அத்தியாயம் – 25
வீட்டில் இருந்த அனைவருக்கும் உண்மை தெரிந்து அவர்கள் அவளைப் பார்க்க வர, எழில் கண்விழித்து அன்புவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
இங்கே அறிவு எல்லோரிடமும் உண்மை சொல்லிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் டாக்டரின் டிரீட்மெண்ட் மூலம் ஆபத்தில் இருந்து மீண்டு வந்தாள் எழில்..
அவளது அறையை விட்டு வெளியே வந்த டாக்டர், “நீங்க போய் பார்க்கலாம்..” என்று மட்டும் கூறியதும், “தேங்க்ஸ் டாக்டர்..” என்று அறைக்குள் சென்று பார்த்தான்..
அவன் அவளின் அருகில் சென்று பார்க்க மெல்ல கண்களைத் திறந்து அன்புவைப் பார்த்தாள் எழில்.. இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு பிரியாமல் இருந்தது சில நிமிடங்கள்..
அவளின் அருகில் சென்றவன் அவளின் முகத்தை தனது கைகளால் வருடி, “கொஞ்ச நேரத்தில் என்னை தவிக்க விட்டுவிட்டாய் இல்ல..” என்று கேட்டதும் அவளின் கண்களில் கண்ணீர் கோடுகள்..
“என்னோட மௌனம் தான் எழில் உன்னை என்னிடம் இருந்து பிரிக்க நினைத்தது.. உன்னை மறுபடியும் பார்த்த அன்றே நான் என்னோட காதலை சொல்லி இருக்கணும்.. என்னோட தப்புதான்..” என்று அவன் சொல்லிவிட்டு அவளின் கண்ணீரைத் துடைத்துவிட,
“நான் நேற்று கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும்.. என்னோட அவசரத்தால் வந்த விளைவு தான் இது..” என்று அவள் கூறவும்,
“உங்கள் இருவரையும் உங்களின் வழியில் விட்டது எங்களின் தப்பு..” என்று கூறினாள் ஆஷா. அவளின் குரல் கேட்டு திரும்பி வாசலைப் பார்த்தனர் அன்புவும், எழிலும்.. . [இந்த மைன்ட் வாய்ஸ் எங்கையோ கேட்ட மாதிரியே இருக்கிறதே..]
அவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த ஆஷா, “இத்தனை நாள் மனதில் வைத்திருந்தவள் இன்றும் அமைதியாக வீட்டிற்குள் இருந்திருந்தால் பாம்பு உன்னை வந்து கொத்தி இருக்குமா..?!” என்று கோபத்தில் காத்த ஆரமித்தாள்.. “ஆஷா எழிலை திட்டாதே..” என்று இடையில் புகுந்தான் அன்பு..
“வாடா நல்லவனே உன்னைத்தான் நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன்.. உண்மையைச் சொல்லு சொல்லு என்று நானும் அவரும் எத்தனை முறை உன்னிடம் கேட்டிருப்போம்.. நீ உண்மையைச் சொன்னாயா..? இல்ல..” என்றவள் நிறுத்திவிட்டு அன்புவை முறைத்துக் கொண்டே,
மீண்டும், “சரிப்பா எங்களிடம் தான் உண்மையைச் சொல்லாமல் மறைத்தாய்.. இதோ இவளிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டியது தானே..” என்று கேட்டாள் ஆஷா..
அவளுக்கு எழிலில் இழப்பு அவ்வளவு பெரியதாக தெரிந்தது.. அவள் மட்டும் இறந்திருந்தால் கதறுவது அவள் மட்டும் கிடையாதே..?! அன்புவின் மொத்த குடும்பமும் அவளுக்காக கதறி இருக்கும்..
அவளின் மீது அந்த அளவிற்கு உயிரை வைத்திருந்தனர் அன்புவின் வீட்டில் உள்ள ஒவ்வொரு வரும்.. அதனால் விளைந்த கோபம் தான் இது.. அவளின் கோபம் கண்டு அங்கிருந்த அனைவரும் வாயடைத்து நின்றனர்..!
ஜெயந்திம்மா இந்த விஷயத்தில் ரொம்பவே நொந்து போனார்.. அவரின் விளையாட்டு இங்கே வினையாக மாறிப்போனதை நினைத்து அவரின் மனம் அவரிடம் இல்லை..
ஆஷாவின் ஒவ்வொரு கேள்வியிலும் இருந்த உண்மை உணர்ந்து அன்பு அமைதியாக இருக்க, “ஒரு நிமிஷம் இவள் பிழைக்கவில்லை என்று நினைத்து பாரு அன்பு உன்னோட வாழ்க்கை எப்படி நரகமாக மாறி இருக்கும் என்று..” என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு தனது கணவனின் தோளில் சாய்ந்து அழுக ஆரமித்தாள்..
அதுவரை அமைதியாக இருந்த ஜெயந்திம்மா எழில் அருகில் வந்து, “என்னோட விளையாட்டு தான் இங்கே வினையாக மாறிவிட்டது.. உனக்கு சந்தோசத்தை அதிகமாக கொடுக்கணும் என்று நினைத்தே உன்னோட அண்ணியிடம் உண்மையைச் சொல்லாதே என்று சொன்னேன்.. ஆனால் அது உனக்கு இப்படி ஒரு ஆபத்தைக் கொடுக்கும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை எழில்..” என்று சொல்ல அவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக,
அப்பொழுதுதான் அன்புவிற்கும் எழிலுக்கு ஒரு விஷயம் புரிந்தது.. இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் எல்லோரும் இருப்பார்கள் ஆனால் உணர்வுகளைத் தொலைத்து நடைபிணமாக இருப்பார்கள் என்று..!
அவள் மீண்டு வந்ததும் இளா – இனியா திருமணம் நல்லப்படியாக நடக்க அதற்கு அத்தனை வேலைகளையும் வரிந்துக் கட்டிக்கொண்டு செய்துக் கொண்டிருந்த எழிலை பார்த்த அன்பு,
“இங்கே என்னடி பண்ணிட்டு இருக்கிறாய்..?” என்ற கேள்வியுடன் அவளின் அருகில் வந்து நிற்க, “பார்த்த தெரியலையா அன்பு வேலை செய்கிறேன்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,
அவனோ, “அங்கே முகூர்த்திற்கு நேரம் ஆகிறது வா..” என்று அழைத்துக்கொண்டு மணமேடைக்கு செல்ல இளா – இனியா திருமணம் பெரியோர்கள் ஆசீர்வாததில் நல்ல படியாக நடக்க அடுத்து அவளுக்கு செய்ய வேண்டிய திருமண சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு அவளை மறுவீட்டிற்கு அனுப்பும் பொழுதே மணி இரண்டை கடந்திருந்தது..
அதை முடித்துவிட்டு வெளியே வந்தனர் அன்பும், எழிலும்..! அவர்களை அனைவரும் தேட, இருவரும் கையோடு கை கோர்த்துக் கொண்டு எழிலின் வீடு நோக்கி நடக்க தொடங்கினர்..
இவர்கள் இருவரையும் சிரிப்புடன் பார்த்த ஆஷா, “ஏய் யார் முறை செய்வது..?” என்று குரல் கொடுக்க, “அதெல்லாம் செய்து முடித்துவிட்டோம்..” என்று அவர்கள் குறும்பாகக் குரல் கொடுக்க, “டேய் அன்பு எழிலை அழைத்துக் கொண்டு எங்கேடா போகிறாய்..?!” என்று கேட்டான் ஆதி..
அவனின் கேள்விக்கு திரும்பிய அன்பு, “எங்களின் காதல் சரணாலயத்திற்கு போகிறோம் டா..” என்று சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டு எழில் வீட்டிற்கு சென்றான்..
அவர்கள் வந்த வழிதோறும் அவர்களை ஜோடியாகப் பார்த்த சந்தோசத்தில் மரங்கள் தங்களின் சந்தோசத்தை கிளைகளாக அசைத்து வெளிப்படுத்த அதைப் பார்த்துக் கொண்டே நடந்த எழில் பாட தொடங்கினாள்
“மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும்..
வான்வெளி எங்கும் என்காதல் கீதம் பாடும் நாள் வேண்டும்..
தேவைகள் எல்லாம் தீராதநேரம் தேவன் நீ வேண்டும்..
தேடும் நாள் வேண்டும்.. ஏதோ நினைவுகள் கனவுகள்..” என்று அவள் பாட பாடலின் அர்த்தம் புரிந்து சிரித்த வண்ணம் நடந்து வந்தான் அன்பு..
அவர்கள் கையோடு கைகோர்த்து தென்றலும் அவர்களுடன் இணைந்த வண்ணம் வீசியது தனது மெல்லிய தென்றல் காற்றை அதில் அவர்கள் உடல்கள் சிலிர்த்தது..
இதோ ஒரு வாரத்திற்கு முன்னாடி அவள் தன்னிடம் காதலைச் சொல்லிய அதே இடத்தில் அதே காதலுடன் அவளை தோளோடு சாய்த்துக் கொண்டு மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தான் அன்பு..
அவர்களின் மௌனத்தைக் கலைக்க நினைக்காமல் காற்று அவர்கள் இடையே அமைதியாக பயணிக்க அந்த ஏகாந்தநிலையை இருவரையும் ரசிக்க அவளின் விரலில் இருந்த மோதிரம் பார்த்து,
“எழில் எப்பொழுது இருந்து நீ என்னைக் காதலிக்க ஆரமித்தாய்..?” என்று கேட்டதும் அவளையும் மீறி அவளின் இதழ்கள் மலர்ந்தது புன்னகையில்...!
“தெரியல அன்பு.. உன்னைப் பார்த்த அன்றே நீ என்னை..” என்று சொல்லி அவள் நிறுத்திவிட்டு அவனைக் குறும்பாகப் பார்க்க, “சொல்லுடி..” என்றான் அன்பு.. “நீ என்னை பாதிக்கல..” என்று சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்த அன்பு, “அப்புறம் எப்படி நான் உன்னை பாதித்தேன்..?!” என்று கேட்டதும்,
“உன்னைப் பற்றி ஆஷா சொன்ன அந்த தருணத்தில் நான் எப்படி உணர்ந்தேன் என்று எனக்கே தெரியாது.. இவள் செய்த செட்டையில் ஒருவன் மூன்று வருடமாக சாப்பிடாமல் கடையில் சாப்பிடுகிறான் என்று நினைக்க எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது..” என்று சொல்ல அவனும் அதை உணர்ந்தே இருந்தான்..
அவனின் தோளில் இன்னும் வாகாக சாய்த்துக் கொண்டு, “உன்னை மறுபடியும் சந்தித்துவிட்டு நான் வீடு வந்து என்னோட அண்ணன் என்னை அடித்த பொழுது இருந்த வலி கூட நீ என்னோட பேச்சைக் கேட்டு ஆஷாவிற்கு சேர்த்து சாப்பாடு எடுத்து வந்தது நினைத்து சந்தோசமாக இருந்தது.. அதேபோல எனக்கு ரொம்ப பிடித்தது உன்னோட அந்த செயல்..” என்று சொல்ல,
அவன் மெளனமாக அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த எழில், “தூங்கிட்டியா அன்பு..” என்று கேட்டதும், அவளின் முகத்தைப் பார்த்த அன்பு, “எனக்கு என்ன பைத்தியமா..?! நீ உன்னோட காதலை தன்னை மறந்து சொல்லும் பொழுது நான் எப்படி தூங்குவேன்..” என்று சொல்ல,
“அப்புறம் அமைதியாக இருக்கிறாய்..” என்று அவள் சந்தேகமாக கேட்டதும், “இவ்வளவு காதலையும் மனதில் வைத்துக் கொண்டு உண்மையைச் சொல்லாமல் அத்தனை வழியையும் தாங்கிக்கொண்டு என்னோட முத்தத்திற்கு அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாய் என்று யோசித்தேன்..” என்று அவன் குறும்பாகச் சொல்ல, அவள் முகம் குப்பென்று சிவந்து போனது..
அவளின் சிவந்த முகத்தை அவனின் மார்பில் முகம் புதைத்து மறைத்துக் கொள்ள, அவளின் வெக்கம் கண்டு வாய்விட்டு சிரித்தான் அன்பு.. அவன் சிரிப்பதைக் கண்டு, “சிரிக்காதே அன்பு..” என்று அவனின் மார்பில் கைகளால் குத்தினாள் எழில்..
அவள் அடிக்க, அவளின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டவன், “அடிக்காதே எழில்.. ம்ம் சொல்லு அப்புறம் எப்படி காதல் என்று கண்டு பிடித்தாய்..?” என்று கேட்டான்..
“அதுவா என்னை மாப்பிள்ளை வீட்டில் இருந்து பார்க்க வந்திருந்த பொழுது தான் என்னோட மனதில் இருந்த உன் மீதான காதலை உணர்ந்தேன்..” என்று அவள் சொல்ல,
“மாப்பிள்ளை வந்து பார்த்து நீ மட்டும் காதலை உணராமலே போயிருந்தால் என்னோட நிலை..?!” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், “அதோ பரிதாபம் என்ற நிலைதான்..” என்று கலகலவென்று சிரித்தாள் எழில்..
வீட்டில் இருந்த அனைவருக்கும் உண்மை தெரிந்து அவர்கள் அவளைப் பார்க்க வர, எழில் கண்விழித்து அன்புவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
இங்கே அறிவு எல்லோரிடமும் உண்மை சொல்லிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் டாக்டரின் டிரீட்மெண்ட் மூலம் ஆபத்தில் இருந்து மீண்டு வந்தாள் எழில்..
அவளது அறையை விட்டு வெளியே வந்த டாக்டர், “நீங்க போய் பார்க்கலாம்..” என்று மட்டும் கூறியதும், “தேங்க்ஸ் டாக்டர்..” என்று அறைக்குள் சென்று பார்த்தான்..
அவன் அவளின் அருகில் சென்று பார்க்க மெல்ல கண்களைத் திறந்து அன்புவைப் பார்த்தாள் எழில்.. இருவரின் விழிகளும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு பிரியாமல் இருந்தது சில நிமிடங்கள்..
அவளின் அருகில் சென்றவன் அவளின் முகத்தை தனது கைகளால் வருடி, “கொஞ்ச நேரத்தில் என்னை தவிக்க விட்டுவிட்டாய் இல்ல..” என்று கேட்டதும் அவளின் கண்களில் கண்ணீர் கோடுகள்..
“என்னோட மௌனம் தான் எழில் உன்னை என்னிடம் இருந்து பிரிக்க நினைத்தது.. உன்னை மறுபடியும் பார்த்த அன்றே நான் என்னோட காதலை சொல்லி இருக்கணும்.. என்னோட தப்புதான்..” என்று அவன் சொல்லிவிட்டு அவளின் கண்ணீரைத் துடைத்துவிட,
“நான் நேற்று கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும்.. என்னோட அவசரத்தால் வந்த விளைவு தான் இது..” என்று அவள் கூறவும்,
“உங்கள் இருவரையும் உங்களின் வழியில் விட்டது எங்களின் தப்பு..” என்று கூறினாள் ஆஷா. அவளின் குரல் கேட்டு திரும்பி வாசலைப் பார்த்தனர் அன்புவும், எழிலும்.. . [இந்த மைன்ட் வாய்ஸ் எங்கையோ கேட்ட மாதிரியே இருக்கிறதே..]
அவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த ஆஷா, “இத்தனை நாள் மனதில் வைத்திருந்தவள் இன்றும் அமைதியாக வீட்டிற்குள் இருந்திருந்தால் பாம்பு உன்னை வந்து கொத்தி இருக்குமா..?!” என்று கோபத்தில் காத்த ஆரமித்தாள்.. “ஆஷா எழிலை திட்டாதே..” என்று இடையில் புகுந்தான் அன்பு..
“வாடா நல்லவனே உன்னைத்தான் நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன்.. உண்மையைச் சொல்லு சொல்லு என்று நானும் அவரும் எத்தனை முறை உன்னிடம் கேட்டிருப்போம்.. நீ உண்மையைச் சொன்னாயா..? இல்ல..” என்றவள் நிறுத்திவிட்டு அன்புவை முறைத்துக் கொண்டே,
மீண்டும், “சரிப்பா எங்களிடம் தான் உண்மையைச் சொல்லாமல் மறைத்தாய்.. இதோ இவளிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டியது தானே..” என்று கேட்டாள் ஆஷா..
அவளுக்கு எழிலில் இழப்பு அவ்வளவு பெரியதாக தெரிந்தது.. அவள் மட்டும் இறந்திருந்தால் கதறுவது அவள் மட்டும் கிடையாதே..?! அன்புவின் மொத்த குடும்பமும் அவளுக்காக கதறி இருக்கும்..
அவளின் மீது அந்த அளவிற்கு உயிரை வைத்திருந்தனர் அன்புவின் வீட்டில் உள்ள ஒவ்வொரு வரும்.. அதனால் விளைந்த கோபம் தான் இது.. அவளின் கோபம் கண்டு அங்கிருந்த அனைவரும் வாயடைத்து நின்றனர்..!
ஜெயந்திம்மா இந்த விஷயத்தில் ரொம்பவே நொந்து போனார்.. அவரின் விளையாட்டு இங்கே வினையாக மாறிப்போனதை நினைத்து அவரின் மனம் அவரிடம் இல்லை..
ஆஷாவின் ஒவ்வொரு கேள்வியிலும் இருந்த உண்மை உணர்ந்து அன்பு அமைதியாக இருக்க, “ஒரு நிமிஷம் இவள் பிழைக்கவில்லை என்று நினைத்து பாரு அன்பு உன்னோட வாழ்க்கை எப்படி நரகமாக மாறி இருக்கும் என்று..” என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு தனது கணவனின் தோளில் சாய்ந்து அழுக ஆரமித்தாள்..
அதுவரை அமைதியாக இருந்த ஜெயந்திம்மா எழில் அருகில் வந்து, “என்னோட விளையாட்டு தான் இங்கே வினையாக மாறிவிட்டது.. உனக்கு சந்தோசத்தை அதிகமாக கொடுக்கணும் என்று நினைத்தே உன்னோட அண்ணியிடம் உண்மையைச் சொல்லாதே என்று சொன்னேன்.. ஆனால் அது உனக்கு இப்படி ஒரு ஆபத்தைக் கொடுக்கும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை எழில்..” என்று சொல்ல அவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக,
அப்பொழுதுதான் அன்புவிற்கும் எழிலுக்கு ஒரு விஷயம் புரிந்தது.. இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் எல்லோரும் இருப்பார்கள் ஆனால் உணர்வுகளைத் தொலைத்து நடைபிணமாக இருப்பார்கள் என்று..!
அவள் மீண்டு வந்ததும் இளா – இனியா திருமணம் நல்லப்படியாக நடக்க அதற்கு அத்தனை வேலைகளையும் வரிந்துக் கட்டிக்கொண்டு செய்துக் கொண்டிருந்த எழிலை பார்த்த அன்பு,
“இங்கே என்னடி பண்ணிட்டு இருக்கிறாய்..?” என்ற கேள்வியுடன் அவளின் அருகில் வந்து நிற்க, “பார்த்த தெரியலையா அன்பு வேலை செய்கிறேன்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,
அவனோ, “அங்கே முகூர்த்திற்கு நேரம் ஆகிறது வா..” என்று அழைத்துக்கொண்டு மணமேடைக்கு செல்ல இளா – இனியா திருமணம் பெரியோர்கள் ஆசீர்வாததில் நல்ல படியாக நடக்க அடுத்து அவளுக்கு செய்ய வேண்டிய திருமண சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு அவளை மறுவீட்டிற்கு அனுப்பும் பொழுதே மணி இரண்டை கடந்திருந்தது..
அதை முடித்துவிட்டு வெளியே வந்தனர் அன்பும், எழிலும்..! அவர்களை அனைவரும் தேட, இருவரும் கையோடு கை கோர்த்துக் கொண்டு எழிலின் வீடு நோக்கி நடக்க தொடங்கினர்..
இவர்கள் இருவரையும் சிரிப்புடன் பார்த்த ஆஷா, “ஏய் யார் முறை செய்வது..?” என்று குரல் கொடுக்க, “அதெல்லாம் செய்து முடித்துவிட்டோம்..” என்று அவர்கள் குறும்பாகக் குரல் கொடுக்க, “டேய் அன்பு எழிலை அழைத்துக் கொண்டு எங்கேடா போகிறாய்..?!” என்று கேட்டான் ஆதி..
அவனின் கேள்விக்கு திரும்பிய அன்பு, “எங்களின் காதல் சரணாலயத்திற்கு போகிறோம் டா..” என்று சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டு எழில் வீட்டிற்கு சென்றான்..
அவர்கள் வந்த வழிதோறும் அவர்களை ஜோடியாகப் பார்த்த சந்தோசத்தில் மரங்கள் தங்களின் சந்தோசத்தை கிளைகளாக அசைத்து வெளிப்படுத்த அதைப் பார்த்துக் கொண்டே நடந்த எழில் பாட தொடங்கினாள்
“மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும்..
வான்வெளி எங்கும் என்காதல் கீதம் பாடும் நாள் வேண்டும்..
தேவைகள் எல்லாம் தீராதநேரம் தேவன் நீ வேண்டும்..
தேடும் நாள் வேண்டும்.. ஏதோ நினைவுகள் கனவுகள்..” என்று அவள் பாட பாடலின் அர்த்தம் புரிந்து சிரித்த வண்ணம் நடந்து வந்தான் அன்பு..
அவர்கள் கையோடு கைகோர்த்து தென்றலும் அவர்களுடன் இணைந்த வண்ணம் வீசியது தனது மெல்லிய தென்றல் காற்றை அதில் அவர்கள் உடல்கள் சிலிர்த்தது..
இதோ ஒரு வாரத்திற்கு முன்னாடி அவள் தன்னிடம் காதலைச் சொல்லிய அதே இடத்தில் அதே காதலுடன் அவளை தோளோடு சாய்த்துக் கொண்டு மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தான் அன்பு..
அவர்களின் மௌனத்தைக் கலைக்க நினைக்காமல் காற்று அவர்கள் இடையே அமைதியாக பயணிக்க அந்த ஏகாந்தநிலையை இருவரையும் ரசிக்க அவளின் விரலில் இருந்த மோதிரம் பார்த்து,
“எழில் எப்பொழுது இருந்து நீ என்னைக் காதலிக்க ஆரமித்தாய்..?” என்று கேட்டதும் அவளையும் மீறி அவளின் இதழ்கள் மலர்ந்தது புன்னகையில்...!
“தெரியல அன்பு.. உன்னைப் பார்த்த அன்றே நீ என்னை..” என்று சொல்லி அவள் நிறுத்திவிட்டு அவனைக் குறும்பாகப் பார்க்க, “சொல்லுடி..” என்றான் அன்பு.. “நீ என்னை பாதிக்கல..” என்று சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்த அன்பு, “அப்புறம் எப்படி நான் உன்னை பாதித்தேன்..?!” என்று கேட்டதும்,
“உன்னைப் பற்றி ஆஷா சொன்ன அந்த தருணத்தில் நான் எப்படி உணர்ந்தேன் என்று எனக்கே தெரியாது.. இவள் செய்த செட்டையில் ஒருவன் மூன்று வருடமாக சாப்பிடாமல் கடையில் சாப்பிடுகிறான் என்று நினைக்க எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது..” என்று சொல்ல அவனும் அதை உணர்ந்தே இருந்தான்..
அவனின் தோளில் இன்னும் வாகாக சாய்த்துக் கொண்டு, “உன்னை மறுபடியும் சந்தித்துவிட்டு நான் வீடு வந்து என்னோட அண்ணன் என்னை அடித்த பொழுது இருந்த வலி கூட நீ என்னோட பேச்சைக் கேட்டு ஆஷாவிற்கு சேர்த்து சாப்பாடு எடுத்து வந்தது நினைத்து சந்தோசமாக இருந்தது.. அதேபோல எனக்கு ரொம்ப பிடித்தது உன்னோட அந்த செயல்..” என்று சொல்ல,
அவன் மெளனமாக அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்த எழில், “தூங்கிட்டியா அன்பு..” என்று கேட்டதும், அவளின் முகத்தைப் பார்த்த அன்பு, “எனக்கு என்ன பைத்தியமா..?! நீ உன்னோட காதலை தன்னை மறந்து சொல்லும் பொழுது நான் எப்படி தூங்குவேன்..” என்று சொல்ல,
“அப்புறம் அமைதியாக இருக்கிறாய்..” என்று அவள் சந்தேகமாக கேட்டதும், “இவ்வளவு காதலையும் மனதில் வைத்துக் கொண்டு உண்மையைச் சொல்லாமல் அத்தனை வழியையும் தாங்கிக்கொண்டு என்னோட முத்தத்திற்கு அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாய் என்று யோசித்தேன்..” என்று அவன் குறும்பாகச் சொல்ல, அவள் முகம் குப்பென்று சிவந்து போனது..
அவளின் சிவந்த முகத்தை அவனின் மார்பில் முகம் புதைத்து மறைத்துக் கொள்ள, அவளின் வெக்கம் கண்டு வாய்விட்டு சிரித்தான் அன்பு.. அவன் சிரிப்பதைக் கண்டு, “சிரிக்காதே அன்பு..” என்று அவனின் மார்பில் கைகளால் குத்தினாள் எழில்..
அவள் அடிக்க, அவளின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டவன், “அடிக்காதே எழில்.. ம்ம் சொல்லு அப்புறம் எப்படி காதல் என்று கண்டு பிடித்தாய்..?” என்று கேட்டான்..
“அதுவா என்னை மாப்பிள்ளை வீட்டில் இருந்து பார்க்க வந்திருந்த பொழுது தான் என்னோட மனதில் இருந்த உன் மீதான காதலை உணர்ந்தேன்..” என்று அவள் சொல்ல,
“மாப்பிள்ளை வந்து பார்த்து நீ மட்டும் காதலை உணராமலே போயிருந்தால் என்னோட நிலை..?!” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், “அதோ பரிதாபம் என்ற நிலைதான்..” என்று கலகலவென்று சிரித்தாள் எழில்..