அத்தியாயம் – 21
இளா – இனியா இருவரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தாலும் அவர்களின் திருமணம் அயலூரில் தான் என்று பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது.. இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு துணியெடுக்க செல்ல, அன்பு மட்டும் வர மறுத்துவிட்டான்..
“அம்மா நீங்க எல்லோரும் போய் எடுத்துட்டு வாங்க.. எனக்கு ஒரு கேஸ் விஷயமா கோயம்புத்தூர் வரை போகணும் அம்மா அதனால் நீங்க எல்லோரும் போய் கல்யாணத்திற்கு ஜவுளி எடுத்துட்டு வாங்க..” என்று சொல்லிவிட அவர்களும் அவனை தொந்தரவு செய்யாமல் கிளம்பிச் சென்றனர்..
அவர்களிடம் சொன்னது போலவே அடுத்த ஒரு மணி இரண்டு மணி நேரத்தில் கோயம்பத்தூர் வந்தவன் அந்த கிளைண்ட் இடம் பேசிவிட்டு அவன் வெளியே வரும் பொழுது மதியம் மணி ஒன்று.
அவன் அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைக்கும் பொழுது, ‘எழில் கேஸை ஃபைல் பண்ண வேண்டிய முக்கியமான ஆதாரங்கள் எல்லாம் அவளிடம் இருக்கிறது..’ என்று தோன்றவே ஒரு நிமிடம் நின்று யோசித்தவன் அடுத்த நொடியே ஒரு நல்ல முடிவையும் எடுத்தான்..
‘எழிலைப் பார்த்துவிட்டு செல்வது தான் சரி..’ என்று அவனின் மனம் அவனிடம் கூற அடுத்த நொடியே அயலூர் நோக்கி புறப்பட, அந்த கிளைண்ட் தனது காரைக் கொடுத்து, “நீங்க போக வேண்டிய இடத்திருக்கு போயிட்டு வந்து எனக்கு இந்த காரைக் கொடுங்கள்..” என்று சொல்ல அவரின் காரில் அயலூர் நோக்கி சென்றான் அன்பரசன்..
உடனே காரை எடுத்தவன், ‘திடீரென்று அவளின் முன்னாடி போய் நின்றால் அவளின் முகம் எப்படி மாறும்..’ என்று மனதில் நினைத்தவன் அவளின் முகத்தை கற்பனை செய்து பார்க்க அவனையும் மீறி அவனின் இதழ்கள் விரிந்து புன்னகையாக மலர்ந்தது..
‘அவளை காண செல்கிறோம்..’ என்று மனதில் நினைக்கும் பொழுதே அவனின் மனம் துள்ளிக்குதித்தது.. அந்த அளவிற்கு அவளைப் பார்க்க நினைத்து அவனின் காதல் கொண்ட மனது..!
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்கிறான்.. அவன் அந்த ஊரை விட்டு வரும் பொழுது இந்த அளவிற்கு சந்தோசம் படவில்லை என்றாலும் கூட அந்த ஊருக்கு சென்று திரும்பும் பொழுது எல்லாம் ஒரு நல்லது நடக்கும்.. இப்பொழுது என்ன நல்லது நடக்க போகிறதோ..?!
அவனின் மனம், ‘இன்னைக்கு உன்னிடம் உண்மையை வாங்காமல் வருவதில்லை எழில் தங்கம்.. அன்னைக்கு என்ன சொல்லிட்டு வந்தாய் கடைசி வரையில் பயணம் செய்ய முடியாதா..?! நான் தான் உன்னோடு கடைசி வரை பயணிக்க போகிறேன்.. என்னிடம் நீ அந்த மாதிரி சொல்லிட்டு வருகிறாய்..’ என்று மனதால் அவளிடம் பேசியவண்ணம் வந்தான்..
காற்றின் வேகத்தைவிட அவனின் காரின் வேகம் அதிகமாக இருந்தது.. அந்த அளவிற்கு அவனின் மனம் அவளை சீக்கிரம் பார்க்க நினைத்தது..!
“உனது விழியசைவில் என்னை
விழ வைத்த விழியழகியோ நீ..?
உனது விழியழகில் என்னை
உன்னுள் தொலைத்தேன் பெண்ணே!
உனக்குள் தொலைந்த என்னை
நானே தேடிய தேடலின்
முடிவில் கண்டேன் பெண்ணே!
உனது விழியில் எனது மனதை
தொலைத்தேன் என்று! மீண்டும்
உன்னை சந்திக்க வருகிறேன்
உனக்குள் என்னை தொலைக்க அல்ல
உனக்குள் என்னை தேட...!”
என்று மனதில் கவிதை வரைந்த அன்பின் கார் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தது..
மாலை கோவிலுக்கு செல்ல தங்கள் வீட்டின் தோட்டத்தில் அரளியை பறித்துக் கொண்டிருந்தாள் எழில்.. தென்றல் அவளின் தோழியாக மாறி அவளை வருடி அவளின் கூந்தலைக் கலைத்தது..
காற்றில் கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கியவள் கண்களில் தங்கை விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சல் கண்ணில் பட, பூக்களைப் பறிப்பதை நிறுத்திவிட்டு தங்கையின் அருகில் சென்றவள்,
“மஞ்சும்மா அக்கா இந்த ஊஞ்சலில் ஆடுகிறேன்.. நீ அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுடா..” என்று சொல்ல தமக்கை முகத்தை பார்த்த அந்த வாண்டு,
“என்ன அக்கா இன்னைக்கு ஊஞ்சலில் ஆட நீயே வருகிறாய்.. நான் விளையாட அழைத்தாலும் எனக்கு என்ன சின்ன வயதா..? உன்னோட விளையாட..? என்று கேட்பாய்..” என்று அவள் சந்தேகமாகப் பார்த்தாலே தவிர ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை..
அவள் இறங்காதது கண்டு, “மஞ்சு அக்காவுக்கு ஊஞ்சலில் ஆடணும் போல இருக்கும்மா.. நீ எழுந்து அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுடா..” என்று தன்மையாக சொல்ல அவளும் ஊஞ்சலை விட்டு இறங்கி மற்றொரு ஊஞ்சலில் அமர்ந்தாள்..
வேப்பமரம், மாமரம் இரண்டிலும் ஊஞ்சல் கட்டி விடப்பட்டிருந்தது.. அந்த இரு ஊஞ்சலிலும் அமர்ந்தனர் அக்கா, தங்கை இருவரும்..! காட்டு வேலைக்கு சென்றால் சேலையும், வீட்டில் இருந்தால் பாவாடை தாவணியும் அணிவது அவளின் வழக்கம்..
இன்று வீட்டில் இருப்பதால் கருப்பு கலரில் பாவாடை மற்றும் அதே நிறத்தில் ரவிக்கையும், வெள்ளை தாவணியும் அணிந்திருந்தாள்.. அவள் தனது தாவணியை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தாள்..
காலை தரையில் ஊன்றி ஆட ஆரமித்தாள்.. அவளின் ஊஞ்சல் வேகமாகப் போக, அந்த வேகத்திற்கு ஏற்றது போல அவளின் கூந்தலும் காற்றில் காற்றில் ஆடியது..
இன்னொரு ஊஞ்சலில் அமர்ந்திருந்த மஞ்சு, “அக்கா எனக்காக ஒரு பாட்டு பாடு..” என்று சொல்லிவிட்டு அக்காவிற்கு நிகரான வேகத்தில் ஊஞ்சலில் ஆட ஆரமித்தாள்.. அவள் பாட சொல்லி கேட்டதும், “இல்ல மஞ்சு நான் இப்பொழுது பாடும் நிலையில் இல்லை..” என்று ஊஞ்சலில் ஆட ஆரமித்தாள்..
மாலை நேரம் மேற்கே தனது பணியை முடித்துவிட்டு ஒய்வு எடுக்க செல்ல மேற்கு வானம் சிவந்து போக மாலை நேர தென்றல் காற்று அந்த தோட்டத்தில் உள்ள மலர்களின் மணங்களைத் திருடி வந்து ஊஞ்சலில் ஆடும் அழகு பதுமையின் மனதை கொள்ளையடித்துச் சென்றது..இந்த இயற்கை அவளின் மனதை கொள்ளை அடிக்கவே இப்படி செய்ததோ..?!
அவளின் மனம் என்று இல்லாத அளவு மகிழ்ச்சியில் தன்னை மறந்து புன்னகைத்த வண்ணம் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க, அவன் வருவது அவளுக்கு தெரிந்ததோ என்னவோ தெரியவில்லை அவளின் மனம் ரொம்ப சந்தோசமாக இருந்தது..
அந்த சந்தோசம் கண்டு அவளின் தங்கை மஞ்சு, “அக்கா இன்னைக்கு என்ன அக்கா.. நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறீங்க..?” என்று கேட்டாள்..
அவளின் முகம் நோக்கிய எழில், “என்னவென்று தெரியல ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. காரணம் இது என்று சொல்ல முடியாத ஒரு விதமான சந்தோசம் மஞ்சு.. இதை உன்னோட வயதிற்கு புரிந்து கொள்ள முடியாது..” என்று கூறினாள்..
“ஓஓ! இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா..? சரி அக்கா அண்ணி ஊருக்கு போறாங்க.. நானும் அவங்களோட ஊருக்கு போகவா..?!” என்று கேட்டு அவளின் அனுமதிக்காக காத்திருந்தாள் அவளின் அன்பு தங்கை..!
அவளின் முகத்தைப் பார்த்தவளின் உள்ளம், ‘எனக்கு தான் சொந்தம், பந்தம் வீட்டிற்கு சென்று பழக்கம் இல்லை.. அதுக்காக ஏங்கி நிற்கும் இவளின் ஆசையையும் கெடுக்க எனக்கு மனம் இல்லை..’ என்று நினைத்தாள்
“எழில்.. எழில்..” என்று தனத்தின் குரல் கேட்டதும், “அண்ணி நான் பின்னாடி இருக்கும் தோட்டத்தில் இருக்கிறேன்..” என்று குரல் கொடுத்தவள் ஊஞ்சலில் இருந்து இறங்கினாள்..
அவள் சென்று பூக்களைப் பறிக்க, அவளைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் வந்த தனம், “எழில் நான் ஊருக்கு போகிறேன் மா.. மஞ்சுவையும் என்னுடன் அனுப்பி வைடா..” என்று தயக்கத்துடன் கேட்டதும்,
தங்கை இப்பொழுது கேட்டது ஞாபகம் வரவே, “ம்ம் கூட்டிட்டுப் போங்க அண்ணி..” என்று சந்தோசமாகக் கூறினாள்.. அவள் ஊருக்கு செல்ல அனுமதி கொடுத்தும் அண்ணியுடன் கிளம்பிச் சென்றாள் மஞ்சு..
அவள் செல்லும் பொழுது மணியைப் பார்க்க அது ஐந்து என்று காட்ட கோவிலுக்கு போக வேண்டும் என்பது ஞாபகம் வர தனது தலையில் தட்டிக் கொண்டவள் கோவிலுக்குச் செல்ல தயாராக கண்ணாடி முன்னாடி நின்றாள்..
பன்னீர் ரோஜா நிறத்தில் சேலை அணிந்துக் கொண்டு கண்ணாடி முன்னாடி நின்று எப்பொழுது பேசும் விழிகளுக்கு மை போட்டு தலை பின்னலிட்டு மல்லிகை பூ சூடினாள்..
அவள் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்துவிட்டு திருப்திகரமாக இருக்கவும், கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பூவை கையில் எடுத்துக் கொண்டவள், கதவை சாத்திவிட்டு பூட்டவும் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.. காரின் சத்தம் கேட்டு எழில் திரும்பிப் பார்க்க அவளை கண்டு இவள் சிலையாக நிற்க, இவளைக் கண்டு அவன் மெய்மறந்து நின்றான் அன்பு..!
ஐந்தரை அடியில் அழகிய சிற்பமொன்று ரோஜா நிறத்தில் சேலை கட்டி, பின்னலிட்ட கூந்தல் அவளின் இடையோடு உறவாட.. மாலை நேரத்தில் அவள் வைத்திருந்த மல்லிகை மணமும்.. வில்லென வளைந்த புருவமும்.. மையிட்ட மீன் விழிகள் இரண்டும் இவனைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்திருக்க.. அவளின் நிறமோ பாலாடையில் சந்தனம் குழைத்தது போல மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் ஒளிவிச.. அவளின் ரோஜா இதழ்கள் இரண்டும் கோவை பலமாக சிவந்திருக்க.. வெள்ளை பாசி மாலை அவளின் கழுத்தை அலங்கரிக்க அதிர்ச்சியில் நின்றிருந்த எழிலின் எழில் அழகை விழியால் அளந்தான் அன்பரசன்..
அவன் இவளை விழியால் அளக்க இவளின் மனமோ, ‘இதுதான் என்னோட மனதின் இனம்புரியாத சந்தோசத்திற்கு காரணமா..?’ என்று நினைத்தவள் அவனை விழியால் அளந்தாள்.. ஆறடிக்கும் குறையாத உயரமும், காற்றில் கலந்த அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவமும், தன்னை பார்ப்பவர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் பார்வை வைத்தே படிக்கும் அளவிற்கு அவர்களின் மனதை ஊடுருவும் பார்வையும்.. கூர்மையான நாசியும்.. அளவான மீசையும்.. அதன் கீழ் செதுக்கப்பட்ட உதடுகள்.. அவன் அணிதிருக்கும் சட்டையை மீறி வெளிப்பட்ட அவனின் திரண்ட தோள்களும்..!
இருவரும் ஒருவரை ஒருவர் விழியால் அளந்தவண்ணம் எவ்வளவு நேரம் நின்றனரோ..? இருவரின் சிந்தையைக் கலைக்கவே, “கூக்கூ.. கூ..கூ..” என்று கூவியது மாமரத்தில் எங்கோ ஒரு கிளையில் அமர்ந்திருந்த குயில்..!
இளா – இனியா இருவரின் நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தாலும் அவர்களின் திருமணம் அயலூரில் தான் என்று பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது.. இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு துணியெடுக்க செல்ல, அன்பு மட்டும் வர மறுத்துவிட்டான்..
“அம்மா நீங்க எல்லோரும் போய் எடுத்துட்டு வாங்க.. எனக்கு ஒரு கேஸ் விஷயமா கோயம்புத்தூர் வரை போகணும் அம்மா அதனால் நீங்க எல்லோரும் போய் கல்யாணத்திற்கு ஜவுளி எடுத்துட்டு வாங்க..” என்று சொல்லிவிட அவர்களும் அவனை தொந்தரவு செய்யாமல் கிளம்பிச் சென்றனர்..
அவர்களிடம் சொன்னது போலவே அடுத்த ஒரு மணி இரண்டு மணி நேரத்தில் கோயம்பத்தூர் வந்தவன் அந்த கிளைண்ட் இடம் பேசிவிட்டு அவன் வெளியே வரும் பொழுது மதியம் மணி ஒன்று.
அவன் அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைக்கும் பொழுது, ‘எழில் கேஸை ஃபைல் பண்ண வேண்டிய முக்கியமான ஆதாரங்கள் எல்லாம் அவளிடம் இருக்கிறது..’ என்று தோன்றவே ஒரு நிமிடம் நின்று யோசித்தவன் அடுத்த நொடியே ஒரு நல்ல முடிவையும் எடுத்தான்..
‘எழிலைப் பார்த்துவிட்டு செல்வது தான் சரி..’ என்று அவனின் மனம் அவனிடம் கூற அடுத்த நொடியே அயலூர் நோக்கி புறப்பட, அந்த கிளைண்ட் தனது காரைக் கொடுத்து, “நீங்க போக வேண்டிய இடத்திருக்கு போயிட்டு வந்து எனக்கு இந்த காரைக் கொடுங்கள்..” என்று சொல்ல அவரின் காரில் அயலூர் நோக்கி சென்றான் அன்பரசன்..
உடனே காரை எடுத்தவன், ‘திடீரென்று அவளின் முன்னாடி போய் நின்றால் அவளின் முகம் எப்படி மாறும்..’ என்று மனதில் நினைத்தவன் அவளின் முகத்தை கற்பனை செய்து பார்க்க அவனையும் மீறி அவனின் இதழ்கள் விரிந்து புன்னகையாக மலர்ந்தது..
‘அவளை காண செல்கிறோம்..’ என்று மனதில் நினைக்கும் பொழுதே அவனின் மனம் துள்ளிக்குதித்தது.. அந்த அளவிற்கு அவளைப் பார்க்க நினைத்து அவனின் காதல் கொண்ட மனது..!
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்கிறான்.. அவன் அந்த ஊரை விட்டு வரும் பொழுது இந்த அளவிற்கு சந்தோசம் படவில்லை என்றாலும் கூட அந்த ஊருக்கு சென்று திரும்பும் பொழுது எல்லாம் ஒரு நல்லது நடக்கும்.. இப்பொழுது என்ன நல்லது நடக்க போகிறதோ..?!
அவனின் மனம், ‘இன்னைக்கு உன்னிடம் உண்மையை வாங்காமல் வருவதில்லை எழில் தங்கம்.. அன்னைக்கு என்ன சொல்லிட்டு வந்தாய் கடைசி வரையில் பயணம் செய்ய முடியாதா..?! நான் தான் உன்னோடு கடைசி வரை பயணிக்க போகிறேன்.. என்னிடம் நீ அந்த மாதிரி சொல்லிட்டு வருகிறாய்..’ என்று மனதால் அவளிடம் பேசியவண்ணம் வந்தான்..
காற்றின் வேகத்தைவிட அவனின் காரின் வேகம் அதிகமாக இருந்தது.. அந்த அளவிற்கு அவனின் மனம் அவளை சீக்கிரம் பார்க்க நினைத்தது..!
“உனது விழியசைவில் என்னை
விழ வைத்த விழியழகியோ நீ..?
உனது விழியழகில் என்னை
உன்னுள் தொலைத்தேன் பெண்ணே!
உனக்குள் தொலைந்த என்னை
நானே தேடிய தேடலின்
முடிவில் கண்டேன் பெண்ணே!
உனது விழியில் எனது மனதை
தொலைத்தேன் என்று! மீண்டும்
உன்னை சந்திக்க வருகிறேன்
உனக்குள் என்னை தொலைக்க அல்ல
உனக்குள் என்னை தேட...!”
என்று மனதில் கவிதை வரைந்த அன்பின் கார் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தது..
மாலை கோவிலுக்கு செல்ல தங்கள் வீட்டின் தோட்டத்தில் அரளியை பறித்துக் கொண்டிருந்தாள் எழில்.. தென்றல் அவளின் தோழியாக மாறி அவளை வருடி அவளின் கூந்தலைக் கலைத்தது..
காற்றில் கலைந்த கூந்தலை காதோரம் ஒதுக்கியவள் கண்களில் தங்கை விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சல் கண்ணில் பட, பூக்களைப் பறிப்பதை நிறுத்திவிட்டு தங்கையின் அருகில் சென்றவள்,
“மஞ்சும்மா அக்கா இந்த ஊஞ்சலில் ஆடுகிறேன்.. நீ அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுடா..” என்று சொல்ல தமக்கை முகத்தை பார்த்த அந்த வாண்டு,
“என்ன அக்கா இன்னைக்கு ஊஞ்சலில் ஆட நீயே வருகிறாய்.. நான் விளையாட அழைத்தாலும் எனக்கு என்ன சின்ன வயதா..? உன்னோட விளையாட..? என்று கேட்பாய்..” என்று அவள் சந்தேகமாகப் பார்த்தாலே தவிர ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை..
அவள் இறங்காதது கண்டு, “மஞ்சு அக்காவுக்கு ஊஞ்சலில் ஆடணும் போல இருக்கும்மா.. நீ எழுந்து அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுடா..” என்று தன்மையாக சொல்ல அவளும் ஊஞ்சலை விட்டு இறங்கி மற்றொரு ஊஞ்சலில் அமர்ந்தாள்..
வேப்பமரம், மாமரம் இரண்டிலும் ஊஞ்சல் கட்டி விடப்பட்டிருந்தது.. அந்த இரு ஊஞ்சலிலும் அமர்ந்தனர் அக்கா, தங்கை இருவரும்..! காட்டு வேலைக்கு சென்றால் சேலையும், வீட்டில் இருந்தால் பாவாடை தாவணியும் அணிவது அவளின் வழக்கம்..
இன்று வீட்டில் இருப்பதால் கருப்பு கலரில் பாவாடை மற்றும் அதே நிறத்தில் ரவிக்கையும், வெள்ளை தாவணியும் அணிந்திருந்தாள்.. அவள் தனது தாவணியை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தாள்..
காலை தரையில் ஊன்றி ஆட ஆரமித்தாள்.. அவளின் ஊஞ்சல் வேகமாகப் போக, அந்த வேகத்திற்கு ஏற்றது போல அவளின் கூந்தலும் காற்றில் காற்றில் ஆடியது..
இன்னொரு ஊஞ்சலில் அமர்ந்திருந்த மஞ்சு, “அக்கா எனக்காக ஒரு பாட்டு பாடு..” என்று சொல்லிவிட்டு அக்காவிற்கு நிகரான வேகத்தில் ஊஞ்சலில் ஆட ஆரமித்தாள்.. அவள் பாட சொல்லி கேட்டதும், “இல்ல மஞ்சு நான் இப்பொழுது பாடும் நிலையில் இல்லை..” என்று ஊஞ்சலில் ஆட ஆரமித்தாள்..
மாலை நேரம் மேற்கே தனது பணியை முடித்துவிட்டு ஒய்வு எடுக்க செல்ல மேற்கு வானம் சிவந்து போக மாலை நேர தென்றல் காற்று அந்த தோட்டத்தில் உள்ள மலர்களின் மணங்களைத் திருடி வந்து ஊஞ்சலில் ஆடும் அழகு பதுமையின் மனதை கொள்ளையடித்துச் சென்றது..இந்த இயற்கை அவளின் மனதை கொள்ளை அடிக்கவே இப்படி செய்ததோ..?!
அவளின் மனம் என்று இல்லாத அளவு மகிழ்ச்சியில் தன்னை மறந்து புன்னகைத்த வண்ணம் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க, அவன் வருவது அவளுக்கு தெரிந்ததோ என்னவோ தெரியவில்லை அவளின் மனம் ரொம்ப சந்தோசமாக இருந்தது..
அந்த சந்தோசம் கண்டு அவளின் தங்கை மஞ்சு, “அக்கா இன்னைக்கு என்ன அக்கா.. நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறீங்க..?” என்று கேட்டாள்..
அவளின் முகம் நோக்கிய எழில், “என்னவென்று தெரியல ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. காரணம் இது என்று சொல்ல முடியாத ஒரு விதமான சந்தோசம் மஞ்சு.. இதை உன்னோட வயதிற்கு புரிந்து கொள்ள முடியாது..” என்று கூறினாள்..
“ஓஓ! இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா..? சரி அக்கா அண்ணி ஊருக்கு போறாங்க.. நானும் அவங்களோட ஊருக்கு போகவா..?!” என்று கேட்டு அவளின் அனுமதிக்காக காத்திருந்தாள் அவளின் அன்பு தங்கை..!
அவளின் முகத்தைப் பார்த்தவளின் உள்ளம், ‘எனக்கு தான் சொந்தம், பந்தம் வீட்டிற்கு சென்று பழக்கம் இல்லை.. அதுக்காக ஏங்கி நிற்கும் இவளின் ஆசையையும் கெடுக்க எனக்கு மனம் இல்லை..’ என்று நினைத்தாள்
“எழில்.. எழில்..” என்று தனத்தின் குரல் கேட்டதும், “அண்ணி நான் பின்னாடி இருக்கும் தோட்டத்தில் இருக்கிறேன்..” என்று குரல் கொடுத்தவள் ஊஞ்சலில் இருந்து இறங்கினாள்..
அவள் சென்று பூக்களைப் பறிக்க, அவளைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் வந்த தனம், “எழில் நான் ஊருக்கு போகிறேன் மா.. மஞ்சுவையும் என்னுடன் அனுப்பி வைடா..” என்று தயக்கத்துடன் கேட்டதும்,
தங்கை இப்பொழுது கேட்டது ஞாபகம் வரவே, “ம்ம் கூட்டிட்டுப் போங்க அண்ணி..” என்று சந்தோசமாகக் கூறினாள்.. அவள் ஊருக்கு செல்ல அனுமதி கொடுத்தும் அண்ணியுடன் கிளம்பிச் சென்றாள் மஞ்சு..
அவள் செல்லும் பொழுது மணியைப் பார்க்க அது ஐந்து என்று காட்ட கோவிலுக்கு போக வேண்டும் என்பது ஞாபகம் வர தனது தலையில் தட்டிக் கொண்டவள் கோவிலுக்குச் செல்ல தயாராக கண்ணாடி முன்னாடி நின்றாள்..
பன்னீர் ரோஜா நிறத்தில் சேலை அணிந்துக் கொண்டு கண்ணாடி முன்னாடி நின்று எப்பொழுது பேசும் விழிகளுக்கு மை போட்டு தலை பின்னலிட்டு மல்லிகை பூ சூடினாள்..
அவள் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்துவிட்டு திருப்திகரமாக இருக்கவும், கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பூவை கையில் எடுத்துக் கொண்டவள், கதவை சாத்திவிட்டு பூட்டவும் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.. காரின் சத்தம் கேட்டு எழில் திரும்பிப் பார்க்க அவளை கண்டு இவள் சிலையாக நிற்க, இவளைக் கண்டு அவன் மெய்மறந்து நின்றான் அன்பு..!
ஐந்தரை அடியில் அழகிய சிற்பமொன்று ரோஜா நிறத்தில் சேலை கட்டி, பின்னலிட்ட கூந்தல் அவளின் இடையோடு உறவாட.. மாலை நேரத்தில் அவள் வைத்திருந்த மல்லிகை மணமும்.. வில்லென வளைந்த புருவமும்.. மையிட்ட மீன் விழிகள் இரண்டும் இவனைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்திருக்க.. அவளின் நிறமோ பாலாடையில் சந்தனம் குழைத்தது போல மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் ஒளிவிச.. அவளின் ரோஜா இதழ்கள் இரண்டும் கோவை பலமாக சிவந்திருக்க.. வெள்ளை பாசி மாலை அவளின் கழுத்தை அலங்கரிக்க அதிர்ச்சியில் நின்றிருந்த எழிலின் எழில் அழகை விழியால் அளந்தான் அன்பரசன்..
அவன் இவளை விழியால் அளக்க இவளின் மனமோ, ‘இதுதான் என்னோட மனதின் இனம்புரியாத சந்தோசத்திற்கு காரணமா..?’ என்று நினைத்தவள் அவனை விழியால் அளந்தாள்.. ஆறடிக்கும் குறையாத உயரமும், காற்றில் கலந்த அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவமும், தன்னை பார்ப்பவர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் பார்வை வைத்தே படிக்கும் அளவிற்கு அவர்களின் மனதை ஊடுருவும் பார்வையும்.. கூர்மையான நாசியும்.. அளவான மீசையும்.. அதன் கீழ் செதுக்கப்பட்ட உதடுகள்.. அவன் அணிதிருக்கும் சட்டையை மீறி வெளிப்பட்ட அவனின் திரண்ட தோள்களும்..!
இருவரும் ஒருவரை ஒருவர் விழியால் அளந்தவண்ணம் எவ்வளவு நேரம் நின்றனரோ..? இருவரின் சிந்தையைக் கலைக்கவே, “கூக்கூ.. கூ..கூ..” என்று கூவியது மாமரத்தில் எங்கோ ஒரு கிளையில் அமர்ந்திருந்த குயில்..!
Last edited: