அத்தியாயம் – 2
முதல் நாள் வகுப்பிற்குள் நுழைந்த எழில்விழி திகைத்துத்தான் போனாள்.. மொத்தம் எண்பது மாணவ,மாணவிகள் இருப்பார்கள்.. வகுப்பின் உள்ளே நுழைந்த எழில்விழி மாணவிகளுடன் முதல் வரிசையில் அமர்ந்துக் கொள்ள, அவர்கள் பேச்சு சத்தம் அந்த வகுப்பறையே அதிர்ந்தது..
அடுத்த பெல் அடிக்கவும் எல்லோரும் சென்று இறைவணக்கம் செலுத்திவிட்டு அறைக்குள் வர எழில்விழி அருகில் அமர்ந்திருந்தவள், “நீ இந்த கிளாசிக்கு புதுசா..? உன்னோட பெயர் என்ன..?” என்றாள்
“என்னோட பெயர் எழில்விழி..” என்று அவள் புன்னகையுடன் சொல்ல, அவளைப் பார்த்து புன்னகை செய்தவள், “என்னோட பெயர் ஆஷா..” என்று தன்னையும் அறிமுகம் செய்துக் கொண்டாள்..
இப்படி இருவரும் பேசியபடியே தோழியாக எழில்விழிக்கு ஆஷாவை மிகவும் பிடித்து போனது.. அன்றிலிருந்து இருவரும் இணைபிரியாத தோழிகளாக மாறிப்போயினர். மதியம் சாப்பிட அழைத்தாள் எழில்விழி
“இன்னைக்கு உங்களின் வீட்டில் என்ன சாப்பாடு..?” என்று எழில்விழி கேட்டதும், “யாருக்கு தெரியும்..?” என்று ஆஷா சொல்ல,
“என்ன..?” என்று அதிர்ச்சியில் கேட்டாள்..
“இல்ல அம்மா சமையல் செய்யும் பொழுது நான் பள்ளிக்கூடம் கிளம்பிக் கொண்டிருந்தேன் அதுதான் கவனிக்கவில்லை..” என்று சொல்லி எழில்விழியை சமாளித்தாள் ஆஷா.
எழில்விழி டிப்பனைத் திறந்ததும் அதில் மணக்க மணக்க மீன் குழம்பு பார்த்தும் ஆஷாவிற்கு நாக்கில் எச்சில் ஊறியது.. அவள் அதை ஆஷாவிற்கு கொடுக்க, ஆஷா டிப்பனைத் திறந்தால் மணக்க மணக்க கத்திரிக்காய் புளிக்குழம்பு.
மணத்தை முகர்ந்தவள், “அம்மா சமையலுக்கு மணமே தனிதான்..” என்று சொல்லி அவளிற்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு சாப்பிட, அவர்கள் பேச்சு பழைய பள்ளியை நோக்கித் திரும்பியது.. இருவரும் தங்களுக்கு பிடித்தது எல்லாம் பகிர நேரம் சரியாக இருந்தது..
மதியம் சாப்பிட பிரதாப் அன்புவை அழைக்க, அன்புவோ அவனின் கையில் பணத்தைக் கொடுத்து, “வெஜிடபிள் பிரியாணி வாங்கிட்டு வாடா..” என்று கேண்டீனில் சாப்பாடு வாங்கிவரச் சொல்ல பிரதாப்பும் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்..
அவன் சென்றதும் தன்னுடைய டிப்பனைத் திறந்துப் பார்க்க அது எப்பொழுது காலியாகத்தான் இருந்தது..
அன்புவிற்கு சந்தேகம், ‘காலையில் என்னோட கண் முன்னே தான் அம்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு ஊற்றிக் கொடுக்க, நான் தான் அதை பள்ளிக்கு எடுத்து வந்தேன். இப்பொழுது அது எப்படி காணாமல் போனது..?’ என்று தனக்கு தானே கேட்டுகொண்டான்..
இது இன்று நடப்பது அல்ல தொடர்ந்து ஒரு மூன்று வருடமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்படி காலியாகிறது என்ற விந்தை மட்டும் இன்னும் அவனுக்கு தெரியவில்லை..
அவன் காலையில் வருகையில் அவனின் அம்மா அவனுக்கு சாப்பாடு அவனின் கண்முன்னேதான் போடுவார்கள். ஆனால் இங்கே மதியம் டிப்பனைத் திறந்தால் சாப்பாடு மட்டும் இருக்காது..
ஆனால் அவன் அதை வீட்டில் சொல்லவே இல்லை.. இந்த மூன்று வருடமும் அவனின் மதிய சாப்பாடு கேண்டீனில் தான்.. பிறகு பிரதாப் வந்ததும் அவனுடன் இணைத்து சாப்பிட்டவன், அடுத்த வகுப்பிற்கு சென்றான்..
அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் அவனின் அம்மா சுமித்ரா, “என்ன கண்ணா இன்னைக்கு சாப்பாடு எப்படி இருந்தது..?” என்று கேட்டுக் கொண்டே அவனின் பேக்கை வாங்க,
“நான் எங்கே சாப்பிட்டேன்.. அதுதான் மாயமாக மறைந்து போகிறதே..” என்று முணுமுணுப்பாகச் சொல்ல, “என்ன..?” என்று அவனின் அம்மா அதிர்வுடன் கேட்டதும்,
“இல்லம்மா நல்ல சாப்பிட்டேன்.. கத்திரிக்காய் புளிக்குழம்பு சூப்பர்..” என்று சொல்லிவிட்டு ப்ரஷ் ஆக அவனின் அறைக்கு சென்றான்..
அவன் ட்ரஸ் மாற்றி வருவதற்குள் அவனிக்கு பிடித்த கிழங்கை செய்து வைத்திருந்தார் அவனின் அம்மா சுமித்ரா.. அவன் அதை சாப்பிட்டுவிட்டு வெளியே அவனின் அறைக்கு படிக்க சென்றான்.. இரவு உணவை சமைக்க சுமித்ரா சமையல் அறைக்கு சென்றார்..
அப்பொழுது விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த அறிவுமதி, ““அம்மா அண்ணா எங்கே..?” என்று கேட்டவண்ணம் சமையல் அறைக்குள் நுழைந்தான்.
“நீ இப்பொழுது தான் வருகிறாயா..?” என்று கேட்டதும், “ம்ம் தங்கையைப் பாட்டியின் வீட்டில் விட்டுவிட்டு அப்படியே விளையாட சென்றவன், இப்பொழுதுதான் வருகிறேன்..” என்று அவருக்கு பதில் கூறியவன்,
“அண்ணா எங்கே என்று சொல்லுங்கள்..” என்று சொல்ல, “எதுக்குடா வந்தும் வராதுமாக அவனைத் தேடுகிறாய்..” என்று கேட்டதும்,
“அண்ணாவிடம் ஒருவிஷயம் கேட்க வேண்டும்..” என்று அவன் சொல்லவும், “எனக்கு தெரியாமல் அப்படி என்ன விஷயம்..?” என்று கேட்டார் சுமித்ரா
“அதுவா நீங்க போட்டுக்கொடுக்கும் சாப்பாடு தினம் காணாமல் போகிறது.. ஆனால் அண்ணா இந்த விஷயத்தை நீங்கள் வருத்தப்படுவீங்க என்று உங்களிடம் உண்மையைச் சொல்லாமல் இருக்கிறான்..” என்று சொல்லவும்,
தனது மகனின் பக்கம் திரும்பிய சுமித்ரா, “இது எப்பொழுதில் இருந்து நடக்கிறது..?” என்று கேட்டதும், “அது மூன்று வருடமாக நடக்கிறது..” என்று அவன் சாதரணாமாக சொல்ல பெற்றமனம் பதறியது..
“என்னடா மூன்று வருடமாக இவன் மதிய சாப்பாடே சாப்பிடாமல் இருக்கிறானா..?” என்று பதறிய வண்ணம் கேட்ட அன்னையைப் பார்த்த அறிவுமதி,
“பார்த்தீங்களா எப்படி பதறீங்க அதுதான் அண்ணா உங்களிடம் ஒன்னும் சொல்லாமல் இருக்கிறான்.. கவலை பாடாதீங்க அண்ணா மதியம் சாப்பிடுகிறான்.. அந்த குட்டிசாத்தான் யார் என்று தெரியட்டும் அப்புறம் இருக்கு..” என்று கருவியவன்,
“என்னோட செல்லம் இல்ல.. இதுக்கு இப்படி வருத்தப்படலாமா..?” என்று அன்னையின் தாடையைப் பிடித்து கொஞ்சியவன், சுமித்ரா முகம் மலரவே அவர்களைச் சமாதானம் செய்துவிட்டு,
“அண்ணா இப்பொழுது எங்கே இருக்கிறான்..?” என்று கேட்டதும், “உன்னோட அண்ணா படிக்க அவனது அறைக்கு சென்றுவிட்டான்..” என்று அவனுக்கு பதில் சொல்ல, “சரி நான் அண்ணாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று அண்ணனின் படிக்கும் அறைக்குள் சென்றான் அறிவுமதி
“அண்ணா..” என்று அழைத்துவிட்டு அறைக்குள் சென்றதும் அங்கே அன்பரசன் புத்தகத்துடன் அமர்ந்திருக்க, அவனின் அருகில் சென்று அமர்ந்த அறிவுமதி,
அவனின் அண்ணனிடம் அவன் கேட்ட கேள்வி, “அண்ணா இன்னைக்கும் உன்னோட டிப்பன் பாக்ஸ் காலியா..?” என்று கேலியாகக் கேட்டான்..
அவனின் கேள்வியில் எப்பொழுதும் போல தன்னைத்தானே நொந்துக்கொண்ட அன்பு, அவனின் பக்கம் திரும்பி, “இதுதான் நான் மூன்று வருடமாக சொல்கிறேனே..” என்று அவனும் சலிப்புடன் பதில் கொடுத்தான்..
“அண்ணா இதுக்கே சலித்துக் கொண்டால் எப்படி..?” என்று கேட்டான்..
“வேற என்ன பண்ணும் என்று சொல்கிறாய்..?” என்று கேட்டவன் அடுத்த பக்கத்தைப் புரட்ட, “அண்ணா அது யாரு அண்ணா உன்னோட டிப்பனை மட்டும் திருடித் திங்கும் பிராணி..” என்று சந்தேகம் கேட்டான்
அவனின் தலையில் கொட்டியவன், “அந்த வினோத மிருகத்தின் பெயர் தெரியலடா.. நாளைக்கு எனக்கு முக்கியமான டெஸ்ட் இருக்கு அதுக்கு படிக்கணும்.. அதனால் அந்த வினோத மிருகம் பற்றி அப்புறம் பேசுவோம்..” என்று சொல்ல,
“ஸாரி அண்ணா நீங்க படிங்க..” என்று எழுந்தவனின் கையைப்பிடித்து அமர வைத்தவன், “உனக்கு இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது..?” என்று கேட்டதும் கிளாசில் நடந்ததை அண்ணனிடம் சொல்ல ஆரமித்தான் தம்பி.
சிறிது நேரம் சென்ற பிறகு, “சரிங்க அண்ணா நீங்க படிங்க..” என்று எழுந்து சென்றவன், “அண்ணா..” என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையில் என்ன என்ற கேள்வி மறைந்து இருந்தது..
“இந்த பாட்டி தொல்லை தாங்கல அண்ணா.. நாளைக்கு வரும்பொழுது புக் ஷாப் வந்து இதில் இருக்கும் நாவல் சிலதை வாங்கிட்டு வந்து கொடுத்துவிடு..” என்று சொல்ல சரியென்றான் அன்பரசன்.
முதல் நாள் வகுப்பிற்குள் நுழைந்த எழில்விழி திகைத்துத்தான் போனாள்.. மொத்தம் எண்பது மாணவ,மாணவிகள் இருப்பார்கள்.. வகுப்பின் உள்ளே நுழைந்த எழில்விழி மாணவிகளுடன் முதல் வரிசையில் அமர்ந்துக் கொள்ள, அவர்கள் பேச்சு சத்தம் அந்த வகுப்பறையே அதிர்ந்தது..
அடுத்த பெல் அடிக்கவும் எல்லோரும் சென்று இறைவணக்கம் செலுத்திவிட்டு அறைக்குள் வர எழில்விழி அருகில் அமர்ந்திருந்தவள், “நீ இந்த கிளாசிக்கு புதுசா..? உன்னோட பெயர் என்ன..?” என்றாள்
“என்னோட பெயர் எழில்விழி..” என்று அவள் புன்னகையுடன் சொல்ல, அவளைப் பார்த்து புன்னகை செய்தவள், “என்னோட பெயர் ஆஷா..” என்று தன்னையும் அறிமுகம் செய்துக் கொண்டாள்..
இப்படி இருவரும் பேசியபடியே தோழியாக எழில்விழிக்கு ஆஷாவை மிகவும் பிடித்து போனது.. அன்றிலிருந்து இருவரும் இணைபிரியாத தோழிகளாக மாறிப்போயினர். மதியம் சாப்பிட அழைத்தாள் எழில்விழி
“இன்னைக்கு உங்களின் வீட்டில் என்ன சாப்பாடு..?” என்று எழில்விழி கேட்டதும், “யாருக்கு தெரியும்..?” என்று ஆஷா சொல்ல,
“என்ன..?” என்று அதிர்ச்சியில் கேட்டாள்..
“இல்ல அம்மா சமையல் செய்யும் பொழுது நான் பள்ளிக்கூடம் கிளம்பிக் கொண்டிருந்தேன் அதுதான் கவனிக்கவில்லை..” என்று சொல்லி எழில்விழியை சமாளித்தாள் ஆஷா.
எழில்விழி டிப்பனைத் திறந்ததும் அதில் மணக்க மணக்க மீன் குழம்பு பார்த்தும் ஆஷாவிற்கு நாக்கில் எச்சில் ஊறியது.. அவள் அதை ஆஷாவிற்கு கொடுக்க, ஆஷா டிப்பனைத் திறந்தால் மணக்க மணக்க கத்திரிக்காய் புளிக்குழம்பு.
மணத்தை முகர்ந்தவள், “அம்மா சமையலுக்கு மணமே தனிதான்..” என்று சொல்லி அவளிற்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு சாப்பிட, அவர்கள் பேச்சு பழைய பள்ளியை நோக்கித் திரும்பியது.. இருவரும் தங்களுக்கு பிடித்தது எல்லாம் பகிர நேரம் சரியாக இருந்தது..
மதியம் சாப்பிட பிரதாப் அன்புவை அழைக்க, அன்புவோ அவனின் கையில் பணத்தைக் கொடுத்து, “வெஜிடபிள் பிரியாணி வாங்கிட்டு வாடா..” என்று கேண்டீனில் சாப்பாடு வாங்கிவரச் சொல்ல பிரதாப்பும் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்..
அவன் சென்றதும் தன்னுடைய டிப்பனைத் திறந்துப் பார்க்க அது எப்பொழுது காலியாகத்தான் இருந்தது..
அன்புவிற்கு சந்தேகம், ‘காலையில் என்னோட கண் முன்னே தான் அம்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு ஊற்றிக் கொடுக்க, நான் தான் அதை பள்ளிக்கு எடுத்து வந்தேன். இப்பொழுது அது எப்படி காணாமல் போனது..?’ என்று தனக்கு தானே கேட்டுகொண்டான்..
இது இன்று நடப்பது அல்ல தொடர்ந்து ஒரு மூன்று வருடமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்படி காலியாகிறது என்ற விந்தை மட்டும் இன்னும் அவனுக்கு தெரியவில்லை..
அவன் காலையில் வருகையில் அவனின் அம்மா அவனுக்கு சாப்பாடு அவனின் கண்முன்னேதான் போடுவார்கள். ஆனால் இங்கே மதியம் டிப்பனைத் திறந்தால் சாப்பாடு மட்டும் இருக்காது..
ஆனால் அவன் அதை வீட்டில் சொல்லவே இல்லை.. இந்த மூன்று வருடமும் அவனின் மதிய சாப்பாடு கேண்டீனில் தான்.. பிறகு பிரதாப் வந்ததும் அவனுடன் இணைத்து சாப்பிட்டவன், அடுத்த வகுப்பிற்கு சென்றான்..
அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் அவனின் அம்மா சுமித்ரா, “என்ன கண்ணா இன்னைக்கு சாப்பாடு எப்படி இருந்தது..?” என்று கேட்டுக் கொண்டே அவனின் பேக்கை வாங்க,
“நான் எங்கே சாப்பிட்டேன்.. அதுதான் மாயமாக மறைந்து போகிறதே..” என்று முணுமுணுப்பாகச் சொல்ல, “என்ன..?” என்று அவனின் அம்மா அதிர்வுடன் கேட்டதும்,
“இல்லம்மா நல்ல சாப்பிட்டேன்.. கத்திரிக்காய் புளிக்குழம்பு சூப்பர்..” என்று சொல்லிவிட்டு ப்ரஷ் ஆக அவனின் அறைக்கு சென்றான்..
அவன் ட்ரஸ் மாற்றி வருவதற்குள் அவனிக்கு பிடித்த கிழங்கை செய்து வைத்திருந்தார் அவனின் அம்மா சுமித்ரா.. அவன் அதை சாப்பிட்டுவிட்டு வெளியே அவனின் அறைக்கு படிக்க சென்றான்.. இரவு உணவை சமைக்க சுமித்ரா சமையல் அறைக்கு சென்றார்..
அப்பொழுது விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த அறிவுமதி, ““அம்மா அண்ணா எங்கே..?” என்று கேட்டவண்ணம் சமையல் அறைக்குள் நுழைந்தான்.
“நீ இப்பொழுது தான் வருகிறாயா..?” என்று கேட்டதும், “ம்ம் தங்கையைப் பாட்டியின் வீட்டில் விட்டுவிட்டு அப்படியே விளையாட சென்றவன், இப்பொழுதுதான் வருகிறேன்..” என்று அவருக்கு பதில் கூறியவன்,
“அண்ணா எங்கே என்று சொல்லுங்கள்..” என்று சொல்ல, “எதுக்குடா வந்தும் வராதுமாக அவனைத் தேடுகிறாய்..” என்று கேட்டதும்,
“அண்ணாவிடம் ஒருவிஷயம் கேட்க வேண்டும்..” என்று அவன் சொல்லவும், “எனக்கு தெரியாமல் அப்படி என்ன விஷயம்..?” என்று கேட்டார் சுமித்ரா
“அதுவா நீங்க போட்டுக்கொடுக்கும் சாப்பாடு தினம் காணாமல் போகிறது.. ஆனால் அண்ணா இந்த விஷயத்தை நீங்கள் வருத்தப்படுவீங்க என்று உங்களிடம் உண்மையைச் சொல்லாமல் இருக்கிறான்..” என்று சொல்லவும்,
தனது மகனின் பக்கம் திரும்பிய சுமித்ரா, “இது எப்பொழுதில் இருந்து நடக்கிறது..?” என்று கேட்டதும், “அது மூன்று வருடமாக நடக்கிறது..” என்று அவன் சாதரணாமாக சொல்ல பெற்றமனம் பதறியது..
“என்னடா மூன்று வருடமாக இவன் மதிய சாப்பாடே சாப்பிடாமல் இருக்கிறானா..?” என்று பதறிய வண்ணம் கேட்ட அன்னையைப் பார்த்த அறிவுமதி,
“பார்த்தீங்களா எப்படி பதறீங்க அதுதான் அண்ணா உங்களிடம் ஒன்னும் சொல்லாமல் இருக்கிறான்.. கவலை பாடாதீங்க அண்ணா மதியம் சாப்பிடுகிறான்.. அந்த குட்டிசாத்தான் யார் என்று தெரியட்டும் அப்புறம் இருக்கு..” என்று கருவியவன்,
“என்னோட செல்லம் இல்ல.. இதுக்கு இப்படி வருத்தப்படலாமா..?” என்று அன்னையின் தாடையைப் பிடித்து கொஞ்சியவன், சுமித்ரா முகம் மலரவே அவர்களைச் சமாதானம் செய்துவிட்டு,
“அண்ணா இப்பொழுது எங்கே இருக்கிறான்..?” என்று கேட்டதும், “உன்னோட அண்ணா படிக்க அவனது அறைக்கு சென்றுவிட்டான்..” என்று அவனுக்கு பதில் சொல்ல, “சரி நான் அண்ணாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று அண்ணனின் படிக்கும் அறைக்குள் சென்றான் அறிவுமதி
“அண்ணா..” என்று அழைத்துவிட்டு அறைக்குள் சென்றதும் அங்கே அன்பரசன் புத்தகத்துடன் அமர்ந்திருக்க, அவனின் அருகில் சென்று அமர்ந்த அறிவுமதி,
அவனின் அண்ணனிடம் அவன் கேட்ட கேள்வி, “அண்ணா இன்னைக்கும் உன்னோட டிப்பன் பாக்ஸ் காலியா..?” என்று கேலியாகக் கேட்டான்..
அவனின் கேள்வியில் எப்பொழுதும் போல தன்னைத்தானே நொந்துக்கொண்ட அன்பு, அவனின் பக்கம் திரும்பி, “இதுதான் நான் மூன்று வருடமாக சொல்கிறேனே..” என்று அவனும் சலிப்புடன் பதில் கொடுத்தான்..
“அண்ணா இதுக்கே சலித்துக் கொண்டால் எப்படி..?” என்று கேட்டான்..
“வேற என்ன பண்ணும் என்று சொல்கிறாய்..?” என்று கேட்டவன் அடுத்த பக்கத்தைப் புரட்ட, “அண்ணா அது யாரு அண்ணா உன்னோட டிப்பனை மட்டும் திருடித் திங்கும் பிராணி..” என்று சந்தேகம் கேட்டான்
அவனின் தலையில் கொட்டியவன், “அந்த வினோத மிருகத்தின் பெயர் தெரியலடா.. நாளைக்கு எனக்கு முக்கியமான டெஸ்ட் இருக்கு அதுக்கு படிக்கணும்.. அதனால் அந்த வினோத மிருகம் பற்றி அப்புறம் பேசுவோம்..” என்று சொல்ல,
“ஸாரி அண்ணா நீங்க படிங்க..” என்று எழுந்தவனின் கையைப்பிடித்து அமர வைத்தவன், “உனக்கு இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது..?” என்று கேட்டதும் கிளாசில் நடந்ததை அண்ணனிடம் சொல்ல ஆரமித்தான் தம்பி.
சிறிது நேரம் சென்ற பிறகு, “சரிங்க அண்ணா நீங்க படிங்க..” என்று எழுந்து சென்றவன், “அண்ணா..” என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையில் என்ன என்ற கேள்வி மறைந்து இருந்தது..
“இந்த பாட்டி தொல்லை தாங்கல அண்ணா.. நாளைக்கு வரும்பொழுது புக் ஷாப் வந்து இதில் இருக்கும் நாவல் சிலதை வாங்கிட்டு வந்து கொடுத்துவிடு..” என்று சொல்ல சரியென்றான் அன்பரசன்.