Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
சுரங்க பாதை
வீரேந்திரன் அந்த கடைசி ஓவியம் என்னவாக இருக்கும் என்று கிட்டதட்ட யூகித்து விட்டான்.
அது நிச்சயம் அந்த அரண்மனையாகதான் இருக்க கூடும்.
அந்த மூன்று ஓவியங்களும் ஏதோ ஒரு விதத்தில் தமிழின் குடும்பத்தின் பாரம்பரியமான வரலாறையே குறி வைக்கிறது.
அப்படி இருக்க தர்மா முக்கியத்துவம் வாய்ந்த அந்த அரண்மனையை வரையாமல் விட்டிருக்க முடியுமா... ?
அப்போதுதான் தமிழ் அரண்மனையில்
இருப்பாளோ என்ற எண்ணம் தோன்ற, இதுவரையிலும் அவன் யூகம் தவறானதே இல்லை.
இம்முறையும் தவறாகாது என்று தோன்ற, உடனடியாக ஸ்டேஷனுக்கு புறப்பட்டவன், அங்கிருந்து காவலளிகள் சிலரோடு புறப்பட திட்டமிட்டான்.
அதோடு அல்லாது சிம்மவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி உடனடியாக அரண்மனைக்கு போய் சோதிக்க பணித்தான்.
வீரேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்தில்,விஷ்வா ஸ்டேஷனை வந்தடைந்தான்.
வீரேந்திரன் இருந்த அவசரத்தில் அவனிடம் பேசும் நிலையிலும் இல்லையென்பதால் அவனை
தவிர்த்துவிட்டு அவன் செல்லவும் "ஹெலோ ஏசிபி சார்... உங்களுக்கு ஆயிரம் முக்கியமான விஷயங்கள் இருக்கலாம்.. பட் எனக்கு என் மனைவிதான் முக்கியம்... " என்றான்.
தான் நிற்கும் இடத்தை பற்றியோ, பேசி கொண்டிருக்கும் நபரின் பதவி பற்றியோ கவலை கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
இப்போது ஆதி மட்டுமே அவன் மனதில் நின்று கொண்டிருந்தாள்.
வீரேந்திரன் விஷ்வாவை யாரென்று அறிமுகமில்லாமலே கணித்துவிட, அந்த சமயத்தில் எஸ்ஐ சண்முகம் விஷ்வாவிடம் கடிந்து கொள்ள எண்ணிய போது வீரேந்திரன் தன் கண்ணசைவாலயே அவரை தடை செய்தான்.
விஷ்வா தன் கோபம் குறையாமல் "சொல்லுங்க ஏசிபி சார், என் வொய்ஃப் ஆதி பத்தி தகவல் தெரிஞ்சிதா? " என்றான்.
"ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு... அது விஷயமாதான் போயிட்டிருக்கேன்... நீங்க டென்ஷாகாதீங்க" என்று அமர்த்தலாகவே உரைத்தான்.
"டென்ஷாகாம எப்படி இருக்க முடியும்.... என்னால முடியாது... நானும் வர்றேன்"
"அதெல்லாம். ரிஸ்க்... நீங்க வர வேண்டாம்"
"என் மனைவி பிரச்சனையில இருக்கும் போது நான் என் பாதுகாப்பை பத்தி எல்லாம் கவலை பட முடியுமா... உயிர் போற ரிஸ்காவே இருந்தாலும் பரவாயில்லை" என்றான்.
அவனின் மனநிலையை வீரேந்திரனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் அவனை அழைத்து சென்று ஏதேனும் ஆபத்தில் அவன் சிக்கி கொண்டுவிட்டால்...
அதுவும் இத்தனை உணர்ச்சிவசப்படுபவனை உடன் அழைத்து செல்வது பெரும் பிரச்சனையாகிவிடலாம் என சிந்தித்த அடுத்த கணம் "சாரி... உங்களை கூட்டிட்டு போக முடியாது" என்று சொல்லி தவிர்த்தான்.
விஷ்வா விடாமல் "சரி எங்கன்னு சொல்லுங்க... நானே போய் பார்த்துக்கிறேன்... உங்களை மட்டுமே நம்பி என் மனைவிக்கு எதுவும் ஆகாதுன்னு என்னால குருட்டாம் போக்கில உட்கார்ந்திட்டிருக்க முடியாது" என்றதும் வீரேந்திரனுக்கு அதீத எரிச்சல் மூண்டது.
அதற்குள் எஸ்ஐ சண்முகம் விஷ்வாவை முறைத்தபடி "இத பாருங்க... பிரச்சனையில மாட்டிட்டு இருக்கிறது உங்க மனைவி மட்டுமில்லை... சாரோட மனைவியும்தான்... உங்களுக்கு இருக்கிற அதே டென்ஷனும் கவலையும் அவருக்கும் இருக்கு... அவங்களை கண்டிப்பிடிக்க சார் எவ்வளவு போராடிட்டிருக்காருன்னு தெரியாமா பேசாதீங்க" என்று உணர்வசப்பட்டு உரைக்க
"சண்முகம் போதும்..." என்று வீரேந்திரன் அவரை பேசவிடாமல் நிறுத்திவிட்டு "இத பாருங்க... என் மனைவின்னு இல்ல... யாரா இருந்தாலும் நான் இப்படிதான் போராடியிருப்பேன்... உங்க வொய்ஃப்க்கு எந்த ஆபத்தும் வராது... இரிடேட் பண்ணாம இங்கிருந்து கிளம்புங்க..." என்றான்.
விஷ்வா அப்போதும் தன் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதாக இல்லை.
அவன் கோபமாக "உங்க மனைவியையே உங்களால பாதுகாக்க முடியல... இதுல நீங்க ரொம்ப பொறுப்பா என் மனைவியை கண்டிபிடிச்சிருவங்களாக்கும்... " என்றதும் வீரேந்திரன் உச்சபட்ச கோபத்தை எட்டியவன் "ஹ்ம்ம்... இதே வார்த்தையை நான் உங்களை திருப்பி கேட்க முடியும்... மைன்ட் இட்" என்றான்.
அப்போது வீரேந்திரனுக்கு மண்டையில் உரைத்தது. இப்படி விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை சரியில்லை என்று எண்ணியவன், அத்தோடு தன் பேச்சை நிறுத்தி கொண்டான்.
விஷ்வாவை கையசைத்து வரச்சொல்லிவிட்டு போலீஸ் வாகனத்தில் ஏறிக் கொண்டான்.
விஷ்வாவை பொறுத்தவரை அவனுக்கு கோபம் வந்துவிட்டால் யோசிக்கும் திறனற்று போய்விடுவான்.
அப்படி இருப்பவனை சமாளிக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும் ஆதியால் மட்டுமே முடியும்.
இப்போது அவளுக்கு என்ன நேர்ந்துவிட்டதோ என்று நொடிக்கு நொடிக்கு பதட்டத்தில் தவித்து கொண்டிருப்பவன் எதை பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்றெல்லாம் அளந்து கொண்டிருப்பானா என்ன?
அந்தளவுக்கான பொறுமையும் அவனிடம் இல்லை.
அவர்கள் இருவரின் மனநிலையும் ஒரே நேர்கோட்டில் இருந்தாலும் இருவரும் இரு துருவங்களாகவே அமர்ந்திருந்தனர்.
வீரேந்திரன் விஷ்வாவின் புறம் திரும்பும் போதெல்லாம் கோபப் பார்வையை வீச, பதிலுக்கு விஷ்வாவும் கண்களாலயே கோபத்தை அனலாய் கக்கி கொண்டிருந்தான்.
இப்படியாக எதிர்புதிரமாய் அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, அவர்களின் மனைவிமார்கள் இருவரும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து வந்தனர்.
********
தமிழும் ஆதியும் தங்கள் முன்னதாக கடந்து சென்ற அந்த சிறு நிழல் என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டனர்.
ஆதி தமிழிடம் சன்னமான குரலில் "எலியா இருக்குமோ ?!" என்றாள்.
தமிழும் அப்படிதான் இருக்கும் என்று தலையசைத்தவள் பின் யோசனைகுறியோடு "அதெப்படி உள்ளே வந்திருக்கும்" என்றபடி ஆதியை நோக்க இருவருமே யோசிக்கலாயினர்.
இந்த அறையை விட்டு வெளியேறும் வழியாக இருக்குமா என்று எண்ணியவர்கள் தவழ்ந்த வாக்கில் அந்த உருவம் மறைந்த திசை நோக்கி சென்று பார்க்க அந்த இருளடர்ந்த அறையில் அவர்களால் எதையும் காண இயலவில்லை.
ஆதலால் இருவரும் தங்கள் கரங்களால் தொட்டு தடவியபடி அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆதியின் கரத்தில் சட்டென சமதளம் பள்ளமாய் மாறி கீழிறுங்குவதாய் உணர்ந்தாள்.
அவள் சுதாரித்து கொண்டு "தமிழ்" என்று தன் தோழியை அழைக்கவும்
"என்ன ?... ஏதாவது வழி கிடைச்சுதா?"
ஆதி அவள் கரத்தை பிடித்து அந்த இடத்தில் வைக்க, அவர்கள் தொட்டு பார்த்த இடத்தில் ஒரு கம்பளவிரிப்பு இருந்தது.
அதன் ஒரு பக்கம் எலி தான் வந்து போக வசிதியாய் வட்டமாய் கிழித்து வைத்திருந்தது.
ஆதி யோசனையோடு "இது ஏதாச்சும் சுரங்கமா இருக்குமா?" என்று மெலிதாய் கேட்கவும் தமிழ் குழப்பமடைந்தபடி "இந்த கார்பெட் எடுத்து பார்ப்போம்" என்று சொல்லியபடி அவர்கள் பள்ளமென உணர்ந்து இடத்தில் மறைக்கப்பட்ட கம்பளவிரிப்பை விலக்கி பார்க்க யத்தனித்தனர்.
இருவருமே அந்த விரிப்பை சுருட்டவும், அதிலிருந்து பறந்து தூசியால் தும்ம ஆரம்பித்தனர்.
ரொம்பவும் சிரமப்பட்டு மூக்கை பொத்திக் கொண்டாலும், அவர்களால் அதனை கட்டுபடுத்துவது இயலாத காரியமாய் இருந்தது.
அந்த சமயத்தில் வெளியே காலடி சத்தம் பரபரப்பாய் கேட்கவும் இருவரும் அமைதியடைந்தனர்.
மீண்டும் வெளியே இருந்து ஒரு குரல் ஆக்ரோஷமாய் "இங்கதான்டா அவளுங்க இருக்காங்க... தேடுங்கடா" என்று அதிகாரமாய் சொன்னது.
இன்னும் சில நொடிகள் இங்கிருந்தால் நிச்சயம் மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணம் இருவருக்கும் உதித்தது.
தமிழ் மெலிதாக "போச்சு... அவனுங்க கிட்ட மாட்டினோம்... செத்தோம்" என்று சொல்லவும் ஆதி பொறுமையாக "பேசாம... இந்த வழியில நாம எஸ்கேப் ஆக முடியுமான்னு பார்க்கலாமே" என்று உரைத்தாள்.
ஆதி சுலபமாய் சொல்லிவிட்டாலும் அது அத்தனை சுலபமான காரியம் அல்லவே !
ஆதி சொன்னதோடு நிற்காமல் அந்த பள்ளத்தில் மெல்ல தன் கால்களை இறக்க, தமிழ் அச்சத்தோடு அவள் கரத்தை இறுக்க பற்றி கொண்டு "பாத்து பத்திரம்" என்றாள்.
ஆதி கால்கள் அந்தரத்தில் தொங்க மெல்ல சற்று ஆழமாய் இறங்கவும் தரைத்தட்டுப்பட்டது.
அது ஏதோ படிகெட்டை போல கீழே இறங்க "இது கண்டிப்பா சுரங்க பாதைதான்" என்று உறுதிபடுத்தினாள்.
தமிழ் ஆழமாய் சிந்தித்தவள் "எனக்கு இப்ப ஞாபகம் வருது... தாத்தா ஒரு தடவை சொல்லி இருக்காரு... அரண்மனையில இருந்து ஒரு சுரங்க பாதை வெளியே இருக்கிற தாமரை மண்டபத்தில முடியும்னு... மே பீ இது அந்த வழியா இருக்கலாம்" என்றாள்.
"ரியலி...இந்த மேட்டர் செம இன்ட்டிரஸ்டிங்கா இருக்கு தமிழ்"
"பட் இந்த வழி சேஃப் இல்ல ஆதி"
"என்ன மாறி ஆபத்து இருக்கும்னு சொல்ல வர்ற ?!"
"ஏதாச்சும் விஷவாயு தாக்கினா... இல்ல ஏதாச்சும் விஷ ஜந்து தாக்கினா" என்றதும் ஆதிக்கு சிரிப்பு வந்தது.
"விஷவாயு எல்லாம் சேன்ஸ் இல்ல... எலி சேஃப்பா வந்து போகுது இல்ல... அதுவும் இல்லாம வெளியே இருக்கிற அந்த ஜந்துங்களை விடவா மோசமான ஜந்துக்கள் உள்ள இருந்திர போது... " என்றாள் ஆதி.
"நீ சொல்றதெல்லாம் சரி... பட் நம்மக்கிட்ட லைட் கூட இல்லையே"
"ஹ்ம்ம்ம்.... கொஞ்ச நேரத்துக்கு நம்ம பிளைன்டா (Blind )மாறிட்டோம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்"
இருவருக்கும் அவர்கள் செய்யும் காரியத்தின் விபரீதம் புரிந்தாலும் இப்போதைக்கு அந்த சுரங்கத்தை தவிர தப்பிக்க அவர்களுக்கு வேறுவழியில்லை.
இனி அந்த அறையில் இருப்பதை விட அந்த சுரங்கத்திலேயே இறங்கி பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தனர்.
ஆதி மெல்ல அந்த சுரங்கத்திற்குள் கீழிறங்க, அவளை பின்தொடர்ந்து தமிழும் இறங்க யத்தனிக்கும் போது வெளியே இருந்து ஒரு குரல் மிரட்டலாய் ஒலித்தது.
"எங்களுக்கு தெரியும்டி... நீங்க இங்கதான் எங்கயோ ஒலிஞ்சிட்டிருக்கீங்க... இப்ப நீங்களா வெளியே வரல... அப்புறம் நடக்க போற விபரீதத்தை யாராலயும் தடுக்க முடியாது" என்றான்.
தமிழ் அவன் மிரட்டலை பொருட்படுத்தாமல் அடியெடுத்து கீழே வைக்க, மீண்டும் அந்த குரல் "ஏ செந்தமிழ்... நீ இப்போ வரல இந்த அரண்மனை இருந்த தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் போயிடும்" என்று சொன்னதும் தமிழ் அதற்கு மேல் அடியெடுத்து வைக்காமல் அதிர்ந்தபடி நிற்க
வீரேந்திரன் அந்த கடைசி ஓவியம் என்னவாக இருக்கும் என்று கிட்டதட்ட யூகித்து விட்டான்.
அது நிச்சயம் அந்த அரண்மனையாகதான் இருக்க கூடும்.
அந்த மூன்று ஓவியங்களும் ஏதோ ஒரு விதத்தில் தமிழின் குடும்பத்தின் பாரம்பரியமான வரலாறையே குறி வைக்கிறது.
அப்படி இருக்க தர்மா முக்கியத்துவம் வாய்ந்த அந்த அரண்மனையை வரையாமல் விட்டிருக்க முடியுமா... ?
அப்போதுதான் தமிழ் அரண்மனையில்
இருப்பாளோ என்ற எண்ணம் தோன்ற, இதுவரையிலும் அவன் யூகம் தவறானதே இல்லை.
இம்முறையும் தவறாகாது என்று தோன்ற, உடனடியாக ஸ்டேஷனுக்கு புறப்பட்டவன், அங்கிருந்து காவலளிகள் சிலரோடு புறப்பட திட்டமிட்டான்.
அதோடு அல்லாது சிம்மவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி உடனடியாக அரண்மனைக்கு போய் சோதிக்க பணித்தான்.
வீரேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்தில்,விஷ்வா ஸ்டேஷனை வந்தடைந்தான்.
வீரேந்திரன் இருந்த அவசரத்தில் அவனிடம் பேசும் நிலையிலும் இல்லையென்பதால் அவனை
தவிர்த்துவிட்டு அவன் செல்லவும் "ஹெலோ ஏசிபி சார்... உங்களுக்கு ஆயிரம் முக்கியமான விஷயங்கள் இருக்கலாம்.. பட் எனக்கு என் மனைவிதான் முக்கியம்... " என்றான்.
தான் நிற்கும் இடத்தை பற்றியோ, பேசி கொண்டிருக்கும் நபரின் பதவி பற்றியோ கவலை கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
இப்போது ஆதி மட்டுமே அவன் மனதில் நின்று கொண்டிருந்தாள்.
வீரேந்திரன் விஷ்வாவை யாரென்று அறிமுகமில்லாமலே கணித்துவிட, அந்த சமயத்தில் எஸ்ஐ சண்முகம் விஷ்வாவிடம் கடிந்து கொள்ள எண்ணிய போது வீரேந்திரன் தன் கண்ணசைவாலயே அவரை தடை செய்தான்.
விஷ்வா தன் கோபம் குறையாமல் "சொல்லுங்க ஏசிபி சார், என் வொய்ஃப் ஆதி பத்தி தகவல் தெரிஞ்சிதா? " என்றான்.
"ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு... அது விஷயமாதான் போயிட்டிருக்கேன்... நீங்க டென்ஷாகாதீங்க" என்று அமர்த்தலாகவே உரைத்தான்.
"டென்ஷாகாம எப்படி இருக்க முடியும்.... என்னால முடியாது... நானும் வர்றேன்"
"அதெல்லாம். ரிஸ்க்... நீங்க வர வேண்டாம்"
"என் மனைவி பிரச்சனையில இருக்கும் போது நான் என் பாதுகாப்பை பத்தி எல்லாம் கவலை பட முடியுமா... உயிர் போற ரிஸ்காவே இருந்தாலும் பரவாயில்லை" என்றான்.
அவனின் மனநிலையை வீரேந்திரனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் அவனை அழைத்து சென்று ஏதேனும் ஆபத்தில் அவன் சிக்கி கொண்டுவிட்டால்...
அதுவும் இத்தனை உணர்ச்சிவசப்படுபவனை உடன் அழைத்து செல்வது பெரும் பிரச்சனையாகிவிடலாம் என சிந்தித்த அடுத்த கணம் "சாரி... உங்களை கூட்டிட்டு போக முடியாது" என்று சொல்லி தவிர்த்தான்.
விஷ்வா விடாமல் "சரி எங்கன்னு சொல்லுங்க... நானே போய் பார்த்துக்கிறேன்... உங்களை மட்டுமே நம்பி என் மனைவிக்கு எதுவும் ஆகாதுன்னு என்னால குருட்டாம் போக்கில உட்கார்ந்திட்டிருக்க முடியாது" என்றதும் வீரேந்திரனுக்கு அதீத எரிச்சல் மூண்டது.
அதற்குள் எஸ்ஐ சண்முகம் விஷ்வாவை முறைத்தபடி "இத பாருங்க... பிரச்சனையில மாட்டிட்டு இருக்கிறது உங்க மனைவி மட்டுமில்லை... சாரோட மனைவியும்தான்... உங்களுக்கு இருக்கிற அதே டென்ஷனும் கவலையும் அவருக்கும் இருக்கு... அவங்களை கண்டிப்பிடிக்க சார் எவ்வளவு போராடிட்டிருக்காருன்னு தெரியாமா பேசாதீங்க" என்று உணர்வசப்பட்டு உரைக்க
"சண்முகம் போதும்..." என்று வீரேந்திரன் அவரை பேசவிடாமல் நிறுத்திவிட்டு "இத பாருங்க... என் மனைவின்னு இல்ல... யாரா இருந்தாலும் நான் இப்படிதான் போராடியிருப்பேன்... உங்க வொய்ஃப்க்கு எந்த ஆபத்தும் வராது... இரிடேட் பண்ணாம இங்கிருந்து கிளம்புங்க..." என்றான்.
விஷ்வா அப்போதும் தன் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதாக இல்லை.
அவன் கோபமாக "உங்க மனைவியையே உங்களால பாதுகாக்க முடியல... இதுல நீங்க ரொம்ப பொறுப்பா என் மனைவியை கண்டிபிடிச்சிருவங்களாக்கும்... " என்றதும் வீரேந்திரன் உச்சபட்ச கோபத்தை எட்டியவன் "ஹ்ம்ம்... இதே வார்த்தையை நான் உங்களை திருப்பி கேட்க முடியும்... மைன்ட் இட்" என்றான்.
அப்போது வீரேந்திரனுக்கு மண்டையில் உரைத்தது. இப்படி விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை சரியில்லை என்று எண்ணியவன், அத்தோடு தன் பேச்சை நிறுத்தி கொண்டான்.
விஷ்வாவை கையசைத்து வரச்சொல்லிவிட்டு போலீஸ் வாகனத்தில் ஏறிக் கொண்டான்.
விஷ்வாவை பொறுத்தவரை அவனுக்கு கோபம் வந்துவிட்டால் யோசிக்கும் திறனற்று போய்விடுவான்.
அப்படி இருப்பவனை சமாளிக்கவும், கட்டுக்குள் கொண்டு வரவும் ஆதியால் மட்டுமே முடியும்.
இப்போது அவளுக்கு என்ன நேர்ந்துவிட்டதோ என்று நொடிக்கு நொடிக்கு பதட்டத்தில் தவித்து கொண்டிருப்பவன் எதை பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்றெல்லாம் அளந்து கொண்டிருப்பானா என்ன?
அந்தளவுக்கான பொறுமையும் அவனிடம் இல்லை.
அவர்கள் இருவரின் மனநிலையும் ஒரே நேர்கோட்டில் இருந்தாலும் இருவரும் இரு துருவங்களாகவே அமர்ந்திருந்தனர்.
வீரேந்திரன் விஷ்வாவின் புறம் திரும்பும் போதெல்லாம் கோபப் பார்வையை வீச, பதிலுக்கு விஷ்வாவும் கண்களாலயே கோபத்தை அனலாய் கக்கி கொண்டிருந்தான்.
இப்படியாக எதிர்புதிரமாய் அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, அவர்களின் மனைவிமார்கள் இருவரும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து வந்தனர்.
********
தமிழும் ஆதியும் தங்கள் முன்னதாக கடந்து சென்ற அந்த சிறு நிழல் என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டனர்.
ஆதி தமிழிடம் சன்னமான குரலில் "எலியா இருக்குமோ ?!" என்றாள்.
தமிழும் அப்படிதான் இருக்கும் என்று தலையசைத்தவள் பின் யோசனைகுறியோடு "அதெப்படி உள்ளே வந்திருக்கும்" என்றபடி ஆதியை நோக்க இருவருமே யோசிக்கலாயினர்.
இந்த அறையை விட்டு வெளியேறும் வழியாக இருக்குமா என்று எண்ணியவர்கள் தவழ்ந்த வாக்கில் அந்த உருவம் மறைந்த திசை நோக்கி சென்று பார்க்க அந்த இருளடர்ந்த அறையில் அவர்களால் எதையும் காண இயலவில்லை.
ஆதலால் இருவரும் தங்கள் கரங்களால் தொட்டு தடவியபடி அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆதியின் கரத்தில் சட்டென சமதளம் பள்ளமாய் மாறி கீழிறுங்குவதாய் உணர்ந்தாள்.
அவள் சுதாரித்து கொண்டு "தமிழ்" என்று தன் தோழியை அழைக்கவும்
"என்ன ?... ஏதாவது வழி கிடைச்சுதா?"
ஆதி அவள் கரத்தை பிடித்து அந்த இடத்தில் வைக்க, அவர்கள் தொட்டு பார்த்த இடத்தில் ஒரு கம்பளவிரிப்பு இருந்தது.
அதன் ஒரு பக்கம் எலி தான் வந்து போக வசிதியாய் வட்டமாய் கிழித்து வைத்திருந்தது.
ஆதி யோசனையோடு "இது ஏதாச்சும் சுரங்கமா இருக்குமா?" என்று மெலிதாய் கேட்கவும் தமிழ் குழப்பமடைந்தபடி "இந்த கார்பெட் எடுத்து பார்ப்போம்" என்று சொல்லியபடி அவர்கள் பள்ளமென உணர்ந்து இடத்தில் மறைக்கப்பட்ட கம்பளவிரிப்பை விலக்கி பார்க்க யத்தனித்தனர்.
இருவருமே அந்த விரிப்பை சுருட்டவும், அதிலிருந்து பறந்து தூசியால் தும்ம ஆரம்பித்தனர்.
ரொம்பவும் சிரமப்பட்டு மூக்கை பொத்திக் கொண்டாலும், அவர்களால் அதனை கட்டுபடுத்துவது இயலாத காரியமாய் இருந்தது.
அந்த சமயத்தில் வெளியே காலடி சத்தம் பரபரப்பாய் கேட்கவும் இருவரும் அமைதியடைந்தனர்.
மீண்டும் வெளியே இருந்து ஒரு குரல் ஆக்ரோஷமாய் "இங்கதான்டா அவளுங்க இருக்காங்க... தேடுங்கடா" என்று அதிகாரமாய் சொன்னது.
இன்னும் சில நொடிகள் இங்கிருந்தால் நிச்சயம் மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணம் இருவருக்கும் உதித்தது.
தமிழ் மெலிதாக "போச்சு... அவனுங்க கிட்ட மாட்டினோம்... செத்தோம்" என்று சொல்லவும் ஆதி பொறுமையாக "பேசாம... இந்த வழியில நாம எஸ்கேப் ஆக முடியுமான்னு பார்க்கலாமே" என்று உரைத்தாள்.
ஆதி சுலபமாய் சொல்லிவிட்டாலும் அது அத்தனை சுலபமான காரியம் அல்லவே !
ஆதி சொன்னதோடு நிற்காமல் அந்த பள்ளத்தில் மெல்ல தன் கால்களை இறக்க, தமிழ் அச்சத்தோடு அவள் கரத்தை இறுக்க பற்றி கொண்டு "பாத்து பத்திரம்" என்றாள்.
ஆதி கால்கள் அந்தரத்தில் தொங்க மெல்ல சற்று ஆழமாய் இறங்கவும் தரைத்தட்டுப்பட்டது.
அது ஏதோ படிகெட்டை போல கீழே இறங்க "இது கண்டிப்பா சுரங்க பாதைதான்" என்று உறுதிபடுத்தினாள்.
தமிழ் ஆழமாய் சிந்தித்தவள் "எனக்கு இப்ப ஞாபகம் வருது... தாத்தா ஒரு தடவை சொல்லி இருக்காரு... அரண்மனையில இருந்து ஒரு சுரங்க பாதை வெளியே இருக்கிற தாமரை மண்டபத்தில முடியும்னு... மே பீ இது அந்த வழியா இருக்கலாம்" என்றாள்.
"ரியலி...இந்த மேட்டர் செம இன்ட்டிரஸ்டிங்கா இருக்கு தமிழ்"
"பட் இந்த வழி சேஃப் இல்ல ஆதி"
"என்ன மாறி ஆபத்து இருக்கும்னு சொல்ல வர்ற ?!"
"ஏதாச்சும் விஷவாயு தாக்கினா... இல்ல ஏதாச்சும் விஷ ஜந்து தாக்கினா" என்றதும் ஆதிக்கு சிரிப்பு வந்தது.
"விஷவாயு எல்லாம் சேன்ஸ் இல்ல... எலி சேஃப்பா வந்து போகுது இல்ல... அதுவும் இல்லாம வெளியே இருக்கிற அந்த ஜந்துங்களை விடவா மோசமான ஜந்துக்கள் உள்ள இருந்திர போது... " என்றாள் ஆதி.
"நீ சொல்றதெல்லாம் சரி... பட் நம்மக்கிட்ட லைட் கூட இல்லையே"
"ஹ்ம்ம்ம்.... கொஞ்ச நேரத்துக்கு நம்ம பிளைன்டா (Blind )மாறிட்டோம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்"
இருவருக்கும் அவர்கள் செய்யும் காரியத்தின் விபரீதம் புரிந்தாலும் இப்போதைக்கு அந்த சுரங்கத்தை தவிர தப்பிக்க அவர்களுக்கு வேறுவழியில்லை.
இனி அந்த அறையில் இருப்பதை விட அந்த சுரங்கத்திலேயே இறங்கி பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தனர்.
ஆதி மெல்ல அந்த சுரங்கத்திற்குள் கீழிறங்க, அவளை பின்தொடர்ந்து தமிழும் இறங்க யத்தனிக்கும் போது வெளியே இருந்து ஒரு குரல் மிரட்டலாய் ஒலித்தது.
"எங்களுக்கு தெரியும்டி... நீங்க இங்கதான் எங்கயோ ஒலிஞ்சிட்டிருக்கீங்க... இப்ப நீங்களா வெளியே வரல... அப்புறம் நடக்க போற விபரீதத்தை யாராலயும் தடுக்க முடியாது" என்றான்.
தமிழ் அவன் மிரட்டலை பொருட்படுத்தாமல் அடியெடுத்து கீழே வைக்க, மீண்டும் அந்த குரல் "ஏ செந்தமிழ்... நீ இப்போ வரல இந்த அரண்மனை இருந்த தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் போயிடும்" என்று சொன்னதும் தமிழ் அதற்கு மேல் அடியெடுத்து வைக்காமல் அதிர்ந்தபடி நிற்க
Last edited: