Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
செந்தமிழ்
சூரியன் உச்சி வானில் நின்று கொண்டு உக்கிரமாய் பார்த்து கொண்டிருக்க, எல்லோருமே அந்த பெரிய விளையாட்டு திடலில் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தனர்.
அந்த பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கொண்டாட்டம் வெகு விமர்சையாய் நடந்து கொண்டிருக்க, எல்லோருமே போட்டிகளில் ஆர்வமாய் பங்குக் கொண்டு தங்கள் திறமைகளை பறைச்சாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தியபடி ஒரு கூட்டம் ஆரவாரித்து கொண்டிருந்தது.
அதுவும் ஓட்டப்பந்தயம் நிகழும் போதும் எழும் சத்தம் அங்கே ஓடுபவர்களின் வேகத்தையும் வெற்றியையும் கூட தீர்மானித்தது. அந்த பெரிய திடலில் ஒரு ஓரமாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி வெற்றியை அறிவித்து கொண்டிருந்தார் ஆசிரியர் மகேந்திரன் தன் கனிர் குரலால். அவரின் தூயதமிழ் உச்சரிப்பின் கம்பீரம் அந்த இடத்திலுள்ளவர்களை வசீகரித்து கொண்டிருந்தது.
போட்டியின் முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் அரங்கத்தில் பெரும் குழப்பமே விளைந்து கொண்டிருந்தது. நேதாஜி டீமும் ஜான்சி ராணி டீமும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன.
இறுதி வெற்றி கோப்பையை யார் தட்டிச் செல்வது என்ற பூசலில் இரு அணியுமே விட்டு கொடுக்க தயாராக இல்லை. இத்தகைய பூசலை சமாதானம் செய்ய வேண்டிய ஆசிரயர்களும் கூட சண்டையிட்டு கொண்டிருக்க அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் நீண்டு கொண்டிருக்க இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தனர்.
நேதாஜி அணியினர் சேர்ந்து அந்த அணியின் தலைவன் ரகுவை ஜான்சி ராணி அணியினரில் இருந்து யாராவது ஒருவர் கலந்து கொண்டு வீழ்த்திவிட்டால் வெற்றியை விட்டு தருவதாக சொல்ல, யாருமே அவனை எதிர்த்து ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க தயாராக இல்லை.
இப்போழுது உண்மையில் பிரச்சனை முடிவுக்கு வந்து வெற்றி நேதாஜி அணிக்கு அறிவிக்கப்படும் நிலையில், ஜான்சி ராணி அணியிலிருந்து அதே வகுப்பு மாணவி செந்தமிழ் முன்னாடி வந்து தான் போட்டியில் கலந்து கொள்கிறேன் என முன் வர அங்கே பெரும் ஆரவாரமே நிகழ்ந்தது. ஆணுக்கு நிகராய் பெண் என்பதை தாண்டி இருவருமே ஓட்டபந்தயத்தில் வல்லமை பொருந்தியவர்கள் என அந்த பள்ளிக்கே தெரியும்.
ஆணுடன் பெண் போட்டியிடுவதா என்ற சர்ச்சைகளை அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாற்றியமைத்தார். அவர்கள் இருவருமே சரிசமமான பலம் கொண்டவர்கள் என்று உரைத்து போட்டிக்கு சம்மதம் சொல்ல களத்தில் இருவருமே இறங்கினர்.
ஆயிரத்து இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. எல்லோருமே அந்த போட்டி நடக்கும் களத்தையே ஆர்வமாய் உற்று நோக்கி கொண்டிருந்தனர்.
ரகு மற்றும் செந்தமிழ் இருவரின் பார்வையும் ஒரு சேர மோதிக் கொள்ள அவர்கள் இருவருக்குமே வெற்றியை ஈட்டுவதே குறிக்கோளாய் இருந்தது. உடற்கல்வி ஆசிரயர் குரலை உயர்த்தி கம்பீரமாய் "ஆன் யுவர் மார்க்... கெட் செட் கோ" என்றார்.
இருவருமே ஒருவரை ஒருவர் வீழ்த்த மும்முரமாய் ஓட்டம் பிடிக்க, அதுவல்லவா போட்டி என்றளவுக்கு அந்த விளையாட்டுத் திடலே அவர்களை உற்சாகப்படுத்த அதிர்ந்து கொண்டிருந்தது. இருவருமே விட்டுகொடுக்க தயாராக இல்லாத பட்சத்தில் சரிசமமாய் ஓடும் அவர்களில் யார் வெற்றி கொள்வார்கள் என்பதை தீர்மானிக்க முடியாமல் கூர்மையான விழிகளோடு பார்த்து கொண்டிருந்தனர். இருவருமே கடைசி சுற்றில் தங்களின் முழு முயற்சியோடு வேகமெடுக்க
"தமிழச்சி தமிழச்சி தமிழச்சி" என்று குரல் ஓங்கிய அதே நேரத்தில் அவனுக்கென்ற ஒரு கூட்டம் "ரகு ரகு ரகு" என்று ஒலிக்க அங்கே நேதாஜி அணி, ஜான்சி ராணி அணி என்பதை மறந்து அந்த போட்டி ஆர்வத்தின் எல்லையின் விளிம்பில் ரொம்பவும் எதிர்பார்ப்பை அதிகரிக்க கடைசி சில நொடிகளில் வெற்றியை யார் வீழ்த்துவார்கள் என்ற ஆவலில்... தொப்பென்று படுக்கையின் மீதிருந்து கீழே விழ அவள் கனவு கலைந்து விழித்தெழுந்தாள்.
அவள் அப்படி விழுந்தால் அடிபடாத வண்ணம் கீழே மெத்தை விரிக்கப்பட்டிருக்க, இது அவளுக்கு எப்போதும் வழக்கம் போல.
அதிர்த்தியோடு எழுந்து "தமிழ்... உனக்கு இதே வேலையா போச்சு " என்று தனக்குத்தானே கடிந்து கொண்டவள் தரையில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்தாள்.
எல்லோருமே இயல்பாய் புதுவிதமான அல்லது அர்த்தமில்லாத, ஏன் சில நேரங்களில் நடக்க போகும் நிகழ்வுகளை கூட கனவாய் காண்பார்கள். ஆனால் அவளுக்கு எப்போதும் நடந்து முடிந்த நிகழ்வுகள் அப்படியே நடந்ததுபோலவே கனவாய் தோன்றுவது வழக்கம். கனவின் பாதியிலோ அல்லது முடிவிலோ இப்படி படுக்கையில் இருந்து வீழ்வதும் வழக்கமான ஒன்றுதான்.
அதை குறித்து மும்முரமாய் சிந்தித்தவள் 'நேத்து அந்த நீயூஸ் படிச்சதோட தாக்கம்... அதான் ரகு ஞாபகம் வந்திடுச்சு... இதே சாக்கா வைச்சு அவனுக்கு கால் பண்ணி பேசினா என்ன?" என்றபடி தோள்களில் சரிந்த முடியை கோதியபடி எழுந்து கொண்டாள்.
மேஜை மீதிருந்த கைப்பேசியை எடுத்து அவள் அழைப்புவிடுக்க எதிர்புறத்தில் ஒரு குரல் உற்சாகமான தொனியில் "ஏடி தமிழச்சி... என்னடி திடீர்னு என் ஞாபகம்" என்றான்.
"இல்லடா... ஒரு கனவு கண்டேன்.." என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பாக,
எதிர்புறத்தில் சிரிப்பின் ஒலி அதிகமாய் கேட்க செவியிலிருந்து கைப்பேசியை தள்ளி வைத்து கொண்டாள்.
அவள் கோபத்தோடு "போதும் நிறுத்துடா" என்று சொன்னதும்
"அடி கிடி ஒண்ணும் படலயே... ஆம்புலன்ஸ் ஏதாச்சும் அனுப்பட்டுமா ?" என்று அவன் கேட்க
"அதெல்லாம் சேஃப்பா லேண்டாயிட்டேன்" என்றாள்.
மீண்டும் சிரித்தவன் "ஒரு ஏழு எட்டு வருஷம் முன்னாடி நடந்தது... இன்னுமாடி உனக்கு அந்த கனவு வருது... " என்று கேட்டான்.
"பின்ன... கனவிலயும் வந்து டார்ச்சர் பன்ற" என்று சொல்லவும்
"கனவிலயும் நான்தானே வின் பண்ணிருப்பேன்" என்றான்.
"அதுக்குள்ள நான்தான் முழிச்சிட்டேனே"
"முழிச்சிட்டேன்னு சொல்லாதே... விழுந்தேட்டேன்னு சொல்லு"
"ஆமாம்... விழுந்தட்டேன்... பட் நீ வின் பண்ணிட்டேன்னு மட்டும் சொல்லாதே... பிஃராட்டு... நீ எப்படி வின் பண்ணேன்னு எனக்குதானே தெரியும்" என்றாள்.
"எப்படியோ... ஜெய்ச்சிட்டேன் இல்ல... தட்ஸ் அ மேட்டர் "
"நேர்மையில்லாத வெற்றி நிலைக்காது"
"அன்னைக்கும் இதானடி சொன்ன... என்னாச்சு... ஷீல்டை நேதாஜி டீம்தானே வாங்குச்சு" என்றான் கர்வத்தோடு. அப்போது அந்த நாள் அவள் கண்முன்னே நிழலாடியது. அந்த நிகழ்வின் தாக்கம் இப்போதும் காயப்படுத்த மௌனமாயிருந்தவளிடம்
"என்ன தமிழ் ... ஸைலன்ட்டாயிட்ட... ப்ஃலிங்ஸா... " என்றான்.
"இப்பவரைக்கும் நீ என்கிட்ட ஸாரி கேட்டியாடா" என்றவளின் கோபத்தை உணர்ந்தவன் "இட்ஸ் ஜஸ்ட் அ கேம்... நல்லா யோசிச்சு பாரு... நீ தோற்றாலும் நீ என்கிட்ட தைரியமா போட்டி போட்டதுக்காக பெருமையா பேசுவாங்க... அதுவே நான் தோற்றா... பொம்பள புள்ளகிட்ட போய் தோற்றிட்டியேன்னு அவமானப்படுத்துவாங்க..." என்றான் ரகு.
"தப்பை நியாயப்படுத்திற... சரி போகட்டும் விடு... போனா போதுன்னு மன்னிச்சு விட்டுட்டேன்" என்றாள்.
இருவருமே ஒருவருக்கொருவர் அந்த பசுமையான நாட்களை எண்ணி புன்னகையித்து கொள்ள, தமிழ் அவனிடம் "நாம மீட் பண்ணி ரொம்ப நாள் ஆயிடுச்சில்ல" என்றாள்.
ரகுவும் ஆமோதித்து "ம்ம்ம்... ஆமாம்... ... நான் இப்போ ஒரு கேஸ் விஷயமா சென்னைக்கு வர்றேன்... அப்போ மீட் பண்ணுவோம்" என்றான்.
தமிழ் யோசனையோடு "கேஸ்னா அந்த ஆர்க்கியலாஜிஸ்ட் சூசைட் கேஸ்தானே... ஏதாச்சும் க்ளூ கிடைச்சிதா" என்று அவள் ஆர்வமாய் கேட்க
"உம்ஹும்...ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கல ... இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய மேட்டர்... பெர்ஸன்ல் ரிஸன் மாதிரி எதுவும் தெரியல...
ஆமாம் உனக்கென்ன அந்த கேஸ்ல இவ்வளவு ஆர்வம்" என்று அவன் சந்தேகமாய் கேட்க அவள் இயல்பாக
"ஆர்வம்தான் ரகு... ஏன்னா எனக்கு அவரை நல்லா தெரியும் ... அவரோட டெத் எனக்குமே பெரிய ஷாக்"
என்றாள்.
"ஓ அப்படியா" என்று யோசனையில் ஆழ்ந்தவன் அப்படியே சில நொடிகள் அமைதி காக்க
"ஏ ரகு... என்ன போலீஸ் மூளை யோசிக்க ஆரம்பிச்சிடுச்சா" என்று சொல்லும் போதே எதிர்புறத்தில் அவன் சுதாரித்து கொண்டு,
"நாம சென்னை வந்த பிறகு உன்னை வந்து மீட் பன்றேன்... இதை பத்தி அப்போ டீடைல்லா பேசுவோம்..." என்றான்.
"ஒகே ரகு... வந்ததும் மறக்காம மெஸ்ஜ் பண்ணு" என்று சொல்ல
ரகுவும் "கண்டிப்பா" என்று சொல்லியபின் அவர்களின் உரையாடல் அங்கே முடிவுற்றது.
அவனிடம் பேசிய பின் அவள் சிந்தனையில் ஆழ்ந்துவிட உடனே அவளருகில் இருந்த பழைய செய்தி தாளை புரட்டி அதிலிருந்த செய்தியை படிக்கலனாள். பிறகு மெல்ல அவள் முகத்தை துடைத்து கொண்டு எழுந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தாள்.
இந்த நேரத்தில் அவளின் படுக்கை அறை குறித்து விவரித்தை பதிவு செய்தே தீர வேண்டும். அந்த அறை இயல்பான தோரணையில் காட்சியளிக்கவில்லை. முற்றிலுமாய் வித்தியாசமாகவும் அத்தனை விசாலமாகவும் ஒரு வீட்டின் முகப்பறை என்று சொல்லுமளவுக்கு இருந்தது. அந்த அறை அவளின் செல்வசெழிப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவளின் எண்ணங்களையும் பிரதிபலித்தது.
அங்கே நிரம்பியிருந்த பழமையான பொருட்களும் புத்தகங்களும் அது ஒரு அருங்காட்சியகமோ அல்லது நூலகமாகமோ என சந்தேகம் கொள்ளச் செய்ய அங்கே கலைந்திருந்த நூல்கள் பலவும் தமிழ் சார்ந்த இலக்கியங்களும் வரலாறுகளுமாகவே இருந்தன. அது மட்டுமின்றி சுவறே தெரியாதளவுக்கு அத்தனை படங்கள் மாட்டியிருக்க அவை அனைத்தும் கோவில்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் மற்றும் பழமையான பொருட்களின் புகைப்படங்களாகவே இருக்க அவை எல்லாமே அவளே தேடி தேடி படம் பிடித்தவை என்பது தெளிவாக தெரிந்தது.
இவற்றோடு அல்லாமல் அந்த விந்தையான அறையில் மற்றொரு சிறப்பம்சம் சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியும்.
கூர்மையான விழிகளும் தலைப்பாகையும் மீசையும் மட்டும் அழுத்தமான கருமைநிறத்தில் தீட்டப்பட்டிருக்க அது கம்பீரத்தின் மொத்த உருவமான மகாகவி பாரதியின் திருவுருவம்.
அந்த முகத்தோற்றம் அந்த அறையின் கம்பீரத்தை பன்மடங்கு அதிகரிக்க தமிழ் பற்றை அல்ல தமிழின் மீதான அவளின் அதீத காதலையும் மோகத்தையும் அந்த அறை அழுத்தமாய் பறைசாற்றி கொண்டிருந்தது.
செந்தமிழ் அவளுக்கே உரிய பாணியில் பேண்ட் ஷர்ட்டை உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கச்சிதமாய் அணிந்து கொள்ள, தோள்களில் சரிந்த கூந்தலை தூக்கி ஒரு முனையில் கட்டிக் கொண்டாள். உடை மேற்கத்திய ரீதியில் இருந்தாலும் அவள் தமிழ் கலாச்சாரத்தின் அக்மார்க் ரகபெண் என்று அவளே சொன்னால் ஒழிய யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுவல்லாது அவளை அவளின் தோற்றத்தின் அழகை தாண்டி திமிரும் தைரியமுமே திண்ணமாய் பிரதிபலிக்க அழகிற்கான முக்கியத்துவம் அவளை பொறுத்த வரை கொஞ்சம் குறைவுதான். அதே சமயத்தில் அவள் தன் அழகை முன்னிறுத்தினால் பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் தேவதை அம்சம் என்பதிலும் ஐயப்பாடில்லை.
சூரியன் உச்சி வானில் நின்று கொண்டு உக்கிரமாய் பார்த்து கொண்டிருக்க, எல்லோருமே அந்த பெரிய விளையாட்டு திடலில் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தனர்.
அந்த பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கொண்டாட்டம் வெகு விமர்சையாய் நடந்து கொண்டிருக்க, எல்லோருமே போட்டிகளில் ஆர்வமாய் பங்குக் கொண்டு தங்கள் திறமைகளை பறைச்சாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை உற்சாகப்படுத்தியபடி ஒரு கூட்டம் ஆரவாரித்து கொண்டிருந்தது.
அதுவும் ஓட்டப்பந்தயம் நிகழும் போதும் எழும் சத்தம் அங்கே ஓடுபவர்களின் வேகத்தையும் வெற்றியையும் கூட தீர்மானித்தது. அந்த பெரிய திடலில் ஒரு ஓரமாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி வெற்றியை அறிவித்து கொண்டிருந்தார் ஆசிரியர் மகேந்திரன் தன் கனிர் குரலால். அவரின் தூயதமிழ் உச்சரிப்பின் கம்பீரம் அந்த இடத்திலுள்ளவர்களை வசீகரித்து கொண்டிருந்தது.
போட்டியின் முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் அரங்கத்தில் பெரும் குழப்பமே விளைந்து கொண்டிருந்தது. நேதாஜி டீமும் ஜான்சி ராணி டீமும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன.
இறுதி வெற்றி கோப்பையை யார் தட்டிச் செல்வது என்ற பூசலில் இரு அணியுமே விட்டு கொடுக்க தயாராக இல்லை. இத்தகைய பூசலை சமாதானம் செய்ய வேண்டிய ஆசிரயர்களும் கூட சண்டையிட்டு கொண்டிருக்க அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் நீண்டு கொண்டிருக்க இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தனர்.
நேதாஜி அணியினர் சேர்ந்து அந்த அணியின் தலைவன் ரகுவை ஜான்சி ராணி அணியினரில் இருந்து யாராவது ஒருவர் கலந்து கொண்டு வீழ்த்திவிட்டால் வெற்றியை விட்டு தருவதாக சொல்ல, யாருமே அவனை எதிர்த்து ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க தயாராக இல்லை.
இப்போழுது உண்மையில் பிரச்சனை முடிவுக்கு வந்து வெற்றி நேதாஜி அணிக்கு அறிவிக்கப்படும் நிலையில், ஜான்சி ராணி அணியிலிருந்து அதே வகுப்பு மாணவி செந்தமிழ் முன்னாடி வந்து தான் போட்டியில் கலந்து கொள்கிறேன் என முன் வர அங்கே பெரும் ஆரவாரமே நிகழ்ந்தது. ஆணுக்கு நிகராய் பெண் என்பதை தாண்டி இருவருமே ஓட்டபந்தயத்தில் வல்லமை பொருந்தியவர்கள் என அந்த பள்ளிக்கே தெரியும்.
ஆணுடன் பெண் போட்டியிடுவதா என்ற சர்ச்சைகளை அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாற்றியமைத்தார். அவர்கள் இருவருமே சரிசமமான பலம் கொண்டவர்கள் என்று உரைத்து போட்டிக்கு சம்மதம் சொல்ல களத்தில் இருவருமே இறங்கினர்.
ஆயிரத்து இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. எல்லோருமே அந்த போட்டி நடக்கும் களத்தையே ஆர்வமாய் உற்று நோக்கி கொண்டிருந்தனர்.
ரகு மற்றும் செந்தமிழ் இருவரின் பார்வையும் ஒரு சேர மோதிக் கொள்ள அவர்கள் இருவருக்குமே வெற்றியை ஈட்டுவதே குறிக்கோளாய் இருந்தது. உடற்கல்வி ஆசிரயர் குரலை உயர்த்தி கம்பீரமாய் "ஆன் யுவர் மார்க்... கெட் செட் கோ" என்றார்.
இருவருமே ஒருவரை ஒருவர் வீழ்த்த மும்முரமாய் ஓட்டம் பிடிக்க, அதுவல்லவா போட்டி என்றளவுக்கு அந்த விளையாட்டுத் திடலே அவர்களை உற்சாகப்படுத்த அதிர்ந்து கொண்டிருந்தது. இருவருமே விட்டுகொடுக்க தயாராக இல்லாத பட்சத்தில் சரிசமமாய் ஓடும் அவர்களில் யார் வெற்றி கொள்வார்கள் என்பதை தீர்மானிக்க முடியாமல் கூர்மையான விழிகளோடு பார்த்து கொண்டிருந்தனர். இருவருமே கடைசி சுற்றில் தங்களின் முழு முயற்சியோடு வேகமெடுக்க
"தமிழச்சி தமிழச்சி தமிழச்சி" என்று குரல் ஓங்கிய அதே நேரத்தில் அவனுக்கென்ற ஒரு கூட்டம் "ரகு ரகு ரகு" என்று ஒலிக்க அங்கே நேதாஜி அணி, ஜான்சி ராணி அணி என்பதை மறந்து அந்த போட்டி ஆர்வத்தின் எல்லையின் விளிம்பில் ரொம்பவும் எதிர்பார்ப்பை அதிகரிக்க கடைசி சில நொடிகளில் வெற்றியை யார் வீழ்த்துவார்கள் என்ற ஆவலில்... தொப்பென்று படுக்கையின் மீதிருந்து கீழே விழ அவள் கனவு கலைந்து விழித்தெழுந்தாள்.
அவள் அப்படி விழுந்தால் அடிபடாத வண்ணம் கீழே மெத்தை விரிக்கப்பட்டிருக்க, இது அவளுக்கு எப்போதும் வழக்கம் போல.
அதிர்த்தியோடு எழுந்து "தமிழ்... உனக்கு இதே வேலையா போச்சு " என்று தனக்குத்தானே கடிந்து கொண்டவள் தரையில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்தாள்.
எல்லோருமே இயல்பாய் புதுவிதமான அல்லது அர்த்தமில்லாத, ஏன் சில நேரங்களில் நடக்க போகும் நிகழ்வுகளை கூட கனவாய் காண்பார்கள். ஆனால் அவளுக்கு எப்போதும் நடந்து முடிந்த நிகழ்வுகள் அப்படியே நடந்ததுபோலவே கனவாய் தோன்றுவது வழக்கம். கனவின் பாதியிலோ அல்லது முடிவிலோ இப்படி படுக்கையில் இருந்து வீழ்வதும் வழக்கமான ஒன்றுதான்.
அதை குறித்து மும்முரமாய் சிந்தித்தவள் 'நேத்து அந்த நீயூஸ் படிச்சதோட தாக்கம்... அதான் ரகு ஞாபகம் வந்திடுச்சு... இதே சாக்கா வைச்சு அவனுக்கு கால் பண்ணி பேசினா என்ன?" என்றபடி தோள்களில் சரிந்த முடியை கோதியபடி எழுந்து கொண்டாள்.
மேஜை மீதிருந்த கைப்பேசியை எடுத்து அவள் அழைப்புவிடுக்க எதிர்புறத்தில் ஒரு குரல் உற்சாகமான தொனியில் "ஏடி தமிழச்சி... என்னடி திடீர்னு என் ஞாபகம்" என்றான்.
"இல்லடா... ஒரு கனவு கண்டேன்.." என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பாக,
எதிர்புறத்தில் சிரிப்பின் ஒலி அதிகமாய் கேட்க செவியிலிருந்து கைப்பேசியை தள்ளி வைத்து கொண்டாள்.
அவள் கோபத்தோடு "போதும் நிறுத்துடா" என்று சொன்னதும்
"அடி கிடி ஒண்ணும் படலயே... ஆம்புலன்ஸ் ஏதாச்சும் அனுப்பட்டுமா ?" என்று அவன் கேட்க
"அதெல்லாம் சேஃப்பா லேண்டாயிட்டேன்" என்றாள்.
மீண்டும் சிரித்தவன் "ஒரு ஏழு எட்டு வருஷம் முன்னாடி நடந்தது... இன்னுமாடி உனக்கு அந்த கனவு வருது... " என்று கேட்டான்.
"பின்ன... கனவிலயும் வந்து டார்ச்சர் பன்ற" என்று சொல்லவும்
"கனவிலயும் நான்தானே வின் பண்ணிருப்பேன்" என்றான்.
"அதுக்குள்ள நான்தான் முழிச்சிட்டேனே"
"முழிச்சிட்டேன்னு சொல்லாதே... விழுந்தேட்டேன்னு சொல்லு"
"ஆமாம்... விழுந்தட்டேன்... பட் நீ வின் பண்ணிட்டேன்னு மட்டும் சொல்லாதே... பிஃராட்டு... நீ எப்படி வின் பண்ணேன்னு எனக்குதானே தெரியும்" என்றாள்.
"எப்படியோ... ஜெய்ச்சிட்டேன் இல்ல... தட்ஸ் அ மேட்டர் "
"நேர்மையில்லாத வெற்றி நிலைக்காது"
"அன்னைக்கும் இதானடி சொன்ன... என்னாச்சு... ஷீல்டை நேதாஜி டீம்தானே வாங்குச்சு" என்றான் கர்வத்தோடு. அப்போது அந்த நாள் அவள் கண்முன்னே நிழலாடியது. அந்த நிகழ்வின் தாக்கம் இப்போதும் காயப்படுத்த மௌனமாயிருந்தவளிடம்
"என்ன தமிழ் ... ஸைலன்ட்டாயிட்ட... ப்ஃலிங்ஸா... " என்றான்.
"இப்பவரைக்கும் நீ என்கிட்ட ஸாரி கேட்டியாடா" என்றவளின் கோபத்தை உணர்ந்தவன் "இட்ஸ் ஜஸ்ட் அ கேம்... நல்லா யோசிச்சு பாரு... நீ தோற்றாலும் நீ என்கிட்ட தைரியமா போட்டி போட்டதுக்காக பெருமையா பேசுவாங்க... அதுவே நான் தோற்றா... பொம்பள புள்ளகிட்ட போய் தோற்றிட்டியேன்னு அவமானப்படுத்துவாங்க..." என்றான் ரகு.
"தப்பை நியாயப்படுத்திற... சரி போகட்டும் விடு... போனா போதுன்னு மன்னிச்சு விட்டுட்டேன்" என்றாள்.
இருவருமே ஒருவருக்கொருவர் அந்த பசுமையான நாட்களை எண்ணி புன்னகையித்து கொள்ள, தமிழ் அவனிடம் "நாம மீட் பண்ணி ரொம்ப நாள் ஆயிடுச்சில்ல" என்றாள்.
ரகுவும் ஆமோதித்து "ம்ம்ம்... ஆமாம்... ... நான் இப்போ ஒரு கேஸ் விஷயமா சென்னைக்கு வர்றேன்... அப்போ மீட் பண்ணுவோம்" என்றான்.
தமிழ் யோசனையோடு "கேஸ்னா அந்த ஆர்க்கியலாஜிஸ்ட் சூசைட் கேஸ்தானே... ஏதாச்சும் க்ளூ கிடைச்சிதா" என்று அவள் ஆர்வமாய் கேட்க
"உம்ஹும்...ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கல ... இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய மேட்டர்... பெர்ஸன்ல் ரிஸன் மாதிரி எதுவும் தெரியல...
ஆமாம் உனக்கென்ன அந்த கேஸ்ல இவ்வளவு ஆர்வம்" என்று அவன் சந்தேகமாய் கேட்க அவள் இயல்பாக
"ஆர்வம்தான் ரகு... ஏன்னா எனக்கு அவரை நல்லா தெரியும் ... அவரோட டெத் எனக்குமே பெரிய ஷாக்"
என்றாள்.
"ஓ அப்படியா" என்று யோசனையில் ஆழ்ந்தவன் அப்படியே சில நொடிகள் அமைதி காக்க
"ஏ ரகு... என்ன போலீஸ் மூளை யோசிக்க ஆரம்பிச்சிடுச்சா" என்று சொல்லும் போதே எதிர்புறத்தில் அவன் சுதாரித்து கொண்டு,
"நாம சென்னை வந்த பிறகு உன்னை வந்து மீட் பன்றேன்... இதை பத்தி அப்போ டீடைல்லா பேசுவோம்..." என்றான்.
"ஒகே ரகு... வந்ததும் மறக்காம மெஸ்ஜ் பண்ணு" என்று சொல்ல
ரகுவும் "கண்டிப்பா" என்று சொல்லியபின் அவர்களின் உரையாடல் அங்கே முடிவுற்றது.
அவனிடம் பேசிய பின் அவள் சிந்தனையில் ஆழ்ந்துவிட உடனே அவளருகில் இருந்த பழைய செய்தி தாளை புரட்டி அதிலிருந்த செய்தியை படிக்கலனாள். பிறகு மெல்ல அவள் முகத்தை துடைத்து கொண்டு எழுந்து புறப்பட தயாராகி கொண்டிருந்தாள்.
இந்த நேரத்தில் அவளின் படுக்கை அறை குறித்து விவரித்தை பதிவு செய்தே தீர வேண்டும். அந்த அறை இயல்பான தோரணையில் காட்சியளிக்கவில்லை. முற்றிலுமாய் வித்தியாசமாகவும் அத்தனை விசாலமாகவும் ஒரு வீட்டின் முகப்பறை என்று சொல்லுமளவுக்கு இருந்தது. அந்த அறை அவளின் செல்வசெழிப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவளின் எண்ணங்களையும் பிரதிபலித்தது.
அங்கே நிரம்பியிருந்த பழமையான பொருட்களும் புத்தகங்களும் அது ஒரு அருங்காட்சியகமோ அல்லது நூலகமாகமோ என சந்தேகம் கொள்ளச் செய்ய அங்கே கலைந்திருந்த நூல்கள் பலவும் தமிழ் சார்ந்த இலக்கியங்களும் வரலாறுகளுமாகவே இருந்தன. அது மட்டுமின்றி சுவறே தெரியாதளவுக்கு அத்தனை படங்கள் மாட்டியிருக்க அவை அனைத்தும் கோவில்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் மற்றும் பழமையான பொருட்களின் புகைப்படங்களாகவே இருக்க அவை எல்லாமே அவளே தேடி தேடி படம் பிடித்தவை என்பது தெளிவாக தெரிந்தது.
இவற்றோடு அல்லாமல் அந்த விந்தையான அறையில் மற்றொரு சிறப்பம்சம் சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியும்.
கூர்மையான விழிகளும் தலைப்பாகையும் மீசையும் மட்டும் அழுத்தமான கருமைநிறத்தில் தீட்டப்பட்டிருக்க அது கம்பீரத்தின் மொத்த உருவமான மகாகவி பாரதியின் திருவுருவம்.
அந்த முகத்தோற்றம் அந்த அறையின் கம்பீரத்தை பன்மடங்கு அதிகரிக்க தமிழ் பற்றை அல்ல தமிழின் மீதான அவளின் அதீத காதலையும் மோகத்தையும் அந்த அறை அழுத்தமாய் பறைசாற்றி கொண்டிருந்தது.
செந்தமிழ் அவளுக்கே உரிய பாணியில் பேண்ட் ஷர்ட்டை உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கச்சிதமாய் அணிந்து கொள்ள, தோள்களில் சரிந்த கூந்தலை தூக்கி ஒரு முனையில் கட்டிக் கொண்டாள். உடை மேற்கத்திய ரீதியில் இருந்தாலும் அவள் தமிழ் கலாச்சாரத்தின் அக்மார்க் ரகபெண் என்று அவளே சொன்னால் ஒழிய யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுவல்லாது அவளை அவளின் தோற்றத்தின் அழகை தாண்டி திமிரும் தைரியமுமே திண்ணமாய் பிரதிபலிக்க அழகிற்கான முக்கியத்துவம் அவளை பொறுத்த வரை கொஞ்சம் குறைவுதான். அதே சமயத்தில் அவள் தன் அழகை முன்னிறுத்தினால் பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் தேவதை அம்சம் என்பதிலும் ஐயப்பாடில்லை.