• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi (spl episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Indujaprabhu

நாட்டாமை
Joined
May 17, 2018
Messages
61
Reaction score
62
Location
Kanyakumari
இருவரும் ஒன்றாய் கரத்தை பிடித்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவர்கள் நேராய் தமிழ் முன்னிலையில் சென்று நிற்க தமிழச்சி தன் தாயின் கரத்தை பற்றி "சாரி தமிழச்சி... நான் இனிமே கிளாஸ்ல யார்கிட்டயும் சண்டை போட மாட்டேன்... ப்ராமிஸ்" என்று உறுதியளித்தாள்.



எல்லோருக்குமே தந்தை மகளுக்கான அந்த உறவின் மீது அத்தனை வியப்பு! ஆனால் தமிழுக்கு அதீத கோபமே தலைத்தூக்கியது.


மகளை பார்த்தவள் "எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு மனிஷங்களாவே தெரியிலயா... அதென்னடி உங்க அப்பா சொன்னா மட்டும் கேட்கிற... ?!" என்று வினவினாள்.

தமிழச்சி தன் அப்பாவின் மீது சாய்ந்து அணைத்தபடி "ஏன்னா அவர்தானே என்னோட ஹீரோ... " என்று சொல்ல வீரேந்திரன் பெருமிதப்பட்டு மனைவியினை நோக்கிய போது அவள் உதடுக்குள்ளேயே முனகிக் கொண்டாள்.

அதனை கவனித்தவன் மகள் முன்னிலையில் மனைவியை எதையும் கேட்க விரும்பாமல் அமைதி காத்தான்.

உணவருந்த மேஜை மீது அமர்ந்திருந்த வீர் தமிழை பார்க்க, அவனிடம் பாரா முகமாகவே பரிமாறினாள்.

உணவு முடிந்த பின் தமிழச்சி தன் தாத்தா பாட்டியுடன் உறங்கச் சென்றுவிட, சிம்மபூபதி தன் பெற்றோர்களின் அறையருகில் உள்ள ஒரு தனி அறையில் படுத்துக் கொண்டான்.

வீரேந்திரன் அறைக்குள் வந்ததும் மனைவி சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்தியபடி

"ஏ தமிழச்சி.. பாப்பா என்னை ஹீரோன்னு சொன்ன போது நீ ஏதோ முனகினியே... என்னது?" என்று கேட்டான்.

அவள் அவனை அலட்சியமாய் பார்த்துவிட்டுஅறையிலிருந்த டீவியை ஆன் செய்து சௌகர்யமாய் அமர்ந்து கொண்டு பார்க்க

"திமிரா... என்ன சொன்னேன்னு சொல்லு ?" என்று கேட்டு ரிமோட்டை பறித்தான்,

"இப்ப என்ன சொன்னன்னு கண்டிப்பா தெரியனுமா ?" என்று எரிச்சலாய் பார்த்தாள்.

"ஆமாம்"

"அவளுக்கு நீங்க ஹீரோ... ஆனா எனக்கு நீங்க வில்லன்னு சொன்னேன்... போதுமா ?"

அந்த வார்த்தைகள் அவனை இன்னும் கோப்படுத்த "இவ்வளவு வருஷமாச்சு... இருந்தும் உன் கோபமும் திமிரும் இன்னமும் மாறவே இல்லயில்ல"

"நீங்க அப்படியே மாறிட்டீங்களாக்கும்" என்று சொன்னபடியே வெடுக்கென ரிமோட்டை அவனிடமிருந்த வாங்கினாள்.

அவன் மீண்டும் கோபமாக அந்த டீவியை அணைத்தான்.

தமிழ் வெறுப்போடு "உங்க பொண்ணுக்கு மட்டும் எல்லா சுதந்திரமும் உண்டு... எனக்கு இங்க டிவி பார்க்க கூட உரிமையில்லையா ?" என்றாள்.

இந்த கேள்வியை கேட்டதும் பதிலேதும் பேசாமல் ரிமோர்ட்டை தூக்கியெறிந்துவிட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ஊரே வேடிக்கை பார்க்க சண்டை போட்டிருந்தாலும்,.குழந்தைகள் முன்னிலையில் அந்த தவறை செய்வதில்லை என உறுதி பூண்டிருந்தனர்.

வெளியே அவன் எது சொன்னாலும் விருப்பமில்லாவிடிலும் கேட்டுவிடுவது போல அவள் தலையசைத்தாலும், அறைக்குள் வந்த மாத்திரத்தில் தான் சேகரித்த மொத்த கோபத்தையும் ஏதோ ஓரு விதத்தில் காட்டுவாள்.

இப்போதைக்கு அவள் வெறப்பை காண்பிக்க ஒரு வழி அந்த தொலைக்காட்சி.

அவளின் மனமும் அந்த தொலைக்காட்சி நிகழ்வுகளில் லயிக்கவில்லை.

எனினும் மகள் விஷயத்தில் தன் கணவன் ரொம்பவும் செல்லம் தந்து கெடுக்கிறான் என்றும், ஏன் தனக்கே அவளை கண்டிக்கும் உரிமையை தரமாட்டேன் என்கிறான் என்றும் ஒரு தாயாக எழுந்த ஆதங்கம்தான் அவளை அவனிடம் அப்படி கோபப்பட வைத்தது.

இப்படி யோசித்திருக்கும் போதுதான் அந்த டிவி செய்தி ஒளிப்பரப்பானது.

யதச்சையாகதான் கவனித்தாள்.

அவள் பார்த்தது உண்மைதானா ?

அவசர அவசரமாய் அருகிலிருந்த கணவனை உலுக்கியபடி எழுப்பினாள்.

"வீர்ர்ர்ர்ர்" என்று அவள் சத்தமிட சலிப்போடு எழுந்தவன் "தூங்கின பிறகுதான் கத்தி என் உயிரை எடுப்ப, இப்போ முழிச்சிட்டிருக்கும் போதேவா" என்று கோபமாய் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

டிவியின் மீதிருந்த பார்வையை எடுக்காமலே அவனிடம் அந்த காட்சியை காண்பிக்க அவனும் அதனை நோக்கினான்.

"கடலின் ஆழத்தில் கிடைத்த ஓர் ஆபூர்வமான சிலை. ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கண்டறிந்த அதிசயம்.

கடலின் அடி ஆழத்தில் ஆறடிக்கும் உயரமுள்ள இராஜ கம்பீர பெண் கடவுள் சிலை கண்டறியப்பட்டது.

பெரும் போராட்டத்திற்கு பின் அந்த சிலை கடல் வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டது.

இந்த சிலை தற்போதைக்கு கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், அந்த சிலையின் காலம் குறித்து கண்டறிய தொல்பொருள் ஆய்வாளர்களிடம் அந்த சிலை விரைவில் ஒப்படைக்கப்படப்படும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறாக அந்த பெண் செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருக்க இருவருமே தங்கள் விழிகளை எடுக்கவேயில்லை.

வீரேந்திரனும் வியப்போடு பார்த்து கொண்டிருக்க தமிழுக்கு மெய்சிலிர்த்து போனது.

அந்த சிலைதானே அது. பலமுறை கேட்டுக் கொண்டாள்.

அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை !

அவளுக்குள் உண்டான பிரம்மிப்பினை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அத்தனை கம்பீரமாய் இருந்தது அந்த சிலை வடிவம்.

கனவிலும் எண்ணியதில்லை.

அவளின் காலத்தில் அந்த சிலையை மீண்டும் பார்ப்பாள் என்று!

மயிர்ககூச்சு உண்டானது அவளுக்கு !

காரிருள் சூழ்ந்து சூர்யனை மறைக்க முயற்சித்தால் அவன் மறைந்துவிடுவானா? !

இல்லை மறைக்கத்தான் இயலுமா?

தமிழனின் பாரம்பரியத்தையும் பெருமையையும் என்றுமே அழிக்க முடியாத என்பதற்கான அழுத்தமான சான்றே அந்த சிலை !

அந்த கீரிடத்தை எதன் காரணத்தால் நம் சந்ததியினர் இத்தனை காலங்களாய் பாதுகாக்கின்றனர் என்று அவளுக்குள் பலமுறை கேள்வி எழும். இன்று அவற்றிற்கெல்லாம் விடை கிட்டியது போல் இருந்தது.

அந்த சிலையின் பிரமாண்டத்தை அவள் கற்பனை செய்திருக்கிறாள். ஆனால் இப்பொழுது பார்க்கும் போது அந்த சிலை கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்ட ஒன்றாய் அதிகம்பீரமாய் இருந்தது.

அதனின் நேர்த்தியான வடிவமைப்பும் வேலைப்பாடும் அந்த சிலையின் இன்னொரு சிறப்பம்சம்.

உண்மையலேயே அந்த கீரிடம் அல்ல பொக்கிஷம்.

அந்த சிலைதான் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று தோன்றியது அவளுக்கு!

ஆம் ! அதுதான் பொக்கிஷம் !

அதுவே நம் தமிழ் பாரம்பரியத்தின் சிறப்பும் பெருமையும் கூட.

***முற்றும்***


************************************View attachment 893
Superb story?
 




Sangeetha Narayanan

புதிய முகம்
Joined
May 29, 2018
Messages
4
Reaction score
2
Location
Rameswaram
இருவரும் ஒன்றாய் கரத்தை பிடித்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவர்கள் நேராய் தமிழ் முன்னிலையில் சென்று நிற்க தமிழச்சி தன் தாயின் கரத்தை பற்றி "சாரி தமிழச்சி... நான் இனிமே கிளாஸ்ல யார்கிட்டயும் சண்டை போட மாட்டேன்... ப்ராமிஸ்" என்று உறுதியளித்தாள்.



எல்லோருக்குமே தந்தை மகளுக்கான அந்த உறவின் மீது அத்தனை வியப்பு! ஆனால் தமிழுக்கு அதீத கோபமே தலைத்தூக்கியது.


மகளை பார்த்தவள் "எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு மனிஷங்களாவே தெரியிலயா... அதென்னடி உங்க அப்பா சொன்னா மட்டும் கேட்கிற... ?!" என்று வினவினாள்.

தமிழச்சி தன் அப்பாவின் மீது சாய்ந்து அணைத்தபடி "ஏன்னா அவர்தானே என்னோட ஹீரோ... " என்று சொல்ல வீரேந்திரன் பெருமிதப்பட்டு மனைவியினை நோக்கிய போது அவள் உதடுக்குள்ளேயே முனகிக் கொண்டாள்.

அதனை கவனித்தவன் மகள் முன்னிலையில் மனைவியை எதையும் கேட்க விரும்பாமல் அமைதி காத்தான்.

உணவருந்த மேஜை மீது அமர்ந்திருந்த வீர் தமிழை பார்க்க, அவனிடம் பாரா முகமாகவே பரிமாறினாள்.

உணவு முடிந்த பின் தமிழச்சி தன் தாத்தா பாட்டியுடன் உறங்கச் சென்றுவிட, சிம்மபூபதி தன் பெற்றோர்களின் அறையருகில் உள்ள ஒரு தனி அறையில் படுத்துக் கொண்டான்.

வீரேந்திரன் அறைக்குள் வந்ததும் மனைவி சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்தியபடி

"ஏ தமிழச்சி.. பாப்பா என்னை ஹீரோன்னு சொன்ன போது நீ ஏதோ முனகினியே... என்னது?" என்று கேட்டான்.

அவள் அவனை அலட்சியமாய் பார்த்துவிட்டுஅறையிலிருந்த டீவியை ஆன் செய்து சௌகர்யமாய் அமர்ந்து கொண்டு பார்க்க

"திமிரா... என்ன சொன்னேன்னு சொல்லு ?" என்று கேட்டு ரிமோட்டை பறித்தான்,

"இப்ப என்ன சொன்னன்னு கண்டிப்பா தெரியனுமா ?" என்று எரிச்சலாய் பார்த்தாள்.

"ஆமாம்"

"அவளுக்கு நீங்க ஹீரோ... ஆனா எனக்கு நீங்க வில்லன்னு சொன்னேன்... போதுமா ?"

அந்த வார்த்தைகள் அவனை இன்னும் கோப்படுத்த "இவ்வளவு வருஷமாச்சு... இருந்தும் உன் கோபமும் திமிரும் இன்னமும் மாறவே இல்லயில்ல"

"நீங்க அப்படியே மாறிட்டீங்களாக்கும்" என்று சொன்னபடியே வெடுக்கென ரிமோட்டை அவனிடமிருந்த வாங்கினாள்.

அவன் மீண்டும் கோபமாக அந்த டீவியை அணைத்தான்.

தமிழ் வெறுப்போடு "உங்க பொண்ணுக்கு மட்டும் எல்லா சுதந்திரமும் உண்டு... எனக்கு இங்க டிவி பார்க்க கூட உரிமையில்லையா ?" என்றாள்.

இந்த கேள்வியை கேட்டதும் பதிலேதும் பேசாமல் ரிமோர்ட்டை தூக்கியெறிந்துவிட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ஊரே வேடிக்கை பார்க்க சண்டை போட்டிருந்தாலும்,.குழந்தைகள் முன்னிலையில் அந்த தவறை செய்வதில்லை என உறுதி பூண்டிருந்தனர்.

வெளியே அவன் எது சொன்னாலும் விருப்பமில்லாவிடிலும் கேட்டுவிடுவது போல அவள் தலையசைத்தாலும், அறைக்குள் வந்த மாத்திரத்தில் தான் சேகரித்த மொத்த கோபத்தையும் ஏதோ ஓரு விதத்தில் காட்டுவாள்.

இப்போதைக்கு அவள் வெறப்பை காண்பிக்க ஒரு வழி அந்த தொலைக்காட்சி.

அவளின் மனமும் அந்த தொலைக்காட்சி நிகழ்வுகளில் லயிக்கவில்லை.

எனினும் மகள் விஷயத்தில் தன் கணவன் ரொம்பவும் செல்லம் தந்து கெடுக்கிறான் என்றும், ஏன் தனக்கே அவளை கண்டிக்கும் உரிமையை தரமாட்டேன் என்கிறான் என்றும் ஒரு தாயாக எழுந்த ஆதங்கம்தான் அவளை அவனிடம் அப்படி கோபப்பட வைத்தது.

இப்படி யோசித்திருக்கும் போதுதான் அந்த டிவி செய்தி ஒளிப்பரப்பானது.

யதச்சையாகதான் கவனித்தாள்.

அவள் பார்த்தது உண்மைதானா ?

அவசர அவசரமாய் அருகிலிருந்த கணவனை உலுக்கியபடி எழுப்பினாள்.

"வீர்ர்ர்ர்ர்" என்று அவள் சத்தமிட சலிப்போடு எழுந்தவன் "தூங்கின பிறகுதான் கத்தி என் உயிரை எடுப்ப, இப்போ முழிச்சிட்டிருக்கும் போதேவா" என்று கோபமாய் கேட்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

டிவியின் மீதிருந்த பார்வையை எடுக்காமலே அவனிடம் அந்த காட்சியை காண்பிக்க அவனும் அதனை நோக்கினான்.

"கடலின் ஆழத்தில் கிடைத்த ஓர் ஆபூர்வமான சிலை. ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கண்டறிந்த அதிசயம்.

கடலின் அடி ஆழத்தில் ஆறடிக்கும் உயரமுள்ள இராஜ கம்பீர பெண் கடவுள் சிலை கண்டறியப்பட்டது.

பெரும் போராட்டத்திற்கு பின் அந்த சிலை கடல் வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டது.

இந்த சிலை தற்போதைக்கு கடலோர பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், அந்த சிலையின் காலம் குறித்து கண்டறிய தொல்பொருள் ஆய்வாளர்களிடம் அந்த சிலை விரைவில் ஒப்படைக்கப்படப்படும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறாக அந்த பெண் செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருக்க இருவருமே தங்கள் விழிகளை எடுக்கவேயில்லை.

வீரேந்திரனும் வியப்போடு பார்த்து கொண்டிருக்க தமிழுக்கு மெய்சிலிர்த்து போனது.

அந்த சிலைதானே அது. பலமுறை கேட்டுக் கொண்டாள்.

அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் உண்மை !

அவளுக்குள் உண்டான பிரம்மிப்பினை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அத்தனை கம்பீரமாய் இருந்தது அந்த சிலை வடிவம்.

கனவிலும் எண்ணியதில்லை.

அவளின் காலத்தில் அந்த சிலையை மீண்டும் பார்ப்பாள் என்று!

மயிர்ககூச்சு உண்டானது அவளுக்கு !

காரிருள் சூழ்ந்து சூர்யனை மறைக்க முயற்சித்தால் அவன் மறைந்துவிடுவானா? !

இல்லை மறைக்கத்தான் இயலுமா?

தமிழனின் பாரம்பரியத்தையும் பெருமையையும் என்றுமே அழிக்க முடியாத என்பதற்கான அழுத்தமான சான்றே அந்த சிலை !

அந்த கீரிடத்தை எதன் காரணத்தால் நம் சந்ததியினர் இத்தனை காலங்களாய் பாதுகாக்கின்றனர் என்று அவளுக்குள் பலமுறை கேள்வி எழும். இன்று அவற்றிற்கெல்லாம் விடை கிட்டியது போல் இருந்தது.

அந்த சிலையின் பிரமாண்டத்தை அவள் கற்பனை செய்திருக்கிறாள். ஆனால் இப்பொழுது பார்க்கும் போது அந்த சிலை கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்ட ஒன்றாய் அதிகம்பீரமாய் இருந்தது.

அதனின் நேர்த்தியான வடிவமைப்பும் வேலைப்பாடும் அந்த சிலையின் இன்னொரு சிறப்பம்சம்.

உண்மையலேயே அந்த கீரிடம் அல்ல பொக்கிஷம்.

அந்த சிலைதான் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று தோன்றியது அவளுக்கு!

ஆம் ! அதுதான் பொக்கிஷம் !

அதுவே நம் தமிழ் பாரம்பரியத்தின் சிறப்பும் பெருமையும் கூட.

***முற்றும்***


************************************View attachment 893
Nice story????
 




Umamanoj

நாட்டாமை
Joined
Jan 28, 2018
Messages
26
Reaction score
57
Location
Chennai
மோனிஷா. .பிரமாதம். ..ரொம்ப நல்லா இருந்தது கதை. ..சூப்பர்ப். .
 




Rajiprabha

முதலமைச்சர்
Joined
Apr 24, 2018
Messages
6,392
Reaction score
5,459
Location
Colombo
அருமையான முடிவுரை ???தமிழ் பற்றுக்கு எனது ???. ௧தை அருமை?
 




AVS Chrispri

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2018
Messages
520
Reaction score
1,519
Location
Chennai
Super madam... Really sema... Konjam kuda hero herion avanga thank thuvatha vitu kodukama padaichirukinga.... Ithan intha story Oda uniqueness... Last vara atha kondu vanthuruvangala parunga sema madam... Sema sema... Really I enjoyed with your story .. I like Tamil verr very much.... Antha aathi avanga story kidaicha nalla irukum madam... Super keep rocking...
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Iravu Velaiya pakrathukku munnadi oru 10 nimisham relax a konjam kathai padiklamnu intha kathaiya padikka arambichen Akka. Avlo than mudinju pochu en iravu velai. site ke pogala aluvalaga araiyela ye utkarnthu iravu muzhuvathum padichi ( Melalar oda Pasamana muraipum sernthu than) kaalaiyulum thoongama padichi mudichitu than thoonga mudinjathu akka . Yena kathai avlo suvarasiyamagavum, viru viruppagavum mattrum vanmaiyana kathalagavum irunthuchi. Nalla ezhuthirukkinga Niraiya arumaiyana kathaigal Ezhuthunga. Vazhthukkal & Nandri. Magizhchi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top