அத்தியாயம் – 22
அவன் சென்ற திசையைப் பார்த்தே நின்றிருந்த எழில் தனது கையில் இருந்த பரிசு பொருளைத் திறந்துப் பார்த்தாள்.. அதில் தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரத்தில் இரண்டு கொடிகள் பின்னிக்கொண்டது போல அமைக்கப்பட்ட இரண்டு இதயங்கள்.. அந்த இதயத்தின் நடுவே ஒன்றில் “E” என்ற எழுதும், மற்றொரு இதயத்தில் “A” என்ற எழுதும் இருக்க அதைப் பார்த்தவள்,
“என்னோட மனதில் உள்ளதை தெரிந்தும் நீ மெளனமாக இருப்பதற்கு நான் காரணம் ஆக முடியாது..” என்றவள் வீட்டிற்குள் சென்றாள்.. அவன் மீண்டும் காரில் கோவை வந்து அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தான்..
அவன் கோவை போய்ட்டு வருவதற்குள் இங்கே பெரிய பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டனர் ஆதியும், ஆஷா..! இவன் சென்னை ஏர்போர்டில் இறங்கியது ஆதியிடமும், ஆஷாவிடமும் இருந்து போன் வந்து கெண்டே இருந்தது..
அன்பு இதை எதையும் கவனிக்காமல் இன்று அலைந்த அலைச்சலில் வீட்டிற்கு சென்றவன், குளித்துவிட்டு வந்து படுத்தவன் மறுநாள் சூரிய உதயத்தின் போதுதான் எழுந்தான்.. அவன் எழுந்து கிளம்பி ஆபீஸ் போக கீழே வர அவனிடம் சொல்லிவிட்டுச் செல்ல காத்திருந்தார் ஜெயந்திம்மாவும், இனியாவும்..!
தனது பாட்டியைக் கண்ட அன்பு, “என்ன பாட்டி காலையிலேயே கிளம்பி எங்க போக போறீங்க..?” என்று கேட்டவண்ணம் டைனிங் ஹாலில் சென்று அமர்ந்தான்..
“அன்பு நானும், பாப்பாவும் ஊருக்கு போகிறோம் டா.. கல்யாண வேலைகள் நிறைய இருக்குடா..” என்று சொல்ல இருவரையும் பார்த்தவன், “என்ன பாட்டி இப்பொழுதே போய் என்ன பண்ண போறீங்க..” என்று கேட்டதும் ஜெயந்திம்மா மனதிற்குள்,
‘இப்பொழுது போனால் தன கண்ணா உன்னோட திருமண ஏற்பாட்டையும் செய்ய சரியாக இருக்கும்..’ என்று மனதில் நினைத்தவர், “இல்லடா கண்ணா அங்கே போனால் அடுத்தடுத்து நிறைய வேலைகள் இருக்கு.. நாங்க முன்னாடி போகிறோம்.. நீங்க பின்னாடி வாங்க..” என்று சொல்ல சுமித்ராவும், தியாகு இருவரும் மகனைப் பார்த்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டனர்..
அவன் நேற்று எழிலை பார்க்க சென்றது இனியா, அறிவை தவிர மற்ற மூவருக்கும் நல்லாவே தெரியும்.. இருந்தாலும் அமைதியாக இருந்தனர்..
“சரிங்க பாட்டி வாங்க நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்..” என்று அன்பு சொல்ல, “இல்லப்பா அறிவு இன்னைக்கு வீட்டில் தான் இருக்கிறான் நாங்க அவனோடு செல்கிறோம் நீ கிளம்பு..” என்று ஜெயந்திம்மா சொல்லிக் கொண்டிருக்க, அன்புவின் அலைபேசி நிற்காமல் அலறிக் கொண்டே இருந்தது..
அதைப் பார்த்த சுமித்ரா, “என்னடா செல் அடித்துக் கொண்டே இருக்கிறது நீ கண்டுக் கொள்ளாமல் இருக்கிறாய்..?” என்று கேள்வி எழுப்ப, “ஆஷா, ஆதி இருவரும் தான்.. இன்னைக்கு இருவருக்கும் சண்டை போல அதுதான் போன் எகிறுகிறது..” என்று சொன்னவன்,
“சரிம்மா நான் என்ன என்று போய் பார்க்கிறேன்.. பாட்டி நான் கிளம்புகிறேன்.. ஊரில் இருக்கும் அனைவரையும் நான் கேட்டதாக சொல்லுங்கள்..” என்று சொல்ல ஜெயந்திம்மா மனதில் எதையோ நினைத்து சிரிக்க,
இனியாவோ, “அண்ணா ஆடு, மாடு, கோழி, செடிகொடி, மரம் இவற்றிடம் எல்லாம் நீ விசாரித்ததாக நான் சொல்லிவிடுகிறேன்..” என்று சொல்ல, சுமித்ரா, தியாகு, ஜெயந்திம்மா மூவரும் சிரித்தனர்..
“உனக்கு வாய் கொழுப்பு அதிகமாக ஆகிவிட்டது..” என்று அவன் அவளை அடிக்க துரத்த பலநாளுக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது... மீண்டும் அவர்களின் கவனத்தைக் கலைத்தது அன்புவின் அலைபேசி..
அதை எடுத்துப் பார்த்த அன்பு, “இதுக்குமேல் இங்கே இருந்தேன் என்றால் அவர்களை சமாதானம் செய்ய முடியாது.. நான் போய் என்ன விஷயம் என்று பார்க்கிறேன்..” என்று கிளம்பிச் சென்றான் அன்பு..
அன்பு அவசர அவசரமாக கிளம்பி ஆபீசிற்கு சென்று பார்த்தான்.. இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.. அவர்களைப் பார்த்தும் வழக்கம் போல ஏதோ பிரச்சனை என்று உணர்ந்துக் கொண்ட அன்பு,
“ஹாய் ஆஷா என்ன பிரச்சனை எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்..?!” என்று கேட்டதும், ஆஷா நிமிர்ந்து அன்புவைப் பார்க்க, ஆதியோ, “ஏண்டா வந்ததும் அவளைக் கேட்கிறாயே என்னைப் பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா..?” என்று கிட்டதட்ட பாவமாகக் கேட்டதும் இருவரின் நடுவே இருந்த சேரில் அமர்ந்தவன்,
“இப்பொழுது உங்களுக்குள் என்னடா பிரச்சனை..?!” என்று கேட்டதும், “ஆதி நான் ஊருக்குப் போயிருந்த பொழுது இவங்க அம்மா இவனுக்கு பொண்ணு பார்த்தாங்களாம்.. பொண்ணு நல்ல வசதியான இடமாம்.. நான் அவளையே திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று என்னிடமே சொல்கிறான்..” என்று அன்பிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த பைலை எடுத்து ஆதியின் தலைமேல் போட்டாள் ஆஷா..
அதைப் பத்திரமாக கேச் பிடித்த ஆதி, “ஐயோ இது வரதராஜன் பைல் இது மட்டும் இல்லை என்றால் ஒண்ணுமே பண்ண முடியாது..” என்று கூறினான்..
அன்புவும், “அந்த பைல் தாண்டா ரொம்ப முக்கியம் பத்திரமாக அந்தபக்கம் வை..” என்று சொல்ல, “டேய் நான் இங்கே வாழ்க்கையே பறிபோக போகிறது என்று புலம்புகிறேன்.. இப்பொழுது வரதராஜன் பைல் ரொம்ப முக்கியமா..” என்று ரௌத்திரமாகக் கேட்டாள் ஆஷா..
அவள் கேட்டதில் அந்த நேரத்தில் கூட அன்பு, ஆதி இருவருக்கும் சிரிப்பு வந்தாலும் சிரித்தால் அவ்வளவுதான் என்று நினைத்தவன், “சரிதான் அந்த பைல் முக்கியம் இல்ல..” என்றவன்,
ஆதியின் பக்கம திரும்பி, “நீயேண்டா இப்படி சொன்னாய்..?” என்று அவனிடம் கேட்டதும், “இவளும் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை அப்பாவைப் பார்க்க போகிறாள் இல்ல அவரின் அப்பாவிடம் சொல்ல வேண்டியது தானே..?! எனக்கு இவரை பிடித்திருக்கிறது.. நான் இவரை காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே..?!” என்று அவன் கேட்டதும்,
அன்பு ஆஷாவிடம், “அவன் சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது.. நீ உன்னோட அப்பாவிடம் பேச வேண்டியது நானே ஆஷா..?” என்று கேட்டதும், “இவங்க அம்மா என்னிடம் வந்து என்ன சொன்னாங்க தெரியுமா அன்பு..?!” என்று கேட்டாள்..
“என்னைக்கு என்னோட அம்மா உன்னை நேரில் பார்த்தாங்க..?” என்று அவனும் கோபமாகக் கேட்டதும், “எழில் ஊருக்கு போன அன்னைக்குதான் உன்னோட அம்மா எனக்கு போன் பண்ணி பக்கத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு வர சொன்னாங்க..” என்று கூறினாள்..
“சரி ஆஷா அவங்க அம்மா உன்னிடம் என்ன சொன்னாங்க..?” என்று பொறுமையாகக் கேட்டான் அன்பு.. “நான் மசூதி, சர்ச் என்று சுத்திட்டு இருக்கிறேன் என்றும் உன்னையெல்லாம் என்னோட் பையனுக்கு கட்டிவைக்க எனக்கு இஸ்டம் இல்லை என்றும் இன்னும் என்னென்னவோ சொன்னாங்க..” என்று கூறியதும் அதுவரை இருந்த நிலை மாறி வாய்விட்டு சிரிக்க ஆரமித்தான் ஆதி..
அவனைப் பார்த்து கோபமாக திரும்பிய ஆஷாவோ, “எதுக்குடா இப்படி சிரிக்கிறாய்..?” என்று கோபம் குறையாமல் கேட்டாள்..
“என்னோட அம்மா என்ன தப்ப சொல்லிட்டாங்க.. நீ சர்ச், மசூதி, பிரியாணி கடை எல்லாவற்றையும் சுற்றுவது உண்மைதானே..?!” என்று கேட்டு அவளை இன்னமும் கோபப்படுத்திப் பார்த்தான் ஆதி..
அப்பொழுது அவனின் கண்ணைப் பார்த்தான் அன்பு.. அவனின் கண்களில் இருந்த குறும்பைக் கண்ட அன்புவிற்கு ஏதோ புரிவது போல இருக்க, “சொல்ல வருவதை தெளிவாக சொல்லுடா..” என்றான் அன்பு.
“முதலில் இருந்து கேளுடா அன்பு..” என்று கூறியவன், “என்னோட அம்மா இவளைப் பார்த்துவிட்டு வந்ததும், ‘எனக்கு ஆஷாவை ரொம்ப பிடிச்சி இருக்குடா கண்ணா.. இனியும் நாள் கடத்தாமல் என்னோட தங்கக்கட்டியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வாடா..’ என்று சொல்றாங்க.. எனக்கு சந்தோசமாக இருந்தது..” என்று சொல்ல அன்பு நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்..
“இவளிடம் இருக்கும் நல்ல குணம் என்னோட அம்மாவுக்கு அதிக சொத்தாக தெரிந்தது.. அதுதான் என்னிடம் பணக்கார இடத்தில இருந்து பொண்ணு வந்திருக்கிறது மகனே.. நீ அந்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள் என்று சொன்னாங்க..” என்று சொன்னவன் ‘அந்த பெண்ணையே’ என்று வார்த்தையில் அழுத்தம் கொடுக்க அதுவரை இருந்த கோபம் மாறி சிரிக்க ஆரமித்தாள் ஆஷா..
அவள் சிரிப்பதைப் பார்த்த அன்பு, “ஏய் லூசு ஆஷா அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒழுங்க காது கொடுத்துக் கேட்டிருந்தால் நேற்றில் இருந்து அனுபவித்த மனவலியில் இருந்து தப்பித்து இருக்கலாம் இல்லையா..?!” என்று சிரிப்புடன் சொன்னவன்,
“என்னடா இவங்களுக்கு பின்னாடி லவ் பண்ண ஆரமித்த இனியாவிற்கே நிச்சயம் முடிந்ததே என்ற வருத்தம் இருந்துடா எனக்கு.. ஆனால் இப்பொழுது இல்ல.. அவங்க திருமணத்திற்கு முன்னாடியே உங்க திருமணத்தின் முகூர்த்தத்தை வைக்க சொல்லுங்க..” என்று சொல்ல ஆதி ஆஷாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “இன்னும் என்ன என்ன சொன்னாங்க உன்னோட அம்மா..?” என்று கேட்டான் அன்பு..
“என்னோட அம்மா இவளைப் பார்த்துவிட்டு வந்து இவளுக்கு சேலை கட்ட தெரியாதாம்.. வந்தும் முதலில் சேலை கட்ட கத்துக் கொடுக்கணும் என்று சொல்லிட்டு இருக்காங்க.. இது புரியாமல் லூசு நேற்றில் இருந்து சண்டை போட்டே உயிரை வாங்குது..” என்று சிரிக்க, “இதற்கு தான் இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு இருந்தீங்க..?” என்று சந்தோசமாகக் கேட்டான் அன்பு..
“எங்கம்மா பார்த்த பணக்காரப்பெண் இவள் தான் என்று சொல்லும் முன்னாடியே அம்மிணி சண்டையை ஆரமித்து விட்டாங்க.. அப்புறம் எப்படி உண்மையைச் சொல்ல..?!” என்று ஆஷாவைப் பார்த்து கண்ணடித்தான் ஆதி.. ஆதி ஒரு முடிவெடுத்தால் அதில் அவனின் அம்மாவிற்கும் முழு விருப்பம் இருக்கும் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது.. அவனின் அம்மா ஒத்துக் கொண்டதே அன்புவிற்கு சந்தோசமாக இருந்தது..
பக்கத்தில் இருந்த பைலை கையில் எடுத்த அன்பு, “இது எனக்கு ரொம்ப முக்கியம்.. உனக்கு இரு வருகிறேன்..” என்று அறையை விட்டு வெளியே சென்றவன் பெரிய குச்சியை எடுத்து வந்து, “இந்த ஆஷா இப்பொழுது அடிக்க உனக்கு ரைட்ஸ் இருக்கிறது.. அவனை விடாதே..” என்று குச்சியை அவனின் கையில் கொடுத்துவிட்டு சென்றான்..
அவன் சென்ற திசையைப் பார்த்தே நின்றிருந்த எழில் தனது கையில் இருந்த பரிசு பொருளைத் திறந்துப் பார்த்தாள்.. அதில் தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரத்தில் இரண்டு கொடிகள் பின்னிக்கொண்டது போல அமைக்கப்பட்ட இரண்டு இதயங்கள்.. அந்த இதயத்தின் நடுவே ஒன்றில் “E” என்ற எழுதும், மற்றொரு இதயத்தில் “A” என்ற எழுதும் இருக்க அதைப் பார்த்தவள்,
“என்னோட மனதில் உள்ளதை தெரிந்தும் நீ மெளனமாக இருப்பதற்கு நான் காரணம் ஆக முடியாது..” என்றவள் வீட்டிற்குள் சென்றாள்.. அவன் மீண்டும் காரில் கோவை வந்து அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தான்..
அவன் கோவை போய்ட்டு வருவதற்குள் இங்கே பெரிய பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டனர் ஆதியும், ஆஷா..! இவன் சென்னை ஏர்போர்டில் இறங்கியது ஆதியிடமும், ஆஷாவிடமும் இருந்து போன் வந்து கெண்டே இருந்தது..
அன்பு இதை எதையும் கவனிக்காமல் இன்று அலைந்த அலைச்சலில் வீட்டிற்கு சென்றவன், குளித்துவிட்டு வந்து படுத்தவன் மறுநாள் சூரிய உதயத்தின் போதுதான் எழுந்தான்.. அவன் எழுந்து கிளம்பி ஆபீஸ் போக கீழே வர அவனிடம் சொல்லிவிட்டுச் செல்ல காத்திருந்தார் ஜெயந்திம்மாவும், இனியாவும்..!
தனது பாட்டியைக் கண்ட அன்பு, “என்ன பாட்டி காலையிலேயே கிளம்பி எங்க போக போறீங்க..?” என்று கேட்டவண்ணம் டைனிங் ஹாலில் சென்று அமர்ந்தான்..
“அன்பு நானும், பாப்பாவும் ஊருக்கு போகிறோம் டா.. கல்யாண வேலைகள் நிறைய இருக்குடா..” என்று சொல்ல இருவரையும் பார்த்தவன், “என்ன பாட்டி இப்பொழுதே போய் என்ன பண்ண போறீங்க..” என்று கேட்டதும் ஜெயந்திம்மா மனதிற்குள்,
‘இப்பொழுது போனால் தன கண்ணா உன்னோட திருமண ஏற்பாட்டையும் செய்ய சரியாக இருக்கும்..’ என்று மனதில் நினைத்தவர், “இல்லடா கண்ணா அங்கே போனால் அடுத்தடுத்து நிறைய வேலைகள் இருக்கு.. நாங்க முன்னாடி போகிறோம்.. நீங்க பின்னாடி வாங்க..” என்று சொல்ல சுமித்ராவும், தியாகு இருவரும் மகனைப் பார்த்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டனர்..
அவன் நேற்று எழிலை பார்க்க சென்றது இனியா, அறிவை தவிர மற்ற மூவருக்கும் நல்லாவே தெரியும்.. இருந்தாலும் அமைதியாக இருந்தனர்..
“சரிங்க பாட்டி வாங்க நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்..” என்று அன்பு சொல்ல, “இல்லப்பா அறிவு இன்னைக்கு வீட்டில் தான் இருக்கிறான் நாங்க அவனோடு செல்கிறோம் நீ கிளம்பு..” என்று ஜெயந்திம்மா சொல்லிக் கொண்டிருக்க, அன்புவின் அலைபேசி நிற்காமல் அலறிக் கொண்டே இருந்தது..
அதைப் பார்த்த சுமித்ரா, “என்னடா செல் அடித்துக் கொண்டே இருக்கிறது நீ கண்டுக் கொள்ளாமல் இருக்கிறாய்..?” என்று கேள்வி எழுப்ப, “ஆஷா, ஆதி இருவரும் தான்.. இன்னைக்கு இருவருக்கும் சண்டை போல அதுதான் போன் எகிறுகிறது..” என்று சொன்னவன்,
“சரிம்மா நான் என்ன என்று போய் பார்க்கிறேன்.. பாட்டி நான் கிளம்புகிறேன்.. ஊரில் இருக்கும் அனைவரையும் நான் கேட்டதாக சொல்லுங்கள்..” என்று சொல்ல ஜெயந்திம்மா மனதில் எதையோ நினைத்து சிரிக்க,
இனியாவோ, “அண்ணா ஆடு, மாடு, கோழி, செடிகொடி, மரம் இவற்றிடம் எல்லாம் நீ விசாரித்ததாக நான் சொல்லிவிடுகிறேன்..” என்று சொல்ல, சுமித்ரா, தியாகு, ஜெயந்திம்மா மூவரும் சிரித்தனர்..
“உனக்கு வாய் கொழுப்பு அதிகமாக ஆகிவிட்டது..” என்று அவன் அவளை அடிக்க துரத்த பலநாளுக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது... மீண்டும் அவர்களின் கவனத்தைக் கலைத்தது அன்புவின் அலைபேசி..
அதை எடுத்துப் பார்த்த அன்பு, “இதுக்குமேல் இங்கே இருந்தேன் என்றால் அவர்களை சமாதானம் செய்ய முடியாது.. நான் போய் என்ன விஷயம் என்று பார்க்கிறேன்..” என்று கிளம்பிச் சென்றான் அன்பு..
அன்பு அவசர அவசரமாக கிளம்பி ஆபீசிற்கு சென்று பார்த்தான்.. இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.. அவர்களைப் பார்த்தும் வழக்கம் போல ஏதோ பிரச்சனை என்று உணர்ந்துக் கொண்ட அன்பு,
“ஹாய் ஆஷா என்ன பிரச்சனை எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்..?!” என்று கேட்டதும், ஆஷா நிமிர்ந்து அன்புவைப் பார்க்க, ஆதியோ, “ஏண்டா வந்ததும் அவளைக் கேட்கிறாயே என்னைப் பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா..?” என்று கிட்டதட்ட பாவமாகக் கேட்டதும் இருவரின் நடுவே இருந்த சேரில் அமர்ந்தவன்,
“இப்பொழுது உங்களுக்குள் என்னடா பிரச்சனை..?!” என்று கேட்டதும், “ஆதி நான் ஊருக்குப் போயிருந்த பொழுது இவங்க அம்மா இவனுக்கு பொண்ணு பார்த்தாங்களாம்.. பொண்ணு நல்ல வசதியான இடமாம்.. நான் அவளையே திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று என்னிடமே சொல்கிறான்..” என்று அன்பிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த பைலை எடுத்து ஆதியின் தலைமேல் போட்டாள் ஆஷா..
அதைப் பத்திரமாக கேச் பிடித்த ஆதி, “ஐயோ இது வரதராஜன் பைல் இது மட்டும் இல்லை என்றால் ஒண்ணுமே பண்ண முடியாது..” என்று கூறினான்..
அன்புவும், “அந்த பைல் தாண்டா ரொம்ப முக்கியம் பத்திரமாக அந்தபக்கம் வை..” என்று சொல்ல, “டேய் நான் இங்கே வாழ்க்கையே பறிபோக போகிறது என்று புலம்புகிறேன்.. இப்பொழுது வரதராஜன் பைல் ரொம்ப முக்கியமா..” என்று ரௌத்திரமாகக் கேட்டாள் ஆஷா..
அவள் கேட்டதில் அந்த நேரத்தில் கூட அன்பு, ஆதி இருவருக்கும் சிரிப்பு வந்தாலும் சிரித்தால் அவ்வளவுதான் என்று நினைத்தவன், “சரிதான் அந்த பைல் முக்கியம் இல்ல..” என்றவன்,
ஆதியின் பக்கம திரும்பி, “நீயேண்டா இப்படி சொன்னாய்..?” என்று அவனிடம் கேட்டதும், “இவளும் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை அப்பாவைப் பார்க்க போகிறாள் இல்ல அவரின் அப்பாவிடம் சொல்ல வேண்டியது தானே..?! எனக்கு இவரை பிடித்திருக்கிறது.. நான் இவரை காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே..?!” என்று அவன் கேட்டதும்,
அன்பு ஆஷாவிடம், “அவன் சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது.. நீ உன்னோட அப்பாவிடம் பேச வேண்டியது நானே ஆஷா..?” என்று கேட்டதும், “இவங்க அம்மா என்னிடம் வந்து என்ன சொன்னாங்க தெரியுமா அன்பு..?!” என்று கேட்டாள்..
“என்னைக்கு என்னோட அம்மா உன்னை நேரில் பார்த்தாங்க..?” என்று அவனும் கோபமாகக் கேட்டதும், “எழில் ஊருக்கு போன அன்னைக்குதான் உன்னோட அம்மா எனக்கு போன் பண்ணி பக்கத்தில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு வர சொன்னாங்க..” என்று கூறினாள்..
“சரி ஆஷா அவங்க அம்மா உன்னிடம் என்ன சொன்னாங்க..?” என்று பொறுமையாகக் கேட்டான் அன்பு.. “நான் மசூதி, சர்ச் என்று சுத்திட்டு இருக்கிறேன் என்றும் உன்னையெல்லாம் என்னோட் பையனுக்கு கட்டிவைக்க எனக்கு இஸ்டம் இல்லை என்றும் இன்னும் என்னென்னவோ சொன்னாங்க..” என்று கூறியதும் அதுவரை இருந்த நிலை மாறி வாய்விட்டு சிரிக்க ஆரமித்தான் ஆதி..
அவனைப் பார்த்து கோபமாக திரும்பிய ஆஷாவோ, “எதுக்குடா இப்படி சிரிக்கிறாய்..?” என்று கோபம் குறையாமல் கேட்டாள்..
“என்னோட அம்மா என்ன தப்ப சொல்லிட்டாங்க.. நீ சர்ச், மசூதி, பிரியாணி கடை எல்லாவற்றையும் சுற்றுவது உண்மைதானே..?!” என்று கேட்டு அவளை இன்னமும் கோபப்படுத்திப் பார்த்தான் ஆதி..
அப்பொழுது அவனின் கண்ணைப் பார்த்தான் அன்பு.. அவனின் கண்களில் இருந்த குறும்பைக் கண்ட அன்புவிற்கு ஏதோ புரிவது போல இருக்க, “சொல்ல வருவதை தெளிவாக சொல்லுடா..” என்றான் அன்பு.
“முதலில் இருந்து கேளுடா அன்பு..” என்று கூறியவன், “என்னோட அம்மா இவளைப் பார்த்துவிட்டு வந்ததும், ‘எனக்கு ஆஷாவை ரொம்ப பிடிச்சி இருக்குடா கண்ணா.. இனியும் நாள் கடத்தாமல் என்னோட தங்கக்கட்டியை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வாடா..’ என்று சொல்றாங்க.. எனக்கு சந்தோசமாக இருந்தது..” என்று சொல்ல அன்பு நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்..
“இவளிடம் இருக்கும் நல்ல குணம் என்னோட அம்மாவுக்கு அதிக சொத்தாக தெரிந்தது.. அதுதான் என்னிடம் பணக்கார இடத்தில இருந்து பொண்ணு வந்திருக்கிறது மகனே.. நீ அந்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள் என்று சொன்னாங்க..” என்று சொன்னவன் ‘அந்த பெண்ணையே’ என்று வார்த்தையில் அழுத்தம் கொடுக்க அதுவரை இருந்த கோபம் மாறி சிரிக்க ஆரமித்தாள் ஆஷா..
அவள் சிரிப்பதைப் பார்த்த அன்பு, “ஏய் லூசு ஆஷா அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒழுங்க காது கொடுத்துக் கேட்டிருந்தால் நேற்றில் இருந்து அனுபவித்த மனவலியில் இருந்து தப்பித்து இருக்கலாம் இல்லையா..?!” என்று சிரிப்புடன் சொன்னவன்,
“என்னடா இவங்களுக்கு பின்னாடி லவ் பண்ண ஆரமித்த இனியாவிற்கே நிச்சயம் முடிந்ததே என்ற வருத்தம் இருந்துடா எனக்கு.. ஆனால் இப்பொழுது இல்ல.. அவங்க திருமணத்திற்கு முன்னாடியே உங்க திருமணத்தின் முகூர்த்தத்தை வைக்க சொல்லுங்க..” என்று சொல்ல ஆதி ஆஷாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “இன்னும் என்ன என்ன சொன்னாங்க உன்னோட அம்மா..?” என்று கேட்டான் அன்பு..
“என்னோட அம்மா இவளைப் பார்த்துவிட்டு வந்து இவளுக்கு சேலை கட்ட தெரியாதாம்.. வந்தும் முதலில் சேலை கட்ட கத்துக் கொடுக்கணும் என்று சொல்லிட்டு இருக்காங்க.. இது புரியாமல் லூசு நேற்றில் இருந்து சண்டை போட்டே உயிரை வாங்குது..” என்று சிரிக்க, “இதற்கு தான் இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு இருந்தீங்க..?” என்று சந்தோசமாகக் கேட்டான் அன்பு..
“எங்கம்மா பார்த்த பணக்காரப்பெண் இவள் தான் என்று சொல்லும் முன்னாடியே அம்மிணி சண்டையை ஆரமித்து விட்டாங்க.. அப்புறம் எப்படி உண்மையைச் சொல்ல..?!” என்று ஆஷாவைப் பார்த்து கண்ணடித்தான் ஆதி.. ஆதி ஒரு முடிவெடுத்தால் அதில் அவனின் அம்மாவிற்கும் முழு விருப்பம் இருக்கும் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது.. அவனின் அம்மா ஒத்துக் கொண்டதே அன்புவிற்கு சந்தோசமாக இருந்தது..
பக்கத்தில் இருந்த பைலை கையில் எடுத்த அன்பு, “இது எனக்கு ரொம்ப முக்கியம்.. உனக்கு இரு வருகிறேன்..” என்று அறையை விட்டு வெளியே சென்றவன் பெரிய குச்சியை எடுத்து வந்து, “இந்த ஆஷா இப்பொழுது அடிக்க உனக்கு ரைட்ஸ் இருக்கிறது.. அவனை விடாதே..” என்று குச்சியை அவனின் கையில் கொடுத்துவிட்டு சென்றான்..