அத்தியாயம் – 4
எழில் வராத இந்த ஒருவாரத்தில் பள்ளிக்கூடத்தில் இரு மாற்றங்கள் நிகழ்ந்தது.. ஒன்று பள்ளிக்கூடத்திற்கு இரண்டு டிப்பன் பாக்ஸை எடுத்து வந்தான் அன்பரசன்..
இரண்டாவது மாற்றம், ஆஷாவின் தப்பை ஆதரிக்கவும் இல்லாமல் காட்டிக்கொடுத்து தண்டனை வாங்கித் தருவதற்கு பதிலாக அவளே மன்னிப்பும் கேட்டு, அதற்கு தீர்வும் சொன்னவளின் நினைவுகள் அவனின் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்தது..
ஆஷா விடைத்தேடி அலைய, எழிலைத் தேட ஆரமித்தான் அன்பரசன். அவன் அம்மா கையில் அவன் மதிய உணவு சாப்பிட்டு கிட்டதட்ட மூன்று வருடம் ஆகிறது..
அவளின் மீது இருந்த ஒருவகை பாசம் அவளைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவளை விழிகளால் தேட ஆரமித்தான் அன்பரசன்..
அவளைப் பார்த்து ஒரு ‘தேங்க்ஸ்’ சொன்னால் போதும் தன்னுடைய மனம் திருப்தி அடையும் என்று நினைக்க அவளிடம் அவனுக்கு இன்னொரு விளக்கம் தேவையாக இருந்தது..
ஆனால் அவளோ அவனின் கண்ணில் படவே இல்லை.. ஆஷா முன்னைவிட, எழிலைத் தேட ஆரமித்தாள் தன்னுடைய சந்தோசத்தை அவளிடம் பகிர்ந்துக் கொள்ள அவளைத் தேடினாள்..
சரியாக ஒருவாரம் சென்ற பிறகு எழிலைப் பார்த்த ஆஷா ஓட்டிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.. தனது தோழியைப் பார்த்த சந்தோஷத்தில் எழிலும் அவளைக் கட்டிக்கொள்ள,
“என்னடி இப்படி ஒருவாரம் லீவ் எடுத்துவிட்டாய்..?! உன்னைப் பார்க்காமல் எனக்கு ஏதோ மாதிரியே இருந்தது..” என்று அவளிடம் கூறியதும், எழில் சந்தோசத்துடன்,
“அதுதான் நான் வந்துவிட்டேனே.. இன்னும் என்ன வருத்தம்..?” என்று விளையாட்டு போல சிரித்துக் கொண்டே அவளை விட்டு விலகியவள், ஆஷாவின் கைகளைக் கோர்த்துக்கொண்டு வகுப்பறைக்குள் சென்று தங்களின் இடத்தில் அமர்ந்தனர்..
எழில்விழி அருகில் அமர்ந்த ஆஷா, “ஏன் எழில் ஒரு வாரம் லீவ் எடுத்தாய்..?” என்று ஆஷா கேட்டதும், எழில் மனத்தில் அன்று நடந்தது படமாக ஓட வாயில் வார்த்தைகள் வராமல் கண்கலங்கினாள்..
அவளைப் பார்த்த ஆஷா, ‘ச்சே நான் வேற அவளிடம் கேட்டு அவளின் மனத்தைக் காயப்படுத்திவிட்டேன் போல..?!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் எழில் பக்கம் திரும்பி,
“ஸாரி டா நான் ஏதாவது தப்பாக கேட்டுவிட்டேனா..?” என்று கேட்டவள், “நீ எதுவும் சொல்ல வேண்டாம் நீ எதுக்கும் கண்கலங்காதே..” என்று அவளின் கண்களைத் துடைத்துவிட்டாள்..
“ஏய் உன்னிடம் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துவிட்டேன் பாரு..” என்று கூறியவளைப் புரியாமல் பார்த்தாள் எழில்..
“நீ ஸ்கூல் வராத இந்த ஒரு வாரத்தில் என்னென்னமோ நடந்தது..” என்று ஆஷா கண்களைச் சிமிட்டி பாவனையோடு சொல்ல, அவளுக்கு எல்லாம் புரிந்தும் புரியாதது போல,
“என்னடி நடந்தது..?” என்று இவளும் கண்களில் அபிநயம் பிடிக்க அவளின் கண்களையே பார்த்த ஆஷா,
“உன்னோட கண்ணை மட்டும் யாராவது நேருக்கு நேர் பார்த்தால் அதில் விழுந்தவன் கடைசி வரையில் எழுதிரிக்கவே மாட்டான்..” என்று சீரியசாக சொல்ல,
அதை விளையாட்டு போல எடுத்துக் கொண்ட எழில், “உன்னோட விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சொல்ல வந்த விஷயத்தை சொல்லு..” என்று கூறினாள் எழில்.
“நான் எப்பொழுது போல அவனின் டிப்பனை எடுத்து வந்து விட்டேன்..” என்று ஆஷா சொல்லவும் அவளின் பக்கம் திரும்பி அமர்ந்தவள்,
“ம்ம் அடுத்து என்ன நடந்தது..?” என்று கதை கேட்டாள் எழில்விழி..
“அடுத்து என்ன நடந்ததா..? அவனும் ஒரு டிப்பனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்..” என்று அவள் சொல்ல, எழில்விழிக்கு ஏன் என்று அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் தானாக மலர்ந்தது..
‘ஹப்பாடி அவர் இவளுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்திருக்கின்றார்..’ என்று அவள் மனம் சந்தோசம் அடைய, ‘அது மட்டும் தான் காரணமா..?’ என்று அவளின் மனம் கேள்வி கேட்டது..
அதற்கு பதில் சொல்லாமல், “உனக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கணுமே!” என்று எழில் ஆஷாவுடன் பேச்சைத் தொடர்ந்தாள்..
“ஏய் எப்படி கண்டு பிடித்தாய்..?” என்று திகைப்புடன் கேட்டதும், “இதுதானே எல்லோரும் ரெகுலராக சொல்றாங்க..” என்று சொல்ல,
“என்னோடு சேர்ந்து உனக்கும் கொழுப்பு அதிகம் ஆகிவிட்டது..” என்று ஆஷா சிரிப்புடன் சொல்லவும்,
“ம்ம் இப்பொழுது சொன்னாயே இது சரியான வாக்கியம்.. உன்னோட சேர்ந்து எனக்கும் கொழுப்பு தலைக்கு ஏறிவிட்டது..” என்று அவள் அபிநயத்தோடு கூறினாள் எழில்விழி..
அவள் சொல்லும் விதத்தில் தான் சொல்ல வந்ததை மறந்து சிரிக்க ஆரமித்த ஆஷா, “பார்க்கத்தான் நீ பக்க சைலன்ட் ஆனால் சரியான ஆளுதான்..” என்று சிரித்தவள்,
“ஹையோ உன்னால் சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன் பாரு..” என்று தலையில் அடித்துக் கொண்டவளைப் பார்த்து கலகலவென்று சலங்கை ஒலிபோல சிரித்தாள் எழில்விழி..
“ம்ம் நீ சொல்லு..” என்று சொல்ல, “அடுத்து என்ன அன்று மதியம் அவன் வீட்டில் இருந்துக் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டான்.. எனக்கு ஒரே சந்தேகமாக இருந்தது எழில்..” என்று கூறினாள்..
தனது வலது கரத்தை தனது வலது கன்னத்தில் வைத்துக் கொண்டவள், “சந்தேகம் தீர்ந்ததா..? இல்லையா..?” என்று அவள் கேட்டதும்,
“ம்ம் தீர்த்தது.. போனவாரம் வெள்ளிக்கிழமை அன்று அவனுக்கு பிறந்தநாள் அதனால் அவனின் அம்மா செய்த கேசரியை எடுத்துவர போனேன்..” என்று சொல்லி அவள் நிறுத்த அவளைப் பார்த்தாள் எழில்விழி..
அவளைப் பார்த்து கண்சிமிட்டிய ஆஷா, “அந்த கேசரியுடன் ஒரு கடிதம் இருந்தது அதைப் பிரித்துப் படித்தால், ‘உனக்காகவே தனியாக ஒரு டிப்பன் கொண்டு வருகிறேன்.. என்னோட சாப்பாட்டையும் எடுத்து செல்லாதே..’ என்று எழுதி இருந்தது..” என்று கூறியவள் தலையைக் குனிந்துகொண்டு,
“எனக்கு அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது..” என்று ஆஷா அவளிடம் சொல்ல அவளோ ஆஷாவைக் கேள்வியாகப் பார்த்தாள்..
“என்னால் அவன் எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்திருப்பான்.. நீ என்னைத் திட்டியது தவறே இல்லை எழில்..” என்று வருத்ததுடன் சொல்ல,
“உன்னை யாரும் என்னிடம் தப்பாக சொல்லக் கூடாது என்று தான் நான் உன்னைத் திட்டினேன் ஆஷா.. மற்றபடி வேற எந்த காரணமும் இல்ல..” என்று கூறினாள் எழில்விழி
“என்ன நடந்தாலும் என்னோட தோழியை நான் விட்டுக் கொடுக்க முடியாது இல்லையா..?!” என்று கேட்டதும் அந்த நொடி அவளைப் பார்த்தவள் கண்களுக்கு தனது தாயின் புகைப்படமே மனதில் தோன்றியது..
ஆஷாவின் மனம், ‘என்னோட அம்மா உன்னோட ரூபத்தில் என்னுடன் இருக்காங்க எழில்..’ என்று நினைத்தவள்,
“எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.. அவனின் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டவள் நான்! எனக்காக அவன் சாப்பாடு எடுத்து வருகிறான்..” என்று வருத்ததுடன் சொன்னாள் ஆஷா.
அவளின் வருத்தம் காணப்பிடிக்காமல் எழில் ஏதோ சொல்லவர, அதற்குள் இடையில் புகுந்த ஆஷா, “நான் யார்..?, என்னோட பெயர் எதுவும் அவனுக்கு தெரியாது போல அதுதான் கடிதம் எழுதி வைத்திருக்கிறான்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல எழிலுக்கும் சிரிப்புதான் வந்தது..
நொடிக்கு ஒருமுறை எண்ணங்களை மாற்றி பயணிக்கும் ஆஷாவின் செயலில் மகிழ்ச்சி கொண்டாள் எழில்விழி.. துன்பம் என்றும் உடன் இருப்பது இல்லை.. அது வரும் வந்த வழியும் தெரியாது போகும் இடமும் தெரியாது..
அதேபோல தான் ஆஷாவின் வருத்தமும், வந்த வழியும் தெரியல.. போகும் வழியும் புரியல.. இப்படி இருப்பவர்கள் மனம் என்று சந்தோசமாக இருக்கும்..
அஷாவைப் பார்த்துக் கொண்டே மனதில் இவற்றை எல்லாம் நினைத்தாள் எழில்விழி.. ஆனால் அடுத்த நொடியே மனம் ஆஷா சொன்ன விஷயத்தில் செல்ல, ‘உன்னைப் பற்றி அவனுக்கா தெரியாது.. அவனுக்கு எல்லாம் தெரியும்..’ என்று அவளைப் பார்த்து புன்னகைப் பூத்தாள்..
அவளின் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தாள் ஆஷா.. ஆனால் அவளிடம் சொன்னபடியே அவளுக்கும் சாப்பாடு எடுத்து வந்த காரணத்தால் எழிலின் ஆழ்மனதிலும் அவனின் மீதான நினைவுகள் நிழலாக பதிந்தது..
“இப்பொழுது எதற்கு சிரிக்கிறாய்..?” என்று ஆஷா கேட்டதும்,
“இல்ல நடப்பதெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது..” என்று சொல்லி அவளைக் குழப்பிவிட்டு எழுந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்றாள் எழில்விழி..
எழில் வராத இந்த ஒருவாரத்தில் பள்ளிக்கூடத்தில் இரு மாற்றங்கள் நிகழ்ந்தது.. ஒன்று பள்ளிக்கூடத்திற்கு இரண்டு டிப்பன் பாக்ஸை எடுத்து வந்தான் அன்பரசன்..
இரண்டாவது மாற்றம், ஆஷாவின் தப்பை ஆதரிக்கவும் இல்லாமல் காட்டிக்கொடுத்து தண்டனை வாங்கித் தருவதற்கு பதிலாக அவளே மன்னிப்பும் கேட்டு, அதற்கு தீர்வும் சொன்னவளின் நினைவுகள் அவனின் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்தது..
ஆஷா விடைத்தேடி அலைய, எழிலைத் தேட ஆரமித்தான் அன்பரசன். அவன் அம்மா கையில் அவன் மதிய உணவு சாப்பிட்டு கிட்டதட்ட மூன்று வருடம் ஆகிறது..
அவளின் மீது இருந்த ஒருவகை பாசம் அவளைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவளை விழிகளால் தேட ஆரமித்தான் அன்பரசன்..
அவளைப் பார்த்து ஒரு ‘தேங்க்ஸ்’ சொன்னால் போதும் தன்னுடைய மனம் திருப்தி அடையும் என்று நினைக்க அவளிடம் அவனுக்கு இன்னொரு விளக்கம் தேவையாக இருந்தது..
ஆனால் அவளோ அவனின் கண்ணில் படவே இல்லை.. ஆஷா முன்னைவிட, எழிலைத் தேட ஆரமித்தாள் தன்னுடைய சந்தோசத்தை அவளிடம் பகிர்ந்துக் கொள்ள அவளைத் தேடினாள்..
சரியாக ஒருவாரம் சென்ற பிறகு எழிலைப் பார்த்த ஆஷா ஓட்டிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.. தனது தோழியைப் பார்த்த சந்தோஷத்தில் எழிலும் அவளைக் கட்டிக்கொள்ள,
“என்னடி இப்படி ஒருவாரம் லீவ் எடுத்துவிட்டாய்..?! உன்னைப் பார்க்காமல் எனக்கு ஏதோ மாதிரியே இருந்தது..” என்று அவளிடம் கூறியதும், எழில் சந்தோசத்துடன்,
“அதுதான் நான் வந்துவிட்டேனே.. இன்னும் என்ன வருத்தம்..?” என்று விளையாட்டு போல சிரித்துக் கொண்டே அவளை விட்டு விலகியவள், ஆஷாவின் கைகளைக் கோர்த்துக்கொண்டு வகுப்பறைக்குள் சென்று தங்களின் இடத்தில் அமர்ந்தனர்..
எழில்விழி அருகில் அமர்ந்த ஆஷா, “ஏன் எழில் ஒரு வாரம் லீவ் எடுத்தாய்..?” என்று ஆஷா கேட்டதும், எழில் மனத்தில் அன்று நடந்தது படமாக ஓட வாயில் வார்த்தைகள் வராமல் கண்கலங்கினாள்..
அவளைப் பார்த்த ஆஷா, ‘ச்சே நான் வேற அவளிடம் கேட்டு அவளின் மனத்தைக் காயப்படுத்திவிட்டேன் போல..?!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் எழில் பக்கம் திரும்பி,
“ஸாரி டா நான் ஏதாவது தப்பாக கேட்டுவிட்டேனா..?” என்று கேட்டவள், “நீ எதுவும் சொல்ல வேண்டாம் நீ எதுக்கும் கண்கலங்காதே..” என்று அவளின் கண்களைத் துடைத்துவிட்டாள்..
“ஏய் உன்னிடம் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துவிட்டேன் பாரு..” என்று கூறியவளைப் புரியாமல் பார்த்தாள் எழில்..
“நீ ஸ்கூல் வராத இந்த ஒரு வாரத்தில் என்னென்னமோ நடந்தது..” என்று ஆஷா கண்களைச் சிமிட்டி பாவனையோடு சொல்ல, அவளுக்கு எல்லாம் புரிந்தும் புரியாதது போல,
“என்னடி நடந்தது..?” என்று இவளும் கண்களில் அபிநயம் பிடிக்க அவளின் கண்களையே பார்த்த ஆஷா,
“உன்னோட கண்ணை மட்டும் யாராவது நேருக்கு நேர் பார்த்தால் அதில் விழுந்தவன் கடைசி வரையில் எழுதிரிக்கவே மாட்டான்..” என்று சீரியசாக சொல்ல,
அதை விளையாட்டு போல எடுத்துக் கொண்ட எழில், “உன்னோட விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சொல்ல வந்த விஷயத்தை சொல்லு..” என்று கூறினாள் எழில்.
“நான் எப்பொழுது போல அவனின் டிப்பனை எடுத்து வந்து விட்டேன்..” என்று ஆஷா சொல்லவும் அவளின் பக்கம் திரும்பி அமர்ந்தவள்,
“ம்ம் அடுத்து என்ன நடந்தது..?” என்று கதை கேட்டாள் எழில்விழி..
“அடுத்து என்ன நடந்ததா..? அவனும் ஒரு டிப்பனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்..” என்று அவள் சொல்ல, எழில்விழிக்கு ஏன் என்று அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் தானாக மலர்ந்தது..
‘ஹப்பாடி அவர் இவளுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்திருக்கின்றார்..’ என்று அவள் மனம் சந்தோசம் அடைய, ‘அது மட்டும் தான் காரணமா..?’ என்று அவளின் மனம் கேள்வி கேட்டது..
அதற்கு பதில் சொல்லாமல், “உனக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கணுமே!” என்று எழில் ஆஷாவுடன் பேச்சைத் தொடர்ந்தாள்..
“ஏய் எப்படி கண்டு பிடித்தாய்..?” என்று திகைப்புடன் கேட்டதும், “இதுதானே எல்லோரும் ரெகுலராக சொல்றாங்க..” என்று சொல்ல,
“என்னோடு சேர்ந்து உனக்கும் கொழுப்பு அதிகம் ஆகிவிட்டது..” என்று ஆஷா சிரிப்புடன் சொல்லவும்,
“ம்ம் இப்பொழுது சொன்னாயே இது சரியான வாக்கியம்.. உன்னோட சேர்ந்து எனக்கும் கொழுப்பு தலைக்கு ஏறிவிட்டது..” என்று அவள் அபிநயத்தோடு கூறினாள் எழில்விழி..
அவள் சொல்லும் விதத்தில் தான் சொல்ல வந்ததை மறந்து சிரிக்க ஆரமித்த ஆஷா, “பார்க்கத்தான் நீ பக்க சைலன்ட் ஆனால் சரியான ஆளுதான்..” என்று சிரித்தவள்,
“ஹையோ உன்னால் சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன் பாரு..” என்று தலையில் அடித்துக் கொண்டவளைப் பார்த்து கலகலவென்று சலங்கை ஒலிபோல சிரித்தாள் எழில்விழி..
“ம்ம் நீ சொல்லு..” என்று சொல்ல, “அடுத்து என்ன அன்று மதியம் அவன் வீட்டில் இருந்துக் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டான்.. எனக்கு ஒரே சந்தேகமாக இருந்தது எழில்..” என்று கூறினாள்..
தனது வலது கரத்தை தனது வலது கன்னத்தில் வைத்துக் கொண்டவள், “சந்தேகம் தீர்ந்ததா..? இல்லையா..?” என்று அவள் கேட்டதும்,
“ம்ம் தீர்த்தது.. போனவாரம் வெள்ளிக்கிழமை அன்று அவனுக்கு பிறந்தநாள் அதனால் அவனின் அம்மா செய்த கேசரியை எடுத்துவர போனேன்..” என்று சொல்லி அவள் நிறுத்த அவளைப் பார்த்தாள் எழில்விழி..
அவளைப் பார்த்து கண்சிமிட்டிய ஆஷா, “அந்த கேசரியுடன் ஒரு கடிதம் இருந்தது அதைப் பிரித்துப் படித்தால், ‘உனக்காகவே தனியாக ஒரு டிப்பன் கொண்டு வருகிறேன்.. என்னோட சாப்பாட்டையும் எடுத்து செல்லாதே..’ என்று எழுதி இருந்தது..” என்று கூறியவள் தலையைக் குனிந்துகொண்டு,
“எனக்கு அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது..” என்று ஆஷா அவளிடம் சொல்ல அவளோ ஆஷாவைக் கேள்வியாகப் பார்த்தாள்..
“என்னால் அவன் எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்திருப்பான்.. நீ என்னைத் திட்டியது தவறே இல்லை எழில்..” என்று வருத்ததுடன் சொல்ல,
“உன்னை யாரும் என்னிடம் தப்பாக சொல்லக் கூடாது என்று தான் நான் உன்னைத் திட்டினேன் ஆஷா.. மற்றபடி வேற எந்த காரணமும் இல்ல..” என்று கூறினாள் எழில்விழி
“என்ன நடந்தாலும் என்னோட தோழியை நான் விட்டுக் கொடுக்க முடியாது இல்லையா..?!” என்று கேட்டதும் அந்த நொடி அவளைப் பார்த்தவள் கண்களுக்கு தனது தாயின் புகைப்படமே மனதில் தோன்றியது..
ஆஷாவின் மனம், ‘என்னோட அம்மா உன்னோட ரூபத்தில் என்னுடன் இருக்காங்க எழில்..’ என்று நினைத்தவள்,
“எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.. அவனின் சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டவள் நான்! எனக்காக அவன் சாப்பாடு எடுத்து வருகிறான்..” என்று வருத்ததுடன் சொன்னாள் ஆஷா.
அவளின் வருத்தம் காணப்பிடிக்காமல் எழில் ஏதோ சொல்லவர, அதற்குள் இடையில் புகுந்த ஆஷா, “நான் யார்..?, என்னோட பெயர் எதுவும் அவனுக்கு தெரியாது போல அதுதான் கடிதம் எழுதி வைத்திருக்கிறான்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல எழிலுக்கும் சிரிப்புதான் வந்தது..
நொடிக்கு ஒருமுறை எண்ணங்களை மாற்றி பயணிக்கும் ஆஷாவின் செயலில் மகிழ்ச்சி கொண்டாள் எழில்விழி.. துன்பம் என்றும் உடன் இருப்பது இல்லை.. அது வரும் வந்த வழியும் தெரியாது போகும் இடமும் தெரியாது..
அதேபோல தான் ஆஷாவின் வருத்தமும், வந்த வழியும் தெரியல.. போகும் வழியும் புரியல.. இப்படி இருப்பவர்கள் மனம் என்று சந்தோசமாக இருக்கும்..
அஷாவைப் பார்த்துக் கொண்டே மனதில் இவற்றை எல்லாம் நினைத்தாள் எழில்விழி.. ஆனால் அடுத்த நொடியே மனம் ஆஷா சொன்ன விஷயத்தில் செல்ல, ‘உன்னைப் பற்றி அவனுக்கா தெரியாது.. அவனுக்கு எல்லாம் தெரியும்..’ என்று அவளைப் பார்த்து புன்னகைப் பூத்தாள்..
அவளின் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தாள் ஆஷா.. ஆனால் அவளிடம் சொன்னபடியே அவளுக்கும் சாப்பாடு எடுத்து வந்த காரணத்தால் எழிலின் ஆழ்மனதிலும் அவனின் மீதான நினைவுகள் நிழலாக பதிந்தது..
“இப்பொழுது எதற்கு சிரிக்கிறாய்..?” என்று ஆஷா கேட்டதும்,
“இல்ல நடப்பதெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது..” என்று சொல்லி அவளைக் குழப்பிவிட்டு எழுந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்றாள் எழில்விழி..