அத்தியாயம் – 3
ஆஷாவிடம் உண்மையை வாங்கிய எழில்விழிக்கு கொஞ்சம் மனம் வலித்தது.. அடுத்து அவனை எப்படி சந்திப்பது..? என்ற யோசனையில் வீட்டிற்கு வந்தவள், பள்ளி சீருடையை மாற்றிவிட்டு தங்களின் வயலுக்கு சென்றாள்..
அவள் செல்லும் வழி மண் வழிப்பாதை.. அதன் இருபக்கமும் மரங்கள் அரணாக நிற்க இருபுறமும் வயல்வெளிகள் பச்சை பசையேல் என்று காட்சி அளிக்க, மாலை நேரம் மறையும் சூரியனை வேடிக்கைப் பார்த்தவண்ணம் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்..
இளந்தென்றல் அவளை வருடிச் செல்ல, காற்றில் கலந்த கூந்தலை காதோரம் ஒதிக்கிவிட்டு அவள் நிமிர, அவனைக் கடந்து சைக்கிளில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் அன்பரசன்.
“அங்கே போவது யார்..?” என்று யோசித்தவள் அது அன்பரசன் என்று உணரும் முன்னரே அவன் அவளின் கண்களில் இருந்து மறைந்தான்..
அப்பொழுது அவளின் மனம், “ஹையோ..’ என்று சொல்ல ‘எப்படியும் சென்றவன் திரும்பி இந்த வழியாகத் தானே வரணும்..’ என்று மெல்ல அங்கிருந்த அரசமரத்து பிள்ளையாருக்கு துணையாக அவளும் அங்கே அமர்ந்துக் கொள்ள, அவன் வரும் வழியை எதிர் பார்த்தவள்,
பிள்ளையார் பக்கம் திரும்பி, “பிள்ளையார் அப்பா.. அவன் சீக்கிரம் வரவேண்டும்.. இன்னும் அரைமணி நேரத்தில் நான் வயலுக்கு போகவில்லை என்றால் அப்பா, அம்மா இருவரும் என்னைத் தேடுவாங்க..” என்று சொல்லிவிட்டு அவள் அவனுக்காக காத்திருந்தாள்..
அடுத்த கால்மணிநேரத்தில் பாட்டி வீட்டில் இருந்து வந்துக் கொண்டிருந்த அன்புவைப் பார்த்தவள், “ஹையோ இப்பொழுதும் அவனை விட்டுவிடுவோமோ..?” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடினாள்..
சரியாக அவள் அருகில் வரவும் அவன் அவளைக் கடந்து செல்வதற்குள், “நிறுத்துங்க..” என்று கத்த அவன் நிற்காமல் செல்ல, அவனின் பின்னோடு ஓடியவள் வயலுக்குள் இறங்கிக் குறுக்குத் தடத்தில் சென்று அவனின் வழியை மறித்து நின்றாள்..
திடீரென ஒரு சின்னப்பெண் வழியை மறிக்க சைக்கிளை நிறுத்தி இறங்கி அவளைக் கேள்வியாகப் பார்க்க அவளின் முகம் அவனுக்கு அவளை காட்டிக் கொடுத்தது..
‘இவள் எழில் தானே.. எதுக்கு என்னோட வழியை மறித்து நிற்கிறாள்..?’ அவனின் முகம் யோசனையில், ‘முதல் நாள் என்னிடம் தேங்க்ஸ் சொல்லாமல் சென்றதால் இப்பொழுது தேங்க்ஸ் சொல்ல வந்திருக்கிறாள்..’ என்று அவன் நினைத்து அவளையே பார்த்தான்..
அன்று பள்ளி சீருடையில் இருந்தவள், இன்று பாவாடைசட்டையில் இரட்டை ஜடையில் மாசுமருவற்ற பால்நிலா முகம் போல இருந்தது அவளின் முகம்.. அவனோ யோசனையில் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான்..
அவளோ ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சு வாங்க அப்படியே நின்றிருக்க, அவளின் கண்கள் அவனையே பார்த்தது.. அவள் மூச்சு சீரானது, அவளைத் தயக்கம் ஆட்கொள்ள அமைதியாக நின்றவளைப் பார்த்தவன்,
“எதுக்கு இவ்வளவு அவசரமாக வந்து வழியை மறித்தாய்..?” என்று அவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்..
“இல்ல உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும்..” என்று தயங்கித் தயங்கிச் சொன்னவளைப் பார்த்து, “என்ன தேங்க்ஸ் தானே..? அதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்க அவனின் வழியை மீண்டும் மறித்தாள் எழில்விழி.
‘என்ன..?’ என்று ஒரு புருவம் உயர்த்தி அவன் கேட்டதும், ‘என்ன இவர் இப்படி பார்க்கிறார்..? நம்மை தப்பாக நினைத்துக் கொண்டாரோ..?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவள்,
“நான் நீங்கள் நினைக்கும் பெண்கள் போல இல்லை..” என்று சொல்ல அவனோ அவளையே பார்த்தான்.. ‘இவள் என்ன லூசா..? இவளாக வந்தாள் வழியை மறித்து நின்றாள்.. இப்பொழுது இவளாகவே கற்பனை செய்துக் கொண்டு பேசுகிறாள்..’ என்று அவன் நினைத்தான்..
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை அவன் கவனிக்க, அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காமல், “நான் வந்த விஷயம் வேற..?” என்று மீண்டும் அவள் தயங்கி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ சொல்லு என்பது போல பார்த்தான்..
“உங்களின் டிப்பன் பாக்ஸை..” என்று அவள் இழுக்கவும் அதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சைக்கிளிற்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, “அதை நீதான் எடுத்து சாப்பிடுகிறாயா..?” என்று அவன் கோபமாகக் கேட்டதும் அவனின் கோபம் கண்டு பயந்தவள்
“நா..ன்.. எட்.. எடு..க்..க..வி..ல்..லை..” என்று அவள் பயத்தில் அவளின் வாய் தந்தியடிக்க பயத்துடன் கூறியதும் அன்புவிற்குமே அவளைப் பார்த்து பாவமாக இருந்தது.. இப்படி சின்னபிள்ளையை பயமுறுத்தும் அளவிற்கு கத்திவிட்டோமே என்று!
அவள் முகத்தை நோக்கிய அன்பரசன், ‘இவள் அந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பில்லை..’ என்று தோன்றவே அமைதியாக அவளைப் பார்க்க,
“என்னோட தோழி ஆஷா தான் உங்களின் டிப்பனை தினமும் எடுத்து சாப்பிடுபவள்..” என்று சொல்ல,
“நான் சாப்பிடாமல் இருப்பதில் உன்னோட தோழிக்கு அப்படி என்னம்மா மகிழ்ச்சி.. ஏதோ கொஞ்சம் பணம் படைத்தவன் என்பதால் என்னோட மதிய சாப்பாடு கேண்டீனில் வாங்கி சாப்பிடுகிறேன்.. இல்லையென்றால் என்னோட நிலை..?” என்று அவளிடமே நியாயம் கேட்டான் அவன்..
“அவள் அதை தெரியாமல் செய்துவிட்டாள்.. எனக்காக அவளை மன்னித்துவிடுங்கள்..” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டவளின் முகம் பார்த்தவனுக்கு அவளின் குணம் பிடித்தது..
“அவள் செய்யும் தப்பிற்கு நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய்..?” என்று அவன் அவளை அதட்ட அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“அடுத்தவர் தப்பிற்கு துணை போகத்தான் கூடாது.. அதே அடுத்தவர் தப்பிற்கு நாம் மன்னிப்பு கேட்பதில் தப்பில்லை..” என்று அவனுக்கு பதில் கொடுத்தாள்..
அவள் வெளியே தைரியமாகப் பேசினாலும் உள்ளுக்குள் அவளுக்கும் உதறல் எடுக்கவே செய்தது.. அவள் அப்படி கூறியதும் அவளைப் புருவம் உயர்த்தி சந்தேகமாகப் பார்த்தவன்,
“ஒஹ் உன்னோட தோழிக்கு நீயும் கூட்டா..?” என்று அவளை வம்பிழுக்கும் நோக்கத்தொடு அவன் கேட்டதும்,
“அப்படி மட்டும் நான் கூட்டாக இருந்தால் நான் எதற்கு உங்களிடம் வந்து சொல்ல போகிறேன்..” என்று அவளும் திருப்பிக் கேட்டாள்..
ஆனாலும் அவள் விழிகள் அவனின் விழிகளை பார்க்காமல் கீழே இருந்த தரையை பார்த்த வண்ணம் சொல்ல, அவளைப் பார்த்து அவனின் பார்வையில் ரசனை கூடியது!
“சரி அப்போ காட்டிகொடுக்கிறாயா..?” என்று அவன் மீண்டும் அவளிடம் வம்பிழுக்க, இல்லை என்று தலையசைத்தவள், நடந்தவற்றைக் கூற அவனுக்குமே ஆஷாவின் நிலையைக் கண்டு பாவமாக இருந்தது..
“சரி இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்..?” என்று அவளிடமே கேட்டதும், அவளின் முகம் புன்னகையில் மலர அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நாளையில் இருந்து இரண்டு டிப்பன் பாக்ஸ் எடுத்து வந்தால் அதுவே எனக்கு போதும்..” என்று சொல்ல, அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவன் முகத்திலும் புன்னகை அரும்ப, சரியென்று தலையசைத்துவிட்டு சென்றான்..
அவன் சென்றதும் தான் அவளுக்கு சுற்றுசுழல் உரைக்க, ‘ஹையையோ..’ என்று இரண்டு கையையும் உதறியவள் வயலுக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கே சென்றுவிட்டாள்.
மாலை நேரம் மாறி இரவுக்கான இருள் தொடங்க அப்பொழுது அந்த வழியில் வந்த முத்துக்குமார்.. எழில்விழி அன்புடன் பேசுவதைப் பார்த்துவிட்டு சென்றான்..
அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவளைப் பார்த்த முத்துக்குமாரின் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது.. ‘எவனுடனோ இந்நேரம் வரையில் நின்று பேசியவள், இப்பொழுது ஒன்னும் தெரியாதவள் போல வருவதைப் பார்..’ என்று பல்லைக் கடித்தவன்,
ஆஷாவிடம் உண்மையை வாங்கிய எழில்விழிக்கு கொஞ்சம் மனம் வலித்தது.. அடுத்து அவனை எப்படி சந்திப்பது..? என்ற யோசனையில் வீட்டிற்கு வந்தவள், பள்ளி சீருடையை மாற்றிவிட்டு தங்களின் வயலுக்கு சென்றாள்..
அவள் செல்லும் வழி மண் வழிப்பாதை.. அதன் இருபக்கமும் மரங்கள் அரணாக நிற்க இருபுறமும் வயல்வெளிகள் பச்சை பசையேல் என்று காட்சி அளிக்க, மாலை நேரம் மறையும் சூரியனை வேடிக்கைப் பார்த்தவண்ணம் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்..
இளந்தென்றல் அவளை வருடிச் செல்ல, காற்றில் கலந்த கூந்தலை காதோரம் ஒதிக்கிவிட்டு அவள் நிமிர, அவனைக் கடந்து சைக்கிளில் தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் அன்பரசன்.
“அங்கே போவது யார்..?” என்று யோசித்தவள் அது அன்பரசன் என்று உணரும் முன்னரே அவன் அவளின் கண்களில் இருந்து மறைந்தான்..
அப்பொழுது அவளின் மனம், “ஹையோ..’ என்று சொல்ல ‘எப்படியும் சென்றவன் திரும்பி இந்த வழியாகத் தானே வரணும்..’ என்று மெல்ல அங்கிருந்த அரசமரத்து பிள்ளையாருக்கு துணையாக அவளும் அங்கே அமர்ந்துக் கொள்ள, அவன் வரும் வழியை எதிர் பார்த்தவள்,
பிள்ளையார் பக்கம் திரும்பி, “பிள்ளையார் அப்பா.. அவன் சீக்கிரம் வரவேண்டும்.. இன்னும் அரைமணி நேரத்தில் நான் வயலுக்கு போகவில்லை என்றால் அப்பா, அம்மா இருவரும் என்னைத் தேடுவாங்க..” என்று சொல்லிவிட்டு அவள் அவனுக்காக காத்திருந்தாள்..
அடுத்த கால்மணிநேரத்தில் பாட்டி வீட்டில் இருந்து வந்துக் கொண்டிருந்த அன்புவைப் பார்த்தவள், “ஹையோ இப்பொழுதும் அவனை விட்டுவிடுவோமோ..?” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடினாள்..
சரியாக அவள் அருகில் வரவும் அவன் அவளைக் கடந்து செல்வதற்குள், “நிறுத்துங்க..” என்று கத்த அவன் நிற்காமல் செல்ல, அவனின் பின்னோடு ஓடியவள் வயலுக்குள் இறங்கிக் குறுக்குத் தடத்தில் சென்று அவனின் வழியை மறித்து நின்றாள்..
திடீரென ஒரு சின்னப்பெண் வழியை மறிக்க சைக்கிளை நிறுத்தி இறங்கி அவளைக் கேள்வியாகப் பார்க்க அவளின் முகம் அவனுக்கு அவளை காட்டிக் கொடுத்தது..
‘இவள் எழில் தானே.. எதுக்கு என்னோட வழியை மறித்து நிற்கிறாள்..?’ அவனின் முகம் யோசனையில், ‘முதல் நாள் என்னிடம் தேங்க்ஸ் சொல்லாமல் சென்றதால் இப்பொழுது தேங்க்ஸ் சொல்ல வந்திருக்கிறாள்..’ என்று அவன் நினைத்து அவளையே பார்த்தான்..
அன்று பள்ளி சீருடையில் இருந்தவள், இன்று பாவாடைசட்டையில் இரட்டை ஜடையில் மாசுமருவற்ற பால்நிலா முகம் போல இருந்தது அவளின் முகம்.. அவனோ யோசனையில் புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான்..
அவளோ ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சு வாங்க அப்படியே நின்றிருக்க, அவளின் கண்கள் அவனையே பார்த்தது.. அவள் மூச்சு சீரானது, அவளைத் தயக்கம் ஆட்கொள்ள அமைதியாக நின்றவளைப் பார்த்தவன்,
“எதுக்கு இவ்வளவு அவசரமாக வந்து வழியை மறித்தாய்..?” என்று அவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்..
“இல்ல உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும்..” என்று தயங்கித் தயங்கிச் சொன்னவளைப் பார்த்து, “என்ன தேங்க்ஸ் தானே..? அதெல்லாம் வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்க அவனின் வழியை மீண்டும் மறித்தாள் எழில்விழி.
‘என்ன..?’ என்று ஒரு புருவம் உயர்த்தி அவன் கேட்டதும், ‘என்ன இவர் இப்படி பார்க்கிறார்..? நம்மை தப்பாக நினைத்துக் கொண்டாரோ..?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவள்,
“நான் நீங்கள் நினைக்கும் பெண்கள் போல இல்லை..” என்று சொல்ல அவனோ அவளையே பார்த்தான்.. ‘இவள் என்ன லூசா..? இவளாக வந்தாள் வழியை மறித்து நின்றாள்.. இப்பொழுது இவளாகவே கற்பனை செய்துக் கொண்டு பேசுகிறாள்..’ என்று அவன் நினைத்தான்..
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை அவன் கவனிக்க, அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காமல், “நான் வந்த விஷயம் வேற..?” என்று மீண்டும் அவள் தயங்கி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ சொல்லு என்பது போல பார்த்தான்..
“உங்களின் டிப்பன் பாக்ஸை..” என்று அவள் இழுக்கவும் அதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சைக்கிளிற்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, “அதை நீதான் எடுத்து சாப்பிடுகிறாயா..?” என்று அவன் கோபமாகக் கேட்டதும் அவனின் கோபம் கண்டு பயந்தவள்
“நா..ன்.. எட்.. எடு..க்..க..வி..ல்..லை..” என்று அவள் பயத்தில் அவளின் வாய் தந்தியடிக்க பயத்துடன் கூறியதும் அன்புவிற்குமே அவளைப் பார்த்து பாவமாக இருந்தது.. இப்படி சின்னபிள்ளையை பயமுறுத்தும் அளவிற்கு கத்திவிட்டோமே என்று!
அவள் முகத்தை நோக்கிய அன்பரசன், ‘இவள் அந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பில்லை..’ என்று தோன்றவே அமைதியாக அவளைப் பார்க்க,
“என்னோட தோழி ஆஷா தான் உங்களின் டிப்பனை தினமும் எடுத்து சாப்பிடுபவள்..” என்று சொல்ல,
“நான் சாப்பிடாமல் இருப்பதில் உன்னோட தோழிக்கு அப்படி என்னம்மா மகிழ்ச்சி.. ஏதோ கொஞ்சம் பணம் படைத்தவன் என்பதால் என்னோட மதிய சாப்பாடு கேண்டீனில் வாங்கி சாப்பிடுகிறேன்.. இல்லையென்றால் என்னோட நிலை..?” என்று அவளிடமே நியாயம் கேட்டான் அவன்..
“அவள் அதை தெரியாமல் செய்துவிட்டாள்.. எனக்காக அவளை மன்னித்துவிடுங்கள்..” என்று அவனிடம் மன்னிப்பு கேட்டவளின் முகம் பார்த்தவனுக்கு அவளின் குணம் பிடித்தது..
“அவள் செய்யும் தப்பிற்கு நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய்..?” என்று அவன் அவளை அதட்ட அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“அடுத்தவர் தப்பிற்கு துணை போகத்தான் கூடாது.. அதே அடுத்தவர் தப்பிற்கு நாம் மன்னிப்பு கேட்பதில் தப்பில்லை..” என்று அவனுக்கு பதில் கொடுத்தாள்..
அவள் வெளியே தைரியமாகப் பேசினாலும் உள்ளுக்குள் அவளுக்கும் உதறல் எடுக்கவே செய்தது.. அவள் அப்படி கூறியதும் அவளைப் புருவம் உயர்த்தி சந்தேகமாகப் பார்த்தவன்,
“ஒஹ் உன்னோட தோழிக்கு நீயும் கூட்டா..?” என்று அவளை வம்பிழுக்கும் நோக்கத்தொடு அவன் கேட்டதும்,
“அப்படி மட்டும் நான் கூட்டாக இருந்தால் நான் எதற்கு உங்களிடம் வந்து சொல்ல போகிறேன்..” என்று அவளும் திருப்பிக் கேட்டாள்..
ஆனாலும் அவள் விழிகள் அவனின் விழிகளை பார்க்காமல் கீழே இருந்த தரையை பார்த்த வண்ணம் சொல்ல, அவளைப் பார்த்து அவனின் பார்வையில் ரசனை கூடியது!
“சரி அப்போ காட்டிகொடுக்கிறாயா..?” என்று அவன் மீண்டும் அவளிடம் வம்பிழுக்க, இல்லை என்று தலையசைத்தவள், நடந்தவற்றைக் கூற அவனுக்குமே ஆஷாவின் நிலையைக் கண்டு பாவமாக இருந்தது..
“சரி இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்..?” என்று அவளிடமே கேட்டதும், அவளின் முகம் புன்னகையில் மலர அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நாளையில் இருந்து இரண்டு டிப்பன் பாக்ஸ் எடுத்து வந்தால் அதுவே எனக்கு போதும்..” என்று சொல்ல, அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவன் முகத்திலும் புன்னகை அரும்ப, சரியென்று தலையசைத்துவிட்டு சென்றான்..
அவன் சென்றதும் தான் அவளுக்கு சுற்றுசுழல் உரைக்க, ‘ஹையையோ..’ என்று இரண்டு கையையும் உதறியவள் வயலுக்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கே சென்றுவிட்டாள்.
மாலை நேரம் மாறி இரவுக்கான இருள் தொடங்க அப்பொழுது அந்த வழியில் வந்த முத்துக்குமார்.. எழில்விழி அன்புடன் பேசுவதைப் பார்த்துவிட்டு சென்றான்..
அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவளைப் பார்த்த முத்துக்குமாரின் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது.. ‘எவனுடனோ இந்நேரம் வரையில் நின்று பேசியவள், இப்பொழுது ஒன்னும் தெரியாதவள் போல வருவதைப் பார்..’ என்று பல்லைக் கடித்தவன்,