என்ன சொல்லறது? எப்படி ஆரம்பிக்க-ன்னு
தெரியாமலே நாட்களை ஓட்டி விட்டேன்,
And I am sorry for my delay, வநிஷா டியர்
நீங்கள் ரசிச்சு, ரசிச்சு செதுக்கிய
இந்த அழகான, அருமையான,
உயிர் விடும் வரை உன்னோடுதான்-ங்கிற
சூப்பர்ப் நாவலை, நாங்களும் ரசிச்சு,
ரசிச்சுத்தான் ருசிச்சோம் பா
"தாய்மை" ரொம்பவே அற்புதமானது
ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்க
வேண்டிய வரம்
ஒவ்வொரு பெண்ணும் தாயானால் தான்
அவளுடைய வாழ்வு முழுமையடையும்
இதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும்
இல்லை
உலகத்திலேயே சிறந்தது
உருவமில்லாதது-ன்னு எல்லோராலும்
வர்ணிக்கப்படும், கொண்டாடப்படும்
தாய்மை, கிடைத்தவர்களுக்கு
ஒரு வரப்பிரசாதம்
கிடைக்காதவர்களுக்கு அது அவர்களின்
சாபக்கேடு-ன்னு சொல்வாங்க
பழைய காலத்தில் கணவன் மனைவி
இருவரில் யாரிடம் குறையிருந்தாலும்
தாயாக முடியாத ஒரு மனைவியின்
நிலையை சொல்ல வார்த்தைகளேயில்லை
உற்றாரும், உறவினரும் பெண் என்று கூட
பாராமல், பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக
நாக்கில் நரம்பில்லாமல், பேசிப் பேசி
தாயாக முடியாத அந்தப் பெண்ணை
உயிருடன் வதைத்து, உயிருடன் கொன்று
உயிரற்ற நடைப்பிணமாக்கி விட்டுத்தான்
மறுவேலை பார்ப்பார்கள்
இன்னும் சிலர் அந்த கணவருக்கு மறுமணம்
செய்வித்து முதல் மனைவியை நாயினும்
கேவலமாக அடிமையாக நடத்துவார்கள்
பாவப்பட்ட அந்த பெண் ஜென்மம்,
உள்ளத்தாலும் உடலாலும் மிகுந்த
துன்பப்பட்டு புழுவை விட கேவலமான
ஒரு வாழ்க்கை வாழ்ந்து மடிவாள்
நல்லவேளையாக இந்த நூற்றாண்டில்
விஞ்ஞானம்/சயின்ஸ் வளர்ச்சியடைந்து,
ஒரு வரப்ரசாதம் கிடைத்து பெண்களுக்கு
நடந்து வரும் இந்தக் கொடுமைகளிலிருந்து
நிறையப் பெண்கள் விடுதலையடைந்து
சந்தோஷமாக வாழ்கிறார்கள்
அதுதான் செயற்கை முறையில்
ஒரு பெண் கர்ப்பமாகும் டெஸ்ட் டுயூப்
பேபி மெத்தெட்-ங்கிற வரப்பிரசாதம்
இதிலும் நிறைய, நிறைய விஷயங்கள்
இருக்கும் போலவே, வநிஷா டியர்
கரு முட்டை தானம், விந்தணு தானம்
and வாடகைத்தாய் சிஸ்டம் வேற இருக்கு
நம்முடைய நாவலில் தம்பிக்காக,
அண்ணன் விந்தணு தானம் செய்கிறான்
இதில், பிரச்சனை ஏதும் இல்லை போல
ஆனால் ஒரு பெண் கரு முட்டை தானம்
செய்வதில், ஏகப்பட்ட பிரச்சனைகள்,
வலிகள், இருக்கும் போலவேப்பா?
அதிலும், ஆண் வாசனையேயறியாத
ஒரு கன்னிப்பெண், சித்ரா பௌர்ணமி,
அட, நம்ம ஹீரோயின் பொண்ணு-தாங்க
கூடப் பிறக்கலை-ன்னாலும், தன்னை
வளர்த்த சிற்றன்னையின் மகளான
மார்கழித் திங்களுக்கு கரு முட்டை
தானம் செய்ய ஒப்புக்கொண்டு,
எண்ணற்ற வலிகளையும், வேதனையையும்
உடலில் மட்டுமல்ல,
அக்கா மார்கழியின் தேள் கொடுக்குப்
பேச்சால் உள்ளத்திலும் வலியை
அனுபவிக்கிறாள்
இவளோடசோகக்கதையை கேளுங்க,
தாய்க்க்குலமே
தமிழ் வாத்தியார் சண்முகவேலனுக்கு
பேரழகியான வள்ளி, மனைவி
அழகு சோறு போடுமா?
நல்ல பாம்பு கூடத்தான் பார்க்கிறதுக்கு
நல்லாயிருக்கும்
ஆனால் கொத்தினால் உயிர்
போயிடுமில்லையா?
அதைப் போல தன்னோட அழகால்
கணவனை அடிமைப்படுத்தியிருக்கும்
வள்ளி, என்னைப் பொறுத்தவரைக்கும்
ஒரு நாகப்பாம்பு தான்ப்பா, வநிஷா டியர்
இந்த சண்முகவேலன் வாத்தியாருக்கெல்லாம் முதுகெலும்பு-ன்னு ஒண்ணு இருக்கா?
இல்லையா-ன்னு எனக்கு இன்னும்
சந்தேகமாகத்தான் இருக்குப்பா
ஒரு கணவனாக, அழகு மனைவி வள்ளிக்கு
சண்முகவேலன் வாத்தியார்,
என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்
அவளுக்கு கழுவிக் கூட விடட்டும்
ஆனால் ஒரு மகனாகத் தன் தாய்க்கும்
ஒரு அண்ணனாக தன் தம்பி சிங்கார
வேலனுக்கும், தமிழ் வாத்தியார்
சண்முகவேலன், நியாயம் செய்யவில்லை
கணவனுக்கான கடமையை சரிவர
செய்யாத வள்ளி என்ற அகங்காரம்
பிடித்த ஒரு பெண்ணின் கணவனான,
தமிழ் வாத்தியார் சண்முகவேலனை
எனக்குப் பிடிக்கலை, வநிஷா டியர்
ஆட்டோமொபைல் படித்து, தமிழ் வாத்தியார் சண்முகவேலன் அண்ணாச்சியை விட,
அதிகமாக சம்பாதிக்கும், சம்பளத்தை
அப்படியே தன் கையில் கொடுக்கும்
கொழுந்தன் என்கிற சின்ன அடிமை
சிங்காரவேலனுக்கு தன்னை விட அழகும், வசதிக்குறைவாகவுமுள்ள, ஏழைப்பெண்
நவநீதத்தை கல்யாணம் செய்து வைக்க,
அவர்களுக்கு பிறந்த மார்கழித் திங்கள்
பெண்ணை, அவள் பிறந்த ஏழு நாட்களிலேயே
தனக்கு மகளாக மாற்றிக்கொண்ட வள்ளிக்கு
மார்கழித் திங்கள் @ மாதி பிறந்த நான்கு
வருடங்களில் ஒரு பெண் பிறக்கிறாள்
அவள்தான் நம்முடைய ஹீரோயின்,
சித்ரா பௌர்ணமி
தாயைப் போன்றே பேரழகி
ஆனால் தாய் வள்ளியின் பீத்தல் குணம்
எதுவுமில்லாத நல்லவள்
பெயரில் மட்டும்-தான் அவள், சித்ரா பௌர்ணமி,
முழு நிலவு, மற்ற எல்லாவற்றிலும் இவளுக்கு தேய்பிறை-தான்-ப்பா
அடுத்தவள் பெற்ற குழந்தை மாதியை, தன்னோட குழந்தையாக வளர்த்த வள்ளி, அவளை பாசமும் நேசமும் கொண்ட அன்பு மகளாக வளர்க்காமல்
தன்னைப் போலவே அடங்காப்பிடாரியாக,
சுயநலப் பேயாக வள்ளி வளர்த்து விட்டாள்
"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே
பின் அவர் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்ப்பினிலே"-ன்னு, கவியரசு
பாடியதை போல, அவளுக்குக் கிடைத்தப்
பொக்கிஷத்தை, வள்ளி நல்ல முறையில்
பேணவில்லை
எல்லோரும் யசோதையாகி விட முடியுமா,
என்ன?
சிறு வயதிலிருந்தே, வள்ளியைப் போன்றே
மாதியும் அடுத்தவரை அடக்கி ஆணவமாகவும், சுயநலத்தின் மொத்த உருவமாகவும் வளர்ந்து
சித்ராவின் மீது மட்டுமல்ல, இவளுக்கும் "சித்தா பொணமி"-க்கும் அடுத்து தன்னோட அம்மா நவநீதத்துக்குப் பிறந்த தங்கை வைகாசி நிலா,
தம்பி மாசிலாமணி இவர்களின் மீது கூட,
மாதிக்கு பாசமில்லை
இவள் மட்டும் வள்ளியை அம்மா-ன்னு
கூப்பிடுவாளாம்
மற்ற மூவரும் வள்ளியையோ, நவநீதத்தையோ
அம்மா-ன்னு கூப்பிடக் கூடாதாம்
பெரியம்மா, சின்னம்மா-ன்னு-தான்
கூப்பிடணுமாம்
அந்த புத்தி கெட்ட ஆண்பிள்ளைகள் இருவரும்
ஒரு சுண்டைக்காய் பெண்ணுக்கு, ஓவரா செல்லம் கொடுத்து குட்டிசுவராக்கி, அவள் சொன்னபடி ஆடுவார்களாம்
இது என்னம்மா கோராமையா இருக்கு?
தன்னோட பிள்ளையாக நினைத்திருந்தால்,
வள்ளி மார்கழித் திங்களை ஒழுங்காக
வளர்த்திருப்பாள்
ஒருவேளை வள்ளி, மாதியை அப்படி
நினைக்கலையோ?
ஒரு தாய் என்பவள் தன் பிள்ளையை
கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து,
செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில்
செல்லம் கொடுத்து, நல்லது, கெட்டது
சொல்லிக் கொடுத்து தன்னோட குழந்தையை
பாசமும் பண்பும் அறிவுமுள்ள குழந்தையாக
வளர்ப்பாள்
அவள்தான் நல்ல தாய்
இல்லாவிட்டால் அவள் பேய்-தான்
வள்ளி ஒரு நல்ல தாயாக பரிமளிக்கவில்லை
தனக்குக் கிடைத்த "தாய்மை"-ங்கிற
வரப்பிரசாதத்தை, வள்ளி போற்றவில்லை
தாய்க்கு செய்து கொடுத்த சத்தியம்-ன்னு,
மனைவியிடம் சிங்காரம் சொல்லி
அண்ணியின் மனநிம்மதிக்காக மார்கழித்
திங்கள்-ங்கிற தன்னோட பெண்ணை
அண்ணிக்கு சிங்காரமும், நவநீதமும்
மகளை மனமுவந்து கொடுத்து
விடுகிறார்கள்
சொந்த சகோதரி மாதி, சிறு வயதிலிருந்தே
தங்களுடன் ஒட்டாததால், இன்னொரு அக்கா
சித்ராவுடன் வைகாசி நிலாவும், மாசிலாமணியும்
பாசமாக இருக்கிறார்கள்
சித்ராவும் அப்படியே அவர்களுடன்
பாசத்தை கொட்டுகிறாள்
மாதியின் காலேஜ் சீனியர் and கைடு, ராஜேஷ்,
சித்ராவை விரும்புகிறான்
பொறுக்குமா நம்ம மாதிக்கு?
தாயையே விட்டுக்கொடுக்காதவள்,
காதலனை விட்டுக் கொடுப்பாளா?
ஏதோதோ தகிடுதத்தம் செஞ்சு, ராஜேஷ்ஷை
மாதி கல்யாணம் செய்கிறாள்
மாதிக்கு குழந்தையில்லாததால் செயற்கை
முறையில் டெஸ்ட் டுயூப் பேபிக்காக,
ஏகப்பட்ட உடல்வலி மற்றும் மனவலியுடன்
சித்ரா கருமுட்டை தானம் செய்கிறாள்
இதற்கு நடுவில ஹீரோ பிரகாஷ் கப்பூர்
இவரைப் பார்ப்போமா?
சித்தா பொணமியாவது பரவாயில்லை
பெரியம்மா, சின்னம்மா-ன்னு கூப்பிட்டாலும் பெற்றவர்களுடனே வாழ்ந்தாள்
ஆனால் நம்ம கப்பூரு, ரொம்பவே பாவம்-ப்பா