• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nice ud tq mam
எனக்கு எதுக்கு தேங்க்ஸ்..? நான் தான் உங்களுக்கு சொல்லணும் தேங்க்ஸ்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அடுத்தடுத்த நாட்கள் சென்று மறைய, எழிலைச் சுத்தமாக மறந்தவன் படிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்த பப்ளிக் எக்ஸாம் நல்லபடியாக முடிந்தது.. பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது..

அப்பொழுது ஒரு நாள் காலை நேரம் தனது சைக்கிளில் பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவன், அவளைப் பார்த்து சைக்கிளை நிறுத்த, எப்பொழுதும் போல அவளின் செய்கை இன்றும் அவனின் மனதைக் கவர்ந்தது..

ஒருகையில் பாவடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தலைவாரி அதில் மல்லிகை பூவைச் சூடி, காலில் செருப்பு இல்லாமல் அந்த சின்ன வரப்பில் மிகுந்த கவனத்துடன் வந்தவள் மேடேறும் இடத்தில் சைக்கிளில் நின்றிருந்தான் அன்பரசன்..

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “கொஞ்சம் நகர்ந்து நின்றால் நான் மேலே வருவதற்கு சரியாக இருக்கும்..” என்று அவள் கூறவே அவளுக்கு வழிவிட்டு நின்றான்..

அந்த காலைவேளையில் சூரியனின் செங்கதிர் ஒளி பட்டு வயல்வெளி பச்சை நிறத்தில் மினுமினுக்க அந்த பச்சை நிறமும், அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நின்ற பாவாடை சட்டையும் அந்த இடத்தில் அவளின் முகம் பார்க்க ஆழகாக இருந்தது..

அவள் வயலை விட்டு மேலே வந்ததும், எதுவும் பேசாமல் அமைதியாக தலைக் குனிந்துக் கொண்டே, “எக்ஸாம் எப்படி எழுதி இருக்கீங்க..?” என்று கேட்டாள்..

அவளின் கேள்வியில் திகைத்தவன், “ம்ம் நல்ல எழுதி இருக்கேன்.. ம்ம் உன்னோட முழுப்பெயர் என்ன..?” என்று கேட்டான்..

“என்னோட பெயர் எழில்விழி..” என்று சொல்லவும் அவளின் பெயரை மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டவன் முகத்தில் புதிதாக தோன்றியப் புன்னகையுடன்!

“அடுத்து பத்தாம் வகுப்பு இல்ல..?! நல்ல படி..” என்று அவனே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல சரி என்று தலையசைத்தவள்,

“நீங்க அடுத்து என்ன படிக்க போறீங்க..?!” என்று கேட்டதும், “வக்கீலுக்கு படிக்க போகிறேன்..” என்று சொல்லவும், அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “அங்கையாவது குற்றவாளியைச் சரியாக கண்டுபிடிங்க..” என்று முணுமுணுக்க, அவள் சொன்னது அவனின் காதில் சரியாக விழுந்தது..

“ம்ம் நல்லாவே பேசுகிறாய்..” என்று அவன் குறுஞ்சிரிப்புடன்! எப்பொழுதும் போல ‘ஹையையோ..’ கையை உதறினாள்.. அவளின் அந்த சைகை கூட அவனுக்கு மிகவும் பிடித்தது..

“நான் குற்றவாளியைக் கண்டு பிடிப்பது இருக்கட்டும்.. நீ நல்ல படி..” என்று சொல்ல, “நீ அடுத்து என்ன படிக்க போகிறாய்..?” என்று கேட்டதும், “நானா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்..

அவள் அதிர்ச்சியைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன், “ம்ம் நீதான்..” என்றான்

“இல்லங்க.. எங்க வீட்டில் படிக்க வைப்பாங்களா என்று தெரியல.. அண்ணா இதற்கு எல்லாம் செலவு பண்ண மாட்டான்.. பண்ணிரண்டாம் வகுப்பு வரையில் படிப்பேன் அதுக்கு மேல் தெரியல..” என்று சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்தவன்,

“அண்ணாவிடம் கேளு..” என்று சொல்ல அவனைப் பார்த்து மெல்ல இதழ்களை விரித்து சிரித்தவள்,

“போனமுறை உங்களிடம் பேசியதற்கு என்னோட அண்ணா அடி வெளுத்துவிட்டான்.. இதில் நான் மேலே படிக்கணும் என்று சொன்னால் எனக்கு சமாதியே கட்டிவிடுவான்..” என்று கூறினாள்

அவள் கூறியது கேட்டு அவனுக்கு மனம் வலிக்க அவளே மீண்டும் தொடர்ந்தாள்..

“என்னோட படிப்பு என்ன ஆனால் என்ன..? நீங்க நல்ல படிங்க..” என்று சொல்லிவிட்டு அவளின் வழியைப் பார்த்து செல்ல, “ஆஷா என்ன படிக்க போகிறாள்..?” என்று கேட்டதும் நடந்துக் கொண்டிருந்தவள் நின்று அவனைத் திரும்பிப் பார்த்து,

“ஆஷாயும் பள்ளிக்கூடம் மாறிவிட்டாள்.. அவளோட அப்பாவிற்கு டிரான்ஸ்பர் வந்திருப்பதால் டி.சி. வாங்கிவிட்டாள்.. அடுத்த முறை ஊருக்கு வந்தால் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி இருக்க..” என்று சொல்ல அவனும் சரியென்று தலையசைத்து விட்டு தன்னுடைய வழியைப் பார்த்து நடக்க,

அவள் அடிவாங்கினால் என்று கூறியது அன்புவின் மனதில், ‘இவளை அடிக்கும் அளவிற்கு இவள் ஒரு தப்பும் செய்யவில்லையே.. பாவம் ரொம்ப பலமாக அடித்துவிட்டான் போல..’ என்று நினைத்தவன்,

அவளின் பக்கம் திரும்பி, “ஸாரி என்னால் தானே நீ அடிவாங்கினாய்..” என்று கூறியதும் நடந்து கொண்டிருந்தவள் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்..

அவன் ஸாரி கேட்டதும் அவளின் மனதில் தயக்கம் சூழ, “என்னங்க என்னிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறீங்க..?!” என்று தரையைப் பார்த்துக் கொண்டே கூறினாள்..

“மன்னிப்பு அவ்வளவு பெரிய வார்த்தையா..?” என்று அவளிடம் கேட்டான்..

“ம்ம் என்னோட அப்பா அப்படித்தான் சொல்வாங்க..” என்று அவள் சொல்லவும், “நீ ஆஷாவிற்காக என்னிடம் கேட்டதும் மன்னிப்புதானே..? அப்போ அது பெரிய வார்த்தையா உனக்கு தோணலையா..?” என்று கேட்டான்..

அவனை ஒரு நொடி நிமிர்ந்து நோக்கியவள், இல்லை என்று தலையசைக்க அவளின் செய்கை எல்லாம் அவனின் மனம் அவளிடம் தொலைய காரணமானது..

அவளின் அமைதி அவனின் மனதை மிகவும் கவர்ந்தது.. அவனை நிமிர்ந்து பார்த்தவள், திரும்பி தன்வழியில் நடக்க, அவனும் அவனின் பாட்டியின் வீட்டை நோக்கி சைக்கிளில் சென்றான்..

அடுத்து அவனுக்கு ரிசல்ட் வர அதில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான் அன்பரசன்.. அவனை மேல் படிப்பை மனதில் கொண்டும் தங்களின் தொழிலை விரிவு படுத்தவும் சென்னை செல்வது மிகவும் முக்கியமாக படவே,

தியாகு அவனின் ஜெயந்தியிடம், “அம்மா நாங்க சென்னை போலாம் என்று இருக்கிறோம்.. ஏன் என்றால் அன்புவிற்கு வக்கீலுக்கு படிக்க சென்னை வசதியாக இருக்கும்.. அதுவும் இல்லாமல் என்னோட தொழிலுக்கும் நல்ல ஒரு இடம் சென்னை என்று தோன்றுகிறது..” என்று சொல்ல,

சிறிது நேரம் யோசித்த ஜெயந்தி, “ம்ம் சரிப்பா.. உனக்கு எது சரின்னு படுதோ அதை செய்..” என்று சொல்லிவிட்டு எழுந்ததும் அவர்கள் பேசியதை மறந்து நின்று கேட்ட இனியா,

“அப்பா எனக்கு இங்கே தான் பிடித்திருக்கிறது.. நான் பாட்டிக்கூடவே இருக்கேன்.. நீங்க மாசம் ஒருமுறை என்னை வந்து பார்த்துட்டுப் போங்க..” என்று சொல்ல,

“என்ன இனியா நீ இல்லாமல் நாங்க மட்டும் எப்படிடா..?” என்று கேட்டதும், “தியாகு நானே சொல்லணும் என்று நினைத்தேன் பேத்தி என்னோடு இருக்கட்டும்டா.. நீங்க மட்டும் சென்னை போங்க.. என்னால் இவளைப் பிரிந்து இருக்க முடியாதுப்பா..” என்று சொல்ல,

“சரிம்மா ஆனால் உங்களின் பேரன் இருவரையும் சமாளிக்கும் பொறுப்பு உங்களுடையது..” என்று சொல்லவும் சரியென்று அன்பையும், அறிவையும் சமாளித்து அவர்களை சென்னை அனுப்பி வைத்தார் ஜெயந்தி..

அன்று எழிலைப் பார்த்தவன் அதன்பிறகு அவளை அவன் பார்க்கவே இல்லை.. ஆஷா ஒருபக்கம் சென்றுவிட, அன்பு ஒரு பக்கம் சென்றுவிட, எழிலும் தனது பாதையில் நடந்தாள்..

இவர்கள் மூவரின் சந்திப்பும் இனி எப்படி இருக்கும்..? எழில் தனது மனதை அறிவாளா..? அவளின் விழியில் தன்னை தொலைத்ததை அன்பு அறிவானா..? ஆஷா இவர்கள் இருவரையும் சந்திப்பாளா..? இந்த கேள்விக்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
Rmbaa alaga pasumaina pathivu???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top