அத்தியாயம் – 26 [பாகம் – 2]
அன்பு – எழில், ஆதி – ஆஷா, இளா – இனியா மூன்று காதல் பறவைகளும் சேர்ந்து இன்னொரு காதல் பறவைகளான அறிவு – மதியழகி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து நான்கு ஜோடிகளும் சென்னையை செல்ல அவர்களை அனந்த கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர் ஜெயந்திம்மா, தனலட்சுமி, மஞ்சு மூவரும்..
எழில் மட்டும் தான் ரொம்பவே அழுதாள்.. அவளின் இரண்டு அம்மாவையும், உயிர் தங்கையையும் பிரிவது அவளுக்கு மிகுந்த துயரத்தைக் கொடுக்க அவளை அரவணைத்து சமாதானம் செய்து அன்போடு அவளை வழியனுப்பி வைக்க தியாகு – சுமித்ரா கண்கள் கூட கலங்கியது.. சென்னை வந்ததும் அவரவர் வேலையில் அனைவரும் ஈடுபட, அன்புவின் வீட்டில் அழகாக பொருந்திப் போயினர் எழில் மற்றும் மதியும்...!
மதிக்கு எழில் இடம் இருந்த பொறுமையும், அமைதியும் பிடித்துப் போக, ‘அக்கா.. அக்கா..’ என்று அவள் பின்னோடு சுற்றிவர வீட்டில் யாரை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் எதை எப்படி செய்ய வேண்டும் என்று அனைத்தையும் அவளுக்கு ஒரு அக்காவாக இருந்து கற்றுக் கொடுத்தாள் எழில்..
ஜெயந்திம்மா, தனம் இருவரும் அடிக்கடி போன் செய்து அவளை விசாரிக்க, மாலை வேலை முடிந்து அன்பு வரும் பொழுது அவனுடன் இணைந்து வரும் ஆதி – ஆஷா இருவரும் வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டு தான் செல்வார்கள்.. தியாகு – சுமித்ரா இவர்கள் செய்யும் சேட்டைக் கண்டு மனம் விட்டு சிரித்து சந்தோசத்தில் திளைப்பர்..
சிலநாளில் இனியாவும் தனது கணவனுடன் வந்து அந்த பூஞ்சோலை கிளிகளுடன் சேர்ந்து சந்தோசமாக இருப்பாள்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், ஆஷா இப்பொழுது சூப்பராக சமைப்பாள்..
அவளின் சமையல் சாப்பிடவே அங்கே அனைவரும் தவம் இருக்கும் அளவிற்கு அவளுக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடுத்தாள் எழில்.. அன்பு இப்பொழுது எல்லாம் மௌனமொழி, விழிமொழி எல்லாம் பேசுவது கிடையாது.. அவன் மனதில் நினைப்பதை முதலில் எழிலிடம் சொல்லிவிட தன்னோட காதலை ஒவ்வொரு இடத்திலும் நிலை நாட்டினான்..!
அவளும் அவனுக்கு சளைக்காமல் பதில் கொடுத்து அனைவரையும் காதல் மொழியை இப்படி தான் பேச வேண்டும் அழகாக கற்றுக் கொடுக்க அதை கற்றுக் கொண்டனர் அனைவரும்..!
நாட்கள் அழகாக அதே அளவு ஆனந்தமாகச் செல்ல அன்று மருமகள் இருவருடன் சேர்ந்து சமையல் செய்துக் கொண்டிருந்த சுமித்ரா,
“எழில், மதி..” என்று இருவரையும் அழைக்க காலையிலேயே குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இருவரும், “இதோ வருகிறோம் அம்மா..” என்று குரல் கொடுக்க, அவர்கள் இருவரையும் செல்லமாக முறைத்தார் சுமித்ரா..
அவர் பார்வை கண்டு இருவரும் முழிக்க, “நான் உன்னிடம் என்ன சொல்லி இருக்கிறேன்.. என்னை அத்தை என்று கூப்பிடு என்று சொல்லிருக்கிறேனா...? இல்லையா..?” என்று எழிலைப் பார்த்து கேட்டதும், “ஸ்ஸ்ஸ்..” என்று நாக்கைக் கடித்த எழில்,
“இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் அத்தை..” என்று சொல்ல, “சரிம்மா உங்கள் இருவரிடமும் நானும், மாமாவும் ஒரு விஷயம் பேசணும்.. அதுக்கு முன்னாடி என்னோட மகன்கள் இருவரையும் இங்கே அழைத்து வாருங்கள்..” என்று சொல்ல இருவரும் தங்களின் அறைக்கு சென்றனர்..
தங்கள் அறைக்கு சென்ற எழில் படுக்கையைப் பார்க்க அதில் நன்றாகத் தூக்கிக் கொண்டிருந்தான் அன்பரசன்.. அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.. அவனின் அருகில் சென்றவள்,
“அன்பு இன்னும் என்ன தூக்கம் எழுந்திரிங்க..” என்று அவனைத் தட்டி எழுப்ப, அவளின் கையைப் பிடித்து இழுத்து அவளைத் தனது மார்போடுப் போட்டுக் கொண்டவன், அவளின் இதழில் இதழ் பதித்து நிமிர்ந்து, “குட் மார்னிங்..” என்று சொல்ல,
“எருமை காலையில் எழுந்ததும் குளிக்காமல் என்ன சேட்டை செய்கிறாய்..” என்று அவனின் மார்பில் அவள் பொய்யாக அடிக்க, “சும்மா நடிக்காதே எழில்.. நீயும் ரசித்தாய் என்று எனக்கு தெரியும்..” என்று அவன் குறும்பாகச் சொல்ல, அதுக்கும் சேர்த்து அவளிடம் வாங்கிக் கொண்டான்..
அப்பொழுது தான் அவளுக்கே ஞாபகம் வந்து, “ஐயோ அத்தை உங்களை அழைத்துவர சொன்னாங்க.. எழுந்திரிங்க..” என்று அவள் சொல்ல, “ம்ம் சரிடி இன்னும் ஒன்னு தா..” என்று அவன் படுத்துக் கொண்டு அவளிடம் பேரம் பேச, “மாமா விளையாடாதே.. எழுந்திரி..” என்று அவள் சொல்ல,
அந்த வார்த்தைக் கேட்டு, “இந்த வார்த்தை சொல்லியே என்னை ஒரு வழி பண்ணு..” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், “நான் குளித்துவிட்டு வருகிறேன்..” என்று பாத்ரூம் உள்ளே சென்றான்..
எழிலுக்கு இது ஒரு வசதி.. அன்பிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால், ‘மாமா..’ என்று அழைத்தாலே போதும், அந்த காரியம் ஜெயம் தான்..
அவன் சென்றதும் தனது அறையைவிட்டு கீழே வர, மதியும் சிரிப்புடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.. இருவரும் கீழே இறங்கிச்சென்று தங்களின் வேலையைக் கவனிக்க, “அவங்க இருவரும் எங்கே..?” என்று கேட்டார் தியாகு..
“வருவாங்க மாமா..” என்று குரல் கொடுத்தவர்கள் காலையில் செய்ய வேண்டிய சமையல் வேலையில் ஈடுபட, அன்பு, அறிவு இருவரும் கீழே வந்து சோபாவில் அமர, மருமகள் இருவரையும் அழைத்தார் சுமித்ரா..
தங்களின் வேலையை முடித்துவிட்டு இருவரும் ஹாலிற்கு வந்து நிற்க, நால்வரையும் பொதுவாகப் பார்த்த தியாகு, “நானும், அம்மாவும் கொஞ்ச நாள் கிராமத்தில் போய் இருக்கலாம் என்று இருக்கிறோம் அன்பு..” என்று சொல்ல மற்ற நால்வரும் அதிர்ந்தனர்..
“என்னப்பா திடீரென்று இப்படி சொல்றீங்க..?!” என்று அறிவு கேட்டதும், “எனக்கும், உன்னோட அம்மாவிற்கும் கொஞ்ச நாள் பாட்டி கூட இருக்கணும் என்று நினைக்கிறோம்..” என்று அவர் நிறுத்த, “எனக்கும் என்னோட அத்தையுடன் இருக்கணும் போல இருக்குடா..” என்று வாக்கியத்தை முடித்தார் சுமித்ரா..
அதற்கு அவர்களைப் பார்த்து அன்பும், அறிவும் சிந்திக்க, “அத்தை நாங்க இருவரும் ஏதாவது தப்பு செய்துவிட்டோமா..?” என்று கேட்டாள் மதி..
அதைக்கேட்டு நிமிர்ந்த சுமித்ரா, “எனக்கு அமைந்த மருமகள் இருவரும் தங்கம்.. அவங்க எதிலும் தப்பு செய்ய மாட்டார்கள்..” என்று சொல்ல, “அப்புறம் ஏன் அம்மா திடீரென்று இந்த முடிவு..?” என்று கேட்டான் அன்பு..
“இது நாள் வரையில் நான் இங்கே இருந்தது உங்கள் இருவரின் படிப்பு, வேலை என்று எல்லாவற்றையும் நினைத்துதான்.. அதுதான் இப்பொழுது வீட்டைப் பார்த்துக் கொள்ள இருவர் வந்துவிட்டார்கள்.. எனக்கு எந்த வேலையும் இல்லை.. அதுதான் நான் கொஞ்ச நாள் என்னோட அத்தை வீட்டில் அதுவும் எனக்கு பிடித்த கிராமத்தில் கொஞ்சநாள் இருக்கலாம் என்று இருக்கிறோம்..” என்று சொல்ல அதுவரை நடப்பதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எழில்,
“அத்தை நீங்களும் மாமாவும் கிராமத்துக் போறீங்க என்றால் என்னையும் அங்கே கூட்டிட்டு போங்க..” என்று சொல்ல, அவள் சொன்னதைக் கேட்டு மற்ற நால்வரும் அதிர, அன்பு கொஞ்சம் அதிகமாகவே அதிர்ந்தான்..
இந்த வார்த்தையை எழிலிடம் இருந்து அவன் சுத்தமாக எதிர்பார்க்காததால், அவளை அதிகமான அதிர்வுடன் பார்த்தான் அன்பு.. அவளோ தன்னோட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்ற நிலையில் நிற்க, “நீ எதுக்குமா அங்கே..?” என்று கேட்டார் தியாகு..
“மாமா உங்களிடம் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் அதை சொல்லும் தருணம் எனக்கு சரிவர அமையவில்லை..” என்று சொல்ல, “என்ன விஷயம் எழில்..?” என்று கேட்டார் தியாகு..
“மாமா இதை உங்களிடம் பேசக்கூடாது தான் இருந்தாலும் என்னோட நிலையை நீங்க அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்..” என்று சொல்ல அவள் என்ன சொல்ல போகிறாள் என்று கவனித்தனர் அனைவரும்..
“மாமா நான் இங்கே வருவதற்கு முன்னாடி விவசாயம் தான் செய்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.. இப்பொழுது அந்த வேலையை விட்டுவிட்டு உங்களின் பின்னோடு வந்தது எனக்கு மனதிற்கு வருத்தமாக இருக்கிறது..” என்று சொல்ல அவளை இழுத்து சோபாவில் அமர வைத்த அன்பு,
“நீ எதுக்கும் தயங்காமல் சொல்ல வேண்டிய விஷயத்தை தயங்காமல் சொல்லு..” என்று சொல்லவும் அதில் சந்தோசம் அடைந்தவள் தனது மனதில் இருப்பதை சொல்ல ஆரமித்தாள்..
“மாமா எனக்கு இங்கே இருக்கவே விருப்பம் இல்லை..” என்று நேரடியாக அவள் சொல்லவும், “ஏன் எழில்..” என்று மற்றவர்கள் அதிர அன்புவோ அவளின் கண்களைப் பார்த்தான்..
“அங்கே என்னோட செடிகள் ஒவ்வொன்றையும் குழந்தை போல வளர்ந்துவிட்டு இங்கே வந்ததும், அதற்கு சரியான நேரத்தில் தண்ணி விடுக்கின்றனரா..?! அவை செழிப்புடன் இருக்கிறதா..?! என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள்..” என்று சொல்ல அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க அன்பு அவளை அமைதியோடு பார்த்தான்..
அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “என்னடா இதுக்கு எல்லாம் வருந்துகிறாள்.. அதுக்கு தனியாக ஆள் வைத்துவிட்டாள் வேலை முடிந்தது..” என்று எளிமையாகத் தீர்வு சொல்ல,
“அப்பா அவள் சொல்ல வந்த விஷயத்தை அவள் இன்னும் முழுவதும் சொல்லவில்லை..” என்று தந்தையிடம் சொன்னவன், “ம்ம் நீ சொல்லு எழில்..” என்று அவள் சொல்ல வருவதை ஊக்கிவிக்கும் அளவில் சல்ல கணவனைப் பார்த்தவள்,
“என்னால் விவசாயத்தை விட முடியாது.. எனக்கு விவசாயம் என்னோட உயிர் மூச்சு மாதிரி.. என்னை நம்பி அங்கே பல குடும்பங்கள் இருக்கிறது.. அதனால் நான் ஊருக்கு சென்று விவசாயம் செய்ய போகிறேன்..” என்று தைரியமாகக் கூறினாள் எழில்.. அவள் இப்படி சொல்வாள் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை அன்பைத் தவிர..!
அன்பு – எழில், ஆதி – ஆஷா, இளா – இனியா மூன்று காதல் பறவைகளும் சேர்ந்து இன்னொரு காதல் பறவைகளான அறிவு – மதியழகி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து நான்கு ஜோடிகளும் சென்னையை செல்ல அவர்களை அனந்த கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர் ஜெயந்திம்மா, தனலட்சுமி, மஞ்சு மூவரும்..
எழில் மட்டும் தான் ரொம்பவே அழுதாள்.. அவளின் இரண்டு அம்மாவையும், உயிர் தங்கையையும் பிரிவது அவளுக்கு மிகுந்த துயரத்தைக் கொடுக்க அவளை அரவணைத்து சமாதானம் செய்து அன்போடு அவளை வழியனுப்பி வைக்க தியாகு – சுமித்ரா கண்கள் கூட கலங்கியது.. சென்னை வந்ததும் அவரவர் வேலையில் அனைவரும் ஈடுபட, அன்புவின் வீட்டில் அழகாக பொருந்திப் போயினர் எழில் மற்றும் மதியும்...!
மதிக்கு எழில் இடம் இருந்த பொறுமையும், அமைதியும் பிடித்துப் போக, ‘அக்கா.. அக்கா..’ என்று அவள் பின்னோடு சுற்றிவர வீட்டில் யாரை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் எதை எப்படி செய்ய வேண்டும் என்று அனைத்தையும் அவளுக்கு ஒரு அக்காவாக இருந்து கற்றுக் கொடுத்தாள் எழில்..
ஜெயந்திம்மா, தனம் இருவரும் அடிக்கடி போன் செய்து அவளை விசாரிக்க, மாலை வேலை முடிந்து அன்பு வரும் பொழுது அவனுடன் இணைந்து வரும் ஆதி – ஆஷா இருவரும் வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டு தான் செல்வார்கள்.. தியாகு – சுமித்ரா இவர்கள் செய்யும் சேட்டைக் கண்டு மனம் விட்டு சிரித்து சந்தோசத்தில் திளைப்பர்..
சிலநாளில் இனியாவும் தனது கணவனுடன் வந்து அந்த பூஞ்சோலை கிளிகளுடன் சேர்ந்து சந்தோசமாக இருப்பாள்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், ஆஷா இப்பொழுது சூப்பராக சமைப்பாள்..
அவளின் சமையல் சாப்பிடவே அங்கே அனைவரும் தவம் இருக்கும் அளவிற்கு அவளுக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடுத்தாள் எழில்.. அன்பு இப்பொழுது எல்லாம் மௌனமொழி, விழிமொழி எல்லாம் பேசுவது கிடையாது.. அவன் மனதில் நினைப்பதை முதலில் எழிலிடம் சொல்லிவிட தன்னோட காதலை ஒவ்வொரு இடத்திலும் நிலை நாட்டினான்..!
அவளும் அவனுக்கு சளைக்காமல் பதில் கொடுத்து அனைவரையும் காதல் மொழியை இப்படி தான் பேச வேண்டும் அழகாக கற்றுக் கொடுக்க அதை கற்றுக் கொண்டனர் அனைவரும்..!
நாட்கள் அழகாக அதே அளவு ஆனந்தமாகச் செல்ல அன்று மருமகள் இருவருடன் சேர்ந்து சமையல் செய்துக் கொண்டிருந்த சுமித்ரா,
“எழில், மதி..” என்று இருவரையும் அழைக்க காலையிலேயே குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இருவரும், “இதோ வருகிறோம் அம்மா..” என்று குரல் கொடுக்க, அவர்கள் இருவரையும் செல்லமாக முறைத்தார் சுமித்ரா..
அவர் பார்வை கண்டு இருவரும் முழிக்க, “நான் உன்னிடம் என்ன சொல்லி இருக்கிறேன்.. என்னை அத்தை என்று கூப்பிடு என்று சொல்லிருக்கிறேனா...? இல்லையா..?” என்று எழிலைப் பார்த்து கேட்டதும், “ஸ்ஸ்ஸ்..” என்று நாக்கைக் கடித்த எழில்,
“இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் அத்தை..” என்று சொல்ல, “சரிம்மா உங்கள் இருவரிடமும் நானும், மாமாவும் ஒரு விஷயம் பேசணும்.. அதுக்கு முன்னாடி என்னோட மகன்கள் இருவரையும் இங்கே அழைத்து வாருங்கள்..” என்று சொல்ல இருவரும் தங்களின் அறைக்கு சென்றனர்..
தங்கள் அறைக்கு சென்ற எழில் படுக்கையைப் பார்க்க அதில் நன்றாகத் தூக்கிக் கொண்டிருந்தான் அன்பரசன்.. அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.. அவனின் அருகில் சென்றவள்,
“அன்பு இன்னும் என்ன தூக்கம் எழுந்திரிங்க..” என்று அவனைத் தட்டி எழுப்ப, அவளின் கையைப் பிடித்து இழுத்து அவளைத் தனது மார்போடுப் போட்டுக் கொண்டவன், அவளின் இதழில் இதழ் பதித்து நிமிர்ந்து, “குட் மார்னிங்..” என்று சொல்ல,
“எருமை காலையில் எழுந்ததும் குளிக்காமல் என்ன சேட்டை செய்கிறாய்..” என்று அவனின் மார்பில் அவள் பொய்யாக அடிக்க, “சும்மா நடிக்காதே எழில்.. நீயும் ரசித்தாய் என்று எனக்கு தெரியும்..” என்று அவன் குறும்பாகச் சொல்ல, அதுக்கும் சேர்த்து அவளிடம் வாங்கிக் கொண்டான்..
அப்பொழுது தான் அவளுக்கே ஞாபகம் வந்து, “ஐயோ அத்தை உங்களை அழைத்துவர சொன்னாங்க.. எழுந்திரிங்க..” என்று அவள் சொல்ல, “ம்ம் சரிடி இன்னும் ஒன்னு தா..” என்று அவன் படுத்துக் கொண்டு அவளிடம் பேரம் பேச, “மாமா விளையாடாதே.. எழுந்திரி..” என்று அவள் சொல்ல,
அந்த வார்த்தைக் கேட்டு, “இந்த வார்த்தை சொல்லியே என்னை ஒரு வழி பண்ணு..” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், “நான் குளித்துவிட்டு வருகிறேன்..” என்று பாத்ரூம் உள்ளே சென்றான்..
எழிலுக்கு இது ஒரு வசதி.. அன்பிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால், ‘மாமா..’ என்று அழைத்தாலே போதும், அந்த காரியம் ஜெயம் தான்..
அவன் சென்றதும் தனது அறையைவிட்டு கீழே வர, மதியும் சிரிப்புடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.. இருவரும் கீழே இறங்கிச்சென்று தங்களின் வேலையைக் கவனிக்க, “அவங்க இருவரும் எங்கே..?” என்று கேட்டார் தியாகு..
“வருவாங்க மாமா..” என்று குரல் கொடுத்தவர்கள் காலையில் செய்ய வேண்டிய சமையல் வேலையில் ஈடுபட, அன்பு, அறிவு இருவரும் கீழே வந்து சோபாவில் அமர, மருமகள் இருவரையும் அழைத்தார் சுமித்ரா..
தங்களின் வேலையை முடித்துவிட்டு இருவரும் ஹாலிற்கு வந்து நிற்க, நால்வரையும் பொதுவாகப் பார்த்த தியாகு, “நானும், அம்மாவும் கொஞ்ச நாள் கிராமத்தில் போய் இருக்கலாம் என்று இருக்கிறோம் அன்பு..” என்று சொல்ல மற்ற நால்வரும் அதிர்ந்தனர்..
“என்னப்பா திடீரென்று இப்படி சொல்றீங்க..?!” என்று அறிவு கேட்டதும், “எனக்கும், உன்னோட அம்மாவிற்கும் கொஞ்ச நாள் பாட்டி கூட இருக்கணும் என்று நினைக்கிறோம்..” என்று அவர் நிறுத்த, “எனக்கும் என்னோட அத்தையுடன் இருக்கணும் போல இருக்குடா..” என்று வாக்கியத்தை முடித்தார் சுமித்ரா..
அதற்கு அவர்களைப் பார்த்து அன்பும், அறிவும் சிந்திக்க, “அத்தை நாங்க இருவரும் ஏதாவது தப்பு செய்துவிட்டோமா..?” என்று கேட்டாள் மதி..
அதைக்கேட்டு நிமிர்ந்த சுமித்ரா, “எனக்கு அமைந்த மருமகள் இருவரும் தங்கம்.. அவங்க எதிலும் தப்பு செய்ய மாட்டார்கள்..” என்று சொல்ல, “அப்புறம் ஏன் அம்மா திடீரென்று இந்த முடிவு..?” என்று கேட்டான் அன்பு..
“இது நாள் வரையில் நான் இங்கே இருந்தது உங்கள் இருவரின் படிப்பு, வேலை என்று எல்லாவற்றையும் நினைத்துதான்.. அதுதான் இப்பொழுது வீட்டைப் பார்த்துக் கொள்ள இருவர் வந்துவிட்டார்கள்.. எனக்கு எந்த வேலையும் இல்லை.. அதுதான் நான் கொஞ்ச நாள் என்னோட அத்தை வீட்டில் அதுவும் எனக்கு பிடித்த கிராமத்தில் கொஞ்சநாள் இருக்கலாம் என்று இருக்கிறோம்..” என்று சொல்ல அதுவரை நடப்பதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எழில்,
“அத்தை நீங்களும் மாமாவும் கிராமத்துக் போறீங்க என்றால் என்னையும் அங்கே கூட்டிட்டு போங்க..” என்று சொல்ல, அவள் சொன்னதைக் கேட்டு மற்ற நால்வரும் அதிர, அன்பு கொஞ்சம் அதிகமாகவே அதிர்ந்தான்..
இந்த வார்த்தையை எழிலிடம் இருந்து அவன் சுத்தமாக எதிர்பார்க்காததால், அவளை அதிகமான அதிர்வுடன் பார்த்தான் அன்பு.. அவளோ தன்னோட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்ற நிலையில் நிற்க, “நீ எதுக்குமா அங்கே..?” என்று கேட்டார் தியாகு..
“மாமா உங்களிடம் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் அதை சொல்லும் தருணம் எனக்கு சரிவர அமையவில்லை..” என்று சொல்ல, “என்ன விஷயம் எழில்..?” என்று கேட்டார் தியாகு..
“மாமா இதை உங்களிடம் பேசக்கூடாது தான் இருந்தாலும் என்னோட நிலையை நீங்க அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்..” என்று சொல்ல அவள் என்ன சொல்ல போகிறாள் என்று கவனித்தனர் அனைவரும்..
“மாமா நான் இங்கே வருவதற்கு முன்னாடி விவசாயம் தான் செய்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.. இப்பொழுது அந்த வேலையை விட்டுவிட்டு உங்களின் பின்னோடு வந்தது எனக்கு மனதிற்கு வருத்தமாக இருக்கிறது..” என்று சொல்ல அவளை இழுத்து சோபாவில் அமர வைத்த அன்பு,
“நீ எதுக்கும் தயங்காமல் சொல்ல வேண்டிய விஷயத்தை தயங்காமல் சொல்லு..” என்று சொல்லவும் அதில் சந்தோசம் அடைந்தவள் தனது மனதில் இருப்பதை சொல்ல ஆரமித்தாள்..
“மாமா எனக்கு இங்கே இருக்கவே விருப்பம் இல்லை..” என்று நேரடியாக அவள் சொல்லவும், “ஏன் எழில்..” என்று மற்றவர்கள் அதிர அன்புவோ அவளின் கண்களைப் பார்த்தான்..
“அங்கே என்னோட செடிகள் ஒவ்வொன்றையும் குழந்தை போல வளர்ந்துவிட்டு இங்கே வந்ததும், அதற்கு சரியான நேரத்தில் தண்ணி விடுக்கின்றனரா..?! அவை செழிப்புடன் இருக்கிறதா..?! என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள்..” என்று சொல்ல அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க அன்பு அவளை அமைதியோடு பார்த்தான்..
அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “என்னடா இதுக்கு எல்லாம் வருந்துகிறாள்.. அதுக்கு தனியாக ஆள் வைத்துவிட்டாள் வேலை முடிந்தது..” என்று எளிமையாகத் தீர்வு சொல்ல,
“அப்பா அவள் சொல்ல வந்த விஷயத்தை அவள் இன்னும் முழுவதும் சொல்லவில்லை..” என்று தந்தையிடம் சொன்னவன், “ம்ம் நீ சொல்லு எழில்..” என்று அவள் சொல்ல வருவதை ஊக்கிவிக்கும் அளவில் சல்ல கணவனைப் பார்த்தவள்,
“என்னால் விவசாயத்தை விட முடியாது.. எனக்கு விவசாயம் என்னோட உயிர் மூச்சு மாதிரி.. என்னை நம்பி அங்கே பல குடும்பங்கள் இருக்கிறது.. அதனால் நான் ஊருக்கு சென்று விவசாயம் செய்ய போகிறேன்..” என்று தைரியமாகக் கூறினாள் எழில்.. அவள் இப்படி சொல்வாள் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை அன்பைத் தவிர..!