மருத்துவ முத்தம் பத்தி கேள்வி பட்டிருக்கோம் மருத்துவத்தால் உண்டான காதல் தெரியுமா? வாங்க வாங்க சொல்லறேன்..
தேடல்ல நான் படிச்ச சிறந்த கதைகளுள் ஒன்று "உயிர் விடும் வரை உன்னோடு தான்"
அருமையான காதல் கதை அதை ரொம்ப ரொம்ப அழகா சொல்லியிருப்பார்கள்.. இந்த கதையை படிச்சு முடிச்சு நிறைய நேரம் வெளியே வர முடியாமலே சுத்திக்கிட்டு இருப்போம்..
மரத்த சுத்தி சுத்தி வந்து , இரத்தத்தில் காதல் கடிதம் எழுதும் காதல் கதையல்ல ..காதல்னா என்னது, காமம் தாண்டிய காதல் என்றால் என்னது என அழகா பாடம் எடுக்கும் கதை..
பெண்கள்னா யாரு , அவ கடந்து வர பாதைகள்.. சந்திக்கும் சவால்கள், இயலாமையிலும் சுய மரியாதை காப்பது.. பெண் என்று பிறந்ததின் பெரிய வரம் என்ற பெரிய கனமான கருத்துகளை நகைச்சுவையோட அசால்டாக சொல்லிருப்பாங்க..
இந்த கதையில் வரும் சில ஆண்கள், ச இப்புடி பட்டவன் நிஜத்தில் இருக்கமாட்டானா ன்னு சொல்லற மாதிரி இருப்பாங்க..
பிரபல தொழிலதிபரான ப்ரகாஷ் கப்பூரோட பேங்க் அக்கவுண்ட் மேனேஜ் பண்ணவராங்க , பன்னாட்டு வங்கியில் பணி புரியும் சித்ரா பௌர்ணமி, இனிமே நமக்கு சிமி.. கண்டதும் காதல் மாதிரி ஒரு உணர்வு வருது விடோவரான ப்ரகாஷ்க்கு சிமி மேல்..
சிமி ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்த கணவனை இழந்த இளம் விதவை , தன் தங்கை வைகாசி நிலா , தம்பி மாசிலா மணி,மகள் கார்த்திகை தீபாவுடன் வாழ்ந்துவராங்க .. நிலா நடனபள்ளியில் வேலை பார்க்கும் பெண் அக்காக்கு தெரியாம திரைப்படத்தில் க்ருப் டான்ஸராக இருக்காங்க.. மணி பள்ளி இறுதியாண்டு படித்து கொண்டு தமக்கைகளுக்கு துணையான தம்பி.
கார்த்திகை தீபா மழலை மாறாத லட்டு..
இவங்க குடும்பத்துக்கு உறுதுணையா இருப்பது பத்மா பாலன் தம்பதியர் மற்றும் பத்மாவின் தம்பியான சிவா.. பத்மா பாலன் தம்பதியருக்கு திருமணம் ஆகி பல நாள் ஆகியும் குழந்தை இல்லாததால் தீபாவை குழந்தையாக கொண்டாடுகிறார்கள், பத்மாவுக்கு சிமி வீட்டில் எல்லாரையும் பிடிக்கும் நிலாவ தவிர..ஏனோ இருவரும் கீரியும் பாம்பும் போல மோதி கொள்வார்கள்.. சிவா ஒரு தலைசிறந்த செஃப், அது மட்டுமல்ல நிலாவின் காதலன்.. நிலாவை உயிருக்கும் மேலாக விரும்பும் கள்ளன்.. ஆயினும் அக்காவின் வற்புறுத்தலுக்காக சிமியை மணம் புரிய மண்டை ஆட்டும் பாவபட்ட ஆசாமி..
ப்ரகாஷ் சிமியை மணந்தானா?
ஏன் அவன் சிமியை குறிப்பாக தேடி விரும்பி மணந்தான்?
அவர்களின் வாழ்வில் என்ன தான் ஆச்சு?
உண்மையாகவே ப்ரகாஷ் சிமி விடோயரா?
சிவா நிலா கல்யாணம் நடந்ததா? அதற்கு பத்மாவின் பதிலென்ன என்று ஏகபட்ட கேள்விகளுடன், வியப்பில் வாய் பிளக்க வைக்கும் காரணங்கள்.. அவிழ்க்க படாது பல மர்ம முடிச்சுகள் என் நம்மள கார்னர் சீட்டில் அமர்ந்து நகம் கடிக்க வைப்பர் இந்த மாந்தர்கள்..
ப்ரௌனி-சிமி
நான் படித்ததில் சித்ராங்கதாவிற்கு பிறகு எனை மிகவும் பாதித்தது இந்த ப்ரௌனி ,சிமி தான்.. ப்ரகாஷ் கப்பூர் சித்திரா பௌர்ணமி பார்க்காமல், உணராமல் , தீண்டாமல் காதல் வருமா? அட வரும் என்று கற்பூரம் அடிச்சு சொல்லுவான் இந்த கப்பூரு.. இவன் காதல் மன்னனா, இவ கவுண்டர் மற்றும் மைண்ட் வாய்ஸ் ராணி.. சிமியோட கவிதையும் கவுன்டருக்குமே ஒரு தனி வாசகர் படையிருக்குனா.. ப்ரௌனி காதல், முத்த வித்தகன்..ப்ரௌனிக்குனே தனி பெண்கள் கூட்டம் இருக்கு நான் உட்பட.. கணவன்னா அர்த்தம் ப்ரௌனி அப்படி இருப்பான் பயபுள்ள.. மெழுகுவர்த்திக்கு உவமை இனி சிமி தான்.. குடும்பத்திற்காக தன்னை உருக்கிய கதாபாத்திரம்..
நிலா-சிவா
அது ஆழமான காதல்னா இது அம்சமான அடாவடி காதல்.. அவளுக்காக உருகி அதை எல்லோர் முன்னிலையிலும் ஒத்துக்கொள்ள முடியாமல் அவளின்றியும் வாழ தெரியாதவன் தான் இந்த சிவா. அந்த காதல் ராட்சசி மட்டும் குறைவா என்ன.. அவனுக்காகவே உருகி அவன் தன் தமக்கைகோ என்ற காதலின் தீயில் வெகும் வெண்புறா.. ரொம்ப விரும்பபடும் கேரக்டர் இவங்க
இவங்களும் தவிர பல குணாதிசயம் கொண்ட கேரக்டர்களும் வருவாங்க இந்த கதையில், அவங்கள பத்தி சொல்லறத விட கதையோட படிச்சு பாருங்க அசந்து போவீங்க அப்படி பட்ட சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும்..
ஏன் இந்த கதையை படிக்கணும்?
1. முதல்ல ஹீரோனா ஆறடி உயரம் அசத்தும் அழகு , ஆணவம் உடையவன் என்றும் ஹீரோயினா சிறுத்த கொடி போன்ற இடை.. மெலிதான தோற்றம் , அசரடிக்கும் அப்ஸரஸ் , இளம் வயதினர் என்ற ஜென்ரல் ஸ்டிரியோடைப்பை உடைத்து எறிந்துக்கே
2. சுத்த தமிழ் பெயர் வைத்தற்கு
சித்திரா பௌர்ணமி
வைகாசி நிலா
மாசிலா மணி
கார்த்திகை தீபா
மார்கழி திங்கள்னு
(உங்க வீட்டு குழந்தைக்கு பெயர் வைக்க ஏதாவது சஜஷன் வேணும்னா,வநிஷா அக்காவை அணுகவும் ??)
3.. மருத்துவ துறையில் பல முன்னேற்றங்கள் வந்தாலும் தாய்மை என்ற தகுதி பெற நம் உடலில் என்னென்ன நடக்கிறது என்று வித்யாசமான மருத்துவ தகவல் தந்ததற்கு
4. பெண் போக பொருளல்ல, ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற கருத்தை நிலைநாட்டியதற்காக
5. நகைச்சுவை மட்டுமே வைத்து பெரிய கருத்துகளை சர்வசாதாரணமாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னதற்கு
6.கதை முழுவதும் பாஸிடிவ் எனர்ஜி கொடுத்ததற்கு
7. கணவன் மனைவி உறவு என்றால் என்ன , அதில் காதலின் பங்கென்ன, அடிப்படை அன்பு மற்றும் புரிதல் எவ்வாறு வேண்டும்!!அப்படி அமைந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும், இவை இல்லை என்றால் வாழ்வு எப்படி சீரழியும் என்று விளக்கியுள்ளார்....
8. குடும்பம்னா என்ன ? அது நம் வாழ்வில் வகிக்கும் அங்கம் என்ன? பாசத்தின் அளவு கூடினால் குறைந்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறியதற்காக
9.வாடகை தாயை தாண்டி, செயற்கை கருதரிப்பு பற்றி பாமரனுக்கும் புரிய வைத்தற்காக
10. எல்லா இடியாப்ப சிக்கலுக்கும் சரியான விடை தந்ததற்காக
11. என்ன தான் கொடுமைகாரர்களாக இருந்தாலும் அவர்களின் தரப்பு நியாயத்திற்தகு மதிப்பளித்ததற்கு
என்று லிஸ்ட் போட்டு கொண்டே போகலாம்
பங்காரத்திற்கு பின் இந்த ப்ரௌனி பலர் மனதில் இடம் பிடிப்பான்..
கண்டிப்பா படிக்க வேண்டிய நாவல்.. சிரித்து வயிறு புண்ணாக நான் கிரண்டி.. படித்து முடித்தவுடன் கண்டிப்பா மனசுல தாக்கத்தை ஏற்படுத்தும்.. நம்மோட வாழ்வார்கள்..நம்மை சிரிக்க, அழ, காதல் கொள்ள, செம்மையூர , விக்கித்து நிக்க, கோபம் பட வைப்பாங்க நிச்சயமாக..
வாநிஷா அக்கா சொல்ல வார்த்தைகள் இல்லை.. இவ்வளவு பெரிய வித்தியாசமான கதைகளைத் தை எடுத்துக்கே உங்களை பாராட்டணும்.. குழந்தைகான ஏக்கத்துக்கு பின்னால் என்னலாம் ஆகும் மனம் மற்றும் உடல் ரீதியாக என் அழகா ஒரு சயன்ஸ் டீச்சர் மாதிரி சொல்லிக்கொடுக்கறீங்க.. பெண்ணை மதிக்க வேண்டும் என்ற உன்னத கருத்துக்கே ஒரு ராயல் சலியூட்.. உங்களோட ஹிந்திக்கே உங்கள் மேல் காதல்.. உங்கள் கவுன்டர்களால் விழுந்து விழுந்து சிரித்து, வீட்டில் உள்ளோர் எல்லாம் லூஸா என்ற ரென்ஜுக்கு ஏற இறங்க பார்த்த நாட்களை என் சொல்வேன்..ரோவன் ப்ரௌனிக்காகவே விழுந்துவிட்டேன் இக்கதையில்.. நீங்கள் வெற்றி பெற்று என் ப்ரௌனி அட்டைபடமாக புத்தக வடிவில் வர வேண்டும் என்று மிகவும் விரும்பும் என்னை போன்ற பல அன்பு வாசகர்கள் சார்பாக என் மனம்கனிந்த வாழ்த்துகள்!!!!
"காதல் ஏந்தி வந்தேன்
காமம் பெரிதாக தெரியவில்லை
அவள் பேரழகி இல்லை ஆனால்
அவளை போன்ற பெண்ணில்லை
அவன் மனம்கவர் கள்வன்
மனதோடே பேசும் காதலன்
விறல் விழி தீண்டவில்லை
ஆனாலும் அம்மா அப்பா
மோட்டியின் ஏஜி வாழ்வில் உன்னை போல் ஒருவர் உண்டோ போலோஜி
கலைந்து போன கோலமென விதியின் சதி
அதில் சிதலமானதோ உங்கள் நிம்மதி
காதல் வாழ வைக்கும் உயிர் கொள்ளு(ல்லு)ம்
மனதோடு பசுமரத்தாணியாய் உன் நினைவுகளுடன் என்
உயிர் விடும் வரை உன்னோடு தான்!!!"