உயிர் – 16
இந்த 2 வருடத்தில் நடந்ததை சத்ரியன் மைத்ரேயியுடன் கூற எண்ணினார்... அதே போல்
அவர்கள் வாழ்வில் நடந்த, நடந்துக் கொண்டு இருக்கிற எல்லாம் கூற எண்ணினார் சத்ரியன்...
இங்கு சத்ரியன் வரும்பொழுது எல்லாம் மையூரி அவரிடம் ஊருக்கு வருவேன் என்று அழும்போது எல்லாம் அவருக்கு மிக மிக வருத்தமாக இருக்கும். அவளிடம் சொல்லலாமா என்று எண்ணுவார், ஆனால் அப்படி கூறி இவள் ஏதாவது செய்துவிட்டாள் என்றால், இவர் இத்தனை பாடுபடுவதே அந்த சொத்தை பாதுகாக்கவும், இவளை பாதுகாத்து சொத்தை இவள் கையில் ஒப்படைப்பதும் தான்...
சொத்தை இவள் பெயருக்கு எழுதியாச்சு, இனி இவளை நலபடியாக வளர்க்க வேண்டும்
அந்த சொத்தை நிர்வகிக்கும் திறமை வரவேண்டும் என்று தான் அவளை இங்கு படிக்க
அனுப்பியதே. ஆனால் இவளிடம் முன்பே கூறி இருந்தால் கண்டிப்பாக “ நாம யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது தாத்தா.. அவங்க சொத்து என்று தெரிந்த பிறகு நாம வைத்துக் கொள்ளவே கூடாது...
அவர்கள் வாரிசை நாம் கண்டு பிடித்து அவர்களுக்கு அளிக்க வேண்டும், அவர்கள் இப்பொழுது உயிருடன் இல்லை என்றால் நாம் வைத்துக் கொள்ளலாம்” என்று உடனே கிளம்பி விடுவாள் என்று தெரிந்து தான் அவர் இவ்வளவு நாளும் அவளிடம் கூறாமல் இருந்தார்...
ஆனால்இனியும் தாமதிக்க வேண்டாம்.. “ எத்தனை காலம் இன்னும் உயிருடன் இருப்பேன் என்று எனக்கு தெரியாது, அதற்கு முன் இவளிடம் எல்லாம் கூறி ஒப்படைக்க வேண்டும், அதை அவள்பாது காப்பதும், அவர்களுக்கு குடுப்பதும் இவள் கையில் தான் இருக்கிறது..
அந்த சித்தர் கூறியது போல் அவளின் 2௦ வது வயது வரை இவளை அங்கு அழைக்காமல் இருக்க வேண்டும், அந்த வயது வரை இவளை பாதுகாத்தால் போதும் அதன் பிறகு இவளுக்கு ஆபத்து இல்லை ” என்று எண்ணி தான் சத்ரியன் இந்த முறை இங்கு மும்பை வரும்பொழுது எல்லாம் யோசித்து தான் வந்தார்....
இனி மைத்ரேயி 3 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்க போகிறாள், வயது 19 ஆக போகிறது...
இன்னும் 1 வருடம் இவளை பாதுகாக்க வேண்டும், சும்மா ஊருக்கு வர வேண்டாம் என்று
கூறினால் அவள் சொல்வது போல் என்றாவது ஒரு நாள் எதிர்பாரத நேரம் ஊரில் வந்து நிற்பாள் என்று எண்ணி இதோ சொல்ல ஆயத்தம் ஆகி இருக்கிறார் சத்ரியன்...
மைத்ரேயி, ஜிக்கி இருவரும் அவரிடம் கதை கேட்க ஆர்வமாக இருந்தனர்... “ 1௦௦
வருடங்களுக்கு முன் நடந்த எல்லாம் கூறினார் சத்ரியன், அதே போல் சத்ரியா திருமணம், மையூரி திருமணம் எல்லாம் கோட்டைத்தாய் வேலை தான் என்றும், நிலம் அவர்கள் இடம் தான் இப்போ அவங்க எங்க இருக்காங்க என்று தெரியாது, அதே போல அவங்க வாரிசு இருக்கா என்று தெரியாது என்றும் கூறினார்..
அதே போல் சத்ரியா போட்டோவும் காட்டினார். அதை பார்த்ததும் மைத்ரேயிக்கு நியாபகம் வந்தது, அன்று அவள் போனில் வைத்திருந்த போட்டோவும் ஒரே போட்டோ அதுலேயே கண்டுக்கொண்டாள். ஆனால் அவரிடம் கூறாமல் மீண்டும் அவர் கூறியதை எல்லாம் அமைதியாக இருந்து கேட்டனர் இருவரும்...
கூடவே அவர்கள் செய்தது மிக பெரிய தவறு.. என் வாழ்நாளில் உன் அக்காவையும், உன்
அத்தையையும் மன்னிக்கமாட்டேன் என்றுக் கூறினார்..
அந்த போட்டோவை பார்த்ததும் ஜிக்கி கண்டுக் கொண்டாள் இது கெளதம் அம்மாவே என்று.. இது தெரியாமல் தான் இவர்கள் இருகிறார்களா என்றும் மனதில் எண்ணிக் கொண்டாள்..
அவளுக்கு தான் கெளதம் வீட்டு மனிதர்கள் எல்லாரும் அத்துபடியே.. அதன் படி இந்த மைக்
வைத்து காய் நகர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் ஜிக்னஷா விதார்த்....
அந்த நிலம் இபொழுது நமக்கு தான், அதன் உழைப்பு எல்லாம் நம்மளோடது என்று கூறினார்..
அவர் அப்படி கூறவும் “ தாத்தா உழைப்பு நம்மளோடது தான், ஆனால் கோட்டை, கோவில்
எல்லாம் அவங்களோடது தான.. அவங்க கேட்டால் நாம் கண்டிப்பாக குடுக்கணும்” என்று
கூறினாள்...
அவள் கூறுவதும் அவருக்கு சரி என்று பட்டது, அதே போல அவளுக்கு வரும் ஆபத்தையும்
கூறினார் அவர் அதை ஜிக்கி மிக மிக கவனமாக கேட்டாள்...
மைத்ரேயி பெரிதாக எண்ணவில்லை.. அவளுக்கு தெரியும் கோட்டைத்தாயை மனதார
வேண்டினால் அவள் உதவி செய்வாள், அவளை நான் என்றும் மனதார வேண்டுகிறேன் அவள் என்னை காப்பாற்றுவாள் என்றே எண்ணி தாத்தா சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தாள்....
அதே போல், அவள் சாமியாக மாறியதை கூறவில்லை, அப்படி கூறினால் அவள் ஒருவேளை அங்கு வந்துவிடுவாள் என்று எண்ணி கூறவில்லை,, அதே போல கெளதம் இவளை தேடி வந்ததையும் கூறவில்லை.... கூறி இருந்தால் பின்னாளில் வருவதை தடுத்திருக்கலாம்.... விதி யாரை விட்டது...
அதன் பிறகு இப்பொழுது இந்த 2 வருடமாக நடந்ததை கூற ஆரம்பித்தார் சத்ரியன்...
அன்று கோவில் திருவிழா முடிந்ததும் கௌதமை அழைத்து வர ஆட்களை அனுப்பினார் சத்ரியன். ஆனால் இவர் எதிர்பாரத வசமாக அவன் கிளம்பிவிட்டான்... அவன் யார் என்று அறிந்துக் கொள்ளவே சத்ரியன் அவனை அழைத்து வரக் கூறினார். ஆனால் இப்பொழுது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது என்று எண்ணிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தார் சத்ரியன்..
அன்றைய சம்பவத்துக்கு பிறகு தேவி கோட்டைநல்லூர் ஊரில் கால் வைக்கவே இல்லை, ஆனால் கோட்டை அப்படி இல்லாமல் தினமும் “ அந்த பாவிகளை அழிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என்று வேண்டி கொண்டு இருக்கிறாள், இதில் அவள் ஊரை சரியாக கவனிக்க முடியவில்லை...
யாராக இருந்தாலும், ஒரே நாளில் எல்லாம் மறந்து, மன்னித்து விட மாட்டார்கள்.. செய்த தவறின் பலனை அனுபவித்து ஆக வேண்டும், அப்படிதான் கோட்டையும் எண்ணிக் கொண்டு இருந்தாள், மனதில் அவர்களை அழிக்க வேண்டும் என்ற வன்மம் இருப்பதால் இப்பொழுது எல்லாம் மக்களின் வேண்டுதலை அவளை செவி கொண்டு கேட்டும் அவர்களுக்கு அருள் அளிக்காமல் இருந்தாள்...
தேவி வருவதற்கு முன் என்றால் அவளின் பழிவாங்கும் ஆவி அப்படியே பெட்டியில் இருந்தது, அவளுக்கு சாமியின் வரம் இருந்ததில் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் இருந்தாள், அதிலும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனமும் இருந்தது...
ஆனால் இப்பொழுது அவளால் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யமுடியும், கெடுதல் செய்ய முடியாது.. அது தான் அவர்களை அழிக்கும் முன் நல்லது செய்ய மனது வராமல் அப்படியே செவி இருந்தும் செவிடியாக இருந்தாள் கோட்டையம்மாள்....
அதிலும் கோட்டைநல்லூர் எல்லா ஊரையும் விட சற்று உயர்ந்த பகுதி, அதனால் தான் அந்த அருவி இன்னும் வற்றாமல் நீரை ஊற்றிக் கொண்டு இருக்கிறது.. ஒரு மதில் விழுந்த பிறகு பக்கத்துக்கு ஊர் மக்கள் வந்து இந்த அருவியில் இருந்து அவர்கள் ஊருக்கு தண்ணீர் வசதி செய்துக் கொண்டு சென்றனர்.. இதையும் கோட்டை பார்த்துக் கொண்டு இருந்தாள் என்றாவது ஒரு நாள் அவளின் வாரிசு வந்து இந்த நிலத்தை பயன்படுத்துவார்கள் அப்பொழுது இவர்களுக்கு தண்ணீர் பஞ்சம் வர கூடாது என்று எண்ணி தான் இங்கு அருவியில் தண்ணீர் வர வைத்தாள்...
ஆனால் இப்பொழுது யார் எல்லாமோ அந்த நீரை அனுபவிகின்றனர் என்று பார்த்துக் கொண்டு இருந்தாள், ஆனால் அவளின் பார்வையை கண்ட யாவரும் எண்ணுவர் அந்த அருவியையும் அவள் நிறுத்துவாள் என்று....
அருவி நீர் ஓடுவது எப்பொழுதும் கோட்டைநல்லூர் ஊரை தாண்டி பின் பக்க மதில் சுவர் பக்கம் பெரிய வாய்கால் ஓன்று உண்டு, அதன் வழியாக வெளியில் சென்று சிறிது தூரம் ஓடி அப்படியே காட்டு வழியாக செல்லும் அருவி நீர்....
கோட்டைநல்லூர் ஊர் பின்னாடி ஊர் கிடையாது, பெரும் காடு தான் உண்டு... மீதி பக்கம் ஊர்.. இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த காட்டை அழித்து வருகின்றனர்... மிகவும் செழிப்பான பகுதி என்று...
அதன் பிறகு ஊர் எந்த மாற்றமும் இல்லாமல் தான் சென்றது... இப்படி இருக்க அன்று அப்படி தான் எல்லாரும் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது என்றும் இல்லாத திருநாளாக ஊரில் பெரும் மழையும், புயல் காற்றும் அடித்து ஊரையை கதி கலங்க வைத்துக் கொண்டு இருந்தது...
கிட்ட தட்ட 3 நாள் தொடர் மழை... ஊர் மக்கள் எல்லாம் அடைக்கலம் புகுந்தது சத்ரியன்
கோட்டையிலும், கோட்டைத்தாய் கோவிலிலும், அதிலும் அந்த பூவரசம் மரம் பாதி அளவு நீர் நிறைந்து நின்றது....
கோவிலும், கோட்டையும் சற்று உயரமான பகுதி, அதனால் பெரும் அளவு தண்ணீர் கட்டி
நிற்கவில்லை... அப்பொழுது தான் ஊரின் வலது பக்க மதில் சுவரும் இடிந்து விழுந்தது.. இதை யாரும் எதிர் பார்க்காதது.. இப்பொழுது அந்த சுவரும் இடிந்து விழுந்ததில் இரண்டு பக்கமும் இருந்து நீர் பீரிட்டு வெளியேறியது...