• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen penne! - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Fathima

நாட்டாமை
Joined
Jun 11, 2018
Messages
33
Reaction score
73
Location
Tirunelveli
எப்படியும் 4 எபி அடுத்து தான் லவ் சொல்வாங்க பாப்போம்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எப்படியும் 4 எபி அடுத்து தான் லவ் சொல்வாங்க பாப்போம்
எப்படி இப்படியெல்லாம் கணிக்கிறீங்க சிஸ்டர் திறமைதான்.. தேங்க்ஸ் சிஸ்டர்.. டைம் இருந்தால் 4 எபிக்கு பிறகு தான் லவ் பிரப்போஸ்.. இல்லை என்றால் இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும்..
 




Fathima

நாட்டாமை
Joined
Jun 11, 2018
Messages
33
Reaction score
73
Location
Tirunelveli
எப்படி இப்படியெல்லாம் கணிக்கிறீங்க சிஸ்டர் திறமைதான்.. தேங்க்ஸ் சிஸ்டர்.. டைம் இருந்தால் 4 எபிக்கு பிறகு தான் லவ் பிரப்போஸ்.. இல்லை என்றால் இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும்..
Super sister waiting
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அந்த குயில் சத்தத்தில் தன்னை முதலில் மீட்டெடுத்து வெளி வந்த அன்பு, அவள் விழிகளை அசைக்காமல் தன்னை ரசிப்பதைக் கவனித்த கண்டு அவளைப் பார்த்து கேள்வியாக தனது இடது புருவத்தை உயர்த்தி என்ன என்று பார்வையால் கேட்டதும், நொடிபொழுதில் அவனின் பார்வை கண்டு வெக்கத்தில் கன்னங்கள் இரண்டு சிவக்க தலை குனிந்தாள்..

அது கூட அழகாக இருக்க அவளை விழியால் ரசித்த வண்ணம் காரில் சாய்த்து நின்றான் அன்பரசன்.. அப்பொழுது தான் வெக்கத்தில் தலைகுனிந்த எழில் மனம், ‘இப்பொழுது என்னைப் பார்க்க ஏன் வந்திருக்கிறார்..?!” என்ற கேள்வி எழுந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

அந்த வழியே வந்த வீரம்மா அன்பைப் பார்த்துவிட்டு எழில் பக்கம் திரும்பி, “என்னம்மா எழில் இவர் யாரு..?” என்று சத்தமாகக் கேட்டதும் அன்பு அவளைக் கேள்வியாகப் பார்க்க, அந்த கேள்விக்கு தனக்குள் புன்னகைத்த எழில், “அவர் வக்கீல் வீரம்மா.. கேஸ் விஷயமாக ஏதோ கேட்க வந்திருக்கிறார்..” என்று சொல்லவும்,

“சரிம்மா தம்பி உட்கார வைத்து என்ன என்று கேளு..” என்று காற்று வாக்கில் சொல்லிவிட்டுச் செல்ல, “சரி வீரம்மா..” என்றவள், “வாங்க அன்பு என்ன திடீரென்று வந்து அதிர்ச்சி எல்லாம் கொடுக்கிறீங்க..?!” என்று அழைத்தவள்,

அவளின் அழைப்பில் இருந்த சந்தோசத்தைக் கண்ட அன்பு, “இந்த பக்கம் ஒரு வேலையாக வந்தேன்.. அதுதான் உன்னோட கேஸ்க்கு வேண்டிய ஆதரங்களை வாங்கிவிட்டு போகலாம் என்று வந்தேன்..” என்று சொல்ல, “இதில் உட்காருங்க வருகிறேன்..” என்று வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்..

அந்த கட்டிலில் அமர்ந்தவன் கண்களுக்கு வீட்டின் முன்னாடி இருந்த செண்பக மரத்தின் பூத்திருந்த செண்பகப்பூவின் வாசனை அவனின் நாசியைத் தீண்டியது.. மாலை நேர தேன்றலும் மஞ்சள் வெயில் வானமும், கானம் பாடும் குயில் குயில்களும் பறந்து செல்லும் பறவைகளும் என்று இயற்கை எழிலை அவனது கண்கள் சுற்றி வந்தது..

அவனின் மனம், ‘கிராமத்தில் மட்டும் இயற்கையை நேரில் பார்த்து ரசிக்க முடிகிறது... இந்த எழிலோடு பொருந்தியவர்கள் மனம் நகர வாழ்க்கையை ரசிக்காது..’ என்று நினைக்க, அவனுக்கு குடிக்க காபியும், கேஸ்க்கு தேவையான ஆதாரங்களின் நகல்களையும் எடுத்து வந்தாள் எழில்..

“அன்பு இந்தாங்க காபி..” என்று அவளின் கையில் கொடுத்தவள், “இதில் எல்லாம் நீங்க கேட்ட ஆதாரம் அனைத்தும் இருக்கிறது.. இது மட்டும் போதுமா..? இல்ல வேற ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமா..?” என்று கேட்டாள்..

அவளிடம் இருந்து காபியை வாங்கிய அன்பரசன், “அதெல்லாம் இருக்கட்டும்.. நீ இப்பொழுது எங்கே செல்கிறாய்..?” என்று கேட்டதும், அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிறிது தயக்கத்துடன் நிற்க அவள் சாமிக்கு என்று கட்டிய அரளி பூக்களைப் பார்த்தவன்,

“ம்ம் என்னிடம் என்ன தயக்கம் சொல்லு எழில்.. எங்கே கிளம்பிவிட்டாய்..?!” என்று கேட்டபடியே காபியைப் பருகினான்..

“எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் அன்பு.. ஒவ்வொரு வருடமும், ஜெயந்திம்மா, இனியா இருவரும் இங்கே இருப்பாங்க.. எனக்கு வாழ்த்து சொல்வாங்க..” என்று சொன்னதும், ‘ஓ என்னோட பாட்டியும், என்னோட தங்கையும் தான் உனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்பவர்களா..?!’ என்று நினைத்தவன்,

“உனக்கு இன்னைக்கு பிறந்த நாளா..?! விஷ் யூ ஹாப்பி பர்த்டே..” என்று கூறியவன், “இந்த வருடம் ஜெயந்திம்மா, இனியா இருவரும் எங்கே போயிருக்காங்க..?!” என்று தெரியாது போல கேட்டான்..

“இனியாவின் திருமண விஷயமாக அவளை சென்னைக்கு அழைத்து சென்றிருக்கிறார் ஜெயந்திம்மா.. அதனால் தான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என்று கிளம்பினேன்..” என்று அவனுக்கு பதில் கொடுத்தாள் எழில்..

“இன்னொரு முக்கியமான நபர் கணக்கில் வரவில்லை..” என்று புன்னகையுடன் கேட்டவன் அவளின் கையில் காபி டம்ளாரைக் கொடுத்துவிட்டு அவளைக் கேள்வியாக நோக்கினான்..

“முக்கியமான நபரா..?” என்று யோசித்தவள் அவன் சிரிப்பதைக் கண்டு, “ஆஷாவா..?! ஆஷா காலையிலேயே மறக்காமல் விஷ் பண்ணிட்டா..” என்று கூறினாள்..

எழில் கோவிலுக்கு செல்ல கதவைப் பூட்ட, அவள் கொடுத்த ஆதாரங்களை சரிபார்த்தவன், “ம்ம் எல்லாம் சரியாக இருக்கிறது..” என்று சொல்லிவிட்டு அதை காரில் வைத்துவிட்டு காரை லாக் செய்தவன்,

“கோவிலுக்கு தானே போகிறாய்..?” என்று சந்தேகமாக கேட்டதும், “ம்ம் கோவிலுக்கு தான் போகிறேன்..” என்று சொல்லவும், “சரி வா நாம் இருவரும் கோவிலுக்கு போவோம்..” என்று சொல்ல இருவரும் இணைத்தே கோவிலுக்கு சென்றனர்.. மாலை நேரத்தில் மறையும் சூரியனை வேடிக்கை பார்த்த வண்ணம், கோவிலுக்கு சென்றனர் எழிலும், அன்பும்..!

கோவிலுக்கு சென்று சாமி சந்நிதானத்தின் முன்பு நின்று சாமியை தரிசித்த இருவரும் கோவில் பிராகாரத்தில் அமர, அவளை பார்த்த படியே அமர்ந்தான் அன்பரசன்..

இருவரின் இடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்ல.. ஆனால் அழகான அமைதி அவர்கள் இடையே குடிகொள்ள, அந்த ஏகாந்த நிலைய இருவருமே ரசித்தனர்.. அந்த அமைதியை முதலில் கலைத்தான் அன்பரசன்..!

“உன்னோட பிறந்தநாள் அன்று ஆஷா இங்கே வந்திருக்கிறாளா..?” என்று கேட்டதும், “அவள் ஊருக்கு வந்து செய்த சேட்டையை மறக்க முடியுமா..?!” என்று கேட்டதும், அவனும் ஆர்வமாக, “என்ன பண்ணினாள்..? என்று கேட்டான்..

“என்னிடமே வந்து எங்களின் வீட்டு முகவரியைக் கேட்டு எனக்கு கொடுத்தாலே ஒரு அதிர்ச்சி.. இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது அன்பு..” என்று தன்னை மறந்து சிரிக்க ஆரமித்தாள். அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்குமே சிரிப்பு வந்தது..

அவளின் முகத்தில் இருந்த சந்தோசத்தைப் பார்த்தவன், “நீ அவளை சும்மாவா விட்டா..?!” என்று அவன் சிரிப்புடன் கேட்டதும், “தென்னந்தோப்பில் விட்டு துரத்தினால் யார் கேட்பா..? அன்னைக்கு ஓடிய ஓட்டத்தில் ஒருவர் மீது மோதிவிட்டேன்.. ஏதோ மனுஷன் நல்லவன் போல என்னை திட்டாமல் சும்மா விட்டான்..” என்று அன்று நடந்ததைக் கூறினாள்..

அவள் கூறியதைக் கேட்டதும், ‘ஓ அன்னைக்கு என்னை வந்து மோதியது நீ தானா..?! என்னடி இன்னைக்கு எல்லாமே சந்தோசமான விஷயமாக இருக்கிறது..’ என்று மனதில் நினைத்தவன்,

“எழில் இந்த கேஸ் முடிந்தால் அடுத்து என்ன செய்ய போகிறாய்..?” என்று அவன் பேச்சை மாற்றவே, அதுவரை விரலை ஆராய்ந்துக் கொண்டிருந்தவள்,

அவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்து, “எனக்கு என்ன அன்பு.. இந்த கேஸ் முடிந்தால் அடுத்து தங்கையை நல்ல படிக்க வைக்க வேண்டும்..” என்று கூறினாள்..

அவள் வேற ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த அன்புவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.. “இது மட்டும் தானா..?” என்று சாதாரணமாகக் கேட்டதும்,

“ம்ம் இவ்வளவு தான் இதுக்கு மேல் என்ன இருக்கு..?” என்று அவளும் தனது மனதை வெளிகாட்டாமல் மறைத்தாள் எழில்..

“நீங்க அடுத்து என்ன செய்ய போறீங்க..?” என்று சிரிப்புடன் கேட்டாள் எழில்..

“நானா..?! எங்கள் வீட்டில் சொல்லும் பெண்ணை திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன்..” என்று விளையாட்டாக சொல்லவும் அவளின் மலர்ந்த முகம் நொடியில் மாறிப்போனது..

அவளின் முகத்தைப் பார்த்தவன், “என்ன திடீரென்று அமைதியாக மாறிவிட்டாய்..?!” என்று கேட்டான்.. அவள் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்..

அவள் அமைதியாக அமர்ந்திருப்பது பார்த்து, “என்ன எழில்..?” என்று கேட்டான் அன்பு.. அடுத்த நொடியே அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் விழிகள் அவனிடம் ஏதோ சொல்ல சொல்ல நினைத்து படபடவென்று அடிக்க, அதை சொல்ல வேண்டிய உதடுகளோ வார்த்தைகளை மறந்து மவுனமானது..

அவளின் விழிகளைப் பார்த்தவன், ‘இந்த விழியில் தானே என்னை நான் தொலைத்தேன்.. எதுவும் பேசாமல் விழியால் பேசியே என்னை களவாடிச் செல்கிறாள்..’ என்று அவனின் மனம் புலம்பியது.. அவன் இமைக்காமல் அவளையே பார்க்க அவனின் செல்போன் இசைத்தது.. அவனின் மனதில் இருப்பது பாடக் வரிகளாக மாறி வெளிப்பட்டது..

வேணா வேணா விழுந்துடுவேனா

கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

ஒரு முறை சிரிக்கிறாய்..

என் உயிரினை பறிக்கிறாய்..

கண்கள் இரண்டும் அணுகுண்டா

கத்தி கொண்ட பூச்செண்டா

இன்பமான சிறை உண்டா..?

ஈர விழியில் இடம் உண்டா..?

கடவுள் பூமி வந்தால்

உன் கண்ணைப் பார்க்க வேண்டும்..

மனிதன் பாவம் என்று

அவன் மறந்து போக வேண்டும்..” என்று பாடலின் வரிகள் கேட்டு அவளின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.. அந்த புன்னகையில் அவளைப் பார்த்தவன், ‘பாடல் புரியுது இல்ல பதில் சொல்லு..’ என்று கேட்டதும் அவளின் விழிகள் தரையைப் பார்த்தது..

மீண்டும் நிமிர்ந்தவள் இருண்ட வானத்தைப் பார்த்து, “உங்களின் மனதில் உள்ள கேள்விக்கு நீங்க தான் பதிலையும், வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்.. எனக்கு பதில் தெரியும்.. ஆனால் நான் சொல்ல மாட்டேன்..” என்று எழுந்து செல்ல அவளின் பின்னோடு எழுந்து சென்றான் அன்பு..

அதன்பிறகு அவளோடு வீட்டிற்கு வந்தவன், “எழில்..” என்று அழைத்தவன், காரின் கதவுகளைத் திறந்து, “உனக்கு என்றே வாங்கியது..” என்று அவளின் கையில் கிப்டைக் கொடுத்தான்..

அவளும் அதை வாங்கிக் கொள்ள, அவளிடம் பார்வையால் விடைபெற்றுக்கொண்டு சென்னை நோக்கிச் சென்றான்.. அவன் சென்ற பிறகு அவன் சென்ற வழி பார்த்து தனித்து நின்றாள் எழில்..!
??? paruda ithu ethir pakave ilaiye mm nadathunga nadathunga ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top