ஆதி ஒரு நல்ல காதலன் அவன் பார்வையில் ஒருநாளும் அவள் ஒருவிதமான பார்வையைக் கண்டதும் இல்லை.. அவன் அவளை அதிகம் நெருங்கியதும் இல்லை.. ஆதி – ஆஷா இருவரும் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்..
காதல் என்றால் பார்த்தும் பேசிவது, ஊர் சுற்றுவது, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்வது என்பதை எல்லாம் மாற்றி அமைத்தனர் ஆஷா - ஆதி இருவரும்!
அன்பு இருவருக்கும் நல்ல நண்பன்.. இருவரும் அதிகம் அன்புவை முன்னிலையில் வைத்தே சண்டை கட்டிக் கொள்வார்கள் அதிகம் அவர்களை சமாதானம் செய்வது இவனின் வேலையாக இருக்கும்..
அதுவும் ஆஷா இவர்களிடம் செய்யும் வாக்குவாதம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆதிக்கு அவளிடம் வம்பு வளர்க்க பிடிக்கும் என்றால், அன்புவிற்கு அவளை சமாதானம் செய்ய பிடிக்கும்..
அன்பு – ஆதி இருவரையும் விட மூன்று வருடம் சிறியவள் ஆஷா என்றாலும் இவர்களுக்குள் அந்த பாகுபாடே கிடையாது.. இவர்கள் மூவரும் ஒரு இடத்தில் கூடினால் அங்கே சண்டைக்கும், சமாதானத்திக்கும், சிரிப்புக்கும் பஞ்சம் இருக்காது.. ஆஷா செய்யும் சில விஷயங்கள் வாக்குவாதம் செய்ய சரியாக இருக்கும்.. இவர்கள் நட்பும் காதலும் ஆரம்பம் ஆகி ஒரு வருடம் ஓடிவிட்டது..
ஒருநாள் காலை சர்ச் வாசலில் ஆஷாவைப் பார்த்த ஆதி, “என்ன அன்பு இவள் இங்கே இருந்து வருகிறாள்..” என்று கேட்டான்
“நானும் உன்னுடன் தானே வருகிறேன்..” என்று அவன் சொல்ல, “இரு என்ன விவரம் என்று விசாரிப்போம்..” என்று அவளின் முன்னே சென்று வண்டியை நிறுத்த,
அவர்கள் இருவரையும் பார்த்தவள், “என்ன இருவரும் காலையிலேயே சைட் அடிக்க கிளம்பிவிட்டது போல தெரிகிறது..?” என்று சந்தேகமாகப் பார்க்க வண்டியை விட்டு இறங்கிய அன்பு,
“நாங்க கிளம்புவது இருக்கட்டும்.. நீயென்ன சர்சில் இருந்து வருகிறாய்..?” என்று கேட்டான் ஆதி..
“நான் சாமி கூப்பிட்டுட்டு வருகிறேன்..” என்று அவள் சாதரணமாக சொல்ல, “ஆஷா நீ என்ன முஸ்லீமா..? இல்ல கிறிஸ்டினா..?” என்று அதனது சந்தேகத்தைக் கேட்டான் ஆதி..
அவன் அப்படி கேட்டதும், “ஏசப்பா இரண்டும் ஆரமித்துவிட்டதே.. இதுகளுக்கு பஞ்சத்து பண்ணுவதற்கே எனக்கு நேரம் போதவில்லையே..” என்று கூறிய அன்பரசன்,
“டேய் நான் பஸ்ஸில் போகிறேன்.. நீயே இவளிடம் பேசிவிட்டு வா..” என்று அன்பு வண்டியைவிட்டு இறங்க, “டேய் இருடா போலாம்..” என்று கூறிய ஆதி,
“நான் இந்துவாக இருந்தால் எசப்பா என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாரா..? இல்ல இந்து மதத்தில் இருக்கும் சாமிகள் ஏசுவை கும்பிட கூடாது என்று கூறியதா..?” என்று கேட்டாள் ஆஷா..
அவள் அப்படி கேட்டதும், “ஆஷா சூப்பராக வாதாடுகிறாய்..” என்று அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே கூறினான் ஆதி..
“நீ முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா.. இருவரும் எங்கே போறீங்க..” என்று கேட்டது,
“அம்மா தாயே இவன்தான் என்னை இழுத்துட்டு வந்தான் இவனிடம் கேளு என்னை எங்கே அழைத்துச் செல்கிறான் என்று..” அன்பு கூறியதும்,
“ஏண்டா நீ கேட்டதும் இல்லாமல் அன்புவையும் சேர்ந்துக் கெடுக்கிறாய்..?” என்று கேட்டாள் ஆஷா..
“நான் அன்புவைக் கேடுக்கிறேனா..?” என்று கேட்டு அவளைப் பார்த்து முறைத்தான் ஆதி.. “அன்பு அதை அப்புறம் சொல்கிறேன்..” என்று அவசரமாகக் கூறியவன்,
“உனக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது..” என்று அவன் சொல்ல, 'இருடா மகனே உனக்கு வைக்கிறேன் வெட்டு..' என்று மனதில் நினைத்தவள், அன்பு வாங்க நாம் பக்கத்தில் இருக்கும் கெளரி கிருஷ்ணா ஹோட்டலுக்கு போகலாம்..” என்று அன்புவை அழைத்தாள் ஆஷா
“டேய் ஆதி நீயே வாயைக் கொடுத்து அவளிடம் மாட்டிக் கொண்டாயே இனி பர்சிற்கு வெட்டு வைக்காமல் ஓயாமாட்டாளே..” என்று புலம்பினான்..
மூவரும் சேர்ந்து மெல்ல பேசிய வண்ணம் அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றனர்.. மூவரும் சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவள், “ஆதி இப்பொழுது சொல்லி நீ எங்கே போகிறாய்..?” என்று கேட்டதும், “மருதமலை போகிறோம்..” என்று ஆதி சொன்னதும்,
“ஆதி நான் இன்னும் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றதே இல்லை.. என்னையும் உங்களுடன் அழைத்துப் போங்க..” என்று அவள் அடம் பிடிக்க,
“நீ இப்பொழுது தானே சர்ச் போயிட்டு வந்தாய்..?” என்று கேட்டான் அன்பு..
“அதுக்கு முருகன் கோவிலுக்குள் வர கூடாது தடா சட்டம் போட்டிருக்கிறாரா..? நானும் தான் கோவிலுக்கு வருவேன்..” என்று அவள் அடம் பிடிக்க,
“இவளை எப்படித்தான் எனக்கு பிடித்தோ..? முருக என்னோட வாழ்க்கை உனது கையில் தான் இருக்கிறது..” என்று ஆதி வானத்தைப் பார்த்துக் கூற,
“முருகன் கையில் வேல் தானே இருக்கும்.. உன்னோட வாழ்க்கை எப்படி அவரின் கையில் இருக்கும்..?” என்று ஆஷா சீரியசாக மாறி யோசிக்க, இவர்கள் இருவரையும் பார்த்து அன்பு வாய் விட்டு சிரித்தான்.. கடைசியில் மூவரும் சென்று மருதமலை முருகனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர்..
ஆதி – ஆஷா இருவரின் காதலும் வளர்ந்ததை இருவரும் அறியாமல் இருந்தனர்.. ஆனால் ஆதி முதலில் காதலை அவளிடம் சொல்லிவிட்டதால் இருவரின் மனதை முழுவதும் ஒரு நல்ல நண்பனாக அறிந்து வைத்திருந்தான் அன்பு.. இப்படியே இரண்டு வருடமும் ஓடி மறைத்தது..
அன்பு எப்படி இருவரையும் புரிந்து வைத்திருந்தானோ அந்த அளவிற்கு ஆதியும், ஆஷாவும் அன்புவை நன்றாக புரிந்து வைத்திருந்தனர்.. அவன் அதிகம் பேசுவது இவர்களிடம் என்றாலும் கூட, அவனின் கல்லூரி வாழ்க்கையில் அவன் எந்த பெண்ணையும் திரும்பி பார்க்காமல் இருந்ததை இருவரும் உணர்ந்தனர்..
அதே போல அவன் வீட்டில் இருந்து பேசினாலும் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, பாட்டி என்று அவர்கள் அழைப்பு இருக்குமே தவிர, மற்றவர்கள் குறிப்பாக பெண்ணின் அழைப்புகள் அவனின் அலைபேசியில் இருந்து அவர்கள் கண்டதே இல்லை..
அது மட்டும் அல்ல அவன் பேசும் பொழுது கவனித்தால் அதில் அதிகம் அவர்களின் குடும்பத்தின் உறுப்பினர் பட்டியல் மற்றும் ஆதி – ஆஷா இவர்களை தவிர அவன் பேசியதே கிடையாது.. அவன் அதிகம் ஆஷவைப் போல காணாமல் போவதும் கிடையாது..
இதில் ஆஷா – அன்பு இருவரும் அறியாத ஒரே விஷயம்.. இவள் தான் ஸ்கூல் லைப்பில் வந்த ஆஷா என்று அன்புவிற்கும் தெரியாது.. இவன்தான் அன்பரசன் தன்னுடைய ஸ்கூல் லைப்பில் நாம் செய்த சேட்டையால் பாதிக்கப்பட்ட அன்பு என்று அவளுக்கும் தெரியாது..
ஆனால் இவனின் மனதில் உள்ளதை அறிந்துக் கொள்ள இருவரும் இணைந்து ஒரு திட்டம் தீட்டினர்.. அந்த திட்டத்தின் மூலம் அன்புவின் மனதில் இருப்பதை அறிவார்களா காதலர்கள்...?