• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 19

எழில் அன்பின் வீட்டிற்கு வந்து சென்று இன்றோடு இரண்டு வாரம் சென்றிருந்தது. காலையில் எழுந்தும் பாடல்கள் கேட்பது அறிவின் ஒரு அழகான பழக்கம். அந்த பழக்கத்தை அவன் இன்றும் மாற்றிக் கொள்ளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

சிலரிடம் இருக்கும் சிலவிஷயங்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிக் கொள்வது கிடையாது.. இந்த பழக்கத்தை அவனுக்கு அறிமுகம் செய்தவனே அன்புதான்.. இன்னும் அதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறான்.. ஆனால் அதை மற்றவர் அறிய வாய்ப்பில்லை..

அன்பு அன்றும அதுபோலவே காலையில் எழுந்ததும் பால்கனிக்கு சென்றவன் அவள் அமைத்த தோட்டத்தைப் பார்த்துக் கொண்டே அது பூத்து குலுங்கி அவனின் மனதை மயக்க காலைநேரத்து பனிகாற்று அவனின் முகத்தில் மோத அதை ரசித்தவன் பக்கத்தில் இருந்த டிவிடி பிளேயரை ஆன் செய்தான்..

அவனின் மனதின் இருக்கும் வார்த்தைகள் வரிகளாக மாறி அந்த பாடலின் வழியே வெளியே வந்தது.. தோட்டத்தைப் பார்த்த வண்ணம் காலை தென்றலில் மிதந்து வந்தது அந்த ஏக்கம் கலந்த பாடல்!

ஓஓ வானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல்!

இதுதான் தேவன் ஏற்பாடு இணைத்தான் பூவைக் காற்றோடு!

ஓஓ கானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல்

இனி என் ஜீவன் உன்னோடு வருவேன் நான் உன் பின்னோடு!

நாள் முழுதும் நான் எழுதும் காதல் கதை புனிதம்..

பூமுடிக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் விரதம்..

என்று பாடிய பாடலில் வந்த கானம் அவளை நினைவு படுத்த பாடலை கேட்டவண்ணம் சுவற்றில் சாய்ந்து நின்று கண்மூடினான் அன்பரசன்.. அவனுக்கென்ற ஒரு உலகத்திற்குள் சென்றது போல அவனின் மனம் பாடலில் ஒன்றிப் போக தன்னையும் மறந்து நின்றான் அன்பு.

ஏதோ கேட்க அவனின் அறைக்குள் வந்த அறிவுக்கு அன்புவை அந்தநிலையில் பார்த்தும், ‘தான் காண்பது கனவா..? இல்லை நிஜமா..?’ என்று கண்களை கசக்கிக் கொண்டு அண்ணனைப் பார்த்தான்..

அவன் வந்த சுவடே அறியாத வண்ணம், எதுவும் பேசாமல் அவனின் அறையை விட்டு வெளியே வந்தான் அறிவு.. எழில்விழி வீட்டிற்கு வந்து சென்றதில் இருந்தே அன்பைக் கண்காணிப்பதை தனது முக்கிய வேலையாக வைத்திருந்தான் அறிவு..

அப்படிதான் எதிர்பாராத விதமாக அண்ணனிடம் ஏதோ கேட்க வந்தவன் அவன் பாடலில் மெய் மறந்து கண்மூடி ரசிப்பதைப் பார்த்துவிட்டு தனது அறைக்கு வந்தவன், ‘அண்ணா எழிலைக் காதலிக்கிறான்.. ஆனால் அவன் அதை அவர்களிடம் மனம் விட்டு சொல்லலாமே.. ஏன் இன்னமும் சொல்லாமல் இருக்கிறான்..’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான்..

அவனுக்கு தெரிந்து எந்த கெட்டபழக்கமும் அன்புவிற்கு இல்லை.. படிப்பில் குறைவு இல்லை.. பணத்திலும் குறைவு இல்லை.. பிறகு ஏன் இன்னமும் அமைதியாக இருக்கிறான்..?! என்று யோசிக்க அவனுக்கு திடீரென்று நினைவு வந்தது..

‘ஆஷா பள்ளியில் செய்த சேட்டையை இவன் கண்டுபிடித்து அவளுக்கு சேர்ந்து சாப்பாடு எடுத்துச் சென்றது அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அந்த உண்மை அவனுக்கு எப்படி தெரியும் என்பது இவர்கள் யாருக்கும் ஆஷா உட்பட யாருக்கு தெரியாது..

இவங்க ஆஷாவின் உயிர் தோழி என்றால் இந்த உண்மை இவங்களுக்கும் தெரியும்.. அப்படி என்றால்..?’ என்று யோசிக்க அவனின் அறிவு சரியாக வேலை செய்ய, அவனின் நினைவுகள் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் பயணிக்க ‘இவர்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பு அதிகம்’ என்றே அவனின் மனம் கூறியது..

எழிலை அவனுக்கும் பிடிக்கும். அவனுக்கு எழிலை மிகவும் பிடித்த காரணம்.. அண்ணனிடம் இருக்கும் பொறுமையை அவளிடம் பார்த்த நொடியே கண்டு கொண்டவன், ‘இவங்க எனக்கு அண்ணியாக வந்தால் ரொம்ப நல்ல இருக்கும்..’ என்று மனதில் மட்டும் நினைத்திருந்தான்..

இதில் எழில் வந்ததில் இருந்து அண்ணனிடம் ஏற்பட்ட மாற்றம் தான் அவனுக்கு சந்தேகம் வந்தது.. அந்த சந்தேகம் மறுநாளே வலுப்பெற்றது..

காலையில் எழுந்ததும் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவன், எழில் வந்த அன்று வாய் விட்டு ஏதோ சொல்லியதைக் கவனித்தான்.. ஆனால் அவன் என்ன சொன்னான் என்று மட்டும் அறிவுக்கு தெரியாது.. ‘அண்ணன் மனதில் எழில் தான் இருக்காங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..?’ என்று அவன் அமைதியாக யோசிக்க ஆரமித்தான்..

அதன்பிறகு அன்பு கோர்ட்டிற்கும், அறிவு ஆபீஸிற்கும் கிளம்பியவர்கள் ஹாலிற்கு இறங்கி வர, ஹாலில் அமர்ந்திருந்த தியாகு, “அன்பு, அறிவு இருவரிடமும் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் வாங்க வந்து உட்காருங்க..” என்று சொல்ல அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருவரும் சோபாவில் அமர, இவர்களுக்கு காலை உணவு தயார் செய்துவிட்டு சுமித்ராவும் வந்து கணவரின் அருகில் அமர்ந்தார்..

அவர்கள் இருவரையும் பார்த்த அன்பு, ‘என்ன விஷயமாக இருக்கும்..?’ என்று இவன் ஒரு கோணத்தில் யோசிக்க, அவனின் தம்பி அறிவோ, ‘அண்ணனின் காதல் அப்பா – அம்மாவிற்கு தெரிந்துவிட்டதா..? என்று அவனும் ஒரு கோணத்தில் யோசித்தான்..

இவர்கள் இருவரையும் பார்த்த தியாகு, “இனியாவிற்கு நல்ல இடத்தில் இருந்து மாப்பிள்ளை வந்திருக்கிறது என்று அம்மா எனக்கு போன் பண்ணிருந்தாங்க..” என்று சொல்லவும்,

“இனியாவிற்கு மாப்பிள்ளையா..?! மாப்பிள்ளை பெயர் என்ன..? அவர் என்ன படித்திருக்கிறார்.. நம்ம ஊரில் சேர்ந்தவங்களா..? இல்லை வெளியூரா..?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டான் அன்பு..

“மாப்பிள்ளை நம்ம ஊர்தான் அன்பு.. பெயர் இளமாறன். இஞ்சினியரிங் படித்துவிட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் வொர்க் பண்ணுவதாக சொன்னாங்க.. அவங்க இப்பொழுது சென்னையில் தான் இருக்காங்க..” என்று சொல்ல,

“அப்பா அவரின் கம்பெனி பெயர் மட்டும் சொல்லுங்கள் ஆள் எப்படி என்று நான் விசாரித்து விடுகிறேன்..” என்று தன்னோட மகிழ்ச்சியை வெளியிட்டான் அறிவு..

“மாப்பிள்ளை எப்படி இருப்பார்..?” என்று கேட்டான் அன்பு. அவனிடம் இளமாறனின் புகைப்படத்தைக் கொடுக்க, அதை வாங்கியவன்,

“பாட்டி சூப்பராக தேர்வு செஞ்சிருக்காங்க.. இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கும்..” என்று கூறிய அன்புவின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிய அறிவு,

“அப்பா நிஜத்திலேயே ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கும். இப்பொழுது இவங்க பெற்றோர் இங்கே இருக்காங்க என்றால் இனியாவைப் பெண் பார்க்க இங்கே தானே வருவாங்க..?!” என்று அறிவு தனது சந்தேகத்தைக் கேட்டதும் மகனின் பார்த்து புன்னகைத்த சுமித்ரா,

“பாட்டி இன்னமும் ஒரு முடிவும் அவங்களிடம் சொல்லவில்லையாம்.. உங்களிடம் பேசிவிட்டு அவரைப் பற்றி நன்றாக விசாரித்த பிறகு உங்களுக்கு திருப்தி என்றால் சொல்ல சொன்னாங்க..” என்று மகிழ்ச்சியுடன் கூறியதும்,

இருவரும் சேர்ந்து அவனைப் பற்றிய விவரங்களை திரட்ட பெற்றோர்கள் இருவரும் மகன்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருக்க அடுத்த ஒருமணி நேரத்தில் இளா பற்றிய அனைத்து தகவலும் அப்பாவின் முன்னாடி வந்து அமர்ந்தவர்கள்..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “எங்களுக்கு மாப்பிள்ளை ஓகே. இனியாவைப் பெண் பார்க்க அவர்கள் வீட்டில் இருந்து வர சொல்லுங்கள்..” என்று கோரஸ் பாடினார்கள் இனியாவின் மீது உயிரை வைத்திருக்கும் அவளின் அண்ணன்கள் இருவரும்..

இந்த தகவல் உடனடியாக ஜெயந்திம்மாவிற்கு போனில் கூறினார் தியாகு, அதற்கு ஜெயந்திம்மா, “நான் நாளை இனியாவை அழைத்துக் கொண்டு சென்னை வருகிறேன்..” என்று சொல்ல அடுத்தடுத்த வேலைகள் சரியாக நடந்தது.

அவர்கள் இருவரும் தங்களின் ஆபீசிற்கு செல்ல, ஆபீஸ் உள்ளே நுழைத்தும் ஆதி, ஆஷா இருவருக்கும் அளித்த அறிவு, “நீங்கள் இருவரும் அண்ணனுக்கு தெரியாமல் என்னோட ஆபீஸ் வாங்க..” என்று அழைத்தான் அறிவு..

அதற்கு ஆஷா, “இல்ல வேண்டாம் அறிவு நாம் மூவரும் வேறு இடத்தில் சிந்திப்போம்..” என்று சொல்ல அவன் ஒரு ரெஸ்டாரண்ட் பெயர் சொல்லி அங்கே இருவரையும் வரவைத்தான்..

இருவரும் அன்று மதியம் அறிவுக்காக அவன் சொன்ன ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்க சரியான நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்த அறிவு, சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தான்..

“என்ன விஷயமாக எங்களை வர சொன்னாய் அறிவு..?” என்று அவனிடம் கேட்டான் ஆதி..

“உங்கள் இருவருக்கும் அண்ணா யாரையாவது காதலிக்கிறானோ என்ற சந்தேகம் இருக்கிறதா..?” என்று நேரடியாக கேட்டதும், அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தனர்..

“ஆஷா இங்கே நடப்பது எதையும் என்னால் புரிந்துக் கொள்ளவே முடியல.. என்னோட அண்ணா இரண்டு நாளாகவே ஒரே யோசனையில் இருக்கிறான்..” என்று ஆஷாவிடம் கூறினான் அறிவு..

“உன்னோட அண்ணாவைப் பற்றி யோசித்தே நாங்க தீராத தலைவலியில் இருக்கிறோம்.. உன்னோட அண்ணாவை அப்படியே என்ன செய்யணும் தெரியுமா..?” என்று கோபத்தில் பல்லைக் கடித்தான் ஆதி..

“ஏன் அண்ணா இந்த அளவிற்கு கோபமாக இருக்கீங்க..?!” என்று கேட்டதும் ஆதி ஏதோ சொல்ல வர அவனைத் தடுத்த ஆஷா, “அவனோட மனதில் யார் இருக்காங்க என்று நாங்க கிட்டதட்ட நாலு வருடமாக புலம்புகிறோம் இது உனக்கு தெரியுமா அறிவு..” என்று கேட்டாள்.. இந்த விஷயம் அவனுக்கு முற்றிலும் புதிது..!

“என்னது! அப்பொழுது உங்களுக்கு என்னோட அண்ணா மனதில் யார் இருக்காங்க என்ற குழப்பம் நான்கு வருமாக இருக்கிறதா..?” என்று கேட்டான் அறிவு..

“எங்களுக்கு சந்தேகம் எல்லாம் இல்லை உன்னோட அண்ணா மனதில் இருப்பது எழில்விழி என்பதில் எங்களுக்கு துளியளவு சந்தேகம் இல்லை..” என்று ஆஷா சொல்ல, அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த ஆதி,

“ஏன் அறிவு உனக்கு இப்பொழுது ஏதாவது சந்தேகம் இருக்கா..?” என்று கேட்டதும், “எனக்கும் அண்ணனோட மனதில் அண்ணி இருப்பாங்க என்ற சந்தேகம் இருந்தால் தான் உங்களைப் பார்க்க வந்தேன்..” என்று அவன் மெதுவாக சொல்ல,

“உனக்கு சந்தேகம் எல்லாம் வேண்டாம் அறிவு.. உன்னோட அண்ணா மனதில் இருப்பது எழில்விழிதான்..” என்று அழுத்தமாகக் கூறியதும், “இதை நான் எப்படி நம்புவது..?” என்று கேட்டான் அறிவு..

“எழில்விழி வந்த அன்று உன்னோட அண்ணா ஹோட்டலில் சாப்பிட்டு வந்தது உங்கள் அனைவருக்குமே தெரியும்.. அன்று என்ன நடந்தது என்று எனக்கும் இவனுக்கும் தான் தெரியும்..” என்று அன்று நடந்ததை அவர்கள் சொல்ல அவர்கள் சொல்வதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தான் அறிவு..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“உன்னோட அண்ணா மனசில் இருப்பது எழில் என்று அப்பொழுது தான் நாங்கள் கண்டுக் கொண்டோம்..” என்று இருவரும் தங்களுக்கு தெரிந்ததைச் சொல்லிவிட்டு,

“உன்னோட அண்ணனும், உன்னோட எழில் அண்ணியும் பேசுவதைப் பார்த்தால் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்று சொல்லி எனக்கே அல்வா கொடுதில் இருவரும் செம கில்லாடிகள்..” என்று ஆஷா சொல்ல அறிவுக்கு சிரிப்புதான் வந்தது..

அவன் சிரிப்பதைப் பார்த்து, “அறிவு சிரிக்காதே எனக்கு வருகின்ற கோபத்திற்கு..?” என்று பல்லைக் கடிக்க அவளைப் பார்த்த ஆதியும் சேர்ந்து சிரிக்க ஆரமித்தான்..

“இப்பொழுது என்ன செய்ய போகிறாய் அறிவு..?!” என்று கேட்டான் ஆதி.. “இல்ல அண்ணா எனக்கு இருந்த மன குழப்பம் தீர்ந்தது.. ஆனால் ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ஆஷா..” என்று கூறியவனை புரியாமல் பார்த்தாள் ஆஷா,

“உங்களோட பள்ளி வாழ்க்கையில் உங்களின் திருட்டு தனத்தை எழில் அண்ணி கண்டுபிடித்த பிறகு உங்களுக்கு ஏதாவது ஷாக் கொடுத்தானா என்னோட அண்ணன்..?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டான் அறிவு..

அவன் கேட்ட கேள்வியில் ஆதிக்கு அவர்கள் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது என்று இருந்த சந்தேகம் மாறி அதில் ஏதோ ஒரு க்ளூ இருப்பது போல அவனின் மனதில் படவும் ஆஷாவை யோசனையாகப் பார்க்க, அவளுக்கும் ஏதோ புரிவது போல இருந்தது..

அவள் யோசித்துவிட்டு, “உன்னோட அண்ணா எனக்கு ஒரு ஷாக் கொடுத்தான் என்றால் அது அவன் இரண்டு டிப்பன் பாக்ஸ் எடுத்து வந்தது தான்..” என்று சொல்ல,

“அவர்கள் இருவரும் சந்திக்க நீங்க ஒரு பாலமாக அமைந்திருக்கீங்க ஆஷா..” என்று சரியாக கணித்தான் அறிவுமதி..

அவன் சொன்னதைக் கேட்டு ஆதி, “அப்பொழுது அவனுக்கு உண்மையைச் சொன்னது..?!” என்று அவன் இழுக்க, “என்னோட அண்ணாவிடம் உணமையைச் சொன்னது எழில் அண்ணிதான்.. அதற்கு காரணம் ஆஷா தான். அவளுக்கு பிடித்ததை அவள் திருடாமல் நேரான வழியில் அடைய என்னோட அண்ணனிடம் உண்மையைச் சொல்லி சாப்பாடு எடுத்து வர சொல்லிருப்பாங்க..” என்று சொல்ல,

“அவளுக்கு இது எல்லாம் நான் சொல்லித்தான் தெரியும் அறிவு. அவள் அந்த ஒருவாரமும் வரவே இல்லை..” என்று ஆஷா அழுத்ததுடன் சொல்ல,

“ஆனால் அவர்கள் சந்திப்பு நிகழ்ந்ததை அவங்க சொல்லிருக்க மாட்டாங்க.. ஏன் என்றால் அப்படி சொன்னால் உங்களின் நட்பு கெட்டு போகும். அதற்காக தன்னோட தோழியை மற்றவர் தவறாக பேசக்கூடாது என்ற எண்ணமும் அவங்களுக்கு அதிகம்..” என்று சொல்ல ஆதிக்கு எல்லாம் புரிந்தது..

ஆஷாவிற்கு அம்மா இல்லை என்ற குறையே இன்று வரையில் தெரியாமல் இருக்க அவள் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறாள் என்று சந்தோசம் அடைந்தவள், அதை வெளிப்படுத்தாமல் இன்னமும் ஒரு நல்ல தோழியாக அதையும் தாண்டிய ஒரு சொந்தமாக இருப்பவளை நினைத்தது மனம் மகிழ்ந்தாள் ஆஷா..

“அதுதான் அன்று இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல நடந்துக் கொண்டார்களா..?” என்று கேட்டதும் அறிவு ஆமாம் என்று தலையசைத்தான்.. “அடுத்து என்ன செய்வது..?” என்று கேட்டான் ஆதி..

“இருவரையும் நாம் மூவரும் கண்காணிப்போம் சரியான நேரம் பார்த்து அண்ணாவின் மனதில் இருப்பதை நான் வீட்டில் சொல்லி சம்மதம் வாங்குகிறேன்..” என்று கூறினான் அறிவு..

அவளின் இப்பொழுது இருக்கும் யோசனை அவளை நல்லபடியாக அன்புவிடம் சேர்த்துவைக்க வேண்டும் என்பதே அவளின் மனதில் இருக்கும் எண்ணம்..

அவன் சொன்னதைக் கேட்ட ஆஷா, “அதை இப்பொழுதே செய்தால் என்ன..?” என்று கேட்டாள்.. அவளின் கேள்வியில் அவளை நிமிர்ந்து பார்த்த அறிவு, “என்னோட தங்கைக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.. அது நல்லபடியாக முடிந்தால் அடுத்து அண்ணாவின் விஷயத்தை வீட்டில் சொல்லி அனைவரிடமும் சம்மதம் வாங்க வேண்டும்..” என்று மூவரும் கூட்டணி அமைத்தனர்.. பிறகு மற்ற விஷயங்களை பேசியபடி சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்றனர்..

மறுநாள் காலை வேகவேகமாக வேலைகள் நடக்க ஜெயந்திம்மா சென்னை செல்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்ய விருப்பமே இல்லாமல் அந்த வீட்டை வளம் வந்துக் கொண்டிருந்த இனியாவைப் பார்த்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டார் ஜெயந்திம்மா..

அவர்கள் வீட்டில் இருந்து செல்ல எதிரே எழில் வீடு வந்ததும் வண்டியை நிறுத்த சொன்ன ஜெயந்திம்மா, காரை விட்டு இறங்கி எழில் வீட்டிற்குள் சென்றார்..

காலையிலேயே தங்களில் வீட்டின் முன்னே கார் வந்து நிற்பது கண்டு அவள் அவசரமாக வாசலுக்கு வர, வீட்டின் உள்ளே வந்த ஜெயந்திம்மாவைக் கண்டு, “வாங்க ஜெயந்திம்மா.. என்ன காலையில் இங்கே வந்திருக்கீங்க..?” என்று கேட்டாள் எழில்.

“நானும் இனியாவும் சென்னையில் இருக்கும் என்னோட மகனைப் பார்க்க போகிறோம். அங்கேயே இவளைப் பெண் பார்க்க வருவதாக அவங்க வீட்டில் உள்ளவர்கள் சொல்லிட்டாங்க.. அடுத்து என்ன என்று பேசிவிட்டு தான் நான் இங்கே வருவேன் எழில்..” என்று சொல்ல, இனியாவை நினைத்தது எழில் மனம் வலித்தது..

“சரிங்க ஜெயந்திம்மா நீங்க பத்திரமாகப் போய்ட்டு வாங்க..” என்று சொல்ல, “உன்னை இங்கே விட்டுவிட்டுப் போகிறோம் என்று கவலையாக இருக்கிறது எழில்.. நான் வரும் வரையில் நீயும் மஞ்சுவும் பத்திரமாக இருங்கள்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ஜெயந்திம்மா..

வாசல் வரையில் வந்த எழில் இனியாவின் முகம் பார்க்க அதில் எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் இருந்தது.. இருப்பினும் கூட அவளின் மனம் போல அவளுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று நினைத்து அவர்களை அனுப்பி வைத்தாள் எழில்..

அன்று மாலை இனியாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார் ஜெயந்திம்மா. அவர்கள் இருவரும் காரில் சென்னை வந்தனர். அன்று மாலையே வீட்டின் போர்டிகோவில் கார் ஒன்று வந்து நிற்பதைக் கண்டு வாசலுக்கு வந்தனர் தியாகுவும், சுமித்ராவும்!

“வாங்க அம்மா.. வாடா இனியா..” என்று இவரையும் வரவேற்ற அப்பா, அம்மா இருவரையும் பார்த்த இனியா, “அம்மா எப்படி இருக்கீங்க..” என்று அன்னையைக் கட்டிக்கொண்டவள் அப்பாவின் பார்வை தன்மீது படிவது பார்த்து அவரின் அருகில் சென்றாள்..

“என்னோட செல்லம் இப்படி அங்கேயே இருந்துக்கலாம் என்று நினைத்தாயா..? இப்பொழுது உனக்கு மாப்பிள்ளையை நாங்க சென்னையில் பார்த்துவிட்டோம்..” என்று சொல்ல அவளின் முகம் வாடிப்போக,

அவளின் முகத்தைப் பார்த்த சுமித்ரா, “என்னடா இதுக்கெல்லாம் முகம் வாடுகிறாய்..?!” என்று அவளைக் கட்டிக்கொள்ள அவளின் அமைதியைக் கண்டு இருவரும் ஜெயந்திம்மாவின் முகம் பார்க்க, ‘நான் அப்புறம் சொல்கிறேன்..’ என்று சொல்ல அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர்..

அவர்கள் அனைவரும் சோபாவில் அமர்ந்துப் பேசிகொண்டிருக்க, அவர்கள் வந்த கொஞ்ச நேரத்தில் அன்பு, அறிவு இருவரும் வீட்டிற்கு வந்ததும், “ஏய் வாலு நீ வந்துவிட்டாயா..? இனிமேல் வீட்டில் எந்தப்பக்கமும் உன்னோட கொலுசு சத்தம் தான் கேட்கும்..” என்று சந்தோசமாகக் கூறினான் அறிவு..

“உனக்கு நான் வந்ததில் சந்தோசமா..? இல்லை கொலுசு சத்தம் கேட்கும் என்று வருத்தமா..?” என்று கேட்டதும், “இந்த துடுக்கு பேச ஆள் இல்லாமல் தான் நானும் அண்ணாவும் புலம்பிக் கொண்டிருந்தோம்..” என்று சொல்ல அன்பு அமைதியாக தங்கையின் அருகில் அமர்ந்தான்..

“அண்ணா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்று சொல்ல, “என்ன விஷயம் சொல்லுடா..” என்று அவன் கேட்டதும், “உன்னிடம் தனியாக பேசணும்..” என்று சொல்ல அவளின் முகம் பார்த்தான் அன்பு..

சரியென்று இருவரும் எழுந்து, “அம்மா நான் இனியாவிற்கு தோட்டத்தை சுற்றிக் காட்டிவிட்டு வருகிறேன்..” என்று அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு செல்ல இனியாவிற்கு எப்படி ஷாக் கொடுக்கலாம் என்று திட்டமிட ஆரமித்தனர் மற்றவர்கள்..!

“இனியா விரும்பும் இளமாறனின் வீட்டில் இருந்து தான் இவளை பெண்கேட்டு வந்திருக்கின்றனர்.. இவளுக்கு பிடித்ததை நாம் என்னைக்கு செய்யாமல் விட்டிருக்கிறோம்..” என்று அவளுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்க முடிவு செய்தார் ஜெயந்திம்மா.. இதற்கு மற்றவர்களும் கூட்டு சேர்ந்து கொண்டனர்..

மாலை நேரம் மாறி இரவு நேரம் தொடங்க வானம் செவ்வானமாக மாறி சூரியன் மேற்கே மறைய அந்த தோட்டத்தில் அண்ணனும், தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் அமைதியாக நிற்க, அவள் என்ன கேள்வி கேட்க போகிறாள் என்று அவளின் பார்வை வைத்தே கணித்தான் அன்பரசன்..

அவர்கள் தோட்டத்திற்கு வந்ததும் அன்புவின் முகம் பார்த்தவள், “அண்ணா நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் மறைக்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும்..” என்று சொல்ல அவளின் முகத்தைப் பார்த்தவன்,

“நீ என்ன கேட்க போகிறாய் என்று எனக்கு தெரியும்.. நீ பார்த்து வைத்திருக்கும் பெண்ணை நான் திருமணம் செய்ய வேண்டும் அதுதானே கேட்கிறாய்..?” என்று கேட்டான் அன்பு..

“ம்ம் ஆமாம் அண்ணா இன்றோடு நீ என்னிடம் கேட்ட டைம் முடிந்துவிட்டது.. இப்பொழுது நீ என்ன பதில் சொல்ல போகிறாய்..?!” என்று அன்புவிடம் கேட்டாள்

“நானும் உன்னிடம் ஒன்று சொன்னேன்.. இந்த ஆறு வருடத்தில் எனக்கு மற்றவர்கள் மீது காதல் வந்தால் நான் அந்த பெண்ணைக் கட்ட மாட்டேன் என்று உன்னிடம் நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்..” என்று கூறியவன் மாலை நேரம் தனது கூடுகளை நோக்கிச் செல்லும் பறவைகளைப் பார்த்தான்..

“இப்படி சொல்றீங்க சரி அண்ணா நீங்க விரும்பும் பெண் இவங்களை விட அழகா..?” என்று கேட்டவள் தனது செல்லில் இருந்த எழில் போட்டோவை எடுத்து அவனிடம் காட்ட அந்த போட்டோவைப் பார்த்த அன்பு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றான்..

அவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் தனது கவலைகள் மறந்து அண்ணனின் முகம் பார்த்து புன்னகை பூத்தாள் இனியா..!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top