• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

uruvamilla oru uravu 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 3

காலை வேளை அந்த மருத்துவமனையில், பெரும் பரபரப்பு ஓடிக் கொண்டு இருந்தது. அந்த பரபரப்புக்கு காரணம், வருண் அங்கே வந்தது தான்.

அவன் மட்டுமாக வரவில்லை, அவனின் செக்யூரிட்டிகள் படை சூழ வந்து இறங்கி இருந்தான். வரவேற்ப்பில், டாக்டர் ப்ரீத்தியை பார்க்க வேண்டும் என்று கூறி அங்கே போடப்பட்டு இருந்த நாற்காலியில், கம்பீரமாக அமர்ந்து இருந்தான்.

அங்கு வேலை செய்து கொண்டு இருந்த செவிலியர்கள், குளிர் கண்ணாடி அணிந்து கம்பீரமாக அமர்ந்து இருந்த அவனை பார்த்து ஜொள்ளிக் கொண்டு இருந்தனர்.

தன் மற்ற வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, அங்கே வரவேற்பறை வந்த ப்ரீத்தி, இந்த காட்சியை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். அவன் அருகே சென்றவள், அவனை மட்டும் தன் அறைக்கு வருமாறு கூறிவிட்டு, அவனிடம் அவனின் பாதுகாவலர்களை எல்லாம் மருத்துவமனை வெளியே இருக்க சொல்லி கூறினாள்.

“அவங்க என் செக்யூரிட்டிஸ், என் பாதுகாப்புக்கு என் கூடவே தான் இருப்பாங்க” என்று அழுத்தம் திருத்தமாக கூறி, அவர்களும் என்னோடு உன் அறைக்கு வருவார்கள் என்று சொல்லாமல் சொன்னான்.

“இது ஹாஸ்பிட்டல், எல்லா இடத்துல cctv கேமரா இருக்கு. எல்லாத்துக்கும் மேல, உங்க கைல போன் இருக்கு, ஆபத்துன்னு தோணுச்சுன்னா அப்போ கூப்பிடுங்க உங்க செக்யூரிட்டிஸ் வருவாங்க”.

“இப்போ இங்க நீங்க என் பேஷன்ட், நான் சொல்லுறதை தான் கேட்கணும். கேட்க பிடிக்கல அப்படின்னா, தாராளமா நீங்க வெளியே போகலாம்” என்று கூறி தோளை குலுக்கிவிட்டு உள்ளே செல்லவும், இவன் அவளை முறைத்துக் கொண்டே அவள் பின்னே சென்றான்.

மறக்காமல், தலைமை செக்யூரிட்டியிடம் நான் கூப்பிடும் பொழுது வந்து சேர வேண்டும் என்று சொல்லிவிட்டே, அவள் பின்னோடு சென்றான்.

“சுமதி சிஸ்டர்! இவருக்கு இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துடுங்க இப்போ, அப்புறம் கயல்விழி மேடம் வந்த உடனே இங்க என்னை பார்க்க வர சொல்லுங்க” என்று கூறிவிட்டு அவள் இடத்தில் அமர்ந்தாள்.

“மிஸ் ப்ரீத்தி! நீங்க மனோதத்துவ டாக்டர் தான, அதுக்கு எதுக்கு ரத்த பரிசோதனை எல்லாம்? நிஜமாவே, நீங்க டாக்டர் தானா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

“ நாலு வருஷமா, நீங்க போதை பழக்கத்துக்கு அடிமையா இருந்து இருக்கீங்க, சிகெரட், தண்ணின்னு எல்லா கெட்ட பழக்கமும் உங்களுக்கு இருந்து இருக்கு. சோ, இது இப்போ ரொம்ப முக்கியம்” என்று முறைத்துக் கொண்டே கூறியவளை பார்த்து, யோசனையுடன் அங்கு இருந்து சென்றான்.


ரத்தம் கொடுத்துவிட்டு, அதன் பின் மற்ற பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு அவன் அவள் இருக்குமிடம் வரவே மதியம் ஒரு மணியானது.

“ரெண்டு நாள் கழிச்சு வாங்க, ரிசல்ட் பொருத்து ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்” என்று கூறியவளை பார்த்து உற்று நோக்கினான்.

“சஞ்சனா, உண்மைக்குமே உன் கண்ணுக்கு இப்போ தெரிஞ்சா கேட்டு சொல்லு அவ கிட்ட. நான் தான் ட்ரீட்மென்ட் எடுக்க ஒத்துகிட்டேனே, அவளுக்கு என்ன நடந்ததுன்னு கேட்டு சொல்லு” என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டான்.

அவனை பொறுத்தவரை, இவளுக்கும் சஞ்சுவுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நிச்சயம் அவள் இறந்ததற்க்கான காரணம் அவளுக்கு தெரிந்து இருக்கும், ஆனால் தன்னிடம் சொல்ல ஏன் இந்த தாமதம் என்று புரியவில்லை.

ஒரு வேளை, இவள் தன்னை விரும்பி இருப்பாளோ அதான் அவளை வைத்து நம்மிடம் இப்பொழுது விளையாடி பார்க்க எண்ணுகிறாளா என்றும் சந்தேகம் வந்தது. ஆகையால் தான், அவளிடம் அவள் செல்லும் பாதையிலே கேள்வி கேட்டான்.

“எனக்கு பேய் கண்ணுக்கு தெரியுமா, தெரியாதான்னு டெஸ்ட் பண்ண நினைக்குறீங்க போல” என்று புருவம் உயர்த்தி வினவினாள்.

தன்னை கண்டுகொண்டாளே என்று, கோவத்தில் அவன் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றான். அவன் அப்படி செல்வதை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டு அவள் வேலையை கவனிக்க தொடங்கினாள்.

கோபத்துடன் வெளியே வந்த வருண், தன் டிரைவரிடம் காரை எடுக்க சொல்லி பணித்துவிட்டு பின் சீட்டில் கண் மூடி சாய்ந்து அமர்ந்து யோசனைக்கு சென்றான்.

“உங்க சஞ்சுவை கொன்னுட்டாங்க, உங்களுக்கும் சஞ்சுவுக்கும் பாஸ் கோட் 3614 சரியா” என்று சஞ்சனாவை மட்டும் அல்லாது தன்னையும் அறிந்தவள் போல் அவள் பேசிய விதம் அவனை யோசிக்க வைத்தது.

அவனுக்கு பேய், ஆவி இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆகையால், அவனுக்கு ப்ரீத்தியின் மேல் தான் சந்தேகம். அவளுக்கு சஞ்சனா குறித்து விஷயம் தெரிந்து இருக்கிறது, அதை என்னிடம் சொல்ல நினைக்கிறாள்.

ஆனால், இந்த நான்கு கொடிய ஆண்டுகள் தான் வாழ்ந்த வாழ்கையை அறிந்து முதலில் அதை சீர் செய்ய எண்ணுகிறாள் என்பதை புரிந்து கொண்டான். ஆனால், உண்மையில் சஞ்சனா கொலை செய்யப்பட்டாளா, அல்லது வேறு எதுவும் பிரச்சனையா என்று அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுக்கு ப்ரீத்தியின் மேலே நிறைய சந்தேகம் இருக்கிறது. தன் சொத்துக்காக கூட, அவள் சஞ்சனாவை கொலை செய்து இருந்தால், இது தான் அவனுக்கு இப்பொழுது மிக பெரிய சந்தேகம்.

நேராக வீட்டிற்கு வந்தவன், சமையல்கார அம்மா செய்து வைத்து இருந்த சாப்பாட்டை கூட சாப்பிடாமல் அவன் அறைக்கு சென்று கதவை அடித்துக் கொண்டான். மனம் முழுவதும், அவனும் சஞ்சுவும் வைத்த பாஸ் கோட் 3614 பற்றிய சிந்தனை ஓடியது.

“வருண், நமக்கான பாஸ்கோட் ஒன்னு வச்சுக்கலாம் சரியா. நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவான விஷயம் எல்லாம், இந்த வருடத்தில் ஜூன் 3 அப்போ நடந்தது, உங்களுக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டாள் சஞ்சு.

“ம்ம்.. நல்லா நியாபகம் இருக்கு, அன்னைக்கு தான் நாம காதலை சொல்லிகிட்டோம். அன்னைக்கு தான், நம்ம ரெண்டு பேர் உடைய அம்மா, அப்பா கல்யாண நாள்ன்னு தெரிஞ்சிகிட்டோம்” என்று கூறி சிரித்தான்.

“ம்ம்.. exactly அதனால நம்ம பாஸ்கோட் 3614. இந்த பாஸ்கோட் வேற ஒருத்தருக்கு தெரியுது அப்படினா, அவங்க ஒன்னு நம்மளை வேவு பார்க்கிறவங்களா இருக்கணும் அதாவது கெட்டவங்க, இல்லை நம்ம பெஸ்டியா இருக்கணும் அதாவது நமக்கு உதவி செய்பவர்கள்” என்று கூறி சிரித்தவளை பார்த்து தானும் சிரித்தான்.

இப்பொழுது, அதை யோசித்து பார்த்தால் ப்ரீத்தி வேவு பார்த்தாளா! அல்லது உண்மையாகவே உதவி புரிய வந்து இருக்கிறாளா! என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தான்.

இப்படியே திண்டாடிக் கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தலைவலி வரவும், உடனே எப்பொழுதும் எடுக்கும் மாத்திரையை எடுத்து சட்டென்று போட போனான். ஆனால், போட முடியாமல் ப்ரீத்தியின் அறிவுரைகள் காதில் விழுந்து, அவனை எரிச்சல் அடைய வைத்தது.

கீழே இறங்கி வந்தவன், பசியில் காத்து அடைத்தது போல் வேறு இருக்கவும், உடனே டைனிங் மேஜை சென்று அங்கு இருந்த உணவினை எடுத்து சிறிது கொறித்து விட்டு, மீண்டும் மருத்துவமனை நோக்கி சென்றான்.

மருத்துவமனையில், அவளின் சீனியர் கயல்விழி மேடம் உடன் இவனின் கேஸ் ஹிஸ்டரி கூறி, அவனுக்கு அளிக்க போகும் சிகிச்சை பற்றி அவரிடம் கேட்டு விவாதித்துக் கொண்டு இருந்தாள்.

“ப்ரீத்தி! எல்லாம் சரி, ஆனா முதல அந்த பையனோட மனநிலை ரொம்ப முக்கியம். இந்த ட்ரீட்மென்ட் கிட்ட தட்ட ஷாக் ட்ரீட்மென்ட் மாதிரி, இதுல ரிஸ்க் அதிகம் இருக்கு. சோ இதை நீ ரொம்ப ஜாக்கிரதையா தான் டீல் பண்ணனும், ஏன்னா இதோட process அப்படி” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே, வருண் அங்கே கோபத்துடன் ப்ரீத்தி முன் வந்து நின்றான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
வந்தவன், ப்ரீத்தியின் கழுத்தை இறுக்கி பிடித்து சுவற்றோடு சுவராக நிற்க வைத்து கேள்வி கேட்க தொடங்கினான்.

“சொல்லு! நீ யார்? உனக்கும் சஞ்சனாவுக்கும் என்ன தொடர்பு? என் சொத்தை கொள்ளையடிக்க தான், இத்தனை நாள் கழிச்சு பிளான் பண்ணி வந்தியா? இப்போ நீ உண்மையை சொல்லல, அப்புறம் இதே இடத்துல உன்னை புதைக்க கூட தயங்க மாட்டேன்” என்று கத்திக் கொண்டு இருந்தான்.

அவன் கழுத்தை உரும்புபிடியாக பிடித்து இருந்தது, அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. அதிலும் அவனுக்கு தலை வலி, சற்று கூடும் பொழுது மேலும் அவள் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு இருந்தான்.

இதை பார்த்த டாக்டர் கயல்விழி, உடனே இரண்டு ஆண் நர்ஸ்களை அழைத்து வந்து, அவனை முதலில் அவளிடம் இருந்து பிரித்து எடுத்தனர். மேலும், அவனுக்கு ஒரு ஊசி போட்டுவிட்டு, அங்கே இருந்த கட்டிலில் படுக்க வைத்தனர்.

மருந்தின் வீரியத்தில், அவன் தூங்க தொடங்கினான். ப்ரீத்தி, மூச்சு வாங்க அவள் கழுத்தை தடவிக் கொண்டு இருந்தாள். இப்பொழுது, அமைதியாக படுத்து இருந்தவனை பார்த்து பெருமூச்சு விட்டாள்.

“ப்ரீத்தி! இதுக்கு மேல உண்மைகளை மறைச்சு வைக்கிறது, எந்த ப்ரஜோனமும் இல்ல. நீ உண்மையை கொஞ்ச கொஞ்சமா சொல்லிட்டே, ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறது பெட்டெர்”.

“ரொம்ப சென்சிடிவ் பார்ட் தொடாம, மேலோட்டமா சொல்லி சொல்லி அப்படியே ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடு. இன்னும் லேட் பண்ணா, என்ன ஆகும்ன்னு உனக்கு நல்லா தெரியும்” என்று கூறிவிட்டு அவர் சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில், அங்கே சாஹித்யா இவள் கேட்ட விபரங்களை சேகரித்து வந்து இருந்தாள். அங்கு வருண் படுத்து இருந்ததை பார்த்து, பிரீத்தியிடம் என்னவென்று கேட்டாள்.

அவள் நடந்ததை எடுத்து கூறவும், சாஹித்யா அவள் கழுத்தை பார்த்து அதிர்ந்தாள். நன்றாக சிவந்து இருந்தது அவளது கழுத்து, கூடவே சிராய்ப்பு ஒரு பக்கம்.

“என்ன டி இது? சாரி டி உன்னை இந்த கேஸ் எடுக்க சொல்லி, நான் ரொம்ப தொல்லை கொடுத்தேன். என்னால தான், இப்போ நீ இப்படி கஷ்டப்படுற, பேசாம இதை ட்ராப் பண்ணிடுவோமா” என்று கேட்டவளை பார்த்து முறைத்தாள்.

“ஒரு வேலை எடுத்தா, அதை சரியா முடிக்கணும் சாஹி. நீ நான் கேட்ட டிடைல்ஸ் எடுத்தியா, சொல்லு முதல அதை” என்று அவளிடம் விபரங்களை கேட்க தொடங்கினாள் ப்ரீத்தி.

அவள் கூறிய விபரங்களை எல்லாம் கேட்டுவிட்டு, அவளை வீட்டிற்கு செல்லுமாறு கூறினாள் ப்ரீத்தி. இப்பொழுது அவள் வருண் முழிப்பதற்காக காத்து இருந்தாள்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, அவன் தூக்கம் களைந்து எழுந்து பார்க்கும் பொழுது, அங்கே ப்ரீத்தி மட்டுமே இருந்தாள். அவளை பார்த்த பின், நடந்தது நினைவுக்கு வரவும், தன்னையே வெறுத்தான்.

அவன் இயல்புக்கு மாறாக இன்று நடந்து கொண்டது, அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகையால், மெதுவாக அவளிடம் தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டினான்.

“எனக்கும், சஞ்சனாவுக்கும் உள்ள உறவு என்னனு உங்களுக்கு தெரியனும் தான. சரி, உங்க வீட்டுல ஒரு ரூம் எனக்கு ஒதுக்குங்க, உங்க ட்ரீட்மென்ட் இனி நான் அங்க தரேன்”.

“உங்க வீட்டு அட்ரெஸ், உங்க செக்யூரிட்டி கிட்ட நான் வாங்கிட்டேன். நான் என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு, நைட் அங்க வந்துடுறேன்” என்று ப்ரீத்தி அவனிடம் கூறிவிட்டு, அவள் வீட்டுக்கு செல்ல தன் உடமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு இருந்தாள்.

அவள் கூறியது காதில் விழுந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் குழம்பினான். பிறகு ஒரு முடிவெடுத்தவனாக, அவள் வீட்டிற்கு தன் காரை டிரைவருடன் அனுப்பி வைத்துவிட்டு, இவன் தன் செக்யூரிட்டியை அழைத்து இவனின் ப்ரேத்யேக பைக்கை எடுத்து வர கூறினான்.

அவன் எடுத்து வந்து கொடுத்தவுடன், இத்தனை நாள் உபயோகிக்காமல் விட்டு வைத்து இருந்த அவனின் செல்லகுட்டியை ஆசை தீர தடவிக் கொடுத்தான். பின்பு, அதில் ஏறி அமர்ந்து வீட்டை நோக்கி பறந்தான்.

இங்கே வீடு வந்த ப்ரீத்தி, தன் உடமைகளை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு இருந்ததை பார்த்து, சாஹித்யா அவளிடம் என்னவென்று கேட்டாள்.

“நான் இனி மிஸ்டர் வருண் வீட்டில் தான், கொஞ்ச நாள் ஸ்டே பண்ண போறேன் சாஹி. நீ நான் கூப்பிடும் பொழுது வா சரியா, வீட்டை பத்திரமா பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு அவள் வருண் அனுப்பிய காரில் ஏறி சென்றாள்.

சாஹித்யா, இதை எதிர்பார்க்காததால் வாயை பிளந்து கொண்டு நின்றாள்.

அங்கே வருணின் வீட்டை முதன் முதலில் பார்த்த ப்ரீத்தி, மனதிற்குள்
ஸ்லாகித்துக் கொண்டாள். வீட்டை விட, அவளுக்கு அங்கு இருந்த ரோஜா தோட்டம் தான் கண்ணை கவர்ந்து இழுத்தது.


“வாங்க மிஸ் ப்ரீத்தி! இங்க நான், என் செக்யூரிட்டி, அப்புறம் உங்களுக்கு துணைக்கு சமையல்கார அம்மா இருக்காங்க. உங்களுக்கு மேல ரூம் ஒதுக்கி இருக்கேன், உங்களுக்கு வேற எதுவும் தேவை அப்படினா சொல்லுங்க” என்று கூறிக் கொண்டே அவளை அழைத்து வீட்டினுள் வந்து இருந்தான்.

அங்கு இருப்பவர்களை அழைத்து, ப்ரீத்திக்கு அறிமுகம் செய்து வைத்தான். அதன் பின் அவளுக்கு ஒதுக்கி இருந்த அறைக்கு, அழைத்து சென்றான்.

“மிஸ்டர் வருண்! நீங்க டின்னெர் முடிச்சிட்டு வாங்க, உங்க கிட்ட சில விஷயம் பேசணும்” என்று கூறியவளை பார்த்து யோசனையில், நெற்றியை சுருக்கினான்.

“டின்னெர் சாப்பிட நீங்களும் வாங்க” என்று அவன் அவளுக்கு அழைப்பு விடுவிக்கவும், அவள் தான் டின்னெர் முடித்து தான் வந்ததாக கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

தன்னிடம் என்ன பேச போகிறாள்? சஞ்சனா பற்றியா! அல்லது அவளை பற்றியா! இப்படி தன்னையே குழப்பிக் கொண்டு, சிறிதளவு கொறித்து விட்டு, மீண்டும் அவள் அறைக்கு வந்தான்.

“வாங்க மிஸ்டர் வருண்! சஞ்சனா ஸ்டூல் எடுத்து போடு அவருக்கு, உட்காரட்டும்” என்று அவள் கூறவும், கோபத்தில் இருந்தவன், அங்கே கண்ட காட்சியில் சிலையானான்.

“அட்டாக் நம்பர் ஒன்று, முடிஞ்சது” என்று ப்ரீத்தி மனதிற்குள் குதூகலித்துக் கொண்டு இருந்தாள்.

ஸ்டூல் நகர்ந்து வந்து, அவன் இடத்தில் நிற்கவும், சினிமாவில் மட்டுமே
பார்த்த ஒன்று, நேரில் பார்க்கவும் அவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்.


“எனக்கு பேய் கண்ணுக்கு தெரியும்! உங்க சஞ்சனா என் கிட்ட சொன்னா!” இப்படி இந்த வார்த்தைகள் தான், இப்பொழுது அவன் காதில் ஓடிக் கொண்டு இருந்தது.

அவனால் நிதர்சனத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லை, ஏதோ அவள் தான் மேஜிக் செய்கிறாள் என்று எண்ணிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.

ப்ரீத்தியோ, விட்டேனா பார் என்பது போல் சஞ்சனா அவருக்கு தண்ணீர் எடுத்து கொடு என்று அவளை பணிக்கவும், அவளும் தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு நீட்டினாள் அவன் முன்பு.

அந்தரத்தில் தொங்கும் பாட்டிலை பார்த்து, இப்பொழுது அவனால் அப்படியே கடந்து விட முடியும் என்று தோன்றவில்லை. அதானால், ஆஆஆஆ என்று கத்திக் கொண்டே அங்கு இருந்து வெளியேறினான்.

நிச்சயம், இது மாஜிக் கிடையாது. கண்ணால் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்த பிறகும், அவனால் சிறிது நேரத்திற்கு மூச்சு விட முடியாமல் போனது.

ப்ரீத்தி தான், உடனே அவனுக்கு சிகிச்சை அளித்து அவனை தெளிய வைத்தாள். அவளை பார்த்த அவன், மேலும் பயந்தான்.

“தெளிய வச்சு, தெளிய வச்சு அடிக்கிறது இது தானா? உனக்கு பேய் கண்ணுக்கு தெரியும், அப்படின்னு இப்போ நான் ஒத்துக்கிறேன். என்ன சொல்ல நினைச்ச, நீ இப்போ” என்று அவளிடம் கேட்டான்.

“நாளையில் இருந்து, வீட்டில் இப்படி பல சம்பவங்கள் நடக்கலாம். நீங்க சரியா ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டா, ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா, நீங்க சரியா எடுக்கல, அப்படினா உடனே சஞ்சு வந்துடுறேன் சொல்லி இருக்கா” என்று முகத்தை சீரியஸ் லுக்கில் வைத்து ப்ரீத்தி சொல்லவும், வருண் அதிர்ந்தான்.

இதே அதிகம் அவனை பொறுத்தவரை, இன்னும் இது போல் மேலும் எதுவும் நடக்காமல் இருக்க, அவன் அவளிடம் ட்ரீட்மென்ட் சரியாக எடுத்துக் கொள்வேன் என்று உறுதிமொழி எடுத்தான்.

மனதிற்குள், ப்ரீத்தியை அவன் அர்ச்சிக்கவும் தவறவில்லை. மேலும், அவனின் காதலியும் இங்கே தான் இருக்கிறாள் என்ற திருப்தி மனதிற்குள். ஆகையால், ப்ரீத்தியிடம் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளிடம் சிகிச்சை மேற்கொண்டான்.

இனி! அவளுக்கும், சஞ்சுவுக்கும் உள்ள தொடர்பை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின், தன்னுடைய ஆட்டத்தை முழு மூச்சில் இறங்கி, ப்ரீத்தியை ஒரூ வழி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, சிரிக்க தொடங்கினான்.

தொடரும்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
hai makkale ,
sorry for the delay.. saththiyama intha ud muthala naan kodukka ninaihathu vera, but kathai oda flow complete a vera track la maathitten. athaan romba yosichu pottu irukken.. ini jet speed la story nagarum..

happy pooja holidays friends..
naalaikku mudinja next epi tharen..
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
Nice ud. சாஹித்யாவும் ஆவிதானே சிஸ்டர்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top