• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 98 74.8%
  • நன்று

    Votes: 33 25.2%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    131

NARMADHA

மண்டலாதிபதி
Joined
Jan 23, 2018
Messages
145
Reaction score
192
Location
Chennai
Super...Semma start Moni...
Thamizhachi agmark moni heroine.. heroine agazhvaraichi .. Hero police ... Ivangalai ethira akiya suzhnilai ethu.. waiting eagerly for next epi
 




Haru

நாட்டாமை
Joined
Feb 4, 2018
Messages
20
Reaction score
18
Location
Coimbatore
தொப்பென்று படுக்கையின் மீதிருந்து கீழே விழ அவள் கனவு கலைந்து விழித்தெழுந்தாள்.



semma thiruppam sis.unexpected?????. Thamizhachi oda nxt varugai avaludan edhirparkappadugiradhu.
 




Farmila

நாட்டாமை
Joined
Jan 22, 2018
Messages
91
Reaction score
80
Location
Kandy
தமிழ் புறப்பட்டு அறையை விட்டு வெளியேற அவளின் பிரம்மிப்பூட்டும் அந்த பிரமாண்டமான வீடு ஆள்அரவமின்றி காட்சியளிக்க அவள் அழைத்த பின்னரே வேலையாட்கள் ஒவ்வொருவராய் எட்டிப் பார்த்தனர். அவர்களில் ஒருவனிடம் "ரூமை க்ளீன் பண்ணிட்டு... லாக் பண்ணிடுங்க" என்று சொல்லி சாவியை அவனிடம் நீட்டினாள்.

கருணா தலையசைத்து ஆமோதித்தவன் அவளிடம் மெல்ல"ஐயா... நீங்க எழுந்ததும் உங்ககிட்ட பேசினும்னு ரொம்ப நேரமா காத்திட்டிருக்காரு " என்றான்.

இதை கேட்டு அவளின் முகம் முற்றிலுமாய் வெறுப்பாய் மாறியிருந்தது. அவள் சலிப்போடு எப்படி இவருக்கு சொல்லி புரிய வைப்பது என்று யோசிக்க "தமிழ்" என்று அவளின் தந்தை விக்ரமவர்மனின் அழைப்பு கேட்டு
விருப்பமின்றி அவர் முன்னே வந்து நிற்க கம்பீரமாய் சோபாவில் வாட்டசாட்டமாய் அமர்ந்திருந்தவர் இறுக்கமான முகத்தோடு "உட்காரு தமிழ்.. நான் உன்கிட்ட பேசினும்" என்றார்.


"சாரிப்பா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நாம அப்புறம் பேசலாம்" என்று தவிர்த்துவிட்டு அவள் வேககாய் வாசல்புறம் நோக்கி போக

"தமிழ் நில்லு...." என்று குரலை உயர்த்த, அவள் திரும்பி வந்து நின்றாள்.

மேலும் அவர் "நீ இப்படி பிடி கொடுக்காமலே நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்... மாப்பிள்ளை வீட்ல எப்ப வந்துபார்க்கிறதுன்னு நச்சரிச்சிட்டே இருக்காங்க" என்றார்.

"எனக்கு விருப்பமில்லைன்னு முன்னாடியே சொல்லிட்டேன் ல... திரும்ப திரும்ப இதே கேள்வியையே நீங்க கேட்டா என் பதில் மாறிடுமா என்ன?" என்று கோபமாய் சொல்ல அப்போது பின்னோடு வந்த ஒரு பெண்மணியின் குரல் "அதான் வேண்டாங்கிறளே அப்புறம் ஏன் அவளை தொல்லை பன்றீங்க" என்றது.

தமிழின் பார்வை வியப்பில் அகல விரிந்தது 'சித்தி ஏன் இன்னைக்கு நமக்கு சாதகமா பேசிறாங்க' என்று யோசித்து கொண்டிருக்க விக்ரமவர்மன் அவரின் இரண்டாவது மனைவி விஜயாவை நோக்கி "நீ உள்ளே போ... தேவையில்லாம இதுல நீ தலையிடாதே" என்றார்.

மீண்டும் அவர் தமிழை நோக்கி "உன் விருப்பமிருந்தாலும் இல்லன்னாலும் இந்த கல்யாணம் நடக்கதான் போகுது... நீயே பேசாம உன் மனசை மாத்திக்கிற வழியை பாரு" என்றார்.

தமிழ் தீர்க்கமாய் அவரை நோக்கி "என் விருப்பமில்லாம எதையாச்சும் செஞ்சீங்க... அப்புறம் ஏடாகூடாமா நான் எதையாச்சும் பண்ணிடுவேன் பார்த்துக்கோங்க" என்று எச்சரிக்கையாக அவள் உரைத்துவிட்டு அகல, அவருக்கோ உண்மையில் இந்த திருமணத்தை எப்படி நடத்த போகிறோம் என்று அச்சம் தொற்றி கொண்டது. தன்னிலைமையை எப்படி அவளுக்கு புரிய வைப்பது என்று யோசித்து கொண்டிருக்க விஜயா அப்போது அறைக்குள் இருந்த தன் மகன் ரவிவர்மனிடம் ஏதோ ஓதிக் கொண்டிருந்தாள்.

"அந்த திமிரு பிடிச்சவளே கல்யாணம் வேணாங்கிற... இவருக்கு என்னடா திடீர்னு பொண்ணை மேல ரொம்ப அக்கறையாம்... இந்த சம்பந்தத்தை நம்ம தேவிக்கு பார்த்திருக்கலாம்னு நான் எத்தனை தடவை சொன்னேன்... அந்த மனிஷன் காதிலேயே வாங்கிக்கலயே ... என்னதான் இருந்தாலும் நான் அவருக்கு இரண்டாந்தாரம்தானே" என்று அவர் அலுத்து கொண்டு வருத்தப்பட,

ரவி அப்போது தன் உடையை கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொண்டிருந்தான். அவனின் தோற்றம் ஆடம்பரத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை மாறாய் அவனின் பணத்திமிரையும் உரைக்க சாவகாசமாய் அம்மாவின் இரு பக்க தோள்களை பிடித்தபடி "நீங்க ஏன் இவ்வளவு வருத்தப்படறீங்க... அதுவும் நான் இருக்கும்போது... மாப்பிள்ளை வீட்டில இருந்து இந்த கல்யாணத்தை அவங்களே வேணான்னு சொல்வாங்க... அதுவும் இந்த மாதிரி பொண்ணு வேண்டவே வேண்டான்னு சொல்வாங்க... அதுக்கப்புறமா எப்படியாவது பேசி இந்த சம்பந்தத்தை நம்ம தேவிக்கு பேசி முடிக்கிறேன்... பார்த்துக்கிட்டே இருங்க" என்றான்.

விஜயா அவனை நோக்கி "எப்படிறா ?" என்று கேட்க அப்போது ரவி தன் தாயிடம் சூட்சமமாய் பார்த்த பார்வையில் அவன் ஏற்கனவே திட்டத்தை சாமர்த்தியமாய் செயல்படுத்திவிட்டான் என்று தோன்றியது.

அப்போதுதான் விஜயாவின் மனதில் கனலென எரிந்து கொண்டிருந்த பொறாமை தீ லேசாய் அடங்கியது.

தமிழ் காரில் புறப்பட்ட சில நொடிகளில்
அவளின் தாத்தா சிம்மவர்மனை பற்றிய எண்ணங்கள் அவளை அலைகழிக்க அவரின் மறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரிழப்பு. அந்த மரணமே அவளுக்கு தனிமையின் கொடுமையை புரிய வைத்தது. பிறந்ததும் தாயின் மரணம், உடனடியாக அப்பாவின் இரண்டாவது திருமணம் என மோசமான சூழ்நிலைகளில் இருந்து அவளுக்கு பக்கபலமாகவும் எல்லா உறவாகவும் துணை நின்றது அவளின் தாத்தா சிம்மவர்மன்தான். அவர் "ஏ தமிழச்சி" என்று செல்லமாய் அழைப்பதை மனதிற்குள் எண்ணி பார்த்து கொள்ள இப்போது அந்த ஞாபகங்கள் அவளுக்குள் வேதனை புகுத்தி கண்கள் கலங்கச் செய்தது. பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு 'நான் உங்கள் தமிழச்சி பேசுகிறேன்' என்று சொன்னால் மட்டுமே போதும். எல்லோருமே வெற்றி கோப்பை யாருடையது என்பதை தீர்மானித்துவிடுவர். அதனாலயே தமிழச்சி என்பது அவளின் பெயரையே மறக்கடித்து அவளின் தனி அடையாளமாய் மாறியிருந்தது.


சிம்மவர்மனின் தமிழ் பற்றுதான் அவளுக்குள்ளும் இப்போது மலையென வளர்ந்து நிற்கிறது. அவர் பழமையான ஓலைச்சுவடிகள் செப்பேடுகள் போன்றவற்றை சேகரித்து அவற்றினை எல்லோருக்கும் புரியும் வண்ணம் நூலாக வெளியிட்டவர்.

ஜெமின் வம்சத்தில் பிறந்திருந்தாலும் சிம்மவர்மன் சொத்து ஆடம்பரம் இதில் எல்லாம் நாட்டமில்லாதவர். தமிழின போராட்டம் போன்றவற்றில் முதலிடத்தில் நிற்கும் அவருக்கு மக்கள் செல்வாக்கும் அரிசியல் பதவிகளும் தேடி வர அவற்றை எல்லாம் துச்சமாக ஒதுக்கிவிட்டவர். ஆனால் செந்தமிழின் தந்தை விக்ரமவர்மன் அதை தன் வளர்ச்சிக்கு சாதகமாக்கி அரிசியல் சாம்ராஜ்ஜியத்தில் புகுந்து அவருக்கென்று ஒரு பெயரை நிலைநாட்டிக் கொண்டார்.

இன்று அமைச்சர் பதவியிலிருந்து கொண்டு அரசியல் செல்வாக்கை சரியாய் பயண்படுத்திக் கொள்ளும் சூத்திரதாரி. அதுவும் தந்தையின் மரணத்திலும் அனுதாபத்தை சம்பாதித்து பெயரையும் புகழையும் அதிகரித்து கொண்டார்.

ஆனால் செந்தமிழிற்கு தந்தையின் சொத்து செல்வாக்கு அரசியல் பதவியில் நாட்டமில்லை. அவளுடைய தாத்தா நடத்தி வந்து கொண்டிருந்த 'தமிழச்சி' என்ற பத்திரிக்கையை அவருக்கு பிறகாய் அதே போல ஏற்று நடத்துவதிலும் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் கல்வெட்டியல் கற்பதிலுமே அவளின் ஆர்வம் மிகுந்திருந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நடந்த பல பூசல்களில் மனம் நொந்தே அவளின் தாத்தா மரணித்ததை இன்னும் அவள் மறக்க இயலவில்லை. அதற்குள் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் தந்தையின் மீது அவளுக்குள் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது.

மரணிக்கும் தருவாயில் அவளின் தாத்தா சிம்மவர்மன் சொன்னது இப்போதும் அழுத்தமாய் அவள் நினைவில் பதிந்திருந்தது. எந்த காரணத்தை கொண்டும் நம்முடைய பாரம்பரிய அரண்மனையை விற்க கூடாதென்றும், அதே சமயத்தில் உன் தந்தை காட்டும் மாப்பிள்ளையை மட்டும் நீ திருமணம் செய்து கொள்ளவே கூடாதென்றும் உரைத்தார். மணம்புரிபவன் உன் மனதிற்கு விருப்பமானவனாக மட்டுமே இருக்க வேண்டுமென அவர் அத்தனை கண்டிப்பாய் உரைத்திருக்க இப்போது தன் தந்தையின் எண்ணத்தை எப்படி முறியடிப்பது என்பதே அவளின் ஒரே குறிக்கோளாய் இருந்தது.

அப்போது அவளின் சிந்தனையை தடை செய்யும் விதமாய் வந்த கைப்பேசி அழைப்பை ஏற்றவளுக்கு கிடைத்த தகவல் கோபத்தை ஏற்படுத்த காரை உடனே அசிஸ்டென்ட் கமிஷன்ர் அலுவலகம் நோக்கி திருப்பினாள்.

*****

வீரேந்திரன்


பரபரப்போடு செயல்பட்டு கொண்டிருந்த அந்த காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் எல்லோரின் பார்வையிலும் அச்சமும் என்ன நடந்திருக்கும் என்ற ஆவலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்க அசிஸ்டென்ட் கமிஷ்னர் ராஜ வீரேந்திர பூபதி தன் அறைக்குள் கோபத்தின் உச்சத்தில் நின்றிருந்தான்.

உயரமும் கம்பீரமும் அவனின் காக்கி உடையில் இன்னும் மிடுக்காய் காண்பிக்க அந்த கூர்மையான விழிகள் அவனின் சீற்றத்தை அழுத்தமாய் வெளிப்படுத்தி கொண்டிருந்தது. சாதாரணமாய் இப்போது யாரும் அவன் முன்னிலையில் போக முடியாது எனும் பொழுது அவனின் கோபத்திற்கு காரணமானவளே அவனை நேரடியாக சந்திக்க வந்து கொண்டிருந்தாள்.

இருவருமே பணம் குணம் அறிவு நேர்மை எண்ணம் தைரியம் என எல்லாவற்றிலும் ஒரே போலவே இருக்க எதிர் எதிராய் நிற்க வைக்கும் சூழ்நிலை எது?

உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படி கருத்து தெரிவிக்க முடியாமல் போனாலும் மேலே Voting poll நீங்கள் சொல்ல நினைத்ததை ஒரு க்ளிக் செய்துவிடலாம். முக்கியமாய் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்.
ஆரம்பமே அதிரடியாக இருக்கு கா.
வாழ்த்துகள்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top