உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!
ஹாய் நட்பூஸ்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..? இதோ உங்களைக் காண அடுத்த கதையுடன் வந்துவிட்டேன். நான் உங்களின் சந்தியா ஸ்ரீ.
கதாநாயகன் : அன்பரசன்
கதாநாயகி: எழில்விழி
பதினான்கு வயதில் ஒருவர் மீது மனதில் தோன்றும் ஒருவகை அன்பு என்னவென்று யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது. அந்த அன்பில் பறிபோகிறது அவளின் உள்ளம்.
பதினேழு வயதில் ஒரு பெண்ணின் மீது தோன்றும் ஒருவகை அன்பு என்ன என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த ஈர்ப்பில் அவளின் விழியில் தொலைந்து போகிறது அவனின் உள்ளம்.
இந்த பிரித்தறிய முடிய அன்பிற்கும் ஒரு சக்தி உண்டு. அதுபோல அன்பை மையமாக கொண்ட இருவர் நாம் கதையின் கதாநாயகியும் கதாநாயகனும்.. அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று இருவருமே அறிந்துக்கொள்ள விரும்பவில்லை..
அந்த அன்பில் அவளின் மனம் பறிபோகிறது என்றால், அவளின் விழியில் தன்னை தொலைக்கும் அவனும் எப்பொழுது சந்திக்கின்றனர்.. மனதை தொலைத்த இருவரும் அந்த மனதை தேடி பயணிக்க, அந்த தேடல் அவர்களை சேர்ந்ததா..? என்பதை படித்து அறிந்து கொள்ளுங்கள்.
இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சுவையான சம்பவம் கொண்டு அவர்களின் அன்பின் வலிமையைச் சொல்வது, “உனது விழியில் தொலைந்தேன் பெண்ணே...!” என்ற என்னுடைய புதிய கதை...! “நேசித்த இரு நெஞ்சங்கள்” என்ற கதைக்கு கொடுத்த அதே ஆதரவைக் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு
அன்பு தோழி
சந்தியா ஸ்ரீ