Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
28
(எல்லா அத்தியாயங்களுக்கும் தலைப்பு கொடுப்பது எனக்கு வழக்கம். இந்த அத்தியாயத்திற்கு என்ன தலைப்பு கொடுப்பது என்று குழப்பமாயிருக்கிறது. நீங்கள் படித்துவிட்டு உங்கள் தலைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். தலைப்பு அத்தியாயத்திற்குள் எழுதப்பட்ட வார்த்தையாக இருந்தால் நலம்...)
ரகுவிற்கு ஆப்ரேஷன் நடைபெற்று கொண்டிருக்க, வீரேந்திரன் ஒரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டிருந்தான். ரகுவிற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற கவலை மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் ரகுவின் அம்மா பதட்டத்தோடு ஒரு நர்ஸின் வழிகாட்டுதலோடு நுழைந்தார்.
அவர் முகமெல்லாம் இருளடர்ந்திருக்க கண்களின் கண்ணீரின் தடம். சில வருடங்கள் முன்பு தன் கணவனை இழந்திருந்தார். இன்று மகன் மட்டுமே ஒற்றை துணையாயிருக்க, இந்த செய்தி அவரை எந்தளவுக்கு பாதித்திருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அத்தனை துயரோடு வந்து நின்றவர், வீரேந்திரனை அறிமுகமில்லாமலே அவன் போலீஸ் என்பதை கண்டறிந்தார்.
அவன் அருகில் வந்தவர், பேச திக்கிதிணறியபடி ஏதோ கேட்க யத்தனிக்கவும்,.வீரேந்திரன் முந்தி கொண்டு "நீங்கதான் ரகுவோட அம்மாவா?" என்று கேட்ட கணமே அவர்கள் விழிகளில் நீரூற்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது.
வீரேந்திரன் உடனடியாக "நீங்க ஓண்ணும் பயப்படாதீங்கம்மா... ரகுவிற்கு ஒண்ணும் இல்ல.. நல்லா இருக்கான்" என்றான்.
அவர் சற்று நிம்மதியடைந்து "எங்க இருக்கான் ?... நான் அவனை பார்க்கனும்" என்றார்.
அவன் உள்ளம் நடுங்கினாலும் முகத்தில் அதனை காட்டி கொள்ளாமல், "பார்க்கலாம்... நீங்க முதல்ல இப்படி உட்காருங்க" என்று சொல்லி அவரை இருக்கையில் அமர வைத்தவன்,
தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து "நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க... தண்ணீர் குடிங்க" என்றான்.
ஒரே மகனை இழந்துவிடப் போகிறோமோ என்ற அவரின் அவஸ்த்தை கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது.
அவர் தண்ணீரை பருகாமல் "இல்ல தம்பி... எனக்கு இப்போ ரகுவை பார்த்ததான் நிம்மதி... அவன் எங்க இருக்கான் ?" என்று விழி நீரை துடைத்தபடி கேட்டார்.
"அவனுக்கு ஒண்ணும் இல்லம்மா... நீங்க முதல்ல தண்ணி குடிங்க.. ரிலேக்ஸா இருங்க... அவனுக்கு டாக்டர் உள்ளே டீரீட்மன்ட் பண்ணிட்டிருக்காரு... முடிஞ்சதும் உங்க பிள்ளையை நீங்க போய் பார்க்கலாம்" என்று நிதானமாய் சொல்ல அவன் சொன்ன விதத்தில் அவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
தண்ணீரை வாங்கி குடித்து முடித்துவிட்டு அமைதியை மூச்சு இழுத்துவிட்டு கொண்டு காத்து கிடந்தார்.
தான் சொன்னது பொய்யாக இருப்பினும் அது ரகுவின் அம்மாவிற்கு தைரியத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து அப்போதைக்கு நிம்மதிப்பெற்றான்
நேரம் கடந்து கொண்டே போக ஆப்ரேஷன் நல்லபடியாய் நடந்து முடிய வேண்டுமே என அவன் தவிப்புற்றிருந்தான்.
அப்போது ஒரு நர்ஸ் அவனருகில் வந்து நின்று "நீங்கதானே ஏசிபி வீரேந்திர பூபதி" என்று கேட்டாள்.
"எஸ்"
"உங்களுக்கு போஃன் வந்திருக்கு... ரிசப்ஷ்னல"
குழப்பமாய் பார்த்தவன் பின் வேகமாய் ரிசப்ஷனிற்கு சென்று அங்கே இருந்து தொலைப்பேசி ரிசீவரை எடுத்து காதில் வைத்து
"ஹெலோ" என்றான்.
"நான் எத்தனை தடவைதான் கால் பன்றது.. ஏன் என்னை இப்படி டென்ஷன் படுத்திறீங்க... ?" என்று தமிழ் கேட்கவும்,
அவளுக்கு எப்படி தெரிந்திருக்கும் என யோசனையில் நின்றவனை அவள் குரல் மீண்டும் மீட்டெடுத்தது.
"ப்ளீஸ் சொல்லுங்க வீர்.... ரகு எப்படி இருக்கான்? " அவள் கேட்டபடியே அழத் தொடங்கினாள்.
அழுகை தொனியில் ஒலித்த அவள் குரல் அவன் மனதை என்னவோ செய்தது.
"தமிழ் அழாதே... நீ டென்ஷன் ஆகற அளவுக்கு ஒண்ணுமில்லை..." என்றான்.
அவள் விசும்பலோடு "பொய் சொல்லாதீங்க வீர்... எனக்கு தெரியும்... ரகுவிற்கு ரொம்ப ஸ்ரீயஸா இருக்கு... அது என்கிட்ட சொல்ல முடியாமதான் என் போஃனை அட்டென்ட் பண்ண மாட்டிறீங்க" என்றாள்.
அவன் அதற்கு மேல் அவளை சமாளிக்க முடியாமல் "சரி... நானே உன் லைனுக்கு வர்றேன்... நீ கட் பண்ணு" என்று சொல்லியவன் அழைப்பை துண்டித்துவிட்டு தனியே வந்து நின்று தன் கைப்பேசி எடுத்து அழைத்தான்.
அவள் ஏற்றதும் அவன் நிதானமாக நிலைமையை எடுத்துரைத்தான்.
"ரகுவுக்கு இப்போ கொஞ்சம் ஸீர்யஸ் கன்டிஷன்தான்... ஹெட் இஞ்சுரி... ஆப்ரேஷன் நடந்திட்டிருக்கு... ரகுவோட அம்மா வேற ரொம்ப உடைஞ்சி போயிருக்காங்க... எனக்கே என்ன செய்றதுன்னு புரியல"
அவன் குரலில் இருந்த தைரியமற்ற நிலையை உணர்ந்தவள் மொத்தமாய் உடைந்து போனாள்.
அவள் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டிருக்க "அழாதே தமிழ்... ப்ளீஸ்... என்னால தாங்க முடியாது... நீ இப்படி உடைஞ்சி போயிடுவன்னுதான் நான் உன்கிட்ட சொல்லாம கூட புறப்பட்டு வந்துட்டேன்?!!" என்று அவன் உரைத்து கொண்டிருக்க அவள் அமைதியானாள்.
அவள் குரல் மீண்டும் சிரமப்பட்டு வெளிவந்தது.
"ரகுவிற்கு எதுவும் ஆகதில்ல வீர்..." என்று கேட்க,
அவன் அழுத்தமாக "கண்டிப்பா ரகுவிற்கு ஒண்ணும் ஆகாது... நீ தைரியமா இரு" என்றான்.
அவள் மெல்ல தன்னை தேற்றி கொண்டவள்
"வீர்..." என்று அழைத்தாள்.
"சொல்லு தமிழ்"
"ரகுவோட அம்மா ரொம்ப
பாவம் வீர்... அவனை தவிர வேற யாரும் அவங்களுக்கு இப்போ ஸப்போர்ட் கிடையாது...... நீங்க கொஞ்சம் பக்கத்திலிருந்து" என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே அவன் தீர்க்கமாக
"புரியுது தமிழ்... நான் அவங்க கூட இருந்து பார்த்துக்கிறேன்... " என்றான்.
"சரி... நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திடுறேன்" என்றாள்.
வீரேந்திரன் யோசனையோடு "அது சரி... உனக்கெப்படி ரகுவிற்கு ஆக்ஸிடென்ட்னு தெரியும்" என்று கேட்டான்.
"தெரியும் வீர்" என்றாள்.
"அதான் எப்படி?... அதுவும் இந்த ஹாஸ்பெட்டில்னு எப்படி தெரியும் உனக்கு"
"ரகுவுக்கு கால் பண்ண போது... லைன் போகல... அதான் நான் ஸ்டேஷனுக்கு கால் பண்ணேன்... அங்கே விசாரிச்சி போதுதான்... இப்படின்னு தெரிஞ்சிக்கிட்டேன்" என்றாள்.
கடிதத்தை பற்றி மட்டும் அவள் உரைக்க மறைத்திருக்க வீரேந்திரனுக்கு அவள் சொல்வதில் முழு உண்மை இல்லையோ என்று தோன்றிற்று.
"நீ என்னை காதலிக்கிற... பட் என்னை நம்பவே மாட்டிற இல்ல" என்று மனதில் உதித்த எண்ணத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டாள்.
அவன் சொன்னதை கேட்டு அவள் அமைதியாய் இருக்க அவனே மேலும் "என்னை ஏசிபியா பார்க்காதே தமிழ்... உன் ஹஸ்பெண்ட்டா பாரு... அட்லீஸ்ட் ஒரு வெல் விஷ்ஷரா பாரு... எந்த விஷயமா இருந்தாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லிடு" என்றான்.
அவன் பேசிய விதத்திலேயே அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவள் நிதானித்து"சொல்றேன் வீர்... ஆனா போஃன்ல வேண்டாம்... நான் எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றேன்... நீங்க ஆப்ரேஷன் முடிஞ்சதும் எனக்கு மறக்காம கால் பண்ணுங்க" என்றாள்.
அவனும் ஆமோதித்து அழைப்பை துண்டித்தான்.
மனமெல்லாம் அவள் என்ன சொல்வாளோ என கவலையில் ஆழ்ந்துவிட அந்த சமயத்தில் ஆப்ரேஷன் முடிவுற்று டாக்டர் அவனை அழைத்திருந்தார்.
அவர் வீரேந்திரனிடம் "நத்திங் டூ வொர்ரி... ஹீ இஸ் ஆல்ரைட் நவ்... இப்போதைக்கு ஐசியூல வைச்சிருக்கோம்... நாளைக்கு இல்ல ஈவனிங் கூட நார்மல் வார்டுக்கு மாத்திரலாம்" என்றார்.
அவனின் மனதின் பாரம் இறங்கியதாக பெருமூச்சுவிட்டவன் உடனே தமிழுக்கும் அழைத்து இந்த செய்தியை சொல்லியிருந்தான்.
ரகு ஐசியூவில் மயக்க நிலையில் தலையில் கட்டுப் போட்ட நிலையில் இருக்க உடம்பெல்லாம் ஆங்காங்கே காயங்களும் கட்டுக்களும் போடப்பட்டிருந்தது.
சுவாசகுழாய் வேறு பொருத்தப்பட்டிருக்க இந்த நிலையில் தன் மகனை பார்த்த ரகுவின் தாய் அழுது அரற்ற ஆரம்பித்தார். அத்தனை நேரம் இருந்த தைரியமெல்லாம் நொறுங்கி போயிருந்தது அவருக்கு.
வீரேந்திரன் அவரை தேற்றி நிலைமையை விளக்கி புரிய வைத்தான். மெல்ல மெல்ல அவரும் அவனின் நம்பிக்கையான வார்த்தைகளால் தன் துக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்தார்.
வீரேந்திரனுக்கு மாறி மாறி அழைப்புகள் வந்து வேலைகள் குவிந்துகிடக்க, ரகுவின் அம்மாவை துணையாக ஸ்டேஷனிலிருந்து ஒரு பெண் கான்ஸ்ட்டெபிளை வரவழைத்து விட்டுச்சென்றான்.
அவன் ஸ்டேஷனுக்கு சென்று குளித்து முடித்து வேலையில் ஈடுப்பட்டாலும் மனம் ஒரு பக்கம் பாஃரன்ஸிக்(forensic) ரிப்போர்ட் பற்றியே நினைத்து கொண்டிருந்தது.
அவனால் முழுமையாய் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அவள் மருத்துவமனைக்கு வந்திருப்பாளா என்ற எதிர்பார்ப்பும் காத்திருப்பும் உள்ளுக்குள் இருந்தது.
மாலை நேரம் எட்டியிருந்த நிலையில் மருத்துவமனையில் ரகுவை நார்மல் வார்டுக்கு மாற்றியிருந்தனர்.
அவன் கண்விழித்தாலும் சுயநினைவு பெறமுடியாமல் ஒருவித மௌனநிலையிலேயே இருந்தான். அவன் உடல் எந்தவித செயலையும் செய்ய முடியாதபடி கட்டுண்டு கிடந்தது.
அவன் அம்மாவின் குரலும் கண்ணீரையும் அவனால் உணர முடிந்ததே ஒழிய ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் தவிப்புற்றவன் தன்னிலை மறந்து மீண்டும் மயக்கநிலைக்கு சென்றிருந்தான்.
ஸ்டேஷனிலிருந்து வீரேந்திரனுக்கு அவன் வார்டுக்கு மாற்றப்பட்ட தகவலை அங்கிருந்த கான்ஸ்டபிள் உரைக்க, அவன் புறப்பட்டு செல்ல யத்தனித்த போது எஸ். ஐ சண்முகம் அவன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ரிப்போர்ட்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.
அதனை கையில் பெற்று கொண்ட மாத்திரத்தில் அவனுக்குள் ஒருவித படபடப்பும் நடுக்கமும் தொற்றி கொண்டது.
முதல் முறையாய் தன் யூகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே அந்த ரிப்போர்ட்ஸை பிரித்து பார்க்கலானான்.
*****
ரகுவின் மூளை தன்னை மீட்டு கொள்ள போராட அப்போது அறைமயக்க நிலையிலேயே நிகழ்ந்த அந்த கோரமான விபத்து அவன் நினைவுக்கு வந்தது.
ஒரு பெரிய வண்டி கட்டுபாடில்லாத வேகத்தோடு வந்து தன் வாகனத்தில் மோதிய மாத்திரத்தில் தான் தூக்கியறியப்பட்டது நினைவுக்குவர மரணத்தை தொட்ட உணர்வு அவனுக்கு.
அது நிச்சயம் எதிர்பாராத விபத்தல்ல என்று யோசித்திருந்தவனுக்கு அவன் கரத்தில் ஒருவித சில்லிட்ட உணர்வு.
அந்த நிலையிலும் அவன் செவிகள் நன்றாகவே வேலை செய்தன.
"ஐ லவ் யூ ரகு... " என்ற வார்த்தை ஒலிக்க இப்படி யார் தன்னிடம் சொல்ல முடியும். கனவாக இருக்க கூடுமோ என்று எண்ணி
அவன் சிரமப்பட்டு விழித்து கொள்ள முயற்சி செய்தான்.
அவன் விழிகள் விரிந்தாலும் காட்சிகள் மங்கியிருக்க ரொம்பவும் அக்கறையாக ஒரு குரல் "உங்களுக்கு ஒண்ணும் இல்ல ரகு... நல்லாயிடும்" என்று அவனுக்கு நம்பிக்கையூட்டியது.
ஆழமாக யோசித்தால் பரிட்சையமான குரல் போலவும் இருந்தது. பரிட்சையமாகத குரல் போலவும் இருக்கிறதே என்று எண்ணியவனின் விழிகள் இப்போது தெளிவாய் பார்க்க முடிந்திருந்தது.
(எல்லா அத்தியாயங்களுக்கும் தலைப்பு கொடுப்பது எனக்கு வழக்கம். இந்த அத்தியாயத்திற்கு என்ன தலைப்பு கொடுப்பது என்று குழப்பமாயிருக்கிறது. நீங்கள் படித்துவிட்டு உங்கள் தலைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். தலைப்பு அத்தியாயத்திற்குள் எழுதப்பட்ட வார்த்தையாக இருந்தால் நலம்...)
ரகுவிற்கு ஆப்ரேஷன் நடைபெற்று கொண்டிருக்க, வீரேந்திரன் ஒரிடத்தில் நில்லாமல் நடந்து கொண்டிருந்தான். ரகுவிற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே என்ற கவலை மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் ரகுவின் அம்மா பதட்டத்தோடு ஒரு நர்ஸின் வழிகாட்டுதலோடு நுழைந்தார்.
அவர் முகமெல்லாம் இருளடர்ந்திருக்க கண்களின் கண்ணீரின் தடம். சில வருடங்கள் முன்பு தன் கணவனை இழந்திருந்தார். இன்று மகன் மட்டுமே ஒற்றை துணையாயிருக்க, இந்த செய்தி அவரை எந்தளவுக்கு பாதித்திருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அத்தனை துயரோடு வந்து நின்றவர், வீரேந்திரனை அறிமுகமில்லாமலே அவன் போலீஸ் என்பதை கண்டறிந்தார்.
அவன் அருகில் வந்தவர், பேச திக்கிதிணறியபடி ஏதோ கேட்க யத்தனிக்கவும்,.வீரேந்திரன் முந்தி கொண்டு "நீங்கதான் ரகுவோட அம்மாவா?" என்று கேட்ட கணமே அவர்கள் விழிகளில் நீரூற்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது.
வீரேந்திரன் உடனடியாக "நீங்க ஓண்ணும் பயப்படாதீங்கம்மா... ரகுவிற்கு ஒண்ணும் இல்ல.. நல்லா இருக்கான்" என்றான்.
அவர் சற்று நிம்மதியடைந்து "எங்க இருக்கான் ?... நான் அவனை பார்க்கனும்" என்றார்.
அவன் உள்ளம் நடுங்கினாலும் முகத்தில் அதனை காட்டி கொள்ளாமல், "பார்க்கலாம்... நீங்க முதல்ல இப்படி உட்காருங்க" என்று சொல்லி அவரை இருக்கையில் அமர வைத்தவன்,
தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து "நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க... தண்ணீர் குடிங்க" என்றான்.
ஒரே மகனை இழந்துவிடப் போகிறோமோ என்ற அவரின் அவஸ்த்தை கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது.
அவர் தண்ணீரை பருகாமல் "இல்ல தம்பி... எனக்கு இப்போ ரகுவை பார்த்ததான் நிம்மதி... அவன் எங்க இருக்கான் ?" என்று விழி நீரை துடைத்தபடி கேட்டார்.
"அவனுக்கு ஒண்ணும் இல்லம்மா... நீங்க முதல்ல தண்ணி குடிங்க.. ரிலேக்ஸா இருங்க... அவனுக்கு டாக்டர் உள்ளே டீரீட்மன்ட் பண்ணிட்டிருக்காரு... முடிஞ்சதும் உங்க பிள்ளையை நீங்க போய் பார்க்கலாம்" என்று நிதானமாய் சொல்ல அவன் சொன்ன விதத்தில் அவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
தண்ணீரை வாங்கி குடித்து முடித்துவிட்டு அமைதியை மூச்சு இழுத்துவிட்டு கொண்டு காத்து கிடந்தார்.
தான் சொன்னது பொய்யாக இருப்பினும் அது ரகுவின் அம்மாவிற்கு தைரியத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து அப்போதைக்கு நிம்மதிப்பெற்றான்
நேரம் கடந்து கொண்டே போக ஆப்ரேஷன் நல்லபடியாய் நடந்து முடிய வேண்டுமே என அவன் தவிப்புற்றிருந்தான்.
அப்போது ஒரு நர்ஸ் அவனருகில் வந்து நின்று "நீங்கதானே ஏசிபி வீரேந்திர பூபதி" என்று கேட்டாள்.
"எஸ்"
"உங்களுக்கு போஃன் வந்திருக்கு... ரிசப்ஷ்னல"
குழப்பமாய் பார்த்தவன் பின் வேகமாய் ரிசப்ஷனிற்கு சென்று அங்கே இருந்து தொலைப்பேசி ரிசீவரை எடுத்து காதில் வைத்து
"ஹெலோ" என்றான்.
"நான் எத்தனை தடவைதான் கால் பன்றது.. ஏன் என்னை இப்படி டென்ஷன் படுத்திறீங்க... ?" என்று தமிழ் கேட்கவும்,
அவளுக்கு எப்படி தெரிந்திருக்கும் என யோசனையில் நின்றவனை அவள் குரல் மீண்டும் மீட்டெடுத்தது.
"ப்ளீஸ் சொல்லுங்க வீர்.... ரகு எப்படி இருக்கான்? " அவள் கேட்டபடியே அழத் தொடங்கினாள்.
அழுகை தொனியில் ஒலித்த அவள் குரல் அவன் மனதை என்னவோ செய்தது.
"தமிழ் அழாதே... நீ டென்ஷன் ஆகற அளவுக்கு ஒண்ணுமில்லை..." என்றான்.
அவள் விசும்பலோடு "பொய் சொல்லாதீங்க வீர்... எனக்கு தெரியும்... ரகுவிற்கு ரொம்ப ஸ்ரீயஸா இருக்கு... அது என்கிட்ட சொல்ல முடியாமதான் என் போஃனை அட்டென்ட் பண்ண மாட்டிறீங்க" என்றாள்.
அவன் அதற்கு மேல் அவளை சமாளிக்க முடியாமல் "சரி... நானே உன் லைனுக்கு வர்றேன்... நீ கட் பண்ணு" என்று சொல்லியவன் அழைப்பை துண்டித்துவிட்டு தனியே வந்து நின்று தன் கைப்பேசி எடுத்து அழைத்தான்.
அவள் ஏற்றதும் அவன் நிதானமாக நிலைமையை எடுத்துரைத்தான்.
"ரகுவுக்கு இப்போ கொஞ்சம் ஸீர்யஸ் கன்டிஷன்தான்... ஹெட் இஞ்சுரி... ஆப்ரேஷன் நடந்திட்டிருக்கு... ரகுவோட அம்மா வேற ரொம்ப உடைஞ்சி போயிருக்காங்க... எனக்கே என்ன செய்றதுன்னு புரியல"
அவன் குரலில் இருந்த தைரியமற்ற நிலையை உணர்ந்தவள் மொத்தமாய் உடைந்து போனாள்.
அவள் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டிருக்க "அழாதே தமிழ்... ப்ளீஸ்... என்னால தாங்க முடியாது... நீ இப்படி உடைஞ்சி போயிடுவன்னுதான் நான் உன்கிட்ட சொல்லாம கூட புறப்பட்டு வந்துட்டேன்?!!" என்று அவன் உரைத்து கொண்டிருக்க அவள் அமைதியானாள்.
அவள் குரல் மீண்டும் சிரமப்பட்டு வெளிவந்தது.
"ரகுவிற்கு எதுவும் ஆகதில்ல வீர்..." என்று கேட்க,
அவன் அழுத்தமாக "கண்டிப்பா ரகுவிற்கு ஒண்ணும் ஆகாது... நீ தைரியமா இரு" என்றான்.
அவள் மெல்ல தன்னை தேற்றி கொண்டவள்
"வீர்..." என்று அழைத்தாள்.
"சொல்லு தமிழ்"
"ரகுவோட அம்மா ரொம்ப
பாவம் வீர்... அவனை தவிர வேற யாரும் அவங்களுக்கு இப்போ ஸப்போர்ட் கிடையாது...... நீங்க கொஞ்சம் பக்கத்திலிருந்து" என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே அவன் தீர்க்கமாக
"புரியுது தமிழ்... நான் அவங்க கூட இருந்து பார்த்துக்கிறேன்... " என்றான்.
"சரி... நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திடுறேன்" என்றாள்.
வீரேந்திரன் யோசனையோடு "அது சரி... உனக்கெப்படி ரகுவிற்கு ஆக்ஸிடென்ட்னு தெரியும்" என்று கேட்டான்.
"தெரியும் வீர்" என்றாள்.
"அதான் எப்படி?... அதுவும் இந்த ஹாஸ்பெட்டில்னு எப்படி தெரியும் உனக்கு"
"ரகுவுக்கு கால் பண்ண போது... லைன் போகல... அதான் நான் ஸ்டேஷனுக்கு கால் பண்ணேன்... அங்கே விசாரிச்சி போதுதான்... இப்படின்னு தெரிஞ்சிக்கிட்டேன்" என்றாள்.
கடிதத்தை பற்றி மட்டும் அவள் உரைக்க மறைத்திருக்க வீரேந்திரனுக்கு அவள் சொல்வதில் முழு உண்மை இல்லையோ என்று தோன்றிற்று.
"நீ என்னை காதலிக்கிற... பட் என்னை நம்பவே மாட்டிற இல்ல" என்று மனதில் உதித்த எண்ணத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டாள்.
அவன் சொன்னதை கேட்டு அவள் அமைதியாய் இருக்க அவனே மேலும் "என்னை ஏசிபியா பார்க்காதே தமிழ்... உன் ஹஸ்பெண்ட்டா பாரு... அட்லீஸ்ட் ஒரு வெல் விஷ்ஷரா பாரு... எந்த விஷயமா இருந்தாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லிடு" என்றான்.
அவன் பேசிய விதத்திலேயே அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவள் நிதானித்து"சொல்றேன் வீர்... ஆனா போஃன்ல வேண்டாம்... நான் எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றேன்... நீங்க ஆப்ரேஷன் முடிஞ்சதும் எனக்கு மறக்காம கால் பண்ணுங்க" என்றாள்.
அவனும் ஆமோதித்து அழைப்பை துண்டித்தான்.
மனமெல்லாம் அவள் என்ன சொல்வாளோ என கவலையில் ஆழ்ந்துவிட அந்த சமயத்தில் ஆப்ரேஷன் முடிவுற்று டாக்டர் அவனை அழைத்திருந்தார்.
அவர் வீரேந்திரனிடம் "நத்திங் டூ வொர்ரி... ஹீ இஸ் ஆல்ரைட் நவ்... இப்போதைக்கு ஐசியூல வைச்சிருக்கோம்... நாளைக்கு இல்ல ஈவனிங் கூட நார்மல் வார்டுக்கு மாத்திரலாம்" என்றார்.
அவனின் மனதின் பாரம் இறங்கியதாக பெருமூச்சுவிட்டவன் உடனே தமிழுக்கும் அழைத்து இந்த செய்தியை சொல்லியிருந்தான்.
ரகு ஐசியூவில் மயக்க நிலையில் தலையில் கட்டுப் போட்ட நிலையில் இருக்க உடம்பெல்லாம் ஆங்காங்கே காயங்களும் கட்டுக்களும் போடப்பட்டிருந்தது.
சுவாசகுழாய் வேறு பொருத்தப்பட்டிருக்க இந்த நிலையில் தன் மகனை பார்த்த ரகுவின் தாய் அழுது அரற்ற ஆரம்பித்தார். அத்தனை நேரம் இருந்த தைரியமெல்லாம் நொறுங்கி போயிருந்தது அவருக்கு.
வீரேந்திரன் அவரை தேற்றி நிலைமையை விளக்கி புரிய வைத்தான். மெல்ல மெல்ல அவரும் அவனின் நம்பிக்கையான வார்த்தைகளால் தன் துக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்தார்.
வீரேந்திரனுக்கு மாறி மாறி அழைப்புகள் வந்து வேலைகள் குவிந்துகிடக்க, ரகுவின் அம்மாவை துணையாக ஸ்டேஷனிலிருந்து ஒரு பெண் கான்ஸ்ட்டெபிளை வரவழைத்து விட்டுச்சென்றான்.
அவன் ஸ்டேஷனுக்கு சென்று குளித்து முடித்து வேலையில் ஈடுப்பட்டாலும் மனம் ஒரு பக்கம் பாஃரன்ஸிக்(forensic) ரிப்போர்ட் பற்றியே நினைத்து கொண்டிருந்தது.
அவனால் முழுமையாய் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அவள் மருத்துவமனைக்கு வந்திருப்பாளா என்ற எதிர்பார்ப்பும் காத்திருப்பும் உள்ளுக்குள் இருந்தது.
மாலை நேரம் எட்டியிருந்த நிலையில் மருத்துவமனையில் ரகுவை நார்மல் வார்டுக்கு மாற்றியிருந்தனர்.
அவன் கண்விழித்தாலும் சுயநினைவு பெறமுடியாமல் ஒருவித மௌனநிலையிலேயே இருந்தான். அவன் உடல் எந்தவித செயலையும் செய்ய முடியாதபடி கட்டுண்டு கிடந்தது.
அவன் அம்மாவின் குரலும் கண்ணீரையும் அவனால் உணர முடிந்ததே ஒழிய ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் தவிப்புற்றவன் தன்னிலை மறந்து மீண்டும் மயக்கநிலைக்கு சென்றிருந்தான்.
ஸ்டேஷனிலிருந்து வீரேந்திரனுக்கு அவன் வார்டுக்கு மாற்றப்பட்ட தகவலை அங்கிருந்த கான்ஸ்டபிள் உரைக்க, அவன் புறப்பட்டு செல்ல யத்தனித்த போது எஸ். ஐ சண்முகம் அவன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த ரிப்போர்ட்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.
அதனை கையில் பெற்று கொண்ட மாத்திரத்தில் அவனுக்குள் ஒருவித படபடப்பும் நடுக்கமும் தொற்றி கொண்டது.
முதல் முறையாய் தன் யூகம் பொய்யாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே அந்த ரிப்போர்ட்ஸை பிரித்து பார்க்கலானான்.
*****
ரகுவின் மூளை தன்னை மீட்டு கொள்ள போராட அப்போது அறைமயக்க நிலையிலேயே நிகழ்ந்த அந்த கோரமான விபத்து அவன் நினைவுக்கு வந்தது.
ஒரு பெரிய வண்டி கட்டுபாடில்லாத வேகத்தோடு வந்து தன் வாகனத்தில் மோதிய மாத்திரத்தில் தான் தூக்கியறியப்பட்டது நினைவுக்குவர மரணத்தை தொட்ட உணர்வு அவனுக்கு.
அது நிச்சயம் எதிர்பாராத விபத்தல்ல என்று யோசித்திருந்தவனுக்கு அவன் கரத்தில் ஒருவித சில்லிட்ட உணர்வு.
அந்த நிலையிலும் அவன் செவிகள் நன்றாகவே வேலை செய்தன.
"ஐ லவ் யூ ரகு... " என்ற வார்த்தை ஒலிக்க இப்படி யார் தன்னிடம் சொல்ல முடியும். கனவாக இருக்க கூடுமோ என்று எண்ணி
அவன் சிரமப்பட்டு விழித்து கொள்ள முயற்சி செய்தான்.
அவன் விழிகள் விரிந்தாலும் காட்சிகள் மங்கியிருக்க ரொம்பவும் அக்கறையாக ஒரு குரல் "உங்களுக்கு ஒண்ணும் இல்ல ரகு... நல்லாயிடும்" என்று அவனுக்கு நம்பிக்கையூட்டியது.
ஆழமாக யோசித்தால் பரிட்சையமான குரல் போலவும் இருந்தது. பரிட்சையமாகத குரல் போலவும் இருக்கிறதே என்று எண்ணியவனின் விழிகள் இப்போது தெளிவாய் பார்க்க முடிந்திருந்தது.