• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மும்பை செவேன்ஹில்ஸ் மருத்துவமனை...

அன்றைய மாலையில் ரிஷியின் அறையில் ரிஷியின் பெற்றோர், கிருஷ்ணகுமார், விகாஷினி
மற்றும் முகிலன் ஆகியோர் கூடியிருந்தனர்.


நடந்ததை கிருஷ்ணகுமார் எடுத்து கூற... அதனை ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் இத்தனை நாள் ரிஷியை பாதுகாப்பாய் வைத்துப் பார்த்த அவர்களிடம் முகிலனால் கோபத்தை காண்பிக்க முடியவில்லை.

பெற்றோருக்கோ மகன் உயிருடன் இருப்பதே போதும் என்ற நிலைமை... அவன் நினைவுகளை
மீட்க சிறுவயதில் இருந்து அவனின் சந்தோஷ நிகழ்வுகளை மாற்றி மாற்றி கூறக்கொண்டிருந்தனர்...


உயிரும் உருவமும் கொடுத்த உறவுகளின் பாசக்குரல் யாரையேனும் அசைக்காமல் இருக்குமா...? அது அவனின் மூளையை சென்று அடைந்ததும்... சிறிது சுறுசுறுப்பாகியது.

டாக்டர்கள்...

“வெல் டன்... இதே மாதிரி அவரது மூளையை தூண்டிவிட்டே இருந்தா நினைவுகள் சீக்கிரம்
திரும்ப வாய்ப்பிருக்கு... நம்பிக்கையை தவற விடாதீங்க...”


என்று விட்டு சென்றனர்.

இது விகாஷினியை வெகுவாக காயப்படுத்தியது என்றால் மிகையல்ல... கிட்டதட்ட இரண்டு
வருடமாக இவள் போராடி முன்னேற்றம் அடையாத ரிஷி.... அவனின் உறவுகள் வந்த இரண்டு
மணிநேரத்தில் முன்னேற்றம் அடைந்தால்... அவன் என்னை வெறுத்துவிட்டானோ... அதனால்
தான் என் குரல் அவனை எட்டவில்லையோ... என்று மனதினுள் மறுகினாள்... பின்


“நான் இரண்டு நாள் கழித்து வரேன்...”

என்று பொதுவாக அனைவரிடமும் கூறி வெளியேறினாள்.

இன்னும் இரண்டு நாளில் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை இவள் பெயருக்கு மாற்ற ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. சொன்னது போல் அந்த வாரம் முடிவதற்குள் அவள் பெயரில் எழுதி வைக்க
போகிறார் விக்னேஸ்வரி.


அதனால் வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாகக்கூடாது என்று தனது
நடமாட்டத்தை மருத்துவமனை பக்கம் செல்லாமல் தவிர்த்திருந்தாள் விகாஷினி.


என்ன தான் ரிஷி முழிக்கும் போது அருகில் இருக்க வேண்டும் என்று நெஞ்சுமுட்ட ஆசை
இருந்தாலும்... விக்னேஸ்வரியிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்பது ஒரு பக்கம் இருக்க...
தன்னால் செய்ய முடியாததை அவனின் பெற்றோர்களோ முகிலனோ செய்வதை தாங்கும் சக்தி
அவளிற்கு இல்லை என்றே கூறலாம்.


இந்த இரு நாட்களும் மாறி மாறி அனைவரும் பேச... ரிஷியின் மூளை விழிப்பதற்காக
காத்திருந்தது.


டாக்டரும்...

“அவங்க நீங்க பேசுகிறதை கவனிக்குறார்... பட்.. ஏனோ கண்ணை திறக்க முடியல... அவங்களுக்கு ரொம்ப சந்தோசம் ஆக கூடிய அளவிற்கு புது விஷயம் எதாவது இருந்தா சொல்லி ட்ரை பண்ணுங்களேன்”

என்று ஆலோசனை குடுத்தார்.

அதே நேரம்... விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விகாஷினி
பெயரிற்கு மாற்றப்பட்டது.


மாற்றிய கையோடு...

“இந்தா இவன் தான் மாப்பிள்ளை...”

என்று ஒரு போட்டோவையும் நீட்டினார் விக்னேஸ்வரி. இனி தன் மகள் திருமணத்திற்கு
சம்மதிப்பாள் என்றெண்ணி.


ஆனால் அவளோ... ஒரு நக்கல் சிரிப்போடு... சொத்து பத்திரத்தை எடுத்தவள்... அப்போதே ரிஷியை குறித்து கூற வாயெடுக்க...விக்னேஸ்வரி அருகில் நின்றிருந்த தந்தையோ தலையை இடமும் வலமுமாக அசைத்தார். சொல்லாதே என்பது போல்...

அதை பார்த்து தன்னை கட்டுப்படுத்தியவள்... தோளை மற்றும் ஸ்டைலாக குலுக்கி...

“என்னமோ பண்ணுங்க...”

என்று கூறி மருத்துவமனை விரைந்தாள்.

இவள் ரிஷியின் அறைக்கதவை திறந்த நேரம்... அங்கே முகில் தான் பேசிக்கொண்டிருந்தான்.
அதுவும் அவன் திருமணத்தை குறித்து...


“டேய்... எனக்கு கல்யாணம் ஆகிருச்சி டா... காதலுக்கு வேணும்னா நீ சீனியரா இருக்கலாம்... ஆனா கல்யாணத்துல நான் தான் டா சீனியர்”

என்றான். மேலும்,

“அதுவும்... இப்போ நானும் காதலிக்குறேன் டா... அது கூட தெரியாம அவளை நான் கல்யாணம்
பண்ணிட்டேன்”


என்று கூற... விகாஷினியோ ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினாள்... ருத்ரா இந்த இடத்தில்
இருந்தால் எவ்வாறு உணர்ந்திருப்பாளோ...


கேட்டுக்கொண்டிருந்த ரிஷியின் மனதிற்கு சந்தோசம் பெருகியது... அது மூளையை சென்றும்
தாக்க... அவன் உடல் லேசாக... மிக மிக லேசாக அசைந்தது...


ஆனால் அதனை யாரும் கவனிக்கவில்லை..

“இனி பாரு... நீ காதலிக்கும் போது என்னை படுத்தினப்பாட்டை எல்லாம் நான் உனக்கு பண்ண
போறேன்..”


என்று கூற... அப்போது அவனின் கருமணிகள் அசைந்தது...

அதை பார்த்ததும் பக்கத்தில் இருந்த நர்சை கூவி அழைத்து.. பார்க்க சொன்னான் முகிலன்...

அவரோ...

“பேசன்ட் கண்ணு முழிக்க போறார்... நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்”

என்று ஓடினார்.

டாக்டர் வரும் வரை..

“ரிஷி... டேய் ரிஷி... எழுந்திரு டா...”

என்று முகிலனும் பெற்றோரும் உலுக்காத குறையாக எழுப்ப... இதயம் வெளியே எம்பி குதித்து
விடும் வேகத்தில் துடிக்க... தன்னை பார்த்ததும் என்ன செய்வானோ என்ற பயத்தையும் மீறி...
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் விகாஷினி.


டாக்டர் வந்து பரிசோதனை செய்கையில் அவன் தன்னையும் மீறி

“விகாஷி...”

என்று முனங்கியவாறே கண்திறவாமல் மயங்கினான். நண்பனால் முழித்த ரிஷி காதலை
வெளியிட்டு நட்பிற்கும் காதலிற்கும் நியாயம் செய்தான்.


அதை கேட்டதும் விகாஷினிக்கு என்ன உணர்வு என்றே சொல்ல தெரியவில்லை... உலகை
வென்றாலும் இந்த சந்தோசம் கிடைத்திருக்காது அவளிற்கு... ஓடிச்சென்று வழக்கம் போல் அவன்
கையைப் பற்றிக்கொண்டாள்.


அனைவரும் பதட்டம் அடைய... டாக்டர் தான் சமாதானப்படுதினார்...

“தொடர்ந்து கண்மூடி அசையாமல் இருந்ததால அவங்களால் கண் திறக்க முடியாமல்
மயங்கியிருக்கலாம்... இது கோமாவில் இருந்து எழும்போது நடப்பது தான்.. டோன்ட் வொர்ரி... ஹி
வில் பீ ஆல்ரைட்... நாளைக்கு அவங்க உங்க கிட்ட பேசுவாங்க...”


என்ற நல்ல செய்தியை சொல்லி சென்றார்.

ஆக... தன் நட்பையும் காதலையும் நிருபித்து கிட்டதட்ட மறுபிறப்பு எடுத்தான் ரிஷி.
Semma
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
சூப்பர் ரிஷி முழிச்சிட்டான் ...ஜாலி ஜாலி ....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
SUper ma??????
Atlast Rishi ku ninaivu vandhuruchu...

Adhai veeda vihashi patta kastathuku oru nalla mudivu kidaichude ....

Avan aval peira solluvanu eaidhir pakkalai
Nalla thirupum
Nice da?????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
SUper ma??????
Atlast Rishi ku ninaivu vandhuruchu...

Adhai veeda vihashi patta kastathuku oru nalla mudivu kidaichude ....

Avan aval peira solluvanu eaidhir pakkalai
Nalla thirupum
Nice da?????
Thank you maha kaa.. ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top