ஹாய் டியர்ஸ்.. சாரி.. அடுத்த எபி போடுறேன்..படிச்சு சொல்லுங்க..
கதை எழுத எனக்கு தடைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.. ஓன்று வீட்டில் வேலை, இல்லை என்றால் ஆபீஸ் வேலை என்று வீட்டுக்கு போகவே வெகு நேரம் ஆகிறது. அடிக்கடி லேப் ரிப்பேர் என்று சேவை போகிறது.. நானும் சீக்கிரம் முடித்து விடவேண்டு என்று படாத பாடு படுறேன்..முடியலியே.. நேற்று இரவு லேப் சார்ஜ்ர் போட்டு வைக்கவும் சார்ஜ்ர் வயர் தானாக தீ பற்றி எரிகிறது...
சரி செல்லுல ட்ரை பண்ணலாம் என்றால் எனக்கு செல்லில் டைப் செய்ய தெரியமாட்டுக்கு.. சோ சேட்... இன்னும் ஒரு 4 இல்லை 5 எபியில் கதை முடிந்து விடும் என்று எண்ணுகிறேன்.அதுக்குள்ள இப்படி சதி நடக்குது... சார்ஜ்ர் வர ஒன்னு வீக் ஆகுமாம்... அதிலும் எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு..
எழுத நினைத்த ஆசையின் பலன்.. ஹா ஹா..
தொடர்ந்து படிச்சு ஆதரவு தருகிற உங்க எல்லாருக்கும் நன்றி!! என்று சொன்னால் அது சரி இல்லை. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது. மீண்டும் மீண்டும் நன்றி!!!
உயிர்– 2௦
முதல் முறை கெளதம் கோட்டைநல்லூர் வரும்பொழுது முகம் முழுவதும் கோபத்துடன் வந்தான்.. இரண்டாம் முறை வரும்பொழுது மனம் முழுவதும் தேடலுடன் வந்தான்.. இப்பொழுது மூன்றாம் முறை வரும் பொழுது பெரும் குழப்பத்துடன் இங்கு வந்திருக்கிறான் கெளதம்...
ஒரு முறையேனும் சந்தோசத்துடன் அவனின் முன்னோரை சந்திக்க வரவில்லை கெளதம்.. அந்த குடுப்பினை அவனுக்கு கிட்டவில்லை இதுவரை... இதுக்கு எல்லாம் காரணம் சத்ரியன் முன்னோர் செய்த பாவமே... ஆனால் இனிமேல்??
அங்கு கோட்டைநல்லூர் மதில் சுவர் தாண்டி அவன் உள்ளே வரவும் இவனை எதிர் நோக்கி அந்த பூவரசம் மரத்தின் அருகில் புன்னகை முகமாக நின்றிருந்தாள்மைத்ரேயி...
மும்பையில் இருந்து தனியாளாக கார் ஓட்டிக் கொண்டு வருவது கௌதம்க்கு பெரும் சிரமமாக இருந்தது, ஆனால் மனதின் ஓலதுக்கும், அவனின் கேள்விக்கும் விடை இங்கு உள்ளது என்று அறிந்த பின்னால் அவனின் சிரமத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துக் கொண்டு வழியில் தங்கி என்று ஒருவழியாக பெரும் குழப்பத்துடன் கோட்டைநல்லூர் வந்து சேர்ந்தான் கெளதம்...
அவன் வந்து காரை விட்டு இறங்கி, ஊரை சுற்றிப் பார்த்தான் கெளதம், முன்பு எங்கும் பச்சை பசேலென இருந்த இடங்கள் இப்பொழுது காய்ந்து போன இடங்களாக மாறின.. இதற்க்கு என்ன காரணம் என்றும் அவனுக்கு தெரியவில்லை...
கூடவே“நான் மட்டும் இங்கு இருந்திருந்தால், இந்த இடத்தை அப்படியே பூஞ்சோலையாக மாற்றி இருப்பேன்” என்று எண்ணிக் கொண்டு இருந்தான்...
இவனின் எண்ணத்தை பார்த்து கோட்டைத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அதிலும், அவன்இங்கு இருந்திருந்தால் இந்த இடத்தையே பூஞ்சோலையாக மாற்றி இருப்பேன் என்று கூறியதில் தான் அவள் பெரிதும் மகிழ்ந்திருந்தாள், அவளின் ஆசையும் இது தானே அவளின் வாரிசு இங்கு வந்து இந்த இடத்தை ஆளவேண்டும் என்பதே அவளின் இந்தனை வருட ஆசை.. இதை இன்று அவன் வாயாலையே கேட்டுக் கொண்டு விட்டாள்....
ஆனாலும் அவள் அடுத்து மைத்ரேயிக்கு கொடுத்த வாக்கு நியாபகம் வந்து அவள் மனத்தை வருத்த செய்தது, ஆனாலும் அவள் இவளுக்காய் செய்யும் பொழுது, இவளும் செய்வது தானே சரியாக இருக்கும் என்று எண்ணி, அவள் அடுத்து செய்ய போகிறதை நினைத்து கவலையாக பார்த்துக் கொண்டு இருந்தாள்...
எங்கும் சுற்றி பார்த்துவிட்டு மெதுவாக அவன் கண்கள் அந்த பூவரசம் மரத்தின் அருகில் சென்றது.. அங்கு பார்த்து அப்படியே சிலையாக நின்று விட்டான் கெளதம்...
ஆம், மைத்ரேயிபுன்னகை முகமாக நின்றிருந்தாள்... மைத்ரேயி எண்ணம் எல்லாம் அன்று எங்கள் கோட்டைக்கு வரமால் இருந்த மாமாவை இன்று எப்படியேனும் இந்த கோட்டையில் கால் வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேண்டுதலோடு அவனை பார்த்து ” மாமா “ என்று அழைத்தாள்...
அந்த அழைப்பில் கௌதமின் மனம் எத்தனை நிம்மதி அடைந்தது என்று யாராலும் கூறமுடியாது... அத்தனை உணர்ச்சி பிரவாகத்தில் இருந்தான் கெளதம்... அவளை பார்த்ததும் அவனுக்கு மற்றது எல்லாம் மறந்து விட்டது என்று தான் கூறவேண்டும்...
அவன் அருகில் வந்த மைத்ரேயி அவனின் கையை பிடித்தாள், அவள் செயலில் கெளதம் மனதில் அப்படியே வானத்தில் பறந்தான்... அவள் அருகில் அவன் உலகம் மட்டுமில்லை அவனையே மறந்தான்.. ஏதோ ஒரு மாய உலகில் பயணித்தான்.. அவன் உடல் முழுவதும் குளிர்ச்சி பார்த்துபரவியது.. அப்படியேமிதந்துக் கொண்டே அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான்......
அவன் அந்த மயக்கத்தை விட்டு வெளியில் வந்திருக்கும் பொழுது அவன் கோட்டையின் உள் நின்றிருந்தான்.. மைத்ரேயி அவனை அவள் வசபடுத்தி இருந்தாள்....
அவனுக்கு பழையது எல்லாம் நினைவில் இல்லை, ஏன் இங்கு எதற்கு வந்தான் என்பது கூட நினைவில் இல்லை.. அந்த அளவு அவனை அவள் கட்டுபாட்டின் கீழ் வைத்திருந்தாள் மைத்ரேயி...
சிறிது சிறிதாக அவனின் மயக்கத்தை குறைத்த மைத்ரேயி, அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்...
அவள் மனதில் எப்படி இவனை தன்வசபடுத்துவது என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது...
ஆனால் அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் அவளால் ஒண்ணும் செய்யமுடியாது, ஆனாலும் கோட்டைத்தாய் அவளுக்கு உதவுவேன் என்று கூறி இருக்கிறாள்...
அந்த நம்பிக்கையோடு அவனின் மயக்கத்தை முற்றிலுமாக உதற செய்தாள் மைத்ரேயி...
அதன் பிறகு தான் கௌதம்க்கு சுற்று புறம் உறைக்கவும் தான் அவன் அருகில் நின்ற மைத்ரேயியை பார்த்தான் ஆனால் அவன் கண்களுக்கு அவள் தெரியவே இல்லை...
யோசனையாக கையைப் பார்த்தான். அவள் பிடித்திருந்த இடம் இன்னும் அவனுக்கு குறுகுறுவென இருந்தது, அப்பொழுது அருகில் சத்தம் கேட்கவே நிமிர்ந்துபார்த்த கெளதம் அதிர்ந்து விட்டான்...
வீல் சேரில் சத்ரியனை அமர வைத்து அழைத்துக் கொண்டு வந்தான் ஒருவன்... அவன் அருகில் மைத்ரேயி கண்களில் நீர் வழியமெதுவாக நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்....
அதிர்ந்த கெளதம் அப்படியே சிலையாக நின்றுவிட்டான்,அவன் எதிர் பார்க்காத விஷயம் இது, அவனில் நடக்கும் குழப்பத்துக்கு விடை காணவே இங்கு வந்தான், ஆனால் இங்கு உள்ளதை பார்த்தால் நிறைய மர்மம் உள்ளதே என்ற யோசனையுடன் அவரை பார்த்துக் கொண்டு இருந்தான்...
அதே நேரம் சத்ரியன் பின்னால் நின்றவனை பார்த்து ஏதோ கூறினார் அவன் வீட்டின் உள்ளே சென்றான்.. அவர் சொல்வது கெளதம்க்கு புரியவே இல்லை..
காரணம் அவருக்கு வாய் கோணி, ஒரு கையும், ஒரு காலும் சரிவர இயங்காமல், கையை நெஞ்சின் அருகில் மடக்கி வைத்திருந்தார்.. அவர் வாய் கோணியதில் தான் அவர் பேசுவது அவனுக்கு புரியவில்லை, ஆனால்அவர் அருகில் நின்ற அவனுக்கு புரிந்தது எல்லாம். கெளதம் மனதில் “ இவனை பிடித்தால் எல்லாம் தெரியும் “ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது,
மீண்டும் அவன் வந்தான், வந்தவன் ஒரு கத்தை பேப்பர் சத்ரியனிடம் கொண்டு வந்து அவர் முன் நின்றான், நிற்கவும் அவர் அவனுக்கு கண்ணை கெளதம் பக்கம் திருப்பியும், கையை இவன் நோக்கி கொஞ்சம் அசைத்தும் “இ....இழ... அ..அவ...அவன்...கை..கையி..ழ..கொ...கொ.. கொழு (கொடு)“ என்று கூறவும்,
அவன் கெளதம் பக்கம் நகர்ந்து அந்த கத்தை பேப்பரை இவன் கையில் திணித்தான்.... யோசனையாக சத்ரியனை பார்த்தான் கெளதம். அப்பொழுது கண்களில் நீர் வழிய சத்ரியன் இவனை பார்த்துக் கொண்டு இருந்தார்.. கூடவே“ என்.. என்னை.. மன்னி. மன்னிசுழு... “ என்று நா தழுதழுக்க கூறினார்,
அவர் கூறுவது அவனுக்கு புரியவே இல்லை,யோசனையாக அவனை கெளதம், பார்த்து“ இவர் என்ன சொல்லுறார் எனக்கு புரியலை” என்றுக் கூறினான்
அதற்கு கெளதம் அருகில் வந்த அவன் “ நான் கணேஷ், இவங்கள 1 வருசமா பாத்துட்டு இருக்கேன், இப்போ இவங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறாங்க “ என்றுக் கூறினான்...
அந்த கணேஷ் அப்படி கூறவும் கௌதம்க்கு பெரும் யோசனை “ இவர் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் “ என்று யோசனையாகவும், கூடவே“ மைத்ரேயி அங்கு இருக்கிறாள் இங்க இவன் பாத்துகிறான் என்றால் நான் இப்பொழுது வரும் பொழுது இங்கு இருந்தது மைத்ரேயி என்றால், அங்கு இருப்பது யார்? அதிலும் அங்கு இருக்கும் அம்மா, மையூரி எப்படி இவரிடம் பேசினார்கள் என்ற யோசனையோடு அவன் இருக்கவும் கணேஷ் மொபைல் போன் ஒலிக்கவே,
சத்ரியனை அவர் அறைக்கு அழைத்து சென்று விட்டு வந்து இவனை இங்கு விருந்தினர் அறைக்கு அழைத்து சென்றான், “ நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க” என்று கூறி சென்றான்...
இவன் யோசனையாக வந்து கட்டிலில் அமர்ந்தான், இவன் அமர்ந்த சிறிது நேரத்தில் கணேஷ் வந்து இவனுக்கு சாப்பாடு வைத்து சென்றான்...
அவன் செல்லவும் தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்த கெளதம், சாப்பாட்டைஒரு வாய் எடுத்து வைக்கவும் அவன் அருகே மைத்ரேயி வந்து அமர்ந்தாள், அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்,
இவள் அருகில் வருகிற நேரம் எல்லாம் ஒரு மாய உலகத்தில் பயணித்தான்... அவள் முகம் முன்னே விட பிரகாசத்துடன் ஒரு தேவதை போல் இருந்தாள், அவளை பார்த்ததும் அவனுக்கு பசி என்பதே இல்லை..அப்படியே அந்த சாப்பாடுலையே கையே கழுவிக் கொண்டான்...
இவன் கையை கழுவவும் கணேஷ் வந்தான், அப்பொழுதும் கெளதம் அருகில் மைத்ரேயி அமர்ந்து இருந்தாள், கெளதம் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்து கணேஷ் “ என்ன சார் சாப்டாம கையை கழுவிட்டு சிரிச்சுகிட்டு இருக்கீங்க “ என்று கேட்டான்..
அவன் அப்படி கேட்கவும் ஒரு நிமிடம் திகைத்த கெளதம் “ இதோ இவங்க கிட்ட பேசிகிட்டு இருந்தேன்” என்று தன் அருகில் கையை காட்டினான்....
கதை எழுத எனக்கு தடைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.. ஓன்று வீட்டில் வேலை, இல்லை என்றால் ஆபீஸ் வேலை என்று வீட்டுக்கு போகவே வெகு நேரம் ஆகிறது. அடிக்கடி லேப் ரிப்பேர் என்று சேவை போகிறது.. நானும் சீக்கிரம் முடித்து விடவேண்டு என்று படாத பாடு படுறேன்..முடியலியே.. நேற்று இரவு லேப் சார்ஜ்ர் போட்டு வைக்கவும் சார்ஜ்ர் வயர் தானாக தீ பற்றி எரிகிறது...
சரி செல்லுல ட்ரை பண்ணலாம் என்றால் எனக்கு செல்லில் டைப் செய்ய தெரியமாட்டுக்கு.. சோ சேட்... இன்னும் ஒரு 4 இல்லை 5 எபியில் கதை முடிந்து விடும் என்று எண்ணுகிறேன்.அதுக்குள்ள இப்படி சதி நடக்குது... சார்ஜ்ர் வர ஒன்னு வீக் ஆகுமாம்... அதிலும் எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு..
எழுத நினைத்த ஆசையின் பலன்.. ஹா ஹா..
தொடர்ந்து படிச்சு ஆதரவு தருகிற உங்க எல்லாருக்கும் நன்றி!! என்று சொன்னால் அது சரி இல்லை. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது. மீண்டும் மீண்டும் நன்றி!!!
உயிர்– 2௦
முதல் முறை கெளதம் கோட்டைநல்லூர் வரும்பொழுது முகம் முழுவதும் கோபத்துடன் வந்தான்.. இரண்டாம் முறை வரும்பொழுது மனம் முழுவதும் தேடலுடன் வந்தான்.. இப்பொழுது மூன்றாம் முறை வரும் பொழுது பெரும் குழப்பத்துடன் இங்கு வந்திருக்கிறான் கெளதம்...
ஒரு முறையேனும் சந்தோசத்துடன் அவனின் முன்னோரை சந்திக்க வரவில்லை கெளதம்.. அந்த குடுப்பினை அவனுக்கு கிட்டவில்லை இதுவரை... இதுக்கு எல்லாம் காரணம் சத்ரியன் முன்னோர் செய்த பாவமே... ஆனால் இனிமேல்??
அங்கு கோட்டைநல்லூர் மதில் சுவர் தாண்டி அவன் உள்ளே வரவும் இவனை எதிர் நோக்கி அந்த பூவரசம் மரத்தின் அருகில் புன்னகை முகமாக நின்றிருந்தாள்மைத்ரேயி...
மும்பையில் இருந்து தனியாளாக கார் ஓட்டிக் கொண்டு வருவது கௌதம்க்கு பெரும் சிரமமாக இருந்தது, ஆனால் மனதின் ஓலதுக்கும், அவனின் கேள்விக்கும் விடை இங்கு உள்ளது என்று அறிந்த பின்னால் அவனின் சிரமத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துக் கொண்டு வழியில் தங்கி என்று ஒருவழியாக பெரும் குழப்பத்துடன் கோட்டைநல்லூர் வந்து சேர்ந்தான் கெளதம்...
அவன் வந்து காரை விட்டு இறங்கி, ஊரை சுற்றிப் பார்த்தான் கெளதம், முன்பு எங்கும் பச்சை பசேலென இருந்த இடங்கள் இப்பொழுது காய்ந்து போன இடங்களாக மாறின.. இதற்க்கு என்ன காரணம் என்றும் அவனுக்கு தெரியவில்லை...
கூடவே“நான் மட்டும் இங்கு இருந்திருந்தால், இந்த இடத்தை அப்படியே பூஞ்சோலையாக மாற்றி இருப்பேன்” என்று எண்ணிக் கொண்டு இருந்தான்...
இவனின் எண்ணத்தை பார்த்து கோட்டைத்தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அதிலும், அவன்இங்கு இருந்திருந்தால் இந்த இடத்தையே பூஞ்சோலையாக மாற்றி இருப்பேன் என்று கூறியதில் தான் அவள் பெரிதும் மகிழ்ந்திருந்தாள், அவளின் ஆசையும் இது தானே அவளின் வாரிசு இங்கு வந்து இந்த இடத்தை ஆளவேண்டும் என்பதே அவளின் இந்தனை வருட ஆசை.. இதை இன்று அவன் வாயாலையே கேட்டுக் கொண்டு விட்டாள்....
ஆனாலும் அவள் அடுத்து மைத்ரேயிக்கு கொடுத்த வாக்கு நியாபகம் வந்து அவள் மனத்தை வருத்த செய்தது, ஆனாலும் அவள் இவளுக்காய் செய்யும் பொழுது, இவளும் செய்வது தானே சரியாக இருக்கும் என்று எண்ணி, அவள் அடுத்து செய்ய போகிறதை நினைத்து கவலையாக பார்த்துக் கொண்டு இருந்தாள்...
எங்கும் சுற்றி பார்த்துவிட்டு மெதுவாக அவன் கண்கள் அந்த பூவரசம் மரத்தின் அருகில் சென்றது.. அங்கு பார்த்து அப்படியே சிலையாக நின்று விட்டான் கெளதம்...
ஆம், மைத்ரேயிபுன்னகை முகமாக நின்றிருந்தாள்... மைத்ரேயி எண்ணம் எல்லாம் அன்று எங்கள் கோட்டைக்கு வரமால் இருந்த மாமாவை இன்று எப்படியேனும் இந்த கோட்டையில் கால் வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேண்டுதலோடு அவனை பார்த்து ” மாமா “ என்று அழைத்தாள்...
அந்த அழைப்பில் கௌதமின் மனம் எத்தனை நிம்மதி அடைந்தது என்று யாராலும் கூறமுடியாது... அத்தனை உணர்ச்சி பிரவாகத்தில் இருந்தான் கெளதம்... அவளை பார்த்ததும் அவனுக்கு மற்றது எல்லாம் மறந்து விட்டது என்று தான் கூறவேண்டும்...
அவன் அருகில் வந்த மைத்ரேயி அவனின் கையை பிடித்தாள், அவள் செயலில் கெளதம் மனதில் அப்படியே வானத்தில் பறந்தான்... அவள் அருகில் அவன் உலகம் மட்டுமில்லை அவனையே மறந்தான்.. ஏதோ ஒரு மாய உலகில் பயணித்தான்.. அவன் உடல் முழுவதும் குளிர்ச்சி பார்த்துபரவியது.. அப்படியேமிதந்துக் கொண்டே அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான்......
அவன் அந்த மயக்கத்தை விட்டு வெளியில் வந்திருக்கும் பொழுது அவன் கோட்டையின் உள் நின்றிருந்தான்.. மைத்ரேயி அவனை அவள் வசபடுத்தி இருந்தாள்....
அவனுக்கு பழையது எல்லாம் நினைவில் இல்லை, ஏன் இங்கு எதற்கு வந்தான் என்பது கூட நினைவில் இல்லை.. அந்த அளவு அவனை அவள் கட்டுபாட்டின் கீழ் வைத்திருந்தாள் மைத்ரேயி...
சிறிது சிறிதாக அவனின் மயக்கத்தை குறைத்த மைத்ரேயி, அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்...
அவள் மனதில் எப்படி இவனை தன்வசபடுத்துவது என்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது...
ஆனால் அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் அவளால் ஒண்ணும் செய்யமுடியாது, ஆனாலும் கோட்டைத்தாய் அவளுக்கு உதவுவேன் என்று கூறி இருக்கிறாள்...
அந்த நம்பிக்கையோடு அவனின் மயக்கத்தை முற்றிலுமாக உதற செய்தாள் மைத்ரேயி...
அதன் பிறகு தான் கௌதம்க்கு சுற்று புறம் உறைக்கவும் தான் அவன் அருகில் நின்ற மைத்ரேயியை பார்த்தான் ஆனால் அவன் கண்களுக்கு அவள் தெரியவே இல்லை...
யோசனையாக கையைப் பார்த்தான். அவள் பிடித்திருந்த இடம் இன்னும் அவனுக்கு குறுகுறுவென இருந்தது, அப்பொழுது அருகில் சத்தம் கேட்கவே நிமிர்ந்துபார்த்த கெளதம் அதிர்ந்து விட்டான்...
வீல் சேரில் சத்ரியனை அமர வைத்து அழைத்துக் கொண்டு வந்தான் ஒருவன்... அவன் அருகில் மைத்ரேயி கண்களில் நீர் வழியமெதுவாக நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்....
அதிர்ந்த கெளதம் அப்படியே சிலையாக நின்றுவிட்டான்,அவன் எதிர் பார்க்காத விஷயம் இது, அவனில் நடக்கும் குழப்பத்துக்கு விடை காணவே இங்கு வந்தான், ஆனால் இங்கு உள்ளதை பார்த்தால் நிறைய மர்மம் உள்ளதே என்ற யோசனையுடன் அவரை பார்த்துக் கொண்டு இருந்தான்...
அதே நேரம் சத்ரியன் பின்னால் நின்றவனை பார்த்து ஏதோ கூறினார் அவன் வீட்டின் உள்ளே சென்றான்.. அவர் சொல்வது கெளதம்க்கு புரியவே இல்லை..
காரணம் அவருக்கு வாய் கோணி, ஒரு கையும், ஒரு காலும் சரிவர இயங்காமல், கையை நெஞ்சின் அருகில் மடக்கி வைத்திருந்தார்.. அவர் வாய் கோணியதில் தான் அவர் பேசுவது அவனுக்கு புரியவில்லை, ஆனால்அவர் அருகில் நின்ற அவனுக்கு புரிந்தது எல்லாம். கெளதம் மனதில் “ இவனை பிடித்தால் எல்லாம் தெரியும் “ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது,
மீண்டும் அவன் வந்தான், வந்தவன் ஒரு கத்தை பேப்பர் சத்ரியனிடம் கொண்டு வந்து அவர் முன் நின்றான், நிற்கவும் அவர் அவனுக்கு கண்ணை கெளதம் பக்கம் திருப்பியும், கையை இவன் நோக்கி கொஞ்சம் அசைத்தும் “இ....இழ... அ..அவ...அவன்...கை..கையி..ழ..கொ...கொ.. கொழு (கொடு)“ என்று கூறவும்,
அவன் கெளதம் பக்கம் நகர்ந்து அந்த கத்தை பேப்பரை இவன் கையில் திணித்தான்.... யோசனையாக சத்ரியனை பார்த்தான் கெளதம். அப்பொழுது கண்களில் நீர் வழிய சத்ரியன் இவனை பார்த்துக் கொண்டு இருந்தார்.. கூடவே“ என்.. என்னை.. மன்னி. மன்னிசுழு... “ என்று நா தழுதழுக்க கூறினார்,
அவர் கூறுவது அவனுக்கு புரியவே இல்லை,யோசனையாக அவனை கெளதம், பார்த்து“ இவர் என்ன சொல்லுறார் எனக்கு புரியலை” என்றுக் கூறினான்
அதற்கு கெளதம் அருகில் வந்த அவன் “ நான் கணேஷ், இவங்கள 1 வருசமா பாத்துட்டு இருக்கேன், இப்போ இவங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறாங்க “ என்றுக் கூறினான்...
அந்த கணேஷ் அப்படி கூறவும் கௌதம்க்கு பெரும் யோசனை “ இவர் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் “ என்று யோசனையாகவும், கூடவே“ மைத்ரேயி அங்கு இருக்கிறாள் இங்க இவன் பாத்துகிறான் என்றால் நான் இப்பொழுது வரும் பொழுது இங்கு இருந்தது மைத்ரேயி என்றால், அங்கு இருப்பது யார்? அதிலும் அங்கு இருக்கும் அம்மா, மையூரி எப்படி இவரிடம் பேசினார்கள் என்ற யோசனையோடு அவன் இருக்கவும் கணேஷ் மொபைல் போன் ஒலிக்கவே,
சத்ரியனை அவர் அறைக்கு அழைத்து சென்று விட்டு வந்து இவனை இங்கு விருந்தினர் அறைக்கு அழைத்து சென்றான், “ நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க” என்று கூறி சென்றான்...
இவன் யோசனையாக வந்து கட்டிலில் அமர்ந்தான், இவன் அமர்ந்த சிறிது நேரத்தில் கணேஷ் வந்து இவனுக்கு சாப்பாடு வைத்து சென்றான்...
அவன் செல்லவும் தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்த கெளதம், சாப்பாட்டைஒரு வாய் எடுத்து வைக்கவும் அவன் அருகே மைத்ரேயி வந்து அமர்ந்தாள், அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள்,
இவள் அருகில் வருகிற நேரம் எல்லாம் ஒரு மாய உலகத்தில் பயணித்தான்... அவள் முகம் முன்னே விட பிரகாசத்துடன் ஒரு தேவதை போல் இருந்தாள், அவளை பார்த்ததும் அவனுக்கு பசி என்பதே இல்லை..அப்படியே அந்த சாப்பாடுலையே கையே கழுவிக் கொண்டான்...
இவன் கையை கழுவவும் கணேஷ் வந்தான், அப்பொழுதும் கெளதம் அருகில் மைத்ரேயி அமர்ந்து இருந்தாள், கெளதம் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்து கணேஷ் “ என்ன சார் சாப்டாம கையை கழுவிட்டு சிரிச்சுகிட்டு இருக்கீங்க “ என்று கேட்டான்..
அவன் அப்படி கேட்கவும் ஒரு நிமிடம் திகைத்த கெளதம் “ இதோ இவங்க கிட்ட பேசிகிட்டு இருந்தேன்” என்று தன் அருகில் கையை காட்டினான்....
Last edited: