அத்தியாயம் – 7
இயற்கையும் ஒரு தோழிதான் நமக்கு என்ன வேண்டும் என்பதை நம்மைவிட அதிகம் அறிந்து வைத்திருக்கும்.. தென்னை மரத்தின் சலசலக்கும் ஓசை கூட இல்லை.. அந்த இடம் பசுமையாக இருந்தாலும் இவளுக்காக அமைதியாக இருக்கிறது..
தென்னந்தோப்பின் வழியாக மெல்ல வீட்டை நோக்கி நடந்தவள் மனம் மௌனம் கொள்ள அங்கிருந்த இயற்கை அவளின் மனதின் நிலை அறிந்து பெரிய அமைதியை பரிசாக அளித்தது..
எழில்விழி காலிலும், கையிலும் இருக்கும் வளையலும் கொலுசும் மட்டும் இசைபாட சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தவண்ணம் வர, எங்கிருந்த கூவிய குயிலின் ஓசையில் மனதை தொலைத்தவள்,
“குயிலே கவிக்குயிலே
யார் வரவை தேடுக்கிறாய்..?
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா..?
குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்..?
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா..?”
என்ற பாடலைப் பாடிய வண்ணம் வந்தவள் அவளுக்கு பத்தடி தூரத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணைப் பார்க்க அவளோ இவளை கவனிக்காமல் தனக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்க அந்த பெண்ணைப் பார்த்தும் இவங்க வெளியூர் என்பதை உணர்ந்தவள் அவளின் அருகில் சென்றாள்..
அவளின் அருகில் சென்றவள் அவளின் உடையை அளவெடுத்தாள். பிளக் கலர் லேகீன்சும், யெல்லோ கலர் டாபும் அணிந்திருந்தாள் அந்த பெண்.. முடியை மட்டும் ஸ்டைலாக ஒரு க்ளிப்பில் அடக்கியிருந்தாள்.. இவள் அருகில் செல்ல செல்ல அவளோ தனக்குள் பேசுவது குரல் எழில் காதில் நன்றாகவே விழுந்தது..
“அப்பா அப்போவே சொன்னாரு.. தனியாக போகாதே ஊர் எல்லாம் மாறி போய்விட்டது உனக்கு வழி தெரியாது என்று சொல்லும் பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்..” என்று தனக்குள் புலம்பியவள் அருகில் கொலுசு சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்..
அவள் தனக்குள் புலம்புவதைக் கேட்ட எழில் சிரிப்புடன், “நீங்க யார் வீட்டுக்கு செல்ல வேண்டும்..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டதும் அவளைப் பார்த்து ஒரு மர்ம புன்னகையை உதிர்த்தாள் அந்தபெண்..
அவளின் புன்னகையைக் கண்டதும் எழில் மனதிற்குள், ‘இந்த புன்னகை எனக்கு ரொம்பவே பழக்கப்பட்ட ஒருவரின் புன்னகை போல தெரிகிறது..’ என்று நினைத்தவள் அவளின் முகத்தை உற்றுப்பார்த்தாள்.. ஆனாலும்கூட அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும், ‘யார் என்று தெரியல..’ என்று நினைத்தவள்,
அவளைப் பார்க்க அவளோ, “இங்கே எனக்கு ரொம்ப வேண்டியவங்க வீடு இருக்கு.. இதுவரை நான் இங்கே வந்தது இல்லை.. என்னை அவங்க வீடுக்கு கூட்டிட்டு போக முடியுமா..?” என்று எழில் இடம் உதவி கேட்டாள் அந்தப்பெண்..
“ம்ம் உங்களிடம் முகவரி இருந்த கொடுங்க..” என்று கேட்டாள் எழில்விழி.. அவளைப் பார்த்து குறும்புடன் சிரித்த அந்த பெண்ணைப் புரியாமல் பார்த்தாள் எழில்விழி..
“வாங்க நடந்துக் கொண்டே பேசலாம்..” என்று அழைத்த அந்த பெண்ணுடன் நடக்க ஆரமித்தவள், “எதுக்கு தெரியாத ஊருக்கு தனியாக வரீங்க..” என்று கேட்டாள் எழில்விழி..
“தெரிந்தவங்களைப் பார்க்க தெரியாத ஊருக்கு வரவேண்டி இருக்கிறதே.. நான் என்ன பண்ணறது..?” என்று எதிர் கேள்வி கேட்டவளின் கேள்வியில் இருந்த குறும்பை உணர்ந்தவள்,
“நீங்க முகவரியை சொல்லுங்க நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்..” என்று சொல்ல அவளைப் பார்த்து சிரித்த அந்தப்பெண்,
“முகவரி எல்லாம் எனக்கு தெரியாதுங்க.. என்னோட தோழி சொன்ன முகவரி இதுதான்..” என்று சொன்னவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த எழில்விழி
அவளின் மனதிற்குள், ‘இந்த விளையாட்டு தனம் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஒரே நபர் ஆஷா.. இவள் ஆஷாவாக இருப்பாளோ..?’ என்று யோசித்தவள் அந்த இடத்தில் நின்றுவிட, அவள் நின்றதை கவனிக்காத அந்தப்பெண்,
“அயலூரில் வந்த இறங்கி சுந்தரத்தின் மகள் எழில்விழி அல்லது முத்துகுமாரின் தங்கை எழில் என்று யாரை கேட்டாலும் சொல்வாங்க என்று சொன்னாள்..” என்று கூறியவள் இவளின் கொலுசின் ஓசை கேட்காது நின்று திரும்பிப் பார்த்தாள்
அவள் நின்ற இடத்திலேயே கண்கள் கலங்க உதடுகள் துடிக்க அவளைப் பார்த்தவள், “ஆ..ஷா..” என்று அழைக்க, அவளும் புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைக்க மகிழ்ச்சியில் சிலையென நின்றுவிட்டாள்..
தனது பிறந்தநாள் அன்று பிரிந்து சென்ற உயிர் தோழியை சந்திப்பாள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.. அதுவும் ஆஷா அவளிடமே வந்து அவளின் முகவரியைக் கேட்டது அவளுக்கு இன்னமும் ஆனந்தத்தை வாரி வழங்க அப்படியே நின்றுவிட்டாள்..
உடனே அவளின் அருகில் சென்ற ஆஷா, “ஏய் எழில்.. என்னடா இதுக்கு எல்லாம் கண்ணு கலங்குகிறாய்..” என்று அவளின் கண்ணீரைத் துடைத்துவிட கையில் இருந்த கட்டபையை கீழே தவறவிட்டவள், ஆஷாவின் தோளில் சாய்ந்து அழுதே விட்டாள்..
அவளின் கண்ணீரைப் பார்த்து ஆஷாவின் விழிகளும் கலங்க தலையை மெல்ல வருடிக் கொடுத்தவள், “என்ன எழில் என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை தானே..?” என்று சிரிப்புடன் கேட்டதும் அவள் அழுவதை நிறுத்திவிட்டு, அவள் ஆமாம் என்று தலையசைந்தாள்..
அவள் கண்கள் இருந்தும் கண்ணீரில் மிதக்க, உதட்டில் புன்னகை பூவாக மலர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவளை பழையபடியே மாற்ற நினைத்தவள்,
“எழில் வரும் பொழுது என்ன பாட்டு பாடிட்டு வந்த..? குயிலே கவிக்குயிலே வா..? அது யார் நீ மனதிற்குள் ஆசை வந்த மன்னன்..?” என்று குறும்பாகக்கேட்டு கண்ணடித்தவளைப் பார்த்து,
“ஏய் எரும எப்போ எதில் விளையாடுவது என்று உனக்கு தெரிய வேண்டாமா..? இப்படி தீடிரென வந்து நின்று என்னைப்பற்றி என்னிடமே விசாரித்து விளையாடுகிறாய்..” என்று அவள் காலுக்கு அடியில் இருந்த குச்சியை எடுக்க குனிந்த எழில்விழியின் தலைக்கு மேல் கரத்தை குவித்து சிலைபோல நின்ற ஆஷா,
“என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பொழுது உண்டு மகளே..” என்று ஆசிர்வாதம் செய்ய, “எனக்கு ஆசிர்வாதமா செய்கிறாய் இருடி உனக்கு இருக்கிறது..” என்று குச்சியை எடுத்தவள்,
அவளை அடிக்க துரத்த, “ஐயோ என்னோட எழில் ரொம்ப அமைதியான பொண்ணு என்று ஊர் முழுக்க சொன்னது அனைத்தும் பொய்யா..? இப்படி பத்திரகாளி மாதிரி அடிக்க துரத்துகிறாள்.. இதை கேட்க யாரும் இல்லையா..? என்னை காப்பாற்ற யாரும் இல்லையா..?” என்று தோப்பிற்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடினாள்..
“உன்ன காப்பாற்ற யார் வராங்க என்று நானும் பார்க்கிறேன்..” என்று அவளைத் துரத்திக்கொண்டு அவளின் பின்னோடு ஓடியவள் அந்த வழியே வந்த யாரோ மீது பலமாக மோதி கீழே விழப்போனவள் கொஞ்சம் சுதாரித்து நின்றவள்,
அவள் இடித்த வேகத்தில் கீழே விழப்போனவன் விழாமல் சரியாக நின்று அவளைப் பார்க்க அவளின் தாவணியோ அவனின் முகத்தை வருடிவிட்டு அவன் அவளின் முகத்தைப் பார்ப்பதற்குள் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவள் அந்த தோப்பை விட்டே சென்றுவிட்டிருந்தாள்.. இவை அனைத்தும் நொடிபொழுதில் நடந்து முடிந்தது.. இருவருமே மற்றவர் முகத்தைக் காணவில்லை..
காலையில் சென்னையில் அன்னையுடன் ஷாப்பிங் செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் அன்புவிற்கு அழைப்பு வர, அழைப்பது யார் என்று தெரிந்ததும் அவனின் முகம் தானாக மறந்தது..
“இனியா என்னடா காலையில் கால் பண்ணி இருக்கிறாய்..? இன்னைக்கு ஸ்கூல் போகல..?” என்று கேட்டதும் அவனின் முகத்தைப் பார்த்த சுமித்ரா,
“அண்ணனுக்கும் தங்கைக்கும் வேற வேலையே இல்லையா..?” என்று கேட்டதும், அன்பு சிரிக்க
அவரின் குரலை எதிர்புறம் இருந்து அவர் சொன்னதைக் கேட்ட இனியா, “அம்மா எங்க மேல கண்ணு வைக்காதீங்க.. நான் என்னோட அண்ணனுடன் பேசுகிறேன்..” என்று சொல்லவும், சுமித்ரா கையில் போனை கொடுத்தான் அன்பரசன்..
“ம்ம் பேசு.. பேசு..” என்று சுமித்ரா அன்புவிடம் சொல்ல, நீங்க பேசுங்க என்று சைகை செய்தவன் காரை ஓட்ட ஆரமித்தான்..
அவனிடம் இருந்து போனை வாங்கிய சுமித்ரா, அம்மா, அப்பா, பற்றியெல்லாம் கவலையில்லை அண்ணா தான் எல்லாம் இல்லையா..?” என்று கேட்டதும், “எனக்கு எல்லோரையும் பிடிக்கும் அம்மா..” என்று இனியா சொல்ல சுமித்ரா சிரித்தார்..
“ஹப்பா அம்மா சிரிச்சிட்டாங்க..” என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக கூறியவள்,
இயற்கையும் ஒரு தோழிதான் நமக்கு என்ன வேண்டும் என்பதை நம்மைவிட அதிகம் அறிந்து வைத்திருக்கும்.. தென்னை மரத்தின் சலசலக்கும் ஓசை கூட இல்லை.. அந்த இடம் பசுமையாக இருந்தாலும் இவளுக்காக அமைதியாக இருக்கிறது..
தென்னந்தோப்பின் வழியாக மெல்ல வீட்டை நோக்கி நடந்தவள் மனம் மௌனம் கொள்ள அங்கிருந்த இயற்கை அவளின் மனதின் நிலை அறிந்து பெரிய அமைதியை பரிசாக அளித்தது..
எழில்விழி காலிலும், கையிலும் இருக்கும் வளையலும் கொலுசும் மட்டும் இசைபாட சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தவண்ணம் வர, எங்கிருந்த கூவிய குயிலின் ஓசையில் மனதை தொலைத்தவள்,
“குயிலே கவிக்குயிலே
யார் வரவை தேடுக்கிறாய்..?
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா..?
குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்..?
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா..?”
என்ற பாடலைப் பாடிய வண்ணம் வந்தவள் அவளுக்கு பத்தடி தூரத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணைப் பார்க்க அவளோ இவளை கவனிக்காமல் தனக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்க அந்த பெண்ணைப் பார்த்தும் இவங்க வெளியூர் என்பதை உணர்ந்தவள் அவளின் அருகில் சென்றாள்..
அவளின் அருகில் சென்றவள் அவளின் உடையை அளவெடுத்தாள். பிளக் கலர் லேகீன்சும், யெல்லோ கலர் டாபும் அணிந்திருந்தாள் அந்த பெண்.. முடியை மட்டும் ஸ்டைலாக ஒரு க்ளிப்பில் அடக்கியிருந்தாள்.. இவள் அருகில் செல்ல செல்ல அவளோ தனக்குள் பேசுவது குரல் எழில் காதில் நன்றாகவே விழுந்தது..
“அப்பா அப்போவே சொன்னாரு.. தனியாக போகாதே ஊர் எல்லாம் மாறி போய்விட்டது உனக்கு வழி தெரியாது என்று சொல்லும் பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்..” என்று தனக்குள் புலம்பியவள் அருகில் கொலுசு சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்..
அவள் தனக்குள் புலம்புவதைக் கேட்ட எழில் சிரிப்புடன், “நீங்க யார் வீட்டுக்கு செல்ல வேண்டும்..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டதும் அவளைப் பார்த்து ஒரு மர்ம புன்னகையை உதிர்த்தாள் அந்தபெண்..
அவளின் புன்னகையைக் கண்டதும் எழில் மனதிற்குள், ‘இந்த புன்னகை எனக்கு ரொம்பவே பழக்கப்பட்ட ஒருவரின் புன்னகை போல தெரிகிறது..’ என்று நினைத்தவள் அவளின் முகத்தை உற்றுப்பார்த்தாள்.. ஆனாலும்கூட அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும், ‘யார் என்று தெரியல..’ என்று நினைத்தவள்,
அவளைப் பார்க்க அவளோ, “இங்கே எனக்கு ரொம்ப வேண்டியவங்க வீடு இருக்கு.. இதுவரை நான் இங்கே வந்தது இல்லை.. என்னை அவங்க வீடுக்கு கூட்டிட்டு போக முடியுமா..?” என்று எழில் இடம் உதவி கேட்டாள் அந்தப்பெண்..
“ம்ம் உங்களிடம் முகவரி இருந்த கொடுங்க..” என்று கேட்டாள் எழில்விழி.. அவளைப் பார்த்து குறும்புடன் சிரித்த அந்த பெண்ணைப் புரியாமல் பார்த்தாள் எழில்விழி..
“வாங்க நடந்துக் கொண்டே பேசலாம்..” என்று அழைத்த அந்த பெண்ணுடன் நடக்க ஆரமித்தவள், “எதுக்கு தெரியாத ஊருக்கு தனியாக வரீங்க..” என்று கேட்டாள் எழில்விழி..
“தெரிந்தவங்களைப் பார்க்க தெரியாத ஊருக்கு வரவேண்டி இருக்கிறதே.. நான் என்ன பண்ணறது..?” என்று எதிர் கேள்வி கேட்டவளின் கேள்வியில் இருந்த குறும்பை உணர்ந்தவள்,
“நீங்க முகவரியை சொல்லுங்க நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்..” என்று சொல்ல அவளைப் பார்த்து சிரித்த அந்தப்பெண்,
“முகவரி எல்லாம் எனக்கு தெரியாதுங்க.. என்னோட தோழி சொன்ன முகவரி இதுதான்..” என்று சொன்னவளின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த எழில்விழி
அவளின் மனதிற்குள், ‘இந்த விளையாட்டு தனம் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட ஒரே நபர் ஆஷா.. இவள் ஆஷாவாக இருப்பாளோ..?’ என்று யோசித்தவள் அந்த இடத்தில் நின்றுவிட, அவள் நின்றதை கவனிக்காத அந்தப்பெண்,
“அயலூரில் வந்த இறங்கி சுந்தரத்தின் மகள் எழில்விழி அல்லது முத்துகுமாரின் தங்கை எழில் என்று யாரை கேட்டாலும் சொல்வாங்க என்று சொன்னாள்..” என்று கூறியவள் இவளின் கொலுசின் ஓசை கேட்காது நின்று திரும்பிப் பார்த்தாள்
அவள் நின்ற இடத்திலேயே கண்கள் கலங்க உதடுகள் துடிக்க அவளைப் பார்த்தவள், “ஆ..ஷா..” என்று அழைக்க, அவளும் புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைக்க மகிழ்ச்சியில் சிலையென நின்றுவிட்டாள்..
தனது பிறந்தநாள் அன்று பிரிந்து சென்ற உயிர் தோழியை சந்திப்பாள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.. அதுவும் ஆஷா அவளிடமே வந்து அவளின் முகவரியைக் கேட்டது அவளுக்கு இன்னமும் ஆனந்தத்தை வாரி வழங்க அப்படியே நின்றுவிட்டாள்..
உடனே அவளின் அருகில் சென்ற ஆஷா, “ஏய் எழில்.. என்னடா இதுக்கு எல்லாம் கண்ணு கலங்குகிறாய்..” என்று அவளின் கண்ணீரைத் துடைத்துவிட கையில் இருந்த கட்டபையை கீழே தவறவிட்டவள், ஆஷாவின் தோளில் சாய்ந்து அழுதே விட்டாள்..
அவளின் கண்ணீரைப் பார்த்து ஆஷாவின் விழிகளும் கலங்க தலையை மெல்ல வருடிக் கொடுத்தவள், “என்ன எழில் என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை தானே..?” என்று சிரிப்புடன் கேட்டதும் அவள் அழுவதை நிறுத்திவிட்டு, அவள் ஆமாம் என்று தலையசைந்தாள்..
அவள் கண்கள் இருந்தும் கண்ணீரில் மிதக்க, உதட்டில் புன்னகை பூவாக மலர்ந்திருப்பதைப் பார்த்தவள், அவளை பழையபடியே மாற்ற நினைத்தவள்,
“எழில் வரும் பொழுது என்ன பாட்டு பாடிட்டு வந்த..? குயிலே கவிக்குயிலே வா..? அது யார் நீ மனதிற்குள் ஆசை வந்த மன்னன்..?” என்று குறும்பாகக்கேட்டு கண்ணடித்தவளைப் பார்த்து,
“ஏய் எரும எப்போ எதில் விளையாடுவது என்று உனக்கு தெரிய வேண்டாமா..? இப்படி தீடிரென வந்து நின்று என்னைப்பற்றி என்னிடமே விசாரித்து விளையாடுகிறாய்..” என்று அவள் காலுக்கு அடியில் இருந்த குச்சியை எடுக்க குனிந்த எழில்விழியின் தலைக்கு மேல் கரத்தை குவித்து சிலைபோல நின்ற ஆஷா,
“என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பொழுது உண்டு மகளே..” என்று ஆசிர்வாதம் செய்ய, “எனக்கு ஆசிர்வாதமா செய்கிறாய் இருடி உனக்கு இருக்கிறது..” என்று குச்சியை எடுத்தவள்,
அவளை அடிக்க துரத்த, “ஐயோ என்னோட எழில் ரொம்ப அமைதியான பொண்ணு என்று ஊர் முழுக்க சொன்னது அனைத்தும் பொய்யா..? இப்படி பத்திரகாளி மாதிரி அடிக்க துரத்துகிறாள்.. இதை கேட்க யாரும் இல்லையா..? என்னை காப்பாற்ற யாரும் இல்லையா..?” என்று தோப்பிற்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடினாள்..
“உன்ன காப்பாற்ற யார் வராங்க என்று நானும் பார்க்கிறேன்..” என்று அவளைத் துரத்திக்கொண்டு அவளின் பின்னோடு ஓடியவள் அந்த வழியே வந்த யாரோ மீது பலமாக மோதி கீழே விழப்போனவள் கொஞ்சம் சுதாரித்து நின்றவள்,
அவள் இடித்த வேகத்தில் கீழே விழப்போனவன் விழாமல் சரியாக நின்று அவளைப் பார்க்க அவளின் தாவணியோ அவனின் முகத்தை வருடிவிட்டு அவன் அவளின் முகத்தைப் பார்ப்பதற்குள் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவள் அந்த தோப்பை விட்டே சென்றுவிட்டிருந்தாள்.. இவை அனைத்தும் நொடிபொழுதில் நடந்து முடிந்தது.. இருவருமே மற்றவர் முகத்தைக் காணவில்லை..
காலையில் சென்னையில் அன்னையுடன் ஷாப்பிங் செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் அன்புவிற்கு அழைப்பு வர, அழைப்பது யார் என்று தெரிந்ததும் அவனின் முகம் தானாக மறந்தது..
“இனியா என்னடா காலையில் கால் பண்ணி இருக்கிறாய்..? இன்னைக்கு ஸ்கூல் போகல..?” என்று கேட்டதும் அவனின் முகத்தைப் பார்த்த சுமித்ரா,
“அண்ணனுக்கும் தங்கைக்கும் வேற வேலையே இல்லையா..?” என்று கேட்டதும், அன்பு சிரிக்க
அவரின் குரலை எதிர்புறம் இருந்து அவர் சொன்னதைக் கேட்ட இனியா, “அம்மா எங்க மேல கண்ணு வைக்காதீங்க.. நான் என்னோட அண்ணனுடன் பேசுகிறேன்..” என்று சொல்லவும், சுமித்ரா கையில் போனை கொடுத்தான் அன்பரசன்..
“ம்ம் பேசு.. பேசு..” என்று சுமித்ரா அன்புவிடம் சொல்ல, நீங்க பேசுங்க என்று சைகை செய்தவன் காரை ஓட்ட ஆரமித்தான்..
அவனிடம் இருந்து போனை வாங்கிய சுமித்ரா, அம்மா, அப்பா, பற்றியெல்லாம் கவலையில்லை அண்ணா தான் எல்லாம் இல்லையா..?” என்று கேட்டதும், “எனக்கு எல்லோரையும் பிடிக்கும் அம்மா..” என்று இனியா சொல்ல சுமித்ரா சிரித்தார்..
“ஹப்பா அம்மா சிரிச்சிட்டாங்க..” என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக கூறியவள்,