• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2௦

அவனின் முகத்தைப் பார்த்தவள், “என்ன அண்ணா நான் உனக்கு பார்த்த பொண்ணு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும், தனது அதிர்ந்த முகத்தை மாற்றிக் கொண்டவன்,

“இந்த பொண்ணு ரொம்ப நல்ல இருக்கிறாள்.. ஆனால் என்னோட மனதில் இருப்பதை உன்னிடம் முதலில் கூற எனக்கு விருப்பம் இல்லை இனியா.. என்னோட மனதில் இருப்பத்தை நான் சொல்ல வேண்டியவங்க கிட்ட முதலில் சொல்லிட்டு அப்புறம் உன்னோட இந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன்..” என்று இனியாவை தெளிவாகக் குழப்பிவிட்டு சென்றான் அன்பரசன்..

அவன் சென்றதும், “அண்ணன் எழிலைப் பிடித்திருக்கிறது என்று சொல்கிறானா..? இல்லை பிடிக்கவில்லை என்று சொல்கிறானா..? இல்ல இந்த எஸ்.ஜே.சூர்யா சொல்வாரே பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கல என்று சொல்கிறானா..?” என்று குழப்பத்தில் வாய்விட்டுப் புலம்பிவிட்டு தனது அறைக்கு சென்றாள்..

இவளுக்கு இரண்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த காத்திருந்தனர்.. இவளின் மீது பாசம் கொண்ட இவளின் குடும்பத்தினர்.. மறுநாள் காலை அழகாக விடிய தனக்கு விருப்பமே இல்லாத ஒருவன் முன்னிலையில் சென்று நிற்க போவதை நினைத்து எரிச்சலுடன் எழுந்து குளிக்க சென்றவள்

அடுத்த அரைமணிநேரத்தில் தயாராக அவர்கள் வீட்டின் போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சத்தமும், அவர்களை வரவேற்கும் சத்தமும் இனியாவின் காதில் விழுக அவளோ எந்த பதட்டமும் இல்லாமல் கண்ணாடி முன்னாடி அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் வந்த சுமித்ரா,

“என்னடா நீயே தயாராகி விட்டாய் போல..” என்று கேட்டவர் மகளின் முகத்தை கண்ணாடியில் பார்க்க அதில் அவனின் சிவந்த நிறத்திற்கு ஏற்றது போல மெரூன் கலர் பட்டு சேலையில் பச்சை நிறத்து கற்கள் பதிக்கப்பட்டிருந்த அந்த சேலையில் தேவதை போல இருந்த மகளை கண்ணிமைக்காமல் பார்த்தார் சுமித்ரா..

அவள் தலையில் நேரேடுத்து சீவி சிறிய கண்கள் இரண்டிற்கும் மையிட்டு அவளின் மூக்கை அழகான மூக்குத்தி பளிச்சென்று ஒளி வீச ஏற்கனவே சிவந்திருந்த உதடுகளும், கழுத்தில் அளவான நகையும், அவளின் தலையில் சூடி இருந்த மல்லிகை பூவும் அவள் நெற்றியை அலங்கரித்த வட்ட பொட்டுப் பார்த்து,

“என்னோட மகளோட போட்டி போட இன்னொரு பொண்ணு பிறந்து வரணும்.. என்னோட செல்லம்..” என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து, “வா நாம் கீழே போகலாம்..” என்று அவளின் அன்னை அழைக்க அவரிடம் மறுப்பு சொல்லாமல் எழுந்து சென்றாள் இனியா..

இத்தனை அழகு அவளுக்கு இருந்தும் அதை அலங்கரிக்கும் அழகிய புன்னகை மட்டும் அவளின் முகத்தில் இல்லை.. வந்தவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க வீட்டற்கு பெரியவரான ஜெயந்திம்மா நடுநாயகமாக அமர்ந்து சம்மந்தி வீட்டினருடன் பேசிக் கொண்டிருக்க தியாகு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்..

இனியாவிற்கு அண்ணன் என்ற முறையில் அவர்களை வரவேற்று அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த இளாவைப் பார்த்த அன்பரசன்,

“என்ன மாப்பிள்ளை இப்படி அமைதியாக இருக்கீங்க..?” என்று கேட்டதும் அவனைப் பார்த்து சங்கடத்துடன் புன்னகைத்தவன், “ஒண்ணுமில்லை..” என்று சொல்ல அன்பு அவனைப் பார்த்து சிரித்துவிட்டு சென்றான்..

இவர்கள் அனைவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்க இனியாவின் நினைவில் அமர்ந்திருந்தான் இளாமாறன். அவனின் மனம், ‘ஒரு ஆண் உனக்கே இப்படி இருக்கிறதே.. அவளுக்கு இந்த நிலை வந்தால் என்று நினைத்தது..’ அவன் நினைவுகளில் வந்து புன்னகை பூத்தாள் இனியா.. மற்றவர்களுடன் பேசிய படியே மகனைப் பார்த்த கற்பகம் – தர்மன் இருவரும் தங்களுக்குள் புன்னகைத்த வண்ணம் இருந்தனர்..

அவர்களைப் பார்த்த ஆதி அறிவிடம், “உங்க கொடுப்பதில் எல்லோரும் அதிர்ச்சி வைத்தியம் அதிகமாக கொடுப்பீங்களா..? மாப்பிள்ளை பாரு ஏண்டா இங்கே வந்தோம் என்ற நிலையில் அமர்ந்திருக்கிறார்..” என்று சொல்ல,

ஆதிக்கு உண்மை தெரியாது என்பதால், “அண்ணா அவர் காதலித்த பொண்ணு என்னோட தங்கை இனியா தான். இப்பொழுது அவர்கள் வீட்டில் இவங்களின் விஷயம் அறிந்து எங்க பாட்டியிடம் நேரடியாக பெண் கேட்டார்கள். இதில் ட்விஸ்ட்டு என்ன என்றால் என்னோட தங்கைக்கும் இவர்தான் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார் என்று தெரியாது.. இவர்க்கும் இனியா தான் பொண்ணு என்று தெரியாது..” என்று சிரித்துக் கொண்டே கூறினான்..

அவன் சொல்லி முடித்தும், “நல்லவேளை இந்த ஆஷா இங்கே இல்லை அவ மட்டும் இங்கே இருந்திருந்தால் கதை கந்தல் தான்.. அவளே சென்று மாப்பிள்ளையிடம் உண்மையைச் சொல்லியிருப்பாள்..” என்று ஆதி சிரிப்புடன் சொல்ல அப்பொழுதுதான் ஆஷா வராததை கவனித்த அறிவு,

“ஆமா ஆஷா எங்கே..?” என்று கேட்டான்.. அறிவைப் பார்த்த ஆதி, “அவள் அவளோட அப்பாவைப் பார்க்க வேலூர் போயிருக்க..” என்று சொல்லவும் இனியாவை அழைத்துக்கொண்டு கீழே வந்தார் சுமித்ரா.

அண்ணன்கள் இருவரும் தங்கையைப் பார்த்து சந்தோசப்பட, இளாவின் குடும்பத்தினர் அவளைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.. ஆனால் இதில் சம்மந்தப்பட்ட இளாவோ சோபாவில் கற்சிலைப் போல அமர்ந்திருக்க, இனியா செதிக்கி வைத்த சிற்பம் போல நின்றிருந்தாள்.

அவள் நிற்கும் தோற்றத்தைக் கண்ட ஜெயந்திம்மா, “எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு உட்காரு இனியா..” என்று சொல்ல, ‘இனியா..’ என்ற பெயரைக் கேட்டதும் வெடுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தான் இளமாறன். அவளோ அனைவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அமர்ந்தாள்.

அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவனின் கண்முன் அனைத்து அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் இனியா. அப்பொழுது அவனின் அருகில் வந்த அன்பரசன், “எங்க பெண்ணை உங்களுக்கு பிடித்திருக்கிறதா மாப்பிள்ளை..” என்று குறும்பாகக் கண்சிமிட்டிக் கேட்டான் அன்பரசன்..

அதுவரை இருந்த மனநிலை மாறி புன்னகைத்த இளமாறன், “எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..” என்று அவன் மலர்ந்த புன்னகையுடன் சொல்ல, ‘இவனுக்கு இது ஒன்று தான் குறைச்சல்..’ என்று உள்ளுக்குள் கறுவிய இனியாவின் கையில் காபியைக் கொடுத்து அனைவருக்கும் கொடுக்க சொன்னார் சுமித்ரா.

அவளைப் பெண்பார்க்க வந்திருப்பது இளாதான் என்று அறியாமல் கோபத்தில் எழுந்து அனைவருக்கும் காபியைக் கொடுக்க, அன்பு சென்று மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்த அறிவின் பக்கத்தில் அமர்ந்தான்.

அவள் வரிசையாக அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டே வர, “மாப்பிள்ளை அவர்தான் இனியா நல்ல பார்த்துக் கொள்..” என்று குறும்பாகப் புன்னகைத்தான் அறிவு..

அவள் அவனின் அருகில் வந்ததும், “எதுக்கு இப்படி மூஞ்சியை உர் என்று வைத்திருக்கிறாய்.. கொஞ்சம் சிரித்தால் என்ன முத்த உதிர்ந்து போகும்..” என்று கிண்டலாகக் கேட்டான் இளமாறன்.

அவன் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்துப் பார்க்க அவளைப்பார்த்துக் கண்ணடித்தான் இளமாறன். அவள் அவனை அங்கே எதிர்பார்க்கவே இல்லை.. அதுவும் அவளுக்கு பெண் பார்க்க வந்திருப்பவன் தான் காதலித்த இளா என்று அறியாமல் இதுவரை திட்டியவள், இப்பொழுது அவனைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சி அடைத்தாள்..

அவனைக் கண்டதும் அவளின் முகம் மலர அவன் கண்ணடித்தது பார்த்து அவனின் வெக்கத்தில் கன்னங்கள் இரண்டும் சிவக்க இதழை விரிக்காமலே அழகாக சிரித்தவள் அவனுக்கு காபிக் கொடுக்க அவனும் அவளின் வெக்கம் கண்டு மெல்ல சிரித்த வண்ணம் காபியை எடுத்துக் கொண்டான். அவன் காபியை எடுத்தும் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அவள் அவளின் இடத்திற்கு சென்று அமர்ந்ததும், அவனின் அருகில் அமர்ந்திருந்த கற்பகம், “என்னடா பொண்ணு பிடித்திருக்கிறதா..?” என்று சிரித்த வண்ணம் கேட்டதும், “இவளைப் பார்க்க வருகிறோம் என்று என்னிடம் சொல்லியிருந்தால் நான் கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் வந்திருப்பேன் இல்ல..” என்று கேட்டதும், “உன்னிடம் சொன்னால் இந்த ஷாக் உங்களுக்கு கிடைத்திருக்காது இல்லையா..?” என்று கேட்டான் ஆதி.

அவனைப் பார்த்து புன்னகைத்த இளா எதுவும் பேசாமல் இருக்க, “சம்மந்தி தட்டை மாற்றிக் கொள்ளலாம்..” என்று ஜெயந்திம்மா சொல்ல, அதுக்கும் அதிர்ச்சியுடன் அனைவரையும் பார்த்தனர் இனியாவும் பார்த்தனர்.

இருவரின் பார்வை கண்ட ஜெயந்திம்மா, “உங்கள் இருவர்க்கு மட்டும் கொஞ்சம் மாற்றி சொன்னோம்.. இன்னைக்கு உங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்!” என்று சொல்ல இருவருக்கும் சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறைதான்..!

அதன்பிறகு இருவர் வீட்டினரும் சேர்ந்து திருமண நாளைக் குறித்து தாம்பூலத்தட்டுகளை மாற்றிக் கொள்ள அங்கே சந்தோசம் நிரம்பி வழிந்தது. இருவரின் கையிலும் மோதிரத்தைக் கொடுத்து போட சொல்ல இளாவும், இனியாவும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிய வண்ணம் மோதிரத்தைப் போட்டனர்..

இனியாவின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிய இளாவின் வீட்டினர் கிளம்பிச் சென்ற பிறகு இனியா சந்தோசமாக தனது அறைக்கு செல்ல, அவளின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவளின் முகத்தைப் பார்த்து சந்தோசம் அடைந்தனர்..

ஆதியும், அன்புவும் கேஸ் விஷயமாக வெளியே செல்ல அறிவு தனது ஆபீசில் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றிருக்க தியாகு, சுமித்ரா, ஜெயந்திம்மா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“அம்மா பாவம் இனியா கொஞ்சம் பயந்துவிட்டாள்..” என்று அவர் சிரிப்புடன் சொல்ல, “எந்த ஒரு பொருளும் அது எதிர்பாராத நேரத்தில் மற்றவருக்கு கிடைத்தால் தான் அதற்கும் மதிப்பு, அதன் பாதுக்காக்கும் கடமையும் அவர்களுக்கு வரும்.. இல்லையென்றால் அந்த பொருளின் மதிப்பும் தெரியாது.. அதை பாதுக்காக்கும் வழியும் அவர்களுக்கு தெரியாது..” என்று ஜெயந்திம்மா புன்னகையுடன் கூறினார்..

சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த ஜெயந்திம்மா முகம் திடீரென்று வாடியதும் அவரின் முகத்தைக் கவனித்த சுமித்ரா, “அத்தை ஏன் திடீரென்று அமைதியாக ஆகிட்டிங்க..?” என்று கேட்டதும் மருமகளின் முகம் நோக்கியவர்,

“இன்னைக்கு இனியா நிச்சயதார்த்ததில் அனைவரும் இருந்தும்கூட எழில் இல்லை என்று ரொம்ப கவலையாக இருக்கிறது சுமித்ரா..” என்று ஜெயந்திம்மா சொல்ல,

“எனக்கும் இனியா நிச்சயதார்த்ததில் எழில் இல்லை என்று ரொம்பவே கவலையாக இருக்கிறது அத்தை.. ரொம்ப நல்ல பொண்ணு.. என்ன அமைதி என்ன அடக்கம்..” என்று சுமித்ரா அடுக்கிக் கொண்டே போனார்..

எழில் என்ற பெயரைக் கேட்டதும், ‘இவள் யாரை மனதில் நினைத்து சொல்கிறாள்.. அன்புவிடம் நாம் தினமும் பேசினாலும் கூட அவனிடம் எழில் என்ற பெயரை நான் சொன்னது கிடையாது.. பேரனுக்கு விருப்பம் இல்லாமல் எழிலைப் பற்றி தியாகு, சுமித்ரா இருவரிடமும் சொல்ல கூடாது என்று முடிவெடுத்து இருந்தேன்.. அப்படி இருக்க இந்த எழில் யார்..? இவள் யாரைப் பற்றி பேசுகிறாள்..?’ என்ற சந்தேகம் ஜெயந்திம்மாவின் மனதில் எழுந்தது.. அந்த சந்தேகம் மனதில் எழுந்ததும், “யாரும்மா இந்த எழில்..?” என்று கேட்டார் ஜெயந்திம்மா..!

அவரின் கேள்வியில் தனது அத்தையைப் பார்த்து புன்னகை பூத்த சுமித்ரா, “இரண்டு வாரத்திற்கு முன்னால் அன்பு ஒரு பெண்ணை அழைத்து வந்தான்.. அந்த பெண்ணின் பெயர்தான் எழில்.” என்று சொல்ல அவருக்கு சந்தேகம் அதிகமாகியது..

“தியாகு இவள் என்ன சொல்கிறாள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை..” என்று சொல்ல, “அம்மா அன்பு கேஸ் விஷயமாக பேசவந்த ஆஷாவின் தோழி எழில்விழி என்ற பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தான்.. அந்த பெண்ணைத்தான் சுமித்ரா சொல்கிறாள்..” என்று அவர் சந்தோசமாக கூறினார்..

‘ஆஷா..’ என்ற பெயரைக் கேட்டதும், ‘அப்பொழுது வந்து சென்றது எழில்விழியா..?’ என்ற சந்தேகம் மறுபடியும் அவரின் மனதில் எழுந்ததும் அவர் அமைதியாக இருக்க, தனது அன்னை அமைதியாக இருப்பதை கண்டு மனைவியிடம் வேறு விஷயமாகப் பேச ஆரமித்தார் தியாகு..

அந்த இடத்திற்கு சரியான நேரத்தில் வந்த இனியா பாட்டியின் அமைதி கண்டு, “பாட்டி என்ன பெரிய யோசனையில் இருப்பது போல இருக்கிறது..?” என்று கேட்டுக் கொண்ட சுமித்ரா அருகில் அமந்தாள்..

எப்பொழுதும் போல பார்வையைச் சுழற்றிய இனியாவின் கண்களில் பட்டது தோட்டத்தின் பராமரிப்பும், மாலை நேர தென்றலில் மிதந்து வந்த ஜாதி மல்லியின் மணமும்!

அந்த மனதில் மனம் மயங்கிய இனியா, “அம்மா தோட்டத்தைப் பராமரிக்க நேரமே இல்லை என்று சொல்லிட்டு இருந்தீங்க.. இப்பொழுது தோட்டத்தைப் பார்த்தால் அப்படி தெரியலையே..?!” என்று கேட்டாள்

அவள் சொன்னத்தைக் கேட்டு, “உன்னோட அம்மா தோட்டத்தைப் பராமரிக்கிறாளா..?” என்று சுமித்ராவைப் பார்த்து சிரித்த தந்தையைப் பார்த்து, “அம்மா பராமரிக்காமல் இந்த தோட்டத்தை இந்த அளவிற்கு சரி செய்தது யாரு..?” என்று கேட்டவள்,

தனது பாட்டியிடம், “எழில் இப்படி தான் தோட்டத்தை வைத்திருப்பாள்.. எப்பொழுது அவளின் வீட்டிற்கு சென்றாலும் தோட்டத்தில் உள்ள பூவின் வாசனை வீட்டை நிறைத்து ஒரு புத்துயிர் கொடுக்கும்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்..

அவள் எழில் பற்றி சொல்லியதும், ஜெயந்திம்மவிற்கு பொறி தட்டியது.. ‘எழிலும் கேஸ் விஷயமாக சென்னை வந்துவிட்டு வந்து இரண்டு வாரம் ஆகிறது.. நாம் தான் ஊரில் இல்லை.. அவளின் தோழியின் பெயரும் ஆஷா தான்..’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்..

அவள் சொல்வதை சரியாக கவனிக்காத சுமித்ரா, “இனியா எழுந்து சென்று பூவை பறித்து கட்டி தலையில் வை..” என்று கூறியதும், “சரிம்மா..” என்று எழுந்து சென்ற இனியாவை அழைத்தார் ஜெயந்திம்மா..

அவரின் மனதில் புதிய யோசனை ஒன்று தோன்றவே, “இனியா..” என்று அவர் அழைத்தும், “பாட்டி..” என்றவள் நின்று திரும்பிப் பார்க்க, “இனியா உன்னோட செல்லில் எழில் வீட்டில் எடுத்த போட்டோஸ் இருக்கும் இல்லைடா அதை கொஞ்சம் கொடு நான் பார்த்துவிட்டு தருகிறேன்..” என்று கூறியதும், பாட்டியிடம் மொபைலைக் கொடுத்துவிட்டு பூ பறிக்க சென்றாள் இனியா..

அவள் சென்றதும், “என்னம்மா இவளும் எழில் என்ற பெயரைச் சொல்கிறாள்..? அந்த பொண்ணு யார் இனியாவுடன் படிக்கும் பெண்ணா..?” என்று சாதாரணமாக கேட்டார் தியாகு..

அவரின் கேள்வியில் அப்பொழுதுதான் கவனித்த சுமித்ரா, ‘ஆமா அவளும் எழில் என்ற பெயரைச் சொல்கிறாள்..? என்று யோசனையுடன் தனது அத்தையைப் பார்த்தார் சுமித்ரா..

மகனின் கேள்வியும், மருமகளின் பார்வையையும், தன்னை துளைப்பதைக் கண்டு ஜெயந்திம்மா, “அன்பு அழைத்து வந்த எழில்விழியின் ஊர் திண்டுக்கல் ஆ..? அவளின் அண்ணன் பெயர் முத்துக்குமாரா..?” என்று கேட்டதும்,

“அத்தை எழில் அண்ணணின் பெயர் முத்துகுமார்.. ஆனால் அவளின் ஊர் பெயர் தெரியவில்லையே..” என்று சொல்ல, தனது கையில் இருந்த இனியாவின் போனில் இருந்த எழில் போட்டோவை எடுத்து,

“நீங்க சொல்லும் ஆஷா, எழில்விழி இவங்க இருவருமா..?” என்று இனியாவின் செல்லை இருவரின் கையிலும் கொடுத்தார்.. இருவரின் கையிலும் செல்லை கொடுத்துவிட்டு அவர்களை கவனிக்க ஆரமித்தார் ஜெயந்திம்மா..

முதலில் செல்லை வாங்கிப் பார்த்த சுமித்ராவின் முகம் சந்தோசத்தில் மலர, மனைவியின் முகம் கண்டு செல்லை வாங்கிப் பார்த்த தியாகுவின் முகமும் மலர்ந்தது..

“அம்மா இவள் தான் அம்மா நம்ம அன்பு அழைத்து வந்த எழில்.. இவள் ஆஷா அன்புவின் தோழி.. ஆனால் அன்பை விட மூன்று வருடம் சிறியவள்..” என்று மனதில் மகிழ்ச்சி பொங்க கூறினார்..

“இவள் தான் அத்தை நான் சொன்ன எழில்.. இவளை எப்படி உங்களுக்கு தெரியும்..?!” என்று சந்தோசமாகக் கூறிய சுமித்ரா தனது சந்தேகத்தையும் கேட்டார்..

“உங்கள் இருவரை விட எனக்கு எழிலை நன்றாகவே தெரியும்.. நான் வளர்ந்த பொண்ணு எழில்.. அவள் படாத கஷ்டமே இல்லை.. பதினைத்து வயதில் அம்மாவை இழந்து, பதினேழு வயதில் அப்பாவை இழந்து தனிமரமாக இருக்கிறாள்.. அவளுக்கு ஒரே ஆறுதல் நானும் இனியாவும் தான்..” என்று எழில்விழியின் மொத்த கதையையும் கூறினார்

அவர் சொன்னதைக் கேட்டு, “எங்களுக்கும் தெரியும் அம்மா.. எல்லா விஷயத்தையும் எங்களிடம் சொன்னாள்.. அன்புதான் அவளின் கேஸை எடுத்திருக்கிறான்..” என்று தியாகு சொல்ல நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார் ஜெயந்திம்மா..

தியாகுவும் சுமித்ராவும் ஜெயந்திம்மாவைப் பார்த்து சிரிக்க, “என்னடா சிரிப்பு..? எனக்குதான் தெரியும் என்னோட மனதின் அதிர்ச்சி..” என்றவர், “உங்கள் இருவருக்கும் எழிலைப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும், “எங்களுக்கு எழிலை ரொம்பவே பிடித்திருக்கிறது..” என்று இருவரும் இணைத்து ஒரே மாதிரி கூறினார்கள்..

“எழிலை நம்ம அன்புவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன்.. அதில் உங்கள் இருவருக்கும் சம்மதமா..? இல்ல நீங்க ஏதாவது புது முடிவு செய்து வைத்திருக்கிறீர்களா..?” என்று கேட்டார் ஜெயந்திம்மா..

“அன்புவிற்கு மிகவும் பொருத்தமான பொண்ணு எழில்தான் அம்மா..! எங்களுக்கும் அதே எண்ணம் தான்.. நாங்களே உங்களிடம் இது பற்றி பேசலாம் என்று இருந்தோம்..” என்று தியாகு கூறினார்..

“அவள் பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறாள்...” என்று ஜெயந்திம்மா இழுக்க, “அம்மா படிப்பு எல்லோருக்கும் இருக்கிறது.. ஆனால் குணம் தேடினாலும் கிடைக்காது அம்மா..” என்று தியாகு தனது மனதில் இருப்பதைத் தெளிவாகக் கூறினார்..

“அதெல்லாம் சரிடா அவளுக்கு தங்கை இருப்பதால் அவள் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறாள்.. நான் பலமுறை வற்புறுத்தியும் அவள் இன்னமும் திருமணத்திற்கு பிடி கொடுக்காமல் இருக்கிறாள்..” என்று கூறிய ஜெயந்திம்மாவின் குரலில் வருத்தம் நிறைந்து இருந்தது..

ஜெயந்திம்மா சொன்னதைக் கேட்ட சுமித்ரா, “இங்கே மட்டும் என்ன..? அவனும் அப்படியே தான் இருக்கிறான்.. திருமணம் என்றால் தொண்ணூறில் ஓடுகிறான்..” என்று சலிப்புடன் கூறினார் சுமித்ரா..

“இருவரும் ஒரே பாதையில் தான் பயணிக்கின்றனர்.. இவர்கள் இருவரையும் சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு..” என்று கூறிய ஜெயந்திம்மா,

“இந்த கேஸ் முடியும் வரையில் நீங்கள் இருவரும் இது பற்றி பேச கூடாது.. இந்த கேஸ் முடிவில் இருவர் மனநிலையும் தெளிவாக வெளிப்படும்.. அதுவரை பொறுமையாக காத்திருப்போம்.. ஆஷாவிடம் நான் தான் அன்புவின் பாட்டி என்று சொல்லாதீங்க..” என்று இருவரையும் எச்சரித்துவிட்டு எழுந்து வீட்டிற்குள் சென்றார் ஜெயந்திம்மா..

அவர் செல்லும் வரையில் அவரையே பார்த்துக் கொண்டிருந்த தியாகு சுமித்ராவின் பக்கம் திரும்பி, “அம்மா சொல்வதும் சரிதான்.. முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும்.. அடுத்து என்ன செய்யணுமோ அதை நாம் செய்வோம்..” என்று கூறிய கணவனின் முகத்தைப் பார்த்து சரியென்றார்..

அன்புவையும், எழிலையும் இணைக்க அனைவரும் தயார்.. அவர்கள் திருமண பேச்சு கூட எடுத்துடாங்க.. ஆனால் அவர்கள் இருவரும் அமைதியாகவே இருக்கின்றனர்.. அடுத்து என்ன நடக்கும்..?!
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அண்ணாவை வைச்சு ஏதாவது டிவிஸ்ட்டா முடியலப்பா சாமி இந்த எழில் அன்பு ஒருபக்கம் சொல்லுவானான்னு அடம்பிடிக்க நிங்க வேற கடைசில டிவிஸ்ட் வைக்கிறிங்க
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அண்ணாவை வைச்சு ஏதாவது டிவிஸ்ட்டா முடியலப்பா சாமி இந்த எழில் அன்பு ஒருபக்கம் சொல்லுவானான்னு அடம்பிடிக்க நிங்க வேற கடைசில டிவிஸ்ட் வைக்கிறிங்க
கண்டிப்பாக அண்ணனை வைத்து டிவிஸ்ட் இல்ல சிஸ்டர்.. இருவரில் யார் முதலில் காதலை வெளிபடுத்த இருக்கின்றனர் என்று தெரியவில்லை..
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
கண்டிப்பாக அண்ணனை வைத்து டிவிஸ்ட் இல்ல சிஸ்டர்.. இருவரில் யார் முதலில் காதலை வெளிபடுத்த இருக்கின்றனர் என்று தெரியவில்லை..
கண்டிப்பா ரெண்டும் தானாக சொல்லாதுக நீங்க தான் சொல்ல வைக்கனும்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கண்டிப்பா ரெண்டும் தானாக சொல்லாதுக நீங்க தான் சொல்ல வைக்கனும்
ஒரு பிரச்சனையும் இல்ல சொல்லுங்க என்றால் சொல்ல போறாங்க.. ;););)
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஒரு பிரச்சனையும் இல்ல சொல்லுங்க என்றால் சொல்ல போறாங்க.. ;););)
கொஞ்சம் பொறுமை எழில் காதலை சொல்லும் அந்த தருணம் அன்பு சொல்லும் தருணம் அட்டகாசமாக இருக்கனும் சிஸ்டர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top