• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 3

ஆஷாவிடம் உண்மையை வாங்கிய எழில்விழிக்கு கொஞ்சம் மனம் வலித்தது.. அடுத்து அவனை எப்படி சந்திப்பது..? என்ற யோசனையில் வீட்டிற்கு வந்தவள், பள்ளி சீருடையை மாற்றிவிட்டு தங்களின் வயலுக்கு சென்றாள்..

அவள் செல்லும் வழி மண் வழிப்பாதை.. அதன் இருபக்கமும் மரங்கள் அரணாக நிற்க இருபுறமும் வயல்வெளிகள் பச்சை பசையேல் என்று காட்சி அளிக்க, மாலை நேரம் மறையும் சூரியனை வேடிக்கைப் பார்த்தவண்ணம் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்..

இளந்தென்றல் அவளை வருடிச் செல்ல, காற்றில் கலந்த கூந்தலை காதோரம் ஒதிக்கிவிட்டு அவள் நிமிர, அவனைக் கடந்து சைக்கிளில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் அன்பரசன்.

“அங்கே போவது யார்..?” என்று யோசித்தவள் அது அன்பரசன் என்று உணரும் முன்னரே அவன் அவளின் கண்களில் இருந்து மறைந்தான்..

அப்பொழுது அவளின் மனம், “ஹையோ..’ என்று சொல்ல ‘எப்படியும் சென்றவன் திரும்பி இந்த வழியாகத் தானே வரணும்..’ என்று மெல்ல அங்கிருந்த அரசமரத்து பிள்ளையாருக்கு துணையாக அவளும் அங்கே அமர்ந்துக் கொள்ள, அவன் வரும் வழியை எதிர் பார்த்தவள்,

பிள்ளையார் பக்கம் திரும்பி, “பிள்ளையார் அப்பா.. அவன் சீக்கிரம் வரவேண்டும்.. இன்னும் அரைமணி நேரத்தில் நான் வயலுக்கு போகவில்லை என்றால் அப்பா, அம்மா இருவரும் என்னைத் தேடுவாங்க..” என்று சொல்லிவிட்டு அவள் அவனுக்காக காத்திருந்தாள்..

அடுத்த கால்மணிநேரத்தில் பாட்டி வீட்டில் இருந்து வந்துக் கொண்டிருந்த அன்புவைப் பார்த்தவள், “ஹையோ இப்பொழுதும் அவனை விட்டுவிடுவோமோ..?” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடினாள்..

சரியாக அவள் அருகில் வரவும் அவன் அவளைக் கடந்து செல்வதற்குள், “நிறுத்துங்க..” என்று கத்த அவன் நிற்காமல் செல்ல, அவனின் பின்னோடு ஓடியவள் வயலுக்குள் இறங்கிக் குறுக்குத் தடத்தில் சென்று அவனின் வழியை மறித்து நின்றாள்..

திடீரென ஒரு சின்னப்பெண் வழியை மறிக்க சைக்கிளை நிறுத்தி இறங்கி அவளைக் கேள்வியாகப் பார்க்க அவளின் முகம் அவனுக்கு அவளை காட்டிக் கொடுத்தது..

‘இவள் எழில் தானே.. எதுக்கு என்னோட வழியை மறித்து நிற்கிறாள்..?’ அவனின் முகம் யோசனையில், ‘முதல் நாள் என்னிடம் தேங்க்ஸ் சொல்லாமல் சென்றதால் இப்பொழுது தேங்க்ஸ் சொல்ல வந்திருக்கிறாள்..’ என்று அவன் நினைத்து அவளையே பார்த்தான்..

அன்று பள்ளி சீருடையில் இருந்தவள், இன்று பாவாடைசட்டையில் இரட்டை ஜடையில் மாசுமருவற்ற பால்நிலா முகம் போல இருந்தது அவளின் முகம்.. அவனோ யோசனையில் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான்..

அவளோ ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சு வாங்க அப்படியே நின்றிருக்க, அவளின் கண்கள் அவனையே பார்த்தது.. அவள் மூச்சு சீரானது, அவளைத் தயக்கம் ஆட்கொள்ள அமைதியாக நின்றவளைப் பார்த்தவன்,

“எதுக்கு இவ்வளவு அவசரமாக வந்து வழியை மறித்தாய்..?” என்று அவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்..

“இல்ல உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும்..” என்று தயங்கித் தயங்கிச் சொன்னவளைப் பார்த்து, “என்ன தேங்க்ஸ் தானே..? அதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்க அவனின் வழியை மீண்டும் மறித்தாள் எழில்விழி.

‘என்ன..?’ என்று ஒரு புருவம் உயர்த்தி அவன் கேட்டதும், ‘என்ன இவர் இப்படி பார்க்கிறார்..? நம்மை தப்பாக நினைத்துக் கொண்டாரோ..?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவள்,

“நான் நீங்கள் நினைக்கும் பெண்கள் போல இல்லை..” என்று சொல்ல அவனோ அவளையே பார்த்தான்.. ‘இவள் என்ன லூசா..? இவளாக வந்தாள் வழியை மறித்து நின்றாள்.. இப்பொழுது இவளாகவே கற்பனை செய்துக் கொண்டு பேசுகிறாள்..’ என்று அவன் நினைத்தான்..

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை அவன் கவனிக்க, அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காமல், “நான் வந்த விஷயம் வேற..?” என்று மீண்டும் அவள் தயங்கி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ சொல்லு என்பது போல பார்த்தான்..

“உங்களின் டிப்பன் பாக்ஸை..” என்று அவள் இழுக்கவும் அதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சைக்கிளிற்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, “அதை நீதான் எடுத்து சாப்பிடுகிறாயா..?” என்று அவன் கோபமாகக் கேட்டதும் அவனின் கோபம் கண்டு பயந்தவள்

“நா..ன்.. எட்.. எடு..க்..க..வி..ல்..லை..” என்று அவள் பயத்தில் அவளின் வாய் தந்தியடிக்க பயத்துடன் கூறியதும் அன்புவிற்குமே அவளைப் பார்த்து பாவமாக இருந்தது.. இப்படி சின்னபிள்ளையை பயமுறுத்தும் அளவிற்கு கத்திவிட்டோமே என்று!

அவள் முகத்தை நோக்கிய அன்பரசன், ‘இவள் அந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பில்லை..’ என்று தோன்றவே அமைதியாக அவளைப் பார்க்க,

“என்னோட தோழி ஆஷா தான் உங்களின் டிப்பனை தினமும் எடுத்து சாப்பிடுபவள்..” என்று சொல்ல,

“நான் சாப்பிடாமல் இருப்பதில் உன்னோட தோழிக்கு அப்படி என்னம்மா மகிழ்ச்சி.. ஏதோ கொஞ்சம் பணம் படைத்தவன் என்பதால் என்னோட மதிய சாப்பாடு கேண்டீனில் வாங்கி சாப்பிடுகிறேன்.. இல்லையென்றால் என்னோட நிலை..?” என்று அவளிடமே நியாயம் கேட்டான் அவன்..

“அவள் அதை தெரியாமல் செய்துவிட்டாள்.. எனக்காக அவளை மன்னித்துவிடுங்கள்..” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டவளின் முகம் பார்த்தவனுக்கு அவளின் குணம் பிடித்தது..

“அவள் செய்யும் தப்பிற்கு நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய்..?” என்று அவன் அவளை அதட்ட அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“அடுத்தவர் தப்பிற்கு துணை போகத்தான் கூடாது.. அதே அடுத்தவர் தப்பிற்கு நாம் மன்னிப்பு கேட்பதில் தப்பில்லை..” என்று அவனுக்கு பதில் கொடுத்தாள்..

அவள் வெளியே தைரியமாகப் பேசினாலும் உள்ளுக்குள் அவளுக்கும் உதறல் எடுக்கவே செய்தது.. அவள் அப்படி கூறியதும் அவளைப் புருவம் உயர்த்தி சந்தேகமாகப் பார்த்தவன்,

“ஒஹ் உன்னோட தோழிக்கு நீயும் கூட்டா..?” என்று அவளை வம்பிழுக்கும் நோக்கத்தொடு அவன் கேட்டதும்,

“அப்படி மட்டும் நான் கூட்டாக இருந்தால் நான் எதற்கு உங்களிடம் வந்து சொல்ல போகிறேன்..” என்று அவளும் திருப்பிக் கேட்டாள்..

ஆனாலும் அவள் விழிகள் அவனின் விழிகளை பார்க்காமல் கீழே இருந்த தரையை பார்த்த வண்ணம் சொல்ல, அவளைப் பார்த்து அவனின் பார்வையில் ரசனை கூடியது!

“சரி அப்போ காட்டிகொடுக்கிறாயா..?” என்று அவன் மீண்டும் அவளிடம் வம்பிழுக்க, இல்லை என்று தலையசைத்தவள், நடந்தவற்றைக் கூற அவனுக்குமே ஆஷாவின் நிலையைக் கண்டு பாவமாக இருந்தது..

“சரி இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்..?” என்று அவளிடமே கேட்டதும், அவளின் முகம் புன்னகையில் மலர அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“நாளையில் இருந்து இரண்டு டிப்பன் பாக்ஸ் எடுத்து வந்தால் அதுவே எனக்கு போதும்..” என்று சொல்ல, அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவன் முகத்திலும் புன்னகை அரும்ப, சரியென்று தலையசைத்துவிட்டு சென்றான்..

அவன் சென்றதும் தான் அவளுக்கு சுற்றுசுழல் உரைக்க, ‘ஹையையோ..’ என்று இரண்டு கையையும் உதறியவள் வயலுக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கே சென்றுவிட்டாள்.

மாலை நேரம் மாறி இரவுக்கான இருள் தொடங்க அப்பொழுது அந்த வழியில் வந்த முத்துக்குமார்.. எழில்விழி அன்புடன் பேசுவதைப் பார்த்துவிட்டு சென்றான்..

அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவளைப் பார்த்த முத்துக்குமாரின் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது.. ‘எவனுடனோ இந்நேரம் வரையில் நின்று பேசியவள், இப்பொழுது ஒன்னும் தெரியாதவள் போல வருவதைப் பார்..’ என்று பல்லைக் கடித்தவன்,
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவள் புத்தகம் எடுத்து அமருவதைப் பார்த்து, “ஏய் எழில்..” என்று கத்தியதும் அவனின் குரல் கேட்டு நடுங்கியவண்ணம் அவனின் முன்னே வந்தவள்,

“என்னங்க அண்ணா..?!” என்று கேட்டதும், அவனுக்கு கோபம் வர “ஏண்டி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் ரோட்டில் ஒரு பையனுடன் நின்று பேசிட்டு இருப்பாய்.. அதுவும் மாலை மயங்கும் நேரத்தில் உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று கேட்டதும், அவளுக்கு கைகள் சில்லென்று ஆக, அவளின் கண்களில் நிறைந்து நின்ற கண்ணீர் வழியும் நிலையில் இருக்க,

“அண்ணா..” என்று அவள் ஏதோ சொல்ல வரும் முன்னே, அவளைத் தவறாகப் புரிந்து கொண்டு, பிரம்பை எடுத்து விளாசி விட்டான்..

அவன் அடிக்க அடிக்க, “அண்ணா வேண்டாம் அண்ணா.. எனக்கு ரொம்ப வலிக்குது அண்ணா.. நான் எந்த தப்பும் செய்யல.. என்னை அடிக்காதே அண்ணா..” என்று கதறினாள்..

அப்பொழுதுதான் உள்ளே வந்த பார்வதி தனது பெரிய மகன் தன்னுடைய மகளை அடிப்பதைப் பார்த்து, “டேய் முத்து எதுக்குடா அவளை இந்த அடி அடிக்கிறாய்..? அவள் ரொம்பவே பாவம் டா.. அவளை விடுடா..” என்று அவர்களுக்கு இடையில் புகுந்து அடிவாங்கும் மகளைப் பாதுகாக்க நினைக்க அது அவரால் முடியாமல் போனது..

வீட்டிற்குள் வந்த சுந்தரம் மனைவியின் குரல் கேட்டு, “என்ன பார்வதி என்ன..?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர் மகள் இருந்த நிலையைக் கண்டு அவரின் கண்கள் கலங்கியது..

அவள் அவனின் அடியில் உடம்பு முழுக்க ரத்தக்கட்டு தழும்புடன் இருக்க, பூ போன்றே மகளைப் பார்த்து பழகிய அந்த தந்தையின் உள்ளம் வலிக்க அவனின் கையில் இருந்த பிரம்பைப் அவனிடம் இருந்து வாங்கியவர்,

அவனது அடியில் மயங்கிய நிலையில் எழில் கீழே சரிய மகளைத் தாங்கிப் பிடித்த பார்வதி, “ஹையோ என்னோட பிள்ளையைக் கண்ணுமண்ணு தெரியாம அடித்திருக்கிறானே.. பாவி.. பாவி..” என்று திட்டியபடியே அவளை அழைத்துச் சென்றார்..

பார்வதி திட்டுவதைப் பார்த்து, “நீ போய் மகளைப் பாரும்மா.. நான் என்ன என்று கேட்கிறேன்..” என்று மனைவியை அனுப்பியவர்,

“என்னடா தப்பு பண்ணினாள் எழில்..?” என்று கேட்டதும், அவரை நிமிர்ந்துப் பார்த்த முத்துக்குமார்,

“அவள் ரோட்டில் யாருடனோ நின்று பேசிக்கொண்டிருக்கிறாள்.. இதை யாராவது பார்த்தால் நம்மளோட குடும்ப மானம் என்ன ஆவது.. நாளைக்கு நான் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்..?” என்று கேட்ட மகனைப் பார்த்தவர்,

“ஓ.. அதுதான் தங்கையைக் கண்டிக்கிறாய் இல்லையா..?” என்று ஒருவிதமானக் குரலில் கேட்டார் அவர்.. அவரின் முகத்தைப் பார்த்தவன்,

“ஏன் நான் கண்டிக்க கூடாதா..?” என்று கேட்டதும் அவருக்கு கோபம் எல்லைக்கடந்தது..

“உன்கூட பிறந்த தங்கை அவள் அவளை கண்டிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஆனால் அவள் அந்த தவறை செய்தால் கண்டிக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது..” என்று அழுத்தமாக அவர் சொல்லவும் அவனுக்கு கோபம் வந்தது..

“இவ இன்னைக்கு எவனோடோ நின்று பேசுவாள்.. இதைப் பார்த்துக் கொண்டு என்னை சும்மா இருக்க சொல்றீங்களா..?” என்று அவன் கேட்டதும்,

“அவள் பேசினாள் என்றால் அவள் வந்ததும் அவளை அழைத்து என்ன விவரம் என்று கேட்டு அவள் தப்பு செய்து நீ அடித்திருந்தால் நான் உன்னை கேள்வியே கேட்க மாட்டேன்.. ஏன் என்றால் அதுதான் ஒரு அண்ணன் தனது தங்கையைக் கண்டிக்கும் முறை..” என்று அவர் பொறுமையாக அவனுக்கு விளக்கவும்,

“நாளைக்கு அவனையே இழுத்துக் கொண்டு ஓடுவாள். அதுக்கும் நான் அவளை அழைத்து என்னம்மா காரணம் என்று விளக்கம் கேட்டு அப்புறம் அடிக்க சொல்றீங்களா..? இவளை எல்லாம் முதலிலேயே கண்டிக்க வேண்டும்..” என்று முத்து கோபத்துடன் கூறியதும், அவரின் பொறுமை பறந்து, அவனின் கன்னத்தில் ‘பளார்..’ என்று அறைந்தார் சுந்தரம். அவரின் கைகள் அவனின் கன்னத்தைப் பதம் பார்த்தது..

அவன் அதிர்ந்து தனது தந்தையை நிமிர்ந்துப் பார்க்க, “என்னடா சொன்ன அவள் உன்னோடு பிறந்தால் என்பதற்காக நீ என்ன பேசினாலும், செய்தாலும் நான் உன்னைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பேன் என்று நினைத்தாயா..?” என்று அவனின் முன்னே விரலை நீட்டி,

“கொன்றுவிடுவேன் சாக்கிரதை..” என்று கர்ஜித்தவர், எந்த தப்பும் செய்யாமல் அவளை அடித்த அவனை பிரம்பால் விளாசிவிட்டார் சுந்திரம்..

அவரின் ஒவ்வொரு அடிக்கும் மரம் போல நின்றவன் நெஞ்சில் இந்த சம்பவம் முள்ளேன்று தைத்தது.. அது நல்ல முள்ளாக இருந்தால் தங்கை மீது பாசம் வந்திருக்கும் அவனுக்குள் விஷமுள் வேர்விட இந்த சம்பவம் காரணமாக மாறியது..

அவனது அடியில் அப்படியே சுருண்டு விழுந்தவள் கண்விழிக்க மூன்று நாள் ஆனது! அந்த மூன்று நாளும் அவளின் பெற்றோர் துடித்துப் போயினர்..

அதுவும் பார்வதி கண்களில் கண்ணீர் மழையாக பொழிந்தது.. அந்த சம்பவம் நடந்து பிறகு மூன்று நாளும் அவளுக்கு மயக்கத்திலேயே சாப்பாடு ஊட்டிவிட்டாள் பார்வதி.. அதன்பிறகு அவள் பள்ளிக்கு செல்ல ஒரு வாரம் ஆனது..!

இங்கே இந்த நிலை என்றால், அன்று வீட்டிற்கு சென்ற அன்பரசன் செய்த முதல் காரியம், “அம்மா எனக்கு நாளையில் இருந்து இரண்டு டிப்பன் பாக்ஸில் சாப்பாடு கொடுங்கள்..” என்று சொல்ல,

“என்னடா உனக்கு சாப்பாடு பத்துவது இல்லையா..?” என்று கேட்ட சுமித்ராவைப் பார்த்தவன் உண்மையைச் சொல்லாது,

“இல்லம்மா மாலை ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது.. அதனால் மாலையில் சாப்பிட சாப்பாடு இருந்தால் இன்னமும் நல்ல இருக்கும் என்று யோசித்தேன்..” என்று சொல்ல, தனது சின்ன மகன் மூலம் விவரம் அறிந்த சுமித்ரா,

‘என்னோட மனம் கஷ்டப்பட கூடாது என்று எப்படி போய் சொல்கிறான் பாரு..’ என்று மனதில் நினைத்தவர், “நாளையில் இருந்து கொடுக்கிறேன்..” என்று சொல்லவும், அவனும் தலையசைத்துவிட்டு சென்றான்..

அடுத்த நாளில் இருந்து ஆஷாவிற்கும் எடுத்து வந்தான்.. அவள் அவள் டிப்பனை எடுத்துச் சென்று சாப்பிட்டு முடிக்க அவளின் பார்வை வட்டத்திற்குள் அமர்ந்திருந்த அன்பரசன் தனது அம்மாவின் சமையலை ருசித்து சாப்பிட,

‘அவனின் டிப்பனை நாம் எடுத்து வந்த பிறகு இவன் எப்படி டிப்பனில் சாப்பிடுகிறான்..?’ என்ற சந்தேகம் அவளைத் தொற்றிக் கொள்ள, அதற்கு விடைதேட ஆரமித்தாள் ஆஷா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top