- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 4
ப்ரீத்தி அன்று காலையில், வருணுக்கு கொடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தாள். காயத்தை கீறி தான் மருந்திட வேண்டும், ஆனால் அந்த காயத்தை கீறும் பொழுது உண்டாகும் வலியை அவன் தாங்குவானா என்றால், அவளை பொறுத்தவரை அவனால் அது முடியும் என்று தோன்றவில்லை.
அதனால் தான், அவள் சிறிது சிறிதாக செல்லலாம் என்று நினைத்தது. ஆனால் நேற்றைய சம்பவம், அவளின் எண்ணத்தை மாற்றி அமைத்தது. ஆகையால், இன்று அவளை பற்றி முதலில் சொல்லியாக வேண்டும் அவனிடம்.
ஒரு பெருமூச்சை வெளியேற்றி, அங்கே அறைக்குள் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் ஒரு டவலுடன். ஷவர் திறந்து அருவியாக கொட்டும் தண்ணீர் அடியில் நின்று, தான் வந்த பாதையை நினைக்க தொடங்கினாள்.
நினைக்க, நினைக்க நெஞ்சில் வலி வலி மட்டுமே. அந்த கணம் தாங்காமல், அவளுக்கு அழுகை வருவதற்கு பதில் கோபம் வந்தது. வேகமாக தன்னை சுத்தம் செய்துக் கொண்டு, டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தவள், அங்கே நின்று இருந்த வருணை கவனித்தாள்.
வருணோ, அவள் நின்று இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து போய் சாரி கூறி வெளியேற போனான். ஆனால் தன்னிலை அறியாமல், கோபம் மட்டுமே பிரதானமாக கொண்டு நின்று இருந்தாள் ப்ரீத்தி அப்பொழுது.
“நில்லுங்க! எதுக்கு வந்தீங்க? சொல்லிட்டு போங்க, இன்னைக்கு எனக்கு ஹாஸ்பிடல் ல நிறைய வேலை இருக்கு, அதனால நாளைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்” என்று கூறியவளை, நேர்கொண்டு பார்க்க முடியாமல் திணறினான்.
“ஹலோ! உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன், மிஸ்டர் வருண். அங்க சுவரு ல என்ன இருக்கு, என்னை பார்த்து பேசுங்க” என்று அழுத்தமாக கூறவும், அவன் அவளை பார்த்து திரும்பினான்.
தலைக்கு குளித்து இருந்ததால், தலையிலிருந்து கால் வரை ஆங்காங்கே நீர் திவலைகள் அந்த காலை நேரத்தில் முகத்தில் சிறிது கடுமை பரவ நின்று இருந்தவளை பார்த்து பெருமூச்சு விட்டான்.
“எட்டு மணிக்கு, கீழே சாப்பிட வந்திடுங்க மிஸ் ப்ரீத்தி. கொஞ்சம் இன்னைக்கே பேசிட்டா பெட்டெர்ன்னு தோணுது, இதை யோசிச்சு யோசிச்சு எனக்கு தலைவலி தான் அதிகமாகுது”.
“தயவு செய்து, நேத்து ராத்திரி மாதிரி இன்னைக்கு எந்த ட்ரிக்சும் பண்ண வேண்டாம். இப்படி தான் எல்லோரும் முன்னாடி இருப்பீங்களா?” என்று அவளை அப்படி பார்த்து, தன்னை கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தில் கேட்டு விட்டான்.
“என்ன?” என்று அவள் புரியாமல் கேட்கவும், அவன் அவளை ஏற இறங்க பார்த்த பின், தன்னை குனிந்து பார்க்கும் பொழுது தான், வெறும் டவலுடன் நின்று இருப்பது புரிந்தது.
“ஆஆஆஆஆ! ஷிட் வெளியே போடா” என்று கூறி பக்கத்தில் இருந்த குஷன் தலையணையை எடுத்து, அவன் மீது வீசினாள்.
“சாரி சொல்லிட்டு வெளியே போக இருந்தவனை, நீ தான் கூப்பிட்டு என்னன்னு சொல்லிட்டு போக சொன்ன. இப்போ வந்துட்டு என்னை தப்பு சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவனும் விடுவேனா பார் என்று பதிலுக்கு எகிறினான்.
“இன்னும் ஏன் நின்னுகிட்டு இருக்க இங்க?” என்று கோபத்தில் அவன் அருகே வந்து, அவனை பிடித்து வெளியே தள்ள நினைக்கும் பொழுது, அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அவன் மேல் மோதி நின்றாள்.
இதை எதிர்பார்க்காத வருண், கீழே விழாமல் இருக்க பக்கத்தில் இருந்த மேஜையை பிடித்ததோடு இல்லாமல், அவளையும் சேர்த்து பிடித்து நிறுத்தினான்.
அவனின் கை, அவளின் வெற்று முதுகை பிடித்து இருந்தது. முதன் முதலாக, ஒரு ஆணின் தொடுகையை உணர்ந்த ப்ரீத்தி சற்று தடுமாறி போனாள் முதலில்.
சட்டென்று அவனிடம் இருந்து விலகி, பார்வையை தரையில் பதித்து மறுபுறம் திரும்பி நின்றாள். அவனும் இதை எதிர்பாராததால், உடனே அங்கு இருந்து வெளியேறி சென்றான், கதவை பட்டென்று அடைத்து விட்டு.
“ஹையோ ப்ரீத்தி! இப்படியா அவன் முன்னாடி, வெறும் டவலோடு இருப்ப. ஒழுங்கா அவன் சாரி சொல்லி, போகும் பொழுதே அனுப்பி இருக்கணும்”.
“இப்போ பாரு, அவனை திட்டி, அவன் மேலே விழுந்து என்ன நினைச்சு இருப்பான் என்னை பத்தி?” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்ததோடு அல்லாமல், நகத்தை கடித்துக் கொண்டே அங்கும், இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.
“ப்ரீத்தி! நீ இன்னைக்கே என்னை கொன்னவன் யாரு? ஏன் என்னை கொல்ல நினைச்சான்? இது எல்லாம் சொல்ல போறியா வருண் கிட்ட!” என்று சஞ்சனாவின் குரல் அருகில் கேட்கவும், அதிர்ந்து கத்த போனாள்.
அதற்குள் சுதாரித்து, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து மடமடவென்று தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, அவளை நேர் பார்வை பார்த்தாள்.
“எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லிட்டா, அப்புறம் மிஸ்டர் வருணை நீ கொலைகாரனா தான் பார்க்க முடியும், அப்புறம் அவர் உயிரோடு இருப்பார்ன்னு உறுதியா சொல்ல முடியாது சஞ்சனா” என்று அழுத்தமாக கூறவும், அவளும் அதை ஆமோதித்தாள்.
“சஞ்சனா! இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி இங்க நடந்ததை, நீ பார்த்தியா, இல்லையா? என்னை ஏன் நீ இங்க தங்கணும் சொல்லி, அவ்வளவு கட்டயப்படுத்தின?” என்று அவளை பார்த்து இப்பொழுது, நேரடியாக கேட்டாள் ப்ரீத்தி.
“நீ எப்படி வருண் மேல விழுந்த? கால் தடுக்கி தான, அதை நான் தான் செஞ்சேன் போதுமா! இப்போ உனக்கு நல்லா புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன் ப்ரீத்தி” என்று அவள் சிரிப்புடன் கூறவும், முறைத்தாள் ப்ரீத்தி.
“ சஞ்சனா! நீ அப்போ மேட்ச் பிக்ஸ்சிங் பண்ண நினைக்கிறியா? இல்லை அவரை குணப்படுத்த நினைக்குறியா?” என்று கடுமையாக கேட்டாள் ப்ரீத்தி.
“இதில் என்ன சந்தேகம்! கண்டிப்பா ரெண்டும் தான், வருணை நான் பார்க்கிறதுக்கு முன்னாடியே, நீ அவரை பார்த்து மனசால விரும்பி இருக்க. இப்போ வரைக்கும் நீ கல்யாணம் பண்ணாம, ஏன் இருக்க?” என்று நெத்தியடியாக பதில் வரவும், விக்கித்து நின்றாள் ப்ரீத்தி.
“சஞ்சு! உனக்கு எப்படி தெரியும்?” என்று திக்கி திணறி கேட்டாள்.
“நீ எவ்வளவு மூடி மறைக்க நினைச்சாலும், அந்த ஒரு சில செகண்ட் நீ வருணை பார்க்கிற பார்வை தான், உன்னை முதல காட்டி கொடுத்துச்சு. உனக்கு தான் டைரி எழுதுற பழக்கம் இருக்கே, என்னைக்கும் இல்லாம அன்னைக்கு தான் உனக்கே தெரியாம, உன் பின்னாடி வந்து பார்த்தேன்”.
“அவனை நீ பார்த்தது முதல், இப்போ வரைக்கும் எல்லாம் அதுல தான எழுதுற. அவனுக்கு மட்டுமே தனி டைரி போட்டு இருக்கியே, அதுல தான் எனக்கு ரெண்டு பேரை சேர்த்து வச்சா என்னனு தோனுச்சு” என்று கூறியவளை பார்த்து, என்ன சொல்வதென்று தெரியாமல் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.
“ஒன்னே ஒன்னு சொல்லிடுறேன் நான், அவனை குணப்படுத்திட்டு, நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ. இதுவரைக்கும், அவன் என்னால கஷ்டப்பட்டது போதும், இனியும் அவன் கஷ்டப்பட கூடாது”.
“அவனும், நீயும் ஒன்னு சேர்ந்து சந்தோஷமா இருந்தா தான், என் ஆத்மா சாந்தி அடையும். இல்லைனா, இப்படியே தான் கடைசி வரை திரிஞ்சிகிட்டே இருப்பேன்” என்று கூறிவிட்டு சென்றவளை பார்த்து கண்ணீர் வடித்தாள்.
எவ்வளவு நேரம் கண்ணீர் வடித்து இருப்பாளோ, அவளின் செல்பேசி சினுங்கியத்தில் தான் தன்னிலை அடைந்து, யார் என்று பார்த்தாள். ஏதோ ஒரு புதிய எண் வரவும், அதை எடுக்காமல் மணியை பார்த்துவிட்டு கிளம்ப தொடங்கினாள்.
மருத்துவமனை செல்ல, தேவையானதை எடுத்துக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவள் எழுதிய அவளை பற்றிய டைரியை எடுத்துக் கொண்டு, ஒரு முடிவுடன் கீழே இறங்கினாள்.
ஹாலில் அவன் இல்லை எனவும், உணவு மேஜை நோக்கி சென்றாள். அங்கே அவன் இவளுக்காக காத்து இருக்கவும், இவள் எதுவும் பேசாமல் அவனுக்கு எதிராக போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.
சமையல்கார அம்மா, இருவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு செல்லவும், அவள் கவனத்தை தட்டில் மட்டுமே வைத்து இருந்தாள். அவனோ, இவளின் இந்த திடீர் செய்கை புரியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
“தட்டை பார்த்து சாப்பிடுங்க மிஸ்டர் வருண், அப்புறம் இந்தாங்க என் டைரி. இதுல எல்லா விபரமும் இருக்கு, வந்து உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லுறேன்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு கை கழுவிவிட்டு, டைரி கொடுத்த கையோடு வேலை முடிந்தது என்பது போல் வெளியே சென்றவளை பார்த்து சிரித்துக் கொண்டான்.
“அதான, என்ன டா அமைதியா இருக்காளே அப்படின்னு பார்த்தேன். இந்தாடா நீ கேட்டதுன்னு சொல்லி, கைல கொடுத்துட்டு போயிட்டா” என்று காலை சம்பவத்தை மறந்தவனாக, சாப்பிட்டு முடித்து கையில் இருந்த டைரியை படிக்க, மேலே அவன் அறைக்கு சென்றான் வருண்.
இங்கே மருத்துவமனை வந்திறங்கிய ப்ரீத்திக்கு, மீண்டும் அதே புது எண்ணில் இருந்து அவளின் செல்பேசிக்கு வரவும், தெரிந்தவர்களா என்று யோசித்துக் கொண்டே மருத்துவமனை உள்ளே நுழைந்து கொண்டே , அதை எடுத்து பேச பச்சை பட்டனை அழுத்தினாள்.
“ஹலோ! யாரு?” என்று இவள் கேட்டதற்கு அந்த பக்கம் சிரிப்பு சத்தம் விகாரமாக கேட்டது.
“டேய்! யாரு டா பரதேசி? காலையிலே இப்படி உயிரை வாங்குற எருமைமாடு!” என்று இருந்த கோபத்தில் எதிர்முனையில் இருப்பவரை யாரென்று தெரியாமல், எகிற தொடங்கினாள்.
“ஹா ஹா! மிஸ் ப்ரீத்தி! வருண் வீட்டுக்கு வந்த முதல் நாளே, இப்படி கோபத்தோடு இருக்கீங்க! அவனை திருத்தி, என்ன செய்ய போறீங்க?”
“நான் சொல்லுறதை கேளுங்க, வருணை பார்க்காதீங்க. அப்படி அவனை திருத்துவேன், ட்ரீட்மென்ட் கொடுப்பீங்கன்னு அடம் பிடிச்சா, உங்க உயிரை எடுத்துடுவேன் ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கவும், இந்த முறை இவள் பெருங்குரலெடுத்து சிரித்தாள்.
ப்ரீத்தி அன்று காலையில், வருணுக்கு கொடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தாள். காயத்தை கீறி தான் மருந்திட வேண்டும், ஆனால் அந்த காயத்தை கீறும் பொழுது உண்டாகும் வலியை அவன் தாங்குவானா என்றால், அவளை பொறுத்தவரை அவனால் அது முடியும் என்று தோன்றவில்லை.
அதனால் தான், அவள் சிறிது சிறிதாக செல்லலாம் என்று நினைத்தது. ஆனால் நேற்றைய சம்பவம், அவளின் எண்ணத்தை மாற்றி அமைத்தது. ஆகையால், இன்று அவளை பற்றி முதலில் சொல்லியாக வேண்டும் அவனிடம்.
ஒரு பெருமூச்சை வெளியேற்றி, அங்கே அறைக்குள் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் ஒரு டவலுடன். ஷவர் திறந்து அருவியாக கொட்டும் தண்ணீர் அடியில் நின்று, தான் வந்த பாதையை நினைக்க தொடங்கினாள்.
நினைக்க, நினைக்க நெஞ்சில் வலி வலி மட்டுமே. அந்த கணம் தாங்காமல், அவளுக்கு அழுகை வருவதற்கு பதில் கோபம் வந்தது. வேகமாக தன்னை சுத்தம் செய்துக் கொண்டு, டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தவள், அங்கே நின்று இருந்த வருணை கவனித்தாள்.
வருணோ, அவள் நின்று இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து போய் சாரி கூறி வெளியேற போனான். ஆனால் தன்னிலை அறியாமல், கோபம் மட்டுமே பிரதானமாக கொண்டு நின்று இருந்தாள் ப்ரீத்தி அப்பொழுது.
“நில்லுங்க! எதுக்கு வந்தீங்க? சொல்லிட்டு போங்க, இன்னைக்கு எனக்கு ஹாஸ்பிடல் ல நிறைய வேலை இருக்கு, அதனால நாளைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்” என்று கூறியவளை, நேர்கொண்டு பார்க்க முடியாமல் திணறினான்.
“ஹலோ! உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன், மிஸ்டர் வருண். அங்க சுவரு ல என்ன இருக்கு, என்னை பார்த்து பேசுங்க” என்று அழுத்தமாக கூறவும், அவன் அவளை பார்த்து திரும்பினான்.
தலைக்கு குளித்து இருந்ததால், தலையிலிருந்து கால் வரை ஆங்காங்கே நீர் திவலைகள் அந்த காலை நேரத்தில் முகத்தில் சிறிது கடுமை பரவ நின்று இருந்தவளை பார்த்து பெருமூச்சு விட்டான்.
“எட்டு மணிக்கு, கீழே சாப்பிட வந்திடுங்க மிஸ் ப்ரீத்தி. கொஞ்சம் இன்னைக்கே பேசிட்டா பெட்டெர்ன்னு தோணுது, இதை யோசிச்சு யோசிச்சு எனக்கு தலைவலி தான் அதிகமாகுது”.
“தயவு செய்து, நேத்து ராத்திரி மாதிரி இன்னைக்கு எந்த ட்ரிக்சும் பண்ண வேண்டாம். இப்படி தான் எல்லோரும் முன்னாடி இருப்பீங்களா?” என்று அவளை அப்படி பார்த்து, தன்னை கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தில் கேட்டு விட்டான்.
“என்ன?” என்று அவள் புரியாமல் கேட்கவும், அவன் அவளை ஏற இறங்க பார்த்த பின், தன்னை குனிந்து பார்க்கும் பொழுது தான், வெறும் டவலுடன் நின்று இருப்பது புரிந்தது.
“ஆஆஆஆஆ! ஷிட் வெளியே போடா” என்று கூறி பக்கத்தில் இருந்த குஷன் தலையணையை எடுத்து, அவன் மீது வீசினாள்.
“சாரி சொல்லிட்டு வெளியே போக இருந்தவனை, நீ தான் கூப்பிட்டு என்னன்னு சொல்லிட்டு போக சொன்ன. இப்போ வந்துட்டு என்னை தப்பு சொன்னா என்ன அர்த்தம்?” என்று அவனும் விடுவேனா பார் என்று பதிலுக்கு எகிறினான்.
“இன்னும் ஏன் நின்னுகிட்டு இருக்க இங்க?” என்று கோபத்தில் அவன் அருகே வந்து, அவனை பிடித்து வெளியே தள்ள நினைக்கும் பொழுது, அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அவன் மேல் மோதி நின்றாள்.
இதை எதிர்பார்க்காத வருண், கீழே விழாமல் இருக்க பக்கத்தில் இருந்த மேஜையை பிடித்ததோடு இல்லாமல், அவளையும் சேர்த்து பிடித்து நிறுத்தினான்.
அவனின் கை, அவளின் வெற்று முதுகை பிடித்து இருந்தது. முதன் முதலாக, ஒரு ஆணின் தொடுகையை உணர்ந்த ப்ரீத்தி சற்று தடுமாறி போனாள் முதலில்.
சட்டென்று அவனிடம் இருந்து விலகி, பார்வையை தரையில் பதித்து மறுபுறம் திரும்பி நின்றாள். அவனும் இதை எதிர்பாராததால், உடனே அங்கு இருந்து வெளியேறி சென்றான், கதவை பட்டென்று அடைத்து விட்டு.
“ஹையோ ப்ரீத்தி! இப்படியா அவன் முன்னாடி, வெறும் டவலோடு இருப்ப. ஒழுங்கா அவன் சாரி சொல்லி, போகும் பொழுதே அனுப்பி இருக்கணும்”.
“இப்போ பாரு, அவனை திட்டி, அவன் மேலே விழுந்து என்ன நினைச்சு இருப்பான் என்னை பத்தி?” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்ததோடு அல்லாமல், நகத்தை கடித்துக் கொண்டே அங்கும், இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.
“ப்ரீத்தி! நீ இன்னைக்கே என்னை கொன்னவன் யாரு? ஏன் என்னை கொல்ல நினைச்சான்? இது எல்லாம் சொல்ல போறியா வருண் கிட்ட!” என்று சஞ்சனாவின் குரல் அருகில் கேட்கவும், அதிர்ந்து கத்த போனாள்.
அதற்குள் சுதாரித்து, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து மடமடவென்று தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, அவளை நேர் பார்வை பார்த்தாள்.
“எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லிட்டா, அப்புறம் மிஸ்டர் வருணை நீ கொலைகாரனா தான் பார்க்க முடியும், அப்புறம் அவர் உயிரோடு இருப்பார்ன்னு உறுதியா சொல்ல முடியாது சஞ்சனா” என்று அழுத்தமாக கூறவும், அவளும் அதை ஆமோதித்தாள்.
“சஞ்சனா! இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி இங்க நடந்ததை, நீ பார்த்தியா, இல்லையா? என்னை ஏன் நீ இங்க தங்கணும் சொல்லி, அவ்வளவு கட்டயப்படுத்தின?” என்று அவளை பார்த்து இப்பொழுது, நேரடியாக கேட்டாள் ப்ரீத்தி.
“நீ எப்படி வருண் மேல விழுந்த? கால் தடுக்கி தான, அதை நான் தான் செஞ்சேன் போதுமா! இப்போ உனக்கு நல்லா புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன் ப்ரீத்தி” என்று அவள் சிரிப்புடன் கூறவும், முறைத்தாள் ப்ரீத்தி.
“ சஞ்சனா! நீ அப்போ மேட்ச் பிக்ஸ்சிங் பண்ண நினைக்கிறியா? இல்லை அவரை குணப்படுத்த நினைக்குறியா?” என்று கடுமையாக கேட்டாள் ப்ரீத்தி.
“இதில் என்ன சந்தேகம்! கண்டிப்பா ரெண்டும் தான், வருணை நான் பார்க்கிறதுக்கு முன்னாடியே, நீ அவரை பார்த்து மனசால விரும்பி இருக்க. இப்போ வரைக்கும் நீ கல்யாணம் பண்ணாம, ஏன் இருக்க?” என்று நெத்தியடியாக பதில் வரவும், விக்கித்து நின்றாள் ப்ரீத்தி.
“சஞ்சு! உனக்கு எப்படி தெரியும்?” என்று திக்கி திணறி கேட்டாள்.
“நீ எவ்வளவு மூடி மறைக்க நினைச்சாலும், அந்த ஒரு சில செகண்ட் நீ வருணை பார்க்கிற பார்வை தான், உன்னை முதல காட்டி கொடுத்துச்சு. உனக்கு தான் டைரி எழுதுற பழக்கம் இருக்கே, என்னைக்கும் இல்லாம அன்னைக்கு தான் உனக்கே தெரியாம, உன் பின்னாடி வந்து பார்த்தேன்”.
“அவனை நீ பார்த்தது முதல், இப்போ வரைக்கும் எல்லாம் அதுல தான எழுதுற. அவனுக்கு மட்டுமே தனி டைரி போட்டு இருக்கியே, அதுல தான் எனக்கு ரெண்டு பேரை சேர்த்து வச்சா என்னனு தோனுச்சு” என்று கூறியவளை பார்த்து, என்ன சொல்வதென்று தெரியாமல் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.
“ஒன்னே ஒன்னு சொல்லிடுறேன் நான், அவனை குணப்படுத்திட்டு, நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ. இதுவரைக்கும், அவன் என்னால கஷ்டப்பட்டது போதும், இனியும் அவன் கஷ்டப்பட கூடாது”.
“அவனும், நீயும் ஒன்னு சேர்ந்து சந்தோஷமா இருந்தா தான், என் ஆத்மா சாந்தி அடையும். இல்லைனா, இப்படியே தான் கடைசி வரை திரிஞ்சிகிட்டே இருப்பேன்” என்று கூறிவிட்டு சென்றவளை பார்த்து கண்ணீர் வடித்தாள்.
எவ்வளவு நேரம் கண்ணீர் வடித்து இருப்பாளோ, அவளின் செல்பேசி சினுங்கியத்தில் தான் தன்னிலை அடைந்து, யார் என்று பார்த்தாள். ஏதோ ஒரு புதிய எண் வரவும், அதை எடுக்காமல் மணியை பார்த்துவிட்டு கிளம்ப தொடங்கினாள்.
மருத்துவமனை செல்ல, தேவையானதை எடுத்துக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவள் எழுதிய அவளை பற்றிய டைரியை எடுத்துக் கொண்டு, ஒரு முடிவுடன் கீழே இறங்கினாள்.
ஹாலில் அவன் இல்லை எனவும், உணவு மேஜை நோக்கி சென்றாள். அங்கே அவன் இவளுக்காக காத்து இருக்கவும், இவள் எதுவும் பேசாமல் அவனுக்கு எதிராக போடப்பட்டு இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.
சமையல்கார அம்மா, இருவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு செல்லவும், அவள் கவனத்தை தட்டில் மட்டுமே வைத்து இருந்தாள். அவனோ, இவளின் இந்த திடீர் செய்கை புரியாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
“தட்டை பார்த்து சாப்பிடுங்க மிஸ்டர் வருண், அப்புறம் இந்தாங்க என் டைரி. இதுல எல்லா விபரமும் இருக்கு, வந்து உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லுறேன்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு கை கழுவிவிட்டு, டைரி கொடுத்த கையோடு வேலை முடிந்தது என்பது போல் வெளியே சென்றவளை பார்த்து சிரித்துக் கொண்டான்.
“அதான, என்ன டா அமைதியா இருக்காளே அப்படின்னு பார்த்தேன். இந்தாடா நீ கேட்டதுன்னு சொல்லி, கைல கொடுத்துட்டு போயிட்டா” என்று காலை சம்பவத்தை மறந்தவனாக, சாப்பிட்டு முடித்து கையில் இருந்த டைரியை படிக்க, மேலே அவன் அறைக்கு சென்றான் வருண்.
இங்கே மருத்துவமனை வந்திறங்கிய ப்ரீத்திக்கு, மீண்டும் அதே புது எண்ணில் இருந்து அவளின் செல்பேசிக்கு வரவும், தெரிந்தவர்களா என்று யோசித்துக் கொண்டே மருத்துவமனை உள்ளே நுழைந்து கொண்டே , அதை எடுத்து பேச பச்சை பட்டனை அழுத்தினாள்.
“ஹலோ! யாரு?” என்று இவள் கேட்டதற்கு அந்த பக்கம் சிரிப்பு சத்தம் விகாரமாக கேட்டது.
“டேய்! யாரு டா பரதேசி? காலையிலே இப்படி உயிரை வாங்குற எருமைமாடு!” என்று இருந்த கோபத்தில் எதிர்முனையில் இருப்பவரை யாரென்று தெரியாமல், எகிற தொடங்கினாள்.
“ஹா ஹா! மிஸ் ப்ரீத்தி! வருண் வீட்டுக்கு வந்த முதல் நாளே, இப்படி கோபத்தோடு இருக்கீங்க! அவனை திருத்தி, என்ன செய்ய போறீங்க?”
“நான் சொல்லுறதை கேளுங்க, வருணை பார்க்காதீங்க. அப்படி அவனை திருத்துவேன், ட்ரீட்மென்ட் கொடுப்பீங்கன்னு அடம் பிடிச்சா, உங்க உயிரை எடுத்துடுவேன் ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கவும், இந்த முறை இவள் பெருங்குரலெடுத்து சிரித்தாள்.