அத்தியாயம் – 2௦
அவனின் முகத்தைப் பார்த்தவள், “என்ன அண்ணா நான் உனக்கு பார்த்த பொண்ணு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும், தனது அதிர்ந்த முகத்தை மாற்றிக் கொண்டவன்,
“இந்த பொண்ணு ரொம்ப நல்ல இருக்கிறாள்.. ஆனால் என்னோட மனதில் இருப்பதை உன்னிடம் முதலில் கூற எனக்கு விருப்பம் இல்லை இனியா.. என்னோட மனதில் இருப்பத்தை நான் சொல்ல வேண்டியவங்க கிட்ட முதலில் சொல்லிட்டு அப்புறம் உன்னோட இந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன்..” என்று இனியாவை தெளிவாகக் குழப்பிவிட்டு சென்றான் அன்பரசன்..
அவன் சென்றதும், “அண்ணன் எழிலைப் பிடித்திருக்கிறது என்று சொல்கிறானா..? இல்லை பிடிக்கவில்லை என்று சொல்கிறானா..? இல்ல இந்த எஸ்.ஜே.சூர்யா சொல்வாரே பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கல என்று சொல்கிறானா..?” என்று குழப்பத்தில் வாய்விட்டுப் புலம்பிவிட்டு தனது அறைக்கு சென்றாள்..
இவளுக்கு இரண்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த காத்திருந்தனர்.. இவளின் மீது பாசம் கொண்ட இவளின் குடும்பத்தினர்.. மறுநாள் காலை அழகாக விடிய தனக்கு விருப்பமே இல்லாத ஒருவன் முன்னிலையில் சென்று நிற்க போவதை நினைத்து எரிச்சலுடன் எழுந்து குளிக்க சென்றவள்
அடுத்த அரைமணிநேரத்தில் தயாராக அவர்கள் வீட்டின் போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சத்தமும், அவர்களை வரவேற்கும் சத்தமும் இனியாவின் காதில் விழுக அவளோ எந்த பதட்டமும் இல்லாமல் கண்ணாடி முன்னாடி அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் வந்த சுமித்ரா,
“என்னடா நீயே தயாராகி விட்டாய் போல..” என்று கேட்டவர் மகளின் முகத்தை கண்ணாடியில் பார்க்க அதில் அவனின் சிவந்த நிறத்திற்கு ஏற்றது போல மெரூன் கலர் பட்டு சேலையில் பச்சை நிறத்து கற்கள் பதிக்கப்பட்டிருந்த அந்த சேலையில் தேவதை போல இருந்த மகளை கண்ணிமைக்காமல் பார்த்தார் சுமித்ரா..
அவள் தலையில் நேரேடுத்து சீவி சிறிய கண்கள் இரண்டிற்கும் மையிட்டு அவளின் மூக்கை அழகான மூக்குத்தி பளிச்சென்று ஒளி வீச ஏற்கனவே சிவந்திருந்த உதடுகளும், கழுத்தில் அளவான நகையும், அவளின் தலையில் சூடி இருந்த மல்லிகை பூவும் அவள் நெற்றியை அலங்கரித்த வட்ட பொட்டுப் பார்த்து,
“என்னோட மகளோட போட்டி போட இன்னொரு பொண்ணு பிறந்து வரணும்.. என்னோட செல்லம்..” என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து, “வா நாம் கீழே போகலாம்..” என்று அவளின் அன்னை அழைக்க அவரிடம் மறுப்பு சொல்லாமல் எழுந்து சென்றாள் இனியா..
இத்தனை அழகு அவளுக்கு இருந்தும் அதை அலங்கரிக்கும் அழகிய புன்னகை மட்டும் அவளின் முகத்தில் இல்லை.. வந்தவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க வீட்டற்கு பெரியவரான ஜெயந்திம்மா நடுநாயகமாக அமர்ந்து சம்மந்தி வீட்டினருடன் பேசிக் கொண்டிருக்க தியாகு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்..
இனியாவிற்கு அண்ணன் என்ற முறையில் அவர்களை வரவேற்று அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த இளாவைப் பார்த்த அன்பரசன்,
“என்ன மாப்பிள்ளை இப்படி அமைதியாக இருக்கீங்க..?” என்று கேட்டதும் அவனைப் பார்த்து சங்கடத்துடன் புன்னகைத்தவன், “ஒண்ணுமில்லை..” என்று சொல்ல அன்பு அவனைப் பார்த்து சிரித்துவிட்டு சென்றான்..
இவர்கள் அனைவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்க இனியாவின் நினைவில் அமர்ந்திருந்தான் இளாமாறன். அவனின் மனம், ‘ஒரு ஆண் உனக்கே இப்படி இருக்கிறதே.. அவளுக்கு இந்த நிலை வந்தால் என்று நினைத்தது..’ அவன் நினைவுகளில் வந்து புன்னகை பூத்தாள் இனியா.. மற்றவர்களுடன் பேசிய படியே மகனைப் பார்த்த கற்பகம் – தர்மன் இருவரும் தங்களுக்குள் புன்னகைத்த வண்ணம் இருந்தனர்..
அவர்களைப் பார்த்த ஆதி அறிவிடம், “உங்க கொடுப்பதில் எல்லோரும் அதிர்ச்சி வைத்தியம் அதிகமாக கொடுப்பீங்களா..? மாப்பிள்ளை பாரு ஏண்டா இங்கே வந்தோம் என்ற நிலையில் அமர்ந்திருக்கிறார்..” என்று சொல்ல,
ஆதிக்கு உண்மை தெரியாது என்பதால், “அண்ணா அவர் காதலித்த பொண்ணு என்னோட தங்கை இனியா தான். இப்பொழுது அவர்கள் வீட்டில் இவங்களின் விஷயம் அறிந்து எங்க பாட்டியிடம் நேரடியாக பெண் கேட்டார்கள். இதில் ட்விஸ்ட்டு என்ன என்றால் என்னோட தங்கைக்கும் இவர்தான் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார் என்று தெரியாது.. இவர்க்கும் இனியா தான் பொண்ணு என்று தெரியாது..” என்று சிரித்துக் கொண்டே கூறினான்..
அவன் சொல்லி முடித்தும், “நல்லவேளை இந்த ஆஷா இங்கே இல்லை அவ மட்டும் இங்கே இருந்திருந்தால் கதை கந்தல் தான்.. அவளே சென்று மாப்பிள்ளையிடம் உண்மையைச் சொல்லியிருப்பாள்..” என்று ஆதி சிரிப்புடன் சொல்ல அப்பொழுதுதான் ஆஷா வராததை கவனித்த அறிவு,
“ஆமா ஆஷா எங்கே..?” என்று கேட்டான்.. அறிவைப் பார்த்த ஆதி, “அவள் அவளோட அப்பாவைப் பார்க்க வேலூர் போயிருக்க..” என்று சொல்லவும் இனியாவை அழைத்துக்கொண்டு கீழே வந்தார் சுமித்ரா.
அண்ணன்கள் இருவரும் தங்கையைப் பார்த்து சந்தோசப்பட, இளாவின் குடும்பத்தினர் அவளைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.. ஆனால் இதில் சம்மந்தப்பட்ட இளாவோ சோபாவில் கற்சிலைப் போல அமர்ந்திருக்க, இனியா செதிக்கி வைத்த சிற்பம் போல நின்றிருந்தாள்.
அவள் நிற்கும் தோற்றத்தைக் கண்ட ஜெயந்திம்மா, “எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு உட்காரு இனியா..” என்று சொல்ல, ‘இனியா..’ என்ற பெயரைக் கேட்டதும் வெடுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தான் இளமாறன். அவளோ அனைவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அமர்ந்தாள்.
அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவனின் கண்முன் அனைத்து அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் இனியா. அப்பொழுது அவனின் அருகில் வந்த அன்பரசன், “எங்க பெண்ணை உங்களுக்கு பிடித்திருக்கிறதா மாப்பிள்ளை..” என்று குறும்பாகக் கண்சிமிட்டிக் கேட்டான் அன்பரசன்..
அதுவரை இருந்த மனநிலை மாறி புன்னகைத்த இளமாறன், “எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..” என்று அவன் மலர்ந்த புன்னகையுடன் சொல்ல, ‘இவனுக்கு இது ஒன்று தான் குறைச்சல்..’ என்று உள்ளுக்குள் கறுவிய இனியாவின் கையில் காபியைக் கொடுத்து அனைவருக்கும் கொடுக்க சொன்னார் சுமித்ரா.
அவளைப் பெண்பார்க்க வந்திருப்பது இளாதான் என்று அறியாமல் கோபத்தில் எழுந்து அனைவருக்கும் காபியைக் கொடுக்க, அன்பு சென்று மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்த அறிவின் பக்கத்தில் அமர்ந்தான்.
அவள் வரிசையாக அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டே வர, “மாப்பிள்ளை அவர்தான் இனியா நல்ல பார்த்துக் கொள்..” என்று குறும்பாகப் புன்னகைத்தான் அறிவு..
அவள் அவனின் அருகில் வந்ததும், “எதுக்கு இப்படி மூஞ்சியை உர் என்று வைத்திருக்கிறாய்.. கொஞ்சம் சிரித்தால் என்ன முத்த உதிர்ந்து போகும்..” என்று கிண்டலாகக் கேட்டான் இளமாறன்.
அவன் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்துப் பார்க்க அவளைப்பார்த்துக் கண்ணடித்தான் இளமாறன். அவள் அவனை அங்கே எதிர்பார்க்கவே இல்லை.. அதுவும் அவளுக்கு பெண் பார்க்க வந்திருப்பவன் தான் காதலித்த இளா என்று அறியாமல் இதுவரை திட்டியவள், இப்பொழுது அவனைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சி அடைத்தாள்..
அவனைக் கண்டதும் அவளின் முகம் மலர அவன் கண்ணடித்தது பார்த்து அவனின் வெக்கத்தில் கன்னங்கள் இரண்டும் சிவக்க இதழை விரிக்காமலே அழகாக சிரித்தவள் அவனுக்கு காபிக் கொடுக்க அவனும் அவளின் வெக்கம் கண்டு மெல்ல சிரித்த வண்ணம் காபியை எடுத்துக் கொண்டான். அவன் காபியை எடுத்தும் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
அவள் அவளின் இடத்திற்கு சென்று அமர்ந்ததும், அவனின் அருகில் அமர்ந்திருந்த கற்பகம், “என்னடா பொண்ணு பிடித்திருக்கிறதா..?” என்று சிரித்த வண்ணம் கேட்டதும், “இவளைப் பார்க்க வருகிறோம் என்று என்னிடம் சொல்லியிருந்தால் நான் கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் வந்திருப்பேன் இல்ல..” என்று கேட்டதும், “உன்னிடம் சொன்னால் இந்த ஷாக் உங்களுக்கு கிடைத்திருக்காது இல்லையா..?” என்று கேட்டான் ஆதி.
அவனைப் பார்த்து புன்னகைத்த இளா எதுவும் பேசாமல் இருக்க, “சம்மந்தி தட்டை மாற்றிக் கொள்ளலாம்..” என்று ஜெயந்திம்மா சொல்ல, அதுக்கும் அதிர்ச்சியுடன் அனைவரையும் பார்த்தனர் இனியாவும் பார்த்தனர்.
இருவரின் பார்வை கண்ட ஜெயந்திம்மா, “உங்கள் இருவர்க்கு மட்டும் கொஞ்சம் மாற்றி சொன்னோம்.. இன்னைக்கு உங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்!” என்று சொல்ல இருவருக்கும் சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறைதான்..!
அதன்பிறகு இருவர் வீட்டினரும் சேர்ந்து திருமண நாளைக் குறித்து தாம்பூலத்தட்டுகளை மாற்றிக் கொள்ள அங்கே சந்தோசம் நிரம்பி வழிந்தது. இருவரின் கையிலும் மோதிரத்தைக் கொடுத்து போட சொல்ல இளாவும், இனியாவும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிய வண்ணம் மோதிரத்தைப் போட்டனர்..
இனியாவின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிய இளாவின் வீட்டினர் கிளம்பிச் சென்ற பிறகு இனியா சந்தோசமாக தனது அறைக்கு செல்ல, அவளின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவளின் முகத்தைப் பார்த்து சந்தோசம் அடைந்தனர்..
ஆதியும், அன்புவும் கேஸ் விஷயமாக வெளியே செல்ல அறிவு தனது ஆபீசில் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றிருக்க தியாகு, சுமித்ரா, ஜெயந்திம்மா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
அவனின் முகத்தைப் பார்த்தவள், “என்ன அண்ணா நான் உனக்கு பார்த்த பொண்ணு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும், தனது அதிர்ந்த முகத்தை மாற்றிக் கொண்டவன்,
“இந்த பொண்ணு ரொம்ப நல்ல இருக்கிறாள்.. ஆனால் என்னோட மனதில் இருப்பதை உன்னிடம் முதலில் கூற எனக்கு விருப்பம் இல்லை இனியா.. என்னோட மனதில் இருப்பத்தை நான் சொல்ல வேண்டியவங்க கிட்ட முதலில் சொல்லிட்டு அப்புறம் உன்னோட இந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன்..” என்று இனியாவை தெளிவாகக் குழப்பிவிட்டு சென்றான் அன்பரசன்..
அவன் சென்றதும், “அண்ணன் எழிலைப் பிடித்திருக்கிறது என்று சொல்கிறானா..? இல்லை பிடிக்கவில்லை என்று சொல்கிறானா..? இல்ல இந்த எஸ்.ஜே.சூர்யா சொல்வாரே பிடிச்சிருக்கு ஆனால் பிடிக்கல என்று சொல்கிறானா..?” என்று குழப்பத்தில் வாய்விட்டுப் புலம்பிவிட்டு தனது அறைக்கு சென்றாள்..
இவளுக்கு இரண்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த காத்திருந்தனர்.. இவளின் மீது பாசம் கொண்ட இவளின் குடும்பத்தினர்.. மறுநாள் காலை அழகாக விடிய தனக்கு விருப்பமே இல்லாத ஒருவன் முன்னிலையில் சென்று நிற்க போவதை நினைத்து எரிச்சலுடன் எழுந்து குளிக்க சென்றவள்
அடுத்த அரைமணிநேரத்தில் தயாராக அவர்கள் வீட்டின் போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சத்தமும், அவர்களை வரவேற்கும் சத்தமும் இனியாவின் காதில் விழுக அவளோ எந்த பதட்டமும் இல்லாமல் கண்ணாடி முன்னாடி அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் வந்த சுமித்ரா,
“என்னடா நீயே தயாராகி விட்டாய் போல..” என்று கேட்டவர் மகளின் முகத்தை கண்ணாடியில் பார்க்க அதில் அவனின் சிவந்த நிறத்திற்கு ஏற்றது போல மெரூன் கலர் பட்டு சேலையில் பச்சை நிறத்து கற்கள் பதிக்கப்பட்டிருந்த அந்த சேலையில் தேவதை போல இருந்த மகளை கண்ணிமைக்காமல் பார்த்தார் சுமித்ரா..
அவள் தலையில் நேரேடுத்து சீவி சிறிய கண்கள் இரண்டிற்கும் மையிட்டு அவளின் மூக்கை அழகான மூக்குத்தி பளிச்சென்று ஒளி வீச ஏற்கனவே சிவந்திருந்த உதடுகளும், கழுத்தில் அளவான நகையும், அவளின் தலையில் சூடி இருந்த மல்லிகை பூவும் அவள் நெற்றியை அலங்கரித்த வட்ட பொட்டுப் பார்த்து,
“என்னோட மகளோட போட்டி போட இன்னொரு பொண்ணு பிறந்து வரணும்.. என்னோட செல்லம்..” என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து, “வா நாம் கீழே போகலாம்..” என்று அவளின் அன்னை அழைக்க அவரிடம் மறுப்பு சொல்லாமல் எழுந்து சென்றாள் இனியா..
இத்தனை அழகு அவளுக்கு இருந்தும் அதை அலங்கரிக்கும் அழகிய புன்னகை மட்டும் அவளின் முகத்தில் இல்லை.. வந்தவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க வீட்டற்கு பெரியவரான ஜெயந்திம்மா நடுநாயகமாக அமர்ந்து சம்மந்தி வீட்டினருடன் பேசிக் கொண்டிருக்க தியாகு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்..
இனியாவிற்கு அண்ணன் என்ற முறையில் அவர்களை வரவேற்று அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்த இளாவைப் பார்த்த அன்பரசன்,
“என்ன மாப்பிள்ளை இப்படி அமைதியாக இருக்கீங்க..?” என்று கேட்டதும் அவனைப் பார்த்து சங்கடத்துடன் புன்னகைத்தவன், “ஒண்ணுமில்லை..” என்று சொல்ல அன்பு அவனைப் பார்த்து சிரித்துவிட்டு சென்றான்..
இவர்கள் அனைவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்க இனியாவின் நினைவில் அமர்ந்திருந்தான் இளாமாறன். அவனின் மனம், ‘ஒரு ஆண் உனக்கே இப்படி இருக்கிறதே.. அவளுக்கு இந்த நிலை வந்தால் என்று நினைத்தது..’ அவன் நினைவுகளில் வந்து புன்னகை பூத்தாள் இனியா.. மற்றவர்களுடன் பேசிய படியே மகனைப் பார்த்த கற்பகம் – தர்மன் இருவரும் தங்களுக்குள் புன்னகைத்த வண்ணம் இருந்தனர்..
அவர்களைப் பார்த்த ஆதி அறிவிடம், “உங்க கொடுப்பதில் எல்லோரும் அதிர்ச்சி வைத்தியம் அதிகமாக கொடுப்பீங்களா..? மாப்பிள்ளை பாரு ஏண்டா இங்கே வந்தோம் என்ற நிலையில் அமர்ந்திருக்கிறார்..” என்று சொல்ல,
ஆதிக்கு உண்மை தெரியாது என்பதால், “அண்ணா அவர் காதலித்த பொண்ணு என்னோட தங்கை இனியா தான். இப்பொழுது அவர்கள் வீட்டில் இவங்களின் விஷயம் அறிந்து எங்க பாட்டியிடம் நேரடியாக பெண் கேட்டார்கள். இதில் ட்விஸ்ட்டு என்ன என்றால் என்னோட தங்கைக்கும் இவர்தான் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார் என்று தெரியாது.. இவர்க்கும் இனியா தான் பொண்ணு என்று தெரியாது..” என்று சிரித்துக் கொண்டே கூறினான்..
அவன் சொல்லி முடித்தும், “நல்லவேளை இந்த ஆஷா இங்கே இல்லை அவ மட்டும் இங்கே இருந்திருந்தால் கதை கந்தல் தான்.. அவளே சென்று மாப்பிள்ளையிடம் உண்மையைச் சொல்லியிருப்பாள்..” என்று ஆதி சிரிப்புடன் சொல்ல அப்பொழுதுதான் ஆஷா வராததை கவனித்த அறிவு,
“ஆமா ஆஷா எங்கே..?” என்று கேட்டான்.. அறிவைப் பார்த்த ஆதி, “அவள் அவளோட அப்பாவைப் பார்க்க வேலூர் போயிருக்க..” என்று சொல்லவும் இனியாவை அழைத்துக்கொண்டு கீழே வந்தார் சுமித்ரா.
அண்ணன்கள் இருவரும் தங்கையைப் பார்த்து சந்தோசப்பட, இளாவின் குடும்பத்தினர் அவளைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்.. ஆனால் இதில் சம்மந்தப்பட்ட இளாவோ சோபாவில் கற்சிலைப் போல அமர்ந்திருக்க, இனியா செதிக்கி வைத்த சிற்பம் போல நின்றிருந்தாள்.
அவள் நிற்கும் தோற்றத்தைக் கண்ட ஜெயந்திம்மா, “எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு உட்காரு இனியா..” என்று சொல்ல, ‘இனியா..’ என்ற பெயரைக் கேட்டதும் வெடுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தான் இளமாறன். அவளோ அனைவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அமர்ந்தாள்.
அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவனின் கண்முன் அனைத்து அலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் இனியா. அப்பொழுது அவனின் அருகில் வந்த அன்பரசன், “எங்க பெண்ணை உங்களுக்கு பிடித்திருக்கிறதா மாப்பிள்ளை..” என்று குறும்பாகக் கண்சிமிட்டிக் கேட்டான் அன்பரசன்..
அதுவரை இருந்த மனநிலை மாறி புன்னகைத்த இளமாறன், “எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..” என்று அவன் மலர்ந்த புன்னகையுடன் சொல்ல, ‘இவனுக்கு இது ஒன்று தான் குறைச்சல்..’ என்று உள்ளுக்குள் கறுவிய இனியாவின் கையில் காபியைக் கொடுத்து அனைவருக்கும் கொடுக்க சொன்னார் சுமித்ரா.
அவளைப் பெண்பார்க்க வந்திருப்பது இளாதான் என்று அறியாமல் கோபத்தில் எழுந்து அனைவருக்கும் காபியைக் கொடுக்க, அன்பு சென்று மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்த அறிவின் பக்கத்தில் அமர்ந்தான்.
அவள் வரிசையாக அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டே வர, “மாப்பிள்ளை அவர்தான் இனியா நல்ல பார்த்துக் கொள்..” என்று குறும்பாகப் புன்னகைத்தான் அறிவு..
அவள் அவனின் அருகில் வந்ததும், “எதுக்கு இப்படி மூஞ்சியை உர் என்று வைத்திருக்கிறாய்.. கொஞ்சம் சிரித்தால் என்ன முத்த உதிர்ந்து போகும்..” என்று கிண்டலாகக் கேட்டான் இளமாறன்.
அவன் குரலைக் கேட்டதும் அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்துப் பார்க்க அவளைப்பார்த்துக் கண்ணடித்தான் இளமாறன். அவள் அவனை அங்கே எதிர்பார்க்கவே இல்லை.. அதுவும் அவளுக்கு பெண் பார்க்க வந்திருப்பவன் தான் காதலித்த இளா என்று அறியாமல் இதுவரை திட்டியவள், இப்பொழுது அவனைக் கண்டு கொஞ்சம் அதிர்ச்சி அடைத்தாள்..
அவனைக் கண்டதும் அவளின் முகம் மலர அவன் கண்ணடித்தது பார்த்து அவனின் வெக்கத்தில் கன்னங்கள் இரண்டும் சிவக்க இதழை விரிக்காமலே அழகாக சிரித்தவள் அவனுக்கு காபிக் கொடுக்க அவனும் அவளின் வெக்கம் கண்டு மெல்ல சிரித்த வண்ணம் காபியை எடுத்துக் கொண்டான். அவன் காபியை எடுத்தும் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
அவள் அவளின் இடத்திற்கு சென்று அமர்ந்ததும், அவனின் அருகில் அமர்ந்திருந்த கற்பகம், “என்னடா பொண்ணு பிடித்திருக்கிறதா..?” என்று சிரித்த வண்ணம் கேட்டதும், “இவளைப் பார்க்க வருகிறோம் என்று என்னிடம் சொல்லியிருந்தால் நான் கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் வந்திருப்பேன் இல்ல..” என்று கேட்டதும், “உன்னிடம் சொன்னால் இந்த ஷாக் உங்களுக்கு கிடைத்திருக்காது இல்லையா..?” என்று கேட்டான் ஆதி.
அவனைப் பார்த்து புன்னகைத்த இளா எதுவும் பேசாமல் இருக்க, “சம்மந்தி தட்டை மாற்றிக் கொள்ளலாம்..” என்று ஜெயந்திம்மா சொல்ல, அதுக்கும் அதிர்ச்சியுடன் அனைவரையும் பார்த்தனர் இனியாவும் பார்த்தனர்.
இருவரின் பார்வை கண்ட ஜெயந்திம்மா, “உங்கள் இருவர்க்கு மட்டும் கொஞ்சம் மாற்றி சொன்னோம்.. இன்னைக்கு உங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம்!” என்று சொல்ல இருவருக்கும் சந்தோசத்தில் துள்ளி குதிக்காத குறைதான்..!
அதன்பிறகு இருவர் வீட்டினரும் சேர்ந்து திருமண நாளைக் குறித்து தாம்பூலத்தட்டுகளை மாற்றிக் கொள்ள அங்கே சந்தோசம் நிரம்பி வழிந்தது. இருவரின் கையிலும் மோதிரத்தைக் கொடுத்து போட சொல்ல இளாவும், இனியாவும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிய வண்ணம் மோதிரத்தைப் போட்டனர்..
இனியாவின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிய இளாவின் வீட்டினர் கிளம்பிச் சென்ற பிறகு இனியா சந்தோசமாக தனது அறைக்கு செல்ல, அவளின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவளின் முகத்தைப் பார்த்து சந்தோசம் அடைந்தனர்..
ஆதியும், அன்புவும் கேஸ் விஷயமாக வெளியே செல்ல அறிவு தனது ஆபீசில் ஒரு முக்கிய வேலையாக வெளியே சென்றிருக்க தியாகு, சுமித்ரா, ஜெயந்திம்மா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..