ஹாய் டியர்ஸ்.... இதோ அடுத்த எபி போடுறேன்.. படிக்குறவங்க லைக், கமெண்ட் பண்ணுங்கப்பா... இதுவரை படித்தவர்களுக்கும், லைக், கமெண்ட் போட்டவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. சாரி நேத்தே போடணும் என்று இருந்தேன்.. கொஞ்சம் வேலை... சோ சாரி.. இன்னைக்கு எபி படிங்க, எப்படி இருக்கு என்று கொஞ்சம் சொல்லுங்க..
உயிர் – 12
இரவில் வெகு நேரம் உறக்கம் வராமல் இருந்தார் சத்ரியன்.. காரணமே இல்லாமல் அவருக்கு ஏதோ நடக்க போகிறது என்று உணர்த்திக் கொண்டே இருந்தது. அது நல்ல விசயமா இல்லை கெட்ட விசயமா என்று சத்ரியன் அறியாமல் குழம்பிக் கொண்டு இருந்தார். அப்பொழுது தான் யாரோ பேசும் சத்தம் கேட்டு வெளியில் வந்தார் சத்ரியன்..
இரவு சியோரா ஏன் இன்னும் கெளதம் அழைக்கவே இல்லை என்று எண்ணி அவனுக்கு அழைப்பு விடுத்தார் என்னே அதிசயம் கெளதம் மொபைல் ரிங் அடிக்கவும் ஆச்சரியத்துடன் போனை எடுத்துக் கொண்டு அவன் டெண்ட் விட்டு வெளியில் வந்தான் கெளதம்.. வெளியில் வந்து இங்கு நடப்பதை எல்லாம் கூறினான் கெளதம் அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்ட சியோரா “டேய் அதுக்கு எல்லாம் பயபடாதடா கோட்டை உன்னோட கொள்ளு பூட்டிக்கு பூட்டிடா அதனால நீ எதுக்கும் பயபடாத இப்போ நான் சொல்லுறதை ஒழுங்கா கவனி” என்றுக் கூறி அவனிடம் RK இறந்த விசயத்தை கூறினார்...
அவர் சொல்வதை கேட்ட அவனுக்கு நம்பமுடியவில்லை.. RKஇறந்துவிட்டானா? அதுவும் யாரோ தெரியாமல் ஆக்ஸிடென்ட் செய்துவிட்டார்களா? “எப்படி எப்படி” என்று அவரிடம் கேட்டான். ஆனால் “ அவரோ தெரியலடா... அதை விடு அந்த பொண்ணை பார்த்தியா” என்று கேட்டார் சியோரா... அதே நேரம் அவருக்கு பழைய நியாபகம் மனதில் ஓடின...
“ கெளதம் வர்ஷிக் திருமணம் பற்றி கூறியதும் முதலில் அதிர்ந்த சியோரா அதை கௌதம்க்கு காட்டாமல் அடக்கி கொண்டார். காரணம் கௌசிக் ஷதாஷியை திருமணம் செய்ததை அறிந்துக் கொண்டதும், RK மகளை வர்ஷிக்கு திருமணம் செய்ய எண்ணினார். ஆனால் அதையும் நடக்க விடாமல் வர்ஷிக் செய்துட்டான். என்ன செய்வது என்று எண்ணி கெளதம் மேலும் கூறியதை கேட்டார் சியோரா. அப்படி தான் அறிந்துக் கொண்டார்..
அதன் பிறகு ஒரு டிடெக்டிவ் வைத்து தான் அங்கு கோட்டைநல்லூரில் யார் எல்லாம்
இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டார். அப்படிதான் அன்று கௌதமை போலீஸ்
அரெஸ்ட் செய்ய வருகிறார்கள் என்று அறிந்ததும், அவனை அங்கு பாதுகாப்புக்காய் அனுப்பின மாதிரியும் இருக்கும், அவர்களை இங்கு அழைக்க ஒரு முயற்சி எடுத்த மாதிரியும் இருக்கும் என்று எண்ணி தான் அங்கு ஒரு பொண்ணு இருக்கிறாள் அது மையூரி தங்கையாக தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கூறி அனுப்பினார் சியோரா... “
அவர் பொண்ணு என்று கேட்கவும் அவனுக்கு முதலில் புரியவில்லை புரியாமல் “ எந்த பொண்ணு டாட். எனக்கு தெரியாமலே எனக்கு ஏதாவது பொண்ணு பாக்குறீங்களா? டாட்” என்று கேலியாக கேட்டான் கெளதம்.
அவன் அப்படி கேட்கவும் பல்லை கடித்த சியோரா “ டேய் நான் சொல்லுறது மையூரி தங்கச்சி என்று யாராவது ஒரு பொண்ணை பார்த்தியான்னு கேட்குறேன்.இங்க உன் அம்மா ரொம்ப பயந்துட்டு இருக்கா.. அவங்களுக்கு ஒண்ணும் ஆகல தான” என்றுகேட்டார். மெதுவாக நடந்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்த கெளதம் அப்படியே கோட்டை சுவர் பக்கமாய் வந்து நின்றான்.. அந்த சத்தத்தில் தான் சத்ரியன் வெளியில் வந்து பார்த்தார்..
“அப்பா அவங்களுக்கு ஒண்ணும் ஆகல எனக்கு தான் இங்க ஏதோ ஆகும் போல இருக்கு
சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு அந்த பொண்ணை அழைச்சுட்டு சீக்கிரமே வாறேன்” என்றுக்கூறி அழைப்பை நிறுத்தினான்...
அவனிடம் பேசி முடித்ததும் தான் சியோராவுக்கு நிம்மதியாக இருந்தது.. கௌதமும் அப்பாவிடம்பேசிய நிம்மதியுடன் உறங்க சென்றான்...
அவன் பேசியதை கேட்டதும் சத்ரியன் ஒரு நிமிடம் ஆடி தான் போனார்.. இவனும் மற்றவனைபோல தானா? என்று எண்ணி நமது குடும்பத்துக்கு தான் இப்படி அடிமேல் அடி விழுகிறது...இவன் கண்ணில் மைத்ரேயி நாளை காலை படும் முன் இவளை அங்கு மும்பைக்கு அழைத்து செல்ல வேண்டும் எண்ணி விட்டார். அதே நேரம் அவருக்கு அந்த கோட்டைத்தாயின் மேல் கோபமும் வந்தது.. அவளை பார்த்து நாலு கேள்வி கேட்கவேண்டும் என்று கதவை திறக்கும் நேரம் மிக பெரிய காற்று வந்து அவர் கோட்டை கதவையும், அதே நேரம் கோவில் கதவையும் ஒரே நேரத்தில் அறைந்து சாற்றியது..
இதில் அதிர்ந்த சத்ரியன் “ மைத்ரேயியைஉடனே அந்த இரவு நேரம் அழைத்துக் கொண்டு
கிளம்பி விட்டார்... கோட்டைத்தாய் அவர்களை எவ்வளவோ நிறுத்த முயற்சித்தும் அவளால்முடியவில்லை.. சத்ரியன் காரை வாகாய் ஓட்டிக் கொண்டு சென்று விட்டார்......
ஏமாற்றத்துடன் கோட்டைத்தாய் தன் முன் நிற்பவர்களை பார்த்து முறைத்து நின்றாள்..
மைத்ரேயிக்கு இப்படி அவளை இரவு நேரம் அழைத்து வந்தது பிடிக்கவே இல்ல, தாத்தாவிடம் எத்தனையோ முறை கெஞ்சிவிட்டாள்“ தாத்தா காலையில் போவோம் இப்போவே ஏன் இப்படி என்னை அழைச்சுட்டு போறீங்க ” என்று அழுகையுடன் கேட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அவள் மாமாவிடம் கூறாமல் செல்கிறோமே என்ற எண்ணம்...
ஆனால்அவள் கூறியது எதையுமே தாத்தா காதில் வாங்கவில்லை நேராக தூத்துக்குடி சென்று அங்கு ஹோட்டலில்அறை எடுத்து தங்கி கொண்டார்... அவளிடம் ஏதும் பேசாமல் இண்டர்காம் அழைத்து அறையில் பால் கொண்டு வர செய்து அதில் பாதி தூக்க மாத்திரை கலந்து அவளுக்கு கொடுத்து விட்டு அவர் யோசனையில் ஆழ்ந்தார்...
ஊர் விட்டு வெளியில் வரும்பொழுது நடந்ததே அவருக்கு யோசனையில் வந்து இம்சித்தது.. இன்று தான் சத்ரியன் கோட்டையின் ஆக்ரோசத்தை கண்ணார கண்டார்.. கொஞ்சம் விட்டால் பயத்தில் அவர் உயிரே போய் இருக்கும்...
அத்தனை ஆக்ரோசமாக கோட்டை அவருக்கு காட்சியளித்தாள்... அப்பொழுது தான் அவர்
அறிந்துக் கொண்டார் கோட்டை பழிவாங்கல் செயல் இன்னும் நிற்கவில்லை.. இத்தனை
வருடங்கள் கழிந்தும் அவள் இன்னும் அதே ஆக்ரோசத்துடன் தான் இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டார்...
அப்பொழுதே முடிவெடுத்து விட்டார். இன்று இவளை காப்பாற்றவில்லை என்றால் இனி என்றும் இவளை காப்பாற்ற முடியாது என்று எண்ணி தான் அவளை தூக்கத்தில் இருந்து எழுப்பி இதோ இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.....
கெளதம் அவன் அப்பாவிடம் பேசிவிட்டு அவன் டெண்ட் நோக்கி செல்லவும்,சத்ரியன் வெளியில் வர கதவை திறக்கவும் பெரும் காற்று வீசி அவர் வீட்டு கதவையும், கோட்டைத்தாயின் கோவில் கதவையும் அடித்து சாற்றியது அதில் அதிர்ந்து விழித்த சத்ரியன் ஓடி சென்று ஜன்னலை திறந்துப் பார்த்தார்...
அங்கு இருந்த பூவரசம் அதன் கிளைகளை தரை நோக்கி கீழே வீழ்த்தியும், அதன் கிளைகள் ஒடிந்து விழுவது போலும் பலமாக ஆடியது.. கோட்டைத்தாயின் கோவில் ஜன்னல்கள் பலமாக அங்கும் இங்கும் சுவற்றில் மோதியது அந்த சத்தம் ஏதோ நடப்பதை தடுக்க முயற்சி எடுத்தது போல் அவருக்கு தெரிந்தது....
இதை பார்த்த சத்ரியன் மெதுவாக நகண்டு வந்து கதவை திறந்துப் பார்த்தால் அவன் முன்னே ஒரு உருவம் அதன் அகோர முகத்தை காட்டி அவரைபயமுறுத்தியது. அதில் நிலை தடுமாறி விழுந்துவிட்டார் சத்ரியன்... இன்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை... ஒரு நாளும் இல்லாத நாளாய் இன்று கோட்டை செயல் பயங்கரமாக இருந்தது... என்ன நடக்க போகிறதோ என்று எண்ணி சமாளித்து மெதுவாக எழும்பி வெளியில் வந்தால் மண் எல்லாம் சுழன்று அவர் தலைக்கு மேலே எழும்பி நின்றுஅப்படியே அவரை வாரி சுருட்டி விடுவது போல் அவரை நோக்கி வந்தது...
இதில் கதவை அறைந்து சாற்றிய சத்ரியன் ஏதும் யோசிக்காமல் மைத்ரேயியை மட்டும்
காப்பாற்றும் எண்ணமாகமைத்ரேயிக்காகவாங்கி வைத்திருந்த பேக்கையும், அவள்அங்கு காலேஜ் செல்ல என்று எடுத்து வைத்திருந்த பேகையும் எடுத்துக் கொண்டு காரில் வைத்துக் கொண்டு அவளை இங்கிருந்து அழைத்து சென்று விட வேண்டும் என்று எண்ணி கோட்டையின் வலதுபக்க வாசல் வழியாக வெளியில் வரவும் அவரை வெளியில் வரவிடாமல் யாரோ அவரின் இடது கையையும், இடது காலையும் பிடித்து இழுத்த உணர்வு திரும்பிப் பார்த்தால், பூவரசம் மரத்தின் வேர்கள் தான் வெளி எங்கும் பரவி இருந்து இவரின் காலையும், கையையும் இறுக்கி பிடித்திருந்தது.... சுற்றிலும் எங்கும் மணல் புழுதிகள் அவரால் கண்ணை திறக்க கூட முடியவில்லை...
அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... அதிலும் இன்று ஏனோ தெரியாமல் கோட்டை மிக மிக உக்கிரமாக இருந்தாள் என்றுஅவர்எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு என்றோ எதிலோ படித்த வரிகள் நியாபகம் வந்தது..
ஆனால் அவருக்கு தெரியவில்லை கோட்டை உக்கிரமாக இல்லை. பூவரசம் மரம் தான்
உக்கிரமாக இருக்கிறது என்று.. கோட்டை சிறை பட்ட விசயமும் அவருக்கு தெரியாதே???
ஆபத்தில் இருக்கும் நேரம் எந்த கடவுளையும் மனதார வேண்டினாலோ,
வணங்கினாலோ நினைத்தது அவர்கள் முன் நடக்கும் என்று படித்த நியாபகம் அவருக்கு வரவும் கூடவே துர்க்கா தேவி ஆபத்தில் இருந்து காப்பாள் என்ற வரிகளும் கூடவே வரவும் மனதார ஒரு நிமிடம் தேவியை மனதில் நினைத்து “ எங்களை இந்த இக்கட்டில் இருந்து இன்று காப்பாற்றி விடு தாயே ” என்று அண்ணாந்து பார்த்து ஒரு நிமிடம் வணங்கினார் சத்ரியன்...
அவருக்கு எப்படியாவது இவளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்.. அதனால் என்ன
பிரச்சனைகள் வந்தாலும் தாங்கும் மனதை அவர் தனக்கு தானே வளர்த்துக் கொண்டார். அது தான் இந்த நேரத்திலும் நிதானமாக யோசித்து தேவியை அழைத்தார்...
அதே நேரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கோட்டைத்தாய்கோவில் கதவுகள் திறந்து மூடியது, அதே நேரம் பூவரசம் மரமும் அதன் வேர்களை தனக்குள் சுருட்டிக் கொண்டது... அதன் பிறகு தான் சத்ரியன் நிம்மதியாக இருந்தார் அதன் பிறகு மைத்ரேயியை அழைத்துக் கொண்டு இதோ இங்கு வந்து விட்டார்..
காலைஅவர்களுக்கு மும்பைக்கு பிளைட்... அங்கு இவர்களுக்கு தங்க வீடு அவர்
நண்பர் மூலமாக ரெடி செய்து விட்டார்.. மைத்ரேயிக்கும்ஹாஸ்டல் ரூம் எல்லாம் ரெடி அவள் இன்னும் ஒரு வாரத்தில் காலேஜ் சேர வேண்டும்... இப்படி யோசனை செய்துக் கொண்டு இருந்ததில் அவரையும் அறியாமல் உறங்கி விட்டார் சத்ரியன்...
அங்கு கோட்டைநல்லூர், கோட்டைத்தாய் கோவில்
கோட்டைத்தாய்க்கு1௦௦ வருடங்களுக்கு முன் உதவி செய்தது முழுக்க முழுக்க துர்க்கா
தேவியே.... அன்று அவளின் கணவரை கொன்றதும் அவள் கணவர் எப்பொழுதும் வழிபடும்
கடவுளான துர்க்கா தேவியே பெரும் துணை என்று அத்தனை பக்தியாக இருந்தாள்.. அவளின் பக்தியை பார்த்து தான் அவள் கனவில் தோன்றி அவளுக்கு ஒவ்வொரு காரியத்தை உணர்த்தினாள்...
அப்படி தான் மீண்டும் கோட்டை முழு பக்தியாக இந்த ஊரில் காலெடுத்து வைத்தாள். அதாவது கோட்டை இங்கு மீண்டும் வந்ததே அவர்களை அழிக்கவே..
அப்பொழுது தான் அவள் மரணம் நெருங்கும் போதே தேவி அவளிடம் கூறி இருந்தாள் குறிப்பிட்ட வருடத்தில் அவளின் பழிவாங்கல் செயலை செய்து விட்டு இந்த பெட்டியில் இருந்து கிளம்பி செல்ல வேண்டும் என்றும், அதே நேரம் அந்த குறிப்பிட்ட வருடத்தில் இவளால் அவர்களை அழிக்க முடியவில்லை என்றால் அவர்கள் இவளை வந்து வணங்கினாலோ, அல்லது தேடினாலோ அவர்கள் வேண்டியதை இவள் ஒரு காவல் தெய்வமாக அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று தேவி அவளுக்கு உதவி செய்வேன் என்று கூறும் பொழுதே இந்த கட்டளைகளையும் இட்டிருந்தாள்.....
உயிர் – 12
இரவில் வெகு நேரம் உறக்கம் வராமல் இருந்தார் சத்ரியன்.. காரணமே இல்லாமல் அவருக்கு ஏதோ நடக்க போகிறது என்று உணர்த்திக் கொண்டே இருந்தது. அது நல்ல விசயமா இல்லை கெட்ட விசயமா என்று சத்ரியன் அறியாமல் குழம்பிக் கொண்டு இருந்தார். அப்பொழுது தான் யாரோ பேசும் சத்தம் கேட்டு வெளியில் வந்தார் சத்ரியன்..
இரவு சியோரா ஏன் இன்னும் கெளதம் அழைக்கவே இல்லை என்று எண்ணி அவனுக்கு அழைப்பு விடுத்தார் என்னே அதிசயம் கெளதம் மொபைல் ரிங் அடிக்கவும் ஆச்சரியத்துடன் போனை எடுத்துக் கொண்டு அவன் டெண்ட் விட்டு வெளியில் வந்தான் கெளதம்.. வெளியில் வந்து இங்கு நடப்பதை எல்லாம் கூறினான் கெளதம் அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்ட சியோரா “டேய் அதுக்கு எல்லாம் பயபடாதடா கோட்டை உன்னோட கொள்ளு பூட்டிக்கு பூட்டிடா அதனால நீ எதுக்கும் பயபடாத இப்போ நான் சொல்லுறதை ஒழுங்கா கவனி” என்றுக் கூறி அவனிடம் RK இறந்த விசயத்தை கூறினார்...
அவர் சொல்வதை கேட்ட அவனுக்கு நம்பமுடியவில்லை.. RKஇறந்துவிட்டானா? அதுவும் யாரோ தெரியாமல் ஆக்ஸிடென்ட் செய்துவிட்டார்களா? “எப்படி எப்படி” என்று அவரிடம் கேட்டான். ஆனால் “ அவரோ தெரியலடா... அதை விடு அந்த பொண்ணை பார்த்தியா” என்று கேட்டார் சியோரா... அதே நேரம் அவருக்கு பழைய நியாபகம் மனதில் ஓடின...
“ கெளதம் வர்ஷிக் திருமணம் பற்றி கூறியதும் முதலில் அதிர்ந்த சியோரா அதை கௌதம்க்கு காட்டாமல் அடக்கி கொண்டார். காரணம் கௌசிக் ஷதாஷியை திருமணம் செய்ததை அறிந்துக் கொண்டதும், RK மகளை வர்ஷிக்கு திருமணம் செய்ய எண்ணினார். ஆனால் அதையும் நடக்க விடாமல் வர்ஷிக் செய்துட்டான். என்ன செய்வது என்று எண்ணி கெளதம் மேலும் கூறியதை கேட்டார் சியோரா. அப்படி தான் அறிந்துக் கொண்டார்..
அதன் பிறகு ஒரு டிடெக்டிவ் வைத்து தான் அங்கு கோட்டைநல்லூரில் யார் எல்லாம்
இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டார். அப்படிதான் அன்று கௌதமை போலீஸ்
அரெஸ்ட் செய்ய வருகிறார்கள் என்று அறிந்ததும், அவனை அங்கு பாதுகாப்புக்காய் அனுப்பின மாதிரியும் இருக்கும், அவர்களை இங்கு அழைக்க ஒரு முயற்சி எடுத்த மாதிரியும் இருக்கும் என்று எண்ணி தான் அங்கு ஒரு பொண்ணு இருக்கிறாள் அது மையூரி தங்கையாக தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கூறி அனுப்பினார் சியோரா... “
அவர் பொண்ணு என்று கேட்கவும் அவனுக்கு முதலில் புரியவில்லை புரியாமல் “ எந்த பொண்ணு டாட். எனக்கு தெரியாமலே எனக்கு ஏதாவது பொண்ணு பாக்குறீங்களா? டாட்” என்று கேலியாக கேட்டான் கெளதம்.
அவன் அப்படி கேட்கவும் பல்லை கடித்த சியோரா “ டேய் நான் சொல்லுறது மையூரி தங்கச்சி என்று யாராவது ஒரு பொண்ணை பார்த்தியான்னு கேட்குறேன்.இங்க உன் அம்மா ரொம்ப பயந்துட்டு இருக்கா.. அவங்களுக்கு ஒண்ணும் ஆகல தான” என்றுகேட்டார். மெதுவாக நடந்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்த கெளதம் அப்படியே கோட்டை சுவர் பக்கமாய் வந்து நின்றான்.. அந்த சத்தத்தில் தான் சத்ரியன் வெளியில் வந்து பார்த்தார்..
“அப்பா அவங்களுக்கு ஒண்ணும் ஆகல எனக்கு தான் இங்க ஏதோ ஆகும் போல இருக்கு
சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு அந்த பொண்ணை அழைச்சுட்டு சீக்கிரமே வாறேன்” என்றுக்கூறி அழைப்பை நிறுத்தினான்...
அவனிடம் பேசி முடித்ததும் தான் சியோராவுக்கு நிம்மதியாக இருந்தது.. கௌதமும் அப்பாவிடம்பேசிய நிம்மதியுடன் உறங்க சென்றான்...
அவன் பேசியதை கேட்டதும் சத்ரியன் ஒரு நிமிடம் ஆடி தான் போனார்.. இவனும் மற்றவனைபோல தானா? என்று எண்ணி நமது குடும்பத்துக்கு தான் இப்படி அடிமேல் அடி விழுகிறது...இவன் கண்ணில் மைத்ரேயி நாளை காலை படும் முன் இவளை அங்கு மும்பைக்கு அழைத்து செல்ல வேண்டும் எண்ணி விட்டார். அதே நேரம் அவருக்கு அந்த கோட்டைத்தாயின் மேல் கோபமும் வந்தது.. அவளை பார்த்து நாலு கேள்வி கேட்கவேண்டும் என்று கதவை திறக்கும் நேரம் மிக பெரிய காற்று வந்து அவர் கோட்டை கதவையும், அதே நேரம் கோவில் கதவையும் ஒரே நேரத்தில் அறைந்து சாற்றியது..
இதில் அதிர்ந்த சத்ரியன் “ மைத்ரேயியைஉடனே அந்த இரவு நேரம் அழைத்துக் கொண்டு
கிளம்பி விட்டார்... கோட்டைத்தாய் அவர்களை எவ்வளவோ நிறுத்த முயற்சித்தும் அவளால்முடியவில்லை.. சத்ரியன் காரை வாகாய் ஓட்டிக் கொண்டு சென்று விட்டார்......
ஏமாற்றத்துடன் கோட்டைத்தாய் தன் முன் நிற்பவர்களை பார்த்து முறைத்து நின்றாள்..
மைத்ரேயிக்கு இப்படி அவளை இரவு நேரம் அழைத்து வந்தது பிடிக்கவே இல்ல, தாத்தாவிடம் எத்தனையோ முறை கெஞ்சிவிட்டாள்“ தாத்தா காலையில் போவோம் இப்போவே ஏன் இப்படி என்னை அழைச்சுட்டு போறீங்க ” என்று அழுகையுடன் கேட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அவள் மாமாவிடம் கூறாமல் செல்கிறோமே என்ற எண்ணம்...
ஆனால்அவள் கூறியது எதையுமே தாத்தா காதில் வாங்கவில்லை நேராக தூத்துக்குடி சென்று அங்கு ஹோட்டலில்அறை எடுத்து தங்கி கொண்டார்... அவளிடம் ஏதும் பேசாமல் இண்டர்காம் அழைத்து அறையில் பால் கொண்டு வர செய்து அதில் பாதி தூக்க மாத்திரை கலந்து அவளுக்கு கொடுத்து விட்டு அவர் யோசனையில் ஆழ்ந்தார்...
ஊர் விட்டு வெளியில் வரும்பொழுது நடந்ததே அவருக்கு யோசனையில் வந்து இம்சித்தது.. இன்று தான் சத்ரியன் கோட்டையின் ஆக்ரோசத்தை கண்ணார கண்டார்.. கொஞ்சம் விட்டால் பயத்தில் அவர் உயிரே போய் இருக்கும்...
அத்தனை ஆக்ரோசமாக கோட்டை அவருக்கு காட்சியளித்தாள்... அப்பொழுது தான் அவர்
அறிந்துக் கொண்டார் கோட்டை பழிவாங்கல் செயல் இன்னும் நிற்கவில்லை.. இத்தனை
வருடங்கள் கழிந்தும் அவள் இன்னும் அதே ஆக்ரோசத்துடன் தான் இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டார்...
அப்பொழுதே முடிவெடுத்து விட்டார். இன்று இவளை காப்பாற்றவில்லை என்றால் இனி என்றும் இவளை காப்பாற்ற முடியாது என்று எண்ணி தான் அவளை தூக்கத்தில் இருந்து எழுப்பி இதோ இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.....
கெளதம் அவன் அப்பாவிடம் பேசிவிட்டு அவன் டெண்ட் நோக்கி செல்லவும்,சத்ரியன் வெளியில் வர கதவை திறக்கவும் பெரும் காற்று வீசி அவர் வீட்டு கதவையும், கோட்டைத்தாயின் கோவில் கதவையும் அடித்து சாற்றியது அதில் அதிர்ந்து விழித்த சத்ரியன் ஓடி சென்று ஜன்னலை திறந்துப் பார்த்தார்...
அங்கு இருந்த பூவரசம் அதன் கிளைகளை தரை நோக்கி கீழே வீழ்த்தியும், அதன் கிளைகள் ஒடிந்து விழுவது போலும் பலமாக ஆடியது.. கோட்டைத்தாயின் கோவில் ஜன்னல்கள் பலமாக அங்கும் இங்கும் சுவற்றில் மோதியது அந்த சத்தம் ஏதோ நடப்பதை தடுக்க முயற்சி எடுத்தது போல் அவருக்கு தெரிந்தது....
இதை பார்த்த சத்ரியன் மெதுவாக நகண்டு வந்து கதவை திறந்துப் பார்த்தால் அவன் முன்னே ஒரு உருவம் அதன் அகோர முகத்தை காட்டி அவரைபயமுறுத்தியது. அதில் நிலை தடுமாறி விழுந்துவிட்டார் சத்ரியன்... இன்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை... ஒரு நாளும் இல்லாத நாளாய் இன்று கோட்டை செயல் பயங்கரமாக இருந்தது... என்ன நடக்க போகிறதோ என்று எண்ணி சமாளித்து மெதுவாக எழும்பி வெளியில் வந்தால் மண் எல்லாம் சுழன்று அவர் தலைக்கு மேலே எழும்பி நின்றுஅப்படியே அவரை வாரி சுருட்டி விடுவது போல் அவரை நோக்கி வந்தது...
இதில் கதவை அறைந்து சாற்றிய சத்ரியன் ஏதும் யோசிக்காமல் மைத்ரேயியை மட்டும்
காப்பாற்றும் எண்ணமாகமைத்ரேயிக்காகவாங்கி வைத்திருந்த பேக்கையும், அவள்அங்கு காலேஜ் செல்ல என்று எடுத்து வைத்திருந்த பேகையும் எடுத்துக் கொண்டு காரில் வைத்துக் கொண்டு அவளை இங்கிருந்து அழைத்து சென்று விட வேண்டும் என்று எண்ணி கோட்டையின் வலதுபக்க வாசல் வழியாக வெளியில் வரவும் அவரை வெளியில் வரவிடாமல் யாரோ அவரின் இடது கையையும், இடது காலையும் பிடித்து இழுத்த உணர்வு திரும்பிப் பார்த்தால், பூவரசம் மரத்தின் வேர்கள் தான் வெளி எங்கும் பரவி இருந்து இவரின் காலையும், கையையும் இறுக்கி பிடித்திருந்தது.... சுற்றிலும் எங்கும் மணல் புழுதிகள் அவரால் கண்ணை திறக்க கூட முடியவில்லை...
அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... அதிலும் இன்று ஏனோ தெரியாமல் கோட்டை மிக மிக உக்கிரமாக இருந்தாள் என்றுஅவர்எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு என்றோ எதிலோ படித்த வரிகள் நியாபகம் வந்தது..
ஆனால் அவருக்கு தெரியவில்லை கோட்டை உக்கிரமாக இல்லை. பூவரசம் மரம் தான்
உக்கிரமாக இருக்கிறது என்று.. கோட்டை சிறை பட்ட விசயமும் அவருக்கு தெரியாதே???
ஆபத்தில் இருக்கும் நேரம் எந்த கடவுளையும் மனதார வேண்டினாலோ,
வணங்கினாலோ நினைத்தது அவர்கள் முன் நடக்கும் என்று படித்த நியாபகம் அவருக்கு வரவும் கூடவே துர்க்கா தேவி ஆபத்தில் இருந்து காப்பாள் என்ற வரிகளும் கூடவே வரவும் மனதார ஒரு நிமிடம் தேவியை மனதில் நினைத்து “ எங்களை இந்த இக்கட்டில் இருந்து இன்று காப்பாற்றி விடு தாயே ” என்று அண்ணாந்து பார்த்து ஒரு நிமிடம் வணங்கினார் சத்ரியன்...
அவருக்கு எப்படியாவது இவளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்.. அதனால் என்ன
பிரச்சனைகள் வந்தாலும் தாங்கும் மனதை அவர் தனக்கு தானே வளர்த்துக் கொண்டார். அது தான் இந்த நேரத்திலும் நிதானமாக யோசித்து தேவியை அழைத்தார்...
அதே நேரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கோட்டைத்தாய்கோவில் கதவுகள் திறந்து மூடியது, அதே நேரம் பூவரசம் மரமும் அதன் வேர்களை தனக்குள் சுருட்டிக் கொண்டது... அதன் பிறகு தான் சத்ரியன் நிம்மதியாக இருந்தார் அதன் பிறகு மைத்ரேயியை அழைத்துக் கொண்டு இதோ இங்கு வந்து விட்டார்..
காலைஅவர்களுக்கு மும்பைக்கு பிளைட்... அங்கு இவர்களுக்கு தங்க வீடு அவர்
நண்பர் மூலமாக ரெடி செய்து விட்டார்.. மைத்ரேயிக்கும்ஹாஸ்டல் ரூம் எல்லாம் ரெடி அவள் இன்னும் ஒரு வாரத்தில் காலேஜ் சேர வேண்டும்... இப்படி யோசனை செய்துக் கொண்டு இருந்ததில் அவரையும் அறியாமல் உறங்கி விட்டார் சத்ரியன்...
அங்கு கோட்டைநல்லூர், கோட்டைத்தாய் கோவில்
கோட்டைத்தாய்க்கு1௦௦ வருடங்களுக்கு முன் உதவி செய்தது முழுக்க முழுக்க துர்க்கா
தேவியே.... அன்று அவளின் கணவரை கொன்றதும் அவள் கணவர் எப்பொழுதும் வழிபடும்
கடவுளான துர்க்கா தேவியே பெரும் துணை என்று அத்தனை பக்தியாக இருந்தாள்.. அவளின் பக்தியை பார்த்து தான் அவள் கனவில் தோன்றி அவளுக்கு ஒவ்வொரு காரியத்தை உணர்த்தினாள்...
அப்படி தான் மீண்டும் கோட்டை முழு பக்தியாக இந்த ஊரில் காலெடுத்து வைத்தாள். அதாவது கோட்டை இங்கு மீண்டும் வந்ததே அவர்களை அழிக்கவே..
அப்பொழுது தான் அவள் மரணம் நெருங்கும் போதே தேவி அவளிடம் கூறி இருந்தாள் குறிப்பிட்ட வருடத்தில் அவளின் பழிவாங்கல் செயலை செய்து விட்டு இந்த பெட்டியில் இருந்து கிளம்பி செல்ல வேண்டும் என்றும், அதே நேரம் அந்த குறிப்பிட்ட வருடத்தில் இவளால் அவர்களை அழிக்க முடியவில்லை என்றால் அவர்கள் இவளை வந்து வணங்கினாலோ, அல்லது தேடினாலோ அவர்கள் வேண்டியதை இவள் ஒரு காவல் தெய்வமாக அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று தேவி அவளுக்கு உதவி செய்வேன் என்று கூறும் பொழுதே இந்த கட்டளைகளையும் இட்டிருந்தாள்.....
Last edited: