ஹாய் friends... வராக நதியோடு வந்துட்டேன்... ஹிஹி... இந்த அப்டேட் தரதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே... ஐயையோ... என் மூளைய ரொம்ப வேலை வாங்குது.. அதான் தாமதம்... சாரி... கோபப்படாமல் லைக் அண்ட் கமெண்ட் தரவும்... ப்ளீஸ்...
வராக நதி - 23
விகாஷினிக்கு போனை போட்டவாறே ஆபீசை விட்டு வெளியேறி கார் பார்கிங்கை அடைந்தான் முகிலன்...
அவள் எடுத்ததும் அவளை பேசவிடாமல் கேள்வியால் குடைந்தெடுத்தான்...
“ரிஷி எங்க...? ஏன் இத்தனை நாளாக மறைச்ச... ? உனக்கு கொஞ்சம் கூட...”
என்று திட்ட போவதற்குள்... அவனை இடைமறித்த விகாஷினி...
“ஹோச்பிடல் அட்ரஸ் மெசேஜ் பண்ணுறேன்... ஒழுங்கா வந்து சேரு... அப்புறம் எல்லா கேள்வியும் கேட்கலாம்..”
என்றுவிட்டு தொடர்ப்பை துண்டித்தாள். ( ஏன் மா... முழுசா யாரு கூடவும் பேசவே மாட்டியா நீ...? )
பிளாக் செய்யப்பட்டதால் அவுட்பாக்ஸில் இருந்த மெசேஜை மீண்டும் அனுப்பியவள் முகிலனின் குரலில் இருந்த சந்தோசத்தை... தவிப்பை... கோபத்தை... அதற்கு மேல் இருந்த தூய்மையான நட்புணர்வை உணர்ந்தாள்... மேலும் அவனிடம் சொல்லாமல் மறைத்த குற்றஉணர்ச்சியும் சேர்ந்துகொள்ள... அதனாலேயே பேசமுடியாமல் உடனடியாக துண்டித்தாள்.
அதை அறியாத முகிலன்...
“திமிர்.. திமிர்.. உடம்பெல்லாம் திமிர்... ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கல பாரு அவனுக்கு... போயும் போயும் இந்த அல்லிராணி தான் கிடைச்சாளா...?”
என்று வெகு நாள் கழித்து நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் அவனையே திட்டித்தீர்த்தான். நண்பனை திட்டுவதை விட வேறு சந்தோசம் இந்த உலகில் உண்டா என்ன...?
பிரவுன் டஸ்டர் கூட எஜமானின் மனமறிந்து அரேபிய குதிரை போல சாலையில் சீறி பாய்ந்தது.
இங்கே வீட்டில் விகாஷினி புண்ணியத்தில் எழுந்து அவசரமாக குளித்து முடித்த ருத்ரா... கட்டிலில் இருந்த பூக்களை அகற்றிவிட்டு தான் வெளியே வந்தாள். வேலை செய்பவர்கள் சுத்தம் செய்வார்கள் என்று தனது மாமியார் கூறியிருந்தும்... தன் வீட்டில் தானே சுத்தம் செய்வதால், வேலையாட்களை பெட்ரூமில் விட அவளிற்கு சங்கடமாக இருந்தது.
தலை வேறு பாரமாக இருக்க... வீட்டில் இவ்வாறு இருந்தால் அம்மா போட்டு தரும் சுக்கு காபிக்கு மனம் மனம் ஏங்கியது. ஆனால் கேட்க தயக்கமாகவும் இருந்தது.
என்ன தான் அதுவும் அவள் வீடு தான் என்றாலும்... ஜீ பூம் பா என்று மேஜிக் செய்தா பிறந்த வீட்டை எண்ணும் மனதை மாற்ற முடியும்.
இவ்வாறு யோசனையில் ருத்ரா இருக்க... அபிராமி தான் வராண்டாவில் அமர்ந்திருந்த கணவனிற்கு குடிக்க ஓட்ஸ் கஞ்சியை எடுத்து வந்தார்.
வழியில் யோசனையுடன் நிற்கும் மருமகளை பார்த்தவர்...
“என்னமா...? எழுந்துட்டியா... ? வா வா... உன்னை தான் தேடுனேன்... தூங்குறனு சொல்லிட்டு போயிட்டான் உன் புருஷன்...”
என்று சிநேகமாய் சிரித்தார்.
“இல்லை அத்தை... எப்பொதும் சீக்கிரம் எழுந்திடுவேன்... புது இடம் அதான் தூக்கம் வரல...”
என்று சமாளித்தாள்.
அவள் சமாளிப்பதை பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தவர்... பின்..
“பூசையறையில் குத்துவிளக்கு ஓரமா இருக்கும் பாரு... அதை மட்டும் சாமி கும்புட்டு ஏற்றிவைமா... நான் உன் மாமாவுக்கு கஞ்சி குடுத்துட்டு வரேன்”
என்றவாறு சென்றார்.
இவளும் பூசையறை சென்று தன் அத்தை கூறியதை நிறைவேற்றினாள்...
சூடாக எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டும் போல் இருக்கவே அடுப்பறை செல்ல... அங்கு ஒருவரையும் காணோம்...
அதற்குள் அபிராமியும் வந்துவிட்டார்...
“அடுப்பறை வேலைக்கு ஆள் இருக்கு ருத்ரா... ஏதாவது வேணும் என்றால் இதோ வராங்க பாரு... சவிதாமா.. அவங்ககிட்ட கேளு...”
என்று மத்திய வயது தாண்டிய பெண்மணியை அறிமுகபடுத்தினார். கூடவே...
“அவங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை.. கேட்டால் செய்து தருவாங்க... இல்லை நாமலே செய்யணும் என்றாலும் செய்துக்கலாம்...”
என்று வீட்டின் நடைமுறையை பேச்சோடு பேச்சாய் விளக்கினார். பின்பு...
“காலையில் என்ன குடிப்ப... காபியா..? டீயா..?”
என்று கேட்க..
அவ்வளவு நேரம் உரிமையாய் அபிராமி பேசியதும் தான் தயக்கம் அகன்றது ருத்ராவிற்கு...
“சுக்கு காபி அத்தை..” என்று பதில் கூறினாள்.
“அட... தினமும் சுக்கு காபியா குடிப்ப...”
என்று அபிராமி கேட்க... அதற்குள் சவிதாமா தண்ணியை கொதிக்க வைத்திருந்தார்.
“இல்லை.. அத்தை தலை வலிக்கும் போது மட்டும்... மற்ற நேரமெல்லாம் அம்மா ராகி கூழ் தருவாங்க...”
என்று சகஜமாக பேசத்தொடங்கினாள்.
“தலை வலிக்குதா... அப்போவே சொல்லியிருக்கலாம்ல..”
என்று செல்லமாய் கடிந்தவாறு மாமியார் பேச... அங்கே இருவரும் கதை பேச ஆரம்பித்தனர்.
அவர்கள் பேசு சுவாரசியத்தில் உலகம் மறக்க... சுக்கு காபி வந்ததும் தான் இருவரும் சுற்றுப்புறம் உணர்ந்தனர்.
அங்கே, இவர்கள் அமர்ந்து பேசும் டைனிங் டேபிளின் எதிர்ப்புறம் கன்னத்தில் கைக்கொடுத்தவாறு அமர்ந்து இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களான மாணிக்கவேல், கார்த்திகேயன் மற்றும் கார்த்திகாயினி.
அதை கண்டதும் லஜ்ஜையுற்று எழுந்துக்கொள்ளப் பார்த்த ருத்ராவை கைபிடித்து அமர வைத்த அபிராமி...
“அப்புறம் நீ சொல்லுமா...”
என்று கதை பேச ஊக்குவிக்க...
அவளோ இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன அண்ணி... இப்படி பாக்குறிங்க...”
என்றவாறு பக்கென்று சிரித்துவிட்டான் கார்த்தி.
“ஏய்.. எதுக்குடா சிரிக்குற..”
என்று அபிராமி மகனிடம் வினவ..
“இல்ல... அண்ணி என் தூக்கத்தை காப்பாத்துன தெய்வம் மா... இல்லன்ன எப்பவோ நீங்க என் ரூமிற்கு வந்து.. டேய் எழுந்திரு டா.. டேய் எழுந்திரு டான்னு சுப்ரபாதம் பாடிருப்பீங்க...”
என்று கூற...
“ஆமா... ஆமா... என்னை கூட வந்து சாப்டு.. சாப்டுனு பாடுவாங்க... இன்று நாம வந்து அரைமணி நேரம் கழிச்சும் நம்மள கண்டுக்காம அரட்டை அடிக்குறத பாரேன்...”
என்று காயுவும் ஒத்து ஊதி தங்களது அம்மாவை வம்பிழுக்க...
மாணிக்கவேல் அதை ரசித்துச் சிரித்தார்.
சாப்பாடும் தயாராகவே அனைவரும் உண்டுவிட்டு ஹாலில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தந்தையுடன் தொழில் பேசும் கார்த்தி கூட அன்று தன் வீட்டின் புது உறவான அண்ணியிடம் பேசிக்கொண்டிருக்க... காயுவும் அவனுடன் சேர்ந்து கல்லூரியை கட் அடித்து விட்டு ருத்ராவுடன் பேசுவதில் போட்டி போட்டாள்...
ஏன் கல்லூரி போகவில்லை என்று ருத்ரா கேட்டதற்கு...
“எங்க அண்ணாக்கு கல்யாணம் ஆகிருச்சி... கல்யாணத்துல வேலை பார்த்தே ஓய்ந்து போயிட்டேன்...”
என்று கூற...
“ஒரே ஒரு நாத்தனார் முடிச்ச போட்டுட்டு இவ பண்ற அலப்பறை இருக்கே..”
என்று கூறி தலையில் அடித்தான் கார்த்தி... பின்னே முக்கால்வாசி வேலையை பார்த்தது இவன் தானே...
அதே நேரம் வீட்டினுள் அவசரமாக நுழைந்த முகிலன் தன் குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் அமர்ந்து தன் மனைவியோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான்.
அவன் வந்ததும் அரவம் உணர்ந்து அனைவரும் இவனை பார்க்க.. ருத்ராவை தவிர அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி போன வேகத்தில் வருவது இதுவே முதல்முறை என்பதால்.
“இதுக்கு எதுக்குடா நீ ஆபீஸ் போன.. பேசாம வீட்டுல இருந்திருக்கலாம்ல...”
என்று அபிராமி மகனை மனதினுள் கேலியோடும்.. வெளியில் சீரியசாகவும் கேட்டார்.
அதை உணராத முகிலன்..
“இல்லை மா.. எனக்கு மும்பைல வேலையிருக்கு.. போயிட்டு எப்போ வருவேன்னு தெரியாது.. ரொம்ப அவசரம்”
என்று கூற..
“தனியாவா போற.. நேத்து தானடா வந்த.. கூட ருத்ராவையும் கூட்டிட்டு போ..”
என்று எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க போராடினார்.
ஆனால் அவனோ..
“அவ வந்தா ஆபிஸ் வேலையை யாரு பார்ப்பா.. இப்போ என் இடத்துல இருந்து அவ தான் இந்த ப்ராஜெக்டை பார்க்கணும்.. கூடவே இன்னும் இரண்டு நாள்ல முத்ராவ வர சொல்லிட்டேன்... அடுத்த வாரம் அவளுக்கு காலேஜ் ஓபன் ஆகிரும்...”
என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான். உணர்ச்சி வசப்பட்டிருக்கையில் தான் சுபாவம் மாறுமே... பேசாதவன் பேசுவது அதிசயமா என்ன...?
கல்யாணம் ஆகிய மூன்றே நாளில் இவ்வளவு மாற்றமா... ? என்று அனைவரும் வியக்க.. ருத்ராவோ தான் எப்போது இவன் கம்பெனிய பார்த்துக்குறேன்னு சொன்னேன்.. என்னால எப்படி முடியும்.. என்ன தெரியும் என்று அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் ஆழ்ந்தாள். போன தலைவலி திரும்ப வரும் போல் இருந்தது.
அவன் மேலே அவர்கள் அறைக்கு செல்ல.. ருத்ராவும் பின்தொடர்ந்து உள்ளே சென்றாள். அறைக்குள் நுழைந்ததும்..
“என்னால ஆபீஸ்லாம் பார்க்க முடியாது.. எப்போவும் போல டிசைன் மட்டும் பண்ணி தரேன்.. உங்க இடத்துல இருந்துலாம் என்னால பார்க்க முடியாது”
என்று பிடிவாதத்தோடு மறுக்க...
“நீ முழு நேரமும் அங்க இருக்க வேண்டாம்.. ஜஸ்ட் அந்த ஆந்திரா பிளான் பத்தி மட்டும் என்ஜினீயர் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வா போதும்.. அப்படியே என் பிஏ கிட்ட கேட்டு புது பிளான்க்கு வர வாடிக்கையாளரை அவங்களுக்கு எப்படி வேனுமன்னு கேட்டு டிசைன் பண்ண பாரு... அதுக்குள்ள நான் வந்துருவேன்.. இப்போ எனக்கு ரிஷிய பார்த்தே ஆகணும்.. ப்ளீஸ்...”
என்று கெஞ்சல் என்றால் என்னவென்றே தெரியாதவன் கெஞ்சினான்.
அவளுக்கும் அவன் கூறிய வேலைகளை நம்மால் செய்ய முடியும் என்று தோன்றவே...
ஹ்ம்ம்.. நான் நாளையில் இருந்து போயிட்டு வரேன்
என்றாள்.
“தான்க் யூ ருத்.. தான்க் யூ சோ மச்..”
என்ற முகிலன் பெட்டியை எடுத்து கதவு வரை சென்றான்... பின் திரும்பி நின்று..
“பை ருத்” என்று விடைபெற...
அவள் பே!!! என்று தன் மிகப்பெரிய பெயரை அவன் சுருக்கியதால் முழிக்க..
“பை சொன்னேன்”
என்றான் அவளையே பார்த்துக்கொண்டு நகராமல்...
“ஹான்.. பை..”
என்று கையசைக்க.. கண்களில் மின்னலுடன் தன் வெகுநாள் எதிர்பார்ப்பான யாருக்கேனும் டாட்டா காட்டி விடைபெறவேண்டும் என்ற ஒன்று நிறைவடைந்த திருப்தியில் உற்சாகத்தோடு மும்பை புறப்பட்டான் முகிலன். ( டேய்... நீ கெத்துடா கெத்து... இப்படி சின்னப் புள்ளத்தனமா பிகேவ் பண்றியேடா )
வராக நதி - 23
விகாஷினிக்கு போனை போட்டவாறே ஆபீசை விட்டு வெளியேறி கார் பார்கிங்கை அடைந்தான் முகிலன்...
அவள் எடுத்ததும் அவளை பேசவிடாமல் கேள்வியால் குடைந்தெடுத்தான்...
“ரிஷி எங்க...? ஏன் இத்தனை நாளாக மறைச்ச... ? உனக்கு கொஞ்சம் கூட...”
என்று திட்ட போவதற்குள்... அவனை இடைமறித்த விகாஷினி...
“ஹோச்பிடல் அட்ரஸ் மெசேஜ் பண்ணுறேன்... ஒழுங்கா வந்து சேரு... அப்புறம் எல்லா கேள்வியும் கேட்கலாம்..”
என்றுவிட்டு தொடர்ப்பை துண்டித்தாள். ( ஏன் மா... முழுசா யாரு கூடவும் பேசவே மாட்டியா நீ...? )
பிளாக் செய்யப்பட்டதால் அவுட்பாக்ஸில் இருந்த மெசேஜை மீண்டும் அனுப்பியவள் முகிலனின் குரலில் இருந்த சந்தோசத்தை... தவிப்பை... கோபத்தை... அதற்கு மேல் இருந்த தூய்மையான நட்புணர்வை உணர்ந்தாள்... மேலும் அவனிடம் சொல்லாமல் மறைத்த குற்றஉணர்ச்சியும் சேர்ந்துகொள்ள... அதனாலேயே பேசமுடியாமல் உடனடியாக துண்டித்தாள்.
அதை அறியாத முகிலன்...
“திமிர்.. திமிர்.. உடம்பெல்லாம் திமிர்... ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கல பாரு அவனுக்கு... போயும் போயும் இந்த அல்லிராணி தான் கிடைச்சாளா...?”
என்று வெகு நாள் கழித்து நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் அவனையே திட்டித்தீர்த்தான். நண்பனை திட்டுவதை விட வேறு சந்தோசம் இந்த உலகில் உண்டா என்ன...?
பிரவுன் டஸ்டர் கூட எஜமானின் மனமறிந்து அரேபிய குதிரை போல சாலையில் சீறி பாய்ந்தது.
இங்கே வீட்டில் விகாஷினி புண்ணியத்தில் எழுந்து அவசரமாக குளித்து முடித்த ருத்ரா... கட்டிலில் இருந்த பூக்களை அகற்றிவிட்டு தான் வெளியே வந்தாள். வேலை செய்பவர்கள் சுத்தம் செய்வார்கள் என்று தனது மாமியார் கூறியிருந்தும்... தன் வீட்டில் தானே சுத்தம் செய்வதால், வேலையாட்களை பெட்ரூமில் விட அவளிற்கு சங்கடமாக இருந்தது.
தலை வேறு பாரமாக இருக்க... வீட்டில் இவ்வாறு இருந்தால் அம்மா போட்டு தரும் சுக்கு காபிக்கு மனம் மனம் ஏங்கியது. ஆனால் கேட்க தயக்கமாகவும் இருந்தது.
என்ன தான் அதுவும் அவள் வீடு தான் என்றாலும்... ஜீ பூம் பா என்று மேஜிக் செய்தா பிறந்த வீட்டை எண்ணும் மனதை மாற்ற முடியும்.
இவ்வாறு யோசனையில் ருத்ரா இருக்க... அபிராமி தான் வராண்டாவில் அமர்ந்திருந்த கணவனிற்கு குடிக்க ஓட்ஸ் கஞ்சியை எடுத்து வந்தார்.
வழியில் யோசனையுடன் நிற்கும் மருமகளை பார்த்தவர்...
“என்னமா...? எழுந்துட்டியா... ? வா வா... உன்னை தான் தேடுனேன்... தூங்குறனு சொல்லிட்டு போயிட்டான் உன் புருஷன்...”
என்று சிநேகமாய் சிரித்தார்.
“இல்லை அத்தை... எப்பொதும் சீக்கிரம் எழுந்திடுவேன்... புது இடம் அதான் தூக்கம் வரல...”
என்று சமாளித்தாள்.
அவள் சமாளிப்பதை பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தவர்... பின்..
“பூசையறையில் குத்துவிளக்கு ஓரமா இருக்கும் பாரு... அதை மட்டும் சாமி கும்புட்டு ஏற்றிவைமா... நான் உன் மாமாவுக்கு கஞ்சி குடுத்துட்டு வரேன்”
என்றவாறு சென்றார்.
இவளும் பூசையறை சென்று தன் அத்தை கூறியதை நிறைவேற்றினாள்...
சூடாக எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டும் போல் இருக்கவே அடுப்பறை செல்ல... அங்கு ஒருவரையும் காணோம்...
அதற்குள் அபிராமியும் வந்துவிட்டார்...
“அடுப்பறை வேலைக்கு ஆள் இருக்கு ருத்ரா... ஏதாவது வேணும் என்றால் இதோ வராங்க பாரு... சவிதாமா.. அவங்ககிட்ட கேளு...”
என்று மத்திய வயது தாண்டிய பெண்மணியை அறிமுகபடுத்தினார். கூடவே...
“அவங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை.. கேட்டால் செய்து தருவாங்க... இல்லை நாமலே செய்யணும் என்றாலும் செய்துக்கலாம்...”
என்று வீட்டின் நடைமுறையை பேச்சோடு பேச்சாய் விளக்கினார். பின்பு...
“காலையில் என்ன குடிப்ப... காபியா..? டீயா..?”
என்று கேட்க..
அவ்வளவு நேரம் உரிமையாய் அபிராமி பேசியதும் தான் தயக்கம் அகன்றது ருத்ராவிற்கு...
“சுக்கு காபி அத்தை..” என்று பதில் கூறினாள்.
“அட... தினமும் சுக்கு காபியா குடிப்ப...”
என்று அபிராமி கேட்க... அதற்குள் சவிதாமா தண்ணியை கொதிக்க வைத்திருந்தார்.
“இல்லை.. அத்தை தலை வலிக்கும் போது மட்டும்... மற்ற நேரமெல்லாம் அம்மா ராகி கூழ் தருவாங்க...”
என்று சகஜமாக பேசத்தொடங்கினாள்.
“தலை வலிக்குதா... அப்போவே சொல்லியிருக்கலாம்ல..”
என்று செல்லமாய் கடிந்தவாறு மாமியார் பேச... அங்கே இருவரும் கதை பேச ஆரம்பித்தனர்.
அவர்கள் பேசு சுவாரசியத்தில் உலகம் மறக்க... சுக்கு காபி வந்ததும் தான் இருவரும் சுற்றுப்புறம் உணர்ந்தனர்.
அங்கே, இவர்கள் அமர்ந்து பேசும் டைனிங் டேபிளின் எதிர்ப்புறம் கன்னத்தில் கைக்கொடுத்தவாறு அமர்ந்து இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களான மாணிக்கவேல், கார்த்திகேயன் மற்றும் கார்த்திகாயினி.
அதை கண்டதும் லஜ்ஜையுற்று எழுந்துக்கொள்ளப் பார்த்த ருத்ராவை கைபிடித்து அமர வைத்த அபிராமி...
“அப்புறம் நீ சொல்லுமா...”
என்று கதை பேச ஊக்குவிக்க...
அவளோ இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன அண்ணி... இப்படி பாக்குறிங்க...”
என்றவாறு பக்கென்று சிரித்துவிட்டான் கார்த்தி.
“ஏய்.. எதுக்குடா சிரிக்குற..”
என்று அபிராமி மகனிடம் வினவ..
“இல்ல... அண்ணி என் தூக்கத்தை காப்பாத்துன தெய்வம் மா... இல்லன்ன எப்பவோ நீங்க என் ரூமிற்கு வந்து.. டேய் எழுந்திரு டா.. டேய் எழுந்திரு டான்னு சுப்ரபாதம் பாடிருப்பீங்க...”
என்று கூற...
“ஆமா... ஆமா... என்னை கூட வந்து சாப்டு.. சாப்டுனு பாடுவாங்க... இன்று நாம வந்து அரைமணி நேரம் கழிச்சும் நம்மள கண்டுக்காம அரட்டை அடிக்குறத பாரேன்...”
என்று காயுவும் ஒத்து ஊதி தங்களது அம்மாவை வம்பிழுக்க...
மாணிக்கவேல் அதை ரசித்துச் சிரித்தார்.
சாப்பாடும் தயாராகவே அனைவரும் உண்டுவிட்டு ஹாலில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தந்தையுடன் தொழில் பேசும் கார்த்தி கூட அன்று தன் வீட்டின் புது உறவான அண்ணியிடம் பேசிக்கொண்டிருக்க... காயுவும் அவனுடன் சேர்ந்து கல்லூரியை கட் அடித்து விட்டு ருத்ராவுடன் பேசுவதில் போட்டி போட்டாள்...
ஏன் கல்லூரி போகவில்லை என்று ருத்ரா கேட்டதற்கு...
“எங்க அண்ணாக்கு கல்யாணம் ஆகிருச்சி... கல்யாணத்துல வேலை பார்த்தே ஓய்ந்து போயிட்டேன்...”
என்று கூற...
“ஒரே ஒரு நாத்தனார் முடிச்ச போட்டுட்டு இவ பண்ற அலப்பறை இருக்கே..”
என்று கூறி தலையில் அடித்தான் கார்த்தி... பின்னே முக்கால்வாசி வேலையை பார்த்தது இவன் தானே...
அதே நேரம் வீட்டினுள் அவசரமாக நுழைந்த முகிலன் தன் குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் அமர்ந்து தன் மனைவியோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான்.
அவன் வந்ததும் அரவம் உணர்ந்து அனைவரும் இவனை பார்க்க.. ருத்ராவை தவிர அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி போன வேகத்தில் வருவது இதுவே முதல்முறை என்பதால்.
“இதுக்கு எதுக்குடா நீ ஆபீஸ் போன.. பேசாம வீட்டுல இருந்திருக்கலாம்ல...”
என்று அபிராமி மகனை மனதினுள் கேலியோடும்.. வெளியில் சீரியசாகவும் கேட்டார்.
அதை உணராத முகிலன்..
“இல்லை மா.. எனக்கு மும்பைல வேலையிருக்கு.. போயிட்டு எப்போ வருவேன்னு தெரியாது.. ரொம்ப அவசரம்”
என்று கூற..
“தனியாவா போற.. நேத்து தானடா வந்த.. கூட ருத்ராவையும் கூட்டிட்டு போ..”
என்று எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க போராடினார்.
ஆனால் அவனோ..
“அவ வந்தா ஆபிஸ் வேலையை யாரு பார்ப்பா.. இப்போ என் இடத்துல இருந்து அவ தான் இந்த ப்ராஜெக்டை பார்க்கணும்.. கூடவே இன்னும் இரண்டு நாள்ல முத்ராவ வர சொல்லிட்டேன்... அடுத்த வாரம் அவளுக்கு காலேஜ் ஓபன் ஆகிரும்...”
என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான். உணர்ச்சி வசப்பட்டிருக்கையில் தான் சுபாவம் மாறுமே... பேசாதவன் பேசுவது அதிசயமா என்ன...?
கல்யாணம் ஆகிய மூன்றே நாளில் இவ்வளவு மாற்றமா... ? என்று அனைவரும் வியக்க.. ருத்ராவோ தான் எப்போது இவன் கம்பெனிய பார்த்துக்குறேன்னு சொன்னேன்.. என்னால எப்படி முடியும்.. என்ன தெரியும் என்று அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் ஆழ்ந்தாள். போன தலைவலி திரும்ப வரும் போல் இருந்தது.
அவன் மேலே அவர்கள் அறைக்கு செல்ல.. ருத்ராவும் பின்தொடர்ந்து உள்ளே சென்றாள். அறைக்குள் நுழைந்ததும்..
“என்னால ஆபீஸ்லாம் பார்க்க முடியாது.. எப்போவும் போல டிசைன் மட்டும் பண்ணி தரேன்.. உங்க இடத்துல இருந்துலாம் என்னால பார்க்க முடியாது”
என்று பிடிவாதத்தோடு மறுக்க...
“நீ முழு நேரமும் அங்க இருக்க வேண்டாம்.. ஜஸ்ட் அந்த ஆந்திரா பிளான் பத்தி மட்டும் என்ஜினீயர் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வா போதும்.. அப்படியே என் பிஏ கிட்ட கேட்டு புது பிளான்க்கு வர வாடிக்கையாளரை அவங்களுக்கு எப்படி வேனுமன்னு கேட்டு டிசைன் பண்ண பாரு... அதுக்குள்ள நான் வந்துருவேன்.. இப்போ எனக்கு ரிஷிய பார்த்தே ஆகணும்.. ப்ளீஸ்...”
என்று கெஞ்சல் என்றால் என்னவென்றே தெரியாதவன் கெஞ்சினான்.
அவளுக்கும் அவன் கூறிய வேலைகளை நம்மால் செய்ய முடியும் என்று தோன்றவே...
ஹ்ம்ம்.. நான் நாளையில் இருந்து போயிட்டு வரேன்
என்றாள்.
“தான்க் யூ ருத்.. தான்க் யூ சோ மச்..”
என்ற முகிலன் பெட்டியை எடுத்து கதவு வரை சென்றான்... பின் திரும்பி நின்று..
“பை ருத்” என்று விடைபெற...
அவள் பே!!! என்று தன் மிகப்பெரிய பெயரை அவன் சுருக்கியதால் முழிக்க..
“பை சொன்னேன்”
என்றான் அவளையே பார்த்துக்கொண்டு நகராமல்...
“ஹான்.. பை..”
என்று கையசைக்க.. கண்களில் மின்னலுடன் தன் வெகுநாள் எதிர்பார்ப்பான யாருக்கேனும் டாட்டா காட்டி விடைபெறவேண்டும் என்ற ஒன்று நிறைவடைந்த திருப்தியில் உற்சாகத்தோடு மும்பை புறப்பட்டான் முகிலன். ( டேய்... நீ கெத்துடா கெத்து... இப்படி சின்னப் புள்ளத்தனமா பிகேவ் பண்றியேடா )
Last edited: