அத்தியாயம் – 1
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அயலூர். ஒரு பசுமை நிறைத்த ஒரு அழகிய கிராமம். எங்கும் பார்த்தாலும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் வயல்வெளிகளும், அதில் ஒற்றைகாலில் நிற்கும் கொக்கு கூட்டங்களும், அந்த வயல்வெளி மீது வட்டமிடும் வெள்ளை நாரைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும்.. அங்கே இருக்கும் மலைக்கோவில் எல்லாமே ரசிக்கதக்க ஒன்று.
“அம்மா சாப்பாடு ரெடியாகி விட்டதா..?” என்று அன்னைக்கு குரல் கொடுத்தவண்ணம் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அன்பரசன்.
“ம்ம் ரெடியாகிவிட்டது..” என்று அவனுக்கு குரல் கொடுத்தபடியே வேலையைத் தொடர்ந்தார் சுமித்ரா அன்பரசனின் அன்னை..
“சுமித்ரா சாப்பாடு ரெடியா என்று கேட்டவண்ணம் மாடியில் இருந்து இறங்கி வந்தார் தியாகராஜன்..
“எல்லோருக்கும் எல்லாம் ரெடி ஆனால் யாரும் இன்னமும் டைனிங் ஹால் பக்கம் வந்த மாதிரி தெரியவில்லை..” என்று கூறியபடியே சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தார்..
“அம்மா என்னோட சயின்ஸ் நோட்டைப் பார்த்தீங்களா..?” என்று புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் இனியா.
“உன்னோட அண்ணா ரூமில் இருக்கும் பாரும்மா..” என்று கூறினாள் அவளின் அன்னை..
“எந்த அண்ணா ரூமில்..?” என்று மீண்டும் கேட்ட தங்கையின் கையில் நோட்டைக் கொடுத்தான் அன்பரசன்.
“தேங்க்ஸ் அண்ணா..” என்று கூறியவளின் தலையை மெல்ல வருடிய அன்பு,
“அம்மா நான் கிளம்புகிறேன்..” என்று பேக்கை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல, “டேய் சாப்படாமல் செல்கிறாயே..?” என்று அவனின் அன்னை சமையல் அறையில் இருந்து குரல் கொடுக்க,
“எனக்கு சாப்பாடு வேண்டாம் அம்மா..” என்றவன் தந்தையின் அருகில் சென்று, “அப்பா நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவன் டிப்பனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்..
“சைக்கிளில் கவனமாக போகணும்..” என்று கணவன் மனைவி இருவரும் மகனுக்கு சொல்ல, “சரிம்மா..” என்று சொன்னவன் அவனது சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான்..
“அம்மா என்னோட பேனாவைக் காணோம்..” என்று குரல் கொடுத்தான் அறிவுமதி. அவனின் குரல் கேட்டதும் அவனுக்கு தேவையானது எடுத்துக் கொடுக்க உள்ளே நுழைந்தவர்,
மகனுக்கும், மகளுக்கு தேவையை கவனிக்க பள்ளி வேனின் ஹாரன் சவுண்ட் காதைக் கிழிக்க அவர்களை அனுப்பிட்டு வரும் வரையில் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தார்..
“என்னங்க நீங்க இன்னும் கிளம்பாமல் என்ன செய்றீங்க..?” என்று கேட்டுக் கொண்டே அவரை அழைத்துவந்து அவருக்கு சாப்பாடு பரிமாற, அவரும் சாப்பிட ஆரமித்தார்..
அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, “நான் கிளம்புகிறேன் சுமித்ரா..” என்று சொல்லிவிட்டு செல்ல, “ஸ்ஸ்..” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தரையில் அமர்ந்தார்.. அவரின் பார்வை அந்த வீட்டை வலம் வந்தது..
உள்ளே நுழைந்ததும் முதலில் ஹால் அதற்கு வலதுபுறம் ஒன்று விருந்தினர் அறை. இன்னொன்று தியாகு சுமித்ராவின் படிக்கை அறை.. இடதுபுறம் சமையல் அறை மற்றும் பூஜை அறை.. இதற்கு இரண்டுக்கும் நடுவே மாடிக்கு செல்லும் அறை. மாடியில் மூன்று பேருக்கும் படுக்கை அறை..
அந்த வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்கப்பட்டிருக்க, அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை திரும்பார்க்கும் வண்ணம் பார்த்து பார்த்து கட்டியிருந்தார் தியாகராஜன்.
தியாகராஜன் திண்டுக்கல்லில் ஒரு பணபலம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரிய ஜவுளிக்கடையின் முதலாளி. அவரின் மனைவி சுமித்ரா கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண். அவர்கள் வீட்டில் சுமித்ராவைப் பார்த்தும் பிடித்ததால் தியாகராஜனுக்கு திருமணம் செய்ய, மனைவியின் குணம் பிடித்தும் அவரைக் காதலிக்க ஆரமித்தார் தியாகு.
அந்த தம்பதிகளுக்கு அன்பரசன் பெரியவன். இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் படுசுட்டி. இவன் கொஞ்சம் பணபலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலுமே இவனுக்கு அரசு பள்ளிதான் மிகவும் பிடிக்கும். பாகுபாடு இன்றி அனைவரிடமும் பழகுவான். இவனது பணத்திற்காக இவனுக்கு ஜால்ரா போடும் சிலரும் இவனது அருகில் இருக்கின்றனர்.
அவனுக்கு அடுத்து அறிவுமதி விடவும் நான்கு வருடம் சிறியவன். இப்பொழுது எட்டாம் வகுப்பு படிக்கிறான். அண்ணனும் தம்பியும் இருவருக்கும் வயதில் வித்தியாசம் இருந்தாலும் இருவரும் கலகலப்பாக பேசி சிரிப்பார்கள்..
இவர்களுக்கு தங்கை இல்லை என்ற குறையைத் தீர்த்தவள் இனியா அவர்கள் உடன்பிறவாத தங்கை தியாகுவின் தம்பி மகள். தியாகுவின் தம்பி விபத்தில் இறந்துவிட, அவளை எடுத்து வளர்க்கின்றனர் தியாகு தம்பதியினர். தியாகுவின் தாய் ஜெயந்தி அதே ஊரில் பெரிய வீட்டில் இருக்கிறார்.. இவர்கள் வாரம் ஒருமுறை சென்று பார்த்து வருவார்கள்..
இனியாவிற்கு பாட்டி என்றால் உயிர்.. அண்ணன் இருவரின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவள்.. இப்பொழுது ஆறாம் வகுப்பு படிக்கிறாள். இப்படி சிறிது நேரம் அமர்ந்தவர் அடுத்த அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினார்..
அன்பரசன் பள்ளிக்கு செல்லும் வழி எங்கும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில் வயல்வெளிகளும், மரங்களும் காட்சியளிக்கும் மண் சாலை தனது சைக்கிளில் வேகமாக வந்துக் கொண்டிருந்தான்..
ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், “ஏய் எழில் இன்னும் அங்கே என்ன செய்கிறாய்..?” என்று ஒருவரின் குரல் கேட்க தனது வேகத்தைக் குறைத்தவன் யார் என்று சுற்றிலும் பார்க்க,
அவனுக்கு கொஞ்சம் தூரத்தில் ஒரு பதினான்கு வயது பெண் அவனுக்கு முதுகுக்காட்டிய வண்ணம் நித்தியமல்லி செடியிடம் பேசிக்கொண்டிருந்தாள்..
அவளின் மீது பார்வையை செலுத்தியவன், ‘அங்கே நின்று யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள்..?’ என்ற கேள்வி மனதில் எழுந்ததும், மெதுமாக சைக்கிளை ஒட்டிய வண்ணம் அவளைப் பார்த்தான்..
“உன்னிடம் எத்தனை முறை சொல்வது பூ பூக்கும் பொழுது கொஞ்சம் நிறையாக பூக்க வேண்டும் என்று..” என்று சொல்லியவள், “எழில்..” என்று அடுத்த குரலில் திரும்பினாள்.. எழில் திரும்பியவளின் முகம் பார்த்து திகைத்து நின்றான்.
நேராக நேரேடுத்து பின்னப்பட்ட இரட்டை ஜடை. காதில் சிறிய ஜிமிக்கி, இயற்கையாகவே விலேன வளைந்த புருவம், அழகான மீன்கள் போன்ற இரண்டு கண்கள், கூர்மையான நாசி, அழகிய சிற்பியால் செதுக்கப்பட்டது போல இரண்டு ரோஜா இதழ்கள் அவளின் சந்தன நிறத்திற்கு ஏற்றது போல அளவான உடலமைப்பு உடைய மங்கை தான்!
அவளின் முகத்தின் அழகில் மயங்கியது அவனின் உள்ளம் என்றால் அவளின் விழியில் தொலைந்தது அவனின் இதயம்.. “இதோ வருகிறேன்..” என்ற குரலில் அவனின் திகைப்பு மாறியது.. மறுபடியும் அவளின் முகம் பார்த்தவன்,
‘இவளுக்கு எழில் என்று பெயர் வைத்ததில் தப்பே இல்ல.. பெண்ணுக்கு உரிய அத்தனை எழிலையும் வைத்திருக்கிறாளே..’ என்று மனதில் நினைத்தவன் பள்ளிக்கு நேரம் ஆவதை உணர்ந்து சைக்கிளை எடுத்தான்..
“என்னங்க அம்மா எதுக்காக இப்பொழுது கூப்பிட்டீங்க..? நான் நித்யாகிட்ட தானே பேசிட்டு இருந்தேன்..” என்று சிணுங்கினாள் மகள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த பார்வதி, “பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆச்சுமா அதுதான் உன்னைக் கூப்பிட்டேன்..” என்று கூறியவர், அவளுக்கு சாப்பாடு பரிமாற, சாப்பிட்டு முடித்தவள்,
“அம்மா நான் பள்ளிக்கூடம் கிளம்புகிறேன்.. அப்பா எங்கே இருக்கிறார்..?” என்று கேட்டதும் அவளை நிமிர்ந்து பார்த்த பார்வதி, “அப்பா வயலில் இருப்பார் கண்ணா..” என்று சொல்ல,
“சரிம்மா நான் போகும் வழியில் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவள் தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு சென்றாள்..
மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீட்டுதான் எழில்விழியின் வீடு. அவளின் வீட்டை சுற்றிலும் வேப்பமரம், மாமரம் இருக்கும்.. அவளுக்கென்று அமைத்த தோட்டமும் இருக்கும். அதில் நித்தியமல்லி, ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி என்று அனைத்தும் இருக்கும்.. அவற்றுடன் பேசுவதே அவளின் வேலை. மெல்ல அந்த வழியில் சென்றவள், தங்களின் தோட்டத்தை நெருங்கியதும் அவளின் தந்தை நோக்கிக் குரல் கொடுத்தாள், “அப்பா நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வருகிறேன்..” எழில்விழி
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அயலூர். ஒரு பசுமை நிறைத்த ஒரு அழகிய கிராமம். எங்கும் பார்த்தாலும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் வயல்வெளிகளும், அதில் ஒற்றைகாலில் நிற்கும் கொக்கு கூட்டங்களும், அந்த வயல்வெளி மீது வட்டமிடும் வெள்ளை நாரைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும்.. அங்கே இருக்கும் மலைக்கோவில் எல்லாமே ரசிக்கதக்க ஒன்று.
“அம்மா சாப்பாடு ரெடியாகி விட்டதா..?” என்று அன்னைக்கு குரல் கொடுத்தவண்ணம் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அன்பரசன்.
“ம்ம் ரெடியாகிவிட்டது..” என்று அவனுக்கு குரல் கொடுத்தபடியே வேலையைத் தொடர்ந்தார் சுமித்ரா அன்பரசனின் அன்னை..
“சுமித்ரா சாப்பாடு ரெடியா என்று கேட்டவண்ணம் மாடியில் இருந்து இறங்கி வந்தார் தியாகராஜன்..
“எல்லோருக்கும் எல்லாம் ரெடி ஆனால் யாரும் இன்னமும் டைனிங் ஹால் பக்கம் வந்த மாதிரி தெரியவில்லை..” என்று கூறியபடியே சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தார்..
“அம்மா என்னோட சயின்ஸ் நோட்டைப் பார்த்தீங்களா..?” என்று புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் இனியா.
“உன்னோட அண்ணா ரூமில் இருக்கும் பாரும்மா..” என்று கூறினாள் அவளின் அன்னை..
“எந்த அண்ணா ரூமில்..?” என்று மீண்டும் கேட்ட தங்கையின் கையில் நோட்டைக் கொடுத்தான் அன்பரசன்.
“தேங்க்ஸ் அண்ணா..” என்று கூறியவளின் தலையை மெல்ல வருடிய அன்பு,
“அம்மா நான் கிளம்புகிறேன்..” என்று பேக்கை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல, “டேய் சாப்படாமல் செல்கிறாயே..?” என்று அவனின் அன்னை சமையல் அறையில் இருந்து குரல் கொடுக்க,
“எனக்கு சாப்பாடு வேண்டாம் அம்மா..” என்றவன் தந்தையின் அருகில் சென்று, “அப்பா நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவன் டிப்பனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்..
“சைக்கிளில் கவனமாக போகணும்..” என்று கணவன் மனைவி இருவரும் மகனுக்கு சொல்ல, “சரிம்மா..” என்று சொன்னவன் அவனது சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றான்..
“அம்மா என்னோட பேனாவைக் காணோம்..” என்று குரல் கொடுத்தான் அறிவுமதி. அவனின் குரல் கேட்டதும் அவனுக்கு தேவையானது எடுத்துக் கொடுக்க உள்ளே நுழைந்தவர்,
மகனுக்கும், மகளுக்கு தேவையை கவனிக்க பள்ளி வேனின் ஹாரன் சவுண்ட் காதைக் கிழிக்க அவர்களை அனுப்பிட்டு வரும் வரையில் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தார்..
“என்னங்க நீங்க இன்னும் கிளம்பாமல் என்ன செய்றீங்க..?” என்று கேட்டுக் கொண்டே அவரை அழைத்துவந்து அவருக்கு சாப்பாடு பரிமாற, அவரும் சாப்பிட ஆரமித்தார்..
அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, “நான் கிளம்புகிறேன் சுமித்ரா..” என்று சொல்லிவிட்டு செல்ல, “ஸ்ஸ்..” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தரையில் அமர்ந்தார்.. அவரின் பார்வை அந்த வீட்டை வலம் வந்தது..
உள்ளே நுழைந்ததும் முதலில் ஹால் அதற்கு வலதுபுறம் ஒன்று விருந்தினர் அறை. இன்னொன்று தியாகு சுமித்ராவின் படிக்கை அறை.. இடதுபுறம் சமையல் அறை மற்றும் பூஜை அறை.. இதற்கு இரண்டுக்கும் நடுவே மாடிக்கு செல்லும் அறை. மாடியில் மூன்று பேருக்கும் படுக்கை அறை..
அந்த வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்கப்பட்டிருக்க, அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை திரும்பார்க்கும் வண்ணம் பார்த்து பார்த்து கட்டியிருந்தார் தியாகராஜன்.
தியாகராஜன் திண்டுக்கல்லில் ஒரு பணபலம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரிய ஜவுளிக்கடையின் முதலாளி. அவரின் மனைவி சுமித்ரா கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண். அவர்கள் வீட்டில் சுமித்ராவைப் பார்த்தும் பிடித்ததால் தியாகராஜனுக்கு திருமணம் செய்ய, மனைவியின் குணம் பிடித்தும் அவரைக் காதலிக்க ஆரமித்தார் தியாகு.
அந்த தம்பதிகளுக்கு அன்பரசன் பெரியவன். இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் படுசுட்டி. இவன் கொஞ்சம் பணபலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலுமே இவனுக்கு அரசு பள்ளிதான் மிகவும் பிடிக்கும். பாகுபாடு இன்றி அனைவரிடமும் பழகுவான். இவனது பணத்திற்காக இவனுக்கு ஜால்ரா போடும் சிலரும் இவனது அருகில் இருக்கின்றனர்.
அவனுக்கு அடுத்து அறிவுமதி விடவும் நான்கு வருடம் சிறியவன். இப்பொழுது எட்டாம் வகுப்பு படிக்கிறான். அண்ணனும் தம்பியும் இருவருக்கும் வயதில் வித்தியாசம் இருந்தாலும் இருவரும் கலகலப்பாக பேசி சிரிப்பார்கள்..
இவர்களுக்கு தங்கை இல்லை என்ற குறையைத் தீர்த்தவள் இனியா அவர்கள் உடன்பிறவாத தங்கை தியாகுவின் தம்பி மகள். தியாகுவின் தம்பி விபத்தில் இறந்துவிட, அவளை எடுத்து வளர்க்கின்றனர் தியாகு தம்பதியினர். தியாகுவின் தாய் ஜெயந்தி அதே ஊரில் பெரிய வீட்டில் இருக்கிறார்.. இவர்கள் வாரம் ஒருமுறை சென்று பார்த்து வருவார்கள்..
இனியாவிற்கு பாட்டி என்றால் உயிர்.. அண்ணன் இருவரின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவள்.. இப்பொழுது ஆறாம் வகுப்பு படிக்கிறாள். இப்படி சிறிது நேரம் அமர்ந்தவர் அடுத்த அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினார்..
அன்பரசன் பள்ளிக்கு செல்லும் வழி எங்கும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில் வயல்வெளிகளும், மரங்களும் காட்சியளிக்கும் மண் சாலை தனது சைக்கிளில் வேகமாக வந்துக் கொண்டிருந்தான்..
ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், “ஏய் எழில் இன்னும் அங்கே என்ன செய்கிறாய்..?” என்று ஒருவரின் குரல் கேட்க தனது வேகத்தைக் குறைத்தவன் யார் என்று சுற்றிலும் பார்க்க,
அவனுக்கு கொஞ்சம் தூரத்தில் ஒரு பதினான்கு வயது பெண் அவனுக்கு முதுகுக்காட்டிய வண்ணம் நித்தியமல்லி செடியிடம் பேசிக்கொண்டிருந்தாள்..
அவளின் மீது பார்வையை செலுத்தியவன், ‘அங்கே நின்று யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள்..?’ என்ற கேள்வி மனதில் எழுந்ததும், மெதுமாக சைக்கிளை ஒட்டிய வண்ணம் அவளைப் பார்த்தான்..
“உன்னிடம் எத்தனை முறை சொல்வது பூ பூக்கும் பொழுது கொஞ்சம் நிறையாக பூக்க வேண்டும் என்று..” என்று சொல்லியவள், “எழில்..” என்று அடுத்த குரலில் திரும்பினாள்.. எழில் திரும்பியவளின் முகம் பார்த்து திகைத்து நின்றான்.
நேராக நேரேடுத்து பின்னப்பட்ட இரட்டை ஜடை. காதில் சிறிய ஜிமிக்கி, இயற்கையாகவே விலேன வளைந்த புருவம், அழகான மீன்கள் போன்ற இரண்டு கண்கள், கூர்மையான நாசி, அழகிய சிற்பியால் செதுக்கப்பட்டது போல இரண்டு ரோஜா இதழ்கள் அவளின் சந்தன நிறத்திற்கு ஏற்றது போல அளவான உடலமைப்பு உடைய மங்கை தான்!
அவளின் முகத்தின் அழகில் மயங்கியது அவனின் உள்ளம் என்றால் அவளின் விழியில் தொலைந்தது அவனின் இதயம்.. “இதோ வருகிறேன்..” என்ற குரலில் அவனின் திகைப்பு மாறியது.. மறுபடியும் அவளின் முகம் பார்த்தவன்,
‘இவளுக்கு எழில் என்று பெயர் வைத்ததில் தப்பே இல்ல.. பெண்ணுக்கு உரிய அத்தனை எழிலையும் வைத்திருக்கிறாளே..’ என்று மனதில் நினைத்தவன் பள்ளிக்கு நேரம் ஆவதை உணர்ந்து சைக்கிளை எடுத்தான்..
“என்னங்க அம்மா எதுக்காக இப்பொழுது கூப்பிட்டீங்க..? நான் நித்யாகிட்ட தானே பேசிட்டு இருந்தேன்..” என்று சிணுங்கினாள் மகள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த பார்வதி, “பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆச்சுமா அதுதான் உன்னைக் கூப்பிட்டேன்..” என்று கூறியவர், அவளுக்கு சாப்பாடு பரிமாற, சாப்பிட்டு முடித்தவள்,
“அம்மா நான் பள்ளிக்கூடம் கிளம்புகிறேன்.. அப்பா எங்கே இருக்கிறார்..?” என்று கேட்டதும் அவளை நிமிர்ந்து பார்த்த பார்வதி, “அப்பா வயலில் இருப்பார் கண்ணா..” என்று சொல்ல,
“சரிம்மா நான் போகும் வழியில் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கூறியவள் தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு சென்றாள்..
மூன்று அறைகள் கொண்ட ஓட்டு வீட்டுதான் எழில்விழியின் வீடு. அவளின் வீட்டை சுற்றிலும் வேப்பமரம், மாமரம் இருக்கும்.. அவளுக்கென்று அமைத்த தோட்டமும் இருக்கும். அதில் நித்தியமல்லி, ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி என்று அனைத்தும் இருக்கும்.. அவற்றுடன் பேசுவதே அவளின் வேலை. மெல்ல அந்த வழியில் சென்றவள், தங்களின் தோட்டத்தை நெருங்கியதும் அவளின் தந்தை நோக்கிக் குரல் கொடுத்தாள், “அப்பா நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வருகிறேன்..” எழில்விழி
Last edited: