• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
இங்கே இவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அங்கே தங்கையின் அறையில் அமர்ந்திருந்தான் அன்பரசன்.. அவளின் முகத்தில் இருந்து அவனால் எதையும் சொல்லமுடியவில்லை..

“எதுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறினாய் இனியா..?” என்று அன்பு கேட்டதும், “நான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று தான் அழைத்தேன்..” என்று சமாளித்தாள் இனியா

“இல்ல இனியா நீ பொய் சொல்கிறாய்.. என்ன விஷயம் சொல்லு..” என்று அதட்ட, “அண்ணா நான் இங்கேயே இருக்கிறேன்.. பத்தாம் வகுப்பு முடித்ததும் அப்பா என்னை சென்னை வர சொல்லி இருக்கிறார்.. எனக்கு சென்னை வர விருப்பம் இல்லை..” என்று கூறிய தங்கையின் முகத்தைக் கூர்ந்து கவனித்தவன்,

“நீ இங்கே படிக்கிறேன் என்று சொல்வதற்கு இது மட்டும் தான் காரணமா..?” என்று கேட்டவனின் முகத்தைப் பார்த்தவள், “இது மட்டும் காரணம் அல்ல..” என்று அவள் சொல்லி நிறுத்திய இனியாவின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தான் அன்பரசன்..

அவனின் பார்வை புரிந்து, “அண்ணா நான் உன்னிடம் ஒரு பொண்ணு பற்றி சொல்வேன் இல்ல..” என்று கூறியவள் முகத்தில் பயம் தெரிந்தது..

அவளின் முகம் பார்த்தவன், “சொல்லு இனியா.. அவங்களுக்கு என்ன..?” என்று கேட்டான்.. அவனின் குரல் கோபத்தை உள்ளாடக்கி இருந்தது..

“நீ அவங்களைத் திருமணம் செய்துக்கொள்ள நான் இங்கே இருந்தால் தான் சரியாக இருக்கும்..” என்று பெரியவள் போல கூறிய தங்கை அவன் கண்களுக்கு இன்னமும் குழந்தையாகவே தெரிந்தாள்..

“உனக்கு என்ன வயசு ஆச்சு..? நீ எதுக்கு என்னோட திருமணம் பற்றி இப்பொழுது பேசுகிறாய்..” என்று கோபத்தில் அவளை அதட்டினான் அன்பரசன்..

அவனின் அதட்டலில் அவளின் முகம் வாடிவிட, அவளின் அருகில் சென்றவன், “இங்கே பாரும்மா நான் இன்னும் படிக்கணும்.. பாட்டி தான் இப்படி சொல்றாங்க என்று பார்த்தால் நீயும் அவங்களைப் போல பண்ணுகிறாய்..” என்று கோபத்தில் கேட்டான்..

“அவங்களுக்கு என்ன குறை உனக்கு பிடித்தாலும் பிடிக்காமல் போனாலும் அவங்கதான் எனக்கு அண்ணியாக வரணும்..” என்று அவள் பிடிவாதமாகச் சொல்வதைப் பார்த்து அவளை அப்படியே இரண்டு அடி விடலாம் போல இருந்தது அன்புவிற்கு..!

இருந்தாலும் கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு, “உனக்கு என்ன அவங்களைப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும் அவள் ஆமாம் என்று தலையசைத்து,

“எனக்கு அவங்களை ரொம்பப்பிடிக்கும்..” என்று குழந்தை போல சிணுங்கியவளைப் பார்த்து, அவளின் முகத்தை பார்த்தவன் யோசிக்க ஆரமித்தான்..

சிறிது நேரத்தில் தங்கை பக்கம் திரும்பியவன், “இன்றிலிருந்து இன்னும் சரியாக ஆறு வருடம் என்னிடம் திருமணம் பற்றி பேசாதே இனியா..” என்று கேட்டதும் அவள் யோசனையோடு,

“ஆறு வருடம் போன பிறகு நான் இவங்களைப் பற்றி பேசி நீ இவங்களை வேண்டாம் என்று சொன்னால் நான் என்ன பண்ண..?” என்று கேட்டாள்

“இந்த ஆறு வருடத்தில் எனக்கு யார் மேலும் காதல் வராமல் இருந்தால் மட்டும் தான் இவங்களை அதாவது நீ சொல்லும் பெண்ணை நான் திருமணம் செய்வேன்..” என்று அழுத்தமாக கூறியதும்,

“காதல் வந்தால் நீ அவங்களைத் திருமணம் செய்ய மாட்டாய் இல்லையா..?” என்று கேட்டாள் இனியா.. [இவன் சொல்லும் அந்த காதலி நம்ம எழிலா..?]

“ம்ம் எனக்கு காதல் வந்தால் கண்டிப்பாக இந்த பெண்ணை நான் திருமணம் செய்ய மாட்டேன்..” என்று அவன் சொல்லவும்,

அவளும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “சரிங்க அண்ணா,, ஆனால் ஆறு வருடம் கழித்தும் நீ என்னிடம் இதே பதிலைச் சொன்னால் அடிதான் வாங்குவாய்..” என்று அவள் மிரட்டவும்

அவளைப் பார்த்து சிரித்தவன், “இது உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தம் ஓகே இது மற்ற யாருக்கும் தெரிய கூடாது..” என்று அவன் சொல்லவும், சரியென்று புன்னகை பூத்தாள் அன்புவின் தங்கை இனியா..

அவள் சொல்லும் பெண் எழில் என்று தெரிந்திருந்தால் அவளைப் பார்க்க நேரில் சென்றிருப்பானோ..? இல்லை வேறு பெண்ணின் மேல் காதல் வரும் என்று சொல்லி இருப்பானா..?

“அண்ணா இந்த டீல் ல நான் சொன்னதை நீ மறக்காதீங்க.. அப்பாவிடம் பேசி பர்மிஷன் வாங்க வேண்டியது உங்களின் பொறுப்பு..” என்று கூறிய தங்கையைப் புரியாமல் பார்த்தான்..

“எது பற்றி அப்பாவிடம் பர்மிஷன் வாங்கணும்..” என்று அவன் கேட்டதும், “அண்ணா..” என்று கத்தினாள் இனியா..

“எதுக்கு இப்பொழுது கத்துகிறாய்..” என்று இரண்டு காதையும் கைகளில் அடைத்துக் கொண்டு விளையாட்டு போல தங்கைச் சீண்டினான்..

“விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பானா..? என்று கேட்பது போல கேட்கிறாயா..?” என்று கேட்டாள்..

“இனியா நல்ல பழமொழி சொல்கிறாய்.. எல்லாம் பாட்டியோட ட்ரைனிங் ஆ..” என்று கேட்டதும், அவனுக்கு அவள் கொடுத்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்க,

“டேய் உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு..” என்று அவளின் படுக்கையில் இருந்த தலையணையை அவனின் மீது தூக்கி எறிய அவளின் கோபம் கண்டு புன்னகை செய்தவன்,

“ஓகே.. ஓகே.. அப்பாவிடம் பேசி பர்மிஷன் வாங்கித் தருகிறேன்.. நீ ருத்ர தாண்டவம் ஆடாதே..” என்று சொல்ல அவள் அவனை அடிக்க துரத்த அதற்கு மேல் அங்கே நிற்காமல் ஓடிவிட்டான் அன்பரசன்..

இனியாவிடம் பேசிவிட்டு அவனின் அறைக்கு வந்தவன் மெல்ல யோசிக்க ஆரமித்தான்.. காலையில் இருந்து அவன் நினைக்காதது எல்லாம் நடக்க, ‘எழிலை மட்டும் பார்க்க முடியவில்லையே..’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்..

‘ஏன் நான் இனியாவிடம் அப்படி சொன்னேன்..?! என்னோட மனதில் எழில் இருக்கிறாளா..?!’ என்று அவனின் மனதிடம் அவன் கேள்வி எழுப்பினான்..

அவனின் கேள்விக்கு பதிலாக அவளின் விழிகளே அவனின் மனதில் ஓவியம் போல வரவே, ‘அவளின் அந்த விழிகளில் தன்னை தொலைத்துவிட்டேனா...?’ என்று தனக்கு தானே கேட்டான்..

அதற்கு அவனின் மனம் அமைதியாக இருக்க, ‘என்ன அமைதியாக இருக்கிறாய்..? எனக்கு பதில் சொல்லு..’ என்று அவன் கேட்டதும்,

அவனின் மனம், ‘ எனக்கு அதற்கு உண்டான பதில் நல்ல தெரியும்.. ஆனால் நான் அதை சொல்லமாட்டேன்.. இதை நீயே உணராமல் என்னிடம் இது காதலா..? என்று கேட்டால் எனக்கு எப்படி விடை தெரியும்.. நீ காதல் என்று உணர்ந்தால் தானே நான் உனக்கு வந்திருப்பது காதல் தான் என்று அடித்து பேச முடியும்..’ என்று அவனை குழப்பியது..

அவன் குழப்பத்தில் தலையைப் பிடித்து படுகையில் அமர, ‘இப்படி நீ போய் பிரச்சனையில் மாட்டிவிட்டாயே அன்பு..’ என்று மனம் சிரிப்புடன் கேட்டதும்

அன்பு தனது மனதிடம், “அவள் சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும் குழந்தை போல சொல்கிறாள்.. அவளிடம் இது பற்றி விளக்கமா கொடுக்க முடியும்..? அப்படியே விளக்கம் கொடுத்தாலும் அதை புரிந்து கொள்ளும் வயதா அவளுக்கு..?” என்று கேட்டான்..

அவனின் மனம் அமைதியாக இருக்க, ‘என்னோட தங்கை இப்பொழுது சின்னப்பெண்.. அவள் வளர்ந்தால் அவள் மாறிவிடுவாள்.. அவளை அவளின் போக்கில் விடுவதுதான் சரி..’ என்று கூறியவன்

‘இதுவே நாளை உன்னோட வாழ்க்கையில் வரும் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருக்கும்.. அதனால் முதலில் நல்ல முடிவாக எடு.. இல்லையென்றால் உன்னோட வாழ்க்கையே திசை மாறிவிடும்..’ என்று அவனின் மனம் அவனுக்கு அறிவுரை வழங்கியது..

‘நீ நினைப்பது போல எதுவும் நடக்காது.. அதற்குள் அந்த பெண்ணிற்கு வேறொரு இடத்தில் திருமணம் நடந்தே தீரும்..’ என்று சொல்ல, அவனின் மனம் அமைதியடைய படுக்கையில் படுத்தவன்

அவளை முதலில் சந்தித்த நாளில் இருந்து நினைத்துப் பார்க்க, அவனின் முகம் தானாக மலர “ஏய் எழில்விழி எங்கே இருக்கிறாய்..?” என்று வாய்விட்டு கேட்டான் அன்பரசன்..

இவன் நினைப்பது போல நடந்தால் இவனின் எழில் இவனுக்கு கிடைக்க மாட்டாள் என்ற உண்மை புரியாமல் இருக்கிறான் அன்பரசன்..

அந்தபெயர் அவனின் அடிமனதில் இருந்து வந்தது.. அவன் வரும் பொழுதே வந்து அவனின் மீது மோதியது அவனின் எழில்தான் என்று அறியாதவன்.. அவளின் பிறந்த நாளையும் அறியாமல் தான் போனான்..

இந்த உண்மை அவனுக்கு புரியுமா..? இல்லை கடைசிவரை புதிராகவே இருக்குமா..? எழில்விழியை அன்பரசன் சந்திப்பானா..? பொருத்திருந்து பார்ப்போம்..!
Enathu ipd oru sathiyatha panitan ???? i love this dhanam amma ????????
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
இங்கே இவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அங்கே தங்கையின் அறையில் அமர்ந்திருந்தான் அன்பரசன்.. அவளின் முகத்தில் இருந்து அவனால் எதையும் சொல்லமுடியவில்லை..

“எதுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறினாய் இனியா..?” என்று அன்பு கேட்டதும், “நான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று தான் அழைத்தேன்..” என்று சமாளித்தாள் இனியா

“இல்ல இனியா நீ பொய் சொல்கிறாய்.. என்ன விஷயம் சொல்லு..” என்று அதட்ட, “அண்ணா நான் இங்கேயே இருக்கிறேன்.. பத்தாம் வகுப்பு முடித்ததும் அப்பா என்னை சென்னை வர சொல்லி இருக்கிறார்.. எனக்கு சென்னை வர விருப்பம் இல்லை..” என்று கூறிய தங்கையின் முகத்தைக் கூர்ந்து கவனித்தவன்,

“நீ இங்கே படிக்கிறேன் என்று சொல்வதற்கு இது மட்டும் தான் காரணமா..?” என்று கேட்டவனின் முகத்தைப் பார்த்தவள், “இது மட்டும் காரணம் அல்ல..” என்று அவள் சொல்லி நிறுத்திய இனியாவின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தான் அன்பரசன்..

அவனின் பார்வை புரிந்து, “அண்ணா நான் உன்னிடம் ஒரு பொண்ணு பற்றி சொல்வேன் இல்ல..” என்று கூறியவள் முகத்தில் பயம் தெரிந்தது..

அவளின் முகம் பார்த்தவன், “சொல்லு இனியா.. அவங்களுக்கு என்ன..?” என்று கேட்டான்.. அவனின் குரல் கோபத்தை உள்ளாடக்கி இருந்தது..

“நீ அவங்களைத் திருமணம் செய்துக்கொள்ள நான் இங்கே இருந்தால் தான் சரியாக இருக்கும்..” என்று பெரியவள் போல கூறிய தங்கை அவன் கண்களுக்கு இன்னமும் குழந்தையாகவே தெரிந்தாள்..

“உனக்கு என்ன வயசு ஆச்சு..? நீ எதுக்கு என்னோட திருமணம் பற்றி இப்பொழுது பேசுகிறாய்..” என்று கோபத்தில் அவளை அதட்டினான் அன்பரசன்..

அவனின் அதட்டலில் அவளின் முகம் வாடிவிட, அவளின் அருகில் சென்றவன், “இங்கே பாரும்மா நான் இன்னும் படிக்கணும்.. பாட்டி தான் இப்படி சொல்றாங்க என்று பார்த்தால் நீயும் அவங்களைப் போல பண்ணுகிறாய்..” என்று கோபத்தில் கேட்டான்..

“அவங்களுக்கு என்ன குறை உனக்கு பிடித்தாலும் பிடிக்காமல் போனாலும் அவங்கதான் எனக்கு அண்ணியாக வரணும்..” என்று அவள் பிடிவாதமாகச் சொல்வதைப் பார்த்து அவளை அப்படியே இரண்டு அடி விடலாம் போல இருந்தது அன்புவிற்கு..!

இருந்தாலும் கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு, “உனக்கு என்ன அவங்களைப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டதும் அவள் ஆமாம் என்று தலையசைத்து,

“எனக்கு அவங்களை ரொம்பப்பிடிக்கும்..” என்று குழந்தை போல சிணுங்கியவளைப் பார்த்து, அவளின் முகத்தை பார்த்தவன் யோசிக்க ஆரமித்தான்..

சிறிது நேரத்தில் தங்கை பக்கம் திரும்பியவன், “இன்றிலிருந்து இன்னும் சரியாக ஆறு வருடம் என்னிடம் திருமணம் பற்றி பேசாதே இனியா..” என்று கேட்டதும் அவள் யோசனையோடு,

“ஆறு வருடம் போன பிறகு நான் இவங்களைப் பற்றி பேசி நீ இவங்களை வேண்டாம் என்று சொன்னால் நான் என்ன பண்ண..?” என்று கேட்டாள்

“இந்த ஆறு வருடத்தில் எனக்கு யார் மேலும் காதல் வராமல் இருந்தால் மட்டும் தான் இவங்களை அதாவது நீ சொல்லும் பெண்ணை நான் திருமணம் செய்வேன்..” என்று அழுத்தமாக கூறியதும்,

“காதல் வந்தால் நீ அவங்களைத் திருமணம் செய்ய மாட்டாய் இல்லையா..?” என்று கேட்டாள் இனியா.. [இவன் சொல்லும் அந்த காதலி நம்ம எழிலா..?]

“ம்ம் எனக்கு காதல் வந்தால் கண்டிப்பாக இந்த பெண்ணை நான் திருமணம் செய்ய மாட்டேன்..” என்று அவன் சொல்லவும்,

அவளும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “சரிங்க அண்ணா,, ஆனால் ஆறு வருடம் கழித்தும் நீ என்னிடம் இதே பதிலைச் சொன்னால் அடிதான் வாங்குவாய்..” என்று அவள் மிரட்டவும்

அவளைப் பார்த்து சிரித்தவன், “இது உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தம் ஓகே இது மற்ற யாருக்கும் தெரிய கூடாது..” என்று அவன் சொல்லவும், சரியென்று புன்னகை பூத்தாள் அன்புவின் தங்கை இனியா..

அவள் சொல்லும் பெண் எழில் என்று தெரிந்திருந்தால் அவளைப் பார்க்க நேரில் சென்றிருப்பானோ..? இல்லை வேறு பெண்ணின் மேல் காதல் வரும் என்று சொல்லி இருப்பானா..?

“அண்ணா இந்த டீல் ல நான் சொன்னதை நீ மறக்காதீங்க.. அப்பாவிடம் பேசி பர்மிஷன் வாங்க வேண்டியது உங்களின் பொறுப்பு..” என்று கூறிய தங்கையைப் புரியாமல் பார்த்தான்..

“எது பற்றி அப்பாவிடம் பர்மிஷன் வாங்கணும்..” என்று அவன் கேட்டதும், “அண்ணா..” என்று கத்தினாள் இனியா..

“எதுக்கு இப்பொழுது கத்துகிறாய்..” என்று இரண்டு காதையும் கைகளில் அடைத்துக் கொண்டு விளையாட்டு போல தங்கைச் சீண்டினான்..

“விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பானா..? என்று கேட்பது போல கேட்கிறாயா..?” என்று கேட்டாள்..

“இனியா நல்ல பழமொழி சொல்கிறாய்.. எல்லாம் பாட்டியோட ட்ரைனிங் ஆ..” என்று கேட்டதும், அவனுக்கு அவள் கொடுத்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்க,

“டேய் உன்னை என்ன செய்கிறேன் என்று பாரு..” என்று அவளின் படுக்கையில் இருந்த தலையணையை அவனின் மீது தூக்கி எறிய அவளின் கோபம் கண்டு புன்னகை செய்தவன்,

“ஓகே.. ஓகே.. அப்பாவிடம் பேசி பர்மிஷன் வாங்கித் தருகிறேன்.. நீ ருத்ர தாண்டவம் ஆடாதே..” என்று சொல்ல அவள் அவனை அடிக்க துரத்த அதற்கு மேல் அங்கே நிற்காமல் ஓடிவிட்டான் அன்பரசன்..

இனியாவிடம் பேசிவிட்டு அவனின் அறைக்கு வந்தவன் மெல்ல யோசிக்க ஆரமித்தான்.. காலையில் இருந்து அவன் நினைக்காதது எல்லாம் நடக்க, ‘எழிலை மட்டும் பார்க்க முடியவில்லையே..’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்..

‘ஏன் நான் இனியாவிடம் அப்படி சொன்னேன்..?! என்னோட மனதில் எழில் இருக்கிறாளா..?!’ என்று அவனின் மனதிடம் அவன் கேள்வி எழுப்பினான்..

அவனின் கேள்விக்கு பதிலாக அவளின் விழிகளே அவனின் மனதில் ஓவியம் போல வரவே, ‘அவளின் அந்த விழிகளில் தன்னை தொலைத்துவிட்டேனா...?’ என்று தனக்கு தானே கேட்டான்..

அதற்கு அவனின் மனம் அமைதியாக இருக்க, ‘என்ன அமைதியாக இருக்கிறாய்..? எனக்கு பதில் சொல்லு..’ என்று அவன் கேட்டதும்,

அவனின் மனம், ‘ எனக்கு அதற்கு உண்டான பதில் நல்ல தெரியும்.. ஆனால் நான் அதை சொல்லமாட்டேன்.. இதை நீயே உணராமல் என்னிடம் இது காதலா..? என்று கேட்டால் எனக்கு எப்படி விடை தெரியும்.. நீ காதல் என்று உணர்ந்தால் தானே நான் உனக்கு வந்திருப்பது காதல் தான் என்று அடித்து பேச முடியும்..’ என்று அவனை குழப்பியது..

அவன் குழப்பத்தில் தலையைப் பிடித்து படுகையில் அமர, ‘இப்படி நீ போய் பிரச்சனையில் மாட்டிவிட்டாயே அன்பு..’ என்று மனம் சிரிப்புடன் கேட்டதும்

அன்பு தனது மனதிடம், “அவள் சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும் குழந்தை போல சொல்கிறாள்.. அவளிடம் இது பற்றி விளக்கமா கொடுக்க முடியும்..? அப்படியே விளக்கம் கொடுத்தாலும் அதை புரிந்து கொள்ளும் வயதா அவளுக்கு..?” என்று கேட்டான்..

அவனின் மனம் அமைதியாக இருக்க, ‘என்னோட தங்கை இப்பொழுது சின்னப்பெண்.. அவள் வளர்ந்தால் அவள் மாறிவிடுவாள்.. அவளை அவளின் போக்கில் விடுவதுதான் சரி..’ என்று கூறியவன்

‘இதுவே நாளை உன்னோட வாழ்க்கையில் வரும் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருக்கும்.. அதனால் முதலில் நல்ல முடிவாக எடு.. இல்லையென்றால் உன்னோட வாழ்க்கையே திசை மாறிவிடும்..’ என்று அவனின் மனம் அவனுக்கு அறிவுரை வழங்கியது..

‘நீ நினைப்பது போல எதுவும் நடக்காது.. அதற்குள் அந்த பெண்ணிற்கு வேறொரு இடத்தில் திருமணம் நடந்தே தீரும்..’ என்று சொல்ல, அவனின் மனம் அமைதியடைய படுக்கையில் படுத்தவன்

அவளை முதலில் சந்தித்த நாளில் இருந்து நினைத்துப் பார்க்க, அவனின் முகம் தானாக மலர “ஏய் எழில்விழி எங்கே இருக்கிறாய்..?” என்று வாய்விட்டு கேட்டான் அன்பரசன்..

இவன் நினைப்பது போல நடந்தால் இவனின் எழில் இவனுக்கு கிடைக்க மாட்டாள் என்ற உண்மை புரியாமல் இருக்கிறான் அன்பரசன்..

அந்தபெயர் அவனின் அடிமனதில் இருந்து வந்தது.. அவன் வரும் பொழுதே வந்து அவனின் மீது மோதியது அவனின் எழில்தான் என்று அறியாதவன்.. அவளின் பிறந்த நாளையும் அறியாமல் தான் போனான்..

இந்த உண்மை அவனுக்கு புரியுமா..? இல்லை கடைசிவரை புதிராகவே இருக்குமா..? எழில்விழியை அன்பரசன் சந்திப்பானா..? பொருத்திருந்து பார்ப்போம்..!
Nalla thangachi ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top