• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 25 (Pre-final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அவளின் சிரிப்பைக் கண்டு மனம் மயங்கியவன் அவளின் இதழைப் பார்க்க, “ஏய் என்ன பார்வை மாறுது..?! அடிதான் விழும் முதுகு பத்திரம்..” என்று விரல் நீட்டி அவனை எச்சரித்தாள் எழில்..

“நீ எனக்கு கொடுத்ததை விடவா நான் உனக்கு கொடுக்க போகிறேன்..” என்று கூறியவன் அவள் அசந்த நேரத்தில் அவளின் இதழில் சிறிய முத்தம் பதித்து நிமிர்ந்தான் அன்பு.. அவன் அவளை விட்டு விலகியதும் அவனை முறைத்தாள் எழில்..

அவள் முறைப்பதைப் பார்த்தவன், “உன்னைக் கண்டு நான் பயப்பட வேண்டுமா..?” என்று அவன் விளையாட்டு போல கேட்டதும், “நீ பயப்பட்டாய் அன்பு.. அன்று நான் உயிருக்கு போராடிய பொழுது உன்னோட கண்களில் தெரிந்த அந்த பயம் என்னால் இன்றும் மறக்க முடியாது..” என்று அவள் சொல்ல அன்றைய நினைவில் ஆழ்ந்தனர் இருவரும்..

சிறிது நேரம் சென்ற பிறகு, “நீ எப்பொழுது காதலை உணர்ந்தாய்..?” என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த செடியில் இருந்த பூக்களைப் பறிக்க ஆரமித்தாள் எழில்..

“இப்பொழுது எதற்கு இதைப் பறிக்கிறாய்..?” என்று கேட்டான்.. அவனின் பக்கம் திரும்பிய எழில், “நான் உன்னைக் கேட்டால் நீ என்னை கேள்வி கேட்கிறாய்..?!” என்று அவள் அதிகாரமாகக் கேட்டதும் அவளின் அதிகாரம் கண்டு சிரித்தான் அன்பு..

“இதோ இப்பொழுது நீ நிற்கிறாயே இதே நித்தியமல்லி செடியின் அருகே நீ நின்றிருந்த பொழுதுதான் நான் உன்னை முதல் முதலாகப் பார்த்தேன்..” என்று அவன் அன்றைய நினைவில் ஆழ்ந்த வண்ணம் சொல்லவும் அவனின் குரலில் இருந்த மாற்றத்தைக் கவனித்து அவனை திரும்பிப் பார்த்தாள் எழில்..

அவனோ கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு, “அந்த விழிகள் அந்த பேசும் விழிகளில் தான் நான் என்னை தொலைத்தேன் முதல் முறையாக..!” என்று சொல்ல அதே நித்தியமல்லி செடியின் அருகே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் எழில்..

அவனோ கட்டிலில் படுத்துக் கொண்டு, “அந்த விழிகளை நான் மறக்கவே இல்லை எழில்.. அந்த விழிகள் தான் என்னை மற்ற பெண்ணின் பார்வையில் இருந்து என்னைப் பாதுக்காத்தது.. ஆனால் அது உன்னோட விழிகள் என்று நான் உணர எனக்கு மூன்று வருடம் தேவைப்பட்டது..” என்று அவன் அவளின் மீதான காதலை அந்த நினைவுகளோடு பயணித்தவண்ணம் சொல்ல,

அவளோ அவனின் காதலைக் கண்டு மனம் உருக கண்கள் இரண்டும் கலங்க நின்ற இடத்திலேயே சிலையென நின்றிருந்தாள்.. அவள் நிலையை அறியாத அன்பு தனது மனதில் உள்ள காதலுக்கு மொழி வடிவம் கொடுத்தான்..

“அன்னைக்கு நான் ஷாப்பிங் போய்ட்டு வரும் பொழுது ஒரு ஸ்கூல் செல்லும் பெண்ணைப் பார்த்தும் என்னோட மனதில் உனது நினைவு தான் தோன்றியது.. அன்றே உன்னைப் பார்க்க வரவேண்டும் என்று நினைத்தேன்.. அதற்கான வாய்ப்பு அமைந்தும் நான் உன்னோட முகத்தைப் பார்க்க முடியாமல் போனது..” என்று அவன் வருத்ததோடு சொல்ல அவள் அவனின் அருகே சென்றாள்..

அவனின் அருகில் நிழலாட கண்களைத் திறந்து அவளைக் கேள்வியாக அவன் பார்க்க, “என்னைக்கு என்னைப் பார்க்க வந்தாய் அன்பு..?!” என்று கேட்டாள் எழில்.. அவளது குரலில் அத்தனை ஆனந்தம்..!

அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்து அவன் எழுந்து அமர்ந்து அவளின் கண்களைத் துடைத்துவிட, அவனது கைகளைத் தடுத்தவள், “என்னைக்கு என்னைப் பார்க்க வந்து என்னோட முகம் பார்க்காமல் சென்றாய்..?” என்று அவள் அழுத்தமாகக் கேட்டாள்..

அவள் அதை அவளைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்த அன்று அன்பு வந்து தன்னைப் பார்க்க முடியாமல் சென்றுவிட்டானோ என்று நினைத்தாள்.. ஆனால் அவளுக்கு உண்மை தெரியாதே..

“உன்னோட பிறந்த நாள் அன்று தான் உன்னோட முகம் பார்க்க முடியாமல் போனது..” என்று அவன் அவளின் விழிகளைப் பார்த்த வண்ணம் சொல்ல, அவனின் கண்களில் ஒரு நிம்மதி பரவியது..

“அன்று தோட்டத்தில் ஆஷாவை துரத்திக் கொண்டே வந்து நீ மோதியது என் மீதுதான்..” என்று அவள் சொல்ல அந்த நினைவுகளில் மூழ்கியவள் சிரிக்க ஆரமித்தாள்..

அவளின் சிரிப்பைக் கண்டு, “ஏண்டி சிரிக்கிறாய்..” என்று கேட்டதும், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், “என்னை நீ பார்க்க முடியாமல் போனதற்கு நீ காரணம் அல்ல.. நான் அந்த இடத்தில நின்று உன்னிடம் பேசி இருந்தால் என்னோட முகத்தை நீ பார்த்திருக்க முடியும்.. நான்தான் நிற்கவே இல்லையே..” என்று சிரிக்க ஆரமித்தாள் எழில்..

“எதிரே எவன் வந்தான் எனக்கு என்ன என்று ஓடுகிறாய்..” என்று கேட்டுவிட்டு அவனும் சிரித்தான்.. “என்னோட் முகத்தை எப்பொழுது பார்த்தாய் அன்பு..” என்று கேட்டவள் எழுந்து சென்று பூக்களைப் பறிக்க, “அடியே இங்கேயே அமர்ந்து கதை கேட்க வேண்டியது தானே.. இப்பொழுது அந்த பூ உனக்கு ரொம்ப முக்கியமா..?” என்று வீம்பாகக் கேட்டான் அன்பு..

“அதுதான் நீயே சொல்லிட்டியே கதை என்று..?! அதை அங்கிருந்து கேட்டால் என்ன..? இங்கிருந்து கேட்டால் என்ன..?!” என்று அவள் கேலியாகக் கேட்கவும் அவளின் இடையோடு கரம் கொடுத்து தூக்கியவன்,

“நீ இங்கே இருந்தால் என்னோட காதலை கதை என்று சொல்லி இன்னும் நாலு எபிசொட் போடு மாமா என்று கிராமத்து பெண்ணாக மாறிச் சொல்வாய்... வா வந்து சமையல் செய் நான் அங்கே உட்கார்ந்து உனக்கு நம்ம காதல் காவியத்தையே சொல்கிறேன்..” என்று சிரிப்புடன் அவளைத் தூக்கிச் செல்ல,

“இரு ஜெயந்திம்மாகிட்ட சொல்கிறேன்..” என்று அவள் சிணுங்க, “என்ன சொல்லுவியோ சொல்லிக்க அதுதான் உனக்கு எனக்கும் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்க போகிறதே.. அப்புறம் நீ சொல்வதற்கும் சேர்த்து என்னிடம் வட்டியும் முதலுமாக பெற வேண்டி வருமே..” என்று அவனும சிரிப்புடன் அவளிடம் சொல்லியபடி வீட்டின் உள்ளே வந்து இறக்கி விட,

“அன்பு உனக்கு நிஜமாகவே பசிக்கிறதா..?!” என்று கேட்டதும், “நிஜமாக பசிக்கிறது எழில்..” என்று சொன்னவன், “நான் உனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன்.. நீயே சமைத்து எனக்கு கொடுக்கும் வரையில் இந்த இடத்தை விட்டு நகரவே மாட்டேன்..” என்று அவன் சிரிப்புடன் கூறியதும் அவனைப் பார்த்து முறைத்தவள்,

“வக்கீலே வாய்தா வாங்குவது ரொம்ப ஈஸி.. ஆனால் வெங்காயம் உரிப்பது ரொம்ப கஷ்டம்.. நீங்க வெங்காயம் உரிப்பதை நான் பார்க்க வேண்டாம்..” என்று அவள் சிரிப்புடன் சொல்லிவிட்டு அவனின் கையில் வெங்காயக் கூடையையும் கத்தியையும் கொடுத்தாள் எழில்..

“சென்னையில் பிரபலமான வக்கீல் நான்.. என்னால் வெங்காயம் உரிக்க முடியாது..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, “காதலில் இதெல்லாம் வேலைக்கே ஆகாது அன்பு.. வெங்காயம் உரித்தே ஆகவேண்டும்.. இல்ல உங்களின் மீது கேஸ் போடுவேன்..” என்று அவள் காதலோடு மிரட்ட,

“நீ செஞ்சாலும் செய்வ.. உன்னை நம்பவே முடியாது..” என்று அவன் வெங்காயம் உரிக்க அவனின் கையில் இருந்து அதை வாங்கியவள், “சும்மா உன்னிடம் விளையாடினேன்.. நீ நம்ம காதல் காவியத்தை விட்ட இடத்தில் இருந்து சொல்லு.. நான் வேலையைக் கவனிக்கிறேன்..” என்று கூறியவள்,

தனது சமையல் வேலையைக் கவனிக்க, “கோவில் திருவிழாவில் தான் நான் உன்னைப் பார்த்தேன்.. அப்பொழுது உன்னோட கண்ணை மட்டும் தான் பார்த்தேன்.. உன்னோட முகத்தைப் பார்க்கவே இல்லை..” என்று சொல்ல,

“அன்னைக்கு மஞ்சுவைக் காணாமல் நான் தேடிக் கொண்டிருந்தேன்.. அப்பொழுது நான் உன்னைப் பார்க்கவே இல்லையே..?!” என்றாள்.. “அங்கிருந்த கூட்டத்தில் மோதி கீழே விழுக போனாய் மறந்து விட்டாயா..?!” என்று கேட்டான்..

சிறிது நேரம் யோசித்தவளுக்கு அந்த காட்சி மனதில் வராமல் போக, “எனக்கு நினைவே இல்லை அன்பு..” என்று உதட்டைப் பிதுக்கினாள் எழில்.. அதைப் பார்த்து அன்புவிற்கு விடை தெரியாத குழந்தை உதட்டைப் பிதுக்குவது போலவே இருந்தது..

அவனோ அவளைப் பார்த்து சந்தோசத்தில் சிரிக்க, “ம்ம் சிரித்தது போதும் சமையல் முடிவதற்குள் முழு கதையும் சொல்லு..” என்று சொல்லிக் கொண்டே அவள் வேலையைச் செய்ய, “உன்னை நேரில் பார்த்து சென்னையில் தான்.. உன்னோட விழியைப் பார்த்தும் உன்னை அடையாளம் கண்டுக் கொண்டே..” என்று அவன் சொல்ல,

“உன்னைப் பார்த்தும் நீ தான் அன்பு என்று எனக்கும் தெரிந்துவிட்டது..” என்று அவள் அவனோடு பேசிக்கொண்டே சமையலை செய்ய, “எப்படித்தான் எங்கள் வீட்டில் உள்ள அனைவரின் மனத்தைக் கவர்ந்தாயோ..?!” என்று அவன் ஆச்சர்யத்துடன் கேட்டான்..

“ஏன் அன்பு இப்படி சொல்கிறாய்..?” என்று கேட்டதும், “என்னோட அம்மா ஆஷாவைக் சமையல் அறை பக்கம் விட மாட்டாங்க.. ஆனால் உன்னை அவ்வளவு தைரியமாக விட்டுவிட்டு போனாங்க..” என்று சொல்ல, “அந்த தைரியத்தில் தான் சார் வந்து அந்த சேட்டை பண்ணிங்களோ..?!” என்று கேட்டதும், “நான் எதுவுமே பண்ணலாமா..” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் அன்பு..

அவனின் முகத்தைப் பார்த்த எழில், “நம்பிட்டேன்..” என்று கூறிவிட்டு, “ஆஷா சரியான சாப்பாட்டு ராமி.. அவளுக்கு சாப்பிட நல்ல தெரியும்.. சமைக்க சுத்தமா தெரியாது.. அதுதான் அவளை அத்தை சமையல் அறை பக்கம் விட்டிருக்க மாட்டாங்க.. துவரம்பருப்பு போட்டு குழம்பு வை என்றால் பாசிபருப்பை போட்டு குழம்பு வைப்பாள்.. எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை..” என்று அவள் சொல்ல, அன்பு அதை கற்பனை வேறு செய்துப் பார்க்க அவனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

அவன் சிரிப்பதைப் பார்த்து சிரித்த எழில், “சமையல் ரெடி..” என்று சொல்ல, “நாங்களும் சாப்பிட வரலாமா..?” என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்த ஆஷாவைப் பார்த்து அன்பு, எழில் இருவராலும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

அவர்கள் சிரிப்பதைப் பார்த்த ஆஷா ஆதியின் பக்கம் திரும்பி, “இந்த குரங்குங்க இரண்டும் என்னைப் பற்றி ஏதோ பேசி இருக்கிறது அதுதான் இந்த அளவுக்கு சிரிக்கிறார்கள்..” என்று சொல்ல, “என்னால் வெளிபடைய சொல்ல முடியல ஆஷா..” என்று ஆதி விளையாட்டாக சொல்லி அவளிடம் வாங்கிக் கண்டிக்கொண்டான்..

ஆதி, ஆஷா, அறிவு மூவரையும் பார்த்த அன்பு, “என்னடா இன்னமும் நந்தியையும், கரடியையும் காணோம் என்று நினைத்தேன் வந்துவிட்டது..” என்று முணுமுணுக்க அதை கேட்ட எழில் சிரிக்க முடியாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்..

அவள் சிரிப்பதை மற்ற மூவரும் அதிசயத்தைப் பார்ப்பது போல பார்க்க, அன்பு மட்டும் நிறைவுடன் அவளின் முகத்தைப் பார்த்தான்.. அவளின் இதழோடு போட்டிப் போட்டுக் கொண்டு அவளின் விழிகளும் சிரிக்க அதில் தன்னை தொலைத்த வண்ணம் அமர்ந்திருந்தான் அன்பு..
????????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top