்னேனா..? எனக்கு வேலை அதிகம் நிலா.. அதன் மாமா உனக்கு போன் பண்ணவே இல்ல..” என்றவன் சொல்லி முடிக்கவும் அவளின் அழுகை நின்றுவிட, “ஏன் மாமா ஊருக்கு போனதில் இருந்தி என்னோட நினைவே உங்களுக்கு வரலையா..?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்..
அவளின் கேள்வியில் வாய்விட்டுச் சிரித்த மகிழனோ, “நீ வாய்விட்டு கேட்டுட்ட நான் கேட்கல அவ்வளவுதான்.. நீயும் என்னுடனே வந்திருக்கலாம் துளிரு.. நீ இல்லாமல் நைட் தூக்கமே வராமல் எப்பவும் வேலை வேலை என்று வேலையில் என்னை மூழ்கடிச்சுட்டு இருக்கேன்..” என்றவனும் அவனின் மனதில் இருப்பதை அவளுடன் பகிர, “மாமா நான் மட்டும் உங்களோட வந்திருந்தா நீங்க ஆபீஸ் எல்லாம் போகவே மாட்டிங்க.. அப்புறம் என்பாடு அவ்வளவுதான்..” என்று ஏற்ற இறக்கத்துடன் கூறியதும் மகிழனுக்கு சிரிப்பு வந்தது..
“நீ சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான் வளரு.. நீ மட்டும் என்னோட கிளம்பி வந்திருந்த உன்னோட ஊர் சுத்துவதற்கே என்னோட நேரம் எல்லாம் செலவாகி இருக்கும்.. என்ன பண்றது மாமா கூட ஹனிமூன் போலாம் என்று என்னோட பொண்டாட்டி சொல்வாள் என்று நினைத்து பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்து வெச்சது எல்லாம் வீணாப்போச்சு..” என்றவன் ஏக்கத்துடன் சொல்லி முடிக்க வளர்மதி வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்..
இரவு எழுந்து தண்ணீர் குடிக்க சமையலறைக்கு வந்த பானுமா வளர்மதியின் சிரிப்பு சத்தம்கேட்டு அவளின் அறையை எட்டிப்பார்க்க மகிழனுடன் பேசிச்சிரித்த வளர்மதியின் முகம் பார்த்து அவரின் மனம் வந்த சுவடே இல்லாமல் தங்களின் அறையை நோக்கி நடந்தார் பானுமா.. ‘என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் விடியும் வரையில் பேசிக்கொண்டிருந்தனர்.. அவனுடன் பேசியபடியே அவள் தூங்கிவிட தனக்கு பதில் வராமல் மணியைப் பார்த்த மகிழன், “பாவம் தூங்கிட்டா போல..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்..
விடியும் வரையில் மகிழனுடன் பேசியவள் விடியும் பொழுது தூங்கிவிட காலையில் விடியும் பொழுதே எழுந்து குளித்துவிட்டு கோலம் போடும் வளர்மதியைக் காணவில்லை என்றதும் அவளின் அறையை நோக்கிச் சென்ற மருமகளைப் பார்த்த பானுமா, “லட்சுமி அவள் நல்ல தூங்கிட்டு இருப்பா..” என்று சொல்ல அவரின் பயம் அதிகரிக்க, “ஏன் அத்தை அவளுக்கு உடம்பு சரியில்லையா..?” என்று பதட்டத்துடன் கேட்டார்..
நீ என்மீது வைத்த நேசமும்
நான் உன்மீது வைக்க காதலும்
கலந்த விதையொன்று அரும்போன்று
துளிர்விடும் தருணம் இதுதானோ
இருவரின் நேசமும் கலந்த
விதையொன்று வயிற்றில் துளிர்விட்ட
நேரத்தில் இருவரும் நேசமும்
காணாமல் கானல்நீரானதோ..
என்னிடம் உண்மை சொல்லடா..
என்னுயிர் கண்ணா..
அன்றைய நாளில் இருந்தே மகிழனை விட்டு விலக ஆரம்பித்தாள் ஷீலா... அவளின் பார்வை முழுவதும் அவனின் மீது இருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் வேறாக இருந்தது.. இவள் மகிழனைக் கண்காணித்தபடியே இருக்க இவளைக் கண்காணித்துக் கொண்டே இருந்தாள் ராகவி.. மகிழனோ யாரைப்பற்றியா நினைவும் இன்றி தன்னுடைய வேலைகளில் மூழ்கியவனின் சிந்தனை எல்லாம் தொழிலின் மீதே இருக்க வளர்மதியை முற்றிலும் மறந்தான்.. . கிட்டத்தட்ட மூன்று மாதமாக செய்யாத வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்த மகிழனைப் பார்த்து ஷீலாவிற்கு கோபம் எகிறியது..
மகிழனின் கவனம் எல்லாம் வேலையில் இருப்பதைப் பார்த்த ஷீலா, “இவனோட ஒய்ப் ஒரு போன் பண்ணி கூட இவனைப்பற்றி விசாரிக்கவே இல்லையே..” என்றவள் யோசிக்க அப்பொழுது சரியாக அங்கே வந்த ராகவி, “அவனோட கனவுதான் அவளோட லைப் சோ அவனாக போன் பண்ற வரையில் நிலா அவனுக்கு போன் பண்ணவே மாட்டாள்..” என்றவள் சொல்லிவிட்டு தன்னுடைய வேளைகளில் கவனம் செலுத்திய ராகவியைக் கொலைவெறியுடன் பார்த்தாள் ஷீலா.. அவளின் பார்வை எல்லாம் கண்டும் காணாமல் தன்னுடைய வேலையை செய்தாள்.
அங்கே இவன் தன்னை வேளைகளில் மூழ்கடித்து கொள்ள இங்கே மகிழன் ஊருக்கு சென்ற நாளில் இருந்து வளர்மதிக்கு நாட்கள் சீரான வேகத்தில் செல்ல ஆரம்பித்தது.. வீட்டைச்சுற்றிலும் ஒரு நேரத்தில் லட்சுமி அல்லது பானுமா இல்லையென்றால் சிவராமன் அவரும் இல்லையெனில் சிவசங்கரன் என்று யாராவது அவளின் அருகில் இருந்து அவன் இல்லாத தனிமையை உணராத வண்ணம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வளர்மதியும் எப்பொழுதும் போலவே புன்னகையுடன் வலம் வர ஆரம்பித்தாள்..
காலையில் எழுந்ததுமே எப்பொழுதும் போல வாசல் தெளித்து கோலம் போட்டு குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழைய அவளின் எதிரே வந்த பானுமாவை பார்த்தவள், “என்ன பானுமா இன்னைக்காவது உன்னுடைய பேரன் போன் பண்ணினானா..?” என்று விளையாட்டு போலவே கேட்டாள்.. அவளின் கேள்வியில் நின்று அவளின் முகம் பார்த்த பானுமா, “ஏண்டி இன்னும் உன்னோட வாய் குறையவே இல்லையா..?” என்று இடையில் கையூன்றி மிரட்டுவது போலவே கேட்டார்..
வளர்மதியின் குரல்கேட்டு சமையலறையின் உள்ளிருந்து வெளியே வந்த லட்சுமி இருவரையும் பார்க்க அதையெல்லாம் கவனிக்காத வளர்மதியோ பானுமாவை வம்பிழுப்பதில் குறியாக இருந்தாள்.. “என்னுடன் சேர்ந்து பிறந்த வாய் அம்மா.. அது எல்லாம் குறையவே குறையாது..” என்று கூறிய வளர்மதியை முறைத்த பானுமா, “இருடி மகளே என்னோட பேரன் வரட்டும்..” என்றவர் சொல்லி முடிக்கும் முன்னே அவரின் பேச்சைக் கைநீட்டித் தடுத்தவள், “இப்போ வந்த உங்க பேரன் என்ன பண்ணிட்டு போனாரு..” என்று குறும்புடன் கண்சிமிட்டிக் குறும்புடன் கேட்டாள்..
அவளின் கேள்வியில் அசந்து போய் நின்ற லட்சுமியைப் பார்த்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்த சிவராமன், “என்னம்மா வளரு இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று பார்க்கிறீயா.. இவங்க இருவரும் எப்பவும் அப்படித்தான்..” என்று சொல்லிட்டு பின் வாசலை நோக்கி நடந்தார்.. அவர் வந்ததைக் கவனிக்காத பானுமா, “இல்லடி உனக்கு இன்னைக்கு என்னவோ நேரம் சரியில்ல..” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடக்க வாய்விட்டுச் சிரித்தாள் வளர்மதி..
அவளின் அருகில் வந்த லட்சுமி, “என்னடா அத்தைக்கிட்ட இப்படி பேசற.. அவங்க மனசு வருத்தபட்டும் இல்ல..” என்றவர் மெல்ல கேட்டதும் அவளின் புன்னகை மறைய, “அத்தை மாமா இங்கே இல்லாமல் இருப்பது என்னைவிட அவங்களுக்குத்தான் அதிக வருத்தம்.. என்னடா இவனுக்கு பொண்ணைக் கொடுத்தால் இவன் மீண்டும் வெளிநாடு போயிட்டான்.. என்னோட மகள் இங்கே தனியாக இருக்காளேன்னு நினைப்பாங்க..” என்று சொல்ல லட்சுமிக்கு ஒன்றுமே புரியவில்லை..
அவரின் புரியாத பார்வையைப் புரிந்துக்கொண்ட வளர்மதி, “அதன் அவங்களை இப்படி வம்பிழுத்தால் மற்றதை எல்லாம் மறந்திருவாங்க அத்தை.. என்னோட வருத்தத்தை நான் அவங்களை பாதிக்கக்கூடாது இல்ல..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள்.. அவளின் புரிதலை பார்த்த லட்சுமி திகைத்து நின்றார்.. இப்படி ஒவ்வொரு நேரமும் தன்னுடைய வருத்தத்தை தனக்குள் புதைத்துக்கொண்டு மற்றவருக்காக சிரிக்க ஆரம்பித்தாள் வளர்மதி..
அவளுக்கு பகல் பொழுது சீக்கிரமே சென்று மறைந்துவிடும்.. இரவு நேரத்தில் அவன் உடனில்லாத தனிமையை உணரும் பொழுது வளர்மதிக்கு அழுகை வந்துவிடும்.. இரவு முழுவதும் அழுதபடியே தூங்காமல் இருப்பாள்.. எங்கு சுற்றினாலும் கடைசியில் அவனின் நினைவில் வந்து நிற்கும் மனதை சமாதானம் செய்ய வழி தெரியாமல் அவனின் அழைப்பை எதிர்பார்த்து ஓவ்வொரு நாளும் காத்திருக்க ஆரம்பித்தாள்.. ஆனால் ஒருநாள் கூட இவளாக மகிழனுக்கு அழைத்ததே இல்லை..
நாட்கள் எந்தவிதமான மாற்றமும் இன்றி சீரான வேகத்தில் செல்ல கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் சென்று மறந்துவிட அன்று தான் ஓய்வாக தன்னுடைய வீட்டில் அமர்ந்து வேலையைக் கவனித்த மகிழன் லாப்டாப்பை மூடிவைத்துவிட்டு சோபாவில் சாய்ந்து கண்மூடினான்.. அவனின் மூடிய விழிகளில் வழியாக எழில் ஓவியமாக வந்து நின்ற துளிர்நிலா, “என்ன மாமா என்னை சுத்தமாக மறந்தே போயிட்டீங்களா..?” என்று சோகமாகக் கேட்டதும் திடீரென கண்விழித்துப் பார்த்தான்.. அங்கே அவனைத் தவிர மற்ற யாரும் இல்லை..
அது கனவு என்ற உண்மை புரிந்ததும் அவனின் ஏதோபோல ஆகிவிட எழுந்து சென்று தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்தவனின் நினைவு அவளின் மீதே இருந்தது.. அவளின் நினைவு எழுந்ததும், “என்னை ரொம்ப தேடியிருப்பாள் போல..” என்று தனக்குதானே சொல்லிக் கொண்டவன் தன்னுடைய போனில் இருந்து வளர்மதிக்கு அழைத்தான்.. அவனின் அழைப்பு சென்றதே தவிர யாருமே அவனின் அழைப்பை எடுக்கவில்லை..
மீண்டும் அவன் முயற்சிக்க அப்பொழுதும் யாரும் போன் எடுக்காமல் இருக்க, “என்ன யாரும் போனை எடுக்கவே மாட்டேன்றாங்க..” என்று சொன்னவனின் பார்வை கடிகாரத்தைப் பார்க்க அதில் மணி பகல் இரண்டு என்று காட்டியதும், ‘இந்நேரம் அங்கே நைட் பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கும்..’ என்றவன் போனை வைக்கலாம் என்று நினைக்கும் பொழுது அவனின் அழைப்பை எடுத்த வளர்மதி, “மாமா..” என்று அழைத்தாள்..
அவளின் அழைப்பில் அவனின் கவனம் கலைந்துவிட, “நிலா நீ இன்னும் தூங்கல..” என்று கேட்டதுமே மறுபக்கம் எந்தவிதமான சத்தமும் இல்லாமல் இருக்க, ‘அழுகிறாளா..?’ என்றவன் மனதில் நினைத்துக்கொண்டே, “நிலா..” என்று அழைத்தும், “மாமா நீ இல்லாமல் என்னவோ மாதிரி இருக்கு.. நான் நைட்ல தூங்கறதே இல்ல.. உனக்கு போன் பண்ணவும் மனசே வரல மாமா..” என்று மனதில் இருப்பதை எல்லாம் அவனிடம் கொட்டிவிட்டாள்.. அவளின் வருத்தம் அவனையும் தாக்கியது..
அவளை எப்படி சமாதானம் செய்வது என்று அறியாத மகிழன், “நிலா நீ ஏன் எனக்கு போன் பண்ணாமல் இருக்க..? உனக்கு எப்போ எல்லாம் என்னுடன் பேசணும் என்று தோணுதோ அப்போ எல்லாம் எனக்கு போன் பண்ணுடா.. என்னோட பேசக்கூடாதுன்னு நான் சொன்னேனா..? எனக்கு வேலை அதிகம் நிலா.. அதன் மாமா உனக்கு போன் பண்ணவே இல்ல..” என்றவன் சொல்லி முடிக்கவும் அவளின் அழுகை நின்றுவிட, “ஏன் மாமா ஊருக்கு போனதில் இருந்தி என்னோட நினைவே உங்களுக்கு வரலையா..?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்..
அவளின் கேள்வியில் வாய்விட்டுச் சிரித்த மகிழனோ, “நீ வாய்விட்டு கேட்டுட்ட நான் கேட்கல அவ்வளவுதான்.. நீயும் என்னுடனே வந்திருக்கலாம் துளிரு.. நீ இல்லாமல் நைட் தூக்கமே வராமல் எப்பவும் வேலை வேலை என்று வேலையில் என்னை மூழ்கடிச்சுட்டு இருக்கேன்..” என்றவனும் அவனின் மனதில் இருப்பதை அவளுடன் பகிர, “மாமா நான் மட்டும் உங்களோட வந்திருந்தா நீங்க ஆபீஸ் எல்லாம் போகவே மாட்டிங்க.. அப்புறம் என்பாடு அவ்வளவுதான்..” என்று ஏற்ற இறக்கத்துடன் கூறியதும் மகிழனுக்கு சிரிப்பு வந்தது..
“நீ சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான் வளரு.. நீ மட்டும் என்னோட கிளம்பி வந்திருந்த உன்னோட ஊர் சுத்துவதற்கே என்னோட நேரம் எல்லாம் செலவாகி இருக்கும்.. என்ன பண்றது மாமா கூட ஹனிமூன் போலாம் என்று என்னோட பொண்டாட்டி சொல்வாள் என்று நினைத்து பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்து வெச்சது எல்லாம் வீணாப்போச்சு..” என்றவன் ஏக்கத்துடன் சொல்லி முடிக்க வளர்மதி வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்..
இரவு எழுந்து தண்ணீர் குடிக்க சமையலறைக்கு வந்த பானுமா வளர்மதியின் சிரிப்பு சத்தம்கேட்டு அவளின் அறையை எட்டிப்பார்க்க மகிழனுடன் பேசிச்சிரித்த வளர்மதியின் முகம் பார்த்து அவரின் மனம் வந்த சுவடே இல்லாமல் தங்களின் அறையை நோக்கி நடந்தார் பானுமா.. ‘என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் விடியும் வரையில் பேசிக்கொண்டிருந்தனர்.. அவனுடன் பேசியபடியே அவள் தூங்கிவிட தனக்கு பதில் வராமல் மணியைப் பார்த்த மகிழன், “பாவம் தூங்கிட்டா போல..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்..
விடியும் வரையில் மகிழனுடன் பேசியவள் விடியும் பொழுது தூங்கிவிட காலையில் விடியும் பொழுதே எழுந்து குளித்துவிட்டு கோலம் போடும் வளர்மதியைக் காணவில்லை என்றதும் அவளின் அறையை நோக்கிச் சென்ற மருமகளைப் பார்த்த பானுமா, “லட்சுமி அவள் நல்ல தூங்கிட்டு இருப்பா..” என்று சொல்ல அவரின் பயம் அதிகரிக்க, “ஏன் அத்தை அவளுக்கு உடம்பு சரியில்லையா..?” என்று பதட்டத்துடன் கேட்டார்..